Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிய நாற்றுக்கள்.

Featured Replies

புதிய நாற்றுக்கள்.

நல்ல வளமான நெல் வயல். பச்சைப் பசேலெனப் பயிர்கள் ஆடி அசைந்து அழகு காட்டிக்கொண்டிருந்தன. அவற்றக்கு நடுவே, இடைக்கிடை, அங்கொன்றும் இங்கோன்றுமாய்க் காணப்பட்ட நெற்சப்பி களையும் கோரைப் புற்களையும், இனங் கண்டு. பிடிங்கி, வரம்பில் போட்டுக் கொண்டிருந்தார் வயலின் சொந்தக்காரர்.

வரம்பில் கிடந்த நெற்சப்பியையும் கோரைப் புற்களையும் ஷஷஉனக்கேன் இந்த வேலை|| எனச் சூரியன் தன் கதிர்களால் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தான். வரம்பால் நடப்பவர்களும் அவற்றை ஏறி மிதித்தக் கொண்டு சென்றார்கள்.

`எங்களுக்குள்ளேயே எங்களுக்குத் தெரியாமல் ஓட்டி உறவாடி, உறிஞ்சி உடல் வளர்த்தார்கள்;. இனம் கண்டு கொண்டதால் இப்போ வரம்பிலே கிடந்து தண்ணியும் இல்லாமல் சாப்பாடும் இல்லாமல் வாடி வதங்குகிறார்கள். விவசாயி கண்டு பிடிக்காவிட்டால்;;... எங்கள் பாடும் பெரும் கஸ்டமாக இருந்திருக்கும்...` எனப் பயிர்கள் மென்மையாகச் தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டன.

இப்போது, எந்த இடையூறும் இல்லாமல், நெற்பயிர்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, செழித்து, கதிர் வைத்து முற்றி விளையத் தொடங்கின. அதன் விளைச்சலைப் பார்த்து பக்கத்து வயல்காரர்கள் சிலர் பொறாமைப்பட்டார்கள். பலர் ஆச்சரியப் பட்டார்கள். இந்நிலையில், முற்றிய நெற்கதிர்கள். தம்மை வளர்த்தெடுத்த நிலத்தை நன்றியுடன், வளைந்து குனிந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தன.

திருமணப் பருவம் வந்த பெண்கள், தான் வாழ்ந்த வீட்டை விட்டு, கணவருடன் வெளியேறுவதுபோல், முற்றிய பயிர்களை விவசாயி மகிழ்ச்சியாக அறுவடை செய்து தன் களஞ்சியத்துக்கு கொண்டு சென்று மகிழ்ச்சியாகக் களஞ்சியப் படுத்தினான்..

அடுத்த பருவம் தொடங்கியது. களஞ்சியத்தில் இருந்த நெல் விதைக்கப்பட்டு பயிர்கள் வளர்ந்த போது, எதிர்பாரத விதமாக விவசாயி நோய் வாய்ப்பட்டார். அதனால் வயலைக் கண்காணிக்கும் பொறுப்பை அவரது நண்பரிடம் ஒப்படைத்து, தான் ஓய்வெடுத்துக் கொண்டார்.

விவசாயின் நண்பர் அடிக்கடி வயல் பக்கம் சென்று சுற்றிப் பார்ப்பார். விவசாயிடம் செல்லும்போது, `இந்த முறையும் நல்ல வெள்ளாமை, பயிர்கள் முன்னையதைவிட செழிப்பாக வளர்கின்றன` என்றும் கூறிவந்தார்.

விவசாயிக்கு வயல்பக்கம்போய் பயிரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை மேலிட்டது, ஒருநாள் உடம்பைத் துப்பட்டியால் போர்த்துக்கொண்டு, வயல்பக்கம் சென்றார். வரம்பில் நின்று பயிரைப் பார்த்தபோது அவருக்கு இனம் புரியாத பயமும் சந்தேகமும் ஏற்பட்டது. அதனால் வயலுக்குள் இறங்கிக் பார்த்தார். அவரால் நம்ப முடியவில்லை. வயல் முழுவதும் நெற்சப்பியின் ஆதிக்கத்தில் இருந்ததுடன் கோரைகள் குடைவிரித்து, அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தன. இவற்றின் இடையே பேசமுடீயாத மடந்தைகளாய் நெற்பயிர்கள் வாடி வதங்கி, ஒதுங்கி, ஓரமாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்றன. விவசாயியினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. புல்லுக்கும் நெல்லுக்கும் வித்தியாசம் தெரியாத நண்பனை எண்ணிக் கவலை கொண்டார். அத்துடன் `போட்ட பணமெல்லாம் வீணாப் போச்சு. போட்ட பசளைகளை முற்றாக, இந்தப் புல்லுருவிகள் உறிஞ்சி உள்ளாசமாக வாழ்கின்றனவே... நெற்பயிர் ஆரோக்கியமாக வளர முடியாமல் நெரிபட்டுத் தவிக்குதே, என்ன செய்யலாம்..`| என்று யோசித்தார். `முன்னர் நெற்சப்பிகளையும் கோரைகளையும் இனங்கண்டு பிடுங்கியதுபோல், இப்போது இவற்றைப் பிடுங்க முடியாது, இவை பலம் பெற்று, பரந்துவிட்டன. அதனால் இவற்றக்கு இடையே நெரிபட்டு வாழும் நெற்பயிரை மட்டும் இனம் கண்டு. பிடுங்கி, வேறொரு இடத்தில் நாற்றாக நடுவதுதான் சிறப்பான வழி` எனச் சிந்தித்து. நெற்பயிர்களை பிடுங்கி, மீண்டும் ஒரு நல்ல வேளாமைக்கு புதிய நாற்றுகளைத் தயாராக்கிக் கொண்டிருந்தார்.

< விவசாயிக்கு வயல்பக்கம்போய் பயிரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை மேலிட்டது, ஒருநாள் உடம்பைத் துப்பட்டியால் போர்த்துக்கொண்டு, வயல்பக்கம் சென்றார். வரம்பில் நின்று பயிரைப் பார்த்தபோது அவருக்கு இனம் புரியாத பயமும் சந்தேகமும் ஏற்பட்டது. அதனால் வயலுக்குள் இறங்கிக் பார்த்தார். அவரால் நம்ப முடியவில்லை. வயல் முழுவதும் நெற்சப்பியின் ஆதிக்கத்தில் இருந்ததுடன் கோரைகள் குடைவிரித்து, அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தன. இவற்றின் இடையே பேசமுடீயாத மடந்தைகளாய் நெற்பயிர்கள் வாடி வதங்கி, ஒதுங்கி, ஓரமாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்றன. விவசாயியினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. புல்லுக்கும் நெல்லுக்கும் வித்தியாசம் தெரியாத நண்பனை எண்ணிக் கவலை கொண்டார். அத்துடன் `போட்ட பணமெல்லாம் வீணாப் போச்சு. போட்ட பசளைகளை முற்றாக, இந்தப் புல்லுருவிகள் உறிஞ்சி உள்ளாசமாக வாழ்கின்றனவே... நெற்பயிர் ஆரோக்கியமாக வளர முடியாமல் நெரிபட்டுத் தவிக்குதே, என்ன செய்யலாம்..`| என்று யோசித்தார். `முன்னர் நெற்சப்பிகளையும் கோரைகளையும் இனங்கண்டு பிடுங்கியதுபோல், இப்போது இவற்றைப் பிடுங்க முடியாது, இவை பலம் பெற்று, பரந்துவிட்டன. அதனால் இவற்றக்கு இடையே நெரிபட்டு வாழும் நெற்பயிரை மட்டும் இனம் கண்டு. பிடுங்கி, வேறொரு இடத்தில் நாற்றாக நடுவதுதான் சிறப்பான வழி` எனச் சிந்தித்து. நெற்பயிர்களை பிடுங்கி, மீண்டும் ஒரு நல்ல வேளாமைக்கு புதிய நாற்றுகளைத் தயாராக்கிக் கொண்டிருந்தார். >

யதார்த்தத்தை சித்தரிக்கும் அருமையான உருவகக் கதை எனக்குப் பிடித்த பகுதியே இது தான் மேலும் தொடருங்கள் செம்பகன் :):):) 1 .

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய எமது வாழ்வில் நமக்குத் தேவையான படிப்பினை.

நன்றி செம்பகன்

மிக நன்றாகவே புரிகின்றது செம்பகன்!

நடந்த,நடக்கின்ற, நடக்கப்போகின்ற விடயங்களை மறைமுகமாக...

அதேநேரம் தெளிவாகவும் சொல்லியிருக்கின்றீர்கள்!

பாராட்டுக்கள்... நன்றி...! :)3

  • கருத்துக்கள உறவுகள்

செண்பகன், மிகவும் அழகிய ஒரு உவமானக் கதை!

களை எடுப்பதுவே, தமிழனின் பாரம்பரியத் தொழிலாகி விட்டது!

நெல் எது, புல் எது எனப் பிரித்தறிய முடியாத அளவிற்குக் களைகள்!

தொடருங்கள், உங்கள் படைப்புக்களை!>>>>

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருவை மையமாக வைத்து கதையை எழுதியுள்ளீர்கள்...பாராட்டுக்கள் செம்பகண்...எனது பச்சையை ஏற்கனவே குத்தி விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

களை எடுப்பதிலயே எங்கள் வாழ்க்கை ஓடுது....நன்றிகள் படைப்புக்கு

நல்ல கதை செம்பகன்.

எனக்கென்னவோ, பாவம் விவசாயி, வயதான காரணத்தாலோ அல்லது கண் சரியாகத் தெரியவில்லையோ, சில நல்ல நாற்றுக்களை மிதித்து விட்டது போலவும், நாற்றுக்களுடன் சில சப்பிகளையும் சேர்த்து வைத்து விட்டது போலவும் தோன்றுகிறது.

`எங்களுக்குள்ளேயே எங்களுக்குத் தெரியாமல் ஓட்டி உறவாடி, உறிஞ்சி உடல் வளர்த்தார்கள்;. இனம் கண்டு கொண்டதால் இப்போ வரம்பிலே கிடந்து தண்ணியும் இல்லாமல் சாப்பாடும் இல்லாமல் வாடி வதங்குகிறார்கள். விவசாயி கண்டு பிடிக்காவிட்டால்;;... எங்கள் பாடும் பெரும் கஸ்டமாக இருந்திருக்கும்...` எனப் பயிர்கள் மென்மையாகச் தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டன.

நல்ல கருத்துள்ள கதை. அத்தோடு படிப்பினையை ஊட்டும் கதை. புல்லுருவிகளை களை எடுப்பதின் அவசியத்தை வலியுறுத்திய பாங்கு அருமை.

மொத்தத்தில் நிகழ் காலத்தை விளக்கி நிற்கிறது. நன்றிகள் தங்கள் கதைக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

அழகான உருவகக் கதை ..........உங்கள் பதிவுகள் மேலும் வரவேண்டும் பராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கதை.அருமை

கதையை வாசிக்கும்போது சொல்லாத சேதிகள் மனஇடுக்குகளில் தட்டுப்படத்தான் செய்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தைக் காட்டும் உவமானம் கதையில் உள்ளது..பாராட்டுக்கள் செம்பகன்...

  • தொடங்கியவர்

வயல்பக்கம் வந்து புதிய நாற்றுக்களைப் பார்வையிட்டு அபிப்பிராயம் எழுதிய கோமகன், வாத்தியார், கவிதை, புங்கையூரான், ரதி, புத்தன், இயஸ், கல்கி, நிலாமதி ஆகியோர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் வருங்காலச் சந்ததியினருக்கு நெல் எது? புல் எது? என வித்தியாசம் தெரியாது. புல்லை நெல்லெனச் சொல்லி அதற்கு ஆமா... ஆமா எனப் போடும் கூட்டத்திற்குள் அவர்களை விடாதீர்கள். நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.