Jump to content

கோழிப் புரியாணி செய்முறை தேவை


Recommended Posts

யாராவது சிக்கின் புரியாணி (தமிழ் றெஸ்ரோறன்களில் செய்யிற மாதிரி) செய்யத் தெரிந்தால் ஒருக்கா சொல்வீர்களா?

*** தலைப்புத் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

சிக்கின் பிரியாணி.

picture072p.th.jpg

தேவையான பொருட்கள்..

பாஸ்மதி ரைஸ்.....4 கப்.

நெய்......தேவைக்கேற்ப..

கருவாப்பட்டை..

ஏலக்காய்..

கஜு

முந்திரி வற்றல்..

மஞ்சள்தூள் சிறிதளவு..

தயிர்.....2 மே.க

சிக்கின் 5 லெக் பீஸ்..

கறி பவுடர்....3 மே.கரண்டி..

உப்பு.....(தேவைக்கேற்ப)

வெங்காயம்....பெரியது 1 (நறுக்கி வைத்துக்கொள்ளவும்)

கருவேப்பிலை.

ரம்பை 3,4 துண்டுகள்..

பெருஞ்சீரகம்...1 தே.கரண்டி.

கடுகு......அரை தே.க

இஞ்சி விழுது...2.மே.க

பூண்டு விழுது.....2மே.க

தக்காளி....3 (பெரியது)

செய்முறை..

(நாளை எழுதுகிறேன்..)

அதுவரை கடைக்குப் போய் எல்லாப்பொருட்களையும் வாங்கி வாங்கோ.. smile.gif

(இது எங்கள் வீட்டில் நான் தயாரித்து, உங்களுக்காக எடுத்த படம்...) smile.gif

செய்முறை...

முதலில் சுத்தமாக்கிய சிக்கினை ஓரளவு பெரிய துண்டுகளாக்கி வைத்துக்கொண்டு.அதனுடன் உப்பு, கறிப்புவடர் ,இஞ்சி,பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.

ஒரு சோஸ்பானில் கொஞ்சம் நெய் விட்டு, மிதமான சூட்டில் நெய் காய்ந்ததும், கஜு,பிலம்ஸ், கருவாப்பட்டை, ஏலக்காய், ரம்பை (நோ ரம்பா.. tongue.gif )கருவேப்பிலை போட்டு வறுத்துக்கொள்ளுங்கள்..

பாஸ்மதி ரைசை அளவாக தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ரைஸ் குக்கரில் வேகவிடுங்கள்..பாதி ரைஸ் வெந்ததும் நெய்யில் வறுத்த பொருட்களை ரைசுடன் சேர்த்து கிளறி விடவும்.

கறிவைக்கும் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு எண்ணெய் சூடேறியதும், நறுக்கிய வெங்காயம், பெருஞ்சீரகம், கடுகு, கருவேப்பிலை ,ரம்பை இலை சேர்த்து தாளிக்கவும்.

அதன் பின்பு நறுக்கிய தக்காளிப்பழத்தையும் அதனுடன் சேர்த்துக் கிளற வேண்டும்..

அதன் பின்னர் பிரட்டி வைத்த சிக்கினையும் தாளிததிற்குள் போட்டு கிளறி விடவும்.

அதனுடன் 2 மே.கரண்டி தயிர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக சிக்கினை வேக விடவேண்டும்.(உப்பு தேவையென்றால் பார்த்துப்போடவும்...அட சும்மா எட்டிப்பார்த்து இல்லப்பா....டேஸ்ட் பார்த்துதான்.) biggrin.gif

கெட்டியாக சிக்கின் கறி வந்ததும், கொஞ்சம் இறைச்சிக் கறிப்பவுடர் சேர்த்து ஒரு கொதி கொதித்ததும்...இறக்கிவிடவும்..

ஒரு பெரிய வாய்அகன்ற பாத்திரத்தில் இந்த சிக்கின் கறியுடன்...வேகவைத்த ரைசைப்போட்டு கிளறி விடவுடம்...

இப்போது சிக்கின் பிரியாணி ரெடியாகிவிட்டது... 18.gif

இதற்கு முட்டை அவியல், தக்காளி சாலட், கோழிப்பொரியல் சேர்த்து வைத்து சாப்பிடலாம்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=14628

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Microwave Chicken Briyani..!

http://www.ifood.tv/...chicken-biryani

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கன் பிரியாணி

* சிக்கன் – 1 கிலோ (அல்லது சிக்கன் லெக் பீஸ் – 1 கிலோ)

* பாஸ்மதி அரிசி – 3 கப்

* எண்ணெய் – 5 தேக்கரண்டி

* வெண்ணெய் – 3 தேக்கரண்டி

* பிரிஞ்சி இலை – 2

* ஏலக்காய் தூள் – இரு சிட்டிகை

* பட்டை – 4

* லவங்கம் – 5

* சோம்பு – 1 தேக்கரண்டி

* இஞ்சி – 1 பெரியது

* பூண்டு – 1 பெரியது

* வெங்காயம் – 3

* பச்சை மிளகாய் – 10

* மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

* உப்பு – தேவைக்கேற்ப

* புதினா – 1/2 கப்

* கொத்தமல்லி இலை – 1/2 கப்

* தக்காளி – 3

* தேங்காய் துருவல் – 1/2 கப்

* மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

* பெப்பர் – 1 தேக்கரண்டி

* லெமன் – 1 பெரியது

* நெய் – 3 தேக்கரண்டி

* கறிவேப்பிலை – 1 கைபிடி

* குக்கரில் எண்ணெய், வெண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை, சோம்பு, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

* பட்டை, லவங்கம், சோம்பு, இஞ்சி, பூண்டுஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து குக்கரில் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

* வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து குக்கரில் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

* பிறகு மஞ்சள் தூள், பாதி உப்பு, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.

* வதங்கியதும் தக்காளியை அரைத்து சேர்த்து நன்கு வதக்கவும். (தேவையெனில் நடுவில் எண்ணெய் சேர்க்கலாம்.)

* தேங்காயை அரைத்து சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின் நன்றாக வதங்கிய பின் கோழியை சேர்த்து வதக்கி கொண்டே இருக்கவும்.

* பின் மிளகாய் தூள், பெப்பர் (காரம் பார்த்து சேர்க்கவும்).

* தண்ணீர் சேர்க்காமல் கோழியுடன் மசாலா நன்கு ஒட்டி சுருண்டு வரும் வரை வதக்கவும்.

* அரிசி சேர்த்து வதக்கி 6 கப் தண்ணீர் விட்டு லெமன் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் நிறுத்தி விடவும்.

* பின் அரை மணி நேரம் கழித்து குக்கரை திறந்து நெய், கறிவேப்பிலை சேர்த்து லேசாக கிளறி பரிமாறவும்.

Note:

காரம் அவரவர்களுக்கு ஏற்றார் போல் சேர்க்கவும். (எந்த ஒரு உணவு செய்யும் போதும் அரைத்த மசாலாவை நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்குவது மிக முக்கியம்.)

IMG_4584.JPG

Link to comment
Share on other sites

கோழியுடன் அரிசியைச் சேர்த்து சமைக்கும் பொழுது (ப்ரெஷர் குக்கர் இல்லாமல் சாதாரண பாத்திரத்தில்) ஒரு கப் அரிசிக்கு எத்தனை கப் தண்ணீர் விட வேண்டுமென யாருக்கும் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் அரிசிஎன்டால் (லோன்க்ரைஸ்) சுமார் நாலு,நாலரை செ. மீ.தண்ணீர். அதாகப் பட்டது , பாத்திரத்தில் அரிசியை நன்கு கழுவியதும் அரிசியை moodith தண்ணீர் விட்டு arisiyin மட்டத்தில் இருந்து உங்கள் வலது கை விரலை செங்குத்தாக வைத்து நடுவிரலின் இரண்டாவது ரேகை அளவு நீர் இருந்தால் போதும். பாசுமதி என்றால் கொஞ்சம் குறைவாகத் தண்ணீர் விட்டால் போதும்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி நெடுக்ஸ், தமிழ் அரசு & அறிவிலி :) அறிவிலி சமைத்துப் பார்த்திட்டு சொல்கிறேன் எப்பிடி என்று :)

Link to comment
Share on other sites

மஞ்சள் அரிசிஎன்டால் (லோன்க்ரைஸ்) சுமார் நாலு,நாலரை செ. மீ.தண்ணீர். அதாகப் பட்டது , பாத்திரத்தில் அரிசியை நன்கு கழுவியதும் அரிசியை moodith தண்ணீர் விட்டு arisiyin மட்டத்தில் இருந்து உங்கள் வலது கை விரலை செங்குத்தாக வைத்து நடுவிரலின் இரண்டாவது ரேகை அளவு நீர் இருந்தால் போதும். பாசுமதி என்றால் கொஞ்சம் குறைவாகத் தண்ணீர் விட்டால் போதும்.

நன்றி சுவி.

இதைத்தான் 'மலையவு அரிசிக்கும் இறையளவு தண்ணீர்' என்று சொல்கிறதாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பல முறைகளில் பிரியாணி செய்வதுண்டு அதில் ஒரு செய்முறை;

வாங்கின கோழியை அரைவாசியாக பிரிக்கவும் அல்லது குழம்புக்கு என்று தனிய கோழி வாங்கவும்.

கோழிக்காலை நன்றாக கீறிப் போட்டு தனி மிளகாய்த் தூளும்,உப்பும் போட்டு முதல் நாளே ஊற வைக்க வேண்டும்.

அடுத்த நாள் கோழிக் காலை மிதமான எண்ணெயிலோ அல்லது அதிக எண்ணெய் விட்டோ பொரிக்க வேண்டும்...வெங்காயமும் பொரிக்க வேண்டும்.

குழம்புக்கு என வைத்திருக்கும் கோழியை கழுவி சுத்தம் செய்து போட்டு தண்ணீர் அதிகம் விட்டு தேவையான அளவு உப்பும்,மஞ்சலும்,எண்ணெய் விட்டு அவிய வைக்கவும்.

அரைவாசிக்கு மேல் அவிந்த உடன் கோழியை எடுத்து விட்டு அந்த கோழி அவிந்த தண்ணீரில் அரியைப் போட்டு சமைக்கவும்.

அவிந்த கோழியை நீங்கள் எப்படி சாதரணமாக குழப்பு வைப்பீர்களோ அப்படி வைக்கவும்.

சோறு அவிந்த உடன் அதில் பொரித்த கோழி,பொரித்த வெங்காயத்தை போட்டு கலக்கவும்.

முட்டையை அவிக்கவும்,தக்காளி பச்சடி செய்யவும்

இந்த பிரியாணியில் கோழிக் குழம்பை விட்டு முட்டையும்,பச்சடியும் சேர்த்து சாப்பிட‌ அந்த மாதிரி இருக்கும்.

செய்து பார்த்து விட்டு ஒருதரும் என்னை அடிக்க வாறதில்லை சரியா ஏதோ அலைமகள் கேட்டார் என்பதற்காக எனக்கு தெரிந்ததை எழுதினேன்

Link to comment
Share on other sites

கேட்டதற்காக இப்படியா எழுதுவது, மினக்கெட்டுச் சமைத்துச் சரியில்லாட்டா நாயும் இல்லை போட :lol:

மினக்கெட்டு எழுதியதற்கு நன்றி ரதி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ இதுதான் புரியானியா.இணைப்பிற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ இதுதான் புரியானியா.இணைப்பிற்கு நன்றி.

அப்ப இவ்வளவு நாளும் வெள்ளைச்சோத்துக்கை மஞ்சள்தூளை கலக்கிப்போட்டு ஆட்டுறைச்சியோடை குழைச்சு ஒரே அமுக்கு தான் போலை கிடக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட் இஸ் கஜு அண்ட் லவங்கம் ?

இதுதான் கஜு

57859_f260.jpg

இதுதான் லவங்கம்

5128094.jpg

Link to comment
Share on other sites

கோழி புரியாணி செய்து பார்த்தேன். மிக நன்றாக இருந்தது. எல்லோரும் விரும்பிச் சாப்பிட்டார்கள்.

கோழியை தயிர், கொத்தமல்லி இலை, புதினா இலை, சீரகத்தூள், கறித் தூள், இறைச்சி தூள், மஞ்சள் உப்புப் போட்டு பிரட்டி வைத்து , பின் வெங்காயம், இஞ்சி, உள்ளி போட்டு தாளித்து கறி சமைக்கவும்.

பாஸ்மதி அரிசியை அரை மணித்தியாலம் ஊறப் போட்டு, முதுதாக அவிக்காமல் பொல்லுச் சோறாக அவிக்கவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் முதலில் கொஞ்சம் சோறை பரவி அதன் மேல் கோழிக்கறி , கொத்தமல்லி இலை போட்டு அதன் மேல் மீண்டும் சோற்றைப் போட்டு மீண்டும் கோழிக்கறி+கொத்தமல்லி இலை............ அடுக்கடுக்காகப் போடவும். கடைசியாக குங்குமப் பூவை பாலில் கரைத்து தெளிக்கவும். விரும்பினால் முந்திரிப் பருப்பு, பொறித்த வெங்காயமும் தூவலாம்.

பாத்திரத்தை இறுக்க மூட்டி 'தம்' கட்டி (ஆவி வெளியேறாமல் இருக்க அலுமினியத் தாள் அல்லது துணி வைத்து இறுக்குதல்) மெல்லிய தணலில் 20 - 30 வைக்கவும். தோசைக் கல்லின் மீது வைத்துச் சூடாக்கினால் இன்னும் நல்லது.

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கோழிப்பிரியானி பெரிய அளவில் செய்ய வேன்னி உள்ளது.(70 பேர்)யாராவது ஒரு வழிபண்ங்கோப்பா :lol: ஏன் என்றால் 5 பேருக்கென்டால் ஒரு அளவும் 50 பேருக்கென்டால் அளவுகள் வித்தியாசப்படும் எல்லோ அது தான் :) .

Link to comment
Share on other sites

சஜீவன்,

அளவு சொல்லத் தெரியாது. வேறு யாராவது சொல்வார்கள். புரியாணிக்கான சோறு செய்து பார்த்த முறைகளில் சுவையாக இருந்த முறை இது.

அரிசியை அவிக்கும் பொழுது தேங்காய்ப் பால் (ரின்) விட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கருவா / ஏலம்/ கராம்பு / ரம்பை / கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துப் போட்டால் நல்ல சுவையாக இருக்கும். சோறை கறியுடன் கலக்கும் பொழுது முந்திரிப்பருப்பை நெய்யில் தாளித்துப் போட்டு, கொஞ்சம் 'கிஸ்மிஸ்' (முந்திரி வற்றல்) உம் சேர்த்தால் நன்றாக இருக்கும். ஒருமுறை சிறிய அளவில் செய்து பார்த்து விட்டு பெரிய அளவில் சமையுங்கள். தேங்காய்ப் பாலின் அளவை அதிகரித்தால் சுவையாக இருக்கும். ஆனால் கொழுப்புக் கூடியது.

புதிதாக முயற்சிக்கப் போகிறீர்கள் இந்த 70 பேரையும் நினைக்கத்தான் பாவமாக் கிடக்கு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன்,

புதிதாக முயற்சிக்கப் போகிறீர்கள் இந்த 70 பேரையும் நினைக்கத்தான் பாவமாக் கிடக்கு. :D

லொள்ளு :lol: என்றாலும் தகவலுக்கு நன்றி தப்பிலி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பல முறைகளில் பிரியாணி செய்வதுண்டு அதில் ஒரு செய்முறை;

வாங்கின கோழியை அரைவாசியாக பிரிக்கவும் அல்லது குழம்புக்கு என்று தனிய கோழி வாங்கவும்.

கோழிக்காலை நன்றாக கீறிப் போட்டு தனி மிளகாய்த் தூளும்,உப்பும் போட்டு முதல் நாளே ஊற வைக்க வேண்டும்.

அடுத்த நாள் கோழிக் காலை மிதமான எண்ணெயிலோ அல்லது அதிக எண்ணெய் விட்டோ பொரிக்க வேண்டும்...வெங்காயமும் பொரிக்க வேண்டும்.

குழம்புக்கு என வைத்திருக்கும் கோழியை கழுவி சுத்தம் செய்து போட்டு தண்ணீர் அதிகம் விட்டு தேவையான அளவு உப்பும்,மஞ்சலும்,எண்ணெய் விட்டு அவிய வைக்கவும்.

அரைவாசிக்கு மேல் அவிந்த உடன் கோழியை எடுத்து விட்டு அந்த கோழி அவிந்த தண்ணீரில் அரியைப் போட்டு சமைக்கவும்.

அவிந்த கோழியை நீங்கள் எப்படி சாதரணமாக குழப்பு வைப்பீர்களோ அப்படி வைக்கவும்.

சோறு அவிந்த உடன் அதில் பொரித்த கோழி,பொரித்த வெங்காயத்தை போட்டு கலக்கவும்.

முட்டையை அவிக்கவும்,தக்காளி பச்சடி செய்யவும்

இந்த பிரியாணியில் கோழிக் குழம்பை விட்டு முட்டையும்,பச்சடியும் சேர்த்து சாப்பிட‌ அந்த மாதிரி இருக்கும்.

செய்து பார்த்து விட்டு ஒருதரும் என்னை அடிக்க வாறதில்லை சரியா ஏதோ அலைமகள் கேட்டார் என்பதற்காக எனக்கு தெரிந்ததை எழுதினேன்

ஆத்தாடி....ரெம்பப் பயங்கரமான முறையா இருக்கே ரதி அக்கா.... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 
    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.