சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
நானூற்றுச் சொச்சப்பேர் இருக்கிற இந்த வரிசையில எங்கட ஆள் இருநூற்று எழுபத்தேழாவது ஆளாக இருக்கிறார். ஒவ்வொருத்தரின்ர கையிலயும் விடுதலைப் பத்திரத்தை ஆமிக்காரர் குடுத்துக்கொண்டு வருகினம். பத்திரம் கையில கிடைச்ச ஆக்களின்ர முகத்தைப் பார்க்க மாட்டியள். அவ்வளவு பூரிப்பு. அடுத்தடுத்த நிமிசத்தில பத்திரம் தங்களின் கையிலயும் கிடைத்துவிடும் என்று தெரிந்தும், இன்னும் பத்திரம் கிடைக்காதவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில ஏதும் பிசகுவந்து தங்களை மறிச்சுப் போடுகினமோ என்று அவையள் பயப்படுகினம். பத்திரம் கிடைத்த ஆக்களிற்கு நிம்மதிதானே. அவையள் பக்கத்தில இருக்கிற ஆட்களை சுரண்டி கதைக்கத் தொடங்கி விட்டினம். என்னயிருந்தாலும் இனி இஞ்சயிருந்தால் பிசகுவரும். நான் சுவிஸ் போகப்போறன். …
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?
-
- 0 replies
- 1.4k views
-
-
-
கலியாணத்தன்று மழை “இரவில அட்டை கிட்டை ஏதும் ஏறி இருக்கும் , கழுவிப்போட்டு அரை “எண்டு அம்மா சொன்னா. அம்மியையும் குழவியையும் கழுவீட்டு தண்ணியை வளிச்சு ஒரு பக்கம் தள்ளி விட்டிட்டு தண்ணி ஒரு பக்கமா காஞ்சும் சில இடம் காயாமை இருக்கிறதையும் தள்ளித்தள்ளி விளையாடீட்டு தட்டையும் வாங்குப்பலகையையும் தூக்கிக் கொண்டு எல்லாம் இருக்கா எண்டு check பண்ணிக்கொண்டு போனன். போய் நிண்டு கொண்டு உப்பைக்கொண்டா புளியைக்கொண்டா எண்டா சாமான் வராது, “ என்ன ஆட்டத்துக்கு இப்ப சம்பல் அரைக்கப் போனீ “ எண்டு பேச்சுத் தான் விழும். வீடு கட்டேக்க குசினீக்குள்ள அம்மியை வைக்கிறேல்லை , கொஞ்சம் தள்ளி அதுகும் நிலத்தோடயோ இல்லாட்டி கட்டு ஒண்டு கட்டித் தான் அம்மியை வைக்கிறது . கிணத்தடி மாதிரி அம்மியடிக்கும்…
-
- 15 replies
- 1.4k views
- 2 followers
-
-
Langes Tharmalingam உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழர்கள் ஷிவ் நாடார், ஆனந்த கிருஷ்ணன் இந்த வருடத்திற்கான ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் பணக்காரர்கள் வரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் பில் கேட்ஸ். இந்த வருடம், உலகளவில் பெரும் பணக்காரர்கள் 13 சதவீத அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ள நிலையிலும் பில் கேட்ஸ் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். எங்களின் மற்ற கட்டுரைகளை படிக்க:உலகின் வாழ்க்கை செலவு குறைவான 10 நகரங்களில் சென்னை, பெங்களூர், டெல்லி ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் இந்த ஆண்டு பணக்காரர்கள் பட்டியல் படி, பில் கேட்ஸின் சொத்துக்கள் 75 பில்லியன் டாலரிலிருந்து 86பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடு – மீறினால் தடை! நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் பேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டதை அடுத்து நேரலை வசதியில் புதிய கட்டுப்பாடுகளை பேஸ்புக் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய நபர் அதனை நேரலையாக பேஸ்புக்கில் ஒளிபரப்பியது உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேரலை வசதியை பயன்படுத்துவதில் பேஸ்புக் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. பேஸ்புக்கின் விதிமுறைகளை மீறியதற்காக தடை செய்யப்படுபவர்கள் குறிப்பிட்ட சில நாட்கள் நேரலை வசதியை பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. http:/…
-
- 0 replies
- 1.4k views
-
-
“மணியண்ணை ரைட்“ திரும்பி பளிச் எண்டு சாயத்தோட சப்பின வெத்திலையை பூவரசு மரத்தடீல துப்பிப்போட்டு ,காலாலை மண்ணை தள்ளி மூடீட்டு , மூடி வெட்டின ரின் பால் பேணியால தண்ணியை அள்ளி வாயை கொப்பிளிச்சிட்டு, அந்த பழைய யானை மார்க் சோடாப் போத்தலில இருக்கிற பிளேன் ரீயை சூடோட விழுங்கிப்போட்டு, மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் போல, பாதி உடைஞ்ச அரி கல்லுக்கு மேல ஆச்சி திருப்பி வந்து இருந்தா. முன்னால கவிட்டு வைச்ச பக்கீஸ் பெட்டிக்கு மேல விரிச்சு வைச்ச வீரகேசரி , சில வேளை அதுக்கும் மேல பழைய பொலித்தீன் இருக்கும். வரேக்க மறக்காம புடுங்கிக் கொண்டு வந்த பூவரசம் கொப்பால இலையானை கலைச்சு கொண்டு தண்ணியை தெளிச்சிட்டு கும்பலா இருந்த ஒட்டியை பக்க வாட்டில அடுக்கி , வாங்கின கணக்கு , அள்ளு…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
சுமந்திரன் - சமுதித்த.... சர்ச்சைக்குரிய பேட்டி சிங்களத்திலிருந்து தமிழாக்கம் : சுவிசிலிருந்து ஜீவன் சமுதித்த : இன்றைய அரசியல் களத்தில் சர்ச்சைக்குரிய ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவரை தேடி வந்திருக்கிறோம். அவர் யாழ்ப்பாண பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A. சுமந்திரன் அவர்கள் வணக்கம் சுமந்திரன்: வணக்கம் சமுதித்த : தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முக்கிய காரணம் என்ன சுமந்திரன்: உண்மையான காரணம் தான் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து நியாயமான உரிமை கிடைக்கவில்லை எனும் எண்ணம் உள்ளது. அதை சரி செய்வதற்காக 1949 இல் தமிழரசுக் கட்சி உருவானது. அதன் பின்னர் அதுவே வெவ்வேறு பெயர்களில் மாறி வந்து இப்போது …
-
- 0 replies
- 1.4k views
-
-
இனமொன்றின் குரல் is with Tamil Payen and 4 others. மணலாறு மற்றும் வவுனியா மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் நடை பெற்ற சிங்கள குடியேற்றங்கள். நாங்கள் மத்திய அரசில் பங்குதாரர்களாக இருக்கிறோம் . ஹெலி வசதிகள் உட்பட சகல வசதிகளும் எங்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடைக்கிறது . ஆனால் ககுறைந்த பட்சம் இந்த கொடுமைகளை பற்றி பேச யாருமே இல்லை மணலாறு (வெலி ஓயா) 117.1 சதுர கி.மீ.பரப்பளவிலிருந்த வெலிஓயா தற்போது, 164.2 சதுர கி.மீ. பரப்பளவில் வெறும் சிங்கள பிரிவாக விஸ்தீரணமடைந்துள்ளதை முல்லைதீவு மாவட்ட செயலக அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர். கூடுதலாக 47 கிமீ சதுரம் அதாவது 11ஆயிரத்து 639 ஏக்கர் பரப்பளவில் வெலிஓயா வளர்ச்சி அடைந்து இருக்கிறது.ச…
-
- 0 replies
- 1.4k views
-
-
உயிர்கொல்லும் கொரோனா வைரஸும் இணையத்தில் உலாவும் புரட்டுக்கொள்ளிகளும் கொரொனோ வைரஸ் (வாய்க்குள் நுழையாத விஞ்ஞானப் பெயர் 2019-nCoV) கடந்த டிசம்பர் மாதம் மத்திய சீன ஹுபே மாகாணத்தின் வூஹான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸின் மூலம் எதுவென்று சரியாக உறுதிப்ப்படுத்தப்படவில்லை. ஆனால் வூஹான் நகரில் உள்ள உள்ளூர் கடலுணவு/இறைச்சி சந்தைகளில் விற்கப்பட்ட (கொரோனா வைரஸினால்) பாதிக்கப்பட்ட விலங்குகளில் இருந்தே பரவியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் இப்போதும் வேகமாகப் பரவிவருகின்றது. இன்றைய நாள்வரை 636 பேருக்குமேல் மரணித்தும், 36,000 பேருக்கு மேல் தொற்றுக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள். எனினும் அதன் தொற்றுவீதம் எப்படி இருக்கும், எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பதற்கான …
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
வன்னியில் குர்திஸ்போராளிகளுக்கு புலிகள் பயிற்சி; பிரபாகரனை பெருமைப்படுத்தும் குர்திஸ்தானியர் Posted on November 10, 2019 by செய்தியாளர் பூங்குன்றன் குருதிஸ்தான் உணவக உரிமையாளர், தலைவர் பிரபாகரன் அவர்களையும் தமிழ்மொழியையும் போற்றிப் புகழுகிறார்…. நேற்று ஒரு மாறுதலுக்காக நானும் மகன் தமிழ்கோவும் குருதிஸ்தான் உணவகத்துக்கு சாப்பிடப் போயிருந்தோம். குளிர் அதிகாமாக இருந்தது. நாங்கள் சற்று நடுக்கத்துடன் இருந்தோம். ‘தலைவர் பிரபாகரன்’ பெயரை உச்சரியுங்கள் குளிர் கூதல் எல்லாம் வெருண்டு ஓடிவிடும் என்றார்….. தொடர்ந்து பேசுகையில் அவர் ஒரு குருதிஸ்தான் குடிமகன். பெயர் நீயூஸ்ராட் இனமானம் மிக்கவர். விடுதலைப் புலிகள் வன்னியில் வைத்து பலநூறு குருதி…
-
- 0 replies
- 1.4k views
-
-
தூங்கா நகரின் ராப்பாடிகள்..... நான் தமிழகம் முழுவதிலும் சுற்றியலைய தொடங்கிய காலத்தில் மதுரை என்றாலே பலரும் உடன் விசாரிப்பது “உங்க ஊரில் நள்ளிரவிலும் சூடாக இட்லி கிடைக்குமாமே என்பது தான்”. மதுரை ஒரு தூங்கா நகரம் என்பதே வெளியூர்க்காரர்கள் எப்பொழுதுமே வியப்பாகவே இருக்கும். 2500 ஆண்டுகளாகவே மதுரை ஒரு தூங்கா நகரமாக வரலாற்றை விழித்தபடி பார்த்துக் கொண்டிருக்கிறது. மாலை நேரத்தில் விதவிதமான இடைத்தீனிகள் (Snacks) மதுரை தெருக்களை அலங்கரிக்கும், எந்த வீதியில் நடந்தாலும் இந்த நறுமணங்கள் வந்து மூக்கை துளைக்கும், நம்மை கடை நோக்கி அழைக்கும். உளுந்த வடை, பருப்பு வடை, கார வடை, கீரைவடை, பைரி (முள்ளுமுருங்கை வடை), தேங்காய் போலி, பருப்பு போலி, ரவா அப்பம், காரப் பணியாரம், இனிப்…
-
- 2 replies
- 1.4k views
-
-
1990 ஆம் ஆண்டு தமிழர்கள் முஸ்லிம்களாலும் சிங்களப் படையினராலும் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்தனர். இவர்களின் கொடூரத்தால் அல்லோலகல்லப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சொந்த இனத்தில் இருந்தே ஒரு தேசத் துரோகக் கும்பல் தன் சொந்த இனத்தை வேட்டையாடியது. அக்கும்பலின் பெயர் "டெலோ" என்பதாகும். இக்கும்பல் பல்வேறு படுகொலைகளை & வன்புணர்ச்சிகளை சிங்களப் படையினருடன் சேர்ந்து அவர்களின் துணைப்படையாக நின்று செய்து முடித்தது. அவ்வாறு அன்று அவர்கள் செய்து முடித்த ஒரு கொடூரம் தான், இந்த வின்சென்ட் கல்லூரி மாணவி விஜித்தாவின் வன்புணர்ச்சி நிகழ்வாகும். 1990ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி டெலோ ஒட்டுக்குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட இவர் 5 பேர் கொண்ட குழுவின் கூட்டு வன்புணர்ச்சிய…
-
- 4 replies
- 1.4k views
-
-
Thank You, LARRY KING !!! , LARRY KING, அமெரிக்க ஊடகத்துறையில் 63 ஆண்டுகள் கோலோச்சிய ஜாம்பவான். அவருடைய 87வது வயதில் இன்று (January 23, 2021) காலமானார். ஆட்சியாளர்கள் முதல் புரட்சியாளர்கள் வரை, ஆறு தசாப்தங்களில் சுமார் 50,000 நேர்காணல்களூடாக வரலாற்றைப் பதிவுசெய்த சாதனையாளன். 9 வயதிலேயே தந்தையை இழந்த King, பாடசாலைப் படிப்போடு கல்வியை நிறுத்திவிட்டு, ஊடகவியலாளராகும் கனவுடன் பயணப்பட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
பத்து ஆண்டுகளுக்கு முன்னர், திருவல்லிக்கேணி மேன்சஷனில் எனக்கு பக்கத்து அறையில் தென்னக ரயில்வேயில் சிவில் எஞ்சினியராக பணிபுரியும் அன்பர் ஒருவர் தங்கியிருந்தார். ஆரம்ப தயக்கங்கள் மறைந்து அவருடன் சகஜமாக பேசத் தொடங்கியிருந்தபோது ஒரு நாள் அவரிடம் கேட்டேன். “ ஏன் சார், இப்போ தமிழ்நாட்டுல அடிக்கடி பாலங்கள் பழுதடைந்தது. உடைந்ததுன்னு நியூஸ் வருது. ஆனா ரயில்வே பாலம் உடைந்ததுன்னு நியூஸ் வரமேட்டேங்குது. ஆனா, ட்ரைன் நேருக்கு நேர் மோதல், சிக்னல் பெயிலியர் என்றெல்லாம் செய்திகள் வருது” எப்படி ரயில்வே பாலம் மட்டும் ட்ரைன் ஓடுற அதிர்ச்சிய தாங்கிக்கிட்டு நல்லா இருக்கு? அதற்கு அவர் சொன்னார், நாங்க பாலம் டிசைன் செய்யும்போதே, பாக்டர் ஆப் சேப்டி ஐந்தில் இருந்து பத்து வர…
-
- 6 replies
- 1.4k views
-
-
போராடி நலிவுற்ற தமிழ்ச் சமூகம் நாதியற்ற நிலையில் என எண்ணியிருந்த எனக்கு இல்லை எமது இளைய தலைமுறையினர் இன்னும் விழிப்புடனும் விரியத்துடன் இருக்கின்றர்கள் என்பதை எடுத்து காட்டுகின்றது இந்த நிகழ்வு..
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட 'அரட்டை ' எனும் செயலியின் அதிகரித்து வரும் பயன்பாடு பேசு பொருளாகியுள்ளது. அமெரிக்கா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, உலக நாடுகள் பலவும் சொந்தக் காலில் நிற்பது பற்றி அதிகம் சிந்தித்துச் செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் சேவையான WhatsApp இற்குப் பதிலாக அரட்டை எனும் செயலியினைப் ( Arattai App) பலரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். WhatsApp, Snapchat போன்ற செயலிகளைப் போன்றே அரட்டையும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டினைச் சேர்ந்த சோகோ நிறுவனத்தால் ( Zoho corporation) உருவாக்கப்பட்ட செயலி இதுவாகும். சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயற்படுகின்றது. இச் செயலியின் பெயர் தமிழ்ச் சொல்லாக இருப்பதுடன், 'அ' என்ற …
-
-
- 21 replies
- 1.3k views
- 2 followers
-
-
யாழ்ப்பாண பொலிஸாாின் நிலை தொடா்பில் சட்டத்தரணி சா்மினி விக்கினேஸ்வரின் கருத்து பளீா்
-
- 0 replies
- 1.3k views
-
-
"பாட்டும் நானே,பாவமும் நானே என்று சிவ பெருமான் பாடியதாக வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர். கவிஞர் கா மு ஷெரிப். கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான்.தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பான பாடல்கள் எழுதியவர். கீழே அவர் பற்றி இரண்டு செய்திகள். எப்பேர்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் நம் தாய் தமிழ் நாட்டில்! ---+++++------- கா.மு.ஷெரீப் ... இந்தக் கவிஞரின் பெயரை , நம்மில் ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்போம் ..! ஆனால் , அவர் எழுதிய ஒரு திரைப் படப் பாடலை, நம்மில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்போம் ..! அந்தப் பாடல் : “ஏரிக்கரையின் மேலே போறவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
நான்கு தமிழர்கள் அமோக வெற்றி! ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்காபுறோ வடக்கு (Scarborough North) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட யாழினி ராஜகுலசிங்கம் அமோக வெற்றி பெற்றார். ஸ்காபுறோரூச் பார்க் (Scarborough-Rouge Park) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட அனு சிறீஸ்கந்தராஜா அமோக வெற்றி பெற்றார். ஸ்காபுறோ மத்தி (Scarborough Center) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நீதன் சாண் அமோக வெற்றி பெற்றார். மார்…
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
உடற்பயிற்சியின்போது ஏற்படும் மாரடைப்பு-மரணமும் அதைத் தவிர்த்தலும் ================================ கடந்த மாத இறுதியில் நிகழ்ந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை மட்டுமன்றி ஏனைய பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதற்கு அவரது பிரபலம் மற்றும் சமூக சேவைகள் மட்டுமே காரணமல்ல. அவர் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் அடையாளமாக இருந்த ஒருவர். அவர்களது நண்பர்களால் “உடற்பயிற்சி வெறியர்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஒருவர். அத்தோடு 2017 இல் பெங்களூரில் உள்ள Sri Jayadeva Institute of Cardiovascular Sciences and Research Institute அறிமுகப்படுத்திய “Prevent Premature Heart Attack” initiative இன…
-
- 15 replies
- 1.3k views
- 1 follower
-
-
தமிழ்நாட்டில் தலைவர்களுக்கு புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சிப்புயல் என்று பட்டங்கள் வழங்குவார்கள். அவர்களுக்கும் புரட்சிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இப்போது அந்த வருத்தம் (நோய்) ஈழத் தலைவர்களுக்கும் தொற்றிவிட்டது போலும். இது கொரோணா வைரஸைவிட பயங்கரமானது. சில வருடங்களுக்கு முன்னர் சம்பந்தர் ஜயாவை அழைத்து கனடாவில் சில கிழடுகள் “வாழும் வீரர்” என்று பட்டம் வழங்கினார்கள். அவ்வாறு பட்டம் வழங்கியவர்களில் ஒருவரான குகதாசன் என்பவர் இப்ப திருகோணமலை வந்து அடுத்த தேர்தலில் போட்டியிட சீட் பெற்றுவிட்டார் என்கிறார்கள். அடுத்து இப்பொழுது சுமந்திரனுக்கு “ போராளி” என்ற பட்டம் கம்பன் கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி தெரிவிக்கிறது. இந்த கம்பிவார…
-
- 9 replies
- 1.3k views
-
-
மனைவி கணவனிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்! 1) பால் பொங்குது பார்த்துக்கோங்க, குக்கர் ரெண்டு விசில் அடிச்சதுக்கப்பறம் கேஸை ஆஃப் பண்ணுங்க – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்? 2) கடையில் போய் ஏதாவது வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா எதிர்பார்க்கற ஏதாவது ஒரு பொருளை மறந்துட்டு வர்றீங்க? 3) நண்பர்களுக்கு ஐடியா தர்றது, ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்க்கு எதுனா ஹெல்ப்னா ஓடறதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா கேஸ் புக் பண்றது, புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ்க்கு பணம் எடுத்துட்டு வர்றது, அரிசி ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்? 4) புத்தக…
-
- 1 reply
- 1.3k views
-
-
"நான் ஒராள் செய்யிறதாலே என்ன பெருசா நடக்கப் போகுது, ஆருக்குத் தெரியப் போகுது" என்னும் மனோபாவத்தில் நாம் ஒவ்வொருவரும் செய்த பல்லாயிரம் சிறு தவறுகள் ஈழவிடுதலைப் போராட்டத்தை எவ்வளவு பாதித்திருக்கும், நமக்காகப் உயிர் கொடுத்துப் போராடியவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆப்பை இறுக்கியிருக்கும் என நினைத்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக, வெளிநாடுகளில், "புலிகளுக்குப் பயந்துதான், வெளிநாடு வந்தனான்" என்று வாக்குமூலம் கொடுத்து வதிவிட உரிமையை எளிதாக வாங்கிக் கொண்ட "தீவிர புலி மற்றும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள்" எத்தனை பேர் உள்ளனர். லோயர்களின் மூளைச் சலவைக்கு ஆட்பட்டு இவ்வாறு கொடுத்த வாக்குமூல…
-
- 3 replies
- 1.3k views
-