Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கமக்காரன் - நட்சத்திரன் செவ்விந்தியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்டதையும் வாசித்து குழம்பாதீர்கள்.

ரயாகரன் தனக்கென இணையம் வைத்திருக்கின்றார் .நட்சத்திரன் செவ்விந்தியன் தேசம்நெற் இல் அதிகமாக பதிவுகள் இடுபவர் .பிரயாகரனை பற்றிய உமது எண்ணமும் ழையென தான் நான் சொல்வேன்.

நட்சத்திரனின் தாசை பற்றிய கதைவிட மேலே ஒருவரின் கதை நன்றாக இருக்கு.

சட்டம் என் கையில் முதல் நாள் காட்சிக்கு போய் ராணி தியேட்டரில் கியூவில் நிற்கும் போது ஆரியகுளம் பொன்ராசாவின் மகன் வந்து இப்படிதான் ஒரு கமக்காரனில் கை வைக்க அவன் ஒரே அடியில் ஆளை நோக்அவுட் ஆக்கிவிட்டான் .நின்ற சனம விஷயத்தை சொல்லி கமக்காரனை அனுப்பிவிட்டார்கள் .இவர் பின்னர் எழும்பி உள்ள டாக்ஸிகாரர்களை எல்லாம் கூட்டி வந்து எவ்வளவு தேடியும் கமக்காரன் அகப்படவில்லை .நாங்கள் நிம்மதியாக போய் "சொர்க்கம் மதுவிலே பார்த்தோம்".

ராயகரனைப் பற்றி எனக்கு தனிப்பட தெரியாது அண்ணா ஆனால் அவர் வங்கிக் கொள்ளையில் பங்கு பற்றியவர் என அவர் சார்ந்த மாற்றுக் கருத்து ஊடகத்தில் தான் சொல்கிறார்கள்

எழுத்தாளருக்கு புலிகள் குறித்து ஏற்கனவே ஒரு கருத்து இருக்கின்றது. அதற்குள்ளாகவே அவர் கதை இருக்கின்றது.

கதை ஊடாக புலிகளை விமர்சித்தில் அல்லது எதிர்ப்புநிலையை முன்வைத்தல் என்ற காரணத்திற்காக இந்தப் படைப்பை நிராகரிக்கமுடியாதுள்ளது காரணம் புலிகள் குறித்த அவருக்கு இருப்பில் இருக்கும் கருத்து அவர் தந்தை கொல்லப்பட்டதில் இருந்து உருவாகியிருக்கும்போது அக்கருத்துநிலையில் நியாயமும் இருக்கவே செய்கின்றது.

உண்மைச் சம்பவங்களுடன் சம்மந்தப்பட்டு உணர்வுகள் பாதிக்கப்பட்டு உருவாகும் கருத்துநிலை அக்கருத்துநிலையின் அடிப்படையில் உருவாகும் படைப்புக்களை அனுசரித்தே பயணிக்கமுடியும்.

கமக்காரன் என்ற இந்தப் படைப்பு இந்தப்படைப்புக்கான பின்னணி படைத்தவரின் பின்னணி எல்லாவற்றையும் எல்லாவற்றையும் சீர்தூக்கிப்பார்க்கும்போது சரி பிழை என்ற கருத்துக்களை கடந்து வேதனைகளே மிஞ்சுகின்றது.

உன்ர அப்பாவை போட்டுத்தள்ளினாலும் பரவாயில்லை விசில் அடிக்கக் கூடியமாதிரியே எழுது என்ற கோரிக்கையை முன்வைப்பதில் உடன்பாடு இல்லை.

சுகன் ந.செ விசிலடித்தான் குஞ்சுகள் மாதிரி புலிப் புராணம் பாட‌ சொல்லவில்லை...யுத்தம்,இந்த யுத்தத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்,போரின் வடுக்களை பற்றி எழுதலாம் அதை விடுத்து எப்பவும் புலி எதிர்ப்பு புராணம் பாடுறேன் என சொல்லி மக்களது யதார்த்த நிலையை மறப்பதும் நல்லதல்ல

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் சொல்வது நியாயமான கருத்து. ந.செ. தகப்பனை இழந்திருக்கிறார் பெற்றோரில்லாமல் கஷ்டப் பட்டிருக்கிறார். என்ன காரணத்திற்காக இது நடந்திருந்தாலும் நாம் இவரிடம் போய் "இதை விட்டு விடு" என்று நியாயம் பிளக்க முடியாது. அமைதியாகக் கடந்து போவதே நல்லது.

யார் என்ன சொன்னாலும் இது ஒரு நல்ல கதை. அத்தோடு அவரே இக்கதை கற்பனை என்று முகநூலிற் கூறியுள்ளார். நிற்க யாரும் 100 % கற்பனையில் கதை எழுதுவதில்லை. அல்லது அவ்வாறு எழுதினால் கதை 'அந்தரத்தில்' நிற்கும். இவர் ஒரு சில உண்மைப் பாத்திரங்களை வைத்து மிகுதியைக் கற்பனை பண்ணியுள்ளார். அதுதான் ஒரு கதாசிரியனின் வேலை. உண்மையை அப்படியே எழுதுவது பத்திரிகைக்காரரினதும் ஆவணக்காப்புக்காரரினதும் வேலை. (குறிப்பு ந.செ. வின் கருத்துககளுடன் எனக்குக் (கருத்து) வேறுபாடுகள் உண்டு. என்றாலும் இப்பதான் அவர் ஏன் அப்படியுள்ளார் என்று புரிகிறது- விடை: தந்தையைப் போட்டுத் தள்ளியது.).

Edited by கறுவல்

  • கருத்துக்கள உறவுகள்

கதை சரியான மொக்கை,கதையின் ஆரம்பத்தில் கதையை தொடர்ந்து வாசித்து செல்ல முடியாத மாதிரியான தொய்வு பின் பகுதி பரவாயில்லை, அதுவும் புலி,டெலோ தாஸ் என உண்மையான நபர்களை குறிப்பிடுவதால் ஏற்படும் ஒரு புதினம் கேட்கும் ஆவலே அதற்கு காரணம் அதை விடுத்து 3 சண்டியர்களுக்கிடையே நடக்கும் கதையாக நினைத்து பார்த்தால் புரியும் ஏன் இந்த கதை சரியான மொக்கை என்று.

நாகேசின் கதையை வாசிக்கும் வரை கதையுடன் ஒன்றுவதற்கு காலனிலை, நேரம்,பிரதெசம்,அமைவிடம் போன்ற இன்னோரன்ன காரணிகளை கதாசிரியர் படிப்பவர்களின் மனக்கண் முன் கொண்டு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன்

சில வேளையில் இந்த மாதிரியான வர்ணனைகள் வாசகனை சோர்வடையச்செய்துவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை சரியான மொக்கை,கதையின் ஆரம்பத்தில் கதையை தொடர்ந்து வாசித்து செல்ல முடியாத மாதிரியான தொய்வு பின் பகுதி பரவாயில்லை, அதுவும் புலி,டெலோ தாஸ் என உண்மையான நபர்களை குறிப்பிடுவதால் ஏற்படும் ஒரு புதினம் கேட்கும் ஆவலே அதற்கு காரணம் அதை விடுத்து 3 சண்டியர்களுக்கிடையே நடக்கும் கதையாக நினைத்து பார்த்தால் புரியும் ஏன் இந்த கதை சரியான மொக்கை என்று.

நாகேசின் கதையை வாசிக்கும் வரை கதையுடன் ஒன்றுவதற்கு காலனிலை, நேரம்,பிரதெசம்,அமைவிடம் போன்ற இன்னோரன்ன காரணிகளை கதாசிரியர் படிப்பவர்களின் மனக்கண் முன் கொண்டு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன்

சில வேளையில் இந்த மாதிரியான வர்ணனைகள் வாசகனை சோர்வடையச்செய்துவிடும்.

ஒரு பச்சை!

நிழலி இவரின் தகப்பனாரின் பெயர் என்ன அவர் ஏன் புலிகளால் கொல்லப்பட்டார் என்பதையும் எழுதினால், கதாசிரியரின் புலிக்காச்சலுக்கான நியாயத்தையும் அவர் மீதான அனுதாபத்தையும் நாங்கள் அந்தக் காலகட்டத்தின் சூழலையும் புரிந்து கொள்ள முடியும்.

அக் காலகட்டத்தின் சூழல் தமிழ்ச் சமூக நிலமை என்பவற்றைப் பார்க்க வேண்டும் என்று சுகன் அடிக்கடி கூறி வருபவர்.வெறுமனே புலிகளை மட்டுமே குற்றவாளிகளாகக் காட்டும் இவ்வகைக் கதைகளையும் அவற்றின் பின் புலத்தையும், முக்கியமாக தமிழத் தேசிய உணர்வைத் தமிழ் நாட்டில் குலைக்கும் நோக்குடன் இவ்வாறான புலிக்காச்சல் எழுத்தாளர்களின் மொக்கைக் கதைகளை தீரா நதி போன்றவை வெளியிடுவதன் பின்னணி பற்றியும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.இவற்றின் பின்னால் இருக்கும் மறைமுக அரசியற் சதி அதன் பின்னாள் இருக்கும் புலனாய்வு அமைப்புப் பற்றியும் நாம் புரிந்து இருக்க வேண்டும்.

உச்சிதனை முகர்ந்தால், பாலை என தமிழ் உணர்வாளர்கள் தரும் படைப்புக்களின் தாக்கத்தை தமிழ் நாட்டில் குலைக்கும் வகையிலையே சோபாசக்தி, நட்ச்சரன் செவ்விந்தியன் போன்றோரின் மொக்கைகள் இவ்வாறான பதிரிகைகளில் வெளயிடப் பட்டு வருகின்றன.

நிழலி ஒரு மகாபாரதமே எழுத வேண்டிவரும் .பட்டியல் அந்த அளவு நீளம்.

தமிழ் உணர்விற்கும் புலிகள் செய்த கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்.

வரலாற்றில் அழிக்கமுடியாத கொலை ஒன்று தமிழ் நாட்டில் செய்யப்பட்டது. ஆயிரம் படமெடுத்தாலும் அது அழியாது .உதெல்லாம் செய்ய முதல் யோசிக்க வேண்டிய விடயங்கள் .

விளைவு -தான் வரலாற்றில் இருக்க இனத்தையே காலம் காலமாக அடிமையாக இருக்க வழிவைத்துவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

சாவச்சேரி போலிஸ் நிலையம்.......... . .தோல்வியில் முடிந்தாலும்

2 போராளிகளை ரெலோ இழந்தாலும் சாவச்சேரி போலிஸ் நிலைய தாக்குதல் ஒரு வெற்றிகரமான தாக்குதல்.

2 அல்லது 3 நாட்கள் வரை கைதடிக்குள் கூட இராணுவம் வராத படி மக்களை பாதுகாத்தார்கள்.மீறி வந்த இராணுவத்துக்கு கைதடிநுணாவிலில் வைத்து கண்ணி வெடி தாக்குதலும் நடாத்தினார்கள்.

நிழலி ஒரு மகாபாரதமே எழுத வேண்டிவரும் .பட்டியல் அந்த அளவு நீளம்.

தமிழ் உணர்விற்கும் புலிகள் செய்த கொலைகளுக்கும் என்ன சம்பந்தம்.

வரலாற்றில் அழிக்கமுடியாத கொலை ஒன்று தமிழ் நாட்டில் செய்யப்பட்டது. ஆயிரம் படமெடுத்தாலும் அது அழியாது .உதெல்லாம் செய்ய முதல் யோசிக்க வேண்டிய விடயங்கள் .

விளைவு -தான் வரலாற்றில் இருக்க இனத்தையே காலம் காலமாக அடிமையாக இருக்க வழிவைத்துவிட்டது

எல்லாக் கருத்தாடலிலும் புலிக காச்சலைக் கொட்டித் தீர்க்காதீர்கள்.புலிகள் மட்டும் கொலை செய்ய்யவில்லி நீங்களும் தான் செய்தீர்கள் என்பதை எப்போது தான் ஏற்பீர்கள்? தமிழ் நாட்டில் மட்டும் கொலை நடக்கவில்லை அங்கிருந்து வந்து ஆயிரம் ஆயிரம் பேர் ஈழத்திலும் கொலை செய்யப்படவரால் கொல்லப்பட்டனர்.

கொலை என்பதை எல்லொருமே செய்தனர் செய்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் தண்டிக்கப்பட்ட அநேகரின் குடும்பத்திற்கு அது ஒரு இழப்புத்தான்..! ஆனால் அவ்வாறு தண்டனைக்குள்ளானவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட புலி உறுப்பினரின் குடும்பமும் இழப்பைச் சந்தித்தவர்கள்தான்..! எங்கே நியாயம்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் தண்டிக்கப்பட்ட அநேகரின் குடும்பத்திற்கு அது ஒரு இழப்புத்தான்..! ஆனால் அவ்வாறு தண்டனைக்குள்ளானவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட புலி உறுப்பினரின் குடும்பமும் இழப்பைச் சந்தித்தவர்கள்தான்..! எங்கே நியாயம்? :rolleyes:

அதனை அர்ஜுன் போன்ற ஆட்கள் நினைக்கவே மாட்டார்கள். ஒரு பக்கமாக தான் யோசிப்பார்கள். அல்லது மற்றவர்களை நடிகர்கள் என்று கூறி தங்களின் நடிப்பை மறைக்கவோ தெரியாது.புலிகளை தவிர ஏனைய இயக்கங்களால் மக்கள் பட்ட துன்பங்கள் சொல்லில் சொல்ல முடியாது. இதனை என்னை போல பலர் கண்டும் அனுபவித்தும் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி - இங்கே நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்துவிட்டு இன்னுமொரு சரிநிகர் காரரிடம் இதைப்பற்றி கேட்டேன். இதற்கென கேட்கவில்லை. 2 நாட்களுக்கு முன்னர் ஒரு பார்ட்டியில் சந்தித்த போது கேட்டேன். அவர் 100 வீதம் உறுதியாகச் சொல்கிறார்.. நட்சத்திரனின் 3 வது வயதில் அவரது அம்மா அப்பா ஆகியோர் இறந்து போனதாக. அவரது பெயரை தனிமடலில் இட்டுள்ளேன்.

நிழலி - இங்கே நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்துவிட்டு இன்னுமொரு சரிநிகர் காரரிடம் இதைப்பற்றி கேட்டேன். இதற்கென கேட்கவில்லை. 2 நாட்களுக்கு முன்னர் ஒரு பார்ட்டியில் சந்தித்த போது கேட்டேன். அவர் 100 வீதம் உறுதியாகச் சொல்கிறார்.. நட்சத்திரனின் 3 வது வயதில் அவரது அம்மா அப்பா ஆகியோர் இறந்து போனதாக. அவரது பெயரை தனிமடலில் இட்டுள்ளேன்.

காவடி,

அவரது பெயர் நீங்கள் தனிமடலில் போட்ட பெயர் அல்ல

தன் தந்தையை புலிகள் தான் சுட்டதாக வேறு ஒருவரும் அல்ல, அவரே தான் கூறித் திரிந்தார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா.. தனிமடலில் போட்டது மற்றைய சரிநிகர்காரரது பெயர். ஓரளவுக்கு எல்லோருக்கும் அறிமுகமானவரும் கூட. உங்களது காலத்தில் சரிநிகரில் இல்லாவிட்டாலும் ஒரு பொதுஅறிவினில் அவரும் சரிநிகரில் இருந்தார் என்பதை அறிந்து வைத்திருப்பீர்கள்தானே.. மற்றயது இதையொரு பெரும் பிரச்சனையாக நான் அவரிடம் கேட்கவில்லை. ஒரு சந்திப்பில் அண்ணை இப்பிடி இப்பிடி சரிநிகர் காரர் ஒருவர் நட்சத்திரனது பெற்றோரை புலிகள் கொன்றதாக சொல்லியிருக்கிறார்.. நீங்களும் சரிநிகர்காரர்தானே.. என்ன நடந்தது என்றபோதே அவர் முற்றாக மறுத்தார். 3 வயதிலேயே பெற்றோர் இறந்ததாக சொன்னார். அதன்பிறகு வேறு யாரோ உறவினர் ஒருவரது பராமரிப்பில் வாழ்ந்தாராம். அந்த உறவினரைப் புலிகள் சுட்டார்களா என்றெனக்குத் தெரியவில்லை. நன்றி வணக்கம்

அதனை அர்ஜுன் போன்ற ஆட்கள் நினைக்கவே மாட்டார்கள். ஒரு பக்கமாக தான் யோசிப்பார்கள். அல்லது மற்றவர்களை நடிகர்கள் என்று கூறி தங்களின் நடிப்பை மறைக்கவோ தெரியாது.புலிகளை தவிர ஏனைய இயக்கங்களால் மக்கள் பட்ட துன்பங்கள் சொல்லில் சொல்ல முடியாது. இதனை என்னை போல பலர் கண்டும் அனுபவித்தும் உள்ளார்கள்.

நான் பல தடவை எழுதிவிட்டேன் ,மீண்டும் ஒருமுறை மறப்பவர்களுக்காக.

புளொட் போராடவே இல்லை ,அது உட்கட்சி போராட்டத்துடன் முக்கால்வாசி இல்லாமல் போய்விட்டது .அதன் அழிவிற்கு காரணமான அராஜகம் செய்தவர்களும்,எங்கேயும் போகமுடியாமல் போனவர்களும் தான் 88 களுக்கு பின் இருந்த புளொட்.இவர்களில் பலர் தமது சகஜ வாழ்க்கைக்கு திரும்பி போக விரும்பினாலும் அவர்களை தொடர்ந்தும் புலிகள் வேட்டையாடி திரிந்ததால் அவர்கள் அரசுடன் சேர்ந்து புலிகளை வேட்டைஆடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ,இது ஈ,பி ,டேலோவிற்கும் விற்கும் ஏற்பட்டது .இது எல்லாம் தமிழ் மக்களின் கண்களுக்கு தெரியவில்லை ஆனால் உலகம் திரும்ப திரும்ப உந்த கொலைகளை நிறுத்த சொல்லி அனைத்து தமிழ்தரப்பிற்கும் சொல்லி வந்தது .யாரும் கேட்டால்தானே .என்னிடம் அம்னெஸ்டி ரிப்போட்டே இருக்கு. புளொட் போன்றதொரு பிழையான ஒரு இயக்கத்தை வளர்துவிடுவதை விட அதை அழித்து சரியென நான் இன்றும் நம்புகின்றேன் .

சிங்களவன் தான் எமது எதிரி எனவே எம்மவர் செய்யும் பிழைகளை நியாயப்படுத்தியும், மூடி மறைத்தும் கண்டும் காணாது போல் இருந்ததால் தான் எதிரி எம்மை அழிக்கும் போது உலகம் கண்டும் காணாமல் இருந்தது.இப்பவும் உண்மையை மறைத்து ஆயுதபோராட்டத்தை மௌனித்தோம் என்று எம்மை நாமே ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றோம் அல்லாது தோல்வியை ஒப்புக்குகொண்டு அடுத்து என்ன செய்வது என சிந்தித்தால் நல்லது

.இவர்களில் பலர் தமது சகஜ வாழ்க்கைக்கு திரும்பி போக விரும்பினாலும் அவர்களை தொடர்ந்தும் புலிகள் வேட்டையாடி திரிந்ததால் அவர்கள் அரசுடன் சேர்ந்து புலிகளை வேட்டைஆடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ,இது ஈ,பி ,டேலோவிற்கும் விற்கும் ஏற்பட்டது .இது எல்லாம் தமிழ் மக்களின் கண்களுக்கு தெரியவில்லை ஆனால் உலகம் திரும்ப திரும்ப உந்த கொலைகளை நிறுத்த சொல்லி அனைத்து தமிழ்தரப்பிற்கும் சொல்லி வந்தது

உண்மையாகவே இது பல தடவை மிக கொடூரமாக நிகழ்ந்த சம்பவங்கள் தான். புளொட். ரெலோ, ஈபி ஆர் எல் எவ் போன்றவற்றில் இருந்து விலகி, வெளிநாடு (அரபு நாடுகளுக்கு) போய் பல வருடம் வேலை செய்து பிழைத்து விட்டு மீண்டும் ஊர் திரும்பி கலியாணம் கட்டி பிள்ளை பெத்தவர்களைக் கூட புலிகள் சமாதான காலத்தில் கொன்று இருந்தனர். வடக்கை விட கிழக்கில் இத்தகைய படுகொலைகள் சமாதான காலத்தில் கருணாவின் பிளவுக்கு முன்னர் மிக அதிகமாக நடந்தன.

பதிலடியாக, புலிகளின் உறுப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்களை கூட இத்தகைய இயக்கங்கள் தேடித் தேடி வேட்டையாடின

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் படித்த சகமாணவரின் தந்தை முன்னாள் டெலோ உறுப்பினர் பின்னர் தடை செய்யப்பட்ட பின்னர் திருமணம் முடித்து அமைதியாக வாழ்ந்து வந்தார் ஆனாலும் தங்கத்துரை குட்டிமணி நினைவுதினத்தில் வீதியோர சுவர்களில் அஞ்சலி வாசகங்கள் எழுதுவதுடன் நில்லாமல் மறைமுகமாக புலிகளை தாக்கி எழுதி வந்திருந்தார் மிகத்துணிச்சலாக,அது புலிகளுக்கும் தெரிந்திருந்தது.

இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் புலிகள் ஆயுத ஒப்படைப்பு செய்து நிராயுதபாணியாக இருந்த புலிகள் மீது கிழக்கில் இந்திய இராணுவத்துடன் இணைந்து புளட்டை சேர்ந்த சங்கிலி சுகவீனமுற்றிருந்த தனது வீட்டில்லிருந்த போராளியை அடித்துக்கொன்று அவரது மூளையை வீதியில் போட்டது என பிற இயக்கங்கள் ஆரம்பித்து வைத்த பழி வாங்கும் கலாச்சாரத்திற்கு புலிகள் உள்ளேயும் வெளியேயும் போராட வேண்டியிருந்தது.

பல திரைமறைவு செயற்பாட்டாளர்கள் என நினைத்து புலிகளுக்கு தெரியாது என செயற்பட்ட செயற்பட்ட புலிகளுக்கு எதிரான செயற்பட்ட செயற்பாட்டாளர் அந்த காலப்பகுதியில் கொல்லப்பட்டார்கள் அதில் ஒருவராக எனது சக மாணவரின் தந்தையும் கொல்லப்பட்டார்.

இதில் தவறு இரு தரப்பிலும் உள்ளது என்பது உண்மை ஆனால் தவற்களை ஏற்றுக்கொள்கிர மனப்பான்மையோ அல்லது திருத்திக்கொள்ள்கிற தன்மையோ இரு தரப்பிடமும் இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பல தடவை எழுதிவிட்டேன் ,மீண்டும் ஒருமுறை மறப்பவர்களுக்காக.

புளொட் போராடவே இல்லை ,அது உட்கட்சி போராட்டத்துடன் முக்கால்வாசி இல்லாமல் போய்விட்டது .அதன் அழிவிற்கு காரணமான அராஜகம் செய்தவர்களும்,எங்கேயும் போகமுடியாமல் போனவர்களும் தான் 88 களுக்கு பின் இருந்த புளொட்.இவர்களில் பலர் தமது சகஜ வாழ்க்கைக்கு திரும்பி போக விரும்பினாலும் அவர்களை தொடர்ந்தும் புலிகள் வேட்டையாடி திரிந்ததால் அவர்கள் அரசுடன் சேர்ந்து புலிகளை வேட்டைஆடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ,இது ஈ,பி ,டேலோவிற்கும் விற்கும் ஏற்பட்டது .இது எல்லாம் தமிழ் மக்களின் கண்களுக்கு தெரியவில்லை ஆனால் உலகம் திரும்ப திரும்ப உந்த கொலைகளை நிறுத்த சொல்லி அனைத்து தமிழ்தரப்பிற்கும் சொல்லி வந்தது .யாரும் கேட்டால்தானே .என்னிடம் அம்னெஸ்டி ரிப்போட்டே இருக்கு. புளொட் போன்றதொரு பிழையான ஒரு இயக்கத்தை வளர்துவிடுவதை விட அதை அழித்து சரியென நான் இன்றும் நம்புகின்றேன் .

சிங்களவன் தான் எமது எதிரி எனவே எம்மவர் செய்யும் பிழைகளை நியாயப்படுத்தியும், மூடி மறைத்தும் கண்டும் காணாது போல் இருந்ததால் தான் எதிரி எம்மை அழிக்கும் போது உலகம் கண்டும் காணாமல் இருந்தது.இப்பவும் உண்மையை மறைத்து ஆயுதபோராட்டத்தை மௌனித்தோம் என்று எம்மை நாமே ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றோம் அல்லாது தோல்வியை ஒப்புக்குகொண்டு அடுத்து என்ன செய்வது என சிந்தித்தால் நல்லது

நன்றிகள் அர்ஜுன். புலிகளையும் அவர்களுக்கு ஆதரவானவர்களையும் எல்லா இயக்கங்களும் போட்டு தள்ளினார்கள்.போதாக்குறைக்கு ஆமியிடம் முக மூடி அணிந்தும் காட்டிக்கொடுத்தார்கள். பொதுமக்களையும் பங்கர் வெட்டுதல், கட்டாய இராணுவசேவை என்று கொண்டு சென்றார்கள்.புலிகளுக்கு இராணுவத்துடன் போரிடுவது மட்டுமல்ல மக்களுடன் ஒட்டி இருந்து காட்டிக்கொடுப்போரால் மிகுந்த ஆபத்து இருந்தது.அவர்களுக்கு அழிப்பதை தவிர வேறு வழி இருக்கவில்லை.மக்கள் மிகுந்த ஆத்திரம் கொண்டிருந்தார்கள்.எமது சாப்பாட்டை வாங்கி தின்று விட்டு எங்களையே காட்டிக்கொடுக்கிறார்கள் என வயோதிபர் என் கண் முன்னே கத்தியதை கேட்டிருக்கிறேன்.மக்களுக்கு இவர்கள் (ஏனைய இயக்கங்கள் குறிப்பாக புளட்,ஈ.பி.டி.பி ,ரெலோ)அழிவதையே விரும்பினார்கள்.நீங்கள் அந்நேரம் வெளிநாட்டில் இருந்த போது நான் அங்கு இருந்ததால் அனைத்தும் கண் முன்னே நடந்தவை.

எனது பல நண்பர்கள் விடுதலைக்காக பல இயக்கங்களில் இணைந்ததும் பின்னர் அவர்கள் பிழையாக வழி நடாத்தப்பட்டதும் சிலர் புலிகளால் கொல்லப்பட பலர் வெளிநாடுகளிலும் கொழும்பிலும் வசிக்கிறார்கள்.இயக்க தலைமைகளை தான் இன்றும் நொந்து கொள்வார்கள்.

  • 2 years later...

கதை சரியான மொக்கை,கதையின் ஆரம்பத்தில் கதையை தொடர்ந்து வாசித்து செல்ல முடியாத மாதிரியான தொய்வு பின் பகுதி பரவாயில்லை, அதுவும் புலி,டெலோ தாஸ் என உண்மையான நபர்களை குறிப்பிடுவதால் ஏற்படும் ஒரு புதினம் கேட்கும் ஆவலே அதற்கு காரணம் அதை விடுத்து 3 சண்டியர்களுக்கிடையே நடக்கும் கதையாக நினைத்து பார்த்தால் புரியும் ஏன் இந்த கதை சரியான மொக்கை என்று.

நாகேசின் கதையை வாசிக்கும் வரை கதையுடன் ஒன்றுவதற்கு காலனிலை, நேரம்,பிரதெசம்,அமைவிடம் போன்ற இன்னோரன்ன காரணிகளை கதாசிரியர் படிப்பவர்களின் மனக்கண் முன் கொண்டு வரவேண்டும் என்று நினைத்திருந்தேன்

சில வேளையில் இந்த மாதிரியான வர்ணனைகள் வாசகனை சோர்வடையச்செய்துவிடும்.

vasee ...நம்ம பெயரும் இந்த கதை பின்னூட்டத்தில் அடிபடுதே  என்று பார்த்தால் ..நாகேசின் (எனது)கதைகளை பற்றி என்ன சொல்ல வாறீங்கள் என்று திரும்ப  திரும்ப வாசித்தாலும்  கொன்பியூஸாக இருக்கு

 

ஒரு பக்கம் பார்க்கும் பொழுது நல்ல மாதிரி சொல்லுற மாதிரி இருக்கு . மறுபுறம் பார்க்கும் பொழுது  இல்லாத மாதிரி இருக்கு ..

 

. என்னை ஒரு தரும் எங்கை போனாலும் எழுத்தாளன் என்ற வட்டத்திலை சேர்க்க மாட்டன் என்கிறாங்கள் ...நீங்கள் ஏதோ சொல்லுற மாதிரி கிடக்கு  அது தான் திரும்ப கேட்டேன் ...

Edited by நாகேஷ்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நட்சத்திரன் செவ்விந்தியன் ஒரு காலத்தில் என் நல்ல தோழன். அவர் அப்பாவை புலிகள் தான் போட்டுத் தள்ளியது. பிற்காலத்தில் அவரின் சில செயற்பாடுகளால் அவருடனான தோழமையை தொடர முடியாது போயிட்டு. எப்போவாவது ஒருநாள் என்ற கவிதை தொகுப்பை 1997 இல் வெளியிட்டு இருந்தார்

 

 

இவரது மூத்த சகோதரனை எனக்குத் தெரியும். கொழும்பில் என்னுடன் படித்தவர். தற்போது சிட்னியில் வாழ்ந்து வருகிறார். மிகவும் அமைதியானவர், பண்பானவர்.

 

நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதைகளைக் கொழும்பிலிருந்தபோது சரிநிகர்ப் பத்திரிக்கையில் படித்திருக்கிறேன். மற்றைய கவிதைகளிடமிருந்து வேறுபட்டு மிக அழகாக எழுதப்பட்டிருந்ததால், சரிநிகர்ப் பத்திரிக்கை வாங்கியதும் இவரது கவிதையைத் தேடிப் படிப்பேன். பின்னர் சிறிது காலத்தில் இவர்பற்றிய செய்திகள் எதுவுமே நான் கேள்விப்பட்டதில்லை.

 

மிக அண்மையில் எனது நெருங்கிய நண்பர் ஒருவர் மூலம் நட்சத்திரன் செவ்விந்தியன் தற்போது சிட்னியில் வசிப்பதாகவும், அவரது போக்கு இப்போது முற்றாக மாறிவிட்டதாகவும் சொல்லக் கேள்விப்பட்டேன். தனது கவிதைகள் மூலம் பெரிய வாசகர் மற்றும் கவிஞர் வட்டத்தைச் சம்பாதித்துக்கொண்ட இவர், புலிகள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மற்றும் புலத்தில் இருக்கும் தாயகம் தொடர்பான அமைப்புகளைக் கடுமையாக தூஷண வார்த்தைகளால் வசைபாடி வருவதைக் கண்டுகொண்டேன். மாற்றுக்கருத்தாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் பல புலம்பெயர் தமிழ்க் கவிஞர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவருகிறார் இப்போது.

 

ஒருமுறை, நூல் வெளியீட்டு விழா ஒன்றிற்கு பேச அழைக்கப்பட்ட இவர், அந்த நூலை வெளியிட்ட வயதான கவிஞரை அவர் மேடையில் இருந்தபோதும்கூட, மிகவும் கீழ்த்தரமாக பேசியதாகவும், இதனால் சபையிலிருந்தோர் மிகவும் சங்கடப்பட்டதாகவும் கேள்விப்பட்டேன்.

 

பலரை மிகவும் கீழ்த்தரமாக விழித்து, தூஷண வார்த்தைகளால் அபிஷேகம் செய்து தனது முக நூலில் எழுதிவருகிறார். 

 

இவரின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று என்னால் இதுவரை அறிந்துகொள்ள முடியவில்லை. இப்போதுதான் எல்லாம் புரிகிறது.

 

இவரது தகப்பனார் எப்போது எதற்காகக் கொல்லப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?? 

  • கருத்துக்கள உறவுகள்

காவடி,

அவரது பெயர் நீங்கள் தனிமடலில் போட்ட பெயர் அல்ல

தன் தந்தையை புலிகள் தான் சுட்டதாக வேறு ஒருவரும் அல்ல, அவரே தான் கூறித் திரிந்தார்

 

 

நிழலி,

 

நீங்கள் கூறுவதுபோல அவரின் தகப்பனாரைப் புலிகள்தான் கொன்றார்களென்றால் அது நிச்சயமாக 1992 இற்குப்பின்னர்தான் நடந்திருக்க வேண்டும். ஏனென்றால், அதுவரை அவர் எழுதிவந்த கவிதைகளைப் படித்தவன் என்கிற ரீதியில், அவரது கவிதைகள் புலிகளை மறைமுகமாக ஆதரித்து வந்ததை நான் பார்த்திருக்கிறேன். அதனால்த்தான் தற்போதைய அவரது போக்குப் பற்றி நண்பன் ஒருவன் பிரஸ்த்தாபித்த போது முதலில் என்னால் நம்பமுடியவில்லை. 

 

அவர் தனது தகப்பனார் எபோது கொல்லப்பட்டார் என்றாவது சொன்னாரா??

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் சொல்வது நியாயமான கருத்து. ந.செ. தகப்பனை இழந்திருக்கிறார் பெற்றோரில்லாமல் கஷ்டப் பட்டிருக்கிறார். என்ன காரணத்திற்காக இது நடந்திருந்தாலும் நாம் இவரிடம் போய் "இதை விட்டு விடு" என்று நியாயம் பிளக்க முடியாது. அமைதியாகக் கடந்து போவதே நல்லது.

 

நீங்கள் சொல்வது சரிதான். தகப்பனை இழந்திருப்பவரிடம் போய், அது சரி, இது பிழை என்று வாதாட முடியாது. அவரின் தகப்பனார் புலிகளைப் பொறுத்தவரை துரோகியாக இருந்தாலும் கூட, செவ்விந்தியனுக்குத் தகப்பந்தான். ஆகவே அவரது இழப்பு இவரைப் பாதித்திருக்கிறது. அவரிடமிருந்து நடுவுநிலமையான, புலிகளுக்கு ஆதரவான ஆக்கங்களை எதிர்பார்க்கமுடியாது. ஆனால், பிரச்சினை என்னவென்றால், இந்த புலியெதிர்ப்பு வாதத்தால் இவர் அடைந்திருக்கும் தொடர்புகளும் அதன் தாக்கங்களும்தான். தனது கவிதைகளை வைத்தே பலரின் நிலைப்பாடுகளை இவர் மாற்ற முனைந்தால், அது நல்லதல்லவே. 

 

இவரைப்போலவே, புலிகளியக்கத்தால் பாதிக்கப்பட்ட இன்னொருவரை எனக்குத் தெரியும். ஆனால் அவர் ஒரு கவிஞரோ எழுத்தாளரோ கிடையாது. அவரது தம்பி புலிகளியக்கத்தில் இடை நிலை அதிகாரியாக இருந்தவர். இயக்கத்தில் நடந்த சம்பவம் ஒன்றினால் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றின்மூலம் கைதுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். சிறிது காலத்தின் பின்னர் அவர் மரணமடைந்து விட்டார். உடலை பெற்றோரிடம் கொடுத்தபோது, நோயுற்று இறந்ததாகவே புலிகள் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். இதை அவரது பெற்றோரோ, இவரோ ஏற்றுக்கொள்ளவில்லை.

 

தனது தம்பி இயக்கத்தில் இருந்தவரை புலிகளை ஆகா ஓகோ என்று பாராட்டிய இவர், தம்பியின் மரணத்தின் பிறகு முழுவதுமாகா மாறிவிட்டிருந்தார். பலர் கலந்துகொண்ட வீட்டு நிக்ழவுகளில் மிகவும் கீழ்த்தரமாக புலிகளைச் சாடியதுடன், புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர்களுடன் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். ஒருமுறை என்னுடன் இதுபற்றிப் பேசியபோது, "உங்கள் தம்பியை ஏன் வீட்டுக் காவலில் வைத்தார்கள் என்று நான் கேட்க, அவரால் பதில் சொல்லமுடியவில்லை. மாறாக, "அவனைக் கொண்டுபோட்டாங்கள், பிறகு விபத்து அது இதெண்டு சடையிறாங்கள்.........." என்று பொறிந்து தள்ளினார். ஆகவே, உறவுகளை புலிகளால் இழந்தவர்களோடு நியாயம் பேச முடியாது. அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு அமைதியாகப் போவதுதான் சரி.

  • 1 year later...
நட்சத்திரன் செவ்விந்தியன் என்கிற பெயரில் எழுதும் அருநோதயனின் பெற்றோரை புலிகள் கொல்லவில்லை. 
அருனோதயன் சிறுவனாயிருக்கும் போதே அவர்கள் நோய் காரணமாக இயற்கை எய்தி விட்டார்கள். தனது 
பெற்றோரை புலிகள் கொன்றதாக தான் ஒருவரிடமும் சொல்லவில்லை என்று என்னிடம் நேரடியாக அருனோதயன் 
சொன்னவர். அருணொதயனுக்கு புலிகளை பிடிக்காததுக்கு காரணம் இவர் பெண்களை கிண்டல் அடித்து புலிகளிடம் 
செமையாக பச்சை மட்டையடி வாங்கிய ஒருவர். நெல்லியடி புலி பொறுப்பாளர் மரியநேசனிடமும் (சுக்குலா) இவர் 
ஒரு முறை அடி வாங்கினவர். அதுக்கு பழி தீர்க்க இப்படி ஒரு மொக்கை கற்பனை கதையை எழுதி இருக்கிறார். 
சுக்குலா மிகவும் கம்பீரமான தோற்றம் கொண்ட தளபதி. சுக்குளாவிடம் தான் பலர் அடி வாங்கி இருக்கிறார்களே தவிர 
எவரிடமும் அடி வாங்கும் நிலையில் சுக்குளா ஒரு போதும் இருந்ததில்லை. அருனோதயன் சுக்குளவிடம்  முன்பு வாங்கிய 
அடியை இப்படி ஒரு மொக்கை கதையை எழுதி பழி தீர்த்து இருப்பது மிகவும் கீழ் தரமான இழிவான செயல். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.