Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் போர்க்குற்ற வீடியோவை பார்த்து வடிந்த கண்ணீர் இன்னும் நிற்கவில்லை: கருணாநிதி

Featured Replies

சென்னை: ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை ஆதரிப்பதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2009ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற உச்சக்கட்டப் போரின்போது மனித உரிமைகளை மீறும் வகையில் ராஜபக்சே தலைமையிலான இலங்கை ராணுவம் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி விசாரித்து இலங்கை அரசின் மீது உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொடர்ந்து பல்வேறு நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.

திமுகவைப் பொறுத்த வரையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து 27.4.2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழக உயர்நிலை செயல் திட்டக் குழுவின் கூட்டத்திலேயே முதல் தீர்மானமாக, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞர் தலைமையிலான விசாரணைக் குழு, இலங்கைப் படையினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது.

ஏப்ரல் 25ம் நாளன்று வெளியிடப்பட்ட இந்த விசாரணைக்குழுவின் அறிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை இலங்கை அரசின் ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும், போர்க் கைதிகளை இலங்கை ராணுவம் கொடூரமாகக் கொன்று விட்டதாகவும், வீராங்கனைகள் பலாத்காரம் செய்யப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் பட வேண்டுமென்றும், அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தையே சுட்டிக்காட்டி, 1.3.2012 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில்

திமுகவின் நிலைப்பாட்டினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவுபடுத்தி ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்திடக் கூடாது என்று வலியுறுத்தினேன்.

அதன் தொடர்ச்சியாக 2.3.2012 அன்று நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து கழகத்தின் நிலைப்பாட்டினையும், உலகளாவிய தமிழ் மக்களின் உணர்வுகளையும் எடுத்துரைத்தார்.

இன்னும் சொல்ல வேண்டுமேயானால் 2009ம் ஆண்டு இலங்கையில் இந்தக் கோரச் சம்பவங்கள் நடைபெற்ற போதே 23.1.2009 அன்று ஆட்சியில் இருந்த திமுக பேரவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, கேட்டுக் கேட்டு பயன் விளையாமல் போனதால்-இறுதி வேண்டுகோளாக முறையிடுகிறோம், உடனடியாக இலங்கையில் போர் நிறுத்தம் செய்து, அந்தப் புத்தர் உலவிய பூமியில் அமைதிப்பூ மலர்ந்திட ஆவன செய்திடுக! என்று மத்திய அரசுக்கு உணர்வு பூர்வமாக வேண்டுகோள் விடுத்தோம்.

இந்தப் பிரச்சினை குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒருமித்த நிலைப்பாட்டினையே மேற்கொண்டு தெரிவித்திருக்கின்றன. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய ஐ.நா. தீர்மானம் தொடர்பாக தமிழக மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 8.3.2012 அன்று சென்னையில் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் இறுதிப் போரின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் தொகுப்பு ஒன்றை நான் பார்க்க நேரிட்டபோது என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை. மத்திய அரசில் இருப்போர் அந்தக் காட்சிகளை ஒருமுறை பார்த்தாலே தமிழக மக்கள் சார்பில் வைக்கப்படுகின்ற இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.

அமெரிக்க நாட்டின் சார்பில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தில் முக்கியமாக சட்டத்துக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் படுகொலைகள் மற்றும் ஏராளமானோர் காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டது குறித்து இலங்கை அரசு அமைத்த குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அந்தக் குழு எடுத்துரைத்துள்ள திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கு உரிய ஆலோசனைகளையும், தொழில் நுட்ப உதவிகளையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வழங்க வேண்டும். அதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமையானதும் கடுமையானதுமான போர்க் குற்றங்கள் அனைத்தையும் இந்திய அரசு நினைவிலே கொண்டு, இனியும் காலம் தாழ்த்தாது, இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொடுத்துள்ள தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கப் போவதாக அறிவித்திட வேண்டுமென்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பழைய வேதாளம் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறுகின்றது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா வருது வாயில ^_^

எனக்கும் தான் :o

சும்மா சொல்லப்படாது..அவன் ஒரு நல்ல கதாசிரியனல்லோ ! :lol:

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா வருது வாயில ^_^

இத்தனை கோடி தமிழர்கள் திட்டியே அந்தாள் மாறல....

இனி என்னத்தை திட்டி?

என்னத்த அசைத்து..?????????

:(

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ..... என்னமாதிரி நடிக்கிறாரு இந்த மகா நடிகரு ..... :o

இந்த மனிசனுக்கு சாவும் வருகுதும் இல்லை அதுக்கு முதல்ல நான் செத்திடுவேன் போல் இருக்கே :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ ஜயோ இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல..............பூச்சி மருந்து அடிச்சு இந்த கொசுவை கொன்று விட நான் உத்தரவு விடுகிறேன்,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெட்கம் கெட்டவருக்கு தமிழர் பற்றி கருத்து சொல்ல என்ன அருகதை உள்ளது??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டென்சன் ஆக வேண்டாம்.  அவர் தனது தொலைக்காட்சியில் சீரியல் பார்த்து கண்கலங்கி இருப்பார். 

இவருடைய அடி ஆக்களே கண்டம் துண்டமா அப்பாவிகளை வெட்டி எறிவார்கள்.

இவருடைய பேரனும், ஒரு மகனும் சேர்ந்து உயிருடன் மூன்று அப்பாவிகளை எரித்தார்கள். 

இவனாவது....எங்களுக்காக அழுறது ஆவது! 

இந்த பரதேசி பேச்சை கேட்டு எனக்கு சிரிப்பு இன்னும் நிக்கவில்லை.

என் கண்களில் வழிந்த கண்ணீர் இன்றும் நின்றபாடில்லை - கருணாநிதி

# அணை கட்டி கரென்ட் எடுக்க முடியுமா எண்டு பாருங்க

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே தானே புயலில் எங்கட ஊர் ஏரி குளம் குட்டை எல்லாம் ரொம்பிவிட்டத்து.. இவரு விடும் நிற்காத கண்ணீரால் ஏரி குளம் ஆகியவை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எங்கட ஊரில் உள்ள பெருசுகள் தெரிவிக்கிறார்கள் .. நல்ல தண்ணீர் என்றாலும் பரவாயில்லை உப்பு தண்ணீரை அவிழுத்து விட்டு மக்களின் விவாசயத்தை குடிநீரை பாழாக்கும் கருநா வின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெ அரசுகளை கேட்டு கொள்கிறேன்..

டிஸ்கி:

அமெரிக்காவில் இருந்து பிரபல கண் ரொக்டர் டேவிட் கோல்சனை அரசு பணத்தில் வரவழைத்து கண்ணுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுகோள் விடுக்கிறேன்...

ரொய்லற் ரிசு இருக்கு. அதனால் துடைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் ஒரு கண்ணா? ரொய்லற் ரிசு பாவிக்கிற இடந்தானது.

  • கருத்துக்கள உறவுகள்

2009 இல் மட்டும் இவனுக்கு கண் இருக்கவில்லையா??? இப்பவாச்சும் ஏதாவது செய்கிறானா?? 40 எம்.பீ களை இந்தா வாபஸ் வாங்குகிறேன் என்றெல்லாம் அன்று அறிக்கை விட்டனே, இன்றாவது அதைச் செய்வானா பார்க்கலாம்??? மூதேவி, செத்துத் தொலையேன் !!!!!!!

நிதி முன்னால் வந்தால் கருணை பின்னால் வரும் தானைத்தலைவன் கண்ணீர் விடத்தொடங்கமுன் பேசிய வார்த்தை

"இலங்கையில் உள்ள உடன் பிறப்புக்களே! நீங்கள் ஏன் அழவேண்டும்; அழவேண்டியவன் நான் அல்லவா; ஐயோ என் பிள்ளைகளின் தேர்தல் போச்சே"

பாருங்க அய்யா நம்மள எல்லாம் மயிர் புடுங்கினு நினைச்சுட்டான் போல, தெரியுமா

வேணாம் நாலுபேருக்கு நடுவில கெட்ட வார்த்தையில திட்டுறது இல்லன்னு இருக்கேன்

மட்டிப்பய திட்ட வசுருவன் போல :mellow: :mellow: :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஈழத்தமிழர்களுக்காக செய்த தியாகத்தினை குறிப்பாக உண்ணாவிரதம் இருந்து ஈழத்தில் உயிர்களைக் காப்பாற்றியதை நாங்கள் சாகும்வரை மறக்கமாட்டோம்.

புலிகளை பிடிக்கல என்ற ஒரே காரணத்துக்காக ,,

அழிந்துபோனது, தன்னோட இனத்தின் வாழ்வு, எதிர்காலம் தனது ,சொந்தங்கள் என்று தெரிந்தும்...

இன்றுவரை சிங்களவனால் எமக்கு ஏற்படுத்தப்பட்ட, பேரழிவுகளை & கொல்லப்பட்டவர்கள் வாழ்க்கை இழந்தவர்கள் துயரை நியாயப்படுத்தும் சிலர் , எங்க வீட்டுக்குள்ளயே இருக்கயில்......

எமது தேச சுடுகாடுகளை தவிர வேற எந்த வளைச்சியையும் சிங்களவன் எமக்கு தராத நிலையிலும்,,,

இன்றும் அவனது பெளத்த விகாரைகள் தாக்குதலுக்குள்ளானதை பத்தியே கவலை படும் ,, ரொம்ப பெரிய அரசியல் ஞானிகள் எமது இனத்துக்குள்ளயே இருக்கயில்......

கருணாநிதி எங்க கஷ்டத்தை உணரவில்லை என்று நாங்கள் எதிர்பார்ப்பது கோவப்படுவது அதி முக்கியமானதில்ல! இத்தனைக்கும் அவன் கடல்கடந்த வேறுநாடு! வேற்று நாட்டு அரசியல்வாதி!

உதவி செய்திருந்தால் நல்ல இருந்திருக்கும் என்பது ,,உண்மைதான்! ஆனால் உதவவில்லை என்று கோபப்பட ஒன்றுமில்லை!

,, பாதிக்கப்பட்ட நாங்களே இன்னும் எமக்காய் 100% கண்ணீர்வடிக்கவில்லை என்பது ஜெனிவாவுக்கு கூட்டமைப்பு போகாமல் விட்டதே சாட்சி!,

அடுத்தவன்மேல் கோபப்படுவதற்குமுன்,, நாம் அதற்கு தகுதியானவர்கள் இல்லைஎன்பதே,,,விழுங்கியே ஆகவேண்டிய கசப்பான யதார்த்த மாத்திரை! :)

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கண்ணீரையாவது, மிச்சம் வைத்திருங்கள், தலைவா!

அடுத்த வீடியோவும் வருகின்றது! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.