Jump to content

குழந்தைகள், சிறுவர்களுக்காக வலையில் ஓர் தமிழ்த்தளம்


Recommended Posts

வணக்கம்,

குழந்தைகள், சிறுவர்களுக்கான ஓர் தமிழ்த்தளத்தை வலையில் உருவாக்குவது சம்மந்தமாக சிறிதுகாலமாக சிந்தித்தோம்; குழந்தை வளர்ப்பு, தமிழ்மொழி கற்பித்தல்.. குழந்தைகள், சிறுவர்களுக்கான இதர அடிப்படை விடயங்களை பகிர்ந்து கொள்ளுதல், அறிவூட்டுதல் போன்றவை.

பொழுதுபோக்கு, பகுதிநேர அடிப்படையில் செயற்படக்கூடிய ஆர்வம் உள்ள உறவுகளின் இயக்கத்தில் இப்படியான ஓர் வலைத்தளத்தை விரைவில் இயங்க வைக்கலாம் என்று யோசிக்கின்றோம். இணைந்து செயற்பட விரும்புகின்ற யாராவது ஆர்வம் உள்ள யாழ் உறவுகள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு வசதியான நேரங்களில் குறிப்பிட்ட இந்த வலைத்தளத்தில் ஆக்கங்கள் எழுதி போடலாம். மற்றும், வடிவமைப்பு, மற்றும் இதர விடயங்களிலும் பங்காற்றலாம். யாழ் இணையத்தில் நேரம் உள்ளபோது கருத்துக்களை பகிர்வதற்கு நேரம் ஒதுக்குவது போல உங்களுக்கு விருப்பான நேரங்களில் இந்த தளத்தில் பங்காற்ற முடியும்.

ஏற்கனவே உள்ள குறிப்பிட்ட இந்த தேவையை பூர்த்தி செய்யக்கூடிய தளங்கள் பற்றி தெரியவில்லை. எமது நோக்கம் நாமும் ஓர் பகுதியாக எங்கள் பங்கிற்கு வலைத்தளம் மூலம் சிறிய சேவையை வழங்க முயற்சிப்பது மாத்திரமே.

இங்கு உறவுகளாகவும், வாசகர்களாகவும் இவ்விடயத்தில் ஆர்வம் உள்ள பல தாய்மார், ஆசிரியர்கள் காணப்படக்கூடும். எனவேதான் உறவோசையில் இவ்விடயத்தை இணைக்கின்றேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி...சிறுவர்களுக்காக எழுதும் போது மிகவும் கவனமாக எழுத வேண்டும் அது என்னால் முடியாது என நினைக்கிறேன்...மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

எழுதித்தான் பங்களிக்க முடியும் என்று இல்லை. ஆர்வம் காணப்பட்டால் பயனுள்ள தொடுப்புக்களை, காணொளிகளை தொகுத்தல், பின்னூட்டல் இடுதல் இப்படி பல வகைகளில் உங்கள் பங்களிப்புக்களை வழங்க முடியும். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் இயலுமான உதவி செய்கிறேன்.

Link to comment
Share on other sites

நன்றி நிலாமதி அக்கா.

ஆர்வம் உள்ளவர்கள் kalainjan@yarl.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள். சேர்ந்து பங்காற்றக்கூடிய உறவுகளின் விபரம் கிடைத்ததும் விரிவாக ஆராய்ந்து மேலதிக தகவல்களை பகிர்ந்துகொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

நன்றி யாயினி. விரைவில் மற்றவர்களுடனும் கதைத்து ஆர்வம் உள்ளவர்களுக்கு மேலதிக விபரங்களை அறியத்தருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. தேசியத்தையும் தமிழையும் அரசியல் செய்து வளர்க்காமல் தமிழ் மொழியை இளம் சந்ததி விரும்பி கற்கும் வண்ணம் செய்தால் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி.

ஆனால் ஒருதுளி அரசியல் கூட இருக்காமல் பார்க்க வேண்டும்.

எதிலும் எங்கும் தமிழே இருக்கவேண்டும்.

அத்துடன் சினிமாவாடையும் இருக்கவே கூடாது.

Link to comment
Share on other sites

நன்றி கிருபன், குமாரசாமி அண்ணை, மொழி.

இணைந்து பங்காற்றக்கூடிய குறிப்பிட்டளவு உறவுகள் சேர்ந்ததும் அவர்களுடன் நீங்கள் குறிப்பிட்ட ஆலோசனைகளையும் கருத்திலெடுத்து, கலந்துரையாடி தளத்தை இயங்க வைக்கின்றோம்.

குழந்தை வளர்ப்பு, சிறுவர்களுக்கான விடயங்களை கவனித்தல் இவற்றை பெண்கள் மட்டுமே செய்வது இல்லைதானே. தந்தையரின் ஆதரவும் / பங்களிப்பும் காணப்பட்டால் நல்லது.

முதலில் மற்றவர்களுக்கு சேவை வழங்குவதைவிடுத்து எங்கள், எங்கள் வீடுகளில் குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு தேவையான விடயங்கள், இவைகள் பற்றிய அறிவூட்டல்களை நாங்கள் எங்களிடையே ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துகொள்ளும் அடிப்படையில் தளத்தினை உருவாக்கினால் பின்னர் அது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

தகவல்களை வழங்குகின்ற ஓர் சிறிய வலைத்தளமாக உருவாக்கினாலும் நீண்டகாலம் நிலைத்து இருக்கக்கூடியவாறு உருவாக்குவது முக்கியமானது என்று நினைக்கின்றேன். ஆரம்பித்துவிட்டு சில காலத்தின்பின் நாங்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு அலுவல்களில் பிரிந்துசெல்ல கவனிப்பாரற்ற நிலையில் தளத்தை இழுத்துமூடுவதாக அமையக்கூடாது. எனவே இணைந்து பங்காற்றக்கூடிய strongஆன குறைந்தது பத்து தொடக்கம் இருபது வரையிலான உறவுகளாவது தேவைப்படுகின்றார்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சி பெரும் வெற்றியாக அமைய வாழ்த்துக்கள்.

மச்சான், என்னால் முடிந்த அளவிற்கு உங்களுக்கு உதவிகள் செய்யக் காத்திருக்கின்றேன்

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

நன்றி வாத்தியார், இணைந்து பங்காற்ற விரும்புகின்ற அனைவரையும் விரைவில் தொடர்பு கொள்கின்றேன்.

யாயினி, உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பி வைக்க முடியுமா? நான் யாழ் தனிமடல் பாவிப்பது இல்லை. மற்றவர்களின் தொடர்பு அஞ்சல் என்னிடம் உள்ளது. உங்கள் முகவரி இல்லை.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் இணைத்து கொள்ளுங்கள் ஏதோ என்னால் முடிந்ததை செய்கிறேன்.

Link to comment
Share on other sites

நன்றி ஈசன், ரதி. நிலாமதி அக்கா, நீங்கள் அனுப்பிய தகவல்சுட்டி கிடைத்தது நன்றி. விரைவில் ஆர்வம் உள்ள உறவுகளை இணைத்து இது சம்மந்தமான விரிவான உரையாடலை ஆரம்பிக்கின்றேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நோக்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள் தோழர் கரும்பு..

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நன்றி தோழர்.

+++

இணைந்து செயற்பட ஆர்வம் தெரிவித்த உறவுகளிற்கு மின்னஞ்சல் ஒன்று அனுப்பினேன். யாருக்காவது குறிப்பிட்ட மின்னஞ்சல் கிடைக்காவிட்டால் கூறுங்கள், நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி கரும்பு,

நானும் வெளிநாட்டு பாடசாலைகளில் நடக்கும், நடந்த கதைகளையும்....

அதனை எப்படி தவிர்க்கலாம் என்றும்.... அவ்வப்போது எழுத விரும்புகின்றேன்.

இது அநேகமாக பெற்றோருக்கும் சார்ந்த அறிவுரையாகவும் அமையும் என்பது எனது எண்ணம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நல்ல முனைவு!

தமிழை தமிழால் இலகுவாக எழுத முடிந்தால் மாத்திரம் :D:):D

வெளி நாடுகளில் குளிர் வெயில் எண்டு வெளியில் தலைவைக்காமல் தன்னந்தனியாக இருந்து மனநோயாளராகும் அறிவுள்ள பாட்டி பாட்டர்களுக்கு கணீனிகளைக் கொடுத்து உபயோகிக்கப் பழக்கி வேலை செய்யவைக்கலாம், இது அவர்களை நீண்ட காலம் சுகமாக வாழவைக்கவும் கூடும் ... :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.