Jump to content

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சிறி

 

தம்பிமாரெல்லாம்  பிரிந்து பிரிந்து நின்று 

தேவையற்ற வாதங்களிலும் 

கோபதாபங்களிலும் ஈடுபடுவது வருத்தம் தருகிறது....

யாழ் குடும்பத்திலிருந்து ஒதுங்கலாமா என்ற அளவுக்கு இருக்கிறது பதிவுகளும்  கருத்துக்களும் கடிகளும்..

 

தம்பிமார் உணர்வாளர்களா??

அல்லது எம்மை இழப்பார்களா...?? :(  :(  :( 

 

விசுகர், நீங்கள் குறிப்பிடும் நபர்களில் நானும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் எதற்கும் இதைச் சொல்கிறேன்: தேசியம் பற்றி தீவிரமாகப் பேசினால் ஒருவர் என்ன செய்தாலும் கணக்கெடுக்காமல் விட்டு விடலாம் என்ற மனப்பாங்கு உங்களிடம் உள்ளது! அந்த மனப் பாங்கு என்னிடம் இல்லை! பேச்சு எப்படி அழகாகப் பேசினாலும் பேச்சுத் தான், அதற்கு வேறு value இல்லை! ஆனால், வதைச் சொற்களால் புலம் பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினரை விமர்சிப்பது, சொல் அல்ல, அது செயல். இது தேசியத்திற்கு எதிர் என்று உங்களுக்கும் புரியவில்லை, செய்யும் நெடுக்கருக்கும் புரியவில்லை! இதனாலேயே அவர் தகுதி பற்றிப் பேசி விதி மீறல் வரை கிட்டத் தட்டப் போய் அவரது சாயத்தைக் கழுவியிருக்குது! இனியும் அகதிகளை அவர் நையாண்டி செய்தால் இந்தத் திரி பற்றித் தெரிந்தவர்கள் சிரித்துக் கொண்டு கடந்து போவார்கள் என நம்பலாம்! அதுவே இந்தக் குழப்பத்தின் பயன். இதை நான் விருப்பத்துடன் செய்தேனா? இல்லை! நடந்த பரிமாற்றங்களில் நான் பெருமிதம் கொள்கிறேனா என்றால் அதுவும் இல்லை! ஆனால் யாராவது செய்ய வேண்டியிருந்தது, செய்தேன்! எனக்கு மடியில் கனமில்லை என்பது நெடுக்கர் உடபட யாழில் பலருக்குத் தெரியும்! என் மீதான பார்வை இத்திரியினால் பலருக்கு மாறியிருந்தால் கொஞ்சம் வருந்துகிறேன், ஆனால் அது தொடங்கும் போதே எதிர்ப் பார்த்த பக்க விளைவு தான்! ஏற்றுக் கொண்டு எல்லோரும் நகர்வோம்! :)

Link to comment
Share on other sites

  • Replies 271
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

90% போலி தமிழ் பொய் அகதிகள் தொடர்பான எங்கள் தோலுரிப்பும் தொடரும். 

 

10% உண்மையான அரசியல் புகலிடத்திற்கு உரித்துடையவர்கள் அதனால் காயப்பட நேர்ந்தால்..  அதற்கு வருந்துகிறோம்.

 

மற்றும்படி எதுவும் எம் கருத்துக்களை கட்டிப்போடும் யதார்த்தத்தை கிஞ்சிதமும் அசைக்க முடியாது. எங்களைப் பற்றிய யதார்த்தத்தை எவரும் கிட்ட அணுகவும் முடியாது.  :)  :icon_idea:

 

எவர் எந்த மொழியில் பேச விளைகிறார்களோ.. அவர்களுக்கு யாழ் களவிதிக்கு அமைய அந்த மொழியில் பதில் வரும்.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90% போலி தமிழ் பொய் அகதிகள் தொடர்பான எங்கள் தோலுரிப்பும் தொடரும். 

 

10% உண்மையான அரசியல் புகலிடத்திற்கு உரித்துடையவர்கள் அதனால் காயப்பட நேர்ந்தால்..  அதற்கு வருந்துகிறோம்.

 

மற்றும்படி எதுவும் எம் கருத்துக்களை கட்டிப்போடும் யதார்த்தத்தை கிஞ்சிதமும் அசைக்க முடியாது. எங்களைப் பற்றிய யதார்த்தத்தை எவரும் கிட்ட அணுகவும் முடியாது.  :)  :icon_idea:

 

எவர் எந்த மொழியில் பேச விளைகிறார்களோ.. அவர்களுக்கு யாழ் களவிதிக்கு அமைய அந்த மொழியில் பதில் வரும்.  :icon_idea:

:D ஓ! குறி மட்டும் போடக் கூடதல்லவா? sorry! வேறொண்டும் வருகுதில்லை! :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நெடுக்ஸ்.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90% போலி தமிழ் பொய் அகதிகள் தொடர்பான எங்கள் தோலுரிப்பும் தொடரும். 

 

10% உண்மையான அரசியல் புகலிடத்திற்கு உரித்துடையவர்கள் அதனால் காயப்பட நேர்ந்தால்..  அதற்கு வருந்துகிறோம்.

 

மற்றும்படி எதுவும் எம் கருத்துக்களை கட்டிப்போடும் யதார்த்தத்தை கிஞ்சிதமும் அசைக்க முடியாது. எங்களைப் பற்றிய யதார்த்தத்தை எவரும் கிட்ட அணுகவும் முடியாது.  :)  :icon_idea:

 

எவர் எந்த மொழியில் பேச விளைகிறார்களோ.. அவர்களுக்கு யாழ் களவிதிக்கு அமைய அந்த மொழியில் பதில் வரும்.  :icon_idea:

90% போலி அகதிகள்

10% உண்மை அகதிகள்

சார் இந்தத் தரவு யார் கொடுத்தது? அல்லது ஒரு குத்துமதிப்பா நீங்கள் சொல்லுகிறீர்களா? ஒண்டுமில்லை சும்மா ஒரு விடுப்புக்குக் கேக்கிறன் :D

Link to comment
Share on other sites

அது சரி நெடுக்கர் நீங்க எப்ப திரும்ப ஊருக்கு போறீங்க? 
அடுத்தவன் நாட்டை காட்டி குடுத்து ஓடி வாறான் நான் படிச்சிட்டு ஊருக்கு போய்டுவன் எண்டு 2010ல் கூறிய தாங்கள் 2015 இலும் பெஞ்சை தேய்க்கும் காரணம் என்னவோ?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அது சரி நெடுக்கர் நீங்க எப்ப திரும்ப ஊருக்கு போறீங்க? 
அடுத்தவன் நாட்டை காட்டி குடுத்து ஓடி வாறான் நான் படிச்சிட்டு ஊருக்கு போய்டுவன் எண்டு 2010ல் கூறிய தாங்கள் 2015 இலும் பெஞ்சை தேய்க்கும் காரணம் என்னவோ?

 

 

ரிக்கெட் போடேக்க சொல்லி அனுப்பிறம்.  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்காய் உதைவிகேட்டேன் 4 மாசம் முன்னாடி என்று ஆதங்கப்பட்டு நீலிக்கண்ணீர் விட்ட அண்ணருக்கு.

1- பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது முதுமொழி.

ஒருவர் உதவி கோரினால் ( அதற்கு எந்த வித கவர்சியான மக்கள் உதவி முலாம் பூசினாலும்) கேட்பவரை பற்றி தீர விசாரித்து அறிவதே, அதன் பின் என்னாலானதை செய்வதே என் கொள்கை.

இந்த உதவி கேட்டவரை பற்றி அவர் வசிக்கும் நாட்டிலும், அவர் சொந்த ஊரிலும், அவர் விசாரிக்க சொன்ன இடத்திலும் நான் அறிந்தது -அவர் ஒரு வெத்து பந்தா பேர்வழி என்றும். "பேப்பரில் பெயர் வரும் எண்டால் தற்கொலையும் செய்யக்கூடிய ஆள்" என்பதுமே. இந்த மனிதரின் வெத்து பந்தா வியாபாரத்துக்கு நான் ஒரு கருவியாக இருக்க விரும்பவில்லை.

 

2- எனவே தான் அந்த உதவியை செய்ய முடியாது, மன்னியுங்கள் என்று பவ்வியமாக சொல்லிவிட்டேன்.

இதை தவிர - யாழில் ஊருக்கு பல நல்ல விடயங்களை முன்னின்று செய்யும் ஒரு நல்ல உள்ளம் மீதும் அபாண்டமாக பழி சுமத்தி எனக்கே குறித்த நபர் தனி மடல் எழுதியதும், அவர் எப்படிப்பட்டவர் என்பதை எனக்கு விளக்கியது.

நிர்வாகத்துக்கு : நான் திரும்பி வந்ததில் இருந்து பலமுறை சீண்டினாலும், சட்டை செய்யாமல்தான் விட்டேன். ஆனால் நேரடியாக இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது. பதில் சொல்லுவது என் உரிமை. இதை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

 

1-  பாத்திரம் அறிந்து பிச்சையிடு.  முதலில் பழமொழியே தப்பு. பிச்சை எனக்கானதன்று.

 உங்கள் பழமொழிப்படி தாயக மக்கள் தான் தப்பானவர்கள் என்ற வருகுது.

 

2-நேர்மையானவராக இருந்தால் எனக்கு நெத்திக்கு நேரே உங்களை விசாரித்தேன்.  நீங்கள் தப்பானவர் என எழுதியிருக்கணும். அதைவிடுத்து 4 மாதத்துக்குப்பின் அதுவும் நான் கேட்டபின்... அதுதான் இது இது தான் அது என்பதை யாழ்கள உறவுகள் புரிந்து கொள்வர்.  

(எனக்கு எழுதியது. ஊரில் தொடர்பகள் இல்லை.  முயற்ச்சிக்கின்றேன் என்பது மட்டுமே)

 

மற்றும்படி

நீங்க விசாரித்தாலும் 

உதவி செய்யாது விட்டாலும்

நாங்க செய்வதை தாமதப்படுத்தவோ கிடப்பில் போடவோ இல்லை

ஆறு குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்ட அந்த திட்டம் தொடங்கி 2 மாதமாகுது...

இது தான் செயற்படுபவனுக்கும் வாய் வீரருக்கும் உள்ள வித்தியாசம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், நீங்கள் குறிப்பிடும் நபர்களில் நானும் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் எதற்கும் இதைச் சொல்கிறேன்: தேசியம் பற்றி தீவிரமாகப் பேசினால் ஒருவர் என்ன செய்தாலும் கணக்கெடுக்காமல் விட்டு விடலாம் என்ற மனப்பாங்கு உங்களிடம் உள்ளது! அந்த மனப் பாங்கு என்னிடம் இல்லை!

பேச்சு எப்படி அழகாகப் பேசினாலும் பேச்சுத் தான், அதற்கு வேறு value இல்லை! ஆனால், வதைச் சொற்களால் புலம் பெயர் தமிழர்களின் ஒரு பகுதியினரை விமர்சிப்பது, சொல் அல்ல, அது செயல். இது தேசியத்திற்கு எதிர் என்று உங்களுக்கும் புரியவில்லை, செய்யும் நெடுக்கருக்கும் புரியவில்லை! இதனாலேயே அவர் தகுதி பற்றிப் பேசி விதி மீறல் வரை கிட்டத் தட்டப் போய் அவரது சாயத்தைக் கழுவியிருக்குது! இனியும் அகதிகளை அவர் நையாண்டி செய்தால் இந்தத் திரி பற்றித் தெரிந்தவர்கள் சிரித்துக் கொண்டு கடந்து போவார்கள் என நம்பலாம்! அதுவே இந்தக் குழப்பத்தின் பயன். இதை நான் விருப்பத்துடன் செய்தேனா? இல்லை! நடந்த பரிமாற்றங்களில் நான் பெருமிதம் கொள்கிறேனா என்றால் அதுவும் இல்லை! ஆனால் யாராவது செய்ய வேண்டியிருந்தது, செய்தேன்! எனக்கு மடியில் கனமில்லை என்பது நெடுக்கர் உடபட யாழில் பலருக்குத் தெரியும்! என் மீதான பார்வை இத்திரியினால் பலருக்கு மாறியிருந்தால் கொஞ்சம் வருந்துகிறேன், ஆனால் அது தொடங்கும் போதே எதிர்ப் பார்த்த பக்க விளைவு தான்! ஏற்றுக் கொண்டு எல்லோரும் நகர்வோம்! :)

 

ஐயா

இந்த திரியை முதலிருந்து பார்த்தீர்களா??

அப்படியாயின் என்மீதான உங்கள் குற்றச்சாட்டு தவறல்லவா??

தவறைச்சுட்டிக்காட்டலாம்

எனக்கும் அது வலிக்கிறது தானே..?

 

ஐயா ஒன்றைப்புரிந்து கொள்ளணும்

ஒரு சாக்குக்குள் எல்லோரையும் போட்டு அடிப்பதற்கு எதிரானவன் நான்...

பலமுறை இங்கு எழுதியுள்ளேன்..

ஆனால் தொடர்ந்து அதைத்தானே பலரும் செய்கிறார்கள்

 

புலியில் ஒருத்தர் களவெடுத்தால் எல்லாப்புலியும் கள்ளர்கள்

ஒரு தேசியவாதி பொய் சொன்னால் எல்லாத்தேசியவாதியும் பொய்யர்கள்

ஒரு புலத்தவன் கள்ளமட்டையடித்தால் எல்லாப்புலத்தவரும் கள்ளமட்டைக்காரர்கள் 

ஒரு வியாபாரி சுற்றினால் எல்லாவியாபாரியும் சுத்துமாத்துக்காரர்கள்......

 

இப்படித்தானே இங்கு நெடுக்கை எதிர்த்து எழுதுபவர்கள் எல்லோரும் எழுதுகிறார்கள். எழுதிவருகிறார்கள்.

அப்பொழுதெல்லாம் நானும் அதற்குள் அடங்கினேனே...

அப்படி எழுதவேண்டாம் என்று கெஞ்சினேனே...

யார் மதித்தார்கள்

இன்னும் தொடருதே....

எமக்குள் இதுபோன்ற பிடுங்குப்பாடுகள் வேண்டாம்

ஒற்றுமை முக்கியம்.

நாம் ஒன்றாக இருத்தல் தாயக மக்களுக்கு அவசியம் என நான் எழுதாததா??

நான் கெஞ்சாததா??

எவர் மதித்தார்??

 

என்னைப்பொறுத்தவரை

நெடுக்கை குறி  வைப்பதற்கு வேறு காரணங்கள் உண்டு..

அதை நான் ஆதரிக்கவில்லை

ஆதரிக்கமாட்டேன்.......

நான் இங்கு வருவதற்கு ஒரு நோக்கம் உண்டு

யாரையேனும் பகைவராக்குவது அதற்கு இடைஞ்சலானது...

புதிதாக நண்பர்களைச்சேர்க்காவிட்டாலும்

இருப்பவர்களை இழக்கமுடியாது..

 

நன்றி

உங்கள் மீது பெருமதிப்புண்டு

அது எந்தவகையிலும் குறையவில்லை.  குறையாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

இந்த திரியை முதலிருந்து பார்த்தீர்களா??

அப்படியாயின் என்மீதான உங்கள் குற்றச்சாட்டு தவறல்லவா??

தவறைச்சுட்டிக்காட்டலாம்

எனக்கும் அது வலிக்கிறது தானே..?

ஐயா ஒன்றைப்புரிந்து கொள்ளணும்

ஒரு சாக்குக்குள் எல்லோரையும் போட்டு அடிப்பதற்கு எதிரானவன் நான்...

பலமுறை இங்கு எழுதியுள்ளேன்..

ஆனால் தொடர்ந்து அதைத்தானே பலரும் செய்கிறார்கள்

புலியில் ஒருத்தர் களவெடுத்தால் எல்லாப்புலியும் கள்ளர்கள்

ஒரு தேசியவாதி பொய் சொன்னால் எல்லாத்தேசியவாதியும் பொய்யர்கள்

ஒரு புலத்தவன் கள்ளமட்டையடித்தால் எல்லாப்புலத்தவரும் கள்ளமட்டைக்காரர்கள்

ஒரு வியாபாரி சுற்றினால் எல்லாவியாபாரியும் சுத்துமாத்துக்காரர்கள்......

இப்படித்தானே இங்கு நெடுக்கை எதிர்த்து எழுதுபவர்கள் எல்லோரும் எழுதுகிறார்கள். எழுதிவருகிறார்கள்.

அப்பொழுதெல்லாம் நானும் அதற்குள் அடங்கினேனே...

அப்படி எழுதவேண்டாம் என்று கெஞ்சினேனே...

யார் மதித்தார்கள்

இன்னும் தொடருதே....

எமக்குள் இதுபோன்ற பிடுங்குப்பாடுகள் வேண்டாம்

ஒற்றுமை முக்கியம்.

நாம் ஒன்றாக இருத்தல் தாயக மக்களுக்கு அவசியம் என நான் எழுதாததா??

நான் கெஞ்சாததா??

எவர் மதித்தார்??

என்னைப்பொறுத்தவரை

நெடுக்கை குறி வைப்பதற்கு வேறு காரணங்கள் உண்டு..

அதை நான் ஆதரிக்கவில்லை

ஆதரிக்கமாட்டேன்.......

நான் இங்கு வருவதற்கு ஒரு நோக்கம் உண்டு

யாரையேனும் பகைவராக்குவது அதற்கு இடைஞ்சலானது...

புதிதாக நண்பர்களைச்சேர்க்காவிட்டாலும்

இருப்பவர்களை இழக்கமுடியாது..

நன்றி

உங்கள் மீது பெருமதிப்புண்டு

அது எந்தவகையிலும் குறையவில்லை. குறையாது..

நெடுக்ஸை ஒன்றிரண்டு தடவை சில நிமிடங்களேனும் கண்டவன் என்ற முறையில் அவர்மீது மதிப்புத்தான் உள்ளது. ஆனால் அகதிகளாக வந்து காலூன்றியவர்கள் மீதான அவரது பார்வை சரியென்று ஏற்றுக்கொள்ளமுடியாது.

புலிக்காக காசு சேர்த்துச் சுருட்டியவர்களுக்காக எல்லோரையும் ஒரே சாக்குக்குள் கட்டி அடிக்கக்கூடாது என்று சொல்லும் உங்களுக்கு நெடுக்ஸ் அகதிகளாக வந்தவர்கள் எல்லோரையும் ஒரே சாக்குக்குள் கட்டி அடிப்பதைக் கண்டிக்கமுடியவில்லை. நெடுக்ஸ் மீதான மற்றவர்களின் விமர்சனத்திற்கான காரணம் என்று நீங்கள் கருதுவதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியவில்லை. இது தேசியத்திற்கு ஆதரவாகக் கதைப்பவர்களை உங்கள் கூடாரத்திற்குள் வைத்திருக்கவேண்டும் என்ற காரணத்தினால்தான். அதனால்தான் தீவிர தேசியச் செயற்பாட்டார்களின் சமூகம் சார்ந்த தவறான பார்வைகளை நீங்கள் கண்டுகொள்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸை ஒன்றிரண்டு தடவை சில நிமிடங்களேனும் கண்டவன் என்ற முறையில் அவர்மீது மதிப்புத்தான் உள்ளது. ஆனால் அகதிகளாக வந்து காலூன்றியவர்கள் மீதான அவரது பார்வை சரியென்று ஏற்றுக்கொள்ளமுடியாது.

புலிக்காக காசு சேர்த்துச் சுருட்டியவர்களுக்காக எல்லோரையும் ஒரே சாக்குக்குள் கட்டி அடிக்கக்கூடாது என்று சொல்லும் உங்களுக்கு நெடுக்ஸ் அகதிகளாக வந்தவர்கள் எல்லோரையும் ஒரே சாக்குக்குள் கட்டி அடிப்பதைக் கண்டிக்கமுடியவில்லை. நெடுக்ஸ் மீதான மற்றவர்களின் விமர்சனத்திற்கான காரணம் என்று நீங்கள் கருதுவதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியவில்லை. இது தேசியத்திற்கு ஆதரவாகக் கதைப்பவர்களை உங்கள் கூடாரத்திற்குள் வைத்திருக்கவேண்டும் என்ற காரணத்தினால்தான். அதனால்தான் தீவிர தேசியச் செயற்பாட்டார்களின் சமூகம் சார்ந்த தவறான பார்வைகளை நீங்கள் கண்டுகொள்வதில்லை.

 

முதலில் இந்த திரியை ஆரம்பத்திலிருந்து வாசித்தீர்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த திரியை ஆரம்பத்திலிருந்து வாசித்தீர்களா??

2010 இல் 2011 இல் எல்லாம் இந்தக் திரியில் கருத்து எழுதியிருக்கின்றென். ஆனால் இப்போது ஆரம்பத்தில் இருந்து 13 பக்கங்களையும் வாசிக்கவில்லை.

உங்கள் மீதான விமர்சனத்திற்கும் நீங்கள் பதிலளிக்காமல் வலையில் சிக்கமாட்டேன் என்று மெச்சிக்கொள்வதும் தெரியும் விசுகு ஐயா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2010 இல் 2011 இல் எல்லாம் இந்தக் திரியில் கருத்து எழுதியிருக்கின்றென். ஆனால் இப்போது ஆரம்பத்தில் இருந்து 13 பக்கங்களையும் வாசிக்கவில்லை.

உங்கள் மீதான விமர்சனத்திற்கும் நீங்கள் பதிலளிக்காமல் வலையில் சிக்கமாட்டேன் என்று மெச்சிக்கொள்வதும் தெரியும் விசுகு ஐயா!

 

நாம் நண்பர்களாக

சகோதரர்களாக

இன்றும் பேசிக்கொள்கின்றோம் என்றால் அதற்கும் காரணம் 

உங்களது கருத்துக்களை நான் மதிப்பதும்

நீங்களும் எனக்குத்தேவை என்பது மட்டுமே கிருபன் ஐயா

புரிந்து கொள்ளுங்கள்

எதற்கு தேவையற்ற புடுங்குப்பாடுகள்

இதனால் என் இனத்துக்கு என்ன நன்மை??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கு தேவையற்ற புடுங்குப்பாடுகள்

இதனால் என் இனத்துக்கு என்ன நன்மை??

எமது இனம் புலம்பெயர்ந்த நாடுகளில் காலூன்றி நிலைத்துவிட்டது. தமிழர்களின் துரித வளர்ச்சியை நாங்கள் கொண்டாடவேண்டும். இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் அகதிகளாக வந்த தமது மூதாதையர்கள் பற்றிப் பெருமையாகப் பேசவேண்டும். எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு முன்னேற முடியும் என்று செய்து காட்டியவர்களை இழித்துப் பழிப்பதை நிறுத்தவேண்டும்.

மஹாகவியின் கவிதையில் உள்ளவர்களின் பரம்பரையினம் நாம்!

மப்பன்றிக் கால மழை காணா மண்ணிலே

சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது

ஏர்ஏறாது காளை இழுக்காது,

எனினும் அந்தப்

பாறை பிளந்து பயன் விளைப்பான்

என் ஊரான்

ஆழத்து நீருக் ககழ்வான்

நாற்று

வாழத்தான் ஆவி வழங்குவான்

ஆதலால்

பொங்கி வளர்ந்து பொலிந்தது பார்

நன்னெல்லு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நிர்வாகத்தின் கவனத்துக்கு,

இங்கே நான் என் பதில் கூறும் உரிமையை (right to reply) மட்டுமே நிலைநாட்டுகிறேன். சிலருக்கு மீண்டும், மீண்டும் பொல்லைக் கொடுத்து அடிவாங்குவதில் ஒரு தனிசுகம் என்றால் - நான் என்ன செய்ய முடியும்.

1) பாத்திரம் அறிந்து - இங்கே பிச்சை என்பது ஒரு உவமானம். கருத்தாளரோ, மக்களோ பிச்சை எடுக்கிறார்கள் என்பதல்ல அதன் அர்த்தம். 10ம் வகுப்பு தமிழ் இலக்கண புத்த்ககத்தில் மேலதிக விபரங்களைத்தேடவும்.

2) தனி மடலில், உதவி கேட்ட நபருக்கு " நீங்கள் ஊர் ஒன்றியம் செய்வதை ஏதோ சொந்த காசில் செய்வது போல் படம் காட்டும் ஒரு போலியாம், கதை எழுதுகிறேன் பேர்வழி என்று, ரெண்டு பெண்களுக்கு கடுக்காய் கொடுத்ததை தவிர வேறு எதையும் சாதிக்காத வாழ்க்கை வரலாற்றை எழுதி இன்பமடையும் ஒரு சுய விளம்பரப் பிரியராம், எனவே உங்கள் சுயதம்பட்ட படத்தில் நான் கெளரவ வேடம் ஏற்கவிரும்பவில்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லாதது என் பிழைதான். இங்கிதம் கருதி அப்படி இருந்துவிட்டேன். மன்னித்தருள்க.

3) இந்த திட்டம் நன்றாக நடக்க வாழ்த்துக்கள். முகம் தெரியாமல், சுயதம்பட்டம் அடியாமல் உதவி செய்யும் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.

1- பாத்திரம் அறிந்து பிச்சையிடு. முதலில் பழமொழியே தப்பு. பிச்சை எனக்கானதன்று.

உங்கள் பழமொழிப்படி தாயக மக்கள் தான் தப்பானவர்கள் என்ற வருகுது.

2-நேர்மையானவராக இருந்தால் எனக்கு நெத்திக்கு நேரே உங்களை விசாரித்தேன். நீங்கள் தப்பானவர் என எழுதியிருக்கணும். அதைவிடுத்து 4 மாதத்துக்குப்பின் அதுவும் நான் கேட்டபின்... அதுதான் இது இது தான் அது என்பதை யாழ்கள உறவுகள் புரிந்து கொள்வர்.

(எனக்கு எழுதியது. ஊரில் தொடர்பகள் இல்லை. முயற்ச்சிக்கின்றேன் என்பது மட்டுமே).

மற்றும்படி

நீங்க விசாரித்தாலும்

உதவி செய்யாது விட்டாலும்

நாங்க செய்வதை தாமதப்படுத்தவோ கிடப்பில் போடவோ இல்லை

ஆறு குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்ட அந்த திட்டம் தொடங்கி 2 மாதமாகுது...

இது தான் செயற்படுபவனுக்கும் வாய் வீரருக்கும் உள்ள வித்தியாசம்..

Link to comment
Share on other sites

எமது இனம் புலம்பெயர்ந்த நாடுகளில் காலூன்றி நிலைத்துவிட்டது. தமிழர்களின் துரித வளர்ச்சியை நாங்கள் கொண்டாடவேண்டும். இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் அகதிகளாக வந்த தமது மூதாதையர்கள் பற்றிப் பெருமையாகப் பேசவேண்டும். 

துரித வளர்சியா? எதை நோக்கி? அதற்கு கொடுக்கும் விலை என்ன?
 
கொஞ்சம் ஆழமாக யோசிச்சால் ''வளர்சிக்கான''  விலை அதை அர்தமற்றதாக்கிவிடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது இனம் புலம்பெயர்ந்த நாடுகளில் காலூன்றி நிலைத்துவிட்டது. தமிழர்களின் துரித வளர்ச்சியை நாங்கள் கொண்டாடவேண்டும். இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் அகதிகளாக வந்த தமது மூதாதையர்கள் பற்றிப் பெருமையாகப் பேசவேண்டும். எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு முன்னேற முடியும் என்று செய்து காட்டியவர்களை இழித்துப் பழிப்பதை நிறுத்தவேண்டும்.

மஹாகவியின் கவிதையில் உள்ளவர்களின் பரம்பரையினம் நாம்!

மப்பன்றிக் கால மழை காணா மண்ணிலே

சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது

ஏர்ஏறாது காளை இழுக்காது,

எனினும் அந்தப்

பாறை பிளந்து பயன் விளைப்பான்

என் ஊரான்

ஆழத்து நீருக் ககழ்வான்

நாற்று

வாழத்தான் ஆவி வழங்குவான்

ஆதலால்

பொங்கி வளர்ந்து பொலிந்தது பார்

நன்னெல்லு.

 

எல்லாவற்றையுமா ஏற்றுக்கொள்கின்றோம்??

அதற்கும் எதிர்க்கருத்து உண்டல்லே..

சிங்களத்தீவினிற்கோர் பாலம் அமைப்போம்...

மஹாகவி  நண்பனா?

எதிரியா??

 

புரிந்து கொள்ளுங்கள்

எதற்கு தேவையற்ற புடுங்குப்பாடுகள்

இதனால் என் இனத்துக்கு என்ன நன்மை??

Link to comment
Share on other sites

அநேகமானவர்கள் வெளிநாட்டுக்கு படிக்க வரும்போது ஒரு Mஸ்c ஒர் Pக்D முடிச்சு போட்டு நாட்டுக்கு திரும்பிறது தான் அவர்களின் பிளான். ஆனால் இங்க வந்த பின் தான் தெரியும் படிப்புக்கு கரை இல்லை. அவருக்கு மேலே படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். நம் தமிழன் மேலே படிக்க நாம் சந்தோசமாக வாழ்த்துறதை விட்டு அவர் மேல் ஏன் இந்த வெறி. உங்களில் எத்தனை பேர் 5 வருஷம் உழைச்சு கொண்டு திருபுவன் என்று வந்துட்டு இங்கயே குடிகொண்டிருக்கிறியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

90% போலி அகதிகள்

10% உண்மை அகதிகள்

சார் இந்தத் தரவு யார் கொடுத்தது? அல்லது ஒரு குத்துமதிப்பா நீங்கள் சொல்லுகிறீர்களா? ஒண்டுமில்லை சும்மா ஒரு விடுப்புக்குக் கேக்கிறன் :D

 

 

உண்மையை சொல்லப்போனால் 90.01% போலி அகதிகள். 9.99% உண்மை அகதிகள்.

 

தரவு: முந்தாநாள் படுக்கையில் கண்ட கனவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நிர்வாகத்தின் கவனத்துக்கு,

இங்கே நான் என் பதில் கூறும் உரிமையை (right to reply) மட்டுமே நிலைநாட்டுகிறேன். சிலருக்கு மீண்டும், மீண்டும் பொல்லைக் கொடுத்து அடிவாங்குவதில் ஒரு தனிசுகம் என்றால் - நான் என்ன செய்ய முடியும்.

1) பாத்திரம் அறிந்து - இங்கே பிச்சை என்பது ஒரு உவமானம். கருத்தாளரோ, மக்களோ பிச்சை எடுக்கிறார்கள் என்பதல்ல அதன் அர்த்தம். 10ம் வகுப்பு தமிழ் இலக்கண புத்த்ககத்தில் மேலதிக விபரங்களைத்தேடவும்.

2) தனி மடலில், உதவி கேட்ட நபருக்கு " நீங்கள் ஊர் ஒன்றியம் செய்வதை ஏதோ சொந்த காசில் செய்வது போல் படம் காட்டும் ஒரு போலியாம், கதை எழுதுகிறேன் பேர்வழி என்று, ரெண்டு பெண்களுக்கு கடுக்காய் கொடுத்ததை தவிர வேறு எதையும் சாதிக்காத வாழ்க்கை வரலாற்றை எழுதி இன்பமடையும் ஒரு சுய விளம்பரப் பிரியராம், எனவே உங்கள் சுயதம்பட்ட படத்தில் நான் கெளரவ வேடம் ஏற்கவிரும்பவில்லை என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லாதது என் பிழைதான். இங்கிதம் கருதி அப்படி இருந்துவிட்டேன். மன்னித்தருள்க.

3) இந்த திட்டம் நன்றாக நடக்க வாழ்த்துக்கள். முகம் தெரியாமல், சுயதம்பட்டம் அடியாமல் உதவி செய்யும் புங்குடுதீவு ஒன்றிய உறுப்பினர் அனைவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.

 

என் மீதான தனிப்பட்ட கோபத்தில் உங்களையும்

யாழ் கள எழுத்தாளர்களையும் மிகவும் தாழ்த்துகிறீர்கள்

ஆத்திரம் ஒருவரின் புத்தியை முழுமையாக மறைத்துவிடும் என்பதற்கு இந்த கருத்து சான்று...

ஆறுதலாக கருத்தாடலாம்...

அமைதி எடுத்து வருக...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு ஆத்திரமில்லை. ரொம்ப ரிலாக்ஸ்டாகவே எழுதுகிறேன்.

என்னிடம் இருந்து இது சம்பந்தமாக மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் கேட்கவும்.

நீங்கள் கேட்டதால்தான் இத்தனை விளக்கம் தரவேண்டும் படியாயிற்று. இனியும் கேட்டால் நிச்சயம் தருவேன்.

இந்த சில்லறை விசயங்களை, அவை உண்மையாகவே இருப்பினும், பேச நேர்ந்ததில் எனக்கு உண்மையிலே ஒரு சந்தோசமுமில்லை.

Link to comment
Share on other sites

தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதால் இத்திரி பூட்டப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.