Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    23
    Points
    15791
    Posts
  2. nochchi

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    5896
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    31986
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    20018
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/24/24 in Posts

  1. நாய்களுக்கும் நரிகளுக்குமான போட்டியில் ஒவ்வொரு முறையும் குயில்கள் பலியாகின்றன குயில்களுக்கு தெரிவதில்லை தாம் தான் தூண்டிலில் கொழுவப்பட்ட புழுக்கள் என.. பேய்களுக்கும் பிசாசுகளுக்குமான போரில் ஒவ்வொரு முறையும் வண்ணாத்திப் பூச்சிகள் கொல்லப்படுகினறன வண்ணாத்திப் பூச்சிகளுக்கு தெரிவதில்லை தாம் தான் வலையில் சிக்க வைக்கப்படும் சிறு கண்ணிகள் என.. மனிதர்களுக்கும் மனிதமற்றவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒவ்வொரு முறையும் கடவுள்கள் கொல்லப்படுகின்றனர் கடவுள்களுக்கு தெரிவதில்லை தாம் தான் மனிதர்களின் பொறியில் வைக்கபடும் இரைகள் என யார் யாருக்கோ இடையிலான யுத்தத்தில் எப்போதும் தோற்றுக் கொண்டே இருப்பவர்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை எப்பவுமே தாம் தான் பலியாடுகள் என -நிழலி
  2. இந்தமுறை பழம்பெரும் தமிழ்த் தலைவர்கள் ஓய்வெடுத்து புதிய மும்மொழி/இருமொழி ஆற்றலுள்ள இளையோரை தேர்தலில் நிறுத்தி 15-20 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற முயற்சிக்கலாமே?!!!!
  3. நன்றி, தமிழரைச் சமத்துவமான பங்காளிகளாக ஏற்க மறுத்தவாறு, ஒருமைப்பாடு, இறையாண்மை என்று கூவியபடி சிங்களம் நாட்டைப் பல்தேசியக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு இலங்கைத்தீவை விற்றாகிவிட்டது. எவர் அரசுத்தலைவரானாலும், இந்த கூட்டுச் சங்கிலியில் இருந்து வெளியில் வரமுடியாதெனபதே யதார்த்தம். முதலில் பொருண்மியத்தைத் தற்போதுள்ள நிலையில் வைத்திருக்கவே போராடவேண்டியிருக்கும். அ.நா.நிதியத்தையோ, கடன் வழங்கிய நாடுகளையோ இலகுவில் கடந்துவிட முடியாது. எனவே மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவே. ஆனால், சில வழிகள் உண்டு அவை கடுமையானவையாகவும், ஏதிர்ப்பலையை உருவாக்கக் கூடியவையுமாகும். 1.மகிந்த சக சகோததர்களினால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ள நிதியை மீளக்கொண்டுவருதல். 2.உள்ளக மட்டத்தில் உள்ள ஊழல் பெருச்சாளிகளின் வருமானத்துக்கு மேலான சொத்துகளை அரசுடைமையாக்கல். 3. உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தலும், ஏற்றுமதிகளை இனங்கானலும். இதில் விவசாயப் பொருட்களுக்கு உற்பத்திக் காலம் தேவை. உடனடியாகக் கடல் வளங்களைப் பயன்படுத்தலாம். 4. தமிழரையும் ஒரு சமத்துமான பங்காளராக ஏற்று உரிய பாதுகாப்பையும், நம்பிக்கையையும் வழங்குவதன் ஊடாகக் கணிசமான புலம்பெயர் முதலீட்டாளர்களை உள்ளீர்த்தல் போன்றவற்றை செய்தல் போன்றன சில சாதகமான மாற்றங்களைப் பொருளாதாரத்தில் கொண்டுவரலாம். 75ஆண்டு காலத்தில், தமிழினத்தை அழிக்கவெனப் படைத்துறைப் பெருக்கத்தோடு நஞ்சுக்குண்டுகளையும், ஆயுதங்களையும் 30ஆண்டுகளாகக் கொள்வனவு செய்தமையின் விளைவே இந்த ஊதிப்பெருத்துள்ள பொருண்மிய நெருக்கடியென்பதை உண்மையான மாக்ஸிஸவாதியாயின் புரிந்துகொண்டிருப்பார். அரசுத் தலைவர் மாறியுள்ளபோதும், மாற்றங்கள் இலகுவானவையல்ல. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. கனம் நாட்டை விட்டு ஓடி அசைலம் அடித்ததால் நாசா விஞ்ஞானி ஆகிய புலம்பெயர் புத்திஜீவியே..! தலைவா வா.. தலைமை ஏற்க வா.. அறிவுரைகளை அள்ளி வீச வா.. இப்படிக்கு தங்கள் அறிவுரைவுரைகளை எதிர்பார்த்து காத்துகிடக்கும் வெளிநாடு போகாமல் ஊரில் இருக்கும் படிப்பறிவு அற்றவர்கள்.. கொய்யாலே.. 😡😡 ஊரில இருக்கிற சனத்துக்கு வகுப்பெடுக்கிற அளவுக்கு வெளிநாட்டுக்கு போயிட்டா உங்களுக்கு தகுதி வந்திடுமோ..? வெளிநாடு ஏஜென்சிக்கு காசுகட்டி போய் அசைலமெடிச்சு விசா எடுத்திட்டா நாங்கள் நாசா வின்ஞானிகள்.. நினைப்பு பெரிசு.. இஞ்ச வந்து 2k கிட்ஸ் இட்ட உத சொல்லிடாதைங்கோ.. வச்சு செஞ்சு விட்டுருவாங்கள்.. ஊரில இருந்தாலும் என்ர மண்ணைவிட்டு போகாமாட்டன் எண்டு கவுரமா உழைச்சு வாழுறாங்கள்.. நாட்டை விட்டு ஓடினவங்கள் எல்லாம் ஊரில இருக்கிறவனுக்கு வகுப்பெடுக்கிறானுகள்.. காலக்கொடுமை..
  5. சுமந்திரன் சாணக்கியன் சொல்லி சஜித்திற்கு வாக்கு விழுந்திருக்காது. ரணிலுக்கு வாக்குகள் விழ பொருளாதாரம் 2027 இன் பின் என்ன ஆகப் போகிறது என்ற பயம் காரணம். சஜித் வாக்குகளின் காரணம், ரணிலின் தீர்வு தொடர்பான பின்னடிப்பினால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் கோபமும். இவை போல, பொது வேட்பாளருக்கு வாக்களிக்க மக்களுக்கு திண்மையான/தொட்டுணரக் கூடிய (tangible) காரணங்கள் எதுவும் இருக்கவில்லை. எனவே, பொது வேட்பாளர் தோற்றார். இந்த எளிய உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் பகுதியெண்ணைக் குறுக்கி "பொது வேட்பாளர் ஓரளவுக்கு வென்றார்" என்று காட்டும் முயற்சி நம்மை நாமே ஏமாற்றும் வேலை தான். இதையே, பொதுத் தேர்தல் வரை தொடர்ந்தால், இப்போது இருக்கும் பா.உ எண்ணிக்கையும் சுருங்கும்!
  6. இந்தப் புகைப்படம் ஒரு ஸ்பெஷல். JVP இன் ஆரம்பம், அதன் தலைவர் பொரளை மயானத்தில் வைத்து இராணுவத்தால் பின்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டமை, அந்த இயக்கம் மீதான அரச இராணுவ இயந்திரத்தின் தேடலும் அழிப்பும், அதனாலான அந்தப் போராளிகளின் மறைவு வாழ்க்கை என்று அந்தப் போராட்ட இயக்கம் மீதான தடை நீக்கப்படும் வரையான வரலாற்றைப் படித்தவர்களுக்கு, இந்தப் புகைப்படம் ஏன் ஸ்பெஷல் என்று புரியும். போராளிகளைத் தேடித்தேடி அழித்த ஒரு சீருடை இயந்திரம், அதே போராளி ஒருவரின் முன்னால் பவ்வியமாக தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறது. காலம்தான் எவ்வளவு வலியது பாருங்கள்! வேட்கை நிறைந்த போராளிகள் ஆளும் தேசம் நேர்மையானது என்பார்கள். தமிழர்களுக்கு அது புரியும். காலம் எப்போதும் மாறலாம். கனவு எப்போதும் திரும்பலாம். மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதிசயம் சொல்லாமல் கொள்ளாமல் நம் வானத்தில் உதிக்கலாம். இதற்கு அநுரவே பெரும் சாட்சி. அவர்கள் அவர்களின் இனதிற்கு உரிய அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்கள், மேலும் அவர்கள் இப்போது ஜனநாயகப்படுத்தப் பட்டு விடடார்கள் ஆனால் இங்கு கதை வேறு. விமர்சனம் வைத்தாலே உள்பேட்டியில் கொலை மிரட்டல், விடுதலை போராட்டத்தின் சரி பிழைகளை கலந்துரையாடி தற்கால சூழலுக்கு ஏற்றது போல நவீனப் படுத்தப்பட வேண்டும், ஏனெனில் தமிழர் யுத்தம் செய்தது வேறு இனத்துடன் அவர்கள் யுத்தம் செய்தது தம்மினத்துடன்,, இல்லாவிட்டால் இறுதிவரை சுயபெருமை பேசிக்கொண்டும் புகழ் பாடிக்கொண்டும் இருக்க வேண்டியதுதான் ,, WhatsApp
  7. "நானும் கம்னியூஸ்டா" "நானும் பனங்காட்டு கம்னியூஸ்டா" "நானும் ஆய்தமேந்தி ஜனநாயகவாதியாக வந்த தோழேன்டா" என பல டயலோக் பேசி அனுராவை கட்டி தழுவ முயற்சிப்பார் .. கடற்படை தளபதியின் பாதுகாப்பில் இருப்பாரோ.. வன்மையாக கண்டிக்கிறேன் ....🤣 ஒரு கம்னியூஸ்ட் தோழன் மற்றோர் சோசலிச தோழனின் காலில் விழுந்த சரித்திரமில்லை..🤣
  8. சிறியும் சுமோவும் ஒன்று சேருவினம். வீட்டுக்குப் போடுங்கோ என்று வருவினம். அரியத்தார் நடுத்தெருவில். அவரை இழுத்து லிட்ட ஆட்களும் பழைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பென்று ஒன்று சேருவினம்.நாங்களும் கணியைப் பார்த்து கருத்து எழுதுவம்.இவ்வளவு காலமும் யாழோடு கிடந்தது பத்ததாதா என்று வீட்டில சத்தம் போட்டாலும் கேளாத மாதிரி தேர்தல் செய்திகளில் மூழ்கிடுவம். கொஞசமாவது லீவு விடக் கூடாதா? கேப் விடாம அடிக்கிறானே!
  9. ஒரே வாங்கில் இருந்தபடியால் நீங்கள் அவர்களாகவே மாறிவிட்டீர்கள். சகல கட்சிகளையும் கலைத்துவிட்டு பொதுக்கட்டமைப்பை கட்சியாக்கி இளையவர்களை உள்வாங்கி ஒன்றாக களமிறங்கலாம்.
  10. பாராளுமன்றத் தேர்தல் இவ்வளவு விரைவில் வரும் என எதிர்பார்க்கவில்லை. தமிழ் அரசியலில்… எத்தனை தலை உருளப் போகுதோ… இப்ப கண்டபடி… “சவுண்டு” குடுத்துக் கொண்டு இருக்கின்ற ஆட்களின் முகத்தை வடிவாக பார்த்துக் கொள்ளுங்கள். வரும் தேர்தலுடன் காணாமல் போகலாம். போன தேர்தலில்… மாவைக்கு நடந்தது, இந்தத் தேர்தலில்.. பிரபல சுத்துமாத்துக்கு நடக்கும் என்று, பட்சி சொல்லுது. 😂 🤣
  11. இப்பதான் கீழ இணைச்சுள்ள கவிதையை வல்லினத்தில் வாசிச்சுட்டு வர உங்கள் கவிதை.. இரெண்டிலும் தொக்கி நிற்கும் கரு ஒன்றே.. நன்றி கவிதைக்கு நிழலி.. ஒரு வாசிக்கத் தெரிந்த கூலியின் சில கேள்விகள் ஏழுவாயில்களைக் கொண்ட தேபிஸ் நகரை யார் கட்டியது? புத்தகங்கள் சுட்டுவதெல்லாம் மன்னர்களின் பெயரை அம்மன்னர்களென்ன பாறைகளை அடுக்கினார்களா? தரைமட்டமாக்கப்பட்ட பேபிலோன் ஒவ்வொரு முறையும் நிமிர்ந்தது யாரால்? தங்கஞ்சுரக்கும் லீமாவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீடுகள் எப்படிப்பட்டவை? சீனப்பெருஞ்சுவர் கட்டிமுடிக்கப்பட்ட மாலை கொத்தர்களெல்லாம் எங்குப் போனார்கள்? ரோமாபுரியின் வெற்றி வளைவுகளைக் கட்டியதார்? சீசர்கள், வாகை சூடியது யாரை மிதித்து? கவிதைகள் போற்றும் பைசேண்ட்டியத்தில் வசிப்பதற்கு அரண்மணைகள் மட்டும்தானா? அட்லாண்டிஸ் கண்டத்தை கடல்கொண்ட நள்ளிரவு மூழ்கியோர் நினைவெல்லாம் தத்தம் அடிமைகளைப் பற்றித்தானாம் இளம் அலெக்ஸாந்தர் இந்தியாவை வென்றான். தனியாகவா? சீசர் ஃகோவுல்சை கொன்றொழித்தான். அவனோடு ஒரு சமையற்காரன் கூட செல்லவில்லையா? ஸ்பெயின் வேந்தன் பிலிப் தன் கப்பற் படை தண்ணீரில் மூழ்கியதற்கு அழுதானாம் அவன் மட்டும் தான் அழுதானா? இரண்டாம் பிரெடரிக் ஏழாண்டு போரில் வென்றான். வேறு யார் வென்றது? ஒவ்வொரு பக்கமும் ஒரு வெற்றி வென்றோர்க்கு யார் சமைத்துப் போட்டது? பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பார் புகழும் பெரிய மனிதனின் வருகை வரிகளை யார் கட்டியது? எத்தனை அறிக்கைகள் எத்தனைக் கேள்விகள் பெர்ட்டோல்ட் பிரெக்ட் (1898-1956) https://www.vallinam.com.my/issue10/poem7.html
  12. கனவு பலிக்குமா? ********************** கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு ஆலயம் கட்டி வழிபாட்டுத்தலமெல்லாம் அனைவரும்.. வந்து வணங்கி வழிபட்டு போனார்களே தவிர.. அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. தமிழ் இணைந்த வடக்கு கிழக்கென்றும் சிங்களம்.. தெற்கு மேற்கென்றும் பகுதி பகுதியாக பிரிந்து வாழ்ந்தாலும் ஒற்றுமையைத் தவிர அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. இப்படி எனக்கு-என் பூட்டனார் கனவில வந்து கதை சொல்லி போனார். அப்போது நினைத்தேன் இப்போது நடப்பது இனவாத.. அரசியல் வாதிகளும்-சில அரசடி வாதிகளும் கொள்ளையடித்து தாம் வாழ நினைத்து. வல்லரசு சிலதோட வறுமையை காட்டி முக்குலத்தையும் முட்டி மோதவிடும் முடிவால்தான்-இன்று எங்களுக்குள்ளே இத்தனை.. சண்டையோ? எண்ணித் திகைத்து இடையில.. எழும்பி விட்டேன். விடியும் போது (21.09.2024) புதிய ஜனாதிபதியின் பொறுமையான வரவு பார்த்தேன். எனியாவது இந்த கனவு பலிக்குமென்ற மகிழ்வோடு.. மனம் நடக்கிறது. . அன்புடன் -பசுவூர்க்கோபி-
  13. ஒரு சிறு திருத்தம்: சுமந்திரன் சொன்னதால் சனம் சஜித்துக்கு வாக்கு போடவில்லை. சனம் இப்படித்தான் சஜித்துக்கு போடும் என சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் போடும் என ரவிராஜின் மனைவி போன்றோருக்கும் ஓரளவு புரிந்து இருந்திருக்கின்றது. இவர்களுக்கு போட்டதால் என்ன சாதகம்? ஒன்றுமில்லை. இனவாத அலை இல்லாத இந்த தேர்தலில், தமிழ் கட்சிகள் மூன்று முக்கிய வேட்பாளர்களுடன் புனர்வாழ்வு, வேலை வாய்ப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, 13 + போன்ற விடயங்களை பேசி ஒரு பேரம் பேசலுக்கு முற்பட்டு ஆதரவு கேட்டு இருப்பின் அது முன்னேற்றகரமாக இருந்திருக்கும். ஆனால் எவரும் அப்படி செய்யவில்லை என்பதால் தமிழர்களின் வாக்குகள் வீணாக மீண்டும் போய்யுள்ளது.
  14. பலருக்கு ஜீரணிக்க கஷ்டம் என்றாலும் உண்மை இது தான். தமிழரசுக் கட்சி / சுமந்திரன் ஆகியோருக்கு தாம் பிரதிநிதிப்படுத்தும் மக்களின் தீர்மானம் பற்றி ஓரளவுக்கு ஏனும் தெளிவு இருந்திருக்கின்றது. இவர்கள் சொல்லித்தான் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கில் சஜித்துக்கு வாக்களித்து இருக்கின்றனர் என்பது தவறு, ஆனால் மக்கள் இப்படித்தான் வாக்களிப்பினர் என்ற புரிதல் இவர்களுக்கு இருந்திருக்கின்றது.
  15. இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது கருமாந்திரம் இலங்கை தேர்தல் வாக்களிப்பு வரைபடத்தில் எப்படி பச்சைக்கலரில் தமிழீழம் வாங்கிக்கட்டியிருக்கிறார் என்று பார்த்து புல்லரித்து புளங்காகிதமடையவேண்டும். தமிழர்களின் வாக்குகள் சாதித்த இந்த சாதனை மகத்தானது. வரைபடத்தை சுருட்டி அப்படியே கருமாந்திரத்திற்கும் தீத்திவிட்டு தாங்களும் சாப்பிட்டு தமிழர்கள் கொண்டாடவேண்டும் வல்லிபுரம் விட்டா காதில நல்லா O...A விடுவார் தமிழரசு கூத்தமைப்பான்கள் உடைந்து கிடக்கிறார்களாம் மற்றையவர்கள் இந்தியகைக்கூலிகளாம். ஆனால் இந்தியகைக்கூலிகள் தான் சஜித்திற்கும், ரணிலுக்கு ஒட்டு போட சொன்னவர்களாம். அப்போ சஜித்துக்கு ஓட்டுப்போட சொன்ன கருமாந்திரம் அண்ட் Co மட்டும் எந்த நாட்டு கைக்கூலி மிஸ்டர் வல்லிபுரம் ...?.
  16. தமிழ்ப் பொதுவேட்பாளர் தனது சொந்த இலாபத்திற்காகத்தான் போட்டியிருகிறார், இந்திய ஏஜெண்ட்டுகளான சுரேஷ் பிரேமச்சந்திரனும், விக்னேஸ்வரனும் பொதுவேட்பாளரின் பின்னால் நிற்கிறார்கள், ரணிலினதும், சஜித்தினதும் வெற்றிவாய்ப்பை பொதுவேட்பாளர் தடுத்துவிடுவார், இனவாதிகளை நாட்டை ஆள வரப்போகிறார்கள், நாங்கள் மீண்டும் இருண்ட யுகம் ஒன்றிற்குள் செல்லப்போகிறோம், கொலைகளும் கடத்தல்களும் நிகழப்போகின்றன, பாணிற்கும், பெற்றோலிற்கும், காஸிற்கும் வீதியில் வரிசைகளில் நிற்கப்போகின்றோம், ஆகவே தமிழ்ப் பொதுவேட்பாளரை எப்பாடுபட்டாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பதுதான் இங்கு யாழில் உள்ள பலருக்கும் தேவையாக இருந்தது. இதில் வேடிக்கை என்னெவென்றால், தமிழ்த் தேசியத்தை இன்றுவரை நேசிப்பதாகக் காட்டிக்கொள்ளும் பலரும், தமிழ்த்தேசியத்தை முற்றாக அழித்துவிட்டு இலங்கையராக மாறவேண்டும் என்று தொடர்ச்சியாக் கூப்பாடு போட்டு வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழின விரோதிகளும் பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதில் ஒன்றுசேர்ந்து நிற்பதுதான். தமிழ்ப் பொதுவேட்பாளர் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றால் அது தேசியத்தின் தோல்வியாகிவிடும், தமிழ் மக்களே தேசியத்தை ஆதரிக்கவில்லை என்கிற செய்தி வந்துவிடும் என்று ஊழைக் கூப்பாடு போடும் பலர் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சிங்கள இனவாதிகளை ஆதரித்துக்கொண்டு தமிழ்ப்பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நிலையெடுப்பது தாம் கூறுவதை தாமே நிராகரிப்பதாகிறது என்பதை உணரவில்லை. பொதுவேட்பாளர் தமிழ் மக்கள் முன்னால் பலத்த ஆதரவினைப் பெறவேண்டும் என்றால் நீங்களும் அல்லவா அவரை ஆதரிக்கவேண்டும்? அதை விடுத்து அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டு விட்டு "ஐய்யோ, இவர் பெறப்போகும் குறைந்த வாக்குகளினால் தமிழ்த் தேசிய தோற்றதாகிறதே" என்று ஏன் பாசாங்கு செய்யவேண்டும்? இந்தியா பின்னால் நிற்கிறது என்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டார்கள். ஆனால் அது இல்லையென்று அவர்களுக்கே தெரிந்த பின்னர் வேறு சுருதியுடன் வலம் வரத் தொடங்கினார்கள். 2010 இல் இனக்கொலைத் தளபதியை வெல்லவைக்க வாக்களித்தபோது தமிழ்த் தேசியம் தோற்பதாக அவர்கள் நினைக்கவில்லை. 2015 இல் இனக்கொலையின் இறுதிநாட்களில் மகிந்த நாட்டைவிட்டு வெளியே சென்றபோது போரை நடத்திய மைத்திரியை ஜனாதிபதியாக்கி அழகுபார்த்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், சிங்கள இனவாதியுமான ரணசிங்க பிரேமதாஸாவின் புத்திரனை 2019 இல் முழுமனதோடு ஆதரித்து வாக்களித்தபோது தமிழ்த் தேசிய தோற்றதாக நினைக்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தேசியம் பேசி வாக்குக் கேட்டதால்த்தான் தமிழ்த் தேசியம் தோற்றுப்போனது. தமிழன் இனிமேல் சிங்களவனுடன் இருக்க முடியாது. எமக்குச் சமஷ்ட்டியே வேண்டும் என்று கூறி தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியினர் இன்றைக்கு சிங்கள இனவாதிகளின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறி அவனுக்கு வாக்குக் கேட்டபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. தமது சொந்த நலன்களுக்காக, பதவிகளுக்காக, வாரிசுகளுக்காக சிங்கள இனவாதிகளுடன் பேரம் பேசி சமரசமும் சரணாகதியும் செய்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ்த்தேசியம் பேசி, தமிழரின் அவலங்களைப் பேசி, அபிலாஷைகளை முன்வைத்தபோது தமிழ்த் தேசியம் தோற்றுப்போனதா? இப்போது தமிழரின் அரசியல் உரிமை பற்றிப் பேசவேண்டாமாம். அன்றாட பிரச்சினைகள் குறித்துப் பேசலாமாம். சரி, தமிழரின் அன்றாடப் பிரச்சினைகளை எந்தச் சிங்களவன், எப்போது தீர்த்துவைப்பான் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. அப்படியானால் அன்றாடப் பிரச்சினையும் தீரப்போவதில்லை, அரசியல்ப் பிரச்சினையும் பேசப்படப் போவதில்லை. தமிழருக்கு இருப்பதும் சிங்களவருக்கு இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினை மட்டும் தான் என்றால் இன்றுவரை நடந்துவரும் திட்டமிட்ட இனக்கொலை யார்மேல் நடத்தப்படுகிறது? இதனை சிங்கள இனவாதிகளில் ஒருவன் வெல்லவேண்டும் என்று தவமிருக்கும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் எப்போதாவது தாம் வணங்கும் சிங்கள தெய்வத்திடம் கேட்டார்களா? சிங்கள இனவாதி ஒருவன் வெல்லவேண்டும், அதற்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எப்படியாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டும், பிரச்சாரப்படுத்தியும், பந்தி பந்தியாக எழுதியும் வந்த நீங்கள் அனைவரும் இன்று கண்ட பலன் என்ன? பொதுவேட்பாளரால் உங்களின் ஆசை நாயகன் தோற்கடிக்கப்படவில்லை. பொதுவேட்பாளரால் ஜே வி பி எனும் பூதம் வெற்றிபெறவில்லை. தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட, நடிக்கத் தெரியாத, உண்மையான தமிழர்களில் இரண்டு இலட்சத்து 22 ஆயிரம் பேர் அவரை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள். மீதமானோர் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்காது விட்டமைக்கு அவர்களை நோகமுடியாது, ஏனென்றால் ஒரு சிங்களவனை எப்படியாவது பதவியில் ஏற்றி அழகுபார்க்கவேண்டும் என்று துடித்து அவர்களை தவறாக வழிநடத்தியது நீங்கள் தான். இவ்வளவு நடந்தபின்னர் ஒற்றுமையாக இருந்தால் ரணிலை வரப்பண்ணியிருக்கலாம் என்று ஒரு தேசியவாதி இங்கேயே அங்கலாய்த்ததைப் பார்க்க முடிந்தது. ஏன், அந்த ஒற்றுமையினை தமிழராக, தமிழ்த் தேசியத்தை காட்ட செயற்பட்டிருக்கலாம் என்று சிந்திக்க அவருக்கு மனம் வரவில்லை? இன்னொருவர், பொதுவேட்பாளர் தான் வெல்லப்போவதில்லையே? பிறகேன் அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று அதிபுத்திசாலியாகக் கேள்வி கேட்கிறார். பொதுவேட்பாளர் போட்டியிடுவதன் நோக்கமே தெரியாமல் அவரை எதிர்த்தால் மட்டும் போதும் என்று பலர் செயற்பட்டிருக்கிறார்கள். நீங்கள் சிரிப்பதும், எள்ளிநகையாடுவதும் வெறுமனே தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று நிறுத்தப்பட்ட அரியநேந்திரனை நோக்கியல்ல. உங்களை நோக்கியே நீங்கள் சிரித்துப் பரிகசித்துக்கொள்கிறீர்கள் என்பதே உண்மை. ஒரு இனத்தின் அவலங்களை, அபிலாஷைகளை தேர்தல் மேடையினைப் பாவித்து பேச வந்த ஒருவனை அந்த இனமே திட்டமிட்டுத் தோற்கடிக்க செயற்பட்டது என்பது ஈழத் தமிழினத்தைத் தவிர‌ தவிர வேறு எந்த இனத்திலும் நடக்கப்போவதில்லை. உங்களைப்போன்ற ஒரு இனத்திற்காகவா தலைவர் தன்னையும் தனது குடும்பத்தையும், இன்னும் 40,000 போராளிகளையும் தியாகம் செய்து போரிட்டார் என்று நினைக்கும்போது, எமதினத்திற்கு விடுதலையும், தன்மானமும், கெளரவமும் ஒரு கேடா என்று மட்டும் தான் கேட்கத் தோன்றுகிறது.. நல்லது. உங்களின் சிங்கள ஆசை நாயகர்களில் ஒருவன் அரசுப் பதவியேற்றிருக்கிறான். வீதிகளில் பால்ச்சோறும், கவுங்கும் கொடுத்துக் கொண்டாடுங்கள். வடக்கும் கிழக்கும் இணையமுடியாது. தமிழருக்கு தனியே இனரீதியாகப் பிரச்சினைகள் இல்லையென்று தான் முன்னர் கூறியதையே இனிமேல் அரச அதிபராக அவன் கூறப்போகிறான். அவனை வழிபட்டுக்கொண்டு மீதமிருக்கும் வக்கிரங்களை பொதுவேட்பாளர் மீது கொட்டுங்கள், உங்களின் இச்சை தீரும் மட்டும். நன்றி.
  17. தமிழ் பொதுவேட்பாளருக்காக உழைத்த எல்லோருக்கும் பாராட்டுக்கள். இத்தோடு காணாமல் போகாமல் இதை ஒரு அரசியல் கட்சியாக்கி எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு அடுத்த அடுத்த தேர்தல்களில் இளைஞர்களை களமிறக்க வேண்டும்.
  18. இலங்கையின் 9 ஆவது புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் திங்கட்கிழமை (23) இடம்பெற்றன. தேசிய மக்கள் சக்தி (NPP)யில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனுர குமார திசாநாயக்க புதிய 9 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். குறித்த நிகழ்வினை முன்னிட்டு அவருக்கும் புதிய அரசாங்கத்தின் எதிர்கால வெற்றிக்கும் ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனையொன்று தேசிய மக்கள் சக்தி கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா தலைமையில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசலில் அஸர் தொழுகையின் பின்னர் இன்று இடம்பெற்றது . இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஒலுவில் , கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், மருதமுனை, நற்பிட்டிமுனை, மாளிகைக்காடு, பெரிய நீலாவணை , உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உட்பட பிரதேச இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர். அத்துடன் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா பள்ளிவாசலின் நிர்வாகிகள் உட்பட தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றியதுடன் இறுதியாக விசேட துஆ பிராத்தனையுடன் இந்நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை! | Virakesari.lk
  19. புத்தன் அண்ணைவை ஏமாற்ற முடியாது வேசத்தை கண்டு மெய்மறந்துவிட மாட்டார் என்பது உறுதியாகின்றது.
  20. நாங்கள் யார் ?🤣யாராவ்து நட்சத்திரங்களாக வந்து ஜோலிக்க தொடங்கிய பின்புதான் வால் பிடிப்போம்...அதுவரை ஆழந்த சிந்தனையில் ஆழ்மன தியானத்தில் இருப்போம்...🤣
  21. உ ங்கள் வாதப்படியே ஆதாரம் எதுவுமின்றி, ரவிராஜின் துணைவியார் போல கப்பித்தானும் அரியருக்கு கள்ள வாக்குகளால் இத்தனை வாக்குகள் கிடைத்தன என்கிறேன்,... யாழ் மத்திய கல்லூரியில் கத்தியதைப் போல . கள்ளா கள்ளா என்று கத்துகிறேன். இப்போது அரியர் கள்ள வாக்குள் போட்டபடியால்தான் இத்தனை வாக்குகளும் விழுந்தன என்கிறேன். இரண்டு வாதங்களும் ஒத்துப்போகிறது அல்லவா? 🤣
  22. நீங்கள் இப்ப இடையில் ஒரு லீவு எடுத்து, கொஞ்ச நாட்கள் ஒரு கணக்கு ட்யூசனுக்கு போனனீங்கள் தானே........... அந்தக் கணக்கு வாத்தியாரை பாவபுண்ணியம் பார்க்காமல் போட்டுத் தள்ளிவிடுங்கோ............🤣.
  23. பாவம் வறுமையில் வாழ்ந்த பொடியன் 🙏. உங்கள் போன்ற பணக்காரங்களுக்கு. கவலையில்லை 🤣😂 கவலைப்படதீங்கள். இப்ப அப்படி திட்டங்கள் வாராது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வரும் 😂🤪. காசை கண்டபடி செலவு செய்யமால். சேரந்து வைத்திருக்கவும். 🙏
  24. இது தான் நிர்வாக வித்தியாசம்............👍. இதுவே பழைய ஆட்சியாளர்கள் என்றால்: தேர்தலுக்கு நிதி வேண்டும் என்பார் தேர்தல் ஆணையாளர் திறைசேரியை கேட்க வேண்டும் என்பார் நிதி அமைச்சர் மத்திய வங்கி ஆளுனருக்கும் இதில் ஒரு கருத்து இருக்கும் எப்படியும் இந்த மாதக் கடைசிக்குள் ஒரு முடிவு எடுத்து விடுவோம் என்று எல்லோரும் சேர்ந்து சொல்வார்கள் அதற்கிடையில் யாரோ ஒருவர் நீதிமன்றில் தேர்தல் திகதி சம்பந்தமாக வழக்கு ஒன்றை போடுவார் தேர்தல் திகதி சொல்லவே ஒரு மாதம் எடுத்திருக்கும்..............🤣.
  25. இடையில 2015 ஆரம்பத்தில் இருந்து 2018 நவம்பர வரை அமைச்சராக பதவி வகிக்கவில்லை. நான் நினைக்கிறேன் அந்த காலகட்டத்தில் எம் பி ஆக முடியாமல் தோற்றார் என. அதே போல் மைத்திரி மகிந்தவை திடீர் பிரதமர் ஆக்கிய காலகட்டத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே அமைச்சராக இருந்த கூத்தெல்லாம் நடந்தது என நினைவு
  26. அப்பப்ப கள்ளுத் தவறணைகளிலும் தானாகவே போய் நிற்குமாமே?
  27. மொத்தத்தில் அடிபலமாக விழுந்திருக்கின்றது! ஆனால் விழாதமாதிரி நடிக்கமுடிகிறது பலருக்கு!😂
  28. வித்துவான்கள் சுமந்திரன் & சாணக்கியன் சொல்லி தான் யாழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்துள்ளார்களாம். அத்தோடு மிச்ச ஆட் களுக்கு அரசியல் தெரியாதாம்.
  29. நல்லதொரு கவிதை பசுவூர்கோபி. உங்கள் கனவு பலிக்க வேண்டும் என்பதே.. எமது அனைவரதும் பிரார்த்தனை. இதிலும்... அவர்கள் இனவாத நோக்குடன் செயல் பட்டால், இருந்த கடைசி நம்பிக்கையும் போய் விடும்.
  30. இஸ்ரேல் தாக்குகின்றது என்பது தவறான கருத்து. அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தாக்குகின்றன என்பதே யதார்த்தம். அமெரிக்கா இல்லை எனில் இந்த தாக்குதல் இப்படி நடைபெற முடியாது.
  31. உண்மைதான், ஆனால் இந்தியக் கைக்கூலிகள் உட்படச் சிங்களத்துக்குச் செம்பு தூக்கும் இவர்களைக் களைவது இலகுவல்ல. இவர்களது படிப்பே எப்படி ஏழை மக்களை ஏமாற்றித் தம்மைத் தக்க வைப்பதென்பதே. இல்லையென்றால் சும் சிங்களக் காவல்துறைப் பாதுகாப்போடு வடமராட்சியில் சுற்றித்திரிந்தவிட்டுச் சஜித்துக்கும் வாக்குக் கேட்க முடிந்திருக்கிறதே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  32. ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி வேண்டும்.
  33. வாட்ஸப்பில் கண்டது….. அனுராவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தமிழ் அதிகார வர்க்கத்தினர் பலர் சமூக வலைத்தளங்களின் பிதற்றுகின்றனர். உங்களுக்கு ரணில் நல்லவர் சஜித் நல்லவர், சரத் பொன்சேகா நல்லவர் ,சஜித்தோடு இருந்த G.L பீரிசு நல்லவர். ஆனால் அனுரா இனவாதி.வடக்கு கிழக்கை பிரித்த கட்சியைச் சேர்த்தவர். என்னங்கடா உங்கட நியாயம் . ரணில் சஜித்,சரத் பொன்சேகா ,சஜித்தோடு இருந்த G.L பீரிசு எல்லோரும் வடக்கு கிழக்கிலே தேனும் பாலும் ஓடவிட்டவங்களா ? விடுதலை புலிகள் இஸ்லாமியர்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதை வைத்துக்கொண்டு ,அது தவறு என்பதை புலிகள் ஏற்றுக்கொண்ட பின்பும் இன்றளவும் புலிகள் எங்களை இன சுத்திகரிப்பு செய்தவர்கள் பயங்கர வாதிகள் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது .உங்களுக்குள் யாரும் பிரதேச வாதிகள் இல்லையா ? சாதி வெறியர்கள் இல்லையா? ஸ்ரீலங்காவிலே முதல் தடவையாக இனவாதத்தை மூலதனமாக வைக்காமல் ஒருவர் தேர்தலிலே வென்றிருக்கிறார். சிங்கள இளைய தலை முறை மாற்றத்தை விரும்புகிறது . ஆனால் நீங்கள் ? மாறமாட்டோம் என்று அடம் பிடிக்கிறீர்கள் 1971 ல் நடத்திய ஆயுத போராடத்திலே அவர்கள் 13000 பேரை இழந்தார்கள். அதன் பின் மீண்டெழுந்து 1987-89 ல் நடத்திய ஆயுத போராட்ட த்திலே 60000 பேரை இழந்தார்கள் .அவர்களது தலைவர்கள் உயிருடன் எரிக்கப்படடார்கள்.அதன் பின்பும் அவர்கள் மீண்டுவந்தார்கள். ஆயினும் எங்களுக்குள் இருந்ததை போலச் சில புல்லுருவிகள் அவர்களுக்குள்ளும் ஆதிக்கம் பெற்றதால் தடம்புரண்டு விழுந்து எழும்பினார்கள் , பின்னர் தங்களது தவறுகளிலிருந்து படிப்பினைகளை பெற்று தங்களை மறுசீரமைத்துக்கொண்டு இன்று வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் ....... நான் அவற்றை எழுத விரும்பவில்லை தற்போது அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியுள்ள கலாநிதி லயனல் போபகே தெரிவித்துள்ள கருத்துக்களை படித்துப் பாருங்கள். கலாநிதி லயனல் போபகே, ரோஹன விஜேவீர தலைமையிலான ஜேவிபி இன் முதலாவது பொதுச் செயலாளரக இருந்தவர் . இருவரும் சம காலத்தவர்கள் மற்றும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணியை கொண்டவர்கள். இவர்கள் இருவரும் 1947 பாராளுமன்றத் தேர்தலின்போது மாத்தறை மாவட்டத்தில் யுஎன்பி ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிப்புகளை எதிர்கொண்ட கம்யூனிஸ்ட் குடும்பங்களின் வாரிசுகள். 1960 களில் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் மாணவராக இருந்த போபகே ஜேவிபி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 1971 கிளர்ச்சியின்போது கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார் . பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் தோற்றுவதற்கென 1972 இல் கண்டி போகம்பரை சிறைச்சாலையிலிருந்து அவர் பேராதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மீண்டும் 1983 இல் 'தமிழர்களுக்கெதிரான வன்முறையைத் தூண்டினார்கள்' என்ற பொய் குற்றச்சாட்டின் பேரில் ஜே ஆர் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட 21 இடது சாரி செயற்பாட்டாளர்களில் அவரும் ஒருவர். "கறுப்பு ஜூலை அட்டூழியங்கள் தொடர்பாகச் சிரில் மத்தியூ மற்றும் காமினி திஸாநாயக்க போன்றவர்களைக் கைது செய்து, சிறையில் அடைக்காமல் எங்களைக் கைது செய்தது ஏன்? யுஎன்பி யைத்தடை செய்வதற்குப் பதிலாக, ஜேவிபியை தடை செய்தது ஏன்" எனக் கேட்டு, அச்சந்தர்ப்பத்தில் போலிஸாருடன் வாதிட்டதை நினைவு கூருகிறார் போபகே. ஆனால், இரண்டு முதன்மையான விடயங்களின் அடிப்படையில் ரோஹன விஜேவீரவுடன் முரண்பட்டுக் கொண்ட அவர் 1983 இல் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து, ஜேவிபி இலிருந்து வெளியேறினார். சிறுபான்மை இனங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்தமை மற்றும் ஜேவிபி மீண்டும் வன்முறையை ஓர் அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்திருந்தமை ஆகிய இரண்டு நிலைப்பாடுகள் தொடர்பாக விஜேவீரவுக்கும், அவருக்குமிடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் தோன்றின. அந்த நிலையில், கட்சியிலிருந்து வெளியேறுவதைத் தவிர அவருக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை . அதன் பின்னர் தொடர்ந்து ஜேவிபி இன் மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறார். தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் கலாநிதி லயனல் போபகே 'இலங்கையில் ஜனநாயகத்துக்கான குரல்' என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். இந்நாட்டில் வாழ்ந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலைச் சமூகங்கள் ஆகியோரின் அரசியல், கலாசார உரிமைகளுக்காக அந்த அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தற்போது நாடு திரும்பியிருக்கும் அவர் ஒரு யூடியூப் தளத்தில் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரியுடன் நடத்திய விரிவான உரையாடலொன்றில் இலங்கையின் இன்றைய அரசியல் நிலவரங்கள்குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். '' தேசிய இனப் பிரச்சினை தொடர்பான ஜேவிபி நிலைப்பாடு மற்றும் அதன் வன்முறைச் சாய்வு ஆகிய இரண்டு முக்கியமான விடயங்களின் அடிப்படையில் நீங்கள் 1983 ன் பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறி, அதன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், இன்று ஜேவிபி யின் புதிய அவதாரமான தேசிய மக்கள் சக்தியை (NPP) ஆதரிக்கும் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள். இது ஏன் என விளக்க முடியுமா''? என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர் - ''தேசிய இனப் பிரச்சினை மற்றும் வன்முறை ஆகிய விடயங்கள் தொடர்பான என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் அவற்றுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற்று, சமத்துவமான பிரஜைகளாகக் கண்ணியத்துடன் வாழக்கூடிய ஒரு சூழல் நாட்டில் உருவாக வேண்டும் என்பதே எனது அவா." "2016 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தப் பிரச்சினைகள் தொடர்பான ஜேவிபி யின் அணுகுமுறையில் படிப்படியான ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதை அவதானித்திருக்கிறேன். இப்பொழுது அந்த அணி 'சுய நிர்ணய உரிமை' என்ற வார்த்தையை நேரடியாகக் கூறாவிட்டாலும் கூட, தமிழ் மக்களையும் உள்ளிட்ட இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன என்ற விடயத்தையும், அப்பிரச்சினைகள் ஒவ்வொன்றும் புறம்பான விதத்தில் கையாளப்பட வேண்டும் என்ற விடயத்தையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றது. "அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளை அவர்கள் விரிவாக விளக்கிக் கூறாவிட்டாலும் கூட அதுவே ஒரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றம் என நான் நினைக்கிறேன்". "மேலும் இன்று தேசிய மக்கள் சக்தி பல முற்போக்கு அமைப்புகளையும், குழுக்களையும், பன்முகப்பட்ட தொழில்வாண்மையாளர் கழகங்களையும் உள்வாங்கிய ஒரு பரந்த முன்னணியாக எழுச்சியடைந்திருக்கின்றது." "மாகாண சபைகள் தொடர்பாக NPP இன்னமும் ஒரு சில மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்த போதிலும், 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும் என்ற விடயத்தை அது ஏற்றுக் கொள்கின்றது. குறிப்பாக, தமிழ் தரப்புடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என்றும் அது கருதுகிறது." என்று கூறினார். " 'பழைய ஜேவிபி இப்பொழுது என்பிபி என்ற முகமூடியுடன் களமிறங்கியிருக்கிறது. அது எந்த ஒரு நேரத்திலும் மீண்டும் வன்முறையைக் கையில் எடுக்க முடியும்' என ஒரு சில விமர்சகர்கள் கூறி வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்" என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இலங்கை சமூகத்தின் அனைத்துத் தரப்புக்களையும் உள்வாங்கி ஒரு பாரிய மக்கள் இயக்கமாக எழுச்சியடைந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி இனிமேல் எந்தவொரு காரணத்திற்காகவும் வன்முறையை நாட வேண்டிய தேவை அறவே இருந்து வரவில்லை" என ஆணித்தரமாகக் கூறினார். "1987 - 1989 கிளர்ச்சியின்போது ஜேவிபி ஒரு தீவிர சிங்கள தேசியவாத நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அந்தப் பின்னணியிலேயே வன்முறைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன. "ஆனால், இன்றைய என்பிபி யில் அந்தக் கருத்தியலுக்கு இடமில்லை. என்கிறார் கலாநிதி போபகே. கடந்த 75 வருட நாடாளு மன்ற அரசியல் வரலாற்றில் தமிழினம் சந்தித்த இன்னல்களுக்குச் சிங்கள பெளத்தஇனவாத தலைவர்கள் மட்டுமல்ல அவர்களோடு திரை மறைவில் இரகசிய கூட்டு வைத்திருந்த தமிழ் தலைவர்களும் காரணமாகும்.
  34. அவர்களுக்கு இவ்வளவு காலமும் நல்ல சிறிலங்கா தேசிய தலைவர் கிடைக்கவில்லை ....இப்பொழுது கிடைத்து விட்டார் இனி பாருங்கோவன் நம்ம கூட்டமைப்பின் ராஜதந்திரத்தை
  35. பாராளுமன்ற சோசலிசவாதிகளுக்கு இந்த ஜனாதிபதி அதிகாரம் ஒர் வரப்பிரசாதம் ... தொடர்ந்து ஆட்சியை அமைத்து கொள்ள ..இது உலக வரலாறு ... வெனிசுலா பாணியா...கியுபா பாணியா...
  36. இப்படியானவர்களுக்கு பதவி கொடுத்தால் மீண்டும் சிறிலங்காவை அழிவு பாதைக்கு இட்டு செல்கின்றார் அனுரா என்பது தான் அர்த்தம்..
  37. அதிகம் படித்த யாழ்ப்பாண மக்கள் தொலைபேசிக்கும், கல்குலேற்றருக்கும் வித்தியாசம் தெரியாமல் குத்தியிருக்கின்றார்கள்.
  38. நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் விகித ஒப்பீடு வன்னி: 9,381 விகிதம்: 4.14 திருகோணமலை: 5821 விகிதம்: 2.37 மட்டக்களப்பு: 8876 விகிதம்: 2.71 திகாமடுள்ள (அம்பாறை): 6563 விகிதம்:1.53 கம்பகா: 29,381 விகிதம்: 1.97 கொழும்பு: 31,796 விகிதம்: 2.33 யாழ்ப்பாணம்: 25,353 விகிதம்: 6.39 ஒரு காலத்தில் படிப்பறிவில் நாம் முன்னிலை வகித்தோம் என்று சொல்கின்றது வரலாறு!
  39. கொள்ளைக்காரருக்கு மறுபெயர் பிரபுக்களோ?
  40. தங்களுக்கு நன்றி, ஒருகுழுமத்தின் தமிழ்தேசியத்துக்கான முயற்சி உங்களுக்குச் செத்தவீடாகத் தெரிகிறது. ஆனால் வேறு சிலருக்கு விவாதிக்கவும், ஆராயவும் வேண்டியதாக இருக்கிறது.அது அவரரவர் நோக்குநிலை சார்ந்தது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  41. இங்கு அடிக்கடி மைத்திரி யை தமிழ் மக்கள் ஆதரித்தது பற்றி குறைப்படுகின்றவர்கள் உள்ளனர். மைத்திரியின் அரசுக்கு முன் இருந்த மகிந்த & CO வின் காட்டாட்சியில் கிரீஸ் பூதத்தில் இருந்து பல பயங்கரங்களையும் அச்சுறுத்தல்களையும் தாயக மக்களும் முன்னால் போராளிகளும் அனுபவித்து கொண்டு இருந்தனர் என்பதையும் அந்த காட்டாட்சியை அகற்ற தாயக மக்களால் தம்மால் இயலுமான ஒரு நடவடிக்கையாக மைத்திரியை ஆதரித்தார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள மாட்டினம். இதில் பலர் மஹிந்த ஆட்சியில் தாயகம் பக்கம் தலைவைத்தும் படுக்காமல், 'நல்லாட்சி காலத்திலும் ' அதன் பின் ரணில் காலத்திலும் ஊருக்கு முதன் முதலாக போனவர்களும் அடக்கம்.
  42. அப்பவும், இப்பவும்.... அவர்கள் தோற்கிற குதிரைக்குத்தான் ஆதரவளிப்பார்கள். 😂
  43. ஒன்று மட்டும் உண்மை 1971 இலோ அல்லது ரோகண விஜயவீர உயிருடன் இருக்கும் வரை இன துவேசம் அவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் அதன் பின் அது அவர்களுக்கிடையிலும் புகுந்துள்ளது என்பதுக்கு விமல் வீரவன்ச கட்டாயம் ஒரு உதாரணம். மேலும் சுனாமி காலத்தில் கட்சி நடந்த விதம் மற்றும் வடக்கு கிழக்கு பிரித்தது இன்னும் ஒரு உதாரணம்.
  44. நான் தங்கள் கருத்தை பார்த்தவுடன் யோசித்தேன், சிறிலங்கா தேசியவாதிகள் வினா எழுப்புவர் என்று...
  45. அமரர் வீ.நடராஜா ஐயாவிற்கு அவர்களுக்கு யாழ் இணைய உறவுகள் சார்பாக கள உறவு ஒருவர் மலர்மாலை போட்டுள்ளார்.
  46. எண்ணப் 😂பறவை சிறகடித்து .........! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.