Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.

Featured Replies

வடிவேலு

தங்களது மெடிகல் லீவு எப்ப முடியுது

முதல்ல நீங்கள் வேலைக்கு போங்கள்.

யாழில ஒரே பிரச்சினையாக கிடக்கு உங்கள அதிகம் இங்க காணுவதால்......? ^_^:D

என்னது எனது முதலாளி கூட இதுவரை போன் பன்னி கேட்டது இல்லை எப்ப வேலைக்கு வாறாய் என்று சம்பளம் தார அவரை விட உங்களுக்கு அக்கறையோ? :(

  • Replies 271
  • Views 26.1k
  • Created
  • Last Reply

நாங்க ஸ்கொல"சிப்"பில வந்தனாங்க ஆக்கும்.

கொலை செய்துபோட்டு வந்தீங்களோ கொலை செய்யாமல் வந்தீங்களோ.. வெளிநாடுகளிற்கு வந்த நம்மவரில் நீங்களும் நாலாவதோடு ஐந்தாமவரே. நீங்கள் மற்றவர்களிற்கு சொல்கின்ற கிண்டல்கள் உங்களுக்கும் பொருந்தும். கொலை சிப்பில் வந்தால் என்ன கொல்லாத சிப்பில் வந்தால் என்ன.. உங்களுக்கு லண்டனில் பக்கிங்காம் பலசில் மற்றவர்கள் போல் அல்லாது விஷேட கவனிப்புடன் விருந்துபசாரமா தருகின்றார்கள்? :lol:

மேலை நாட்டுகளில், பொருள் சக தாரம் நம்மை ஆறறிவு உள்ள மிருகமாக வைத்துள்ளது. அதில் இப்பொழுது ஒரு வெடிப்பு வந்துள்ளது (கிரேக்கம், அயர்லாந்து ஏற்கனவே பாதிக்கப்படுள்ளன, போர்த்துக்கல், ஸ்பெயின் அடுத்த நாடுகள் ). இந்த வெடிப்பு ஒரு பிளவாக வரும்போது 'வெளிநாட்டவர்களுக்கு' கிடைக்கலாம் 'தனி மரியாதை'.

Edited by akootha

View Postnedukkalapoovan, on 16 December 2010 - 03:22 PM, said:

நாங்க ஸ்கொல"சிப்"பில வந்தனாங்க ஆக்கும்.

வெள்ளையலை பொறுத்த மட்டில் ந்ங்களும் கறுப்பர் தான் ஆபிரிக்கனும் கறுப்(பி)பர் தான் ஆனால் நாங்கள் பிரவுன் என்று சொல்லுற போல இருக்கு........

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்துபோட்டு வந்தீங்களோ கொலை செய்யாமல் வந்தீங்களோ.. வெளிநாடுகளிற்கு வந்த நம்மவரில் நீங்களும் நாலாவதோடு ஐந்தாமவரே. நீங்கள் மற்றவர்களிற்கு சொல்கின்ற கிண்டல்கள் உங்களுக்கும் பொருந்தும். கொலை சிப்பில் வந்தால் என்ன கொல்லாத சிப்பில் வந்தால் என்ன.. உங்களுக்கு லண்டனில் பக்கிங்காம் பலசில் மற்றவர்கள் போல் அல்லாது விஷேட கவனிப்புடன் விருந்துபசாரமா தருகின்றார்கள்? :o

முடிவா என்ன சொல்லவாறீங்க..

காட்டிக் கொடுக்கிறவனும் ஒன்று போராடி வீழுறவனும் ஒன்று.. அப்படின்னா. :lol::D

வெள்ளையலை பொறுத்த மட்டில் ந்ங்களும் கறுப்பர் தான் ஆபிரிக்கனும் கறுப்(பி)பர் தான் ஆனால் நாங்கள் பிரவுன் என்று சொல்லுற போல இருக்கு........

ஓய் எம் பி பி எஸ் வடிவேலு... சொன்னா என்ன சொல்லாட்டி என்ன.. நாங்க பிரவுன் தானோய்..! வெள்ளைக்காரன் சொன்னால் தான் பிரவுன் என்று ஏற்றுக் கொள்ளுவீங்களாக்கும்..??! :lol::D

காட்டிக் கொடுக்கிறவனும் ஒன்று போராடி வீழுறவனும் ஒன்று.. அப்படின்னா. :lol::o

அப்ப அகதியா ஒடி வந்தவங்கள் எல்லாம் துரோகி மாதிரி, ஸ்கொல்லில விசா எடுத்து வந்தவங்கள் எல்லாம் மாவீரர் மாதிரி என்று அர்த்தமா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அகதியா ஒடி வந்தவங்கள் எல்லாம் துரோகி மாதிரி, ஸ்கொல்லில விசா எடுத்து வந்தவங்கள் எல்லாம் மாவீரர் மாதிரி என்று அர்த்தமா? :lol:

Asylum seekers இவர்களை வெளிநாட்டு காரங்க பெரிய வரவேற்போடு வரவேற்கிற நிலையில் இல்லை. இதுதான் யதார்த்தம்.

அதேவேளை தங்களின் தேசத்துக்கு உபயோகமாகக் கூடியவர்களை அவர்கள் மரியாதையோடு வரவேற்பதும் மரியாதை அளிப்பதும் உண்மை. இதுவும் யதார்த்தம்.

என்னைப் பொறுத்தவரை.. வெளிநாடுகளிற்கு ஓடி வந்தவர்களில் 70% க்கும் மேலானோர் உண்மையான அரசியல் அகதிகள் கிடையாது. பொருளாதார நிலை கருதி.. தேசத்தின் துன்பியலை காட்டி.. தங்களின் வாழ்க்கையை வளப்படுத்த தேசத்தை போராட்டத்தை காட்டிக் கொடுத்து பிழைக்க ஓடி வந்தவர்கள். இது தான் உண்மை. இதற்கான சான்றுகள் பல நான் அறியக் கண்டிருக்கிறேன்.

புலி வேசம் போட்டவர்களே அகதி என்ற நிலையைப் பெற வெளிநாடுகளுக்கு புலிகளை போராட்டத்தை காட்டிக் கொடுத்து.. மிக மோசமாக வர்ணித்து தங்களின் வாழ்வை வளப்படுத்த இல்லாத பொல்லாத பொய் எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். இவர்களை பிணங்களை ரசிக்கும் சிங்கள இராணுவத்தோடு கூட ஒப்பிட முடியாது. அவங்கள விட உண்மையில் இவர்கள் கேவலம். பிணங்களை வைத்து வாழ்க்கையை ஓட்டியவர்கள் இவர்கள். அப்படி நோக்கின் சிங்கள இராணுவம் இவர்களை விட மேல் என்று சொல்லலாம்.

இதில் எனக்கு மாற்றுக் கருத்தே கிடையாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அண்ணா

நீங்கள் படிப்புக்காக வந்தீர்கள்

மற்றவர்கள் பணத்துக்காக வந்தார்கள்

இரண்டும் ஒன்றுதானே.....?

அதைவிட

தங்களது வாதத்தை பார்த்தால்

பிரதேசவாதம் பிறதேசவாதம் (நன்றி கிருபன்)

படித்தவர் படிக்காதவர்

மேல்சாதி கீழ்சாதி................போல

நீங்களும்ஒரு குழுவுக்கு தலைமை தாங்குவது போல் தெரிகிறது. :lol:

அதை கொஞ்சம் சிந்தியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமிக்காரனோட சேர்ந்து தலையாட்டினா.. அவனுக்குப் பெயர் தலையாட்டி.

ஆமிக்காரனோட சேர்ந்து ஆயுதம் வாங்கி சுட்டா அவன் துரோகி.

ஆமிக்காரனோட சேர்ந்து தகவல் சேகரித்துக் கொடுத்தா.. அவன் உளவாளி.. காட்டிக் கொடுக்கிறவன்.

வெளிநாட்டுக்கு வந்து இது 3 ஐயும் ஒன்றா சேர்த்துச் செய்தாலும்.. அவர் அகதி. அவரை நாங்க.. தேசத்தை காக்கும் உத்தம புரிசர் என்று இனம் கண்டு கொள்கை வகுக்கனுமாமில்ல..!

அங்க நின்று காட்டிக்கொடுத்தாலும் ஒன்றுதான்.. அகதி அந்தஸ்து கிடைக்கும் என்று வெளிநாட்டுக்கு வந்து காட்டிக் கொடுத்தாலும் ஒன்று தான். இரண்டும் காட்டிக் கொடுத்து மற்றவனின் அழிவில் பிழைக்கிற ஒரு இழி பிழைப்புத்தான். இதில் என்ன வெட்கம் வேண்டி இருக்கு. இதைத்தானே எங்களில் பல பேர் செய்து பிழைச்சிருக்கிறம். அதை வெளில உள்ள படிக்கு சொன்னா ஏன் கோவிக்கனும்..!

யதார்த்தம் கசக்கத்தான் செய்யும். எங்களில் பலர் அந்த யதார்த்ததிற்கு சொந்தக்காரர்கள் என்பதால்.. நாங்க அனுசரிச்சு போகனும். இல்லைன்னா.. அடக்கிடுவம். இதுவும் ஒரு வகை ஓரவஞ்சனை தான். முள்ளிவாய்க்கால் பலிகளுக்கு இதுவும் ஒரு காரணம். :lol::D:o:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாம் வெளியில் சொன்ன பொய்கள் எம்மை அழித்தன என்பது உண்மைதான்.

இதில் நான் ஒரு பொய் கூட சொல்லவில்லை போராட்டத்துக்கு எதிராக எதுவும் சொல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். நான் வந்தது 1983 கலவரத்தோடு. அப்போது நான் சொன்னது என்னால் சிறிலங்காவில் இனி இருக்கமுடியாது என்றுதான்.

ஆனால் ஒரு காலத்துக்கு பின் புலிகளுக்கு என்று கட்டுப்பாட்டு பகுதிகள் வந்தபின் அந்த பகுதிகளில் இருந்து வந்த மக்கள் அல்லது வேறு இடத்திலிருந்து வந்தாலும் அரசோடு பிரச்சினையென்றால் புலிகளின் பகுதிகளுக்கு சென்று வாழலாமே என்ற கேள்விக்கு பதிலளிப்பதிலேயே காட்டிக்கொடுப்புக்கள் நடந்தன. ஆனால் பொதுவாக நடந்ததுதான் இது. ஆனால் இங்கு இதை வைத்து மட்டும் உலகம் எம்மை வகைப்படுத்தவில்லை. அங்கு நடந்தவை அவர்களுக்கு தெரியாது என்று சொல்வது நகைப்புக்கிடமானது. எமது சாட்சியங்களை அவர்கள் முற்றுமுழுதாக ஏற்றார்கள் என்றால் தற்போது கொடுக்கப்படும் சாட்சியங்களையும் ஏற்கலாமே...........????????

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வெளிநாட்டுக்கு ஓடி வந்து காட்டிக் கொடுத்து பிழைச்சா அது பொது விசயம். அதையே வெளிநாட்டுக்கு ஒடி வர முடியாதவன் உள்ளூரில நின்று சிங்களவனுக்கு காட்டிக் கொடுத்து பிழைச்சா அது துரோகம்.

சரி.. அதுதான் கிடக்கட்டும்.. அங்க என்ன நடக்கென்று உலகத்துக்கு தெரியுமாமில்ல. அங்க என்ன நடக்கென்று சிங்களவனுக்கும் தெரியும். அவன் விளங்கி எங்களை அடிச்சானா.. விளங்காம அடிச்சானா...???! இப்படித்தான் இருக்கு கேள்வி. வெளிநாட்டுக் காரனுக்கு விளக்கம் அளிச்ச நாங்களே எங்களட அகதி அந்தஸ்தை தான் காப்பாற்ற நின்றம். அதுக்கு அப்புறம் தான் மிச்சம். உலகத்தில ஒரே ஒரு இடத்தில மட்டும் வாழுற சிங்களவன்.. தன்ர இனத்துக்காக இதையும் செய்தான் என்றும் நாங்கள் விளக்கம் கற்பிக்கலாம். ஏன்னா.. நாங்க செய்த தவறுகளை நியாயப்படுத்த வெளிக்கிட்டா தப்பு செய்த எல்லாருக்கும் அதற்கு வாய்ப்பளிக்கனும் எல்லோ..!

:lol: :lol: :o:D :D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வெளிநாட்டுக்கு ஓடி வந்து காட்டிக் கொடுத்து பிழைச்சா அது பொது விசயம்.

நானறிந்தவரையில்

புலிகள் ஒரு போதும் இதை துரோகமாகப்பார்க்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நானறிந்தவரையில்

புலிகள் ஒரு போதும் இதை துரோகமாகப்பார்க்கவில்லை

ஆனால் மனச்சாட்சி உள்ளவர்கள் வெளிநாட்டுக்கு வந்துவிட்டுப் புலிகளால்தான் பிரச்சினை என்று சொல்ல மாட்டார்கள்..! புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்தாலும் அரசின் வான் தாக்குதல், செல் தாக்குதல்களால் ஆபத்து என்று சொல்லலாமே??! அல்லது பட்டினி போடுறான் எண்டு சொல்லலாமே? :lol: அவ்வளவு ஏன்? எனக்குத் தெரிஞ்சு இந்தியாவில் வருசக்கணக்கா இருந்தவையே லண்டனுக்குப் போய் யாழ்ப்பாணத்தில இருந்து வாறம், ஆமித்தொல்லை தாங்க முடியேல்ல எண்டு சொல்லி சிற்றிசனும் எடுத்திருக்கினம்..! :D

அதுமட்டுமல்லாமல் ஏதோ ஒன்றைச் சொல்லிவிட்டு அகதி அந்தஸ்து வாங்கி, குடியுரிமை வாங்கி பிறகு நாட்டுக்கு சுற்றுலா போவது என்னத்தைக் குறிக்கிறது? தமிழன் சொல்வது எதையும் நம்பாதே என்று நினைக்கும்படி செய்யுது..! :o

பொய் சொல்வது பிழையில்லை..! ஆனால் இனத்துக்கு நன்மை வாறமாதிரி சொல்ல வேணும்..! :lol: சிங்களவனை மாதிரி..!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இசை

என்னைப்போல் தங்களைப்போல் பலர் பொறுப்போடு நடந்திருப்பார்கள். அதற்காகத்தான் என்னைப்பற்றி எழுதினேன்.

அடுத்தது வான் தாக்குதல் பட்டினி என்பன பொதுவான விடயங்கள்

தனிப்பட உனக்கு என்ன பிரச்சினை என்றுதான் பார்ப்பார்கள்

நானறிய 80களில் நாட்டைவிட்டு இந்தியா, மலேசியா நாடுகளுக்கு இடம்பெயர்ந்து பல காலம் அங்கே கும்பலில் கோவிந்தா பாடி குப்பை கொட்டி விட்டு, கள்ள கடவுச்சீட்டில் வந்து 'புலிகள் எம்மை சேரும்படி வற்புறுத்தினார்கள் அதனால் தாங்கள் நாட்டை விட்டு அரசியல் தஞ்சம் கோருகிறோம்' என்று இஞ்ச வந்து கதை விட்டவர்கள் இப்பொது இங்கே சும்மா சொல்லக் கூடாது இரண்டு மூன்று வீடு , வர்த்தக நிறுவனம் என்று நல்ல வசதியாத் தான் இருக்கினம். (அது தான் அவர்களின் நோக்கமும்) நாடுப் பிரச்னையை தமது சுய முன்நேற்றத்திகாக பயன் படுத்தியவர்கள்.

ஆனால் இவர்களில் சிலரை போராட்டங்களிலும் காணக் கூடியதாக இருக்கு... உண்மையில் குற்ற உணர்வில் வந்து கலந்து கொள்ளுகிறார்களா இல்லை, வேறு ஏதும் சொந்த காரணங்களா என்று தெரியவில்லை. (கூப்பிட்டுக் கேட்டல் போல மட்டும் உண்மையையா சொல்லப் போகிறார்கள்?) :lol:

அதே நேரம் பிரித்தானிய கடவுச்சீட்டு எடுத்தபிற்பாடு இலங்கைக்கு குடும்பம் சகிதம் வருடாவருடம் போய் அங்குள்ளவர்களுக்குப் பவர் காட்டி விட்டு வாருவார்கள்....

(என்னைப் பொறுத்த வரைக்கும், இங்கு இருந்து அரசாங்க சலுகைகள் எடுத்து வெட்டிப் பந்தா காடுவதை விட ஊரில கூலி வேலை செய்து ஒரு நேரமாவது சாப்பிடுற சனம் உண்மையில் தேசப் பற்றுள்ளவர்கள் தான்!

அதுமட்டுமல்லாமல் ஏதோ ஒன்றைச் சொல்லிவிட்டு அகதி அந்தஸ்து வாங்கி, குடியுரிமை வாங்கி பிறகு நாட்டுக்கு சுற்றுலா போவது என்னத்தைக் குறிக்கிறது? தமிழன் சொல்வது எதையும் நம்பாதே என்று நினைக்கும்படி செய்யுது..! :lol:

இசை சொல்வது சரி,

ஆனால் எனக்கொரு கேள்வி இருக்கு. 2002 இற்கும் மகிந்த மாமா அரசதிபராக பதவி ஏற்ற காலத்துக்கும் இடைப்பட்ட 'சமாதான' காலத்தில் இப்படி கூட்டம் கூட்டமாக சுற்றுலா போகும் போது மட்டும் ஏன் இந்தக் கேள்வி எழவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

இசை சொல்வது சரி,

ஆனால் எனக்கொரு கேள்வி இருக்கு. 2002 இற்கும் மகிந்த மாமா அரசதிபராக பதவி ஏற்ற காலத்துக்கும் இடைப்பட்ட 'சமாதான' காலத்தில் இப்படி கூட்டம் கூட்டமாக சுற்றுலா போகும் போது மட்டும் ஏன் இந்தக் கேள்வி எழவில்லை?

அப்போது புலிகள் ஆட்சியும் இருந்தது..! புலிகளிடம் பாதுகாப்பு இருக்கு எண்டு சொல்ல வசதியா இருந்திருக்கும்..! :lol:

ஆனால் இப்ப புலிகள் அழிந்த பிறகு மூட்டை முடிச்சுகளோடை நாட்டுக்குப் போனால் புலி அழிஞ்சதில தமிழ்சுக்கு சந்தோசம் எண்டுதானே வரும்..! :lol:

என் அண்ணா ஒருதன் விசா இல்லாமல் பிடிபட்டு இருந்த நேரம் என்னோட மற்ற அண்ணன் அவருக்கு விளக்கத்துக்கு உரிய நாள் வரும்போது போனார் ... சிங்கள் பெண்தான் வந்தார் என் அண்ணனை விசாரிக்க சண்டை வந்து என் பெரியண்ணாவுக்கு சிங்களத்திக்கும் சண்டை வந்து என் அண்ணா சொன்னார் நீ கொண்டு போய் புலிகளிடம் ஒப்படைப்பன் என்று சொல்லு என் தம்பியை சைன் பண்ண வைக்கிறேன் ஊருக்கு திரும்ப என்று.... கொழும்பில் அவனுக்கு ஒரு பிரச்சனையும் நடக்ககூடாது என்று சண்டை போட்டார்கள்... அது மாதிரி நானும் வந்த நேரம் புலிகளை சாட்டி பாஸ்போட் எடுக்கவே இல்லை... என் குடும்பமே இங்கேதான் என்றுதான் எடுத்தேன்.... படிக்கப்போகிறேன் என்றுதான் என் கேஸ் பைல் பண்ணினார்கள்... ஒரு சிலர் புலிகளை சாட்டி எடுத்தார்கள் என்றால் எல்லோரும் இல்லை... :lol: :lol: :o

. நெடுக்கண்ணா உங்களுக்கு வசதி இருந்து இருக்கும் அதனால் student visa

விசாவில் வந்து இருப்பிர்கள்.... கஸ்ரப்பட்டு பிழைக்கவேண்டும் வருபவர்கள் என்ன பண்ண முடியும்.. அப்படி வந்தவர்களே எல்லோரும் வசதி இருந்தால் படிக்கத்தான் பண்ணுகிறார்கள்... இரவில் வேலை செய்தும் பகலில் படித்துக்கொண்டும் இருக்கிறார்கள்

எல்லாரும் நாட்டை விட்டு தப்பவேண்டும் என்று ஓடி வந்து விட்டு நாங்கள் கொலஸ்ப்பில் வந்தம் என்று தம்பட்டம் அடிக்கிறிர்களே.. ஏன் ஊரில் படிக்க முடியாதா>? இல்லை படிக்கத்தான் வந்திர்கள் ஏன்றால் ஏன் இன்னும் இங்கே இருக்கிறிர்கள். படிப்பு முடிய நாட்டுக்கு போகவேண்டியதுதானே... போய் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டியதுதானே... பொய் சொல்ல சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்களும் புலிகளை சாட்டியிருப்பிர்கள்... எழுத்திலை வேண்டும் என்றால் இல்லையென்று எழுதிப்போட்டு போகலாம்... ஆனால் உள்ளே போய் பார்த்தால்தான் தெரியும் நீங்கள் எல்லாம் என்ன பொய் சொல்லிக்கொண்டு திரிகிறிர்கள் என்று....

Edited by சுஜி

அப்போது புலிகள் ஆட்சியும் இருந்தது..! புலிகளிடம் பாதுகாப்பு இருக்கு எண்டு சொல்ல வசதியா இருந்திருக்கும்..! :lol:

ஆனால் சிங்கள தேசத்தை கடந்து தான் போக வேண்டி வரும் என்பது எல்லா அரசுகளுக்கும் தெரியும்

ஆனால் இப்ப புலிகள் அழிந்த பிறகு மூட்டை முடிச்சுகளோடை நாட்டுக்குப் போனால் புலி அழிஞ்சதில தமிழ்சுக்கு சந்தோசம் எண்டுதானே வரும்..! :lol:

உண்மையில் இன்று போகின்றவர்களை பார்த்து இப்படி சொல்லக் கூடியவர்கள் பின்வரும் பிரிவினர் தான்

1 தமிழ் ஈழத்துக்கான தேவையை உணர்ந்த உண்மையான தமிழ் தேசிய ஆதரவாளர்கள் (ஒரு 10 வீதம் இருக்குமா?)

2 ஊரில் இருக்கும் தன் நெருங்கிய உறவுகள் அனைத்தையும் வெளிநாட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்தவர்களும் சமாதான காலத்தில் ஊருக்கு போய் எல்லாவற்றையும் நல்ல விலைக்கு விற்று விட்டு வந்தவர்களும். இவர்களுக்கு ஊருக்கு போக வேண்டிய அவசியம் அதிகம் வராது (85%)

3 ஊருக்கு களவாக போய்ட்டு வந்து நடிப்பவர்கள் (5 %)

:o

சுஜி, எதற்கும் முற்பாதுகாப்பாய் பங்கருக்குள் போய் ஒளிந்துகொள்ளுங்கோ. நெடுக்க்ஸ் மல்ரிபரலுடன் வரப்போகிறார். சும்மா தன்பாட்டில் படித்துக்கொண்டு இருந்தவனை எல்லாருமாய் சேர்ந்து உசுப்பிப்போட்டீங்கள். டங்குவார் எல்லாம் நார் நாராய் கிளியப்போகிது. :lol:

சுஜி, எதற்கும் முற்பாதுகாப்பாய் பங்கருக்குள் போய் ஒளிந்துகொள்ளுங்கோ. நெடுக்க்ஸ் மல்ரிபரலுடன் வரப்போகிறார். சும்மா தன்பாட்டில் படித்துக்கொண்டு இருந்தவனை எல்லாருமாய் சேர்ந்து உசுப்பிப்போட்டீங்கள். டங்குவார் எல்லாம் நார் நாராய் கிளியப்போகிது. :D

ஏன் நான் ஒளித்துகொள்ளவேண்டும்... உண்மை சொல்லுறதுக்கு நான் ஏன் பயப்படவேண்டும்... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நான் ஒளித்துகொள்ளவேண்டும்... உண்மை சொல்லுறதுக்கு நான் ஏன் பயப்படவேண்டும்... :D

ஏன் அண்ணா

நீங்கள் படிப்புக்காக வந்தீர்கள்

மற்றவர்கள் பணத்துக்காக வந்தார்கள்

இரண்டும் ஒன்றுதானே.....?

அதைவிட

தங்களது வாதத்தை பார்த்தால்

பிரதேசவாதம் பிறதேசவாதம் (நன்றி கிருபன்)

படித்தவர் படிக்காதவர்

மேல்சாதி கீழ்சாதி................போல

நீங்களும்ஒரு குழுவுக்கு தலைமை தாங்குவது போல் தெரிகிறது. :D

அதை கொஞ்சம் சிந்தியுங்கள்

வணக்கம் சுஜி

என் ஆதங்கமும் அதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

இசைக் கலைஞன் நீங்களும் மாணவ விசாவில் படிக்க வந்தனீங்கள் படித்து பட்டம் எடுத்த பிறகு போகாமல் ஏன் இங்கேயே இருக்கிறீங்கள்?...நீங்கள் இங்கே சுக போகமாக வாழ வேண்டும் :D:D:D

எல்லோரும் நாட்டுப் பிரச்சனைக்கு பயந்து தான் புலம் பெயர்ந்து வந்தவர்கள் அதில் அசேலம் அடிப்பவர்கள் தாங்கள் திரும்ப நாட்டுக்கு போக முடியாது என்டு வெளிப்படையாக சொல்லிப் போட்டு இருப்பார்கள் ஆனால் மாணவ விசாவில் வந்தவர்கள் தாங்கள் படித்து முடித்தவுடன் ஊருக்கு போகப் போறோம் என சொல்லிக் கொண்டு இருப்பார்கள் ஆனால் கடைசி வரைக்கும் போக மாட்டார்கள்...ஏன் இ.கலைஞன் மாணவ விசாவில் வருபவர்கள் நிரந்தர வதியுரிமை பெற்றவுடன் ஊருக்கு ஹொலிடே போவதில்லையா?...அசேலம் அடிப்பவர்கள் அநேகம் பேர் அரசையும்,ஆமியையும் தான் குற்றம் சாட்டி இருப்பார்கள் கொஞ்ச பேர் தவிர்க்க முடியாத காரணத்தால் புலியை குற்றம் சாட்டி இருப்பார்[மாற்றுக் கருத்துக்காரர் வேண்டும் என்டே புலியை குற்றம் சாட்டி இருப்பார்கள் அவர்களை விடுங்கள்]...புலிகளுக்கும்,போராட்டத்திற்கும் பெருமளவு உதவி செய்தவர்கள் அசேலமடித்தவர்களாகத் இருக்கும்...உங்களைப் போன்றவர்கள் படிக்கிறேன் என்டு சொல்லியே ஒருயுதவியும் செய்து இருக்க மாட்டீர்கள்...உங்கள் படிப்பாவது எந்த விதத்திலாவது புலிகளுக்கும்,நாட்டுக்கும் பிரயோசனப்பட்டதா?...அட்லீஸ்ட் படித்த பின்னாவது ஊருக்கு போறீர்களா சேவை செய்ய?[சமாதான காலத்திலாவது போயிருக்கலாம் தானே]...இனி மேல் நீங்களும்,நெடுக்ஸ்சும் மாணவ விசாவில் வந்தவர்கள் என்டு தம்பட்டம் அடிக்க கூடாது...எல்லோரும் படிக்க வேண்டும்,கொலசிப் எடுக்க வேண்டும் என விரும்பி இருந்தால் புலிகள் எப்பவோ பின் வாங்கி இருக்க வேண்டும்[புலிக்குப் போன பின் அவர்கள் படிப்பித்தவர்களை பற்றீ நான் கதைக்கவில்லை]...உங்களிடம் படிக்கும் திறமை இருந்தது அதற்கு மேலால் பணம் இருந்தது அதனால் மாணவ விசாவில் வந்தீர்கள்...என்னைத் பொறுத்த வரை கடைசி வரை அங்கிருந்து போராடியவர்களையும்,அங்கிருந்த மக்களையும் தவிர மற்ற அனைவரும் துரோகிகள் தான் அதில் நீங்களும்,நானும் அடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணா உங்களுக்கு வசதி இருந்து இருக்கும் அதனால் student visa

விசாவில் வந்து இருப்பிர்கள்.... கஸ்ரப்பட்டு பிழைக்கவேண்டும் வருபவர்கள் என்ன பண்ண முடியும்.. அப்படி வந்தவர்களே எல்லோரும் வசதி இருந்தால் படிக்கத்தான் பண்ணுகிறார்கள்... இரவில் வேலை செய்தும் பகலில் வேலை பண்ணியும்...

எல்லாரும் நாட்டை விட்டு தப்பவேண்டும் என்று ஓடி வந்து விட்டு நாங்கள் கொலஸ்ப்பில் வந்தம் என்று தம்பட்டம் அடிக்கிறிர்களே.. ஏன் ஊரில் படிக்க முடியாதா>? இல்லை படிக்கத்தான் வந்திர்கள் ஏன்றால் ஏன் இன்னும் இங்கே இருக்கிறிர்கள். படிப்பு முடிய நாட்டுக்கு போகவேண்டியதுதானே... போய் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டியதுதானே... பொய் சொல்ல சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்களும் புலிகளை சாட்டியிருப்பிர்கள்... எழுத்திலை வேண்டும் என்றால் இல்லையென்று எழுதிப்போட்டு போகலாம்... ஆனால் உள்ளே போய் பார்த்தால்தான் தெரியும் நீங்கள் எல்லாம் என்ன பொய் சொல்லிக்கொண்டு திரிகிறிர்கள் என்று....

உங்கள் கருத்துத் தவறு.

நான் இலங்கையில் யாழ்மாவட்ட மாணவனாக தேர்வெழுதி.. உயர் புள்ளி அடிப்படையில் கொழும்புக்கு தெரிவாகி.. விடுதலைப்புலிகளிடம் அனுமதி பெற்று தென்னிலங்கைக்கு வந்து... அங்கு படித்துப் பட்டம் பெற்று அங்குள்ள பல்கலைக்கழகம் ஊடாகவே அவர்கள் தெரிவு செய்து அனுப்பியே இங்கு வந்தேன். என்னை இவ்வளவு படிச்சிட்டு திரும்பி வா என்று அனுப்பி வைச்ச பல்கலைக்கழமே கேட்கவில்லை. ஆனால் நீங்க சொல்லுறீங்க.. திரும்பிப் போ என்று. வந்த அலுவல் முடிக்காமல் உங்களின் கோரிக்கைக்காக நான் எப்படி போக முடியும்.

உன்னால் இயன்றளவும் படி என்று தான் சொல்லித் தான் பல்கலைக்கழக பேராசிரியர்கள் (குறிப்பாக சிங்களவர்கள்) அனுப்பி வைத்தார்கள். ஆனால் தமிழர்கள் நீங்களோ உங்களின் சுயநலத்தை வெளில சொல்லிடுறம் என்று எங்களை விரட்டி அடிக்கிறீர்கள். இதுதான் உங்களுக்கும் சிங்களவருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு.

நான் இங்கு வந்து இதுவரைக்கும் மூன்று வெவ்வேறு துறைகளில் படித்து வெவ்வேறு நிலை பட்டங்கள் பெற்றிருக்கிறேன். இப்போதும் அதி உயர்கல்வி நோக்கியே படிக்கிறேன். உங்களைப் போல அகதி அந்தஸ்து வேண்டி இருக்க வேண்டின்.. அதையும் தாராளமா செய்திருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி ஒரு இழி பிழைப்பு அவசியம் இல்லை என்று பட்டதால் செய்யவில்லை. எனக்கு அப்புறம் தாங்களா படிக்க என்று வந்த பலர் அப்படி செய்திருக்கிறார்கள்.

ஊரில இருந்து.. வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு மயங்கி ஓடி வந்த பெண்கள் பலர். இன்று அவை படும் பாடுகள் சொல்லில் அடங்கா. பல பெண்கள் வெளிநாட்டு அகதி மாப்பிள்ளை மாரின் துணையாகத்தான்... வெளிநாட்டுக்கு வந்திருக்கினம். இப்படியான பல நிலைப் பிழைப்புகளை எமது சமுதாயம் உருவாக்கிக் கொள்ள போராட்டத்தை பயன்படுத்தியதே அன்றி.. போராட்டத்தில் இவர்கள் ஈடுபாடு காட்டியதில்லை.

என்னைப் பொறுத்தவரை எத்தனையோ பேர் டபிள் பி எச் டி.. டி எஸ் சி என்றெல்லாம் எடுத்திருக்காங்க. அந்த நிலைக்கு வரனும் என்பதே எனது விருப்பம். அதுவரை படிக்கனும்.

நீங்க எல்லாம் அகதியா வந்து ஊரின் துயரைக் காட்டி பிழைச்சீங்க. ஆனால் அதே காலப்பகுதியில் அதே ஊரில் பங்கருக்குள்ளும்.. அடிப்பாட்டுக்குள்ளும்.. போர் முனையிலும் குண்டு வீச்சுக்கள் மத்தியிலும் நின்று படிச்சம். புலிகளையோ யாரையுமோ குற்றம் சாட்டி பிழைக்கல்ல. தேசத்தை காட்டிக் கொடுத்துப் பிழைக்கல்ல. தேசத்தின் விடுதலைக்கான முயற்சி எம்மீது சுமத்திய பாரங்களை நாங்கள் எங்கள் படிப்பு மீது காரணமா காட்டி வெளிநாட்டுக்கு வரல்ல.

நீங்கள் எல்லோரும் எதிர்கொண்ட அதே போர் சூழலில்.. அதுவும் நேரடியாக எங்கள் வீடு மீது 1990 சகடை மூலமும் 1991 இல் மீண்டும் குண்டு வீசி அழித்த போதும் நாங்க அகதி என்று ஓடி வந்து தேசத்தைக் காட்டிக் கொடுக்கல்ல. 1995 இல் இராணுவ ஆக்கிரமிப்போடு அந்த வீடு இராணுவத்தால் முற்றாக அழிக்கப்பட்டது. உறவுகளை பிரிந்தோம். திக்கு திக்காக ஓடினோம். ஆனால் அதையெல்லாம் வைச்சு பிழைப்பு நடத்தல்ல..! அல்லது படிப்பை கைவிடல்ல. எங்கட தேசத்தின் கஸ்டத்தோட நாங்களும் கஸ்டப்பட்டம். தேசத்தின் துயரம் எம்மை பாதித்திருந்தாலும்.. நாங்கள் அந்தத் துயரின் மத்தியில் நிமிர்ந்து நின்றோம். இதை நீங்கள் தம்பட்டம் என்று நினைத்தால்.. உங்களுக்கு உண்மையின் தார்ப்பரியம் புரியவில்லை அல்லது பொறாமை என்று அர்த்தம். அல்லது சகிக்க முடியவில்லை என்று அர்த்தமாகிவிடும்.

உண்மையில் அகதி என்று வந்து தஞ்சம் கோர எமக்கு எத்தனையோ வலுவான காரணங்கள் இருந்தும் நாங்க கோரல்ல. ஏன்னா.. எமது தேசத்தில் எத்தனையோ மாவீரர்கள் எங்கள் கூடப்படித்த நண்பர்கள். அவர்களின் கனவுகளோடு நாமும் கூடிப் பயணித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் கூட தடுக்கவில்லை.. எங்களை படிக்காதேங்கோடா என்று. ஆனால் அகதியா ஓடி வந்து ஊரின் துயரைக் காட்டி பிழைப்பு நடத்தின கூட்டங்கள் எமக்கு கட்டளை இடுவதுதான் வேடிக்கை.. இன்னொரு புறம் வேதனை. :D :D :D

நிச்சயம் ஊர் திரும்புவன். எனது நண்பர்கள் பலர் இப்போதும் பல துறைகளில் அங்கு தான் வேலை செய்கின்றனர்.. ஊரோடு இப்போதும் வைத்தியர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு ஓடி வரத்தெரியாது என்றில்லை. பலர் அங்கும் படிக்கின்றனர். உண்மையில் ஊரை விட்டு அகதி ஓடி வந்த அரைகுறையளும் அவர்களின் தங்கி வாழ வந்ததுகள் மட்டும் தான் வெளிநாட்டுக்கு ஓடி வந்து தேசத்தின் துயரை காட்டி பிழைச்சிருக்குது. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இசைக் கலைஞன் நீங்களும் மாணவ விசாவில் படிக்க வந்தனீங்கள் படித்து பட்டம் எடுத்த பிறகு போகாமல் ஏன் இங்கேயே இருக்கிறீங்கள்?...நீங்கள் இங்கே சுக போகமாக வாழ வேண்டும் :D:D:D

எல்லோரும் நாட்டுப் பிரச்சனைக்கு பயந்து தான் புலம் பெயர்ந்து வந்தவர்கள் அதில் அசேலம் அடிப்பவர்கள் தாங்கள் திரும்ப நாட்டுக்கு போக முடியாது என்டு வெளிப்படையாக சொல்லிப் போட்டு இருப்பார்கள் ஆனால் மாணவ விசாவில் வந்தவர்கள் தாங்கள் படித்து முடித்தவுடன் ஊருக்கு போகப் போறோம் என சொல்லிக் கொண்டு இருப்பார்கள் ஆனால் கடைசி வரைக்கும் போக மாட்டார்கள்...ஏன் இ.கலைஞன் மாணவ விசாவில் வருபவர்கள் நிரந்தர வதியுரிமை பெற்றவுடன் ஊருக்கு ஹொலிடே போவதில்லையா?...அசேலம் அடிப்பவர்கள் அநேகம் பேர் அரசையும்,ஆமியையும் தான் குற்றம் சாட்டி இருப்பார்கள் கொஞ்ச பேர் தவிர்க்க முடியாத காரணத்தால் புலியை குற்றம் சாட்டி இருப்பார்[மாற்றுக் கருத்துக்காரர் வேண்டும் என்டே புலியை குற்றம் சாட்டி இருப்பார்கள் அவர்களை விடுங்கள்]...புலிகளுக்கும்,போராட்டத்திற்கும் பெருமளவு உதவி செய்தவர்கள் அசேலமடித்தவர்களாகத் இருக்கும்...உங்களைப் போன்றவர்கள் படிக்கிறேன் என்டு சொல்லியே ஒருயுதவியும் செய்து இருக்க மாட்டீர்கள்...உங்கள் படிப்பாவது எந்த விதத்திலாவது புலிகளுக்கும்,நாட்டுக்கும் பிரயோசனப்பட்டதா?...அட்லீஸ்ட் படித்த பின்னாவது ஊருக்கு போறீர்களா சேவை செய்ய?[சமாதான காலத்திலாவது போயிருக்கலாம் தானே]...இனி மேல் நீங்களும்,நெடுக்ஸ்சும் மாணவ விசாவில் வந்தவர்கள் என்டு தம்பட்டம் அடிக்க கூடாது...எல்லோரும் படிக்க வேண்டும்,கொலசிப் எடுக்க வேண்டும் என விரும்பி இருந்தால் புலிகள் எப்பவோ பின் வாங்கி இருக்க வேண்டும்[புலிக்குப் போன பின் அவர்கள் படிப்பித்தவர்களை பற்றீ நான் கதைக்கவில்லை]...உங்களிடம் படிக்கும் திறமை இருந்தது அதற்கு மேலால் பணம் இருந்தது அதனால் மாணவ விசாவில் வந்தீர்கள்...என்னைத் பொறுத்த வரை கடைசி வரை அங்கிருந்து போராடியவர்களையும்,அங்கிருந்த மக்களையும் தவிர மற்ற அனைவரும் துரோகிகள் தான் அதில் நீங்களும்,நானும் அடங்கும்.

நான் மாணவன் விசாவில் வரவில்லையே..! :D தொழில்முறை விசாவில் வந்தேன்..! அதனால் ரிட்டையர்ட் ஆகும்வரை போவது சிக்கல்..! :D

சரி அது இருக்கட்டும்..! அகதி உரிமை கோருபவர்களை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை..! காரணத்தைச் சொல்லும்போது புலியால் ஆபத்து என்று சொல்பவர்களைத்தான் எதிர்க்கிறேன்..! :D அதுபோல சிங்களவனால் ஆபத்து என்று கூறி அசைலம் அடித்துவிட்டு பிறகு நாட்டுக்கு சுற்றுலா போகிறவர்களையும் கேள்வி கேட்கிறேன்..! :D இது தப்பா? :o:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.