Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசரமாக உதவி தேவை.....

Featured Replies

வணக்கம் அனைவருக்கும்...

எனக்கு கொஞ்ச நாட்களாக சரியாக நித்திரை வரவில்லை... நித்திரை குளிசை பாவிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்... மருத்துவரிடம் இப்படியே சொன்னால் நித்திரை குளிசை தருவரா...இல்லை எப்படி சொன்னால் மருத்துவர் தருவார்.... சீரியஸாக கேட்கும்போது சீரியஸாக எல்லோரும் பதில் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்... இல்லை களவாக லண்டனில் வாங்கலாம்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...

வைத்தியர்கள் இலகுவாக தருவதில்லை நித்திரை மாத்திரைகளை :o

என்ன காரணத்திற்கு நித்திரை வரவில்லை என அறிந்து அதற்கு மருந்து தேடுவதே நல்லது.

நிறைய நடக்கலாம் இல்லை உடல் முறியும் வேலை ஒன்று செய்யலாம் இல்லை ஜிம்முக்கு போகலாம் இல்லை யாழில் எழுதலாம் - நித்திரை தானாகவே வரும் :D

  • கருத்துக்கள உறவுகள்

நித்திரைக்கு போகும்போது எதையும் மனதில் போட்டுக்கொள்ளாதீர்கள்

  • தொடங்கியவர்

வைத்தியர்கள் இலகுவாக தருவதில்லை நித்திரை மாத்திரைகளை :o

என்ன காரணத்திற்கு நித்திரை வரவில்லை என அறிந்து அதற்கு மருந்து தேடுவதே நல்லது.

நிறைய நடக்கலாம் இல்லை உடல் முறியும் வேலை ஒன்று செய்யலாம் இல்லை ஜிம்முக்கு போகலாம் இல்லை யாழில் எழுதலாம் - நித்திரை தானாகவே வரும் :D

ஜீம்முக்கு போறதுதான் அகோதா.. உடல் முறியும் வேலையும்தான் பண்ணுகிறேன்.... ஆனாலும் நித்திரை வரவில்லை..

இலகுவாக வைத்தியர் தரமாட்டார்கள் என்றுதானே கேட்டேன்... நான் வேலை செய்யும் இடத்திலயே குளிசை திருடலாம் ஆனாலும் திருடியும் பழக்கமில்லை... நித்திரை கொண்டால் எழும்பவே கூடாது அப்படியே போயிவிடவேண்டும்... நான் சீரியஸாக கேட்கும்போது சீரியஸாக பதில் சொல்லுங்கள் தயவு செய்து...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் நித்திரை வருவதில்லை நான் எனது GP இடம் சொல்லி நித்திரை குளிசை எடுத்துள்ளேன் எனக்கு ஏற்க்கனவே பல குளிசைகள் பாவிப்பதால் பக்கவிளைவுகளாக இருக்கலாம் உங்களின் நிலை என்னவென்று எனக்கு புரியவில்லை

  • தொடங்கியவர்

என்ன சொல்லி எடுத்தீர்கள் தமிழ் அரசு.... எனக்கு சைனிஸ் கேள் ஒருத்தியும் சொன்னால் தானும் எடுக்கிறனான் என்று... எப்படி இலகுவாக மருத்துவர் கொடுத்தார் ...

  • கருத்துக்கள உறவுகள்

நித்திரைக் குளிசை போடும் வயசா சுஜிக்கு! :unsure:

  • தொடங்கியவர்

நித்திரைக் குளிசை போடும் வயசா சுஜிக்கு! :unsure:

கிருபன் அங்கிள் நித்திரை குளிசை வயதானவர்கள்தான் பாவிக்கவேண்டுமா? என்ன கொடுமை....சின்ன வயதில்கூட சிலபேருக்கு தீராதா நோய் இருக்கும் அதை தாங்கிகொள்ள முடியாமல் கூட சிலர் பாவிக்கலாம்,,,,

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன வயதில்கூட சிலபேருக்கு தீராதா நோய் இருக்கும் அதை தாங்கிகொள்ள முடியாமல் கூட சிலர் பாவிக்கலாம்,,,,

தீராத நோய்களுக்கு மாந்தீரிகம் பண்ண கேரள நம்பூதிரிகளிடம் போவதுதான் சின்னப் பெண்களுக்கு நல்லது என்று கேள்விப்பட்டேன். <_<

  • கருத்துக்கள உறவுகள்

சுஜிக்கு எதிர்காலத்தைப் பற்றிய கவலை அதிகம் போல.. அதுதான்.. நித்தா வருகுதில்லை ஆக்கும். நித்தா கொள்வதற்கு.. குளிசைகளைப் பாவிக்க முன் ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிங்கோ. காரணம்.. நித்தா கொள்ள தரும் குளிசைகள்.. பாவிக்க ஆரம்பித்த பின் அவற்றில் இருந்து மீள்வதற்கு அவ்வளவு இலகுவாக இடமளிக்கா. அந்த வகையில்.. இது குறித்து சிந்திப்பதோடு.. உங்கள் பொது நல மருத்துவ ஆலோசகரை அணுகி உங்கள் பிரச்சனைக்கு சரியான தீர்வைக் கண்டு பிடியுங்கள்.

இளம் பெண்களுக்கு depression (மன அழுத்தம்) காரணமாகவே அதிகம் நித்திரை கொள்ளாத நிலை காணப்படுகிறது. அந்த வகையில் சுஜி இறுக்கமாக மனசை வைச்சிருக்காம.. மனதை இலகு படுத்தக் கூடிய விடயங்களில் கவனம் செலுத்தலாம். தனிமையில் இருக்காமல்... நண்பிகளோடு.. உறவினர்களோடு மனம் விட்டுப் பேசிப் பழகி இருப்பது நல்லது.. அல்லது மனதுக்குப் பிடித்தமான ஆன் லைன் விளையாட்டுக்களை விளையாடலாம்.

நித்திரைக் குளிசைகளை.. டாக்டரின் பரிந்துரைக்கு அமையவே எடுக்க வேண்டும். களவாக.. வாங்கிப் போடுதல்.. ஆபத்தான விளைவுகளை உண்டு பண்ணும்.

இதன் பின்னாடி உள்ள விளைவுகளை அறிந்து கொள்ள...

http://www.mind.org.uk/help/medical_and_alternative_care/making_sense_of_sleeping_pills_and_minor_tranquillisers

நித்திரை வராததால் என்ன பிரச்சனை ? பகலில் களைப்பாக உடல் சோர்வாக இருக்கிறதா ? வேலையில் சரியாக ஈடுபட முடியவில்லையா ?

இல்லையென்றால் தானாக நித்திரை வரும்போது நித்திரை செய்யுங்களேன்.

எனக்கு நித்திரை வரும். ஆனால் நீண்ட நேரம் நித்திரை செய்ய நேரம் கிடைப்பதில்லை.

நித்திரைக் குளிசை பாவிப்பதை கூடிய மட்டும் தவிர்ப்பது நல்லது.

உங்கள் நித்திரையின்மைக்கான காரணியைக் கண்டறிந்து அதனை நீக்குவதே சிறந்தது. தனிப்பட்ட கவலைகள், வேலையில் பிரச்சனைகள் இருந்து அதனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாலும் தூக்கம் வராது. சிலருக்கு தூங்கப் போகும் முன் தொலைகாட்சி, கணனியில் அதிகளவு நேரம் செலவிட்டாலும் தூக்கம் வருவதில்லை. இயந்திரத்தனமான வாழ்க்கையில் கொஞ்சம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். பிடித்தமான ஏதும் பொழுது போக்குகளை வைத்திருங்கள்.

தூங்கப் போகும் முன் நல்ல விடயங்களை நினையுங்கள். பூக்கள், நீரோடை போன்றவற்றை நினைத்தால் எனக்கு நன்றாக தூக்கம் வரும். சில இசைக் கோர்வைகளையும் மெல்லிய சத்தத்தில் கேட்க தானாகவே நித்திரை வரும்.

சுஜி உங்கள் வயதுக்கு நித்திரை குளிசை போடுவது மிக ஆபத்தானது. நித்திரை குளிசை போட பழகியவர்களால் அதை விட்டு விட முடியாது addict ஆகிவிடுவினம். அத்துடன் அப்படி குளிசை போட்டு நித்திரை கொண்டு எழும்பிய பின்னும் மருந்தின் தாக்கம் இருந்து அடுத்த நாளுக்கான வேலைகளை மனம் லயித்து செய்ய விடாமல் பண்ணும். அத்துடன் இயற்கையாக மனதில் இருக்கும் புத்துணர்வையும் (freshness) குலைத்து உங்கள் அழகையும் அழித்து விடும். உடம்பையும் குண்டாக்கி விடும். பக்க விளைவு இல்லாத நித்திரை குளிசை என்பது இல்லை

நித்திரை வராமல் இருப்பதற்கான அடிப்படைக் காரணம் மனோவியல் சம்பந்தப் பட்டதாகவே இருக்கும். நெடுக்கு கூறியுள்ளது போல் depression கூட ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது இன்னும் கண்டு பிடிக்காது அல்லது அலட்சியமாக விடப்பட்ட ஒரு நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். உங்கள் வைத்தியரை உடனடியாக அணுகி அடிப்படைக் காரணத்தை கண்டு பிடியுங்கள். ஏதாவது ஏமாற்றம், தோல்வி, பயம், நிச்சயமின்மை, பதட்டம் போன்ற காரணங்களால் நித்திரை வராவிடின் உங்களுடன் நெருங்கி பழகும் உறவை, நட்பை அணுகி மனம் விட்டு கதைத்துக் கொண்டு வாருங்கள். உங்கள் பெற்றோருடன் தான் இருக்கின்றீர்கள் என்றால் முதலில் அவர்களுக்கு உங்களுக்கு நித்திரை வருகுது இல்லை, அதுக்கு என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேளுங்கள்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு என்றால் தியானம் செய்ய பழகுங்கள், மிகவும் சிறந்த மருந்தாக தியானம் உங்களுக்கு பயன்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அனைவருக்கும்...

எனக்கு கொஞ்ச நாட்களாக சரியாக நித்திரை வரவில்லை... நித்திரை குளிசை பாவிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்... மருத்துவரிடம் இப்படியே சொன்னால் நித்திரை குளிசை தருவரா...இல்லை எப்படி சொன்னால் மருத்துவர் தருவார்.... சீரியஸாக கேட்கும்போது சீரியஸாக எல்லோரும் பதில் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்... இல்லை களவாக லண்டனில் வாங்கலாம்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...

நீங்கள் நீந்தி பார்க்கலாம் சுஜி. உடற்பயிச்சி நிலையங்களில் நீச்சல் குளம் இருக்கிறதுதானே! முயன்று பாருங்கள். பலன் நிச்சயம் உண்டு. உங்களை அறியாமல் ஒரு களைப்பு வரும்.

நீந்த தெரியாவிட்டால் நீச்சல் பழகுங்கள். அப்போதே உணரத் தொடங்குவீர்கள்.

  • தொடங்கியவர்

கடவுளா அப்படி ஒருவர் இருக்கிறாரா .. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை... கொஞ்சம் கொஞ்சமாக உயிர் போவதைவிட ஒரேயடியாக போயிடலாம் என்றுதான் கேட்டேன்... சிலதுகளை வெளியில் சொல்ல முடியாது நிழலி அண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளா அப்படி ஒருவர் இருக்கிறாரா .. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை... கொஞ்சம் கொஞ்சமாக உயிர் போவதைவிட ஒரேயடியாக போயிடலாம் என்றுதான் கேட்டேன்... சிலதுகளை வெளியில் சொல்ல முடியாது நிழலி அண்ணா...

என்னாச்சு சுஜி.

தியானம் மனதை ஒரு முகப்படுத்தி அமைதியைத் தரும். இறைநம்பிக்கைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ல்ல.. இருக்கிறவங்க.. பலர்... ஒரு வித விரக்தி உணர்வோட.. வாழுறவங்களாவே இருக்காங்க. இந்த நிலை யாழில் மட்டும் தானா.. இல்ல தமிழ் சமூகமே இப்படி ஒரு நிலையிலையா இருக்குது...???!

ஆராய்ந்து தீர்வு காணப்பட வேண்டிய விடயம்..! :o:(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளா அப்படி ஒருவர் இருக்கிறாரா .. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை... கொஞ்சம் கொஞ்சமாக உயிர் போவதைவிட ஒரேயடியாக போயிடலாம் என்றுதான் கேட்டேன்... சிலதுகளை வெளியில் சொல்ல முடியாது நிழலி அண்ணா...

சுஜி.. வாழ்வின் முதலீடே நம்பிக்கை தான். அதைச் தொலைச்சிடாதேங்க. அதுமட்டுமன்றி இப்படியான எண்ணங்கள் மன அழுத்தத்தின் உச்சத்தின் அறிகுறி. நீங்கள் மன அழுத்தத்ததை குறைப்பதற்கான மருத்துகளையே எடுக்க வேண்டிய நிலைக்கு உங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறீர்கள். எதற்கும் உடனடியாக உங்கள் குடும்ப நல மருத்துவரை நாடி.. உங்கள் பிரச்சனைகள் குறித்து மனம் விட்டுப் பேசுங்கள்.

இப்படியான பலரை நான் உளவியல் மருத்துவ பாடப் பயிற்சிக் காலத்தில் அவதானித்திருக்கிறேன். தற்கொலை முயற்சி என்பது மன அழுத்ததின் உச்சத்தில் எழும் ஒரு உணர்வு என்பதாகவே உளவியல் சொல்கிறது. அந்த நிலையை நீடிக்க விடக்கூடாது என்பது உளவியல் மருத்துவத்தின் முக்கியமான அம்சம்.

நிச்சயமாக உங்களின் எல்லாப் பிரச்சனைகளுக்கும்.. நீங்கள் அறியாத ஆனால் பிறரிடம் இலகுவான தீர்வு இருக்கக் கூடும். ஆகவே பிரச்சனைகள் எல்லாம் உங்களுக்கே என்ற போர்வையில்.. மனதை காயப்படுத்தி.. வாழுதல் உங்கள் உள உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகவே அமையும். புரிந்து கொண்டு.. நிலைமையை சுலபமாக எடுக்கக் கூடிய வழிமுறைகளுக்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு பிரச்சனைகளில் இருந்து வெளி வர முயலுங்கள். மனதை இலகு படுத்திக் கொள்ளுங்கள். நித்திரை தானே வரும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி, படுக்கப் போகு முன் ஒரு கப் சரியான சூடான பலில், இரண்டு மேசைக் கரண்டி தேன் விட்டு நல்ல சூட்டுடன் குடித்து விட்டு படுங்கள். நித்திரை அந்த மாதிரி வரும். நித்திரைக் குளிசை பாவிப்பது தற்காலிக நிவாரணமே தவிர அதனால் பாரிய பக்கவிளைவுகள் ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி, உங்களுக்கு தலை மயிர் உதிர்கின்றதா வழமையவிட? உடம்பு வைக்கிற மாதிரி? நித்திரை வராத போது இப்படிப்பட்ட அறிகுறிகள் தென்படும், இவை அயடீன் குறைபாட்டால் வரலாம், எதற்கும் பிளட் போதனை செய்து பாருங்கள், என் மனைவிக்கும் & அவாவின் நண்பிக்கும் இதே பிரச்சனை இருந்தது,

தனியாக இருந்தாலும் இந்த பிரச்சனைகள் வரும், யாழ் கள பக்கம் வராமல் நண்பர்களுடன் ஜாலியா இருங்க,

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி.. :(

நித்திரைக் குளுசையெல்லாம் வேண்டாம்மா..! :o

எனக்கும் இதுமாதிரியான ஒரு பிரச்சினை கடந்த ஆறுமாசமா இருக்கு.. அதாவது அலுவலகத்தால வந்தால்பிறகு ஒரு ஒன்பது மணிக்கெல்லாம் நித்திரை சொக்கும்.. பிறகு நள்ளிரவு ஒருமணி இரண்டு மணிக்கெல்லாம் நித்திரை போய்விடும்.. பிறகு பேய்முழி முழிச்சுக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.. :unsure:

இதுக்கெல்லாம் குளுசை சரிவராது.. தாக்குப் பிடிக்க வேண்டும்.. மருத்துவரைக் கண்டு ஆலோசனை பெறவேண்டும்..! :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அனைவருக்கும்...

எனக்கு கொஞ்ச நாட்களாக சரியாக நித்திரை வரவில்லை... நித்திரை குளிசை பாவிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்... மருத்துவரிடம் இப்படியே சொன்னால் நித்திரை குளிசை தருவரா...இல்லை எப்படி சொன்னால் மருத்துவர் தருவார்.... சீரியஸாக கேட்கும்போது சீரியஸாக எல்லோரும் பதில் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்... இல்லை களவாக லண்டனில் வாங்கலாம்... தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...

பிள்ளை!நித்திரை குளிசை போடுற அளவுக்கு என்ன பிரச்சனை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த மட்டில் நித்திரை குளிசையை நாடுவது நல்ல தல்ல..பின் அதற்கு அடிமை போன்று தான் வாழ வேண்டும் போட்டு பழகி விட்டால் சாதரணமாக நித்திரை வராது விட்டாலே மாத்திரையைத் தான் எடுக்க வேண்டி வரும்..அதைத் தொடர்ந்து நிறையவே உடல் ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி வரும்..உங்களுக்கு இந்த வயதில் மாத்திரை எடுக்கும் அளவுக்கு போக வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறன்..குறிப்பாக இரவு வேலையை பகலில் இல்லை என்றால் பின்னேரத்தில் என்று மாற்றி செய்து பாருங்களேன்..நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.