Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரிக்கட்டை - ஒரு பக்க கதை

Featured Replies

வன் ஓடி கொண்டிருந்தான்.

அவர்கள் துரத்தி கொண்டிருந்தார்கள்.

அதிகாலை மூன்று மணியை தாண்டி இருந்தது.

வீதியில் ஆளரவமே இல்லாத அந்த வேளையில்.. இவர்களின் ஆடு புலி ஆட்டம்.

அவர்கள் மூன்று பிரிவாக வந்திருந்தார்கள்.

அவனும் சளைக்கவில்லை.. அவர்களுக்கு தண்ணி காட்டி ஓடி கொண்டே இருந்தான்.

தலைநகரில் அந்த வேளையில் அவர்களின் அலைபேசிகள் விட்டாமல் கத்தி கொண்டிருக்க... இவன் ஓடி கொண்டே இருந்தான்.

இவர்களிடம் உயிரோட பிடிபடக்கூடாது. இது மட்டும் தான் இப்போ அவன் நினைக்கும் ஒரே எண்ணம்.

இவனை உயிரோடு பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை.

இவன் உடலை, ஆக குறைந்தது இவன் முகத்தையாவது சேதமில்லாமல் எடுக்கவேண்டும் இது அவர்களுக்கான ஒரே கட்டளை.

என்னை வைத்து,

என் உருவத்தை வைத்து,

என் மக்களுக்காக வெடிக்க இருக்கும்,

விடுதலையை விரைவுபடுத்த காத்திருக்கும் தோழர்களை பிடிக்க விடக்கூடாது என்பது தான்.. அவனது கவலை.

இன்றைய சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் இனி இவன் கிடைக்கமாட்டான் என்பது அவர்களது கவலை.

ஆடு புலி ஆட்டம் தொடர்கிறது.

அந்தோ !...அவன் சுற்றி வளைக்கபட்டு விட்டான்.

ஐயோ.!. சக்கை கூட இல்லையே இப்போ வெடிக்க..

குப்பி கடித்தால் கூட, என் முகத்தை வைத்து இடங்களை பிடித்து விடுவார்கள்..

என்ன செய்ய.. என்ன செய்ய..

தொடர்பு எடுக்க கூட நேரமில்லை. நான் போனாலும் பரவயில்லை. அவர்கள் வாழ வேண்டும்..

ஆக குறைந்தது. எம் மக்களுக்காக வெடிக்கும் வரை அவர்கள் வாழ வேண்டும்..

என்ன செய்ய.. என்ன தான் செய்ய..

அப்பாடி.. ஒரு வெதுப்பகம் (பேக்கரி).

காலை பாணுக்காக மும்முரமாக இருந்தது..

அவன் உள்ளே நுழைந்து விட்டான்.

அவர்களும் உள்ளே வந்து விட்டார்கள்.

முழு இடமும் தேடியாச்சு..அவனை காணவில்லை..

கடைசியாக..

ஒரு வழியாக அவர்கள் அவனை கண்டுபிடித்து விட்டார்கள்.

கரிக்கட்டையாக..

அந்த கரி அவர்கள் முகத்திலும் அப்பி இருந்தது.

அன்றைய நாளின். தலைநகரின் ஒரு பகுதி காலை பாணுக்கு மட்டும் அல்ல..

எம் தாயக மக்களின் விடுதலைக்கும்..

அவன் விறகானான்.

குறிப்பு: இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவியது. இந்த மானமாவீரனின் தியாகத்தால் தான் தலைநகரின் ஒரு மிகபெரும் தாக்குதல், எந்த பிசகும் இன்றி நிறைவேறியது. இந்த மறைமுக மாவீரனது பெயர் வெளிபடுத்தபடாமையால், இடம் மற்றும் பெயரை தவிர்த்துள்ளேன்.

Edited by அபிராம்

  • கருத்துக்கள உறவுகள்

அர்ப்பணிப்புகள் பல விதம் அதில் இதுவும் ...ஒரு விதம்

நன்றி .பகிர்வுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்தனை தியாகங்களும் வீணாகி விட்டதே :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:lol:
  • கருத்துக்கள உறவுகள்

அத்தனை தியாகங்களும் வீணாகி விட்டதே

ஓம் ! தியாகங்களைவிட துரோகங்கள் அதிகமானதால்! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசிக்கும் போதே உள்ளம் நடுங்கறதே, அவர்கள் நடுங்காமல் முடிவுகளை எடுத்து போராட்டத்தை முன்நகர்த்தியவர்கள், அவர்கள் நகர்வால் சர்வதேசம் நோக்கி நகர்ந்துள்ள போராட்டத்துக்கு நாம் என்ன செய்ய போகிறோம். எங்களிடமே தலைவர் நம்பிக்கையுடன் போராட்டத்தை ஒப்படைத்திருக்கிறார்.

அத்தனை தியாகங்களும் வீணாகி விட்டதே

ஓம் ! தியாகங்களைவிட துரோகங்கள் அதிகமானதால்! :D

தியாகங்கள் ஒருபோதும் வீனாகாது நான், நீங்கள் ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர் நினைத்தால், போகவேண்டிய தூரம் அதிகமாக இருந்தாலும் எமது இலக்கு அடையக்கூடிய ஒன்றே. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தியாகங்கள் ஒருபோதும் வீனாகாது

நன்றி .பகிர்வுக்கு. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்கள் மூட்டிய நெருப்பு எங்கள் உள்ளங்களில் எரிந்து கொண்டிருக்கும் வரை தமிழீழம் என்ற இலட்சியம் அணையாது.

வாத்தியார்

**********

  • தொடங்கியவர்

ஊக்கம் தந்த கருத்துகளுக்கு நன்றி.

கட்டி அழ கல்லறை கூட இல்லாத இந்த கரும்புலி வீரர்களின் கனவு நிச்சயம் நனவாகும்.

"தேசத்துக்காய் எங்கெங்கும்" வெடித்த எங்கள் மறைமுக கரும்புலிகளை மனசிலே நிறுத்துங்கள்.

அவர்கள் பெயர்கள் கூட இன்னும் உலகத்துக்கு தெரியாமல் ஏன் பெற்றோருக்கு கூட தெரியாமல் இந்த மண்ணுக்காக தங்களை சாம்பாலாக்கியவர்கள்.

அவர்களின் உண்மையான தியாகமும், அவர்களின் பெயர்களும் வெளியில் வர வேண்டும் என்றால் எங்களுக்கு நாடு வேண்டும்.

அதற்காக எல்லாரும் ஒற்றுமையாக போராடுவோம் என்று இந்த நாளில் அவர்கள் மீது உறுதி கொள்ளுவோம்.

Edited by அபிராம்

  • கருத்துக்கள உறவுகள்

கரிக்கட்டையானாலும் காலத்தால் அழியாதவர்கள். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு விழிகளில் நீர்வரவைத்தபதிவு. நன்றிகள் அபிராம்

  • கருத்துக்கள உறவுகள்

எமது உறவுகளால் பல அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன

அவை அவையாகவே இருக்கட்டும்

அவை கதைகள் அல்ல

நிஐங்கள்

எனக்கு இது போன்ற கருத்துக்களை அல்லது கதைகளை வாசிக்கும்போது....

அது கரும்புலிகளை மேலும் மேலும் ....

இப்படி செய்திருக்கலாம்

அப்படி செய்திருக்கலாம்

இப்படி செய்திருந்தால் அது இன்னும் சிறப்பான கொடையாக இருந்திருக்கும்...................

என்பது போன்று அவர்களது அதி உச்ச தியாகத்தை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.

தயவு செய்து உண்மையென்றால் உண்மைச்சம்பவம் என்று எழுதுங்கள்.

அதை அப்படியே எழுதுங்கள்.

கதை என்றால் கதை என்று எழுதுங்கள்

கற்பனையும் உண்மையையும் கலந்தது என்று அவர்களை எமக்கு அறிமுகப்படுத்தவேண்டாம்.

தங்கள் உணர்வுகளை மதிக்கின்றேன்

எனது உணர்வையும் மதிக்குமாறு அவர்களின்பால் நானும் தாங்களும் வைத்திருக்கும் அன்பின்பால் கேட்கின்றேன்.

  • தொடங்கியவர்

எமது உறவுகளால் பல அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன

அவை அவையாகவே இருக்கட்டும்

அவை கதைகள் அல்ல

நிஐங்கள்

எனக்கு இது போன்ற கருத்துக்களை அல்லது கதைகளை வாசிக்கும்போது....

அது கரும்புலிகளை மேலும் மேலும் ....

இப்படி செய்திருக்கலாம்

அப்படி செய்திருக்கலாம்

இப்படி செய்திருந்தால் அது இன்னும் சிறப்பான கொடையாக இருந்திருக்கும்...................

என்பது போன்று அவர்களது அதி உச்ச தியாகத்தை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.

தயவு செய்து உண்மையென்றால் உண்மைச்சம்பவம் என்று எழுதுங்கள்.

அதை அப்படியே எழுதுங்கள்.

கதை என்றால் கதை என்று எழுதுங்கள்

கற்பனையும் உண்மையையும் கலந்தது என்று அவர்களை எமக்கு அறிமுகப்படுத்தவேண்டாம்.

தங்கள் உணர்வுகளை மதிக்கின்றேன்

எனது உணர்வையும் மதிக்குமாறு அவர்களின்பால் நானும் தாங்களும் வைத்திருக்கும் அன்பின்பால் கேட்கின்றேன்.

நீங்கள் அவர்கள் மேல் வைத்திருக்கும் உண்மையான உணர்வுக்கு தலைவணங்குகிறேன். உண்மையை உண்மையாக எழுதுவதற்குரிய காலம் கனியாமையால் உண்மையை கதையாக எழுத வேண்டி உள்ளது.

அவர்களின் தியாகத்தை ஒப்பிட முடியாது. கதை வடிவிலேனும் அவர்களின் தியாகம் எங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நாம் எழுதுகிறோம். கற்பனை என்று, இதில் எங்கள் புனை கதைகளை கலக்குவதற்கு, அவர்களின் தியாகத்தின் பெயரால், எங்கள் மனம் ஒரு போதும் இடம் தராது. நாங்கள் கதாசிரியர்கள் அல்லர். அவர்களின் தியாகம், இன்றைய கால கட்டத்தில் எங்கள் மக்களை ஒன்றிணைக்க, விடுதலையின் விலையை உணர்த்த, பயன்படடுமே என்று தான் கதை வடிவில் தர முயற்சி எடுத்தோம்.

அவர்கள் சுயத்தை அழித்தவர்கள். தமிழீழம் காணும் வரை தங்கள் விவரம் உலகுக்கு தெரியவராது என்பதை நன்கு அறிந்தவர்கள். தேசத்தின் புயல்கள் அவர்கள்.

இந்த சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் இன்னமும் சிங்கள நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ளமையாலும் , சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாலும், இந்த சம்பவங்கள் தொடர்பான பெயர்கள், இடங்களை தவிர்க்க/மாற்ற வேண்டிய கட்டாய சூழல் எங்களுக்கு ஏற்பட்டது. இது உங்கள் மனசை பாதித்தது என்றால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.

Edited by அபிராம்

ஈழப் போரில் மாவீரர்களில் மரணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றை சொல்லி நிற்கும், அதிலும் கரும்புலிகளின் ஈகை சொல்லிலடங்கா.... பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அபிராம் பிகிர்வுக்கு நன்றி. மேலும் உங்கள் எழுத்தால் உள்ளே இருக்கும் போராளிகள் பாதிக்கப்படாமல் எழுதும் உங்கள் திறமையை பாராட்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அபிராம் பிகிர்வுக்கு நன்றி. மேலும் உங்கள் எழுத்தால் உள்ளே இருக்கும் போராளிகள் பாதிக்கப்படாமல் எழுதும் உங்கள் திறமையை பாராட்டுகிறேன்.

இதுதான் எனது கருத்தும்.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் கனவுகள் பலிக்குமா?. நம்பிக்கை முள்ளிவாய்க்காலோடு போய்விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதாசிரியர் அபிராம். உங்களது எழுத்து நடை மிகவும் அழகாக இருக்கிறது. அந்த அப்பழுக்கில்லாத, எல்லாவற்றையும் துறந்து மற்றவர்களின் நலனையே கருத்தாக கொண்ட ஒருவனின் அழியாத தியாகத்தை, அவனது கடைசி எண்ணங்களை, மிகவும் அழகாக வடித்திருக்கிறீர்கள்.

சருகுகள் வீழ்ந்தால் தான் மரத்துக்கு உரம் கிடைக்கும். முப்பத்தாயிரம் சருகுகள் தமிழ் ஈழம் என்ற மரத்திற்கு உரமேற்றிவிட்டு சென்றிருக்கின்றன.

இந்த தியாகத்தால் வளர்ந்த மரத்தை வீழ்த்துவது முடியாத காரியம். காலம் வரும், நாம் சென்று கூடு கட்டும் காலம் திரும்பி வரும்.

இவர்களின் கனவுகள் பலிக்குமா?. நம்பிக்கை முள்ளிவாய்க்காலோடு போய்விட்டது.

கந்தப்பு ஐயா, எனக்கு தமிழ் ஈழத்தில் முள்ளிவாய்க்கால் ஜெனோசைட் பின் நம்பிக்கை இன்னும் கூடியது.

இந்த ஜெனோசைட் விடயத்தை ஸ்ரீ லங்கா காரன் முடக்காமல் உலகிற்கு கூறும் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. நாம் துவண்டிருப்பது சரியல்ல.

  • 3 weeks later...

என்னைப் பொறுத்தவரையில்.............. எதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ................ ஆனால், எம் மாவீரர்கள், வீரமறவர்கள் செய்த உண்மையான அளப்பரிய தியாகங்கள் என்றைக்கும் வீண்போகாது என்ற அசைக்க முடியாத பெருநம்பிக்கை இருக்கின்றது.

அவர்களின் கனவு என்றாவது ஒருநாள் ஈடேறியே ஆகும். அதை வீணடிக்க யாராலும் இயலாது.

இறுதிவரை தொடரும் இலட்சியப் பயணத்தில் எம்மையும் இணைத்துக் கொள்வோம்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பார்த்தீபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.