Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் வாழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

window_cleaners_4.jpg

காய்ந்து போய் விட்ட,

காலப் பூக்களின் இதழ்களாய்.

சருகாகிப் பறக்கும்,,

சரித்திரங்களின் சாட்சிகள்!

கடாரம் வரைக்கும்,

கப்பற்படை நடத்திக்,

கோவில் குடமுழுக்கு நடத்தியவனின்,

குலக் கொழுந்துகள்!

அலை புரளும் கடல்களையும்,

ஆகாய வீதிகளையும் நிதமும்,

அளந்த படி அலையும்,

ஆதரவில்லாத அகதிகள்!

இரவுப் புறாக்கள் மட்டும்,

குறு குறுக்கும் பேரிருளில்

பனி படிந்த கண்ணாடி ஜன்னல்களில்

பார்வை நிலை குத்தப்,

பேய்கள் உறங்கையிலும்

காவல் வேலைக்காய்

விழித்திருக்கும் விழிகள்!

மரக்கறிக் கடைகளின்,

மூட்டை தூக்கிகள் ஓய்வெடுக்க,

முதுகெலும்பை மலிவாக்கி,

மூட்டையடிக்கும் தோள்கள்!

மீசை மயிர் கருக்கும்,.

மின்னடுப்புக்களின் வெக்கையில்

பாண்களைப் பதம் பார்க்கும்,

பழகிப் போய் விட்ட விரல்கள்!

அடி வயிற்றில்,

வண்ணத்துப் பூச்சிகள் பறக்க,

அடுக்கு மாடிக் கட்டிடங்களின்.

அழகிய கண்ணாடிகளைக்

கழுவும் கயிறுகளில் தொங்கும்,

காப்புறுதியில்லாத உயிர்கள்!

கரப்பொத்தானின் மரபணுக்கள்,

கலந்து விட்ட பிறப்பாக,

காலநிலை மாற்றங்களோடு,.

கூர்ப்படையும் உடல்கள்!

எங்களின் வருகையின் பின்,

புயல் காற்றில் அழிந்த,

பூசனிக் கொடிகளின் காய்கள்

சந்தைக்கு வருகின்றன!

கைவிடப் பட்ட பழமரங்கள்,

கண் திறந்து பார்த்த பின்,

மீண்டும் காய்க்கின்றன!

பொருளாதாரத்தின் விதிகள்

புதிதாக எழுதப் படுகின்றன!

கைகளினால் கார் கழுவும்,

கடைகள் கூட உதயமாகின்றன!

அம்மாக்களும், அப்பாக்களும்,

அயல் நாடு பார்க்கையில்,

அவர்கள் கட்டியதாய், நினைத்த,

ஆகாயக் கோட்டைகளின்,

அத்திவாரங்கள் ஆடுகின்றன!

அம்மியில் கால் மிதித்து,

அருந்ததிக்குக் கை காட்டி,

ஊரறிய நடந்த திருமணங்கள்,

உடைந்து நொறுங்குகின்றன!

விடிகாலையின் விரகதாபங்கள்,

விடை பெற்று விடுகின்றன!

ஊருக்காக வாழ்க்கையாய்,

உள்ளே எரிகின்றன, மனங்கள்!

அறுந்து தொங்குகின்றது,

ஆயிரம் ஆண்டு காலத்துச்,

சமுதாயச் சங்கிலி!

அரைநொடியில் அந்தஸ்துகள்,

மாறி விடும் காலத்தில்,

பணத்தை நோக்கிய பயணம்,

பந்தயமாக மாறுகின்றது!

இனத்தின் விடுதலை கூடப்,

பணத்திற்கு விலை போகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

கப்பற்படை நடத்திக்,

கோவில் குடமுழுக்கு நடத்தியவனின்,

குலக் கொழுந்துகள்

அன்றும் தொழிலாளி வறுமையில்தான் இருந்திருப்பான் ...அதிகாரவர்க்கம் கோவில் குடமுழுக்கு செய்திருக்கும் ...கப்பல் முதலாளி கடாரம் வரை போய் வந்திருப்பான்.. ஏழைகளின் நிலமை அன்றும் இன்றும் என்றும் ஒரே மாதிரித்தான்....

புங்கையூரான் தொடரட்டும் உங்கள் கவிமழை

  • கருத்துக்கள உறவுகள்

அன்றாட வாழ்க்கை சிலருக்கு இப்படிதான்............இவர்களால்தான் இன்னும் உலகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது . மேலும் தொடருங்கள் உங்கள் கவிதைபயணத்தை

நன்று.

தங்கள் கவிமழையில் நனைந்தேன்.

காலவெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது.

தொழுவத்தில் கிடக்கும் மாடுகள் போல்

கடந்தகாலப் புகழை மட்டும்

அசை போடுகிறோம்.

மழைபெய்யும்போது ஓலையைக்

குடையாகப் பிடித்ததுபோல்

நாட்டின் எண்ணம் வரும்போது

பழையவற்றைத் தூக்கிப் பிடிக்கிறோம்.

தமிழினத்தின் விடுதலை

வியாபாரப் பொருளாகி விட்டது.

அது பலமுறை

பணத்திற்காக விற்கப்படுவதும்

மாவீரரர் மீட்டுவருவதுமாக இருந்தது.

இப்போது மொத்தமாக விற்றுவிட்டார்கள்

பெரிய முதலாளிகளுக்கு.

மீண்டும் மீட்க மாவீரர் வருவாரா.!

  • கருத்துக்கள உறவுகள்

window_cleaners_4.jpg

காய்ந்து போய் விட்ட,

காலப் பூக்களின் இதழ்களாய்.

சருகாகிப் பறக்கும்,,

சரித்திரங்களின் சாட்சிகள்!

கடாரம் வரைக்கும்,

கப்பற்படை நடத்திக்,

கோவில் குடமுழுக்கு நடத்தியவனின்,

குலக் கொழுந்துகள்!

அலை புரளும் கடல்களையும்,

ஆகாய வீதிகளையும் நிதமும்,

அளந்த படி அலையும்,

ஆதரவில்லாத அகதிகள்!

இரவுப் புறாக்கள் மட்டும்,

குறு குறுக்கும் பேரிருளில்

பனி படிந்த கண்ணாடி ஜன்னல்களில்

பார்வை நிலை குத்தப்,

பேய்கள் உறங்கையிலும்

காவல் வேலைக்காய்

விழித்திருக்கும் விழிகள்!

மரக்கறிக் கடைகளின்,

மூட்டை தூக்கிகள் ஓய்வெடுக்க,

முதுகெலும்பை மலிவாக்கி,

மூட்டையடிக்கும் தோள்கள்!

மீசை மயிர் கருக்கும்,.

மின்னடுப்புக்களின் வெக்கையில்

பாண்களைப் பதம் பார்க்கும்,

பழகிப் போய் விட்ட விரல்கள்!

அடி வயிற்றில்,

வண்ணத்துப் பூச்சிகள் பறக்க,

அடுக்கு மாடிக் கட்டிடங்களின்.

அழகிய கண்ணாடிகளைக்

கழுவும் கயிறுகளில் தொங்கும்,

காப்புறுதியில்லாத உயிர்கள்!

கரப்பொத்தானின் மரபணுக்கள்,

கலந்து விட்ட பிறப்பாக,

காலநிலை மாற்றங்களோடு,.

கூர்ப்படையும் உடல்கள்!

எங்களின் வருகையின் பின்,

புயல் காற்றில் அழிந்த,

பூசனிக் கொடிகளின் காய்கள்

சந்தைக்கு வருகின்றன!

கைவிடப் பட்ட பழமரங்கள்,

கண் திறந்து பார்த்த பின்,

மீண்டும் காய்க்கின்றன!

பொருளாதாரத்தின் விதிகள்

புதிதாக எழுதப் படுகின்றன!

கைகளினால் கார் கழுவும்,

கடைகள் கூட உதயமாகின்றன!

அம்மாக்களும், அப்பாக்களும்,

அயல் நாடு பார்க்கையில்,

அவர்கள் கட்டியதாய், நினைத்த,

ஆகாயக் கோட்டைகளின்,

அத்திவாரங்கள் ஆடுகின்றன!

அம்மியில் கால் மிதித்து,

அருந்ததிக்குக் கை காட்டி,

ஊரறிய நடந்த திருமணங்கள்,

உடைந்து நொறுங்குகின்றன!

விடிகாலையின் விரகதாபங்கள்,

விடை பெற்று விடுகின்றன!

ஊருக்காக வாழ்க்கையாய்,

உள்ளே எரிகின்றன, மனங்கள்!

அறுந்து தொங்குகின்றது,

ஆயிரம் ஆண்டு காலத்துச்,

சமுதாயச் சங்கிலி!

அரைநொடியில் அந்தஸ்துகள்,

மாறி விடும் காலத்தில்,

பணத்தை நோக்கிய பயணம்,

பந்தயமாக மாறுகின்றது!

இனத்தின் விடுதலை கூடப்,

பணத்திற்கு விலை போகின்றது!

ஐயாம் சோ சேட்... :( :(

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை

புலம்பெயர்வின் அவலம் சொல்லி நிற்கிறது.

கிடைக்காத நிம்மதியையும் அமைதியையும்தேடி கூக்குரலிட்டபடி அலைகிறது வாழ்க்கை

அறுந்து தொங்கும் சமுதாயச்சங்கிலியைப்பற்றி ஆற அமர யோசிக்கமுடியாமல் துரத்துகிறது பொருளாதாரப்பேய்..

புங்கையூரன்...!தங்களின் ஒவ்வொரு வரியிலும் புரிகின்றது.....

எம் புலம்பெயர்ந்த உறவுகளின் சந்தோசங்கள் இடம்பெயர்ந்த அவலங்களை!

யதார்த்தமாக புலம்பெயர் தேசங்களில் நடக்கும் அவலங்களையும் தெளிவாக தங்கள் கவிவரிகளில் தெளிவுபடுத்தியிருக்கின்றீர்கள்!

நன்றி புங்கையூரன்!

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் வாழ்க்கையின் கஸ்டத்தினை அப்பட்டமாக சொல்லி உள்ளீர்கள்...தொடர்ந்து எழுதுங்கள்...முதல் பச்சை என்னோடது

  • கருத்துக்கள உறவுகள்

அரைநொடியில் அந்தஸ்துகள்,

மாறி விடும் காலத்தில்,

பணத்தை நோக்கிய பயணம்,

பந்தயமாக மாறுகின்றது!

இனத்தின் விடுதலை கூடப்,

பணத்திற்கு விலை போகின்றது!

எங்களுக்கும் கிடைக்கிறது நேரம்..

ஓயாமல் தட்டச்சு செய்வதற்கு என்ன பாரம்..

அனில் அம்பானிக்கு ரிலேசன் நாங்கள்..

அதனால் வெளியாருக்கு இங்க என்ன வேலை போங்கள்...

ஒற்றுமைக்கு தமிழனம் இலக்கணம்..

அதை எங்களிடம் கற்கவரும் வெளிநாட்டவருக்கு 5 ரூபாய் கட்டணம்..

அதில் பாதி பங்குதாரருக்கு சமர்பணம்..

மாவீரருக்கு மெழுக்குவத்திக்கு காசு 2 ரூபாய்..

உள்நுழைவு கட்டணம்(??) ஒம்பது ரூபாய்..

கவிதைக்கு மிக்க நன்றி தோழர் கோமகன் .. இன்னும் கொஞ்சம் கூடுதலாக இதை போல சேர்த்து போட்டிருந்தால் அருமையாக இருந்திருக்கும்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி புங்கையூரான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் பதிந்த புத்தன், நிலாமதியக்கா,செண்பகன், தோழர் புரட்சி,சகோதரி வல்வை,கவிதை, ரதி, வாத்தியார் அனைவருக்கும் நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கையூரான் பகிர்வுக்கு, உங்களின் ஒவ்வொரு கவிதையும் மனதை தொட்டு சொல்கிறது, தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

பணத்தை நோக்கிய பயணம்,

பந்தயமாக மாறுகின்றது!

இனத்தின் விடுதலை கூடப்,

பணத்திற்கு விலை போகின்றது!

முதல் இரண்டு வரிகள் இல்லாமல் முன்னேற்றமில்லை. ஆனால் அடுத்த இரண்டு வரிகளை முன்னேற்றத்திற்கு பாவிப்பவர்கள் படுபாதகர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மனதைத் தொடும் கவிதை புங்கையூரன்...அருமையாக புலம்பெயர்வாழ்வின் வலிகளை வடித்துள்ளீர்கள்..தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை இணைத்த உடையார், கிருபன், சபேஸ் ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றிகள்!!!

அரைநொடியில் அந்தஸ்துகள்,

மாறி விடும் காலத்தில்,

எங்களுக்கும் கிடைக்கிறது நேரம்..

ஓயாமல் தட்டச்சு செய்வதற்கு என்ன பாரம்..

அனில் அம்பானிக்கு ரிலேசன் நாங்கள்..

அதனால் வெளியாருக்கு இங்க என்ன வேலை போங்கள்...

ஒற்றுமைக்கு தமிழனம் இலக்கணம்..

அதை எங்களிடம் கற்கவரும் வெளிநாட்டவருக்கு 5 ரூபாய் கட்டணம்..

அதில் பாதி பங்குதாரருக்கு சமர்பணம்..

மாவீரருக்கு மெழுக்குவத்திக்கு காசு 2 ரூபாய்..

உள்நுழைவு கட்டணம்(??) ஒம்பது ரூபாய்..

கவிதைக்கு மிக்க நன்றி தோழர் கோமகன் .. இன்னும் கொஞ்சம் கூடுதலாக இதை போல சேர்த்து போட்டிருந்தால் அருமையாக இருந்திருக்கும்.. :icon_idea:

புரட்சி இதை நான் எழுதவில்லை இதை எழுதியது புங்கையூரான் எனக்கு கவிதை எழுதத் தெரியாது :) :) :)

Edited by komagan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.