Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    38754
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87988
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19122
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    34973
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/10/25 in all areas

  1. விஜய் மட்டுமல்ல, நியாயமாக சிந்திக்க கூடிய ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பின், அவர்கள் செய்யக் கூடியது மக்களைத் திரட்டி போராட்டம் அல்ல. மீனவர்களை நோக்கி, எல்லை தாண்டிச் சென்று, அயலக மீனவர்களின் மீன்வளத்தை கொள்ளையடிக்க வேண்டாம் என்று சொல்வதே. கடல்வள கொள்ளையர்கள் தம் செயல்களை நிறுத்துவதைத் தவிர இந்த பிரச்சனைக்கு எந்த தீர்வும் இல்லை. ஸ்டாலினில் இருந்து, சீமான் மற்றும் விஜய் வரைக்கும் இதைச் சொல்லும் துணிவு அற்றவர்கள்.
  2. அவளைத் தொடுவானேன்...? சிறு வயதில் இருந்தே இசை நாடகம் பாடல்களில் ஈடுபாடு அதிகம் எனக்கு. சாதாரண தரப் பரீட்சையில் சங்கீதத்தில் செய்முறை அதாவது பாடி 60 க்கு 58 புள்ளி எடுத்து அதி சித்தி (D) எடுத்திருந்தேன். அத்துடன் நகைச்சுவை என்னோடு கூடப் பிறந்தது. இதனால் என்னை சுற்றி எப்பொழுதும் ரசிகர்கள் மற்றும் கலைஞர்கள் கூட்டமும் நான் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாகவும் இருக்கும். அந்த நேரத்தில் தான் தென் பகுதியில் படித்து கொண்டு இருந்தவள் எங்கள் ஊருக்கு வந்தாள். அவள் நடக்கும் போது காலடிகளில் இரத்தம் பொக்களிப்பது தெரியும் அந்த அளவுக்கு அவள் வெள்ளையாக இருந்தாள் அத்துடன் தென் பகுதியில் படித்ததால் அவள் தமிழ் இன்னொரு வகை தேனாக இனிக்கும். கேட்க கேட்க கேட்க தோன்றும். அவள் என்னிடம் பாடச்சொல்லி கேட்பாள். நான் அவளை பேசு என்பேன். இப்படி தான் அறிமுகமானோம். அவள் என் கையை எப்பொழுதும் பிடித்துக் கொள்வாள். இதற்கு மேல் தாங்காது நான் அவளை தொட்டேன்..... காலம் என்னை தூக்கி கொழும்பில் போட்டது. தொடர்பு அறுந்தது. தொடரும்.....
  3. யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வீரப் பையன்26 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம்வரை சமநிலையான புள்ளிகளுடன் இருக்கும் @செம்பாட்டான் , @Eppothum Thamizhan , @புலவர் ஐயா, @நீர்வேலியான் , @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். ஏழாம், எட்டாம் இடங்களில் சமமான புள்ளிகளுடன் இருக்கும் @nunavilan , @நியாயம் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றி பல.
  4. யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வீரப் பையன்26 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம்வரை சமநிலையான புள்ளிகளுடன் இருக்கும் @செம்பாட்டான் , @Eppothum Thamizhan , @புலவர் ஐயா, @நீர்வேலியான் , @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். ஏழாம், எட்டாம் இடங்களில் சமமான புள்ளிகளுடன் இருக்கும் @nunavilan , @நியாயம் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றி பல.
  5. சுற்றுலா, வேலை, நண்பர்கள் சந்திப்பு, கொண்டாட்டம் என்று வெளியே சில நாட்கள் நாம் போய் இருந்து விட்டு வந்தாலும், வீட்டுக்கு திரும்ப வந்து சொந்தக் கட்டிலில் நித்திரை கொள்வது எப்போதும் மகிழ்ச்சியையும், அமைதியையும் நிம்மதியையும் தரும். அது தான் வீட்டின் தனித்துவமான தன்மை. ஆனால் தனது வீட்டில், தனது கட்டிலில் படுத்திருக்கும் காஞ்சனாவுக்கு மட்டும் நித்திரையும் வரவில்லை. அமைதியும் கிடைக்கவில்லை. இருட்டில் விழித்தபடி இருந்தாள். “நல்ல பெடியன், எங்கடை ஊர். ஓரளவு தூரத்துச் சொந்தம். நல்ல குடும்பம் எண்டு என்ரை அம்மா சொல்லுறா. இந்தக் கலியாணத்தைக் கட்டு. நல்ல வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்” அவளது தந்தை சொன்ன போது அவள் பதில் சொல்லவில்லை. யேர்மனியில் பிறந்து வேறு ஒரு கலாச்சாரத்துக்குள் வாழும் தனக்கு நாட்டில் இருந்து வரும் மாப்பிள்ளை ஒத்து வருமா? என்ற கேள்வியுடனே சில நாட்கள் போனது. அவளது நண்பிகளே கேட்டார்கள், ”என்னது? முன்பின் தெரியாத ஒருவன். நேரில் கூட பார்க்கவுமில்லை. உங்களுக்கு எப்பிடி இது சாத்தியமாகிறது?” அவர்களது கேள்வியிலும் உண்மை இருந்தது. காஞ்சனாவுக்கு ஐந்து வயாதாக இருக்கும் போது நடந்த கார் விபத்தில் தாயை இழந்திருந்தாள். அதன் பிறகு அவளது தந்தையே அவளுக்கு எல்லாமுமாக இருந்தார். எத்தனை பேர் கேட்டும், தனக்கு இன்னுமொரு கலியாணம் வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்து தனக்காக வாழும் தந்தையை எப்போதும் அவள் உயரத்திலையே வைத்திருந்தாள். அவரது வார்த்தைக்கு அவள் மறு பேச்சு சொன்னதும் இல்லை. சீதனமாக ஒரு இலட்சம் யூரோ, நகை, ஊரில் அவர்களுக்கு இருந்த காணி, பூமி, சிறீலங்காவில் இருந்து கல்யாணத்துக்கு உறவினர்கள் யேர்மனிக்கு வந்து போவதற்கான பயணச் செலவுகள், கல்யாணச் செலவு… என்று ஏகப்பட்ட செலவுகளுடன் எங்கள் நாட்டுக் முறைப்படி கரை சேர்ந்தாள் காஞ்சனா. கல்யாணம் முடிந்து ஒரு மாதம்தான். விடுமுறை முடிந்து விட்டது. பிரச்சினையும் தொடங்கி விட்டது. அன்று வேலை முடிந்து வீட்டுக்கதவைத் திறந்த போதே வீட்டில் புயல் மையம் கொண்டிருந்ததை காஞ்சனா விளங்கிக் கொண்டாள். “நேரம் என்ன எண்டு தெரியுதோ?” “நீங்கள்தானே கையிலை Mobile வைச்சிருக்கிறீங்கள். Mobile இலை நேரம் என்ன display செய்யேல்லையோ?” “எனக்குத் தெரியுது? உனக்குத்தான் தெரியேல்லை. ஒரு பொம்பிளை வீட்டுக்கு வாற நேரமே இது? “ “இப்பத்தானப்பா வேலை முடிஞ்சுது” “இரவு ஒன்பது மணிக்கோ? எல்லாரும் office முடிஞ்சு ஐஞ்சு ஆறு மணிக்குள்ளை வீட்டை போயிடுவாங்கள். உனக்கு மட்டும் ஒன்பது பத்து மணியாகுது” “இண்டைக்கு வேலை கூட. அதை முடிக்காமல் வரேலாது. அப்பிடி வந்து மிச்ச வேலையைச் செய்ய நாளைக்குப் போனால், ஒவ்வொரு நாளும் போக வேணுமோ எண்டு புராணம் பாடத் தொடங்கீடுவிங்கள்” “மகள் home office தான் செய்யிறாள். எப்போதாவது மாதத்திலை ஒண்டு இரண்டு நாட்களுக்குத்தான் officeக்குப் போவாள் எண்டு சொல்லித்தானே கலியாணம் செய்து வைச்சவை. “உண்மை. ஆனால் என்ரை வேலை அப்பிடி. சில வேலைகளை office க்குப் போய்த்தான் செய்யோணும்” “எனக்கென்னவோ நீ வேலைக்காக office க்குப் போறதாத் தெரியேல்லை” “மாதவன், களைச்சுப் போய் வந்திருக்கிறன். நல்லமுறையிலை கதையுங்கோ. சிறீலங்காவிலை இருக்கிற ஊர் வாழ்க்கையை இங்கை உள்ள வாழ்க்கை முறையோடை ஒப்பிட்டுப் பார்க்காதையுங்கோ. அங்கை உள்ள சூழல் வேறை. இங்கை வேறை. “நாங்கள் தமிழர்கள். எங்கை வாழ்ந்தாலும் எங்களின்ரை பண்பாடுகளை மாத்தேலாது. இரவு ஒன்பது பத்து மணிக்கு வீட்டுக்கு வாறதை என்னாலை ஒத்துக் கொள்ளேலாது” “முதலிலை நானும் மனித இனம் எண்டதை ஒத்துக் கொள்ளுங்கோ. எங்கடை கலாச்சாரம், பண்பாடுகள்... என்னை அடிமைப் படுத்தும் எண்டால் எனக்கு அது தேவையில்லை” “கலியாணம் பேசக்கை நீ நல்ல பிள்ளை, பண்பான பிள்ளை எண்டெல்லாம் எனக்குச் சொல்லிச்சினம். உடுப்பு, ஆளின்ரை நடை, செயல்பாடு எல்லாம் இஞ்சை வேறையாக் கிடக்கு” மனம் ஒரு நிலையில் இல்லாமல் கட்டிலில் நித்திரையின்றி தவித்துக் கொண்டிருந்த காஞ்சனா, அலைபேசியில் ஒலித்த “ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்“ பாடலைக் கேட்டு கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டாள். அந்தப் பாடலை தனது தந்தையின் தொலைபேசி அழைப்பாக அவள் அலைபேசியில் பதிவு செய்திருந்தாள். கட்டிலில் இருந்த படியே அலைபேசியைக் கையிலெடுத்து “சொல்லுங்கோ அப்பா” என்றாள். “மாதவன் ரெலிபோன் எடுத்தார்” “எடுப்பார் எண்டு எனக்குத் தெரியும்” “கதவைத் திறக்கேலாதாம் உனக்கு போன் எடுத்தால் answer இல்லையாம்” “அவராலை கதவைத் திறக்க ஏலாது. நான் கதவின்ரை பூட்டை முழுசா மாத்தீட்டன். Phoneஇலையும் அவரை block செய்திட்டன். எனக்கும் அவருக்கும் ஒத்து வரேல்லை. அவருக்கும் எனக்குமான கலியாண ஒப்பந்தம் முடிவுக்கு வருகுது. நான் lawyer ஓடை எல்லாம் கதைச்சிட்டன். நீங்கள் கலியாணம் என்று கேட்டபோதே நான் வேண்டாமெண்டு சொல்லியிருக்கோணும். அந்த நேரம் நான் உங்களின்ரை சொல்லை மதிச்சனே தவிர மற்றதையெல்லாம் சிந்திச்சுப் பாக்கேல்லை. இங்கை ஒவ்வொருநாளும் சண்டை. அவரின்ரை சந்தேகப் பார்வை, பேச்சு…… அப்பா, நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்தனான். மாதவனுக்கு சீதனமா ஊரிலை இருக்கிற சொத்துகள், பிறகு காசு, நகை எல்லாம் குடுத்தீங்கள். வேணுமெண்டால் ஒரு நட்ட ஈடாக மாதவனும் அவரின்ரை குடும்பமும் அதுகளை எடுத்துக் கொள்ளட்டும். என்னைக் கட்டினதாலை அவருக்கு யேர்மனி விசாவும் கிடைச்சிருக்கு. நல்ல வேலையையும் அவருக்கு ஏற்ற பொம்பிளையையும் அவர் தேடிக் கொள்ளட்டும். என்னைப் பொறுத்தவரை இனி அவர் எனக்கு வேண்டாம். மாதவனின்ரை சகல பொருட்களையும் கட்டி கராஜ்ஜுக்குள்ளை வைச்சிருக்கிறன். கராஜ் திறந்துதான் இருக்கு. எடுத்துக் கொண்டு போகச் சொல்லுங்கோ” அலைபேசியை வைத்து விட்டு காஞ்சனா கட்டிலில் படுத்தாள். நிம்மதியாக இருந்தது. இனி வீட்டுக் கட்டிலில் சுகமான தூக்கம் அவளுக்கு க் கிடைக்கலாம்.
  6. ட்றம்பின் வரி மிரட்டலுக்கான தாக்கம் இன்று அமெரிக்க பங்குச் சந்தையில் எதிரொலித்துள்ளது. இதில் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவனம் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்றைய வீழ்ச்சியுடன் கடந்த 3 மாதங்களில் டெஸ்லா நிறுவனம் 800 பில்லியன் டொலருக்கும் (மில்லியன் அல்ல) அதிகமான பங்குச் சந்தை முதலீட்டினை இழந்துள்ளது. டெஸ்லாவின் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணமாக மஸ்க் - ட்றம்ப் கூட்டு மற்றும் தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவான மஸ்கின் அண்மைய கருத்துக்கள் குறிப்பிடப்படுகிறது. இப்படியே சென்றால் டெஸ்லா நிறுவன முதலீட்டாலர்கள் மஸ்கை நிறுவனத்தை விட்டு வெளியேறுமாறு கேட்கலாம். ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே இறுமாப்புடன் ஆட்டம் போட்ட இவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு வகையில் உலகம் தக்க பதில் கொடுக்கிறது.
  7. மத்திய அரசு ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதாகவும் மத்திய அரசும் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட வலை, மீன்பிடி முறைகளை தடை செய்துள்ளதாம்! ஆனால் கடலுக்கு செல்லும் மீனவப்படகு அனுமதி முதல் பரிசோதனைகள் எல்லாம் மாநில அரசிடம் தானே அண்ணை அதிகாரம் இருக்கிறது. அவர்கள் தடைசெய்யப்பட்ட முறைகளை கண்காணித்து பிடித்தாலே போதுமே! தமிழக மீன்பிடி படகு முதலாளிகள் அரசியல்வாதிகள் எனில் அவர்கள் எப்போதும் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவது வழமை தானே!
  8. முதலீடு இல்லாத குடிசைக் கைத்தொழிலாக ஆரம்பித்து இப்போது றௌடிகளை உருவாக்கி விடும் பெருந்தொழில் பேட்டையாக மாறி நிற்கிறது. ஏன் இந்த லூசுகளின் அலட்டல் வீடியோக்களைப் பார்த்து வளர்த்து விடுகிறார்கள் மக்கள்? நுகர்வோர் இல்லா விட்டால் உற்பத்தியும் குறைந்து விடும், எனவே நுகர்வைக் குறையுங்கள், சந்தா தாரராக இருந்தால் நீங்கி விடுங்கள்.
  9. வீரப்பையன், இந்தத் திரியிலே அதிக குப்பை கொட்டினதும் நாமதானாம்.😁
  10. கிரெடிபிலிட்டி காற்றில் போய்விட்டது என வேலிபாய்ந்தோடியவர்கள் யார் என்பது யாழ்களத்துக்கு வாசகருக்கு என்றும் நினைவில் இருக்கும்🤣. ஆகவே யாருக்கு, யார், யாரை இனங்காட்டுவது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்🤣. மேலே சீமான் மேலே சொல்லியது சடையல் அல்ல. நான் சீமான் பிஜேபி ஏ டீம் என சொல்லவில்லையே? அவர் பி டீம். அவர் அடிப்பதுமாரி அடிப்பார், பிஜேபி அழுவதுமாரி அழும். சீமானை பார்த்து அழுக்காறு நான் அடைய தேவையில்லை. ஏன்? நான் சொந்த உழைப்பில் சாப்பிடுகிறேன். சீமானை போல (சினிமா) எனது துறையில் தோல்வி அடைந்து விட்டு இன்னொரு துறைக்கு நான் பாயவில்லை. திருமணம் ஒன்றுதான் எந்த பெண்ணும் என்னை ஏமாற்றிவிட்டார் என சொல்ல இடமில்லாமல் வாழ்கிறேன். என்னை ஒத்த தோற்றமுடைய 15 வயது பையனை மனைவியின் வளப்பு மகன் என நான் திடீரென அறிமுகம் செய்யவில்லை. போன தேர்தலில் இல்லாத 8 கோடி நீலாங்கரை பங்களா என்னிடம் இல்லை. எனது உற்ற தோழன் இறந்தபின் அவன் சாவுகட்டை இடிப்பித்து, அவன் யாரென்றே தெரியாது என பொய் கூறும் வஞ்சகன் நான் இல்லை. இன்னும் பல காரணங்கள் உளன. தேவைபட்டால் கேட்கவும். என்னை கேவலப்படுத்துவது யாழில் எழுதுவதோடு கூடவே வரும் occupational hazard அதை நான் கிஞ்சித்தும் கனம் பண்ணுவதில்லை. ஆனால் இப்படிபட்ட கேவலமான மனிதனோடு எனக்கு அழுக்காறு என கேவலப்படுத்துவது ஓவர் 🤣. அண்டைக்கு 100 லைக்ஸ் யூடியூபரோடு அழுக்காறு எண்டீர்கள். இப்போ இது🤣
  11. எழுதி அனுப்பின‌ பிற‌க்கு அல்லா அக்ப‌ட் எழுத‌ ம‌ற‌ந்து விட‌ வேண்டாம் குரு😁 செம்பாட்டான் , நான் , இருவ‌ரும் தெரிவு செய்த‌ ப‌ந்து வீச்சாள‌ர் இந்த‌ தொட‌ரில் விளையாட‌ வில்லை , அப்ப‌டி இருந்தும் 42 புள்ளி கிடைச்ச‌து ம‌கிழ்ச்சி...................
  12. போட்டியை மிகச் சிறப்பாக நடத்திய @கிருபன் கிருபனுக்கு மிக்க நன்றி. @வீரப் பையன்26 பையன் சார், சொல்லி அடித்து விட்டீர்களே......... வாழ்த்துகளும் மிக்க மகிழ்ச்சியும்...........❤️. முதலிடத்தை பகிர்ந்து கொண்ட செம்பாட்டான், எப்போதும் தமிழன், புலவர், நீர்வேலியான் மற்றும் கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். @செம்பாட்டான் செம்பாட்டான், முதல் போட்டியிலேயே தூள் கிளப்பியது மட்டும் அல்ல, போட்டிகளை கலகலப்பாக வைத்திருந்தமைக்கும் மிக்க நன்றி..........👍. பிற்குறிப்பு: இங்கு வல்லுநர்களால் கூறப்பட்ட பல தகவல்களை தொகுத்து சுருக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனத்திற்கு அனுப்புவதாக உள்ளேன்.................🤣.
  13. கேட்கவே ஆசையாக உள்ளது. இலங்கை கடற்படையை அண்ணனின் நெய்தல் படை அடித்து துவம்சம் செய்யும் நாள் நெருங்கிவருகிறது போலும்.
  14. என்னப்பா வீடுவளவு விற்று பரிசில் தொகையும் வழங்கியாச்சு இப்போது புதிதாக பதவி ஏற்பவர்களை என்ன செய்வது? முதலில் பரிசில்கள் வாங்கிய 3 பேரும் கெளரவமாக கொண்டுவந்து ஒப்படைக்கவும். அப்புறம் ராணுவத்தை விட்டு சொத்துக்கள் பறி முதலாக போகுது. புதிதாக பதவி ஏற்ற @வீரப் பையன்26 @செம்பாட்டான் @Eppothum Thamizhan மூவருக்கும் வாழ்த்துக்கள். கல்லோ @குமாரசாமி நான் எங்க நிற்கிறன் தெரியுதோ? மேல அண்ணாந்து பாருங்க.
  15. அப்ப நாங்கள் எல்லாம் என்ன தக்காளி தொக்கா🤣… நீங்கள் paper correction கேட்டதால நான் 4ம் இடத்தில் இருந்து 12 க்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளேன்🤣… ஏற்கனவே மழையால் பயிரெல்லாம் அழிஞ்சு போச்சு…🤣 உங்க paper correction ல கொள்ளிய வைக்க…🤣. பிகு போட்டியை கலகலப்பாக கொண்டு போன அனைவருக்கும் நன்றி. செம்பாட்டான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக கலக்கினார். எனக்கு ஐபில் அறவே பிடியாது. 1st class ஐ விட தரம் குறைந்த (டோனியை எந்த 1st class அணி எடுக்கும் 2025 இல்) போட்டி அது. அதை பார்ப்பதால் - சர்வதேச ஆட்டம் பார்க்கும் ஈர்ப்பு கூட குறைகிறது. ஆகவே அந்த போட்டியில் நான் இல்லை. வாய்ப்பை பயன்படுத்தி கிருபன் ஜி அதிலும் என் பெரிய வீட்டை எடுக்க வாழ்த்து🤣. WTC finals SA v AUS - 10க்கும் குறைவான கேள்விகளோடு ஒரு போட்டி வைக்கலாம் என நினைக்கிறேன். 4ம் நாள் போட்டியை நேரில் பார்க்கவும் டிக்கெட் புக்பண்ணி விட்டேன். யாழிலும் ஒரு மினி போட்டிக்கு ஆர்வம் இருந்தால் - செய்யலாம். நன்றி. வணக்கம்.
  16. நன்றி கிருபன். புலவர் கோவிக்கவேண்டாம். நான் நேரலையில் பார்த்ததைத்தான் சொன்னேனேயொழிய உங்கள்மீது எந்த வெறுப்பும் இல்லை!! அதை வைத்துதான் கிருபன் கணிக்க முன்பே முதலிரு இடங்களையும் சொன்னேன்!! மற்றும்படி முதல் ஆறுபேரும் வெற்றியாளர்களே! 👍
  17. இல்லை பையா இனி வாய்ப்பிலை. பையனுக்கு அவர் அமைச்சரவைக்கும் வாழ்த்து.
  18. இவர்களை (ஜெ.வி.பி காராரை) பிரபல படுத்தி காணொளி போட்டதே இந்த யூ டியுப்காரார் தான் ...அவர்கள் மீது கை வைப்பது கடினமாக தான் இருக்கும் ...உந்த ஜெ.வி.பின‌ருக்காக சிங்க கொடி எல்லாம் தூக்கி ஊர்வலம் போனவையல் ...
  19. கேள்விகள் 27) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:
  20. யாழ்ப்பாணத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களது நிலைமையை காணொளியாக வெளியிட்டு புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக காட்டும் வலையொளியாளர் (YouTuber) தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeevan Jeyachandramoorthy) கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் பெண்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கின்ற விடயம் அடிக்கடி செய்திகள் வாயிலாக வெளியாகின்றன. நேற்று முன்தினம் (7) கூட ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அந்த காணொளியில் மக்களது வறுமையை காட்டி அதை வைத்து உழைப்பை பெறும் வகையில் யாழ்ப்பாண யூடியூப்பர் ஒருவரது அடாவடித்தனங்களை நாங்கள் கண்டு கொண்டோம். சமூக விரோத செயற்பாடு இது சம்பந்தமாக சமூக ஊடகங்களிலும் வலையத்தளங்களிலும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இவ்வாறான விடயங்கள் தமது மக்களை பல்வேறு விதத்திலும் பிரச்சினைகளுக்கு உள்ளாக்குகின்றன. இந்த விடயம் தொடர்பாக நாங்கள் உடனடியாக மகளிர் விவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம். வெளிநாட்டில் வாழ்கின்றவர்களுக்கு இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை காண்பித்து அதன் மூலம் பணத்தை திரட்டி பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களின் சிறப்பு உரிமை பெண்கள், சிறுவர்கள் எமது நாட்டின் முதுகெலும்புகள் அவர்களை காக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அவர்களின் வறுமை என்ற கருவியை பயன்படுத்தி பல்வேறு தரப்பினரும் பணம் சுரண்டலில் ஈடுபட்டு வருகின்றனர். இது பெண்களின் சிறப்பு உரிமைகளை மீறுகின்ற செயற்பாடாக அமைகிறது. இவ்வாறானவர்கள் சமூகத்திலிருந்து ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டி இருக்கின்றது. எனவே இவ்வாறான செயற்பாடுகளை ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக அதனை எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த பிரச்சனைக்கு நாங்கள் பொலிஸார் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து தீர்வு காண்பதற்கு முயற்சிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/
  21. யாழ்ப்பாணமே உனது பசி எது? தாகம் எது? அண்மையில் பலாலி வீதியில் பல்கலைக்கழகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஓர் உயர்தர உணவகம் திறக்கப்பட்டதுஅதன் பெயர் “டெலிஸ்” .அதற்குச் சில கிழமைகளுக்கு முன்பு அதே பலாலி வீதியில் மற்றொரு உயர்தர உணவகம்-காலித் பிரியாணி-திறக்கப்பட்டது.முன்சொன்ன உணவகத்தில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் இந்த உணவகம் உண்டு. இந்த இரண்டு உணவகங்களும் திறக்கப்படுவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நகரத்தின் மையத்தில் முன்பு வெலிங்டன் தியேட்டர் அமைந்திருந்த வளவிற்குள் ‘கீல்ஸ்’ பேரங்காடி திறக்கப்பட்டது.திறக்கப்பட்ட நாளிலிருந்து இரவும்பகலும் நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு குவிகிறார்கள். ஏற்கனவே யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் இருந்து நடந்து போகக்கூடிய தூரத்தில் ஆஸ்பத்திரி வீதியில்,வேம்படிச் சந்திக்கு அருகாக உள்ள சூழலில் உயர்தர உணவகங்கள் பல திறக்கப்பட்டுள்ளன.பீட்சா கடைகளில் இருந்து பிரியாணி கடைகள்வரை பல்வேறு வகைப்பட்ட உணவகங்கள் மிகக்குறுகிய தூர இடைவெளிக்குள் உண்டு. இந்த உணவகங்கள் தவிர இவற்றிற்கு முன்னரே திறக்கப்பட்ட உயர்தர விருந்தினர் விடுதிகள் உண்டு.அங்கேயும் இரவில் நூற்றுக்கணக்கானவர்களைக் காணமுடியும்.அவரவர் அவரவர் நுகர்வுக் கொள்ளளவுக்கு ஏற்ப உணவகங்களை நாடிச் செல்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான தமிழ்ச் சமூகத்தில் நுகர்வுத் தாகம் அதிகரித்து வருவதை;ஒரு நுகர்வு அலை எழுந்திருப்பதை பல ஆண்டுகளுக்கு முன்னரே அவதானிக்கக் கூடியதாக இருந்தது.கடந்த 15 ஆண்டுகளிலும் அந்த நுகர்வுப் பசியும் தாகமும் அதிகரித்துச் செல்கின்றன. போரினால் மூடப்பட்டிருந்த ஒரு சமூகம் வெளியுலகத்துக்குத் திறந்து விடப்படுகையில் நுகர்வுத்தாகமும் பசியும் அதிகமாக இருக்கும்.புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதியுதவிகள் மட்டும் இதற்குக் காரணமல்ல.ஆயுத மோதலுக்கு பின்னர் தமிழ்மக்கள் தமது வாழ்க்கையைப் படிப்படியாகக் கட்டியெழுப்பி வருகிறார்கள் என்பதன் குறிகாட்டிகளில் ஒன்றாக மேற்படி உயர்தர உணவகங்களின் பெருக்கத்தைக் கூறலாம். ஒரு மாற்றத்திற்காக வெளியில் போய்ச் சாப்பிட விரும்புகிறவர்கள்;அல்லது வித்தியாசமாகச் சாப்பிட விரும்புகிறவர்கள்;அல்லது கூடியிருந்து சாப்பிடுவதைக் கொண்டாட விரும்புகிறவர்கள் அவ்வாறு உயர்தர விருந்தகங்களை நோக்கிப் போகிறார்கள். வசதிபடைத்த மேல்நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமல்லஅன்றாடம் உழைப்பவர்கள் அதிகமுடைய கிராமங்களிலும்கூட இரவு உணவுக்காக பேக்கரிகளில் தங்கியிருக்கும் ஒரு நிலையைக் காணலாம்.உதாரணமாக,சில ஆண்டுகளுக்கு முன்பு உரும்பிராயில் கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் ஸ்தாபகருடைய நினைவு தினத்தைக் கொண்டாடுவதற்காக போயிருந்தோம்.பெருமாளவிற்கு அன்றாடம் உழைப்பவர்களைக் கொண்ட ஒரு கிராமம் அது.நாங்கள் அங்கேயிருந்த சுமார் 5 மணித்தியால காலப்பகுதிக்குள் 8 பேக்கரி வாகனங்கள் அப்பகுதிக்குள் வந்துபோயின.அவற்றுள் சில ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வந்தன.அந்த கிராமத்தவர் ஒருவரிடம் கேட்டேன்,”இவ்வளவு அதிக தொகையாக பேக்கரி வாகனங்கள் வருகின்றனவே அந்த அளவுக்கு நுகர்வு உண்டா? என்று. அவர் சொன்னார்,”ஓம் பெருமளவுக்கு உடல் உழைப்பாளிகளாகிய எமது கிராமத்தவர்கள் இரவுகளில் ஆறுதலாக இருக்க விரும்புகிறார்கள்.இரவில் சமைப்பதைவிடவும் இந்த பேக்கரி உணவுகளை வாங்கினால் பெண்கள் ஆறுதலாக இருந்து திரைத்தொடர்களைப் பார்க்கலாம்” என்று சொன்னார். சமையல்,பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட ஒரு கடமை என்று கருதும் ஒரு சமூகத்தில் இவ்வாறு விருந்தகங்களுக்குப் போவதன் மூலம் பெண்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.பொதுவாக கிழமைக்கு ஒரு நாளிலாவது அல்லது ஒரு நாளில் ஒரு வேளையாவது சமையாமல் இருப்பதை பெண்கள் பெருமளவுக்கு ஆறுதலாகக் கருதுகிறார்கள். எனினும் இவ்வாறு உணவை கூடியிருந்து சாப்பிடுவதை ஒரு கொண்டாட்டமாகக் கருதும் பலரும்,உயர்தர உணவகங்களில் உணவுக்கு ஓர்டர் கொடுத்துவிட்டு,மேசையைச் சுற்றியிருந்த அவரவர் அவரவருடைய கைபேசியை நோண்டிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன்.ஒன்றாக உட்கார்ந்து உணவைச் சுவைப்பது ஒரு கொண்டாட்டம்.அந்த கொண்டாட்டத்துக்குள்ளும் கைபேசி ? மேற்சொன்ன உயர்தர உணவகங்களில் ஒரு தொகுதி கோர்ப்பரேட் வலப்பின்னலுக்குள் வருபவை.உதாரணமாக ஆஸ்பத்திரி வீதியில் அமைந்திருக்கும் ஆர்ஆர் பிரியாணி இந்தியாவை மையமாகக் கொண்டது. அதற்கு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் கிளைகள் உண்டு.அடுத்ததாக காலித் பிரியாணியும் சென்னையை மையமாகக் கொண்டது.பெருந்தொற்று நோய்க்காலத்தில் மூவர் இணைந்து உருவாக்கிய உணவகங்களின் சங்கிலி வலையமைப்பு அது. கோப்பரேட் உணவகங்கள் உலகப் பொதுவான கோப்பரேட் சுவையைப் பரப்புகின்றன. யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளரான சனாதனன் கூறுவார் எல்லா பேரங்காடிகளுக்கும் ஒரே மொழிதான் என்று. அங்குள்ள தட்பவெட்பம், அங்கு மென்மையாகத் தவழும் இசை, உணவு வேகும் வாசம் போன்ற எல்லாமும் உலகின் எல்லாப் பேரங்காடிகளுக்கும் ஒரே மாதிரியானவைதான்.அப்படித்தான் கோப்பரேட் உணவகங்களும் உலகப் பொதுச் சுவையை பரப்புகின்றன. ஆனால் இதனால் உள்ளூர் சாப்பாட்டுக் கடைகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன என்று கூறமுடியாது. ஏனென்றால் உள்ளூர் சாப்பாட்டுக் கடைகளில் வழமையாக உணவு அருந்துபவர்கள் எப்பொழுதும் அங்கே போவார்கள்.ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் உயர்தர உணவகங்களை நோக்கியும் குறிப்பிட்ட சில பேரங்காடிகளை நோக்கியும் போகிறார்கள். “உயர்தர உணவகங்களில் பிரியாணி வகை உணவைச் சாப்பிடுவது என்பது ஒரு அந்தஸ்தை,சமூகத் தராதரத்தை காட்டும் விடயம்” என்று கனடாவில் வசிக்கும் கீதா சுகுமாரன் கூறுகிறார்.அவர் உணவுப் பண்பாட்டை தனது கலாநிதிப் பட்ட ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டவர்.பிரியாணி என்பது எல்லாவிதமான பொருட்களும் கலந்து சமைக்கப்படும் ஓர் உணவு.விருந்துகளில் அது அந்தஸ்தைக் குறிப்பது.பிரியாணிக் கடைகளில் சாப்பிடுவதை ஒரு சமூக அந்தஸ்தாக கருதும் ஒரு பிரிவினர் அங்கே போகிறார்கள்.என்றும் அவர் கூறுகிறார். ஆனால்,அதனால் உள்நாட்டுச் சுவையும் உள்நாட்டு உணவும் கைவிடப்படுகின்றதா?இல்லை.அவ்வாறெல்லாம் ஏங்கத் தேவையில்லை. வீடுகளில் இப்பொழுதும் உள்நாட்டு சமையல்தான்.உள்ளூர் சுவைதான்.ஒரு வித்தியாசத்துக்காக,ஒரு மாற்றத்திற்காக அல்லது தமது அந்தஸ்தைக் காட்டுவதற்காக பிரியாணிக் கடைக்கு போகின்றவர்கள் வாழ்க்கை முழுவதும் பிரியாணிக் கடைகளிலேயே சாப்பிடுவதில்லை.அவ்வாறு தினசரி பிரியாணிக் சாப்பிடுகிறவர்கள் யாழ்ப்பாணத்தில் அந்தக் கடைகளில் இருந்து குறுகிய தொலைவில் காணப்படும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தங்களுடைய கொலஸ்ட்ரோலைக் கரைப்பதற்கான சிகிச்சைகளையும் பெறுகிறார்கள். அதாவது ஒரு கோப்பரேட் கொலஸ்ட்ரோலை விற்கிறார்.ஒரு கோப்பரேட் கொலஸ்ட்ரோலைக் கரைக்கிறார்.ஆக மொத்தம் கோப்பரேட்களின் ஆய்வு கூடமாக மாற்றப்பட்ட உள்ளூர் உடல் ? கோப்பரேட் சுவை என்பது உலகப் பொதுவானது.உள்ளூர்ச் சுவை என்பது அதிகம் தேசியத் தன்மை மிக்கது.ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு தேசமாக வனையும் அம்சங்களில் ஒன்று பொதுப் பண்பாடு.பொதுப் பண்பாட்டுக்குள் உணவுப் பண்பாடும் அடங்கும்.எனவே உணவுப் பண்பாடானது ஒரு மக்கள் கூட்டத்தின் தேசியத் தனித்துவங்களில் ஒன்றாகக் கருதத்தக்கது.1966இல் மேதினத்தன்று இடதுசாரிகள் தமிழ்மக்களுக்கு எதிராக எழுப்பிய கோசத்தை இங்கு சுட்டிக்காட்டலாம்.“தோசே மசால வடே அப்பிட்ட எப்பா”.இது தமிழர்களை அவர்களுடைய உணவுக்கூடாக விழித்த ஒரு கோஷம்.தோசையும் மசாலா வடையும் வேண்டாம் என்று பொருள்.அதாவது தோசையும் வடையும் அங்கே தமிழ் மக்களின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டன. ஈழத் தமிழர்கள் மத்தியில் வடக்கிலும் கிழக்கிலும் வித்தியாசமான உணவுப் பண்பாடுகள் உண்டு.வடக்கில் யாழ்ப்பாணத்திற்கும் வன்னிக்கும் இடையே வித்தியாசங்கள் உண்டு.யாழ்ப்பாணத்திலேயே வடமாராட்சி,தீவுப் பகுதிக் கிடையே வித்தியாசமான உள்ளூர் உணவுப் பண்பாடுகள் உண்டு.ஒரு தேசிய இனத்தின் உள்ளூர் உணவு பண்பாட்டுக்குள்ளேயே பல வகைகள் உண்டு.அவை எக பரிமாணத்தைக் கொண்டவை அல்ல. இந்தப் பல்வகைமையின் திரட்சிதான் ஈழத் தமிழர்களுடைய பொதுவான உணவு பண்பாடாகும். உலகில் தூய உணவுப் பண்பாடு என்று ஒன்று கிடையாது என்று கீதா சுகுமாரன் கூறுகிறார்.எல்லா உள்ளூர் உணவுப் பண்பாடுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்தவைதான். இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே கோப்பரேட் உணவுப் பண்பாட்டையும்,உள்ளூர்,தேசியத் தனித்துவம்மிக்க உணவுப் பண்பாடுகளையும் பார்க்க வேண்டும். ஆயுத மோதல்களுக்கு பின்னரான நுகர்வுப் பசி,தாகம் என்பவற்றின் பின்னணியில் ஒரு தேசமாக திரள்வதன் மூலம் மட்டுமே தனது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய தமிழ்ச் சமூகமானது,தனித்துவம் மிக்க தனது சொந்தச் சுவையைக் குறைத்து மதிப்பிட்டு, அதை “லோக்கலானது” என்று இகழ்ந்துவிட்டு, கோப்பரேட் சுவை மீது பசி தாகமுடையதாக மாறிவிடுமா ? கோப்பரேட் உணவகங்களின் பெருக்கத்தின் மத்தியில் உள்ளூர்த் தனித்துவங்களைப் பாதுகாப்பதை ஒரு வாழ்க்கை முறையாக, பெருமைக்குரிய வாழ்க்கை முறையாகக் கட்டமைப்பது என்பது ஒரு சமூகத்தின் அரசியல் சமூக பண்பாட்டுத் தலைமைத்துவங்களின் வேலை.அது தொடர்பாக அந்த சமூகத்தின் தேசியவாத அரசியலை முன்னெடுக்கும் தரப்புக்கள் மத்தியில் பொருத்தமான விழிப்பும் தூரநோக்கிலான அரசியல் தரிசனங்களும் இருக்க வேண்டும்.துறைசார் அறிஞர்கள் இதுதொடர்பான கற்கைகளை காஸ்ரோ நஷனலிஸம் (Gastro nationalism)என்று அழைக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் புலப்பெயர்ச்சி காரணமாக ஏற்கனவே உலகமயப்பட்டு விட்டார்கள்.தாங்கள் உலகமயப்பட்டு விட்டதாகக் காட்டிக்கொள்வதை ஒரு பகுதியினர் பெருமையாகவும் கருதுகிறார்கள். தமிழ்மக்கள் பண்பாட்டுச் செழிப்புமிக்க ஒரு நடுத்தர வர்க்கத்தை கொண்டவர்கள். பண்பாட்டுச் செழிப்புமிக்க ஒரு சமூகம் தன்வசமிழந்து தனது தனித்துவங்களை ‘லோக்கல்’ ஆனவை என்று இகழ்ந்து எதிர்ப்பின்றி உலகப் பொதுப் பண்பாட்டுக்குள் கரைந்துவிடாது.ஆனால் ஒரு சமூகத்தை தோற்கடிக்க விரும்பும் சக்திகள் அந்தச் சமூகத்தின் பண்பாட்டுத் தனித்துவத்தையும் செழிப்பையும் அதைவிட பலமான ஒரு பண்பாட்டிற்குள் கரைத்து விட முயற்சிக்கும்.எனவே அதை எதிர்கொள்வதற்கான சமூக,அரசியல், பொருளாதார,பண்பாட்டு விழிப்பு என்பது கலெக்டிவ் ஆனது.அரசியல் தலைமைகளால் முன்னெடுக்கப்பட வேண்டியது.கோப்பரேட் சுவையைப் பரப்பும் உயர்தர உணவகங்களுக்கு நிகராக உள்ளூர்ச் சுவையை,உள்ளூரில் தனித்துவமான உணவுப் பண்டங்களை உலகத் தரத்துக்கு உற்பத்தி செய்வதற்கு தமிழ் மக்களிடம் வளம் இல்லையா? உள்ளூர் நண்டுக் கறி,உள்ளூர் றால்கறி,உள்ளூர் பிரட்டல்,உள்ளூர் பொரியல்,உள்ளூர் சுண்டல்,உள்ளூர் கீரை,உள்ளூர் ஒடியல் கூழ்,உள்ளூர் பலகாரம்… என்று தமிழ் மக்களின் தேசிய தனித்துவங்களை வெளிப்படுத்தும் உணவுச் சாலைகளை கட்டியெழுப்ப உள்ளூரிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் உள்ள முதலீட்டாளர்கள் முன் வரவேண்டும். சூழலியலாளர்கள் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டுவார்கள்.உள்ளூர் மரங்களில்தான் பறவைகள் கூடுகட்டும்.பூச்சி புழுக்களும் அந்த மரங்களைத்தான் மொய்க்கும்.அவற்றுக்குத் தெரிகிறது உள்ளூர் மரம் எது? “ஹைபிரிட்” மரம் எது? என்று.பண்பாட்டுச் செழிப்பு மிக்க தமிழ் மக்களுக்கும் அது தெரியும்.தமது சுவை எது? கோப்பரேட் சுவை எது என்பது.பண்பாட்டு விழிப்பில்லாமல் தேசிய விழிப்பு இல்லை. https://www.nillanthan.com/7204/?fbclid=IwY2xjawI6xzJleHRuA2FlbQIxMQABHU9bV8WeZ6y9-ofwXcsKiaVwJMeLXey4zcwzs3EkkH3YOm1A2iYmhcowhQ_aem_M8jBIXhneVE-VhcQYyfL6A
  22. ஆறு மாதங்கள் ஓடிவிட பாடசாலை விடுமுறையில் ஊர் திரும்புகிறேன். பண்ணைப் பாலத்தில் மீன் வாசம் நாசியில் படும் எல்லோருக்கும் ருசி கண்ட பூனை எனக்கோ அவள் வாசம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை தீயாய் சுடுகிறது. ஊர் வந்து சேரும் வரை அதே நினைவு அதே கனவு. ஆனால் ஊரும் நண்பர்களும் நகைச்சுவை நடிகராக சென்று கொழும்பால் திரும்பும் என்னை சுப்பர்ஸ்டாராக வரவேற்கிறார்கள். அப்பொழுது தான் நானும் பார்த்தேன் சென்றபோதிருந்ததை விட நான் முழுவதுமாக மாறியிருப்பதை. இந்த வட்டம் மற்றும் பிரபலத்தால் அவளை பார்ப்பது தடங்கல் பட சிறிது சிறிதாக சில செய்திகள் என்னை வந்தடைகின்றன. தொட்டது நான் மட்டுமல்ல ருசி கண்டது நான் மட்டுமல்ல என்பதை அந்த வயதில் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தபோது அது ஒரு வித ஈர்ப்பு, நட்பு என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் காதல் பற்றியோ கல்யாணம் பற்றியோ ஏன் எங்கள் எதிர் காலம் பற்றியோ கூட பேசிக்கொண்டதில்லை. என்னை கட்டிக் கொள்வாயா என்று அவளோ கட்டிக் கொள்வேன் என்று நானோ எந்த உறுதியும் எடுத்துக் கொண்டதில்லை. ஆனாலும் என் மனதின் ஒரு மூலையில் அவள் என்னை படுத்திக் கொண்டே இருந்தாள். சந்திக்க வேண்டும் என்ற என் விருப்பம் தள்ளி தள்ளி போக கடைசியாக அவள் குடும்பம் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டனர் என்பதுடன் முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. மீண்டும் காலம் என்னை பிரான்ஸ் கொண்டு வந்து போட்டது. தொடர்பு முற்றாக அழிந்து போனது. தொடரும்....
  23. பந்து பத்திரமாய் இருக்குதுதானே!
  24. வில்லவன், நீங்கள் சொல்வது சரி. ஆனாலும் காஞ்சனாவுக்கு வாழ்நாள் முழுதும் அமைய இருந்த ஒரு அடக்குமுறையான வாழ்க்கையில் இருந்து விடுதலை கிடைத்திருக்கிறது அல்லவா? ஆக இருவருக்கும் ஒரு சுகமான முடிவு. Suvy, காஞ்சனாவின் நிலமை நன்றாகத்தான் இருக்கிறது. அவள் தன் விருப்பம்போல் வாழலாம்.
  25. முதல் இடங்களைப் பெற்ற பையன் , செம்பாடான் , எப்போதும் தமிழன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் . ....... முதல் ஆறுபேர் ஒரே புள்ளிகளைப் பெற்றபோதிலும், ஒவ்வொரு வீரர்களின் விளையாட்டு அனுபவங்களையும் தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கும் பையன் முதலாவதாக வந்ததில் மிக்க மகிழ்ச்சியாய் இருக்கின்றது . .........! 👍
  26. தயவு செய்து ப ஜ கா பார்க்க முன்னம் அழியுங்கய்யா 🤣
  27. முதலாமிடம் பெற்ற @வீரப் பையன்26 இரண்டாமிடம் பெற்ற @செம்பாட்டான்மூன்றாம் இடம்பெற்ற @Eppothum Thamizhanசகோதரர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்ட 24 போட்டியாளர்களுக்கும் போட்டியை திறம்பட நடத்திய கிருபன் அண்ணைக்கும் எனது வாழ்த்துகள். ஐபிஎல் போட்டியிலயாவது அதிட்டம் அடிக்குமோ பார்ப்பம்! 😃
  28. அடுத்த ஆறு மாதங்களுக்கு தமிழகத்திற்கு போராட்ட காலம் தான்.......... பலத்தை காட்டினால் தானே பேரம் பேசலாம்.............. தவெக ஆயிரம் பேருக்கு மட்டன், சிக்கன் பிரியாணி கொடுத்த நோன்பு திறப்பு விழாவில் வெளியில் இலட்சம் பேர்கள் நின்றார்கள் என்கின்றார்கள். ஐம்பது சீட்டெல்லாம் பத்தாது, 234 இல் அரைவாசி கொடுங்கள் என்று எதுவுமே செய்யாமலே, கூட்டத்தை கூட்டிக் காட்டாமல் கேட்க முடியாது தானே............... ஆயிரம் பேர்கள் சாப்பிட்டு விட்டு போட்ட கழிவுகளை எவருமே அகற்றவில்லை. அங்கங்கே கழிவுகள் கொட்டப்பட்டு அந்த இடமே அலங்கோலமாக இருந்தது. தானாக எழுதிக் கொடுக்காத ஒன்றைப் பேசப் போகின்றேன் என்று வெளிக்கிட்டு, என்ன சொல்லப் போகின்றாரோ என்று திக்திக்கென்று நெஞ்சு அடிக்குது............... சொந்தத்தில் ஒரு வசனம் கோர்வையாக வராது போல................. அர்ணாப் கோஸ்வாமியிடம் கமல் மாட்டி முழித்ததை விட, ஒரு பெரிய சம்பவம் விரைவில் நடக்கப் போகின்றது................. மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டி நீங்களே போராடுவீர்களா...................... லூசுக் கூட்டம், பிரச்சனையே நீங்கள் மட்டும் தானே......................🫣.
  29. நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் மற்றும் அவரது கட்சி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மற்றும் கொல்லப்படுவதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்... அவர்கள் மத்திய அரசின் நடவடிக்கையின்மையை விமர்சித்து, தமிழக மீனவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்... உதாரணமாக, எனக்கு நினைவில் நிற்கும் இரண்டு போராட்டங்களை கீழே தருகிறேன்..👇 2021ஆம் ஆண்டு, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி போராட்டங்களை நடத்தி, மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தது... அவர்கள் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக தக்க நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தினர்... இது குறித்து வந்த செய்தி ஒன்று..👇 மேலும், 2017ஆம் ஆண்டில், தமிழக மீனவர் பிரான்சிஸ் ஜெயராஜ் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி, மத்திய அரசின் நடவடிக்கையின்மையை கண்டித்தது. அவர்கள் தமிழக மீனவர்களின் உயிர்களை பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தினர்..👇 இவை உடனும் எனக்கு நினைவுக்கு வந்தவை.. இதைவிட பல போராட்டங்கள் இருக்கின்றன.. இந்த நிகழ்வுகள் எல்லாம் மத்திய அரசை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தமிழக மீனவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான போராட்டங்களை வெளிப்படுத்துகின்றன.. ஆகவே காழ்ப்புணர்ச்சியுடன் அவதூறுகளை பரப்பித்திரிவோரை யாழை வாசிப்பவர்கள் பிரித்தறிவார்களாக.. “எரிச்சலும் பொறாமையும் எஞ்ஞான்றும் எற்றாது அறிசியார் மாணத் தரும்.” (திருக்குறள் – 162) இந்தக் குறளில், எரிச்சல் மற்றும் பொறாமை காழ்ப்புணர்ச்சிக்கே வழிவகுக்கும் என்பதையும், அவை அறிவில்லாதவர்களை மட்டுமே இழிவில் ஆழ்த்தும் என்பதையும் வள்ளுவர் உணர்த்துகிறார்…
  30. போட்டியில்... முதலிடத்தை பெற்றுக் கொண்ட முதல்வர் @வீரப் பையன்26 க்கும், அதே அளவு 42 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட... @செம்பாட்டான், @Eppothum Thamizhan, @புலவர், @நீர்வேலியான், @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் உரித்தாகட்டும்.
  31. ஏன் என்றால் முழுக்க முழுக்க மத்திய அரசு சம்பந்தபட்ட விடயத்தில் மாநில முதல்வர்தான் பிழை விட்டார் என்பது போல் அண்ணன் வாயை வாடகைக்கு விட்டதால். ஆதாரம் கீழே 👇 அடங்காமல் அத்துமீறும் இலங்கை.. கடிதம் மட்டுமே எழுதும் முதல்வர்! விடிவு காலம் எப்போது? சீமான் நறுக்! Rajkumar RUpdated: Monday, March 10, 2025, 18:51 [IST] சென்னை: இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், பறித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், கடமைக்கு கடிதம் மட்டுமே எழுதுவதைக் கைவிட்டு, இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். Also Read வழக்கம் போலத் திராவிட மாடல் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், இந்திய ஒன்றிய அரசிற்கு கடிதம் மட்டுமே எழுதி தம்முடைய கடமையை முடித்துக்கொண்டது வன்மையான கண்டனத்துக்குரியது. தஞ்சையில் 35 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் | Oneindia Tamil திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு 74 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டு 143 மீனவர்களும், 2022 ஆம் ஆண்டு 229 மீனவர்களும், 2023 ஆம் ஆண்டு 220 மீனவர்களும், 2024 ஆம் ஆண்டு 528 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். நடப்பு 2025 ஆம் ஆண்டில், தற்போது வரை 9 முறை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை மட்டும் 75 ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் மொத்தமாக 1250க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது, மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்களது வாழ்வினை அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும். நாட்டை ஆளும் ஆட்சியாளர் பெருமக்கள் தற்போது இலங்கை சிறையில் வாடும் 107 மீனவர்களையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள 227 படகுகளையும் எப்போது மீட்கப்போகிறீர்கள்? இன்னும் எத்தனை காலத்திற்கு மீனவர்கள் இப்படித் துயரக்கடலில் தத்தளிக்கச் செய்யப் போகிறீர்கள்? மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிலைத்த தீர்வு காணப்போவது எப்போது? தமிழ்நாட்டு மீனவர்கள் இந்த நாட்டின் குடிமக்களா இல்லையா? இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசிற்கு குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் வரும் பரிவும், பற்றும், ஆத்திரமும், அக்கறையும் அணுவளவாவது தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும்போது வராதது ஏன்? Recommended For You அகண்ட பாரதம் பேசும் பாஜக, காங்கிரசு ஆட்சிக்காலத்தில் தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு சொந்தமான கட்சத்தீவை மீட்க எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை வைத்துள்ள திமுக கூட்டணி, நாடாளுமன்றத்திற்கு உள்ளே போராடாமல் வெளியே வந்து குரல் எழுப்புவதால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு விளைந்த நன்மை என்ன? நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பிற்காக பதறி துடித்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிய திமுக அரசு, கட்சத்தீவை மீட்கவும், தமிழ்நாட்டு மீனவர்கள் நலனைப் பாதுகாக்கவும் கடந்த 4 ஆண்டுகளில் ஒருமுறை கூட அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டாதது ஏன்? தமிழ்நாட்டு மீனவர் நலனைப் பாதுகாக்கவும், இலங்கை இனவெறி கடற்படையால் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படும் பேரவலத்துக்கு கட்சத்தீவை மீட்டு நிலைத்த தீர்வை காணவும் இந்திய ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி வருகின்ற பங்குனி 8 ஆம் நாள் (22.03.2025) அன்று இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் - தங்கச்சி மடத்தில் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ் மீனவர்கள் கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும், கடமைக்கு கடிதம் மட்டுமே எழுதுவதைக் கைவிட்டு, இந்திய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுத்து, தற்போது இலங்கை சிறையில் வாடும் அனைத்து மீனவர்களையும், பறித்து வைக்கப்பட்டுள்ள படகுகளையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கட்சத்தீவை மீட்கும் வழக்கை விரைவுபடுத்தி, தமிழ்நாட்டு மீனவர் சிக்கலுக்கு நிலையான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/seeman-demands-immediate-action-to-rescue-tamil-fishermen-jailed-in-sri-lanka-686515.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards திருத்தம்: அண்ணனும் ஒரே ஒரு போராட்டம் தங்கச்சி மடத்தில் செய்ய போகிறாராம்.
  32. அது சென்றிக்கு நிக்காமல் ஊரை விட்டு கிளம்பிய ஆட்கள் புரிந்து கொள்ள முடியாத ரகசியம்🤣
  33. சீமானைப்பற்றி எழுதினால் எப்படித் தான் மணந்து பிடித்து வாறாங்களோ? சென்ரிக்கு நின்ற பழக்க தோசமோ?
  34. அதை விட முக்கியமான கேள்வி… பாலியல் தொழிலாளி என தெரிந்தும் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் அறிவார்ந்தவர்கள் யாரும் களம் இறங்குவார்களா? ஷொகேப் அக்தார் bowlingக்கு pads கட்டாமல் பேட் பண்ணபோகலாமா எண்டு பழமொழி கூட உள்ளது. பிகு இங்கே சீமானியர்களை நான் கேட்ட கேள்விக்கு அவர்கள் கொடுத்த பதிலை வைத்து ஒரு சின்ன விளக்கம் கொடுக்க வேண்டும். இன்னும் ஓணாண்டியார் மட்டும் மிசிங். அவரும் பதிலை சொல்லி விட்டால், சாம்பலை கரைத்து விடலாம்🤣.
  35. சாத்தான்.... நீங்கள் கூறியது எனக்கு முன்பே புரிந்து விட்டது. ஆனாலும்... உங்களது வாயை கிளறி, அந்தச் சொல்லை எடுப்பதற்காக விளங்காத மாதிரி கேட்டேன். 😂
  36. அவர்களுக்கு எங்கிருந்து வந்தது உடல் வலிமை எங்கிருந்து வந்தது ஓர்மம் வீரம்? தங்கள் நாடு இன்னலில் இருந்தபோது தன்னந்தனியாக பனகுற்றிகளையும் தென்னங்குற்றிகளையும் தறித்து தோழில் சுமந்து கொண்டுபோய் பங்கர் கட்டி போராடியவர்கள் அவர்கள்.. இதேபோல் குர்தீஷ் பெண்போராளிகள்.. அவர்களால் எல்லாம் முடிகிறது அப்போ மற்றவர்கள் நடிப்புத்தானே..? யாருக்கு உடல்வலிமை இல்லை என்று கதைவிடுகிறார்கள்..
  37. வேறை வழி????? 🙃 தங்களுக்கு எவ்வளவு எரிச்சல் இருந்தாலும்...... உங்கள் சபை நாகரீகத்தை பாராட்டுகின்றேன்.😎 அப்பன் நீ எங்க இருக்காய் ஓவர்...ஓவர்.
  38. நியுசிலாந்தின் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌வை ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் அவுட் ஆகுவ‌தும் இன்னொரு வீர‌ர் 101 ப‌ந்துக்கு ஆமை வேக‌த்தில் விளையாடி 63ர‌ன்ஸ் தான் அடிச்சார் ர‌ச்சின் அவுட் ஆகாம‌ இருந்து இருக்க‌னும் நியுசிலாந் 275 ர‌ன்ஸ்ச‌ க‌ட‌ந்து இருக்கும் , இந்தியாவுக்கு நெறுக்க‌டி கொடுத்து இருப்பின‌ம்.................நியுசிலாந் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் ஹென்ரி இன்று விளையாட‌ வில்லை அவ‌ர் தான் இந்த‌ தொட‌ரில் அதிக‌ விக்கேட் எடுத்த‌வ‌ர்...........................
  39. ஐரோப்பாவில் பொதுவாக ஆண்கள் எல்லோருக்கும் இராணுவ பயிற்சி கட்டாயமாக இருந்தது.அந்த கட்டாய பயிற்சியை அண்மைக்காலங்களில் நாடுகளுக்கேற்ப நீக்கியிருந்தார்கள்.அதே நேரத்தில் பெண்களுக்கு கட்டாய மருத்துவ பயிற்சிகளும் இருந்தது. மற்றும்படி இயற்கை ரீதியாக என்றுமே பெண்கள் ஆண்களுக்கு சமமாக வாழ முடியாது.சம உரிமைகளுடன் யாவரும் வாழலாம். இயற்கையில் சமம். அது நடைபெறாது.
  40. என்னை பொறுத்தவரை ஆணுக்கு, பெண் சமம் என்பதை நான் அதன் literal meaning இல் பார்ப்பதில்லை. எல்லாமனிதர்களும் சமம் என்பதை நாம் ஏற்றாலும் சாதி வேறுபாட்டை களைய நாமே இட ஒதுக்கீடு எனும் positive discrimination ஐ ஆதரிக்கிறோம். பால் சமநிலை என்பது தனிமனிதராக ஒரு ஆண் செய்வதை பெண்ணும், ஒரு பெண் செய்வதை ஆணும் செய்யும் செய்யவிரும்பின், அதற்குரிய சுதந்திரத்தை கொடுப்பது. இதை பொது வேலை பகுப்புகளான பிள்ளை பெறல், யுத்தத்துக்கு போதல் போன்றனவற்றோடு போட்டு குழப்பி அடிக்க தேவையில்லை. பிள்ளை பெறுவதில் 99.9% பெண்கள்தான் ஈடுபடுவர். யுத்தத்துக்கு போவதில் >90% ஆண்கள்தான் ஈடுபடுவர். இதை காரணம் காட்டி field engineer ஆக, அல்லது artillery gunner ஆக ஒரு பெண் பிள்ளை வர விரும்பினால் -அதை தடுக்க கூடாது. இதுதான் பால் சமநிலை.
  41. இன்றைய இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்: யாழ் கள போட்டியின் வெற்றியாளர் இன்னும் முடிவாகவில்லை!
  42. அப்ப புலம்பெயர் மொக்கர் வெளிபேச்சுக்கு மயங்கி,… காசை அள்ளி கொடுத்து வளர்த்து விட்ட… இன்னொரு திரள்நிதியில் வயிறு வளர்க்கும் விச செடி எண்டுறியள்…🤣.
  43. நிச்சயமாக அதற்கு வழக்கு நடக்க வேண்டும். நான் ஒரு போதும் விஜி அண்ணி முழுக்க முழுக்க உண்மை சொல்வதாகவோ, அவரின் கதையில் குழப்பங்கள் இல்லை என்றோ சொன்னதில்லை. ஆனால் இவை எல்லாமும் வழக்காடு மன்றில் விசாரித்து தீர்க்கபட வேண்டியன. மீடியாவில் அல்ல. Trial by media அல்ல. Trial by a court of law தான் தேவை. என் அதிகபட்ச கோரிக்கை இதுதான்.
  44. ஓணாண்டி அவர்கள் முதலில் பத்துமாதம் கரு சுமந்து சுக பிரசவம் ஒன்றை நடத்தி காட்ட்டுவார். அதன் பின் பெண்களையும் கட்டாய இராணுவத்தில் சேர்க்கலாம்.
  45. ஊ சொல்றியா, ஊகூம் சொல்றியா .......... ! ❤️
  46. இந்த அணில் பற்றி எனது முகநூலில் வந்ததன் ..பிரதி பண்ணி போட்டிருக்கின்றேன் யார் இந்த மெகதி ஷசன், நேற்றிலிருந்து இலங்கை முழுவதும் ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறி போன நபர். ஒரு சிலருக்கு இவர் புதிதாக இருக்கலாம் ஆனால் உலக அரசியலை அவதானிப்பவர்களுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பனம் தான். நேற்றைய பேட்டியில் ரணில் ஒரு இடத்தில் shout என்கிற வார்த்தையை மெகதி ஷசனை நோக்கி சொல்லுவார். காரணம் இவருடைய கேள்விகள் யாராக இருந்தாலும் அம்பை போல பாயும். இஸ்ரேல் -காசா , ரஷ்யா- உக்ரைன், விக்கிலீக்ஸ் என உலக அரசியலை மையமாக கொண்டவர்களை இவர் பேட்டி எடுத்துள்ளார். அல் ஜசீரா என்பது கட்டாரை தலைமையகமாக கொண்ட சர்வதேச தொலைகாட்சி ஒன்றாகும்,செனல் 4 போல இனி ரணில் ராஜபக்ச தரப்புக்கு அல் ஜசீரா இவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு செய்திகள் சொல்லுகிறது என்று சர்வ சாதாரணமாக சொல்லுவார்கள். நேற்றைய உள்ளூர் பேட்டியில் ரணிலின் இனவாத கருத்து தெள்ளத்தெளிவாக விளங்ககியது. எங்கேயோ போய் அடிபட்டு தூர வந்து கத்தும் நாய் போல அங்கே அடிபட்டு இலங்கையில் வந்து மகாநாயக்கர்கள் பெரியவர்கள் எனும் கருத்தை ரணில் சொல்லியது, இன்னும் சிறுபிள்ளை போல எண்ணுவதாக உணர்கிறேன். ரணில் அனுபவமிக்க தலைவர், அரசியல் சாசனம் கரைத்து குடித்தவர் என்பது உண்மையே ஆனால் இலங்கைக்குள் மட்டுமே அவரின் சாணக்கியதனம் பலிக்கும். சாதாரணமாக 6 முறை பிரதமராகவும் 1 முறை ஜனாதிபதி பதவியில் இருந்து ஒருவருக்கு உள்ளூர் அரசியல்வாதிகளை சமாளித்து விடுவார். ஒன்று கல்வி அறிவு இல்லாத அரசியல்வாதிகள், இன்னொன்று லஞ்சம், இன்னொன்று அவர்களுடைய குற்றங்கள் அட்டவணைப்படுத்தி பயமுறுத்தல், என்று சொல்லி கொண்டே போகலாம். ரணில் நாட்டை காப்பாற்றினார் என்பது கட்டமைக்கப்பட்ட நாடகம், இலங்கையின் பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யப்பட்டால் போதும், உதாரணமாக இலங்கைக்கு ஒரு மாதம் சுற்றாலா பயணிகளும் ஒரு மாதம் ஏற்றுமதியும் சீராக இருந்தாலே பிரதான பிரச்சினைகள் தீரும். காரணம் இலங்கையின் புவியியல் அமைப்பு பிரதான காரணம் ஆகும். சர்வதேச அரங்கில் ரணில் பற்றி தெரிந்து இருந்தும் IMF முதற்கட்டமாக பணத்தை ரணில் கையில் எதற்காக வழங்கினார்கள் என்றால் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்தார். உதாரணமாக ஜப்பான் அரசாங்கம் ஊழல் லஞ்சம் காரணமாக உதவி திட்டங்களை நிறுத்தி இருந்தது, ஆனாலும் IMF கொடுத்ததுக்கான காரணம் உறுப்பு நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு ஆகும். அது அவ்வாறு இருக்க நேற்று ரணில் Head to head நிகழ்சியில் பங்குபற்ற பிரதான காரணம், உலக அரங்கில் பலராலும் பார்க்கபடுகிற நிகழ்ச்சி , அடுத்த வருகிற பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சிறிய பின்னடைவு சந்திக்க வாய்ப்பு உள்ளது, காரணம் பிரதான கட்டமைப்பு வேகத்தை மக்கள் ஏற்று கொள்ள நேரம் தேவைபடுகிறது.ஆகவே அதை சாதமாக கொண்டு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையை கொண்டுவந்து மீண்டும் அரகல போல ஒன்றை‌ உருவாக்கும் திட்டத்தின் முதற் கட்டமாகும். தன் கதையாலும்,நகைச்சுவை பேச்சாலும் இலங்கை ஊடகவியலாளர்களை மயக்கியது போல மெகதி ஷசனை மயக்காலாம் என்று எதிர்பார்ப்போடு, ரணில் ராஜபக்ச கருத்தியலை விதைத்து சர்வதேச அரசியலை திசை திருப்பலாம் என்றே யோசித்து இருந்து இருப்பார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சர்வதேச ஊடகத்திற்கு வழங்கி செவ்வியில் "do you think we are second class country" எனும் கவுண்டரை போட்டு செவ்வி எடுப்பவரை மடக்கியது போல பெரும் கனவோடு சென்றிருந்தார். ஆனால் பட்டலந்த அறிக்கை முதல் அவர்கள் வைத்திருப்பார்கள் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் விடையளிக்க முடியாமல் அவருடைய கைகள் நடுங்க தொடங்கியது அவதானிக்க கூடியதாக இருந்தது. இலங்கை தேவாலயங்கள் தாக்குதல் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நகைச்சுவையாக அனுக முற்பட்ட ரணிலை " it's not a funny, they were killed 100 of people" என்று சொன்னதும் ரணில் நிலை தடுமாறி போனார். ரணிலுக்கு ஆதரவு வழங்க வந்த European parliament member ஒருவர் ரணிலால் சமாளிக்க முடிவில்லை என்று அறிந்தும் " you were bringing wrong person,and u should bring gottabaya rajagapaksha , because he destroyed ranil political " என்று சொன்னதும் உடனடியாக சுதாகரித்து கொண்ட மெகதி"எவ்வாறு இவருடைய அரசியல் வாழ்வை சிதைத்தவர் பிறந்தநாள் பார்ட்டியில் பாட்டுபாடினார் " என்றே கேட்டதும் ரணிலின் முகம் கோபத்தால் நிலை குழைந்து போனது. ரணில் ஓநாய் என்பது அரசியலை அதிகமாக நோக்குகிறவர்களுக்கு தெரியும்.மகிந்தவுக்கு இணையான ஒரு இனவாதி தான் ஆனால் "slow poison" என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தி எதற்காக இவ்வளவு தடுமாறுகிறது என்றால் இலங்கையின் முழு system மும் மாற்ற வேண்டும். அதற்கு மிக நீண்ட காலம் தேவை. இலங்கையின் முழு அரசியல் கட்டமைப்பு மக்களுக்கானது இல்லை, அது இலகுவான விடயமில்லை , வியாபார‌ அரசியலை மக்கள் அரசியலாக மாற்ற வேண்டியதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும், அதில் அரைவாசி கடந்தும் விட்டார்கள். என்னதான் அரசியல் சாணக்கியனாக இருந்தாலும், சரியான இடத்தில் மூக்கு உடைப்படும் என்பதற்கு ரணில் சான்று! Via அருண் செல்வராஜ்
  47. சின்ராசுவுக்கு அம்னெஸ்ரி , ஐரோப்பிய ஒன்றியம் பிடிக்கவில்லையாம் செவ்வி எடுத்தவருக்கு பாராட்டுக்கள். ரனில் குடும்பியை மறைக்க முயன்றதை பார்க்க முடிந்தது. திக்குமுக்காடி போனார் ரனில்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.