Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநாசபையில் உரையை மாற்றிப்படித்தார் எஸ்எம் கிருஷ்ணா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SM-Krishna-02-01-2011.jpg

நியூயார்க்: ஐநா சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தன்னுடைய உரையை வாசிக்காமல் மற்றவர்களுடைய உரையை வாசித்ததால் குழப்ப நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் உள்ள ஐ.நா சபையில் ஜி4 என்றழைக்கப்படும் நாடுகளான இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ஐநாசபையில் பேசத்துவங்கிய எஸ்எம் கிருஷ்ணாவின் பேச்சை கவனித்த மற்ற நாட்டின் தலைவர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். காரணம் தன்னுøடைய பேச்சிற்கு பதிலாக அருகே அமர்ந்திருந்த போர்சுகல் நாட்டு அமைச்சரின் உரையை மீண்டும் படிக்க துவங்கினார்.இதனால் மற்ற நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். இதனையடுத்து ஐ.நாவுக்கான இந்திய தூதர் ஹர்தீப்சிங் பூரி தவறை கண்டுபிடத்து கிருஷ்ணாவிடம் கூறினார். அதன்பின்னர் தனக்கான உரையை படிக்க துவங்கினார். இந்த இடைப்பட்ட மூன்று நிமிடங்களுக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Dinamalar.com

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=186945

மிகக் கேவலாமான விடயம். ஐ. நா. உட்பட உயர் பதவிகளுக்கு ஆசைப்படும் இந்தியா, ஒரு முக்கிய நிகழ்வில் "என்ன வாசிக்கின்றோம்" என தெரியாமல் வாசிப்பவர்களை எல்லாம் கொண்டது இந்த வல்லரசு. இவர் இன்னும் பதவியில் இருப்பது மேலும் ஆச்சரியம் தருவதாய் உள்ளது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. சபையில் இந்தியா சார்பாக கிருஷ்ணா வாசிக்க இருந்த உரையை கூட... வேறு யாரோ தான் எழுதிக் கொடுத்திருப்பார்கள்.

அடப் பாவிகளா.... கூட்டத்திலை கலந்து கொள்ள முன், அந்த உரையைக் கூட முன் கூட்டியே ஒரு முறை படித்துப் பார்க்க மாட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

shame,shame puppy shame

  • கருத்துக்கள உறவுகள்

வல்லரசுக் கனவு எல்லாம் எம்கே நாராயணன் மாதிரி எடுபட்ட பயல்களின் கனவுதான்..! இந்தியாவின் மானம் சந்தி சிரிக்குது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கள்

எழுதிக்கொடுக்கப்பட்ட துண்டைக்கூட சரியாகப்பார்க்காதவன்

ஏசியாவையே கண்ணுக்குள் வைத்துள்ளானாம்.

அது அவனது திறமையால்அல்ல

எமது பலவீனத்தால்....................? :(

.

வெளியுறவுத்துறை தானே.. மற்றவன்டைய பார்க்கிறது தானே வேலை..

அல்லது "பிட்" அடிச்சு பாஸ் பண்ணி வந்த பழக்க தோஷமாகவும் இருக்கலாம்..

ம்..

இப்போதெல்லாம் இந்தியா எனும்போது "ஊழல் பெருச்சாளிகள்" தான் நினைவுக்கு வருகின்றனர். இந்தியர்களுக்கு அவர்களின் ஊழலை தக்கபடி கவனிக்கவே நேரம் போதவில்லை. ஐ.நா.வில் அறிக்கை படிப்பது எவ்வாறு? :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதிக்குடுத்ததையே வாசிக்கேக்கை சிந்திக்கிற அளவுக்கு அறிவே இல்லாத பன்னாடைக்கூட்டங்கள். உந்த திறத்திலை கோட்டுசூட்டு வேறை :lol:

Edited by குமாரசாமி

ஐ.நா வில் வாசிக்க வேண்டிய உரைக்கே இந்த நிலையென்றால் எங்கட பகுத்தறிவு பகலவன் கருணாநிதி எழுதும் கடிதத்திற்கு பதிலாய் பிரதமர் வேறு எதையும் வாசிக்கிறாரோ தெரியாது. :blink:

அதுதான் கருணாவின் கோரிக்கை ஒன்றுமே நிறைவேறவில்லை. :rolleyes:

விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை :D

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள கிருஷ்ணா : இது ஒரு பெரிய விஷயம் இல்‌‌லை என கூறியுள்ளார். இது மாதிரியான சர்வதேச கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் பேசும் ஆரம்பக்கட்ட விஷயங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மேலும் என் முன்னால் நிறை‌ய பேப்பர்கள் இருந்தன. அதனால் தவறுதலாக உரையை மாற்றி வாசிக்க நேர்ந்தது என கூறியுள்ளார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=186978

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தெற்காசிய விளையாட்டு விழாவிலும் அதன் தலைவர் சொதப்பியது நினைவு கூரத்தக்கது. :D

  • கருத்துக்கள உறவுகள்

987.jpg

அடிச்ச சரக்கு மப்பு இறங்கல.. காலையில கேங்கோவர் போல தெரியுது..

டிஸ்கி:

இதற்கு எலும்ச்சை ஜூசு.. அல்லது நீராகரம் அல்லது தயிர்சாதம் அல்லது புதினா துவையல் +இட்லி சாப்பிடால் சரியாகிவிடும் :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

அட பரதேசிகளா இதக்கூடவா நாத்துவீங்க. இராஜினாமா செய்ய வேண்டாம் , அடப்போங்க அதெல்லாம் சூடு சொரணையுள்ளவன் சமாச்சாரம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியின் முன்னணி செய்திதாளில் வந்த செய்தி....

Indischer Minister mit peinlicher Reden-Panne

New York –

Viele Politiker wissen gar nicht, wovon sie reden – dieses gängige Klischee hat der indische Außenminister Somanahalli Mallaiah Krishna jetzt eindrucksvoll bestätigt.

Der 78-Jährige trug vor dem Uno-Sicherheitsrat in New York voller Stolz eine Rede vor... aber dummerweise las er dabei vom falschen Blatt ab. Erst nach mehreren Minuten wurde Krishna darauf hingewiesen, dass er nicht die Erklärung Indiens, sondern die seines portugiesischen Kollegen vortrug. Ihm selber war das nicht aufgefallen.

Kurios: Unter anderem sagte Krishna laut „Sunday Times“, er sei erfreut darüber, dass seit Jahresbeginn zwei portugiesischsprachige Nationen (Portugal und Brasilien) im Sicherheitsrat vertreten sind. Die Zuhörer wunderten sich – vor allem, weil Portugals Außenminister Luis Amado exakt die gleiche Rede unmittelbar vor Krishna gehalten hatte.

Krishna aber ließ sich nicht beirren und plauderte weiter. Erst nach einem Hinweis des indischen UN-Botschafters beendete der indische Außenminister seinen Vortrag.

ABER: Ein weiteres Klischee über Politiker besagt, dass diese immer eine besonders pfiffige Ausrede parat haben, wenn etwas schief läuft. Und auch da ließ Krishna sich nicht lumpen!

Vor ihm hätten so viele Zettel gelegen, dass er halt leider „aus Versehen“ den falschen zwischen die Finger bekommen habe. Warum er beim inhaltlichen Teil der Ansprache nicht stutzig wurde, behielt der 78-Jährige lieber für sich.

நன்றி.

Bild.de

http://www.express.de/news/politik-wirtschaft/indischer-minister-mit-peinlicher-reden-panne/-/2184/7190330/-/index.html

ரோ பயங்கரவாதிகளின் கைத்தடிகளாக சிங்களத்தின் எலும்புத்துண்டுகளின் பின்னால் அலையும் பிச்சைக்கார இந்திய ராஜதந்திரிகளிடம் ஏதாவது சுய புத்தியை எதிர்பார்ப்பது மடத்தனம்.

உந்தப் பன்னாடை தான் ஏதோ பக்கத்தில் இருந்த பேப்பேரை எடுத்து வாசிச்சது என்றால், பக்கத்தில இருந்த போர்த்துக்கல் நாட்டு பன்னாடைக்குமா அவன் வாசிக்கிறது தனது நாட்டைப் பற்றி என்று தெரியாமல் போனது? :unsure:

உதுகளுக்கு மற்றைய நாடுக்காரர் அவமானப் படுத்த அவசியமே இல்லை... தாங்களே தங்களை அவமானப் படுத்திக் கொண்டு இருக்குங்கள். பொதுநலவாய நாடுகளுக்குரிய போட்டிகள் திறந்து வைக்கப் பட்ட நேரம் ஒருத்தர் எவ்வளவு புத்திசாலித் தனமா உரையாற்றினார்... இப்ப இவர்... 'ஜெய் கிந்!' :lol:

ரோ பயங்கரவாதிகளின் கைத்தடிகளாக சிங்களத்தின் எலும்புத்துண்டுகளின் பின்னால் அலையும் பிச்சைக்கார இந்திய ராஜதந்திரிகளிடம் ஏதாவது சுய புத்தியை எதிர்பார்ப்பது மடத்தனம்.

Be Indian! Buy Indian!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.