Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உனது நினைவுகளோடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நண்பன் ஒருவன் 2005இல் தனது முதற்காதல் பற்றிச் சொன்னதில் அவனது வலியினை கவிதையாக்கினேன்)

என் சுவாச அறைகளின்

சுழற்சியாய் இருந்தவளே !

காதல் வார்த்தையையே

கௌரவப்படுத்திய கற்பூரமே.

கடைசியாய் நீ தந்த கடிதம்

என்றோ நீ சொன்னது போல

கைகூடாத காதலின் சாட்சியாக....

உனது கண்ணீர் முழுவதையும்

கட்டியனுப்பிய கடலது.

கட்டுநாயக்கா நான் தாண்ட

நஞ்சு தின்ற என் காதலியே !

எங்கேயடி இருக்கிறாய் ?

கசங்கிய உன் கடைசிக் கடிதத்துடன்....

கண்ணீரைத் துடைத்தபடி நான்....

முதற் காதல் - நீ

தந்த முத்து(த)க் கையெழுத்துக்கள்

இன்னும் விரல்களில்....

வாசமடிக்கிறது.

கூடப்பிறந்தவர்க்கும் ,

உன்னைக் காதலிக்க

உயிர் தந்தவர்க்கும்

அர்ப்பணமாய் என் காதல்.

அம்மாவிடம் உன்னைப்பற்றி

விசாரித்தேன்.

நீ இறந்து விட்டதாய் சொல்கிறாள்.

கனவெல்லாம் என்னை நிரப்பி

உன் வாழ்வையே தறித்து

எனக்கு வாழ்வு தந்தவளே !

உன்னோடு கழிந்த

ஒவ்வொரு கணங்களும்

நினைவுக் காப்பகத்தில்

கௌரவமாக - நான்

இன்னொருத்தியின் கணவனாக.....

உன் நினைவுகளோடு.....

08.05.05

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பர்கள் பலர் காதலில் தோல்வி அடைந்தவர்கள் போல இருக்குது ஆனால் காதல் தோல்வியும் ஒரு சுகம் தான்...முதல் பச்சை என்னோடது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி இக்கவிதையோடு ஒரு கதையும் இருக்கு....அந்த நண்பரின் காதல் கதை....கீழ் உள்ள இணைப்பில் வாசியுங்கோ.

http://uyirvaasam.blogspot.com/2006/04/blog-post_03.html

காதலுக்கு உள்ள இயல்பான குணமோ அல்லது இராசியோ தெரியேல..... அது தோற்கும்போதுதான் வாழ்கிறது.

அதை வாழ நினைக்கும்போது சாகடிக்கப்படுகிறது! :(

காதல் காலங்களால் வரையறுக்கப்படுகிறது என்பதை உணர சில காலங்கள் தேவைப்படுகின்றது( இன்றைய மனநிலை 16-09-2011 )

காவியமான காதலுக்கு ஒரு பச்சை! :)

  • கருத்துக்கள உறவுகள்

சந்தியக்கா கவிதை அருமை,

என்ன புது வீட்டுக்கு மாற போறிங்கள் போல தூசி தட்டிறிங்கள்

ம்........... காதல் வெற்றி பெற்ற பல இடங்களில் கணவன்-மனைவியிடையே அடிக்கடி சண்டை :( தோற்ற காதலுக்கு ஒரு பச்சை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் காலங்களால் வரையறுக்கப்படுகிறது என்பதை உணர சில காலங்கள் தேவைப்படுகின்றது( இன்றைய மனநிலை 16-09-2011 )

காவியமான காதலுக்கு ஒரு பச்சை! :)

கவிதை கொஞ்சநாளாய் காதலில் கரையிறமாதிரி இருக்கே....கவிதை..... :lol:

காலநதியில் எந்தக்காயமும் கரைந்து போகும்....இத நான் சொல்லேல்ல எங்கடை சயந்தன் காதலால் ஆதலால் கதையில சொன்னவர். என்ன சயந்தா ஞாபகம் இருக்குத்தானே.....? :icon_idea:

சந்தியக்கா கவிதை அருமை,

என்ன புது வீட்டுக்கு மாற போறிங்கள் போல தூசி தட்டிறிங்கள்

வீடுமாறேல்ல உடையார். ஒரு மெயில் ஐடியை ஒருதருக்கும் தெரியாமல் அதில கனக்க எழுதினதுகளை சேமிச்சு வைச்சனான். அண்மையில டயறியொண்டில அதின்ரை பாஸ்வேட் கிடைச்சுது. தட்டிப்பாத்தேன் கனக்க எழுத்துகளும் கன சேமிக்கப்பட்ட விடயங்களும் பத்திரமா இருந்திச்சு அதுதான் ஒண்டொண்டா கொண்டு வந்து போடுறேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை கனக்கின்றது, சாந்தி அக்கா!

கோழைகள் ஒரு நாளும் காதலிக்கக் கூடாது!

இது உங்கள் நண்பருக்கல்ல!

நஞ்சு குடித்த அந்தக் காதலிக்கு!

நாலாம் பச்சை நமதாக்கும்!

கனவெல்லாம் என்னை நிரப்பி

உன் வாழ்வையே தறித்து

எனக்கு வாழ்வு தந்தவளே !

உன்னோடு கழிந்த

ஒவ்வொரு கணங்களும்

நினைவுக் காப்பகத்தில்

கௌரவமாக ...

உன் நினைவுகளோடு.....

சாந்தி ஏனோ தெரியவில்லை.. உங்களின் சமீபத்திய கவிதைகள் என் முன்னால் உள்ள கண்ணாடி போல உள்ளது.

அது என்னையும் பிரதிபலிப்பதால் என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை.

பிரிந்த காதலின் வலியை விட கொடுமையானது இழந்த காதலின் வலி.

உங்கள் நண்பரின் வலைபூவையும் படித்தேன். அன்பான மனைவியால் கூட ஆற்ற முடியாத வலி அது.

உணர்ந்தால் மட்டுமே புரியும் .

Edited by அபிராம்

கவிதை மிக நன்றாக இருக்கிறது. பாவம் அந்தப் பெண்.

இதுதான் வாழ்க்கையில் நிரந்தரப் பகையும் நிரந்தரக் காதலும் கூடாதென்பது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோழைகள் ஒரு நாளும் காதலிக்கக் கூடாது!

இது உங்கள் நண்பருக்கல்ல!

நஞ்சு குடித்த அந்தக் காதலிக்கு!

நாலாம் பச்சை நமதாக்கும்!

காதல் தான் வீரத்தையும் கோழையாக்கிவிடுகிறது போல புங்கையூரான்.

உறவுகளுக்காக அவன் காதலியையும் காதலையும் இழந்தான். ஆனால் கோழையாக அவன் காதலி நஞ்சைக்குடித்ததே எனக்கும் கோபம்.

நாலாம் பச்சைக்கும் நன்றிகள். :lol:

சாந்தி ஏனோ தெரியவில்லை.. உங்களின் சமீபத்திய கவிதைகள் என் முன்னால் உள்ள கண்ணாடி போல உள்ளது.

அது என்னையும் பிரதிபலிப்பதால் என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை.

அபிராம்,

பழைய கவிதைகளை மீளப்புதுப்பித்தல் பலரது ஞாபங்களைப் புதுப்பித்து விட்டிருக்கிறது. ஒரு எழுத்து எங்கே ஒரு வாசகனை அவனாக உணர வைக்கிறதோ அதுவே அந்த எழுத்தின் வெற்றியென்று சொல்வார்கள். இக்கவிதை அந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது என நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்த காதலின் வலியை விட கொடுமையானது இழந்த காதலின் வலி.

உங்கள் நண்பரின் வலைபூவையும் படித்தேன். அன்பான மனைவியால் கூட ஆற்ற முடியாத வலி அது.

உணர்ந்தால் மட்டுமே புரியும் .

பிரிவிலும் விட இழப்பென்பது ஈடுசெய்ய முடியாதது. இந்தக்காதலி உயிருடன் இருந்திருந்தால் அந்தக்காதலன் வாழ்நாள் முழுவதும் தான் குற்றவாளியாக வாழாதிருந்திருப்பான்.

இந்த நண்பர் ஒரு வானொலி நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். தனது கதைகளை ஒருநாள் சொன்னார். தன்னால் எழுத முடியாது உங்களால் எழுத முடியும் எழுதுங்கள் என்று. அதனை எழுத்தாக்கினேன். ஒரு ஊடக நண்பர் அதனை தினக்குரல் பத்திரிகையில் பிரசுரித்தார். பத்திரிகையில் கதையை படித்த நண்பர் பலதரம் அதைச் சொல்லி கண்ணீர் விட்டிருக்கிறான்.

நம்பிக்கை தரும் வார்த்தைகளை மட்டுமே அவனுக்காகவும் அவன் போன்ற இழந்தவர்களுக்காகவும் சொல்ல முடியும்.

காதல் மட்டும் வாழ்வு இல்லையே.

கவிதை மிக நன்றாக இருக்கிறது. பாவம் அந்தப் பெண்.

இதுதான் வாழ்க்கையில் நிரந்தரப் பகையும் நிரந்தரக் காதலும் கூடாதென்பது.

காதலிக்கும் போது வந்த துணிச்சல் தோற்றபோது வராமல் போனதே அவளது பாவம்.

ஏனோ தெரியவில்லை...வாசிக்கும் போது ஆத்திரம் வருகுது...

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய காலங்களில் நான் கவிதைகள் படிப்பதோ,விமர்சனம் பண்ணுவதோ இல்லை அக்கா...ஆனாலும் உங்கள் கவிதைகள் மறுபடியும் தூங்கிக் கிடப்பவர்களையும் தட்டி எழுப்பி எழுத வைச்சு விடுகிறது அந்த வகையில் நன்றிகளும்...எட்டாவது பச்சையும்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி. சோகங்கள் மீட்டப் படும்போது ........மீண்டும்வலிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா இந்தக்கவிதையை வேறு எங்கேயாவது பகிர்ந்துள்ளீர்களா..?முன்னர் எங்கோ உங்கள் பதிவில் வாசித்ததுபோல் உள்ளது..எனது மனப்பிரேமையோ தெரியவில்லை..கவிதை முழுவதும் சோகம் கரைந்து வலிகளைப்பிரசவிக்கிறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா இந்தக்கவிதையை வேறு எங்கேயாவது பகிர்ந்துள்ளீர்களா..?முன்னர் எங்கோ உங்கள் பதிவில் வாசித்ததுபோல் உள்ளது..எனது மனப்பிரேமையோ தெரியவில்லை..கவிதை முழுவதும் சோகம் கரைந்து வலிகளைப்பிரசவிக்கிறது...

முன்பு தமிழ்24என்ற வலைப்பூவில் பதிவிட்டிருந்தேன். அந்த வலைப்பூ அழிந்துவிட்டது சுபேஸ். பழைய பல கவிதைகள் மின்னஞ்சல் ஒன்றில் சேமித்து வைத்திருந்தேன். அதிலிருந்து தூசுதட்டி இப்ப புதுப்பித்துள்ளேன்: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.