Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார்த்திகை மாதத்தில் தமிழீழ பாடல்களை மட்டும் கேட்போமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வருடம் முழுவதிலும் ஒரே சினிமா பாட்டுக்களையே கேட்டுக் கொண்டிருக்கும் நாங்கள் கார்த்திகை மாதத்தை எமக்காக உயிர் துறந்த மாவீரர்களுக்காக வேண்டி தமிழீழ பாடல்களை மட்டுமே கேட்போமா?

சகல உறவுகளும் வேறு கருத்தின்றி ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளுவீர்களென எண்ணுகிறேன்.எல்லோரும் சம்மதிக்கும் பட்சத்தில் தப்பித் தவறி யாரும் ஏதாவது சினிமா பாடல்களை இணைத்தால் வாள் வீச்சுக்காரர்களான நிழலி மற்றும் இணையவன் உங்கள் வாள் வீச்சைக் காட்டுங்கள்.

நன்றி

  • Replies 148
  • Views 9.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கல்லறைகள் அது திறக்கும் மெல்லிய காற்றதில் இருக்கும் என்கிற சாந்தன் பாடிய பாட்டு யாரவது தரமுடியுமா??

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

மானமொன்றே வாழ்வெனக் கூறி ...........

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நுணா சாந்தன் படித்த பாடல்களில் எனக்கு மிக பிடித்ததில் இதுவும் இந்தமண் எங்கள் சொந்த மண் பாடலுமே ..சாந்தனுடன் அண்மையில் கதைக்கும் சந்தர்பமும் கிடைத்தது தவிர்துவிட்டேன்.. காரணம் அவர்கள் மனதை நாங்கள் இன்னமும் நோகடிக்கக்கூடாது என்கிற காரணத்தால் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆதரவும் உண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழப்பிரியன் இந்த திரியை தொடங்கியதிற்கு

வருடம் முழுவதிலும் ஒரே சினிமா பாட்டுக்களையே கேட்டுக் கொண்டிருக்கும் நாங்கள் கார்த்திகை மாதத்தை எமக்காக உயிர் துறந்த மாவீரர்களுக்காக வேண்டி தமிழீழ பாடல்களை மட்டுமே கேட்போமா?

சகல உறவுகளும் வேறு கருத்தின்றி ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளுவீர்களென எண்ணுகிறேன்.எல்லோரும் சம்மதிக்கும் பட்சத்தில் தப்பித் தவறி யாரும் ஏதாவது சினிமா பாடல்களை இணைத்தால் வாள் வீச்சுக்காரர்களான நிழலி மற்றும் இணையவன் உங்கள் வாள் வீச்சைக் காட்டுங்கள்.

நன்றி

இந்தக் கோரிக்கையுடன் என்னால் ஒரு சக யாழ் உறவாக ஒத்துப் போக முடியவில்லை.

எந்த உணர்வு சார்ந்த செயற்பாடுகளும் தானாக இயல்பாக வரவேண்டும். கட்டாயப் படுத்துவதோ அல்லது அல்லது உணர்வு சார்ந்த விடயங்களை விதிகளாக விதித்து அதன் படி மட்டுமே செயல்படக் கேட்பதோ சரியாக வராது என்பது என் கருத்து.

கார்த்திகை மாதத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் நெஞ்சு கனக்கும் நேரங்களிலெல்லாம் மாவீர் பாடல்களையும் விடுதலை பாடல்களையும் கேட்பது என் வழக்கம். அதே போல் எல்லாக்காலத்திலும் மாவிரர் பாடல்கள் மட்டுமன்றி மற்ற பாடல்களையும் கேட்பதும் வழக்கம். இப்படி செய்வதால் மாவீரர்களை அவமதிக்கின்றேன் என்று கருதவில்லை.

கார்த்திகை மாதத்தில் மாவிரர் பாடல்களை மட்டுமே கேட்கச் சொல்லி (அல்லது யாழில் அந்தப் பாடல்களை மட்டுமே இணைக்கச் சொல்லி) கட்டாயப்படுத்துவது அதனை வெறும் சம்பிரதாயமாக்குவது போன்ற ஒரு செயலாகவே எதிர்காலங்களில் அமைந்து விடும்.

(இது எனது கருத்து; யாழின் நிர்வாகப் பிரிவின் கருத்தென்று தயவு செய்து எடுக்க வேண்டாம். நிர்வாக பிரிவின் கலந்துரையாடலின் பின் இதனை மோகன் அண்ணா விதியாக கொண்டு வந்தார் எனில் நிச்சயம் அந்த விதிக்குட்பட்டு மட்டுறுத்தினர் என்ற வகையில் செயலாற்றுவேன்)

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

என் அறிவுக்கு எட்டியவரையில் சொல்லப்போனால் கார்த்திகை மாதத்தை மட்டும் மாவீரர்களுக்காக நினைவு கூருவதற்காக ஒதுக்கிவிடுவது போல் உள்ளது..அப்படி செய்வது அழகு அல்ல. மாவீரர்களின் நினைவு நாட்கள் கார்த்திகையில் மட்டும் தான் வருகிறது என்று இல்லைத் தானே.12 மாதத்திலும் மாவீரர்கள் ஆகி இருக்கிறார்கள்.கார்த்திகை 27 என்னும் நாள் விசேசமாக வந்து போகலாம்.அது அவர்கள் எல்லோருக்கும் உரிய பொதுவான நாளாக இருக்கட்டும்.மற்றும்படி திருத்தங்கள் தேவை இல்லை.இதேயே தான் மேலே நிழலி அண்ணா தனக்கு தெரிந்தவகையில் சொல்கிறார்.நான் எனக்கு தெரிந்தவகையில் சொல்லி இருக்கிறன்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழப்பிரியன் இந்த திரியை தொடங்கியதிற்கு

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈழப்பிரியன்,

சரியான சந்தர்ப்பத்தில் சரியான திரி பாராட்டுகள் எனது அன்பு உறவே !

http://youtu.be/9paN-937iDA?hd=1

http://youtu.be/EAX35w_AQVs

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/jBWHlWJmzzc

http://youtu.be/0aURZV7wqo8

http://youtu.be/19G01T4c3kE

http://youtu.be/PcEG8j9XLCk

http://youtu.be/HhM5FaQggyk

  • கருத்துக்கள உறவுகள்

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை

பாடல்வரிகள்: புதுவை இரத்தினதுரை

பாடியவர்: வர்ண. இராமேஸ்வரன்

மறைமுகக் கரும்புலிகள் பற்றிய பாடல்

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை -சில

வேங்கைகள் முகவரி அறிவதில்லை

பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை -கரும்

புலிகளின் கல்லறை வெளியில் இல்லை

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை -சில

வேங்கைகள் முகவரி அறிவதில்லை

காலப் பெருவெளி நீளும் பொழுதிலும்

கண்ணில் தெரிவதுமில்லை -இங்கு

வாழும் தலைமுறை சாகும் கரும்புலி

வாழ்வை அறிவதுமில்லை -இவர்

வாசம் புரிவதுமில்லை

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை -சில

வேங்கைகள் முகவரி அறிவதில்லை

கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துமே

கைகள் அசைத்திட்டுப் போவார் -ஒரு

தொட்டில் வளர்ந்தவர் தோளில் சுமந்தவர்

சொல்லி புறப்பட்டுப் போவார் -எங்கள்

தோழர் நெருப்பென ஆவார்

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை -சில

வேங்கைகள் முகவரி அறிவதில்லை

நொடியில் ஒருபெரும் வெடியுடன் கரும்புலி

நெருப்புடன் சங்கமமாகும் -எங்கள்

விடிவினுக்காகவே இடியென எதிரியின்

முடிவுடன் அவருடல் சாயும் -அவர்

மூச்சும் பெரும் புயலாகும்.

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை -சில

வேங்கைகள் முகவரி அறிவதில்லை

பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை -கரும்

புலிகளின் கல்லறை வெளியில் இல்லை

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/THrs4nf4jAM

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோரிக்கையுடன் என்னால் ஒரு சக யாழ் உறவாக ஒத்துப் போக முடியவில்லை.

எந்த உணர்வு சார்ந்த செயற்பாடுகளும் தானாக இயல்பாக வரவேண்டும். கட்டாயப் படுத்துவதோ அல்லது அல்லது உணர்வு சார்ந்த விடயங்களை விதிகளாக விதித்து அதன் படி மட்டுமே செயல்படக் கேட்பதோ சரியாக வராது என்பது என் கருத்து.

கார்த்திகை மாதத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் நெஞ்சு கனக்கும் நேரங்களிலெல்லாம் மாவீர் பாடல்களையும் விடுதலை பாடல்களையும் கேட்பது என் வழக்கம். அதே போல் எல்லாக்காலத்திலும் மாவிரர் பாடல்கள் மட்டுமன்றி மற்ற பாடல்களையும் கேட்பதும் வழக்கம். இப்படி செய்வதால் மாவீரர்களை அவமதிக்கின்றேன் என்று கருதவில்லை.

கார்த்திகை மாதத்தில் மாவிரர் பாடல்களை மட்டுமே கேட்கச் சொல்லி (அல்லது யாழில் அந்தப் பாடல்களை மட்டுமே இணைக்கச் சொல்லி) கட்டாயப்படுத்துவது அதனை வெறும் சம்பிரதாயமாக்குவது போன்ற ஒரு செயலாகவே எதிர்காலங்களில் அமைந்து விடும்.

(இது எனது கருத்து; யாழின் நிர்வாகப் பிரிவின் கருத்தென்று தயவு செய்து எடுக்க வேண்டாம். நிர்வாக பிரிவின் கலந்துரையாடலின் பின் இதனை மோகன் அண்ணா விதியாக கொண்டு வந்தார் எனில் நிச்சயம் அந்த விதிக்குட்பட்டு மட்டுறுத்தினர் என்ற வகையில் செயலாற்றுவேன்)

நன்றி

நிழலி அண்ணா உங்களுக்கு பச்சை குத்தினது நான் தான்.... நேற்று ஈழபிரியன் அண்ணா இந்த தலைப்பு தொடங்கும்போது நான் யாழில்தான் நின்றேன்... நானும் எழுத நினைத்தேன்.... போடலாமா விடலாமா என்று யோசனையும் இருந்தது.... ஆனால் நிழலி அண்ணா எழுதி விட்டார்... இதே நாங்கள் எழுதிருந்தால் திட்டுதான் விழுந்து இருக்கும் நிழலி அண்ணா எழுதினபடியால் பேசாமல் இருக்கிறார்கள்...

மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவது என்பது பாடல்கள் கேட்பது என்பது ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து பண்ணவேண்டிய காரியம் .. மற்றவர்கள் கட்டாயத்தில் வரக்கூடாது அப்படியே மற்றவர்களின் காட்டாயத்துக்காக பண்ணுகிறவர்கள் எவ்வளவு தூரம் உணர்வோடு பண்ணுவார்கள் என்பது கேள்விக்குறிதான்... கடமைக்காகவும் தங்கள் சுயலங்களுக்காகவும் மாவீரர்களின் பெயர்களையும் போராளிகளின் பெயர்களையும் உச்சரிக்கிறார்கள் பலர்,,,, ஏதும் தப்பா எழுதியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் ஈழபிரியன் அண்ணா நன்றி வணக்கம்...

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்தமான மாதத்தில் தலைப்பை தொடங்கிய ஈழப்பிரியனுக்கும், உணர்வுபூர்வமான பாடலை இணைத்தவர்களுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மாதத்தில் தமிழீழ பாடல்களை மட்டும் கேட்போமா?

இரண்டு வகை பாடல்களையும் பதியலாம் என்பது எனது ஆலோசனை .........

...என்ன எண்ணுகிறீர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.