Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வென்றாலும் அடி தோற்றாலும் அடி.

Featured Replies

சின்ன வயதில புட்போல் விளையாடும் பொழுது தோத்தால் 'கோதாரி' என்று கூவிக்கொண்டு எதிரணியினரின் மீது மண்ணை அள்ளி எரிந்து விட்டு ஓடுவதுதான் ஞாபகம் வருகிறது.

:D

Edited by தப்பிலி

  • 4 years later...

காங்கேசன்துறையில் யங் றோயலுடன் விளையாடினதாய் எழுதி இருக்கின்றீர்கள்? இது எந்த வருடம் என்று நினைவு உள்ளதா? ஆட்டம் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலா அல்லது டவுன் கவுன்சில்  மைதானத்திலா நடைபெற்றது? அப்போது யங் றோயல் சார்பாக விளையாடிய எவர் பெயராவது தற்போது நினைவில் உள்ளதா? நீங்கள் கிரிக்கெற் மட்டுமே விளையாடியதாய் உங்கள் பதிவுகளில் தென்பட்டது. உதைபந்தாட்டமும் விளையாடினீர்களா?

பி/கு: காங்கேசன் துறை, நடேஸ்வரா ஆகிய பதங்களில் நான் யாழ் இணையத்தில் தேடல் செய்தபோது உங்களின் இந்தப்பதிவை கண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன கலைஞன் இத்தனை கேள்விகள்

  • கருத்துக்கள உறவுகள்

குருஜி கப்பல் பார்க்கப் போன மந்திரியின் வழி வந்தவர்....! முடிந்தால் அர்ஜுன் பதில்களைக் கூறட்டும், கூறிப் பார்க்கட்டும்....!

10 minutes ago, suvy said:

குருஜி கப்பல் பார்க்கப் போன மந்திரியின் வழி வந்தவர்....! முடிந்தால் அர்ஜுன் பதில்களைக் கூறட்டும், கூறிப் பார்க்கட்டும்....!

அர்ஜுன் பதில் கூறுவது கூறாமல் விடுவது இருக்கட்டும்..

அர்ஜுன் கிரிக்கெட் விளையாடிய அந்த காலத்தில் கலைஞன்க்கு எத்தனை வயது// அல்லது பிறந்து இருப்பாரா..:unsure:

  • தொடங்கியவர்

கலைஞன் டவுன் கவுன்சில் மைதானத்தில் தான் விளையாடினோம் ,சற்று தள்ளி கே கே எஸ் வெளிச்சவீடு இருந்ததாக ஞாபகம் .விளையாடிய எவரது பெயர்களும் நினைவு இல்லை .

நீங்கள் கே கே எஸ் என்றால் தெரிந்திருக்கும் இவரை ,

இலங்கை சாம்பியனாக வந்த  உதைபந்தாட்டத்தில்  இளவாலை சென் கென்றிஸ் வந்த நேரம் காப்டன் பண்ணியவர் எனது உறவினர் .டவுன் கவின்சிளுக்கு முன் தான் அவர்கள் வீடு .தகப்பன் மலே இனத்தை சேர்ந்தவர் தாய் கே கே எஸ் வைத்தியசாலை நேர்ஸ் .

 

 

1 hour ago, ரதி said:

உதென்ன கலைஞன் இத்தனை கேள்விகள்

நான் மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை காங்கேசன்துறையில் படித்தேன். அப்போது விளையாட்டு பார்ப்பதும், விளையாடுவதுமே பிரதானமாக செய்பவை. தவிர, அப்போது யங் ரோறலில் விளையாடியவர்களையும் ஞாபகம் இருக்கின்றது. 

1 hour ago, suvy said:

குருஜி கப்பல் பார்க்கப் போன மந்திரியின் வழி வந்தவர்....! முடிந்தால் அர்ஜுன் பதில்களைக் கூறட்டும், கூறிப் பார்க்கட்டும்....!

குருஜி, நீங்கள் எழுதிய யாழ். இந்து மற்றும் உள்ளூர் கிரிக்கெற் அணி பற்றிய பதிவுகளை முன்பு வாசித்தேன். இங்கு பெரும்பாலும் எல்லோரும் சிறுவயதில் வேலை, வெட்டி இல்லாமல் கிரிக்கெற் கனவுடன் சுற்றி நேரத்தை வீணாக்கிவிட்டோமோ என்று எண்ணத்தோன்றுகின்றது. ஊர்கள், காலம் வேறுபட்டாலும் அர்ஜுனின் அனுபவத்தினையொத்த அனுபவம் இங்கு பலருக்கும் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

 

50 minutes ago, நவீனன் said:

அர்ஜுன் பதில் கூறுவது கூறாமல் விடுவது இருக்கட்டும்..

அர்ஜுன் கிரிக்கெட் விளையாடிய அந்த காலத்தில் கலைஞன்க்கு எத்தனை வயது// அல்லது பிறந்து இருப்பாரா..:unsure:

அப்போது பெரியவர்கள் மாலையில் விளையாடும்போது பந்து பொறுக்குவதற்கும், மற்றும் கீப்பராக நிற்பதற்கு ஒருவரும் முன்வராவிட்டால் கீப்பராக நிற்பதற்கும் விடுவார்கள். வேகமாய் அடிக்கப்படும் பந்தை மொக்குத்தனமாய் சின்னக்கைகளால் தடுத்து கையை சேதப்படுத்தியது உண்டு.

21 minutes ago, arjun said:

கலைஞன் டவுன் கவுன்சில் மைதானத்தில் தான் விளையாடினோம் ,சற்று தள்ளி கே கே எஸ் வெளிச்சவீடு இருந்ததாக ஞாபகம் .விளையாடிய எவரது பெயர்களும் நினைவு இல்லை .

நீங்கள் கே கே எஸ் என்றால் தெரிந்திருக்கும் இவரை ,

இலங்கை சாம்பியனாக வந்த  உதைபந்தாட்டத்தில்  இளவாலை சென் கென்றிஸ் வந்த நேரம் காப்டன் பண்ணியவர் எனது உறவினர் .டவுன் கவின்சிளுக்கு முன் தான் அவர்கள் வீடு .தகப்பன் மலே இனத்தை சேர்ந்தவர் தாய் கே கே எஸ் வைத்தியசாலை நேர்ஸ் .

நீங்கள் சொல்லும் பகுதியில் வாழ்ந்து எனக்கு தெரிந்த பிரபல உதைபந்தாட்ட வீரர் என்றால் வெஸ்லி. அவர் இப்போது மொன்றியலில் இருக்கின்றார். அவரையா சொல்கின்றீர்கள்? யங் றோயல் கழகம் இப்போதும் சிறு அளவில் மொன்றியலில் உள்ளது. முன்னைய பிரபல வீரர் பாப்பா- சுருள் தலையையும் பன்னிரண்டு வருடங்களின் முன் மொன்றியலுக்கு போனபோது மைதானத்தில் கண்டேன். இப்போது அவர்களின் பிள்ளைகள் யங் றோயலுக்காய் விளையாடுகின்றார்கள். கிரிக்கெற் ஆட்டங்கள் எப்போதும் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலேயே இடம்பெறும். உதைபந்து செல்லப்பிள்ளையார் கோயில் மைதானம், மற்றும் டவுண் கவுண்சில் மைதானங்களில் இடம்பெறும்.

காங்கேன்சன்றையின் சில பகுதிகள் அண்மையில் விடுவிக்கப்பட்ட செய்தியே உங்கள் பழைய பதிவை பார்க்க உதவியது. எமது வீடு உள்ள பகுதி (குருநாதர் சாமி கோயிலடி) இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்று சொல்கின்றார்கள். அங்கு ஆமிக்காரர் தோட்டம் செய்கின்றார்களாம். 

  • தொடங்கியவர்

இலங்கை சம்பியன் சென் கென்றிஸ் டீம் கப்டன் வெஸ்லியின் அண்ணன் .

வெஸ்லியும் நல்ல பிளேயர் என்று கேள்விப்பட்டேன் ,மொன்றியலில் தான் இருக்கின்றார் .சில வருடங்களின் முன் சந்தித்து தண்ணி வேறு அடித்தோம் .

இவர்கள் எனக்கு மிக நெருங்கிய உறவினர்கள் .

கே கே எஸ் இவர்கள் வீட்டிற்கு பல தடவைகள் சென்றிருக்கின்றேன் .-

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, arjun said:

இலங்கை சம்பியன் சென் கென்றிஸ் டீம் கப்டன் வெஸ்லியின் அண்ணன் .

வெஸ்லியும் நல்ல பிளேயர் என்று கேள்விப்பட்டேன் ,மொன்றியலில் தான் இருக்கின்றார் .சில வருடங்களின் முன் சந்தித்து தண்ணி வேறு அடித்தோம் .

இவர்கள் எனக்கு மிக நெருங்கிய உறவினர்கள் .

கே கே எஸ் இவர்கள் வீட்டிற்கு பல தடவைகள் சென்றிருக்கின்றேன் .-

வெஸ்லி எனது நெருங்கிய கூட்டாளி நியுயோர்க்கில் இருந்து கடந்த 20 வருடமாக மொன்றியாலில் வாழ்கிறார்.இவரது அண்ணனும் எனது நண்பர்.கால்ப் பந்தில் கில்லாடி.இவரது பெயர் யுவான்.ஆனால் ரிடி என்று தான் எல்லோரும் அழைப்பார்கள்.இவர்களது தகப்பனார் மலே இனத்தவர்.

வெஸ்லியின் தம்பி என்னுடன் நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயத்தில் ஒன்றாக படித்தவர், நண்பர். பின்னர் நான் எட்டாம் வகுப்பில் சென்.ஜோன்ஸிற்கு மாறினேன், அவர் ஆறாம் வகுப்பிலேயே சென். பற்றிக்ஸிற்கு மாறிவிட்டார். பாடசாலை பேருந்தில் இருவரும் ஒன்றாக காங்கேசன்துறை திரும்புவோம். பின்னர் ஈப்பி ஆர் எல் எவ்வின் ஆட்கள் பிடித்தலோடு எல்லா தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன. அவரை நான் பின்னர் கனடாவில் அவர் வீட்டிற்கு சென்று சந்தித்தேன். அப்போது அவருடன் மொன்றியல் போனபோது வெஸ்லியையும் சந்தித்தோம். வெஸ்லிக்கு அண்ணர் ஒருவர் இருப்பது கொஞ்சம் கொஞசமாய் நினைவில் வருகின்றது. அவரை நேரில் கண்டால் அடையாளம் தெரியவரும். மிக நீண்டகாலம் என்பதால் பல நினைவுகள் போய்விட்டன.  போர் காரணமாக பாரியளவில் சின்னாபின்னமாகிய ஊர்களில் காங்கேசன்துறையும் ஒன்று. நடந்த அழிவுகள், உறவுகளின் பிரிவுகள், பலவிதமான இழப்புக்கள் எல்லாவற்றையும் நினைத்தால் இரத்தக்கண்ணீர்தான் வரும். 

  • தொடங்கியவர்

எனக்கும் பழைய நினைவுகள் பலவற்றை கிளறிவிட்டார் கலைஞன் .இவர்களின் அம்மா எனக்கு சின்னம்மா .

வெஸ்லியின் அண்ணர் டி டி , அவர்தான் உதைபந்து சுப்பர் ஸ்டார் .அவரையும் உறவினர் ஒருவரின் கல்யாணத்தில் சந்தித்தேன் .அவருக்கும் ஒரு அண்ணர் நோர்வேயில் இருக்கின்றார் .இலங்கையில் Beatnicks இசைக்குழுவில் கிட்டார் அடித்தவர் .

இவர்கள் ரொறொண்டோ வந்தால் எங்ளது அம்மாவுடன் தான்  தங்குவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்,

நீங்கள் ஆறாம் ஆண்டில் அல்லவா சென் ஜோன்சிற்கு மாறினீர்கள்? அப்போ இணுவிலில் இருந்தீர்கள்?

கெளரி அம்பாளில் பள்ளிக்கூடம் போவீர்கள்.

நான் நினைக்கும் ஆள் நீங்களாயின்.

5 hours ago, arjun said:

அவருக்கும் ஒரு அண்ணர் நோர்வேயில் இருக்கின்றார்

பெயர் டொலி

9 hours ago, கலைஞன் said:

கிரிக்கெற் ஆட்டங்கள் எப்போதும் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலேயே இடம்பெறும்.

இந்த மைதானம் முழுவதும் கிளிசீரியா (சீமைக் கிளுவை) நட்டு வைத்திருக்கிறார்கள். செல்லப் பிள்ளையார் கோயில் இருக்கு ஆனால் புதர், மரங்களிற்கிடையே அடையாளம் காண்பது கஸ்டம். நில அளவையாளர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டடியில் நின்று பார்த்தால் கோயில் தெரியும். இந்த கோவிலும் மைதானமும் எனது வாழ்கையிலும் 1979 இலிருந்து சில வருடங்களை விழுங்கியிருந்தது. மீட்க மீட்க சுகமான அனுபவங்கள்.

9 hours ago, கலைஞன் said:

எமது வீடு உள்ள பகுதி (குருநாதர் சாமி கோயிலடி) இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்று சொல்கின்றார்கள்.

அப்ப நிச்சயமாக உங்களுக்கு என்னை தெரிந்திருக்கும்.

இப்பதிவையும் பாருங்களேன்.

 

 

On 3/14/2016 at 9:45 PM, arjun said:

எனக்கும் பழைய நினைவுகள் பலவற்றை கிளறிவிட்டார் கலைஞன் .இவர்களின் அம்மா எனக்கு சின்னம்மா .

வெஸ்லியின் அண்ணர் டி டி , அவர்தான் உதைபந்து சுப்பர் ஸ்டார் .அவரையும் உறவினர் ஒருவரின் கல்யாணத்தில் சந்தித்தேன் .அவருக்கும் ஒரு அண்ணர் நோர்வேயில் இருக்கின்றார் .இலங்கையில் Beatnicks இசைக்குழுவில் கிட்டார் அடித்தவர் .

இவர்கள் ரொறொண்டோ வந்தால் எங்ளது அம்மாவுடன் தான்  தங்குவார்கள் 

செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்தில் யாழ் கழகங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் யங் றோயல் சார்பாய் அண்ணன், தம்பி இருவரும் விளையாடுவது நினைவில் உள்ளது. இவ்வாறே நேசக்குமார், சாந்திகுமார்களும் யங் றோயல் சார்பாய் விளையாடியுள்ளார்கள். நடேஸ்வரா கல்லூரியில் இருந்த கிறிக்கெற் அணி ஒன்று, நேசக்குமாரை யாழ்ப்பாணத்தில் இருந்து அழைத்து வந்து தமது பரம எதிரியான அணியை வெல்வதற்காக தமது அணி சார்பாக விளையாட வைப்பார்கள். அப்போது நேசக்குமார் சென். ஜோன்ஸ் கல்லூரியில் பயின்றார். தற்போது கனடாவில் உள்ள, முன்பு பிரச்சனைக்கு உள்ளாகிய சுவிஸ் முரளி (நடராசா முரளிதரன்) செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்தில் நடைபெறும் கிறிக்கெற் சுற்றுப்போட்டிகளில் சுழற்பந்து வீசுவது இப்போதும் எனது நினைவில் உள்ளது. நான் அப்போது நாலாம், ஐந்தாம் வகுப்பு படித்தேன் என்று நினைக்கின்றேன். காங்கேசன் துறை, மற்றும் அண்டிய இடங்களில் மிகச்சிறந்த ஏராளம் விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள். அதில் பெரும்பாலானோர் பல்வேறு இயக்கங்களில் சேர்ந்தும், பிரச்சனை காரணமாக வெளிநாடுகளிற்கு சென்றும், இலங்கைப்படைகளின் ஓபரேசன் லிபரேசன் மற்றும் இந்திய இராணுவம் கால் பதித்த காலத்திலேயே விளையாட்டு அங்கு வெகுவாக சோபை இழந்துவிட்டது.

On 3/14/2016 at 10:37 PM, goshan_che said:

கலைஞன்,

நீங்கள் ஆறாம் ஆண்டில் அல்லவா சென் ஜோன்சிற்கு மாறினீர்கள்? அப்போ இணுவிலில் இருந்தீர்கள்?

கெளரி அம்பாளில் பள்ளிக்கூடம் போவீர்கள்.

நான் நினைக்கும் ஆள் நீங்களாயின்.

90இல் இடம்பெயர்ந்து இணுவிலில் சிறிது காலம் இருந்தேன், பின்னர் கொக்குவிலிற்கு சென்றுவிட்டேன். நீங்கள் சொல்லும் வகையிலான காங்கேசன்துறையை சேர்ந்த எனது வயது பிரிவை சேர்ந்த ஒருவரும் சென். ஜோன்சில் அப்போது படிக்கவில்லை.  நீங்கள் கூறுபவர் தெல்லிப்பளையாக இருக்கலாம்.

On 3/14/2016 at 3:10 AM, ஜீவன் சிவா said:

இந்த மைதானம் முழுவதும் கிளிசீரியா (சீமைக் கிளுவை) நட்டு வைத்திருக்கிறார்கள். செல்லப் பிள்ளையார் கோயில் இருக்கு ஆனால் புதர், மரங்களிற்கிடையே அடையாளம் காண்பது கஸ்டம். நில அளவையாளர் சிவசுப்பிரமணியத்தின் வீட்டடியில் நின்று பார்த்தால் கோயில் தெரியும். இந்த கோவிலும் மைதானமும் எனது வாழ்கையிலும் 1979 இலிருந்து சில வருடங்களை விழுங்கியிருந்தது. மீட்க மீட்க சுகமான அனுபவங்கள்.

அப்ப நிச்சயமாக உங்களுக்கு என்னை தெரிந்திருக்கும்.

இப்பதிவையும் பாருங்களேன்.

 

உங்கள் பதிவை பார்த்தேன். கூச்சியத்தை பிள்ளையார் கோயில் எங்களுடன் இரண்டர கலந்தது. கோயிலுடன் அண்மித்த பகுதியில் எமக்கு வயல் உள்ளது. உங்கள் வயதுப்பிரிவு வேறுபட்டால் என்னால் உங்களை மட்டுக்கட்டுவது கடினம். ஆனால், நிச்சயம் உங்களுக்கு எனது ஒன்றுவிட்ட சகோதரங்கள், மற்றும் உறவினர்களை தெரிந்திருக்ககூடும்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தான் படிக்க முடிந்தது கதையை 

எனக்கு உதைபந்து என்றால் உயிர் போல 2002, 2003தமிழீழ தேசிய விளையாட்டு விழாவில் கலந்து விளையாடியது மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று  இன்று வரை விளையாடிக்கொண்டு இருக்கிறன் 15 வருடங்களுக்கு மேலாக பலரையும் பயிற்சி கொடுத்து பழக்கிவிட்டு விட்ட திருப்தி எனக்கு 

அடிபிடி இல்லாமல் உதைபந்தாட்டம் இல்லை நாங்கள் வெற்றி பெற்று பொல்லால் பரிசு வாங்கியது  மறக்க இயலாது ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான இயல்பான நடையில் எழுதியிருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்

  • 3 months later...
On 14/03/2016 at 2:51 AM, கலைஞன் said:

நீங்கள் சொல்லும் பகுதியில் வாழ்ந்து எனக்கு தெரிந்த பிரபல உதைபந்தாட்ட வீரர் என்றால் வெஸ்லி. அவர் இப்போது மொன்றியலில் இருக்கின்றார். அவரையா சொல்கின்றீர்கள்? யங் றோயல் கழகம் இப்போதும் சிறு அளவில் மொன்றியலில் உள்ளது. முன்னைய பிரபல வீரர் பாப்பா- சுருள் தலையையும் பன்னிரண்டு வருடங்களின் முன் மொன்றியலுக்கு போனபோது மைதானத்தில் கண்டேன். இப்போது அவர்களின் பிள்ளைகள் யங் றோயலுக்காய் விளையாடுகின்றார்கள். கிரிக்கெற் ஆட்டங்கள் எப்போதும் செல்லப்பிள்ளையார் கோயில் மைதானத்திலேயே இடம்பெறும். உதைபந்து செல்லப்பிள்ளையார் கோயில் மைதானம், மற்றும் டவுண் கவுண்சில் மைதானங்களில் இடம்பெறும்.

13423858_10206288384589271_2781123422466

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.