Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தேசமக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டினோம்

பெருக்கினோம்

கழித்தலையும் துடைத்திட்டோம்

எட்டு மணி வேலை என்பதை

எழுத்திலும் நாம் அறியோம்

இரவு பகல் வந்ததாக சொல்கிறர்கள்

அதை நாம் என்றுமே பார்த்ததில்லை

சுமந்தோம்

பெற்றோரை

உடன் பிறந்தோரை

அவரது பிள்ளைகளை

உற்றார் உறவினரை

தாயகத்தை.........

வீட்டுக்கு

கலோ என்றால் கிலோ

எவரானாலும்

அய்யோ என்றால் அஞ்சோ பத்தோ

வயிற்றைக்கட்டினாலும்

வட்டிக்கெடுத்தாலும் எம் நிலையை

வாய்திறந்து சொல்லோம்

களவெடுக்கவில்லை

கையேந்தி வீதியிலும் நிற்கவில்லை

சொல்லொணா துயரங்கள் துரத்தியபோதும்

வாய்ச்சொல் தவறியதில்லை

எவன் வயிற்றிலும்

என்றுமே அடித்ததில்லை

மூழ்கும் நிலைவந்தால்

அடுத்தவேலை எடுப்பதுண்டு

அதற்கு அடுத்தவேலையும் பார்த்துண்டு

என்ன வேலை செய்தோமென்று

எதற்காக சொல்லவேண்டும்

புலம்பெயர் தேசமக்கள்

புண்பட எழுதாதீர்

பதிவுக்காய் காத்திருக்கும்

பாரீயின் வாரிசு அவர்.....

Edited by விசுகு

கூட்டினோம்

பெருக்கினோம்

கழித்தலையும் துடைத்திட்டோம்

எட்டு மணி வேலை என்பதை

எழுத்திலும் நாம் அறியோம்

இரவு பகல் வந்ததாக சொல்கிறர்கள்

அதை நாம் என்றுமே பார்த்ததில்லை

சுமந்தோம்

பெற்றோரை

உடன் பிறந்தோரை

அவரது பிள்ளைகளை

உற்றார் உறவினரை

தாயகத்தை.........

வீட்டுக்கு

கலோ என்றால் கிலோ

எவரானாலும்

அய்யோ என்றால் அஞ்சோ பத்தோ

வயிற்றைக்கட்டினாலும்

வட்டிக்கெடுத்தாலும் எம் நிலையை

வாய்திறந்து சொல்லோம்

களவெடுக்கவில்லை

கையேந்தி வீதியிலும் நிற்கவில்லை

சொல்லொணா துயரங்கள் துரத்தியபோதும்

வாய்ச்சொல் தவறியதில்லை

எவன் வயிற்றிலும்

என்றுமே அடித்ததில்லை

மூழ்கும் நிலைவந்தால்

அடுத்தவேலை எடுப்பதுண்டு

அதற்கு அடுத்தவேலையும் பார்த்துண்டு

என்ன வேலை செய்தோமென்று

எதற்காக சொல்லவேண்டும்

புலம்பெயர் தேசமக்கள்

புண்பட எழுதாதீர்

பதிவுக்காய் காத்திருக்கும்

பாரீயின் வாரிசு அவர்.....

உண்மையின் குரல் கேட்குமா???

ஐந்து கண்டங்கள் விட்டும் கேட்குமா ???

நாம் ........... நலமடித்த மாடுகள்

உள்ளேயும் வெளியேயும்

வெள்ளையின் அடிப்பாகத்தை நக்கித்தின்னி என்றும்................

கோப்பை கழுவி...................... என்றும்

அவதாரங்கள் எடுத்தாலும்

விழவில்லை எங்கள்

மனிதம் விழவில்லை!!!!!!!!!!!

என்றுமே நாம்

மனிதத்தை புரியாத ஐந்துகளுக்கு.....................முன்

ஆடைகள் அற்ர நிர்வாண மனிதர்கள்

அன்றும் இன்றும் என்றும்....................

பி கு :

இது கோமகனது கன்னிக் கவிதை . எதுவித உள்நோக்கமும் அற்றது.

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வேலை செய்தோமென்று

எதற்காக சொல்லவேண்டும்

புலம்பெயர் தேசமக்கள்

புண்பட எழுதாதீர்

பதிவுக்காய் காத்திருக்கும்

பாரீயின் வாரிசு அவர்.....

திருடாதே..... பொய் சொல்லாதே...... பிச்சை எடுக்காதே

வியர்வைசிந்தி உழைத்து உண்ணும் ஒவ்வொருபருக்கையும் அமுதமே.....

பண்பட்டவர் புண் பட எழுதார் ...

Edited by நிலாமதி

புண்படுவதும்... இழிச்சொல்,பழிச்சொல் கேட்பதும்... அவமானப்பட்டு நிற்பதும்... இன்று நேற்றல்ல, காலங்காலமாய் எமைத் துரத்தும்.... சாபக்கேடுகள்! அதற்காக எம்மை நாம் மாற்றிக்கொள்ளக் கூடாது!!! எப்பொழுதுமே, நாம் நாமாகவே இருப்போம் என்ற உறுதி எங்களிடம் இருந்தால், எந்தவொரு சக்தியாலும் எம்மை ஒன்றும் பண்ண இயலாது. தவறினை சுட்டிக்காட்டுதல்..... என்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும்! செய்த தவறினை ஏற்றுக்கொள்ள...நல்மனம் வேண்டும்! எது எப்படியாயினும்... நியாயம் என்பதனை தவறவிடாமல் நாம் நாமாக இருப்போம்.... எத்தடை வரினும்!

விசுகு அண்ணை! தங்களின் கவிவரிகள் பல விஷயங்களை சொல்லி நிற்கின்றன.

நன்றி விசுகண்ணை!:)

கோ! தங்களின் கன்னிக் கவிதைக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

ஆனால்..... தங்களின் கோபம் எனக்கு புரிகின்றது. இருந்தும்..... நடைமுறையைவிட, எழுத்தில் இன்னும் அதிக நிதானம் தேவை.

தெளிவான பார்வையோடு.... ஆக்கபூர்வமான தங்கள் கவிப்பயணமும் தொடரட்டும்!

நன்றி கோ! :)

  • கருத்துக்கள உறவுகள்

பா வாலே புத்தி சொன்ன பரம்பரையாக்கும் நாங்கள். பாராட்டுக்கள் ஆனால் கோமகனின் கோபம் இன்னமும் குறையேல்லை போலை எதுக்கு தனி பச்சத்தண்ணியிலை ஒருக்கா அள்ளி தோயுங்கோ குறையும். :lol: :lol:

பா வாலே புத்தி சொன்ன பரம்பரையாக்கும் நாங்கள். பாராட்டுக்கள் ஆனால் கோமகனின் கோபம் இன்னமும் குறையேல்லை போலை எதுக்கு தனி பச்சத்தண்ணியிலை ஒருக்கா அள்ளி தோயுங்கோ குறையும். :lol: :lol:

அங்கைதான் பச்சைத் தண்ணீல குளிக்கலாம் . இங்கை குளிச்சால் கதைகந்தல் சாத்திரி :lol: :lol: :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன வேலை செய்தோமென்று

எதற்காக சொல்லவேண்டும்

புலம்பெயர் தேசமக்கள்

புண்பட எழுதாதீர்

பதிவுக்காய் காத்திருக்கும்

பாரீயின் வாரிசு அவர்.....

விசுகர், நீங்கள் நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கின்றீர்கள்!

நதி மூலம் பார்த்தால், நதியை ரசிக்க முடியாது!

ஆனால் அதன் தோற்றுவாய், மறைந்து நதியாகும் போது அதன் அழகு மனத்தைக் கொள்ளை கொள்கின்றது!

உங்கள் கவிதை, வெளிப்படுத்தி நிற்பது 'மனிதம்' என்ற ஒன்றையே.

அதை மட்டும், ஒருவன் தனது வாழ்வின் இலட்சியமாக வரித்து விட்டால், தேவையில்லாத பல பிரச்சனைகள் முளையிலேயே காய்ந்து விடும்!

அது சரி, பாரீ என்று நீங்கள் குறிப்பிட்டது ' பாரீஸ்' இன் பிரெஞ்சுப் பெயர் என எண்ணுகின்றேன். அது சரிதானா?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையின் குரல் கேட்குமா???

ஐந்து கண்டங்கள் விட்டும் கேட்குமா ???

நாம் ........... நலமடித்த மாடுகள்

உள்ளேயும் வெளியேயும்

வெள்ளையின் அடிப்பாகத்தை நக்கித்தின்னி என்றும்................

கோப்பை கழுவி...................... என்றும்

அவதாரங்கள் எடுத்தாலும்

விழவில்லை எங்கள்

மனிதம் விழவில்லை!!!!!!!!!!!

என்றுமே நாம்

மனிதத்தை புரியாத ஐந்துகளுக்கு.....................முன்

ஆடைகள் அற்ர நிர்வாண மனிதர்கள்

அன்றும் இன்றும் என்றும்....................

பி கு :

இது கோமகனது கன்னிக் கவிதை . எதுவித உள்நோக்கமும் அற்றது.

கோமகன், ஆடைகள் அற்ற நிர்வாணம், மிக அழகானது!

ஆடைகளை உடுத்தியது மனிதனே! இயற்கையல்ல!

மற்றது மறப்பதும், மன்னிப்பதும் ஒருவனை உயர்த்துகின்றது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்!

'eye for an eye' என்ற நிலையை எல்லோரும் எடுத்தால், உலகமே குருடாகி விடும்.

உங்கள் 'Motto' வைத் திரும்பப் பாருங்கள்!

ஒருவன் திரும்பத் திரும்ப எதை நினைக்கின்றானோ, அவன் அதுவாகவே ஆகி விடுகின்றான்!

நடந்தவைகளைப் பின் தள்ளி விட்டு, நடக்கப் போவதை நோக்கி நடப்போம்!

தனியாக அல்ல, துணைகளோடு!

உங்கள் கன்னிக்கவிதை, எல்லோரது மனதையும் கவர்ந்து விட்டாள், கோமகன்!

நன்றிகள் கோமகன்!!!

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா, கோமகன் அண்ணா பல விடயங்களை cover பண்ணி இருக்கிறீர்கள்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்.

நாளைய பொழுது நன்றாக விடியட்டும்

வேண்டாம் இன்னுமொரு திண்ணைக் கவிதை.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது

அழகல்ல.

அவன் அழகனுமல்ல

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலே இன்னொருவனுடைய தொழிலை வைத்தே அவன்மீது சாதியத்தை சாத்தி என்ன என்ன கொடுமை எல்லாம் செய்யலாமோ அதெல்லாம் செய்தார். கடவுளுக்கு கூட நீ சொந்தமில்லை என்று கழுத்திலே பிடித்து வெளியிலே தள்ளினார்.

இளம் பெண்களின் மனதை கல்விக்கூடங்களுக்கு வராமலே செய்ய அவர்களின் மனதை எத்தனையோ வக்கிர வார்த்தைகளால் வலி செய்தார்.

புலம் பெயர்ந்தார்................ என்ன வேலை எல்லாம் இழி என்று ஆடினாரோ அதுவெல்லாம் செய்தார். எத்தனைபேர் நாம் சதி குறைந்துவிட்டோம் ................. இனி வேறு வீடுகளுக்கு செல்லும்போது ஒரு சிரட்டை எடுத்து செல்லுங்கள் அதிலேயே தண்ணி வேண்டி குடியுங்கள் என்று கடிதம் எழுதினாரோ தெரியவில்லை? என்ன வேலை செய்து காசு வருகிறது என்ற எந்த அக்கறையும் அங்கும் இல்லை .............. காசு வந்தால் சரி. ஆனாலும் இன்னும் அவர்கள் சாதி நிலை குறையவில்லை. இப்போதும் கடவுளுக்கு அருகில் அவர்கள்தான் இருக்கிறார்கள்.

இப்போது நிலைமை தலைகீழ் .........................

"கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரிலே இன்னொருவனுடைய தொழிலை வைத்தே அவன்மீது சாதியத்தை சாத்தி என்ன என்ன கொடுமை எல்லாம் செய்யலாமோ அதெல்லாம் செய்தார். கடவுளுக்கு கூட நீ சொந்தமில்லை என்று கழுத்திலே பிடித்து வெளியிலே தள்ளினார்.

இளம் பெண்களின் மனதை கல்விக்கூடங்களுக்கு வராமலே செய்ய அவர்களின் மனதை எத்தனையோ வக்கிர வார்த்தைகளால் வலி செய்தார்.

புலம் பெயர்ந்தார்................ என்ன வேலை எல்லாம் இழி என்று ஆடினாரோ அதுவெல்லாம் செய்தார். எத்தனைபேர் நாம் சதி குறைந்துவிட்டோம் ................. இனி வேறு வீடுகளுக்கு செல்லும்போது ஒரு சிரட்டை எடுத்து செல்லுங்கள் அதிலேயே தண்ணி வேண்டி குடியுங்கள் என்று கடிதம் எழுதினாரோ தெரியவில்லை? என்ன வேலை செய்து காசு வருகிறது என்ற எந்த அக்கறையும் அங்கும் இல்லை .............. காசு வந்தால் சரி. ஆனாலும் இன்னும் அவர்கள் சாதி நிலை குறையவில்லை. இப்போதும் கடவுளுக்கு அருகில் அவர்கள்தான் இருக்கிறார்கள்.

இப்போது நிலைமை தலைகீழ் .........................

"கடவுள் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று"

உங்களைப்போன்றவர்களால் தான் இன்று தமிழினம் நடுத்தெருவில் நிற்கின்றது.

திருந்தினாலும் விடமாட்டீர்கள்......திருந்தாவிட்டாலும் விடமாட்டீர்கள்.எல்லாம் தலைவிதி.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.