Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிப்போம் சிறப்போம்

நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

பதிவாளர் கவனத்திற்கு!

சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.

சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.

எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பூவரசம் இலைக்கு எங்களின் ஊரில் பலவிதமான பாவனை உண்டு. 1.பீப்பி செய்து ஊதலாம்.(இதனால் இரவில் ஊதி பாம்பு வரும் எண்டு அடி வாங்கிய நாட்கள் பல உண்டு). எங்கட ஒழுகையால போகும் ராகினி மச்சாளை பாத்து பம்பலா பகிடி பண்ண பீப்பி ஊதி அவளிட்ட கிழிய கிழிய வாங்கின அனுபவமும் மறக்கமுடியாது. 2.வடை மற்றும் பணியாரம் அதில் வைத்துத்தான் தட்டுவார்கள். 3.அதன் காம்பை ரப்பர் பாண்டில் வைத்து இழுத்து சுண்டி வில் போல் அடித்தால் சுள் எண்டு வலிக்கும்.இப்பிடி பள்ளிக்கூடத்தில அடிச்சு ,என்னோட படிச்ச பிள்ளை சாந்தினியில பட்டு ..அவள் அழுதுகொண்டுபோய் ராணி ரீச்சரிட்ட சொல்ல , அவா பிறின்சிப்பலிட்ட சொல்ல.. அந்த ஆள் பூவரசம் காம்பால வெளு வெளு எண்டு துடையில ரத்தம் வர அடிச்சது ஒரு கதை.அதை வீட்ட சொல்லாமல் ஒழிச்சது…

  2. காதலித்து பார்போமா!! அட எல்லாருக்கும் வணக்கம் அட நாமளே தான்...ம்ம்ம் காதலர் தினதிற்கு எல்லாரும் தங்களின்ட ஆளிற்கு "ரோஸ்" கொடுக்க போயினம் எனக்கு ஒருத்தரும் இல்லை என்று பீல் பண்ணி கொண்டிருந்தனான் அப்ப தான் இந்த செல்லத்தை கண்டணான் பாருங்கோ...எப்படி இருக்கு ஜம்மு பேபிக்கு ஏற்றமாதிரி இருக்கே..சோ நம்ம செல்லத்தோட இந்த பக்கத்தில நான் லவ்ஸ் பண்ண போறேன்..(என்ன மோகன் அண்ணா ஒரு மாதிரி லுக்கு விடுற மாதிரி தெரியுது)...இஸ்ட பாட் ஒவ் ட கேம்... சரி என்ட "செல்லதிற்கு" என்ன பெயர் வைக்கலாம் நீங்க தான் சொல்ல வேண்டும்..இல்லாட்டி செல்லம் என்றே கூப்பிடட்டோ அது எப்படி இருக்கு...சோ இன்றையிலிருந்து நான் லவ்ஸ் பண்ண போறேன் உங்களிற்கும் என்ன மாதிரி தான் நிலைமை என்றா தார…

    • 39 replies
    • 6.5k views
  3. நண்ப/நண்பியர்களே, நீங்கள் இந்த உரையை ஏற்கனவே கேட்டிரிந்தால் மன்னிக்கவும்! நான் இந்த உரையை ஒரு 5 தடவைகள்கேட்டிருப்பேன், ஆயினும் ஒவ்வொருமுறையும் ஏதாவது புதிதாக அறியமுடிகிறது! பெரியார்தாசன் உரை நன்றி வன்னி

    • 25 replies
    • 6.4k views
  4. Happy Valentine's Day!! எல்லாருக்கு வணக்கம் மறுபடி நானே தான் வந்துட்டேன் ...ஆத்தில எல்லாரும் செளக்கியமோ நானும் பேஷாகா இருக்கிறேன்..ஆத்தில மீன்கள் எல்லாம் செளக்கியமா நான் கேட்டது மீன்களை பிறகு தப்பா நினைக்கிறதில்லை சரி இப்ப மாட்டருக்கு வாரேன் நீங்கள் காதலர் தினத்தை எப்படி உங்கள் காதலர் அல்லது காதலியுடன் கொண்டாடுவீங்க என்று வந்து பேஷா சொல்லிட்டு போங்கோ பார்போம்... என்னுடைய ஆசையை சொல்லட்டே (ஒன்லி ஆசை தான் பிகோஸ் கழுவுற மீனில நழுவுற மீனு நம்ம சிட்னி கேள்ஸ்)..நேக்கு காதலி வந்தா நான் வந்து காதலர் தினத்தை எப்படி கொண்டாடுவேன் என்றா..(உது வந்து டீரிம் சரியோ நடக்குமோ நடக்காதோ அதை பற்றி நேக்கு தெரியா எல்லாம் தமிழ் சினிமா …

    • 41 replies
    • 6.4k views
  5. நன்றி ; சராஜ் , தமிழ்நாடு ரோக் . கொம்

    • 24 replies
    • 6.4k views
  6. இதொன்னும் அப்படி பெரிய கஸ்டமான செய்முறை கிடையாது. புட்டு அவிக்க கோதுமை மா வேண்டும். ஏன்னா... புட்டு சமந்தா மாதிரி வெள்ளையா இருக்கனுல்ல. (ரெம்ப.. வெள்ளை பிடிக்காதவர்கள்.. கொஞ்சம் சிவப்பு அரிசி மாவை (வறுத்து எடுத்தது - ரெம்ப வறுத்திடாதேங்க... வறுக்கத் தெரியாட்டி.. கடையில் வறுத்தது வாங்கவும். ) வாங்கி கோதுமை மாவோடு புட்டுக்கு பிசைய முன் கலக்கி.. சமந்தா கலருக்கு ஏற்ப.. எடுக்கவும்.) கோதுமை மாவை வாங்கி அவிச்சு.. அரிச்சு எடுக்கவும். இல்ல.. அவிச்ச மாவையே வாங்கவும். அப்புறம் சுடுதண்ணி.. + உப்பு போட்டு புட்டு பதத்திற்கு...மாவை பிசையவும். பின் கைகளால்.. உருட்டி எடுக்கவும். பின் நீத்துப் பெட்டிக்குள் கொட்டி.. அதன் மேல்.. சிறிதளவு தேங்காய்ப்பூ தூவவும். ப…

  7. அம்பலத்தார் பக்கம் முந்தி உங்களுக்கு நான் கன கதையளெல்லாம் சொன்னனான் ஞாபகமிருக்குமெண்டு நினைக்கிறன். இடையிலை கொஞ்சக்காலமா பலசோலியளிலையும் ஓடித்திரிஞ்சதிலை பல கதையளையும் சொல்ல நினைச்சும் நேரம் வராததிலை விட்டிட்டன். இப்பத்தான் கொஞ்சம் நேரம் கிடைச்சுது அதுதான் சட்டென்று ஒன்றிரண்டு விசயங்களையெண்டாலும் சொல்லாட்டில் மண்டைவெடிச்சிடும்போலக் கிடக்குது. சட்டுப்புட்டென்று விசயத்துக்குவாறன் கேளுங்கோ சங்கதியை. இப்ப கொஞ்சக்காலமா எனக்கு வாற மறதியும் அதாலை படுகிறபாடும் கொஞ்சநஞ்மில்லை. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது அதிலையும் ஒரு வசதி இருக்குது பாருங்கோ அதை நான் பிறகு சொல்லுறன் ஆனால் பிறகு ஏதும் இசகுபிசகான நேரத்திலை அம்பலத்தான் இப்பிடிச் சொன்னவன் எண்டு போட்டுக்குடுத்திடாதையுங்க…

    • 32 replies
    • 6.3k views
  8. கருத்துகளத்தில் எழுதும் அனைவரும் எனக்கு கல்யாணம் கட்டி வைக்காமல் ஓய மாட்டார்கள் என நினைக்கிறேன் முக்கியமாக விசுகு அண்ணா...ஆனால் எனக்கு வரப் போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என சில எதிர்பார்ப்புகள் எனக்கு உண்டு தானே எனது எதிர்பார்ப்புகளை எழுதுகிறேன்; என்னிலும் பார்க்க அழகாய் இருக்க கூடாது[அதற்காக நான் பெரிய அழகு என்று இல்லை...என்னுடைய கண் சிறிதாக இருக்கிறது என சொல்லி ஒருவர் என்னை ரிஜக்ட் பண்ணினார்.] என்னிலும் பார்க்க குறைந்தது 2 வயதாவது கூட இருக்க வேண்டும். அதிகம் படித்திருக்க கூடாது[முக்கியமாக விஞ்ஞான துறையை சேர்ந்தவராக இருக்க கூடாது]...மெத்தப் படித்த எம் ஆட்களுக்கு கர்வம் அதிகம் என நான் நினைக்கிறேன். அன்பு,பாசம் மிக்கவராகவும் என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குப…

  9. மின்னஞ்சலில் வந்தது..பகிர்கிறேன்.. நிச்சயம் ரசிக்கத்தக்கது.. உண்மையும் கூட...! ஆம்லேட்(முட்டை பொரியல்) போடுவதை வைத்து "தம்பதிகள் எத்தனை வருட ஜோடி?" என்று கண்டுபிடிப்பது எப்படி.....? "என்னம்மா.. இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்கே..? வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய்... வா, சேர்ந்து சாப்பிடலாம்!" "இருங்க, உங்களுக்கு தொட்டுக்க ஆலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க... அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க..அதுக்குதான்!" இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!! ********************** "என…

  10. முனிவர் தற்பொழுது சீனாவில் இருக்கிறார் நாளை களத்திற்க்கு வரும் போது கள உறவுகளுக்கு சில சாமான்கள் அதாவது பொருட்கள் வாங்கி வர போகிறார் அதனால ஏசிற ஆட்கள் ஏசலாம் திட்டுற ஆக்கள் திட்டலாம் முனிவர் கோபிக்கமாட்டார்

  11. என்ன சாவைப்பற்றியே யாழில் திரும்பவும், திரும்பவும் யோசிக்கிறன்.. எழுதிறன் எண்டு கோவிக்ககூடாது. இப்போது எனக்கு சாவு பற்றிய எண்ணங்கள் வந்துபோகிது. என்றபடியால் இதுபற்றி எழுதுகின்றேன். உள்ளதை, உள்ளபடி சொல்வது பிழை இல்லை தானே? சரி இனி விசயத்துக்கு வருவம்.. உங்களில் பலர் சாவின் விளிம்புக்கு போய் வந்து இருக்கலாம். அல்லது அவ்வாறு பாரதூரமான நிலமைக்கு போகாவிட்டாலும், நீங்கள் 'சாகப்போவதாய்' மனதில் நினைத்து இருக்கலாம். இவ்வாறு 'நான் சாகப்போகின்றேன்' என்று நீங்கள் உணர்கின்ற அந்தக் கணத்தில் உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் எவை? அவை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதே இந்தக் கருத்தாடல்.. நான் வாழ்க்கையில் இரண்டு முறை இவ்வாறு 'நான் சாகப்போகின்றேன்' என்பதை உணர்ந்து சாவை எத…

  12. இந்தியா - அவுஸ்திரேலியா காலிறுதிப்போட்டியில் நிகழ்ந்ததாக நம்பப்படுபவை.. 1. இந்தியா - அவுஸ்திரேலியா காலிறுதிப்போட்டியில் நிகழ்ந்ததாக நம்பப்படுபவை.. 2. இந்தியா ~ பாக். அரையிறுதி அலப்பறைகள்..! இதான் பறந்து பறந்து அடிக்கறதா..?

    • 14 replies
    • 6.1k views
  13. அண்ணமாரே,அக்காமாரே,தம்பிமாரே,தங்கைமாரே எனக்கு திடிரென ஒரு ஆசை நான் கூடிய சீக்கிரம் பணக்காரியாக வேண்டும்... ஆனால் ஆசைப் பட்டால் மட்டும் போதுமா?...எப்படி பணக்காரியாவது? உங்களிடம் எதாவது உருப்படியான ஜடியா இருந்தால் எடுத்து விடுங்கோ. நீங்கள் தரும் ஜடியாவைக் கொண்டு நான் பணக்காரியாக வேண்டும் அதற்காக கடுமையாக உழைப்பேன் ஆனால் ஒருவரையும் ஏமாற்றக் கூடாது[நீங்கள் தரும் ஜடியாவால்]அத்தோடு கள்ள வழியில் முறை தவறியும் சம்பாதிக்க கூடாது...நான் பணக்காரியாக வந்ததும் யார் சிறந்த ஜடியா தந்து நான் பணக்காரியாக வந்தேனோ அவர்களுக்கு எனது பணத்தில் 10% த்தை கொடுப்பேன் என யாழ் களத்தில் உறுதி எடுக்கிறேன். பணத்தை விரும்பாதோர் யாரும் உண்டோ.எல்லோரும் சும்மா சொல்வார்கள் பணம் என்ன பணம்...பணத்தை வ…

    • 28 replies
    • 6k views
  14. திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் இதைப் படியுங்கள் நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்? நபர் 2: உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பதாக இப்படியொரு வழமை காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. நபர் 1 : காதல் திருமணம் சிறந்ததா பேச்சுத் திருமணம் சிறந்ததா என்று பட்டிமன்றத்திற்குப் பெயர் வைப்பதற்குப் பதிலாக இப்படியும் வைக்கலாம். நபர் 2: எப்படி? நபர் 1 : தற்கொலை செய்வது சிறந்ததா? கொலை செய்யப்படுவது சிறந்ததா? நபர் 1 : ebanking ஐ விட வேகமாகப் பணத்தை பரிமாறக் கூடிய வழி எது தெரியுமா? நபர் 2 : தெரியாது நபர் 1 : திருமணம் செய்து கொள்வது நபர் 1 : ஒரே தடவையில் இரண்டு …

    • 18 replies
    • 5.9k views
  15. குள்ள நரின்ட நாடகம்

    • 4 replies
    • 5.9k views
  16. விஞ்ஞானம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத பல விடயங்களை நடைமுறைக்கு சாத்தியமாக மாற்றி வருகின்றது. விஞ்ஞானத்தின் ஒரு வளர்ச்சியாக, எதிர்காலத்தில் ஆண்கள் மகப்பேறு அடையக்கூடியதாக இருந்தால், அதாவது குழந்தையை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் உங்கள் மனநிலைகள், எண்ணங்கள், விருப்பங்கள் என்னவாக இருக்கும்? இங்கு மகப்பேற்றுக் காலத்தில் ஆண்கள் பிள்ளையை வயிற்றில் வைத்து சுமக்க வேண்டியகாலம் சிலவேளைகளில் 10 மாதத்திற்கும் விட கூடுதல் காலமாக - 20 மாதமாக கூட இருக்கலாம். அல்லது 5 மாதமாக இருக்கலாம். இது எப்படி சாத்தியப்படும் என்பது அடுத்த பிரச்சனை. அது விஞ்ஞானிகள் அளிக்கவேண்டிய பதில். ஆனால், நீங்கள் இப்படியான ஒரு விஞ்ஞான முன்னேற்றத்தை உங்கள் வாழ்வில் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கின்…

    • 44 replies
    • 5.8k views
  17. பேங்க் ஆ·ப் டுபாகூர் வங்கியின் சென்னைக் கிளை. நோடீஸ் போர்டில் போட்டிருக்கும் சர்குலரை ஒருவர் சத்தமாகப் படிக்கிறார். "நம் வங்கி அலுவலர்க்கோர் நற்செய்தி. நம் சேர்மனுக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம் நிலவி வருகிறது. அதை நல்ல ஆபீஸ் நோட் வாயிலாகத் தீர்த்து வைப்பவருக்கு ஆயிரம் டாலர் பரிசாக அளிக்கப்படும்." தருமி அங்கு வருகிறான். "ஏம்பா. பரிசுத் தொகை எவ்வளவு?" "ஆயிரம் டாலர்." தருமி தனிமையில் புலம்புகிறான். "ஐய்யோ ஆயிரம் டாலராச்சே. ஆயிரம் டாலராச்சே. எனக்கு மட்டும் அந்தப் பரிசு கிடைச்சிட்டா முதல்ல பையன் இஞ்சினீரிங் காலேஜ் ·பீஸ் கட்டிடுவேன். அப்பறம் மிச்சம் இருக்கிற பணத்தில... கிரெடிட் கார்டு ட்யூஸ் கட்டிடலாம். ஐய்யோ... அடுத்தவன் எவனாது இதை கேட்டு நோட்டு போடறதுக்கு முன்னாட…

    • 3 replies
    • 5.7k views
  18. எனது மரியாதைக்குரிய சகோதரிகளே!உங்கள் யாருக்காவது தங்கவேட்டை சேலையைப்பற்றித் தெரியுமா?அதைப்பற்றி விளக்கம் தருவீர்களா?அதில் முக்கியமாக தங்கவேட்டை சேலையில் முன்கொய்யம் அல்லது பின்கொய்யம் வைத்து கட்டமுடியுமா?

  19. அன்பார்ந்தவர்களே! தயவு செய்து என்ரை பிரச்சனையை தீர்த்து வையுங்கோ. என்னோடை கனகாலமாய் ஒரு சீக்கிய நண்பன் வேலை செய்கிறான். அவனுக்கு பொழுது போகாட்டி என்னை கேள்வி கேட்டு குளப்புறதுதான் அவனுக்கு வேலை கண்டியளோ.அதுவும் இலங்கை பிரச்சனையெண்டால் அவனுக்கு உடனை நினவுக்கு வாறது ராமாயணப்பிரச்சனைதான் . எனக்கும் ஒழுங்காய் இராமாயணம் தெரியாதெண்டது வேறை விசயம். இந்த ராமாயணத்தை வைச்சு ஆயிரம் கேள்வியள் கேட்டுப்போட்டான் . எல்லாத்துக்கும் ஒருமாதிரி சமாளிச்சுப்போட்டன். நாசமறுப்பு இந்தகேள்விக்கு மட்டும் என்னாலை பதில் சொல்லேலாமல் கிடக்கு அதாவது அவன் என்ன கேட்டவனெண்டால்............... சீதையை கடத்தின ராவணன் டச் பண்ணாமல் விட்டவனோ?இல்லாட்டி ஏன் டச்பண்ணாமல் விட்டவன…

  20. அப்படியே... ரெண்டு ஆணியும், வாங்கிட்டு வா. உன் தலையில வச்சு அடிச்சு விடறேன் என்ன சொன்னே..... சுத்தியலால மண்டையில போட்டிடுவன். சுட்டு வைக்கிற முறுக்கெல்லாம் சாப்பிட்டு முடிக்கிறதே... நீதான், அப்புறம் பேச்சைப் பாரு. என்னம்மா... அங்க சத்தம்? சேலை வேணாம், சுடிதாரே.. எடுப்போம். சேலை நீளம் கூட துவைக்கிறது மட்டும் இல்ல, காயப் போடுறதும்.. கஷ்டம் பேபி. கணவன்: ஈசியா... மாஸ்க் மட்டும் தான் துவைக்க முடியும். வாங்கிகிறியாமா??? 🤣🤣🤣

  21. சிரிக்க வைக்கும் குறும்புகள் (பிராங்க்). குறும்புகள் பலவகை... திட்டமிட்டு ஆனால் அப்பாவிதித்தனமானதாக செய்யப்படும் குறும்புகள் பலவிதம். அடக்க முடியாத, வயிறு வலிக்கும் சிரிப்பினை உண்டாக்குபவை. பலவகை.... பிரித்தானியாவில் டெலிவிசின் நிகழ்வில் புகழ் மிக்க இந்த குறும்பு நிகழ்வினை நிகழ்த்தியவர் மறைந்த ஜெரேமி பீட்ல்லி என்பவர். மனைவியின் ஏற்பாட்டில் கணவர் பிள்ளை போல பார்க்கும் காரை... இரவோடிரவாக பக்குவமாக அப்புறப் படுத்தி, அதேபோல இலக்கத்தகடு, நிறம் கொண்ட வேறு ஒரு காரை நிறுத்தி.... ஒரு குடிகாரர் வந்து வெறியில் அதனை கீறுவது அல்லது உடைப்பது... அல்லது... வரி, மாதாந்த வாடகை செலுத்தாததால் தூக்கிப் போவதாக அட்டகாசம் செய்து அந்த கணவரை டென்ஷன் ஆக்குவது தான் அவரது குறும்ப…

    • 40 replies
    • 5.6k views
  22. சப்பட்டையரான (அதான், நம்ம கனடா உறவுகளின் படி சீனர்) 30 வயது Cheng அவரது 29 வயது மனைவி Ting Su வின் இரணை சகோதரியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறார் என சந்தேகம் வந்து விட்டது மனைவிக்கு. வீட்டில் இருந்த வண்டியை எடுத்துக் கொண்டு, ஜாலியாக, ஏதோ வெளியில் முக்கிய வேலை என்று கணவன் கிளம்பிய போது, ஆகா இதுல ஏதோ விஷயம் இருக்குது. இன்னைக்கு புகை வைச்சு பிடிக்கிறேன். இருடி வாறேன் என்று கருவியவாறு mobile phone tracker கொண்டு கணவனின் கார் இருக்கும் இடத்தினை கண்டு பிடித்து அங்கே சென்றார் மனைவி. சூப்பர் மார்க்கெட் நிலக் கீழ் கார் பார்கிங்கில், காரை உள்ளே இருந்து பூட்டிக் கொண்டு, வெளியில் இருந்து பார்க்க முடியாத கறுப்புக் கண்ணாடியினை ஏத்தி விட்டு, 'நிர்வாணமாக' பெரும் பிரார்த்தனையில் இரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.