Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் - யாழ்.நீதிபதி கருத்து.

இந்த நாட்டை வழிநடாத்தி கொண்டு செல்வதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்தான் வரவேண்டும் என யாழ்பாணத்தில் கடமையாற்றும் நீதிபதி ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இன்றை யாழ்பாணத்தின் சீர்கெட்ட நிலவரங்கள் தொடர்பாக குறித்த நீதிபதியுடன் கதைத்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்...

தமிழீழ நிழல் அரசினை நிறுவி எவ்வாறு கட்டுக் கோப்புடன் நடாத்திவந்தார் என்பது தற்போது கட்டுப்பாட்டை இழந்து மிகவேகமாக சிதைந்துவரும் தமிழர் பகுதிகள் சுட்டிக்காட்டி நிற்கின்றன.

வன்னியில் சிங்களப்படைகள் முன்னெடுத்த இராணுவ பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழீழ நடைமுறை அரசினை சிறப்புடன் முன்னெடுத்த விதமும் காவல்துறை நீதித்துறையினை கையாண்ட திறணும் வியக்க வைப்பதாக தெரிவித்த அவர் தற்போதைய யாழ்பாணத்தை எம்மால் எதுவும் செய்யமுடியவில்லை எனும் போதுதான் வன்னியில் போர் சூழல் இறுக்கமாக நிலவிவந்த காலகட்டங்களில் எல்லாம் காவல் மற்றும் நீதித் துறைகளை சிறப்பாக கையாண்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அரசாண்டவிதம் பிரமிப்பூட்டுவதாக இருப்பதாக தெரிவித்தார்.

தற்போதைய கலாச்சார சீர்கேடுகள் சமூகச்சிதைவுகள் கொலைக் கலாச்சாரங்கள் என்பன மிக வேகமாக யாழ்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதியில் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை தற்போது நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களாலோ சிறிலங்கா அரச நிர்வாகத்தினாலோ தடுத்துநிறுத்த முடியாது எனவும் மீண்டும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வந்தால்தான் சீர்படுத்த முடியும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.

வன்னியில் இருந்து கொண்டு தமிழீழ நடைமுறை அரசை முன்னெடுத்து வந்திருந்தாலும் யாழ்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயகப்பகுதிகள் அனைத்திலும் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய ஆளுகையின் வீச்சு இருந்தது. ஆனால் முன்னர் அது யாராலும் இனம்காணப்படாது இருந்துவந்தது. தற்போதுதான் தெரிகிறது தலைவர் பிரபாகரன் அவர்களது ஆற்றலின் வலிமை.

இவ்வாறு நீதியினை வழங்கும் உயர்பீடத்தில் இருப்பவர்கள் முதல் சாதாரண குடிசைவாசிகள் வரை தலைவர் பிரபாகரன் அவர்களது வரவினை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அடிபட்டு நொந்துபோய் எல்லாவற்றையும் இழந்த பின்பும் தேசத்தின் இன்றைய இழிநிலை கண்டு மனம்பொறுக்காத மாணம் உணர்வுள்ளவர்களது புலம்பல் இதுவாகத்தான் இருக்கின்றது...

"...என்னதான் இருந்தாலும் பெடியள்(புலிகள்) இருக்கேக்கை உந்தச் சேட்டையள் எல்லாம் இல்லாமல் தான் இருந்தது... செல்லடிச்சாலும் கிபிரடிச்சாலும் எங்கட மண்ணிலை சுதந்திரமா நாங்கள் இருந்த வாழ்க்கை சொர்க்கம் தான்.. திரும்பவும் பெடியள்(புலிகள்) வந்தால்தான் எல்லாத்திற்கும் ஒரு முடிவுகிடைக்கும்.. இந்த அக்கரமங்களை எல்லாம் போக்கி தமிழனை தலைநிமிர வைக்க தலைவர் ஒருவராலதான் முடியும்."

ஈழதேசம் இணையத்திற்காக : மு.காங்கேயன்.

நன்றி - ஈழதேசம் இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும் -

100% உண்மை. எனது கருத்தும் அதுதான்.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

இனி வரலாறு பேச ஒருவர் ஓடோடி வரப்போகிறார். :D

" இவ்வாறு நீதியினை வழங்கும் உயர்பீடத்தில் இருப்பவர்கள் முதல் சாதாரண குடிசைவாசிகள் வரை தலைவர் பிரபாகரன் அவர்களது வரவினை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். அடிபட்டு நொந்துபோய் எல்லாவற்றையும் இழந்த பின்பும் தேசத்தின் இன்றைய இழிநிலை கண்டு மனம்பொறுக்காத மாணம் உணர்வுள்ளவர்களது புலம்பல் இதுவாகத்தான் இருக்கின்றது..."

- இவ்வாறான சிந்தனையுடைய தாயக மக்கள் நிறையவே உள்ளனர். ஆனால் அவர்கள் சுதந்திரமாக தமது கருத்துக்களை வெளியிட முடிவதில்லை, காரணம் இராணுவ அடிமை ஆட்சி.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கொலை வீரன் டக்குளசு அம்மான்.. கொள்ளை வீரன் கருணா கும்மான்.. இவர்கள் எல்லாம் இருக்கும் போது.. நீதி வாழ வழி இருக்கும் போது.. ஆயுதத்தைக் காட்டி பாசிச அடக்குமுறை செய்து மக்களை பயப்பிடுத்தி வைச்சிருந்த பிரபாகரனை ஏன் கூப்பிடுறீங்க. இப்படி சொல்லவும் ஒரு இமல்டா இருக்கிறார். ஒரு ஜோசப் செளதர்நாயகம் இருக்கிறார்.

பிரபாகரன் அவர் தான் முள்ளிவாய்க்காலோட போயிட்டாரே..! அதுக்குப் பிறகாவது விடுங்க அவர. அவர் மனிசனில்ல.. தியாகி. தானும் வாழ்ந்து காட்டி அதன் படி மக்களும் வாழ வழிகாட்டிய மகாத்மா. அவரை கூலி கத்துரசிங்கவிற்கு வால் பிடிக்கும் இமல்டாக்கள் இருக்கும் இடத்தில்.. எதற்கு கூப்பிடுறீங்க. ஒரு அரச அதிகாரி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக மாறி இருப்பவர் நேற்று சுனாமியின் போது தலைவரின் வழிகாட்டலில் திறம்பட மக்கள் சேவையாற்றிய இமல்டா என்ற அன்றைய நல்ல அதிகாரி. ஒரு அதிகாரியே இப்படி மாறி இருக்கும் போது சாதாரண மக்கள்.. கெட்டு குட்டிச் சுவராக அதிக நேரமா எடுக்கும். :unsure:

இன்னும் எழுதுங்கோடா.. தேசம்.. பூசம் என்று.. பிரபாகரன்.. ஒரு பாசிசிஸ்டு.. பயங்கரவாதின்னு. ஆனா.. நீங்கள் தாண்டா அதன் மொத்த வடிவமும். உண்மை புரியாத ஜென்மங்களா. :unsure::(

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா கருகத்திருவுளமோ! அதுதானே எல்லாத்தையும் நாமே போட்டுடைத்துவிட்டோமே. அப்போது நாவற்குழிப்பாலத்தினை அண்டிய பகுதிகளை அண்மித்து ஓயாத அலைகள் யாழ் நகரை சந்திரவட்ட வடிவில் முற்றுகையிட்ட நேரம். தலைவன் வழியில் மீட்கப்பட்ட பிரதேசங்கள் அனைத்திலுமுள்ள பொதுமக்களை வன்னிநிலத்திசை நோக்கி நகருங்கள் என அறிவுறுத்தப்பட்டது ஆனால் அப்போது எமது தெய்வப் பொதுமக்கள் செய்த வேலை என்ன தெரியுமா வெள்ளைக் கொடியினை ஏந்தி சிங்கள ஆக்கிரமிப்பாளனது கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றதே. இப்போ வெட்கத்தை விட்டுச் சொல்லுகிறேன். அதே வேளை நூறுவீத குற்ற உணர்ச்சியுடன் கூறுகிறேன். நாங்கள் தப்பிவிட்டோம். சீரளிந்து போங்கோ ஈனப்பிழைப்புப் பிழைக்க வந்தவிடத்தில நாங்களும் மனம் வதங்கிச் செத்துப்போறம். போராட்டத்துக்குக் காசு கொடுத்திட்டம் அங்க ஒப்பந்த அடிப்படையில பிரபாகரன் தமிழீழம் பெற்றுத்தருவார் என வாழாவிருந்தோம். இப்போது என் இனத்தை என் கண் முன்னே தமிழர் விரோததேசம் இந்தியா சிறிதுசிறிதாக அரித்தழிக்கின்றது. இப்போது எமது ராகற் சீமான் அவனும்போய்விட்டால் யாராவது வராமலாபோய்விடுவார்கள். புலம்பெயர்ந்து வரும்போதும் எழையாக வந்தேன் இப்போதும் ஏழையாக இருக்கிறேன் ஒரு ஏழ்மை போக இன்னுமொரு ஏழ்மை எனை வதைக்கிறது. அதுவும் போக இன்னுமொன்று வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நாட்டை வழிநடாத்துவதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன்தான் வரவேண்டும். யாழ்.நீதிபதி கருத்து.

இந்த செய்தி எந்தளவிற்கு உண்மை?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு உங்களுக்கொரு பச்சை. எனது தலைவன் ஒரு பாசிஸ்டாககேவ இருந்திட்டுப்போகட்டும் சிங்களத்தினதும் தமிழர் விரோததேசமாம் இந்தியாவிதும்; அடி உண்ணிகளே அப்போதும் அவன் எனக்குத் தலைவனே அவன் என் ஒருவனுக்கு மட்டும் தலைவனாக இருந்திட்டுப் போகட்டும் நான் பெருமை கொள்வேன்.

செய்தியின் உண்மைத்தன்மை தெரியாது. ஆனால் அவரால் மட்டுமே தமிழரை ஒழுங்குபடுத்த முடியும்.

குழந்தை சாப்பிட மறுத்தால் பூதத்திடம் பிடித்துக்கொடுப்பேன் என்ற கதைதான்.

குறை நினைக்கக் கூடாது. யார் குழந்தை?

  • கருத்துக்கள உறவுகள்

குறை நினைக்கக் கூடாது. யார் குழந்தை?

வேறை யார்?? எங்கட அர்ஜுன் அண்ணாதான்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்டைக்கு யாழ்பாண்தில இருக்கும் இளைய தலைமுறை எல்லாம் அனேகமாக 1990 க்கு பிறகு பிறந்தவையா தான் இருப்பினம் சோ அவைக்கு எங்கட போராட்டத்த பற்றியோ எங்கட தலைவரை பற்றியோ எதுவுமே nதியாது......முதல்ல அவர்களுக்கு இன உணர்வ கூட்டனும் அது கூடும்போது கலாச்சார உணர்வு தானாக வளரும்.............

  • கருத்துக்கள உறவுகள்

இன்டைக்கு யாழ்பாண்தில இருக்கும் இளைய தலைமுறை எல்லாம் அனேகமாக 1990 க்கு பிறகு பிறந்தவையா தான் இருப்பினம் சோ அவைக்கு எங்கட போராட்டத்த பற்றியோ எங்கட தலைவரை பற்றியோ எதுவுமே nதியாது......முதல்ல அவர்களுக்கு இன உணர்வ கூட்டனும் அது கூடும்போது கலாச்சார உணர்வு தானாக வளரும்.............

இது 1980 /90 களில் புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொருந்தும். ஷெல்லடி, ஆட்டிலறி, சுப்பர்சொனிக் குண்டுமழை, பசி, பட்டினி, சொந்த உறவுகள் உடல் சிதறிச் சாவதை எல்லாம் நேரடியாக அனுபவிக்காதவர்களுக்கும் போராட்டத்தைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் எல்லாம் தெரிந்தவர்களாக சொல்லிக்கொள்வார்கள்.

அவரைப் போன்ற

சமூகப் பற்றும்,

நேர்மையும்,

சீரிய ஒழுக்கமும்,

உறுதியும்,

வீரமும்,

தியாக உள்ளமும்,

கடின உழைப்பும்,

எதையும் தாங்கும் இதயமும்,

அன்பும்,

அர்ப்பணிப்பும்,

………, ……, …….,

நிறைந்த,

அத்துடன் முக்கியமாக

எவ்வித பாரபட்சமும்,

சுயநலமும் அற்ற

ஒரு மனிதரால் தான் எம்மினத்தை சரியான திசையில் கொண்டுசெல்ல முடியும்.

இது போன்ற உயரிய குணங்களால் நிறைந்த செயல்வீர மனிதராக அவர் திகழ்ந்ததால் தான், இவற்றைத் தாங்க முடியாத,

கள்வர்களும்,

கயவர்களும்,

போதையில் புரள்பவர்களும்,

பொம்பிளைப் பொறுக்கிகளும்,

முன்னுரிமைகளை எதிர்பார்த்தவர்களும்,

தமிழினத்தின் உரிமைகளை முதலாக்கி சுயலாப பிழைப்பு நடத்த முற்பட்டவர்களும்,

………, ……, …….,

இன்னோரன்ன ஒழுக்கம் குன்றியவர்களும்

அவரைக் குறைசொல்லும், தூற்றும் தொழிலைச் செய்கின்றனர், தொடர்ந்து செய்ய முற்படுகின்றனர்.

எமது இனத்தின் சாபக்கேடு, இவர் நம்பிக்கை வைத்த ஒரு சிலர் (மாத்தையா, ...., KP, கருணா, ....., தமிழ்ச்செல்வன், ....., போன்றவர்கள் ) அறிந்தோ அறியாமலோ (பொறுப்பற்று, பலவீனங்கள், பொறாமைகள், பதவியாசைகள், பதவிவெறி, காரணமாக, ....) விட்ட தவறுகள் இந்த தூய மனிதர் மீதும் சுயநலவாதிகள் களங்கம் கற்பிக்க வசதியாகிவிட்டது.

எனினும் அவரைப் போன்ற சமூகப் பற்றும், நேர்மையும், சீரிய ஒழுக்கமும், உறுதியும், வீரமும், தியாக உள்ளமும், கடின உழைப்பும், எதையும் தாங்கும் இதயமும், அன்பும், அர்ப்பணிப்பும், ...., நிறைந்த, அத்துடன் முக்கியமாக எவ்வித பாரபட்சமும், சுயநலமும் அற்ற ஒரு மனிதரால் தான் எம்மினத்தை சரியான திசையில் கொண்டுசெல்ல முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திற்குப் பிடிக்காத ஒரே ஒலு மனிதன் தலைவர் பிரபாகரன். ஏனெனில் அவரது நேர்மை, ஆற்றல், ஆளும் திறமை, அநீதிகளுக்கு அடிபணியாமை, கொள்கைப்பற்று

விலைபோகாமை போரியல் விய+கம்

இது இவ்வளவும் இன்றைய உலகத்தில் உள்ள ஆட்சியாளர்களிடம் யாரிடமாவது உண்டா? இதனால் தான் சர்வதேசமும் ஒட்டுமொத்தமாக அவர்களை அழிக்க நினைத்தது. பொறாமையே முக்கிய காரணம்.

பிரபாகரன் இவ்வுலகில் அழிந்திருந்தாலும் வானத்திருந்து இவ்வுலகை அழிக்கும் சக்தி கொண்டவர். இன்று இலங்கையில் நடைபெறுவதும் பிரபாகரனின் திட்டங்களே. யாருக்கும் தெரியாமல் அவர்கள் மனதால் செய்யும் காரியங்கள் தமிழர் விடிவுக்கான பாதையைத்திறக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தானை தலைவரை.... பற்றி யாராவது அவதூறாக எழுதியனால் பின்னி பெடலெடுக்கபடும்.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தை சாப்பிட மறுத்தால் பூதத்திடம் பிடித்துக்கொடுப்பேன் என்ற கதைதான்.

இரவு ஒன்பதுமணிக்கு பிறகு.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்
:lol: பிரபாகரன் இருந்தால் சமுதாயச் சீர்கேடுகள் தலை தூக்க்யிராது. ஆனால் உமா மகேஸ்வரன் இருந்திருந்தால், நிலமை இன்றிருப்பதை விட இன்னும் மோசமாக மாறியிருக்கும். போராட வந்த சகோதரிகளையே ஆளாளுக்கு பங்குபோட்டு அனுபவித்த காமுகர் கூட்டம், பாலியலையே வியாபாரமாக்கி கல்கத்தவோ அல்லது மும்பாய் போலவோ யாழ்ப்பாணத்தை ஆக்கியிருப்பார்கள். பாவம், அந்தக் கவலைதான் இப்படியெல்லாம் எழுதவைக்குது.

அவரைப் போன்ற

சமூகப் பற்றும்,

நேர்மையும்,

சீரிய ஒழுக்கமும்,

உறுதியும்,

வீரமும்,

தியாக உள்ளமும்,

கடின உழைப்பும்,

எதையும் தாங்கும் இதயமும்,

அன்பும்,

அர்ப்பணிப்பும்,

………, ……, …….,

நிறைந்த,

அத்துடன் முக்கியமாக

எவ்வித பாரபட்சமும்,

சுயநலமும் அற்ற

ஒரு மனிதரால் தான் எம்மினத்தை சரியான திசையில் கொண்டுசெல்ல முடியும்.

இது போன்ற உயரிய குணங்களால் நிறைந்த செயல்வீர மனிதராக அவர் திகழ்ந்ததால் தான், இவற்றைத் தாங்க முடியாத,

கள்வர்களும்,

கயவர்களும்,

போதையில் புரள்பவர்களும்,

பொம்பிளைப் பொறுக்கிகளும்,

முன்னுரிமைகளை எதிர்பார்த்தவர்களும்,

தமிழினத்தின் உரிமைகளை முதலாக்கி சுயலாப பிழைப்பு நடத்த முற்பட்டவர்களும்,

………, ……, …….,

இன்னோரன்ன ஒழுக்கம் குன்றியவர்களும்

அவரைக் குறைசொல்லும், தூற்றும் தொழிலைச் செய்கின்றனர், தொடர்ந்து செய்ய முற்படுகின்றனர்.

எமது இனத்தின் சாபக்கேடு, இவர் நம்பிக்கை வைத்த ஒரு சிலர் (மாத்தையா, ...., KP, கருணா, ....., தமிழ்ச்செல்வன், ....., போன்றவர்கள் ) அறிந்தோ அறியாமலோ (பொறுப்பற்று, பலவீனங்கள், பொறாமைகள், பதவியாசைகள், பதவிவெறி, காரணமாக, ....) விட்ட தவறுகள் இந்த தூய மனிதர் மீதும் சுயநலவாதிகள் களங்கம் கற்பிக்க வசதியாகிவிட்டது.

எனினும் அவரைப் போன்ற சமூகப் பற்றும், நேர்மையும், சீரிய ஒழுக்கமும், உறுதியும், வீரமும், தியாக உள்ளமும், கடின உழைப்பும், எதையும் தாங்கும் இதயமும், அன்பும், அர்ப்பணிப்பும், ...., நிறைந்த, அத்துடன் முக்கியமாக எவ்வித பாரபட்சமும், சுயநலமும் அற்ற ஒரு மனிதரால் தான் எம்மினத்தை சரியான திசையில் கொண்டுசெல்ல முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை கூட பண்பாட நடத்தும்

பண்புமிக்கவர்

போரின் மிக முக்கிய கட்டத்தில் கூட சிங்கள பொதுமக்கள்

மேல் எந்த தாக்குதலையும் மேற்கொள்ள கூடாது என கண்டிப்பாக பனித்தவர்தான் எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன்.

தலைவர் ஒருவருக்கு மட்டும்தான் நாட்டை ஆளும் திறன்

உள்ளது என்பது உண்மையே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.