Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்முகத்தேர்வுகள் - ஒரு நினைவு மீட்டல்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைவு இருந்தால் நேர்முக தேர்வில் கேட்க பட்ட கேள்விகளையும் எழுதுங்க இசைகலைஞன்....

இன்னும் இரண்டொரு மாதங்களில் நானும் நேர்முக தேர்வுக்கு போகணும் என்ன கேள்வி கேட்பாங்க எதுமே தெரியா.. :wub: :wub:

முடிந்தவரை முயற்சிக்கிறேன் அபராஜிதன்..! :D

  • Replies 346
  • Views 27.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றிகள் ஈசன். :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை அண்ணா ஒன்று சொன்னால் கோவிக்க மாட்டீங்களா... :rolleyes: எல்லாத்தையும் ஒரே நாளில் எழுதி முடிச்சுட்டால் இந்தாங்கோ,சாப்பிடுங்கோ,சாப்பிடுங்கோ இனிமேல் கேக்காதீங்கோ என்ற மாதிரி இருக்கு..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக எழுதினால் வாசித்து புரிந்து தேவையானவற்றை மனசில் வைச்சுக் கொள்ளலாம் இல்லையா..என் அறிவுக்கு எட்டியதை சொன்னேன். :)

நல்ல ஒரு கருத்துப்பகிர்வு

  • கருத்துக்கள உறவுகள்

பல நினைவுகளைக் கிளறி விட்டிருக்கிறது. இலங்கையில் இருந்த போது நான் போன மூன்று நேர்முகத் தேர்வுகள்-மூன்று விதமான அனுபவங்கள்.

நே.மு. 1:

விலங்கு மருத்துவ பீடத்தில் படிப்பித்துக் கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த விவசாய பீடத்தில் நான் கற்பித்துக் கொண்டிருந்த அதே பாடப் பரப்பில் உதவி விரிவுரையாளர் வேலைக்கு ஆள் தேடிக் கொண்டிருந்தார்கள். விலங்கு மருத்துவ பீடத்தினருக்கும் விவசாய பீடத்தினருக்கும் கடுமையான பனிப் போர் நடந்த காலம். "உன் ஏரியா, நீயும் விண்ணப்பி, நேர் முகப் பரீட்சைக்குக் கூப்பிடா விட்டால் ஒரு கை பார்த்து விடுவோம்" என எனக்குக் கொம்பு சீவி அனுப்பி வைத்தார்கள். நேர் முகப் பரீட்சையில் யாரைத் தேர்வு செய்யப் போகிறார்கள் என்பதும் எனக்கு முதலே தெரிந்த நிலையில் ஒரு அனுபவத்திற்காக இருக்கட்டும் என்று விண்ணப்பித்து நே. மு போனேன்.

கேள்வி: இலங்கையின் விவசாயக் கொள்கையை எப்போவாவது வாசித்திருக்கிறீரா?

நான்: :rolleyes:

கேள்வி: உமக்கு இந்த வேலை வேண்டுமா வேண்டாமா?

நான்: :icon_mrgreen:

இதற்குப் பிறகு கேட்டவை, நான் சொன்னவை எதுவும் எனக்கு நினைவில் இல்லை. நேர் முகம் செய்த குழுவில் இருந்த ஒரு செனட் உறுப்பினர் எனக்கு நடந்ததை அப்படியே வந்து எனது திணைக்களத் தலைவரிடம் சொல்லி விட்டார். "பயமுறுத்தி இருக்கிறாங்கள் உன்னை, மேல் முறையீடு செய்யலாமா? " என திரும்பவும் உசுப்பேத்தி ரணகளமாக்கப் பார்த்தாங்கள். நான் எஸ்கேப்! :D

நே.மு 2:

விலங்கு மருத்துவ பீடத்திலேயே உயிர் இரசாயனவியல் படிப்பிக்க விரிவுரையாளர் வெற்றிடம் வந்தது. தேர்வு செய்யப் படுபவர் உயிர் இரசாயனவியலோடு சேர்த்து "மீன் வளர்ப்பு, மீன் மருத்துவமும் " கற்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதன் காரணம், பீடாதிபதியின் தூரத்து உறவினர் ஒருவர் மீன் வளர்ப்பில் பட்டப் பிற்படிப்புப் படித்துக் கொண்டிருந்தார். இவருக்கு வேலை கொடுக்கத்தான் இந்த வெற்றிடம் என்று தெரிந்திருந்தாலும் உயிர் இரசாயனவியலில் எனக்குத் தகுதி இருந்ததால் முயற்சி செய்தேன்:

கேள்வி: உங்களுக்கு மீன் வளர்ப்பு , மீன் மருத்துவம் தெரியுமா?

நான்: இல்லை, ஆனால் கற்றுக் கொள்வேன். கடினமில்லை. அடிப்படை இருக்கிறது.

கேள்வி: மாணவர்களுக்கு மீன் வளர்ப்புப் படிப்பிக்க முடியுமா?

நான்: ஒரு 6 மாதத்தில் முடியும்.

கேள்வி: உங்களை வேலைக்குச் சேர்த்து அடுத்த நாளே படிப்பிக்க ஆரம்பிக்க வேண்டும், முடியுமா?

நான்: (சொல்ல நினைத்தது: அப்படியான ஒருவர் வெளியே காத்துக் கொண்டிருக்கிறார், நான் இப்பவே போய் அனுப்பி வைக்கவா? :D ) .இல்லை. முடியாது.

நே.மு 3:

மருத்துவ பீடத்தில் நுண்ணுயிரியல் கற்பிக்க வெற்றிடம் வந்தது. நுண்ணுயிரியலில் ஆய்வு செய்ய ஆர்வம் இருந்ததால் முயற்சி செய்தேன். கலாநிதிப் பட்டம் இல்லாமல் போன இருவரில் நான் ஒருவன். மிகுதி எல்லோரும் கலாநிதிப் பட்டம் முடிக்கிற நிலையில் வந்திருந்தார்கள். கலாநிதியாகி லண்டன் குயீன்ஸ் மருத்துவ மனையில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர், தமிழர், ஒரு பெரிய கட்டுச் சான்றிதழ்களோடு வந்திருந்தார். இறுதியில் அவரை விரிவுரையாளராகத் தேர்வு செய்தார்கள். ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய இந்த "தேசப் பற்றாளர்" தன் பிள்ளைகளில் நலன் கருதி மீண்டும் லண்டனுக்கே போய் விட்டதாக பின்னர் அறிந்தேன். என்ன ஒரு வைக்கல் பட்டறை "பப்பி" என்று இப்பவும் அவரைப் பற்றி நினைப்பேன்! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நினைவு மீட்டலுக்கு நன்றிகள் ஜஸ்ரின்..! சுவாரசியமாக இருந்தது..! :D

நல்ல ஒரு கருத்துப்பகிர்வு

விற்பன்னர் சொல் கேளாதே என்பதே என் தாரக மந்திரமும்..! :rolleyes: இதனால் அலுவலகத்தில் பிரச்சினைகள் வருவதுண்டு..! :D

இசை அண்ணா ஒன்று சொன்னால் கோவிக்க மாட்டீங்களா... :rolleyes: எல்லாத்தையும் ஒரே நாளில் எழுதி முடிச்சுட்டால் இந்தாங்கோ,சாப்பிடுங்கோ,சாப்பிடுங்கோ இனிமேல் கேக்காதீங்கோ என்ற மாதிரி இருக்கு..ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியாக எழுதினால் வாசித்து புரிந்து தேவையானவற்றை மனசில் வைச்சுக் கொள்ளலாம் இல்லையா..என் அறிவுக்கு எட்டியதை சொன்னேன். :)

மேடம்.. விடுமுறை நாளில்தான் எழுத நேரம் கிடைக்குது.. வேலைநாட்களில் கடினம்..! :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 4: வெளிநாட்டு வேலை மோகம்

முதலாளிக்கு எனது டாவு மேற்றர் தெரியும். தன்னுடைய கதையையும் லேசாக அவிட்டுவிட்டார். இவர் ஒரு பெண்ணுக்கு ரியூஷன் எடுத்திருக்கிறார். இவர் ஒரு கிறிஸ்தவர். பெண் சைவம். தமிழகத்தில் அ என்றால் அரிவாள் தூக்கும் பரம்பரையைச் சேர்ந்தவர். :huh:

காதல் விவகாரம் அரசல் புரசலாகத் தெரிய வந்தவுடன் பெண்ணின் வீட்டில் தடுத்துவிட்டார்கள். இவரது வீட்டிலும் இவரை வற்புறுத்தி ஒரு திருமணத்தை நடத்தி வைத்துவிட்டார்களாம். பிடிக்காத திருமணத்தின் மூலமும் இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. :rolleyes:

நான் இவரிடம் வேலைக்குச் சேர்ந்த நேரத்திற்கு அண்ணளவாக இவரின் பழைய காதல் மீண்டும் துளிர் விட்டிருக்கிறது.

தான் காதலியுடன் புரூனை நாட்டிற்குப் போகப்போவதாகவும் என்னையும் அழைத்துக் கொள்வதாகவும் சொன்னார். நம்மதான் வெளிநாடு என்றால் வாயைப் பிளப்போமே.. :D அதுமட்டுமில்லாமல் என்னதான் டாவா இருந்தாலும் வெளிநாட்டு மாப்பிளை இல்லை என்றால் எங்கட ஊர் பெண்களுக்கு மரியாதை பாதிக்காது? :lol: அதனால் புரூனை செல்ல என் சம்மதத்தையும் தெரிவித்தேன்.

ஒருநாள் என்னை ஒரு ஹோட்டலில் அறையும், வாடகைக் காரும் பதிவு செய்யச் சொன்னார். நானும் செய்துவிட்டு அவரிடம் சாவிகளைக் கொடுத்தேன். பிறகு என்னை அழைத்துக்கொண்டு கரூர் சென்றார். அங்கே கட்டடத்தைக் கட்டும் சொந்தக்காரரிடம் தான் காலில் சிகிச்சை செய்வதற்காக சென்னை போவதாகவும், தான் வரும் வரையில் நான் தொழிலைப் பார்த்துக் கொள்வேன் என்றும் சொன்னார். அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்..! :huh:

அடுத்த நாளும் விடிந்தது. காதலர்கள் ஊரைவிட்டு எஸ்கேப். அரிவாள் கோஷ்டி ஆட்களைத் தேடித்திரிவதாகக் கேள்விப்பட்டேன். :unsure:

(தொடரும்.)

எனது நண்பர் வட அமெரிக்காவில் வைத்தியராக மீள் படிப்பு படிக்க விண்ணப்பித்தபொழுது வழமையான பல படிவங்களுடன் 'நீர் ஏன் வைத்தியராக வர விரும்புகிறீர்?' (personal letter : Why do you want to become a doctor?) என கேட்டார்கள் (இது எல்லோரிடமும் கேட்கப்படுவது என எண்ணுகிறேன்). இதை எழுதிக்கொடுப்பதற்கு பல நூறு டாலர்களை கேட்பதும் உண்டு .

இவ்வாறான தொழில்வல்லுனர்கள் எவ்வாறு 'நேர்முகப்பரீட்சைக்கு முகம்கொடுப்பது' எனவும் கற்பிப்பார்கள். புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு இது பிரயோசனமான முதலீடே.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இ.கலைஞன் பயனுள்ள பதிர்வு தொடருங்கள் அதற்கு முதல் உங்கள் டாவு விசயத்தையும் எழுதுங்கள் :lol: சுவாரசியமாக உள்ளது :D:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இ.கலைஞன் பயனுள்ள பதிர்வு தொடருங்கள் அதற்கு முதல் உங்கள் டாவு விசயத்தையும் எழுதுங்கள் :lol: சுவாரசியமாக உள்ளது :D:icon_idea:

நான் உங்கட பேச்சைக் கேட்டு டாவு பற்றி எழுதுவனாம்.. :rolleyes: பிறகு எப்பாவாவது ஒன்றுகூடலில் சந்திக்கும்போது யாராவது போட்டுக் குடுப்பார்களாம்.. :D தேவையா? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 5: தொழிலாளியில் இருந்து முதலாளி

என் முதலாளி ஊரைவிட்டு ஓடியதும், அவருடன் இருந்த மற்ற ஊழியரும் இன்னொரு பக்கத்தால் ஓடிவிட்டார். :lol: இவர்கள் இருவரும் நல்ல தோஸ்துகள்.. பிடிபட்டால் அரிவாள் சனம் வெட்டியே கொன்றுபோடும் என்கிற பயம். :rolleyes:

அன்று என் வீட்டு வாசலில் யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது.. போய்ப் பார்த்தால் இரண்டு அம்பாசிடர் கார்கள்.. வேட்டியை மடித்துக்கட்டியபடி சிலர் வாசலில் நின்றுகொண்டிருந்தார்கள். :unsure:

வெட்டு விழலாம் என்று தெரிந்தும் தைரியமாக எதுவும் தெரியாததுபோல அவர்களிடம் சென்று என்ன விசயம் என்று கேட்டேன். :unsure:

"விசயம் தெரியுமா?"

"ம்ம்ம்.. கேள்விப்பட்டேன்.. மிகவும் கவலையாகப் போய்விட்டது.."

"புள்ளையோட அம்மாவும் விசம் குடிச்சு போய்ச் சேர்ந்திடிச்சு.."

(எனக்கோ நிலைமையின் தீவிரம் அப்போதுதான் விளங்க ஆரம்பித்தது.. வந்தவர்கள் கண்களெல்லாம் சிவந்திருந்தது.. குடிவேறியில் இருந்தார்கள் :unsure: )

"கம்னாட்டிங்க எங்க போனாங்கன்னு தெரியுமா?"

" தெரியாது.. ஆனால் ஏதாவது தெரிஞ்சால் சொல்லுறன்.." :unsure:

"ம்ம்ம்.. சரி"

என் பதிலில் நம்பிக்கை கொண்டவர்களாக புறப்பட்டுச் சென்றார்கள். :unsure:

அடுத்தநாள்.. வழக்கம்போல் வேலைக்குச் சென்றேன்.. அங்கே கட்டட உரிமையாளர்களுக்கும் விவரம் தெரிந்திருந்தது. அவர்களுக்கோ வேலை நின்று போய்விடுமே என்கிற கவலை.. எனக்கு அரிவாள் வெட்டு விழுமோ என்கிற கவலை.. :lol:

உரிமையாளர்கள் தயங்கியபடி என்னிடம் வந்தார்கள்.

" நீங்கதான் இந்த வேலையை பார்த்துக்கிட்டிருக்கீங்க.. உங்ககிட்டயே இந்த புரொஜெக்டை ஒப்படைக்கலாம்னு இருக்கோம்.. முடிச்சுத் தருவீங்களா?"

கரும்பு தின்னக் கூலியா.. :icon_mrgreen:

இனிமேல் நானும் முதலாளிதான் முதலாளிதான்.. மனம் சொல்லியது..

"சரி." :wub:

(தொடரும்.)

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கே எழுதி முடித்துவிடுங்கள் இசை.. காத்திருக்க நேரமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
:) சூப்பரா இருக்கு இசை அண்ணா உங்கள் அனுபவம்....எனக்கும் ஒரு காமடி அனுபவம் இருக்கு...இதை வாசிக்க அதை எழுத்து எண்டு மனம் உசுப்புது..ஆனால் சீரியசாக போகும் உங்கள் திரிக்குள் காமடியப் புகுத்தி திரியை திசை திருப்ப வேண்டாம் எண்டு கையைக் கட்டிக்கிறேன்..தொடருங்கள் இசை அண்ணா....
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 6: கைமேல் பணம்

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். வாழ்வில் சந்தர்ப்பங்கள் என்பவை ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு வடிவில் வரும். அவற்றைப் பயன்படுத்தி உங்கள் நிலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதே வெற்றியின் ரகசியம். தயக்கம் வந்தால் பிறகு எந்த முடிவு எடுக்கும்போதும் ஒரு மயக்கநிலை தோன்றும். :rolleyes:

பல்கலைக்கழகப் படிப்பு முடித்து ஒன்றரைவருட வேலை அனுபவத்துடன் முதலாளியாகிவிட்டேன். பழைய ஒப்பந்தக்காரர்களைக் கொண்டு மீதமுள்ள கட்டட வேலைகளை ஆரம்பித்தேன். ஒவ்வொரு கிழமையும் சம்பள நாள் வரும்போது கட்டட உரிமையாளரிடம் சென்று பொருட்கள் மற்றும் சம்பளம் ஆகியவற்றுக்கு தோராயமாக ஒரு காசோலை வாங்கி வருவேன். ஆனால் அவற்றுக்குள் எனக்கான சம்பளமும் புதைந்திருக்கும். :wub: அவர்களிடம் சொல்லமாட்டேன்.

சொன்னால், நீங்க அப்புறமா வாங்கிக்குங்க சார்.. என்று முடித்துவிடுவார்கள். கடைசிவரை பொறுத்தால் அவர்களிடமும் பணம் இருக்காது. இது என் பழைய முதலாளி சொல்லித் தந்தது. :wub: சம்பளங்கள் போக, சர்வ சாதாரணமாக இரண்டு பொக்கற்றிலும் தலா பத்தாயிரம் வீட்டுக்கு கொண்டு வருவேன்..! :icon_mrgreen:

ஒரு ஆறு மாதங்கள் கழிந்திருக்கும்.. பழைய முதலாளியுடன் வேலை செய்தவர் திடீரென்று கட்டட வேலைத்தளத்தில் தோன்றினார். நான் வேலையை நடத்திக் காசு பார்ப்பதை அறிந்துகொண்ட அவர் தன்னையும் பங்குதாரராகச் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்..

ஆளைப் பார்த்தால் மூஞ்சையெல்லாம் காயம் பட்ட தழும்புகள்.. ஓடிப்போன இவர் கடைசியில் அளிவாள் கோஷ்டியிடம் பிடிபட்டுவிட்டார்.. :lol: ஒரு ஹோட்டல் அறை எடுத்த அதற்குள் இவரை அடைத்து வைத்து நல்லா மொங்கியிருக்கிறார்கள்..! :unsure:

எனக்கோ இவரைச் சேர்க்க மனமில்லை. எனக்கு வெளிநாடு போகும் திட்டம் இருக்கு.. அதனால் எல்லாவற்றையும் விட்டுவிடப் போகிறேன் என்று சொல்லிவிட்டேன்.. எனது பதிலில் அதிருப்தி கொண்டவராகச் சென்றுவிட்டார்.

அது முடிந்த சில நாட்களில், எங்கேயிருந்தோ முளைத்த ஒரு ஒப்பந்தக்காரன் (அவனை நான் பயன்படுத்தியதே இல்லை.) நான் கட்டட வேலைக்குப் பாவித்த பலகைகள் தனக்குச் சொந்தம் என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்..! :unsure:

நான் பாவித்த பலகைகளை என் பழைய முதலாளி தனக்கு விற்றுவிட்டதாகவும், நான் அவற்றைப் பயன்படுத்துவிட்டதால் 72,000 ரூபாய்கள் அவனுக்கு வாடகையாகத்தரவேண்டும் என்றும் மிரட்டினான். :unsure:

ஒருதடவை நான் எனது நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடிக்கொண்டிருந்த நேரம், மைதானத்திற்கு அடியாட்களுடன் வந்து ஒரே களேபரமாகி விட்டது..! நண்பர் ஒருவருக்கு அடிவிழாத குறை.. ஓடித்தப்பிவிட்டார். :unsure:

என்னை அவனது மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு மிரட்டினான்.. நாங்கதான் வீரப் பரம்பரையாச்சே.. ஏறிப் போனேன். ஓரிடத்தில் வைத்து காசு கேட்டு மிரட்டினான். தற்போதைக்கு இல்லை.. பிறகு பார்க்கலாம் என்று சமாளிபிக்கேஷன் செய்து ஒருவழியாக சேதாரம் எதுவுமின்றி திரும்பி வந்தேன்.. :D

(தொடரும்.)

நன்றாக உள்ளது இந்தப் பதிவு, தொடர்ந்து எழுதுங்கள். இந்த மாதக் கடைசியில் இந்தத் திரி இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... வாழ்த்துக்கள்!!! :)

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது இந்தப் பதிவு, தொடர்ந்து எழுதுங்கள். இந்த மாதக் கடைசியில் இந்தத் திரி இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... வாழ்த்துக்கள்!!! :)

இசையா கொக்கா?

குறி இருக்கு? கொக்கின் கழுத்து மீது....?? :lol::icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆளைப் பார்த்தால் மூஞ்சையெல்லாம் காயம் பட்ட தழும்புகள்.. ஓடிப்போன இவர் கடைசியில் அளிவாள் கோஷ்டியிடம் பிடிபட்டுவிட்டார்.. :lol: ஒரு ஹோட்டல் அறை எடுத்த அதற்குள் இவரை அடைத்து வைத்து நல்லா மொங்கியிருக்கிறார்கள்..! :unsure:

இதைத் தான் "ரூம் போட்டு அடிக்கிறது" என்பார்களோ? நல்ல ஐடியா! :lol:

... புலம்பெயர் வாழ்வில் இந்த வேலை தேடும் படலமும், நேர்முக பரீட்சைகளும் எம் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை! .. எனக்கு 2001ல் இருந்து 2005வரை கல்லில் நாருரித்த நிலைதான் வேலை தேடும் படலமும், நேர்முகப்பரீட்சைகளும்! ... கை கூடி வரும் 3 வாரங்களிலும் போகும், மூன்று மாதங்களிலும் போகும் ... இறுதியாக எறும்பூர கற்குவியும் என்பது போல் ... முயற்சி பலனை தந்தது ...முயற்சி என்பது பட்ட அனுபவங்களினூடானது! ... தொடருங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:) சூப்பரா இருக்கு இசை அண்ணா உங்கள் அனுபவம்....எனக்கும் ஒரு காமடி அனுபவம் இருக்கு...இதை வாசிக்க அதை எழுத்து எண்டு மனம் உசுப்புது..ஆனால் சீரியசாக போகும் உங்கள் திரிக்குள் காமடியப் புகுத்தி திரியை திசை திருப்ப வேண்டாம் எண்டு கையைக் கட்டிக்கிறேன்..தொடருங்கள் இசை அண்ணா....

சுபேஸ்.. நீளமான அனுபவமா இருந்தால் தனித்திரியில் தொடங்குங்கோ.. :D ஒற்றைப்பதிவா இருந்தால் இங்கேயே பதியுங்கோ..! :rolleyes:

நன்றாக உள்ளது இந்தப் பதிவு, தொடர்ந்து எழுதுங்கள். இந்த மாதக் கடைசியில் இந்தத் திரி இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... வாழ்த்துக்கள்!!! :)

ஓ.. அப்பிடி ஒரு மேட்டர் இருக்கில்லே.. :rolleyes: நன்றிகள்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நெல்லையண்னை உங்கள் கருத்துக்கு.. :D

இசையா கொக்கா?

குறி இருக்கு? கொக்கின் கழுத்து மீது....?? :lol::icon_idea: :icon_idea:

விசுகு அண்ணை.. இப்பிடி யோசிச்செல்லாம் எழுதேல்லை.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசை, தொடருங்கள்!

வாசிக்க நன்றாக இருக்கின்றது!

உங்கள் அனுபவங்கள், எங்களுக்கு ஒரு வழிகாட்டலாக இருக்கும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 7: பொருளாதார இழப்புகள்

மிரட்டல் படலத்தைத் தொடர்ந்து பஞ்சாயத்து பேசி பிரச்சினையைத் தீர்ப்பது என்று முடிவானது. உள்ளூரில் இருந்த ஒரு திமுக புள்ளிதான் பஞ்சாயத்து பார்ப்பார் எனச் சொன்னார்கள். :D

இரு தரப்பும் பேசினோம். எனக்கு சார்பாக ஒரு நில உரிமையாளரும், என்னுடன் பங்குதாரனாக விரும்பியரும் இருந்தார்கள். பலகை விற்றதற்கான ஆதாரத்தை நான் கேட்டேன். என்னுடைய பங்குதாரனாக விரும்பியவன் முதலில் பலகையை இவன் வாங்கவே இல்லை என்று அடித்துச் சொல்லியிருந்தான். பஞ்சாயத்து பேசும்போது தனக்கு அதைப் பற்றித் தெரியாது என்று காலைவாரிவிட்டான். :unsure:

அடப்பாவி முதுகில் குத்திவிட்டானே என்று நொந்துகொண்டு 32,000 ரூபாய்கள் அவனுக்கு கொடுப்பது என ஒத்துக்கொண்டேன். பஞ்சாயத்துப் பேசிய திமுக புள்ளிக்கு 10000 ரூபாய்கள். :rolleyes:

இதற்கிடையே வெளிநாடு போகவென்று ஒரு ஏஜெண்டுக்கு ஒரு லட்சம் கொடுத்து அவனும் டிமிக்கி கொடுத்துவிட்டான்.. ஆக இப்போது ஒரு லட்சத்துக்கு மேல் கடன். :unsure:

இந்தியா போதுமடா சாமி என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.. ஒரு நண்பனின் அண்ணன் சிங்கையில் இருந்தார். இப்பவும் இருக்கிறார்.. :rolleyes: அவரிடம் அங்குள்ள வேலைவாய்ப்பு பற்றிப் பேசினேன்.. சிவிலுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டெனத் தெரிவித்தார்.. :unsure:

சரி.. செலவோடு செலவு.. நெக்ஸ்ட் ஸ்ரொப்.. சிங்கப்பூர் என்று முடிவு செய்தேன்.. :lol:

குறிப்பு: சில விடயங்கள் தலைப்புக்கு சம்பந்தமில்லாததுபோல் தோன்றும். ஆனால் எந்த மனநிலையில் சில வேலைகளை எடுத்துச் செய்யவேண்டி வந்தது என்பதை விளக்க இவை தேவை என நினைக்கிறேன்..! :D

(தொடரும்.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தம்பிமார்! நான் இஞ்சை ஜேர்மனிக்கு வந்த புதிசிலை........எனக்கு வந்த நேர்முகதேர்வுகளையும்,நான் இப்ப மற்ரவைக்கு வைக்கிற நேர்முகதேர்வையும் இஞ்சை எழுதலாமோ? கொஞ்சம் பட்டிக்காடாய் இருக்கும்......ஏனெண்டால்.......அண்டா குண்டா அகப்பை...கோப்பை...கிளீனிங் எண்ட சொல்லுகள் வரும்..... அதுதான் யோசிக்கிறன் :rolleyes::(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 8: ஜோய்ஃபுல் சிங்கப்பூர்

ஏற்கனவே கடன்.. மேலும் கொஞ்சம் கடனை வாங்கிக்கொண்டு :lol: சிங்கப்பூர் பயணமானேன். இலங்கைக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு சிங்கையில் நுழைவு விசா தருவார்கள். என்ன சொல்ல வேண்டும் என்பதை நண்பனின் அண்ணன் சொல்லித் தந்தார். :rolleyes: எதற்காக வருகிறீர்கள் என்று கேட்கும்போது social visit என்று சொல்ல வேண்டும். வழக்கமாக இரண்டு கிழமை விசா தருவார்கள். எப்படியாவது நான்கு கிழமை வாங்கப் பாருங்கள் என்று சொல்லியிருந்தார். :unsure:

இந்தியாவில் அதுவரையில் 11 வருடங்கள் மொத்தமாகக் குப்பை கொட்டியிருந்தேன். அதனால் வெளியேறும்போது Exit visa என்று ஒன்று வாங்க வேண்டும். ஒருவழியாக அதையும் எடுத்துவிட்டேன். சிறு வயதிலேயே இலங்கையை விட்டு வெளியேறியதால் இலங்கை அடையாள அட்டையும் இல்லை. ஒருவேளை சிங்கை விடயம் பிழைத்தால் திரும்பி இந்தியாவுக்குள் வரமுடியாது. :unsure: இலங்கைதான் போகவேண்டும். அடையாள அட்டையே இல்லாமல் இலங்கை போனால் என்ன நிலைமை என்று நினைத்துப் பார்க்கவே நடுக்கமா இருந்தது. :unsure:

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சிங்கைக்கான விமானத்தில் ஏறுகிறேன். ஒருவிதத்தில் பிரச்சினைகளை விட்டு வெளியேறுகிறேன் என்கிற நிம்மதி. இன்னொருவிதத்தில் எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மை.

சிங்கையில் இறங்கி ஒரு சிங்கப்பூர் குடிவரவு அதிகாரியின் முன் நிற்கிறேன்.

"எதற்காக சிங்கப்பூர் வருகிறீர்கள்?"

(மனதுக்குள்.. வேறை வழியே இல்லாமல்தான் என்று சொல்ல நினைத்தாலும் :D) "Social visit."

" சரி.. இரண்டு கிழமைகள் தருகிறேன்."

" நான்கு கிழமைகள் தர முடியுமா?"

"ஏன்"

(வேலை தேடப்போறன் என்றா சொல்லமுடியும்?? :lol: )

"இல்லை.. மலேசியாவில் ஒரு திருமணத்திற்கும் செல்ல வேண்டும்.." தயங்கியபடியே இழுத்தேன். :D

" சரி மூன்று கிழமைகள் தாறன். அது போதும்"

அப்பாடா வந்தவரை லாபம் என்று விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து, வாடகைக் கார் பிடித்து நண்பர்கள் இருக்கும் வீட்டைச் சென்றடைந்தேன். :unsure:

(தொடரும்.)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தம்பிமார்! நான் இஞ்சை ஜேர்மனிக்கு வந்த புதிசிலை........எனக்கு வந்த நேர்முகதேர்வுகளையும்,நான் இப்ப மற்ரவைக்கு வைக்கிற நேர்முகதேர்வையும் இஞ்சை எழுதலாமோ? கொஞ்சம் பட்டிக்காடாய் இருக்கும்......ஏனெண்டால்.......அண்டா குண்டா அகப்பை...கோப்பை...கிளீனிங் எண்ட சொல்லுகள் வரும்..... அதுதான் யோசிக்கிறன் :rolleyes::(

குமாரசாமியண்ணை.. :D

பலவிதமான அனுபவப் பகிர்வையும் மேற்கொள்வதுதானே இந்தத் திரியின் நோக்கம்..! :rolleyes: உங்கள் பகிர்வையும் எடுத்துவிடுங்கோ.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.