Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிந்து பறக்கும் வலி...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி அண்ணாவின் கவிதை தந்த தாக்கத்தில் இன்று எழுதியது...(http://www.yarl.com/...pic=101771&st=0)

.

292525_10150715384359891_789364890_9572227_635446567_n.jpg

பிரிந்து பறக்கும் வலி...

அன்பே

உனக்கும் எனக்குமான

உறவுகள்

எந்தக் கவிஞ்ஞனும்

இதுவரை புனைந்துவிடாத

வார்த்தைகளின்

வனப்புகளைத் தாண்டி

வரையப்பட்ட கவிதைகளடி...

நாம் பழகிய

அழகிய நாட்களின்

நினைவுகள்

எந்த ஓவியனது

தூரிகையிலும்

இதுவரை சிக்கிவிடாத

அற்புதமான ஓவியங்களடி...

உன் வார்த்தைகள்

என் செவிகளில் விழுந்த

அந்த மிகமெல்லிய

முதலாவது குளிர்நாளில்

நீ பேசிய ஒவ்வொரு

வரிகளையும்

என் நினைவுப் பெட்டகத்தில்

எடுத்துச் செல்கிறேன்..

பழைய சில

முத்திரைகளையும்

பட்டாம்பூச்சிகளின்

இறகுகளையும்

பொன் வண்டு

முட்டைகளையும்

எல்லைகளற்ற மகிழ்ச்சியுடன்

சேகரித்து வைத்திருக்கும்

சிறுவனைப்போலவே

உன் மேலான

என் அன்பின் நினைவுகளையும்

என்னுடனே எடுத்துச் செல்கிறேன்..

என் கனவுகளில்

அலைந்து திரிந்த வெண்மேகமே - உன்

எல்லைகள் பரந்தவை என்பதை

உணர்ந்து கொண்ட பொழுதில்

உன் பறத்தலுக்காக

உன் பாதைகளில் இருந்து தூர விலகி

என்காதலுடன் நான்

ஒடுங்கிக் கொள்கிறேன்..

சிகரங்கள் தொடவேண்டிய

உன் சிறகடிப்புக்காக

சுய நலங்களுடன்

உன்னைச் சுற்றிய

என் கனவுகளுக்கு நானே

தீ மூட்டிக் கொள்கிறேன்..

எல்லையற்ற வானத்தில்

கட்டற்றுப் பறக்கும்

பட்டாம் பூச்சி

உன் கனவுகளுக்கு நான்

வட்டமிட்டுவிடக் கூடாதென்பதால்

உன் எண்ணங்களில் இருந்து விலகி

எட்ட நின்றுகொள்கிறேன்..

கால நதியின்

நீள் பாய்ச்சலில்

கண்ணீராய் கரைந்து.....

தூரங்கள் பிரிந்து......

நீயொரு திசையிலும்

நானொரு திசையிலுமாகக்

கனவுகளைச் சுமந்துகொண்டு

அலைந்து திரிந்தாலும்

ஒன்றாகும் உணர்வுகளிலும்

சிந்தனைகளிலும்

எம்மிரண்டு இதயங்களினதும்

இயங்கு புள்ளிகள்

சுற்றிக்கொண்டிருக்கும்..

நீ உயரப் பறந்து கொண்டே இரு..

உன் கனவுகளை யாருக்காகவும்

விற்றுவிடாதே..

பிரிந்தும் பிரியாத

உன் நினைவுகள்

மனதின் ஆழத்தில்

பூக்கும் பொழுதெல்லாம்

உன் வெற்றிகள் - என்னை

உற்சாகப் படுத்தும் அன்பே..

பிரிவதற்கென்றே

சேர்ந்த உறவா நாம்..?

புரியாத மெளனங்களே

விடைகளாக

உனை விட்டுப்போவதை

நினைத்து

செத்துப்போகும்

என் விழிகளில்

எட்டிப்பார்க்கின்றன

உன் நினைவுகள்

கண்ணீராய்...

உருகி வழியும்

கண்ணீர்த்துளிகளுடன்

யாரும் காணாமலே

கரைத்துவிடுகிறேன்

என் இதய வலிகளை...

நாளை இவை உன்

கனவுகளின் சிறகுகளில்

பாரமாக இருந்து விடக் கூடாதென்பதால்..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பு பிரிந்தபின் எப்படி பறக்க முடியும் ?

கடைசி வரிகளில் உருகி வழியும் கண்ணீர்த்துளிகளுடன் கரைந்துவிடுகிறேன் என்ற பின் பறப்பு எப்படிச் சாத்தியமாகும்? :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பு பிரிந்தபின் எப்படி பறக்க முடியும் ?

இணைந்து வாழுவது அவன்/அவளின் கனவுகளுக்கு தடை என்று உணர்கிறபோது

பிரிவு நிகழ்கிறது... உதாரணத்திற்கு காதலனின் ஏழ்மை காதலியின் வசதியாக வாழவேண்டும் என்ற கனவுகளுக்கு தடையாக அமைகிறபோது அதை உணர்கிற காதலன் தானாக விலகிக் கொள்வது காதலி தான் கண்ட கனவுகளை நினைவாக்க உதவுகிறது...இதைப் போல்தான் கல்வியிலும் அக்கா... :)

கடைசி வரிகளில் உருகி வழியும் கண்ணீர்த்துளிகளுடன் கரைந்துவிடுகிறேன் என்ற பின் பறப்பு எப்படிச் சாத்தியமாகும்? :o

அது அப்படி இல்லை அக்கா..பிரிவை தாங்க முடியாமல் ஏற்படும் மன வலியைத்தான் சொன்னேன்... :):(

நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.................. இது என் அட்வைஸ் இல்லை :D # படிச்சதில பிடிச்சது

  • கருத்துக்கள உறவுகள்

இது காதலால் குழம்பியவர்கள் வாரமா? :D

பிரிவதற்கென்றே

சேர்ந்த உறவா நாம்..?

புரியாத மெளனங்களே

விடைகளாக

உனை விட்டுப்போவதை

நினைத்து

செத்துப்போகும்

என் விழிகளில்

எட்டிப்பார்க்கின்றன

உன் நினைவுகள்

கண்ணீராய்...

உருகி வழியும்

கண்ணீர்த்துளிகளுடன்

யாரும் காணாமலே

கரைத்துவிடுகிறேன்

என் இதய வலிகளை...

நாளை இவை உன்

கனவுகளின் சிறகுகளில்

பாரமாக இருந்து விடக் கூடாதென்பதால்..

சுபேஸ்... நன்கு உணர்ந்து எழுதியதைப்போல உள்ளது. சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம்..... :(

பாராட்டுக்கள்...... :)

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி அண்ணாவின் கவிதை தந்த தாக்கத்தில் இன்று எழுதியது...(http://www.yarl.com/...pic=101771&st=0)

.

292525_10150715384359891_789364890_9572227_635446567_n.jpg

பிரிந்து பறக்கும் வலி...

அன்பே

உனக்கும் எனக்குமான

உறவுகள்

எந்தக் கவிஞ்ஞனும்

இதுவரை புனைந்துவிடாத

வார்த்தைகளின்

வனப்புகளைத் தாண்டி

வரையப்பட்ட கவிதைகளடி...

நாம் பழகிய  

அழகிய நாட்களின்

நினைவுகள்

எந்த ஓவியனது

தூரிகையிலும்

இதுவரை சிக்கிவிடாத

அற்புதமான ஓவியங்களடி...

உன் வார்த்தைகள்

என் செவிகளில் விழுந்த

அந்த மிகமெல்லிய

முதலாவது குளிர்நாளில்

நீ பேசிய ஒவ்வொரு

வரிகளையும்

என் நினைவுப் பெட்டகத்தில்

எடுத்துச் செல்கிறேன்..

பழைய சில

முத்திரைகளையும்

பட்டாம்பூச்சிகளின்

இறகுகளையும்

பொன் வண்டு

முட்டைகளையும்

எல்லைகளற்ற மகிழ்ச்சியுடன்

சேகரித்து வைத்திருக்கும்

சிறுவனைப்போலவே

உன் மேலான

என் அன்பின் நினைவுகளையும்

என்னுடனே எடுத்துச் செல்கிறேன்..

என் கனவுகளில்

அலைந்து திரிந்த வெண்மேகமே - உன்

எல்லைகள் பரந்தவை என்பதை

உணர்ந்து கொண்ட பொழுதில்

உன் பறத்தலுக்காக

உன் பாதைகளில் இருந்து தூர விலகி

என்காதலுடன் நான்

ஒடுங்கிக் கொள்கிறேன்..

சிகரங்கள் தொடவேண்டிய

உன் சிறகடிப்புக்காக

சுய நலங்களுடன்

உன்னைச் சுற்றிய

என் கனவுகளுக்கு நானே

தீ மூட்டிக் கொள்கிறேன்..

எல்லையற்ற வானத்தில்

கட்டற்றுப் பறக்கும்

பட்டாம் பூச்சி

உன் கனவுகளுக்கு நான்

வட்டமிட்டுவிடக் கூடாதென்பதால்

உன் எண்ணங்களில் இருந்து விலகி

எட்ட நின்றுகொள்கிறேன்..

கால நதியின்

நீள் பாய்ச்சலில்

கண்ணீராய் கரைந்து.....

தூரங்கள் பிரிந்து......  

நீயொரு திசையிலும்

நானொரு திசையிலுமாகக்

கனவுகளைச் சுமந்துகொண்டு

அலைந்து திரிந்தாலும்

ஒன்றாகும் உணர்வுகளிலும்

சிந்தனைகளிலும்

எம்மிரண்டு இதயங்களினதும்

இயங்கு புள்ளிகள்

சுற்றிக்கொண்டிருக்கும்..

நீ உயரப் பறந்து கொண்டே இரு..

உன் கனவுகளை யாருக்காகவும்

விற்றுவிடாதே..

பிரிந்தும் பிரியாத

உன் நினைவுகள்

மனதின் ஆழத்தில்  

பூக்கும் பொழுதெல்லாம்

உன் வெற்றிகள் - என்னை

உற்சாகப் படுத்தும் அன்பே..

பிரிவதற்கென்றே

சேர்ந்த உறவா நாம்..?

புரியாத மெளனங்களே

விடைகளாக

உனை விட்டுப்போவதை

நினைத்து

செத்துப்போகும்

என் விழிகளில்

எட்டிப்பார்க்கின்றன

உன் நினைவுகள்

கண்ணீராய்...

உருகி வழியும்

கண்ணீர்த்துளிகளுடன்

யாரும் காணாமலே

கரைத்துவிடுகிறேன்

என் இதய வலிகளை...

நாளை இவை உன்

கனவுகளின் சிறகுகளில்

பாரமாக இருந்து விடக் கூடாதென்பதால்..

சுயநலமே உருவாகின உலகத்தில் அல்லவா வாழ்கிறோம்..பிரிவு என்ற ஒன்று வலிந்து வந்தால்,தந்தால் மீண்டும்,மீண்டும் பறக்கும் சிறகுகள் உடைக்கபடுகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்தும் பிரியாத

உன் நினைவுகள்

மனதின் ஆழத்தில்

பூக்கும் பொழுதெல்லாம்

உன் வெற்றிகள் - என்னை

உற்சாகப் படுத்தும் அன்பே..

இது உண்மையா...???! நினைவுகள்.. உங்களை உற்சாகப்படுத்தும்..???! எல்லோரும் கவலைப்படுறதும்.. வேதனைப்படுவதாகவும் இல்லோ சொல்லுறாங்க...!!!

ஏதோ போங்கோ.. இப்படி.. பிரிவு.. இணைவு என்று கொண்டு.. வாழ்க்கையை ஓட்ட வேண்டிய மனித சமூகத்தில் பிறந்ததே.. வீண். அதிலும் எதிர்பார்ப்பில்லா.. அன்புக்கு என்ன விலை என்று கேட்கக் கூடிய.. எங்கட தமிழ் சமூகத்தில் பிறந்தது.. அதைவிடக் கேவலம்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

இது காதலால் குழம்பியவர்கள் வாரமா? :D

ஒரே தாடிகளின் ஊர்வலமாக்கிடக்கு... :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கதை,கவிதை எழுதிற பெடியங்கள் எல்லாம் காதலில் தோற்ற பெடியங்களாகவே இருக்கிறாங்களே :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொன் வண்டு

முட்டைகளையும்

எல்லைகளற்ற மகிழ்ச்சியுடன்

சேகரித்து வைத்திருக்கும்

சிறுவனைப்போலவே

உன் மேலான

என் அன்பின் நினைவுகளையும்

என்னுடனே எடுத்துச் செல்கிறேன்

என் கனவுகளில்

அலைந்து திரிந்த வெண்மேகமே - உன்

எல்லைகள் பரந்தவை என்பதை

உணர்ந்து கொண்ட பொழுதில்

உன் பாதைகளில் இருந்து தூர விலகி

பல மாதங்களின்பின்னர் தற்செயலாக கவிதைப் பக்கம் வந்தேன். நல்ல கவிதா உணர்வு, பெண்கள் பற்றிய சிறப்பான பார்வை. எடிற்ப ண்ணினால் கவிதை மேலும் வலுவடையும். வாழ்த்துக்கள்

Edited by poet

கவிதை நன்றாக உள்ளது சுபேஷ்.

ஆனால் கூறிய கருத்தில் உடன்பாடில்லை. சிட்டு 'ஹாய் Bye ' என்று டாட்டா காட்டி வேறொரு Boy உடன் பறந்துவிடும். காதல் தோல்விக்காக உருகி உருகி வாழ்க்கையை பாழாக்காதீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது காதலால் குழம்பியவர்கள் வாரமா? :D

குட்டி அண்ணாவின் கவிதைதந்த தாக்கத்தில் எழுதியது அண்ணா... :)

நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.................. இது என் அட்வைஸ் இல்லை :D # படிச்சதில பிடிச்சது

அழகாகச் சொல்லப்பட்டிருக்கு அபராஜிதன்... :)

சுபேஸ்... நன்கு உணர்ந்து எழுதியதைப்போல உள்ளது. சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம்.....

பாராட்டுக்கள்......

நன்றி கவிதை... :)

சுயநலமே உருவாகின உலகத்தில் அல்லவா வாழ்கிறோம்..பிரிவு என்ற ஒன்று வலிந்து வந்தால்,தந்தால் மீண்டும்,மீண்டும் பறக்கும் சிறகுகள் உடைக்கபடுகிறது..

அன்பு புரிந்து கொள்ளப்படாத இடத்தில் அவர்களின் நன்மைக்காக விட்டு விலக நினைப்பது ஒருவிதத்தில் பொது நலம்தானே...நன்றி கருத்துக்கு யாயினி :)

ஏதோ போங்கோ.. இப்படி.. பிரிவு.. இணைவு என்று கொண்டு.. வாழ்க்கையை ஓட்ட வேண்டிய மனித சமூகத்தில் பிறந்ததே.. வீண். அதிலும் எதிர்பார்ப்பில்லா.. அன்புக்கு என்ன விலை என்று கேட்கக் கூடிய.. எங்கட தமிழ் சமூகத்தில் பிறந்தது.. அதைவிடக் கேவலம்..! :):icon_idea:

உண்மை...really like it

ஒரே தாடிகளின் ஊர்வலமாக்கிடக்கு...

நீங்கள் இதைக் கடந்திட்டியள்..அதால நிம்மதியாய் இருக்கிறியள்..நாங்கள் இப்பதான ஆரம்பிக்கிற பருவம்...

யாழில் கதை,கவிதை எழுதிற பெடியங்கள் எல்லாம் காதலில் தோற்ற பெடியங்களாகவே இருக்கிறாங்களே

:D:(

அனுபவங்கள்தானே அழகான படைப்புகள் ஆகின்றன அக்கா...

Edited by சுபேஸ்

பிரிவதற்கென்றே

சேர்ந்த உறவா நாம்..?

புரியாத மெளனங்களே

விடைகளாக

உனை விட்டுப்போவதை

நினைத்து

செத்துப்போகும்

என் விழிகளில்

எட்டிப்பார்க்கின்றன

உன் நினைவுகள்

கண்ணீராய்...

நன்றாகத்தான் வெந்து போனிங்களோ?????? வாழ்துக்கள் சுபேஸ் .

உங்கள் கவிதை அழகு சுபேஸ் :)

எனது கிறுக்கல் அவ்வளவு தாக்கமாகவா இருக்கு? :o:blink::unsure:

குட்டி அண்ணாவின் கவிதை தந்த தாக்கத்தில் இன்று எழுதியது...(http://www.yarl.com/...pic=101771&st=0)

....

இது காதலால் குழம்பியவர்கள் வாரமா? :D

குழம்பியவர்கள் நிதானமாகும் வாரம்... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொன் வண்டு

முட்டைகளையும்

எல்லைகளற்ற மகிழ்ச்சியுடன்

சேகரித்து வைத்திருக்கும்

சிறுவனைப்போலவே

உன் மேலான

என் அன்பின் நினைவுகளையும்

என்னுடனே எடுத்துச் செல்கிறேன்

என் கனவுகளில்

அலைந்து திரிந்த வெண்மேகமே - உன்

எல்லைகள் பரந்தவை என்பதை

உணர்ந்து கொண்ட பொழுதில்

உன் பாதைகளில் இருந்து தூர விலகி

பல மாதங்களின்பின்னர் தற்செயலாக கவிதைப் பக்கம் வந்தேன். நல்ல கவிதா உணர்வு, பெண்கள் பற்றிய சிறப்பான பார்வை. எடிற்ப ண்ணினால் கவிதை மேலும் வலுவடையும். வாழ்த்துக்கள்

நன்றி அண்ணா...

கவிதை நன்றாக உள்ளது சுபேஷ்.

ஆனால் கூறிய கருத்தில் உடன்பாடில்லை. சிட்டு 'ஹாய் Bye ' என்று டாட்டா காட்டி வேறொரு Boy உடன் பறந்துவிடும். காதல் தோல்விக்காக உருகி உருகி வாழ்க்கையை பாழாக்காதீர்கள்.

நன்றிகள் என் உடன்பிறவா அண்ணா..

பிரிவதற்கென்றே

சேர்ந்த உறவா நாம்..?

புரியாத மெளனங்களே

விடைகளாக

உனை விட்டுப்போவதை

நினைத்து

செத்துப்போகும்

என் விழிகளில்

எட்டிப்பார்க்கின்றன

உன் நினைவுகள்

கண்ணீராய்...

நன்றாகத்தான் வெந்து போனிங்களோ?????? வாழ்துக்கள் சுபேஸ் .

:) கருத்துக்கு நன்றிகள் கோமகன் அண்ணா..

உங்கள் கவிதை அழகு சுபேஸ் :)

எனது கிறுக்கல் அவ்வளவு தாக்கமாகவா இருக்கு? :o:blink::unsure:

ஓம் குட்டி..நெஞ்சில் பல நினைவுகளை தூண்டிவிட்டது... :)

Edited by சுபேஸ்

சுபேஸ் அண்ணா, கவிதை நன்றாக உள்ளது...

உங்கள் கவிதை அழகு சுபேஸ் :)

எனது கிறுக்கல் அவ்வளவு தாக்கமாகவா இருக்கு? :o:blink::unsure:

ஏன் குட்டி அண்ணா உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை? உங்கள் கவிதை நன்றாக தானே உள்ளது? நீங்கள் இன்னும் நிறைய கவிதைகள் எழுதுங்கோ. சுபேஸ் அண்ணாவை இந்த கவிதை எழுத தூண்டிய உங்களுக்கும் நன்றிகள்....

இருவரும் இதை வாசியுங்கள்....

என் கனவுகளில்

அலைந்து திரிந்த வெண்மேகமே - உன்

எல்லைகள் பரந்தவை என்பதை

உணர்ந்து கொண்ட பொழுதில்

உன் பறத்தலுக்காக

உன் பாதைகளில் இருந்து தூர விலகி

என்காதலுடன் நான்

ஒடுங்கிக் கொள்கிறேன்..

சிகரங்கள் தொடவேண்டிய

உன் சிறகடிப்புக்காக

சுய நலங்களுடன்

உன்னைச் சுற்றிய

என் கனவுகளுக்கு நானே

தீ மூட்டிக் கொள்கிறேன்..

உண்மையில் ஒவ்வொருவரும் பறக்கும் அளவு வேறுபடும்... ஒருவர் பறப்பதற்காய் மற்றவர் காதலை விட்டுக்கொடுத்தால் இறுதியில் உலகில் காதலே இல்லாமல் போய் விடும்...

நீங்கள் உங்கள் காதலி பறக்கட்டும் என்று விட்டு விலகி இருப்பீர்கள். நாளை உங்களை காதலிப்பவர் நீங்கள் பறக்கட்டும் என்று உங்களை விட்டு விலகி இருப்பார்... :D ஏதோ பறந்து திரியுங்கோ.... கடைசியில சொர்க்கத்தில என்றாலும் போய் பறக்காமல் சேர்ந்து இருங்கோ.... :icon_idea:

குழம்பியவர்கள் நிதானமாகும் வாரம்... :D

:lol::D

Edited by காதல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் அண்ணா, கவிதை நன்றாக உள்ளது...

நன்றி காதல்.... :)

இருவரும் இதை வாசியுங்கள்....

உண்மையில் ஒவ்வொருவரும் பறக்கும் அளவு வேறுபடும்... ஒருவர் பறப்பதற்காய் மற்றவர் காதலை விட்டுக்கொடுத்தால் இறுதியில் உலகில் காதலே இல்லாமல் போய் விடும்...

நீங்கள் உங்கள் காதலி பறக்கட்டும் என்று விட்டு விலகி இருப்பீர்கள். நாளை உங்களை காதலிப்பவர் நீங்கள் பறக்கட்டும் என்று உங்களை விட்டு விலகி இருப்பார்... :D ஏதோ பறந்து திரியுங்கோ.... கடைசியில சொர்க்கத்தில என்றாலும் போய் பறக்காமல் சேர்ந்து இருங்கோ.... :icon_idea:

:lol::D

நன்றி காதல் உங்கள் அன்பான ஆலோசனைக்கு... :)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் அத்தனை வரிகளும் உணர்ந்து எழுதியவை

போல இருக்கின்றது. கவிதைக்கு நன்றி சுபேஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் அத்தனை வரிகளும் உணர்ந்து எழுதியவை

போல இருக்கின்றது. கவிதைக்கு நன்றி சுபேஸ்.

நன்றி ஜயா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.