Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் புதிய சாமியார் அவதாரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

யாழ்ப்பாணத்தில் புதிய சாமியார் அவதாரம்.

பல கோடி ரூபாய் செலவில் ஆச்சிரமம்.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சுக போகானந்தா என்னும் பெயரில் புதிய சுவாமி உருவாகி உள்ளார்.

இவர் பல அற்புதங்களை செய்து வருகின்றார். இவரின் அருள் வாக்கை கேட்க யாழ் மக்களும் , பாடசாலை மாணவ, மாணவியரும் தினமும் சென்று வழிபட்டு வருகின்றனர். சுகபோகானந்தா தனது வாயிலிருந்து சிறிய சிவலிங்கம், புத்தர் சிலைகளை எடுப்பதால் இந்து மக்கள் மட்டுமன்றி, யாழிற்கு சுற்றுலா வரும் சிங்கள மக்களும் இவரின் ஆச்சிரமத்துக்கு சென்று வணங்கி வருகின்றார்கள். இவர் தமிழ்,சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக கதைக்கின்றார். இவரின் பூர்வீகம் ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனாலும் பலர் தமது பணத்தை வாரிவழங்குவதால் ஆச்சிரமத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தவிர்க்க சாவகச்சேரி கண்டி வீதிக்கு அருகில் நான்கு ஏக்கர் பரப்பளவில் பெரிய ஆச்சிரமம் ஒன்றை பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்போவதாக சுகபோகானந்தா கூறுகின்றார்.

சுகபோகானந்தாவின் படத்தை வீட்டில் வைத்திருப்பவர்களுக்கு எந்த கஷ்டமும் இதுவரை ஏற்படவில்லை என்றும், அவரின் படத்தை படசாலை புத்தகத்தின் உள் வைத்திருந்தால் பரீட்சையில் நல்ல சித்தி எய்துவதாக பாடசாலை மாணவ, மாணவியர் தெரிவிக்கின்றனர். சுற்றுலா வரும் சிங்கள மக்களும் இவரின் படத்தை தங்களுக்கும், தங்கள் உறவினர்களுக்கும் வாங்கி செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

.

Edited by தமிழ் சிறி

  • Replies 52
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் இன்னும் சாமியார்கள் புதுசு புதுசாய் முளைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்தச் சாமியாருக்கு எத்தினை வயதிருக்கும்? இளம் ஆளாயிருந்தால் பொண்டுகள் அந்தாளைப் பழுதாக்கிப் போடுவினம். பாவம் அவரைக் கடவுள்தான் காப்பாத்த வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்தச் சாமியாருக்கு எத்தினை வயதிருக்கும்? இளம் ஆளாயிருந்தால் பொண்டுகள் அந்தாளைப் பழுதாக்கிப் போடுவினம். பாவம் அவரைக் கடவுள்தான் காப்பாத்த வேணும்.

சுகபோகானந்தாவிற்கு முப்பத்தி இரண்டு வயது ஆகின்றது. அது இளம் வயதா, முதிய வயதா என்று பக்தர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். :lol:

ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் இன்னும் சாமியார்கள் புதுசு புதுசாய் முளைப்பார்கள்.

யாழ்ப்பாணத்து மக்கள் எளிதில் ஏமாந்து விடமாட்டார்கள். இந்தியா சாமியார் மாதிரி இல்லாமல் யாழ் மக்களுக்கு நல்லது செய்தால் சாமியாரின் அவதாரம் வரவேற்கத்தக்கதே.

தமிழ் சிறி, இவரின் படம் இருந்தால் தனிமடலில் எனக்கு மட்டும் அனுப்பி வையுங்கள். இன்றைக்கு நல்ல நாள். சாமிப் படங்களோட இவரின் படத்தையும் வைத்துக் கும்பிடலாம்.

சிலுவை எடுக்க முடியவில்லையா? அது சரி ரஞ்சிதாவும் கூடவந்திருக்கிறாவோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இன்டைக்கு முட்டாள்கள் சின செய்திய இது? ம்ம்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

தமிழ் சிறி, இவரின் படம் இருந்தால் தனிமடலில் எனக்கு மட்டும் அனுப்பி வையுங்கள். இன்றைக்கு நல்ல நாள். சாமிப் படங்களோட இவரின் படத்தையும் வைத்துக் கும்பிடலாம்.

Guruji.jpg

இணையவன், இந்தாங்கோ சுகபோனாந்தாவின் படம். யாழ்கள உறவுகளும் சுவாமிஜீயின் அருளைப் பெறட்டும்.

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலுவை எடுக்க முடியவில்லையா? அது சரி ரஞ்சிதாவும் கூடவந்திருக்கிறாவோ?

சிவலிங்கம், புத்தர் சிலைகள் போன்றவற்றை வயிற்றில் இருந்து தொண்டை வழியாக எடுக்கும் போது சிக்கல் இல்லாமல் வழுக்கிக்கொண்டு வெளியே வந்துவிடும்.

சிலுவை எடுக்கும் போது தொண்டைக்குள் சிக்க சான்ஸ் உண்டு. அதனால் சுவாமிஜி சிலுவையை எடுக்க முயற்சிக்கவில்லை என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

.

Guruji.jpg

இணையவன், இந்தாங்கோ சுகபோனாந்தாவின் படம். யாழ்கள உறவுகளும் சுவாமிஜீயின் அருளைப் பெறட்டும்.

.

தமிழ்சிறி ஆள் பார்க்க சோக்காத் தான் இருக்கிறார்...ஊரில் இருக்கும் பெண்கள் அவர் அழகில் மயங்கா விட்டால் சரி

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி ஆள் பார்க்க சோக்காத் தான் இருக்கிறார்...ஊரில் இருக்கும் பெண்கள் அவர் அழகில் மயங்கா விட்டால் சரி

:lol:

ரதி, சாமியாரின் அழகில் நீங்களே மயங்கி விட்டீர்கள் போல் உள்ளது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol:

ஏன் பையா, சோகமாக இருக்கிறியள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பையா, சோகமாக இருக்கிறியள்.

அப்படி ஒன்றும் சோகம் இல்லை அண்ணை...

உந்த சாமி மார நினைக்க தலை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ணை இண்டைக்கு காலைமையில இருந்தே ரெண்டு மூண்டு பேர் என்னை ஏப்பிரல் கூல் ( சின்னனில விளக்கம் இல்லாம April Fool ஐ இப்பிடித்தான் சொல்லுறனான்) ஆக்க ட்ரை பண்ணிச்சினம் ஒண்டும் என்கிட்ட வாய்க்கேல்ல. இப்ப அடுத்த ஆளா நீங்களும் சேந்திருக்கிறீங்கள். நம்ம கிட்டவா? நாங்கள் யெமனுக்கே பக்கத்தில போய் பச்சை மிளகா தீத்திற ஆக்கள் அண்ணை! :lol:

முட்டாள் தின சாமியார் செய்தி ஒருபுறம் இருக்க, புதிய சாமியார் பற்றிய ஓர் உண்மை செய்தி:

இன்று மதியம் யாழ் பல்கலை மாணவனுடன் கதைத்த போது, நேற்று கொஞ்சம் வயதான ஒரு இந்திய சாமியார் ஒருசில பரிவாரங்களுடன் யாழ் திருநெல்வேலி பகுதிக்கு வந்துள்ளதாகவும், அங்கு ஒரு வீட்டில் தங்கியுள்ளதாகவும், அந்த வீட்டை அவர் வாங்கி விட்டதாக சந்தியில் நால்வர் கதைத்ததாகவும் அந்த மாணவர் கூறினார்.

மேலும், அந்த சாமியார் கொச்சை தமிழில் பேசியதாகவும், அவரது நடவடிக்கைகள் சந்தேகமாக உள்ளதாகவும், இந்திய உளவாளிகளாக இருக்கலாம் என ஊர்மக்கள் கதைப்பதாகவும் கூறினார். இவர் யாழில் புதிதாக ஆச்சிரம் அமைத்து தங்கி, என்ன கூத்தடிப்பாரோ தெரியவில்லை?

நான் கடந்த மாதம் யாழ் சென்றிருந்த போதும் ஒரு இந்திய சாமியார் ஒரு சிறிய கூட்டத்துடன் அலைந்து திரிவதைக் கண்டேன்.

உந்த இந்திய சாமிமாருக்கு யாழில் என்ன வேலை?

யாழ் மக்கள் போலி சாமிமாரிடம் ஏமாறாமல் இருந்தால் சரி !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறியண்ணை இண்டைக்கு காலைமையில இருந்தே ரெண்டு மூண்டு பேர் என்னை ஏப்பிரல் கூல் ( சின்னனில விளக்கம் இல்லாம April Fool ஐ இப்பிடித்தான் சொல்லுறனான்) ஆக்க ட்ரை பண்ணிச்சினம் ஒண்டும் என்கிட்ட வாய்க்கேல்ல. இப்ப அடுத்த ஆளா நீங்களும் சேந்திருக்கிறீங்கள். நம்ம கிட்டவா? நாங்கள் யெமனுக்கே பக்கத்தில போய் பச்சை மிளகா தீத்திற ஆக்கள் அண்ணை! :wub:

தம்பி கவாலித்தம்பி எங்க இந்த மருதங்கேணி காணோம் சூடான செய்தி வந்திருக்கு !

முடிஞ்சால் அவருக்கும் கொஞ்சம் பச்சைமிளகாய் தீத்தி விடுங்கோ புண்ணியமபோகும் உங்களுக்கு !

  • கருத்துக்கள உறவுகள்

சிறியண்ணை இண்டைக்கு காலைமையில இருந்தே ரெண்டு மூண்டு பேர் என்னை ஏப்பிரல் கூல் ( சின்னனில விளக்கம் இல்லாம April Fool ஐ இப்பிடித்தான் சொல்லுறனான்) ஆக்க ட்ரை பண்ணிச்சினம் ஒண்டும் என்கிட்ட வாய்க்கேல்ல. இப்ப அடுத்த ஆளா நீங்களும் சேந்திருக்கிறீங்கள். நம்ம கிட்டவா? நாங்கள் யெமனுக்கே பக்கத்தில போய் பச்சை மிளகா தீத்திற ஆக்கள் அண்ணை! :wub:

ஆனால் நான் இச்செய்தியை நம்பாததற்கு காரணம்

என் மக்கள்மீது எனக்குள்ள மரியாதை....

ஆனா சிறி ஏன் இப்படி யோசிக்கணும்

அவர் இன்னும் சாமியாருடைய படம் பார்த்த மயக்கம் .......

இல்லை சிலிர்ப்பிலிருந்து விடுபடவில்லை போலும்

Edited by விசுகு

மோட்டுகூட்டங்கள்.... சாமியாராவது உளவாளியாவது... :wub:

உண்மையில் அனேகமாக எல்லா இந்திய உளவாளிகளும் ஈழத்தில் பிறந்த ஈழத்தமிழர்களே...

இப்படியும் யாழ் மக்கள் நினைத்திருக்கலாம்

புலம்பெயர் ஈழத்தமிழர்களெல்லாம் இந்தியா, தமிழ் நாடு என்று சென்று இந்த சாமிகளிட்ட காசை கொட்டி விளையாடுகிறார்கள்.

ஏன் எமது நாட்டில் ஒரு கொவில் கட்ட கூடாது என்ற நல்ல நோக்கம் தாம். இலங்கையில் இல்லாத சாமியார்களா?

இலவசமாக ஒரு பிழைப்புதான். இதில் இனி இந்த டக்ள்ஸ் போன்ற காசு பிடுங்கும் படலங்களும் இணைந்து கொள்ள வேண்டி வரலாம்.

ஆனால் நாம் எமது காசில் ஒரு பகுதியேனும் ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க் மாட்டோம் . அதுதான் கடவுள் என்பவர் கேட்பது, நாம் அதை தவிர சகலதும் கொடுப்போம்.

My link

Edited by சுனாமி

  • கருத்துக்கள உறவுகள்

ம்கூம்...நம் மக்கள் திருந்திற இடத்தில் இல்லை. :wub::(

ஊகூம்.... நானுந்தான் அருள்வாக்குச் சொல்றன் ஆரும் ஆசிரமம் கட்டப் பிடி நிலம் தரமாட்டேங்கிறாங்களே :wub:

.

யாழ்ப்பாணத்தில் புதிய சாமியார் அவதாரம்.

பல கோடி ரூபாய் செலவில் ஆச்சிரமம்.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் சுக போகானந்தா என்னும் பெயரில் புதிய சுவாமி உருவாகி உள்ளார்.

ஒரு சந்தேகம்...? ஏன் பெரும்பாலான சாமியார்கள் என்ற உடன 'னந்தா' என்று முடிகிற மாதிரி பெயர் வைக்கிறார்கள்?

'சுக போகானந்தா' ம்ம்ம் .... பெயரே கொஞ்சம் வில்லங்கமா இருக்குப் போல தெரியுதே... இவர் எப்ப 'ஆனந்த சுகபோகத்தில' இருப்பாரோ தெரிய இல்லை... :wub:

'சுக போகானந்தா' ம்ம்ம் .... பெயரே கொஞ்சம் வில்லங்கமா இருக்குப் போல தெரியுதே... இவர் எப்ப 'ஆனந்த சுகபோகத்தில' இருப்பாரோ தெரிய இல்லை... :wub:

:(:lol: :lol: :lol:

Edited by ஈழமகள்

தன் சொந்த உழைப்பில் சாப்பிடாத சோம்பேறிகள் எந்த நாட்டிலிருந்தாலும் அடித்துக் கலையுங்கள்.

இப்படியும் யாழ் மக்கள் நினைத்திருக்கலாம்

புலம்பெயர் ஈழத்தமிழர்களெல்லாம் இந்தியா, தமிழ் நாடு என்று சென்று இந்த சாமிகளிட்ட காசை கொட்டி விளையாடுகிறார்கள்.

ஏன் எமது நாட்டில் ஒரு கொவில் கட்ட கூடாது என்ற நல்ல நோக்கம் தாம். இலங்கையில் இல்லாத சாமியார்களா?

இலவசமாக ஒரு பிழைப்புதான். இதில் இனி இந்த டக்ள்ஸ் போன்ற காசு பிடுங்கும் படலங்களும் இணைந்து கொள்ள வேண்டி வரலாம்.

ஆனால் நாம் எமது காசில் ஒரு பகுதியேனும் ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க் மாட்டோம் . அதுதான் கடவுள் என்பவர் கேட்பது, நாம் அதை தவிர சகலதும் கொடுப்போம்.

My link

மன்னிக்கவேண்டும் இவர்களுக்கு செருப்பால் அடிப்பதைத் தவிர வேறுவழி தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.