Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா!

Featured Replies

எமக்குத்தேவை ஜனநாயகம்..

முதலில் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிட்டு பின்னர் ஆறுதலாக‌ சுதந்திரம் பற்றிப்பேசலாம்....

சும்மா ஆ.. ஊ.. என்டா.... வந்திட்டினம், வாக்கெடுப்பாம் புடலங்காயாம் எண்டுகொண்டு.... :huh: :huh: :huh:

எமக்குத்தேவை ஜனநாயகம்..

முதலில் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிட்டு பின்னர் ஆறுதலாக‌ சுதந்திரம் பற்றிப்பேசலாம்....

சும்மா ஆ.. ஊ.. என்டா.... வந்திட்டினம், வாக்கெடுப்பாம் புடலங்காயாம் எண்டுகொண்டு.... :huh: :huh: :huh:

எமக்குத்தேவை சுதந்திரம் ...........

அதன் பின்தான் நாம் ஜனநாயகத்தை பற்றி பேசமுடியும்............ :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள்கள் தினம் எப்போது? :unsure:

நானும் குழம்பிப்போனன் :rolleyes:

முஸ்லீம்கள் தமிழருடன் சேர்ந்து... இணக்க அரசியல் செய்வதற்கு சம்மதிப்பார்கள் என்பது, சந்தேகமே.

அவர்கள் ஸ்ரீலங்கா சிங்களவனுடன் சேர்ந்து, வாழப் பழகிவிட்டார்கள் என்ற படியால்...

வேலியிலை, போற... ஓணானைப் பிடித்து, வேட்டிக்குள்ளை விடக்கூடாது. :D

அவர்களை பொறுத்த மட்டில் , சிறுபான்மை மக்களான தமிழருக்கு சிறுபான்மையாக இருப்பதை விட , பெருபான்மையான சிங்களவனுக்கு சிறுபான்மையாக இருக்கலாம் என்ற ஆசை தான்.

இவ்வளவு நாளும் வாக்கெடுப்பு முடிந்துவிட்டது என்று நினைத்திருந்தேன்.

அது மாலைதீவில் தமிழருக்கு தனிநாடு கொடுக்கலாமா என்று நடந்த வாக்கெடுப்பு அண்ணை :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் வாக்கெடுப்பு முடிந்துவிட்டது என்று நினைத்திருந்தேன்.

அது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீள் வாக்கெடுப்பு அதற்கு 99.99 வீதம் வாக்குகள் விழுந்தது அதுவும் ஜ.நா சபையிடம் கொடுக்கப் பட்டிருக்கு அதனடிப்படையிலும் தமிழீழம் தரலாமா என ஜ.நா சபை பரிசீலித்துகொண்டிருக்கின்றது. ஒரேயடியாகத் தராமல் தவணை அடிப்படையில் பகுதி பகுதியாக பிரித்து தந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா சபை முடிவெடுத்திருந்தால் உண்மையில் நல்லது..இதில் புலம்பெயர்ந்த தமிழர்களை வாக்களிக்க செய்யவேண்டும். இப்போதாவது அவர்கள் பூனை கண் திறந்த்தது என சந்தொச பட்டுக்கணும் ..

போகட்டும் அங்கையோ இங்கையோ .. ஆனால் வாக்களிக்க போகும் போது சிலது இடக்கு மடக்கானதுகளை இந்த களத்திலோ அல்லது வெளியாலோ சந்தித்துவிட்டு போனால் .. சத்தியமாக போற காரியம் ...அது இங்கிட்டு தெளிவாகவே தெரியுது..

தமிழீழம் என்பது மட்டுந்தான் தமிழருக்கான நிரந்தரமான தீர்வு!!!

எம் மாவீரக் குழந்தைகளின் தாயகக்கனவு... இலட்சியம்!

அது என்றாவது ஒரு நாளேனும் கிடைத்தே தீரும்...!!!

அதில் எவ்வித சந்தேகமும் எனக்கில்லை! ஏனெனில், மாவீரர்களின் மாசற்ற தியாகங்களின்மேல் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை அது!

ஆனால், நாளையே தமிழீழத்தினை தமிழருக்கு கொடுக்கத் தயார் என ஒட்டு மொத்த சர்வதேசம் அறிவித்தால்.... அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் அந்த "மாசற்ற புண்ணியவான்கள்" யாரென்பதுதான் என் சந்தேகமும்... தற்போதைய பயமும் கூட!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்பது மட்டுந்தான் தமிழருக்கான நிரந்தரமான தீர்வு!!!

எம் மாவீரக் குழந்தைகளின் தாயகக்கனவு... இலட்சியம்!

அது என்றாவது ஒரு நாளேனும் கிடைத்தே தீரும்...!!!

அதில் எவ்வித சந்தேகமும் எனக்கில்லை! ஏனெனில், மாவீரர்களின் மாசற்ற தியாகங்களின்மேல் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை அது!

ஆனால், நாளையே தமிழீழத்தினை தமிழருக்கு கொடுக்கத் தயார் என ஒட்டு மொத்த சர்வதேசம் அறிவித்தால்.... அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் அந்த "மாசற்ற புண்ணியவான்கள்" யாரென்பதுதான் என் சந்தேகமும்... தற்போதைய பயமும் கூட!

ஆனால், நாளையே தமிழீழத்தினை தமிழருக்கு கொடுக்கத் தயார் என ஒட்டு மொத்த சர்வதேசம் அறிவித்தால்.... அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் அந்த "மாசற்ற புண்ணியவான்கள்" யாரென்பதுதான் என் சந்தேகமும்... தற்போதைய பயமும் கூட!

கீழே இணைக்கப்பட்ட செய்தி 'ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின்' தளத்தில் அவர்கள் கேட்கும் கையெழுத்து செய்தியில் இருந்து பிரசுரிக்கப்பட்டது: http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp

முதலில் கையெழுத்தை இடுங்கள்.

தமிழீழம் வேண்டுமா? என்று வாக்கெடுப்பு நடத்த தயாராகும் ஐ.நா!

தமிழீழம் என்கிற தனிநாடு வேண்டுமா? வேண்டாமா? என்கிற வாக்கெடுப்பை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சொந்த இடமாக கொண்டிருக்கக் கூடிய தமிழர்கள் மத்தியில் நடத்த ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது என தெரிய வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்குத்தேவை ஜனநாயகம்..

முதலில் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிட்டு பின்னர் ஆறுதலாக‌ சுதந்திரம் பற்றிப்பேசலாம்....

சும்மா ஆ.. ஊ.. என்டா.... வந்திட்டினம், வாக்கெடுப்பாம் புடலங்காயாம் எண்டுகொண்டு.... :huh: :huh: :huh:

வாக்கெடுப்புக்கு இடமில்லாத ஜனநாயகம்? அது என்ன நாயகம்?

பொரிமாதோண்டி கதைதான் ஞ்பகதிற்கு வருகின்றது ,

தான் எதையும் செய்யமுதல் கனவு காணும் இயல்பு .

இப்படி ஒரு நிலை வருமென்றால் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஒரு கணம் நினைத்து பாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

பொரிமாதோண்டி கதைதான் ஞ்பகதிற்கு வருகின்றது ,

தான் எதையும் செய்யமுதல் கனவு காணும் இயல்பு .

இப்படி ஒரு நிலை வருமென்றால் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஒரு கணம் நினைத்து பாருங்கள் .

பறப்போம் என்று ரைட் சகோதரர்கள் கனவு கண்டதனால்தான் இன்று விண்வெளிக்குக்கூட பயணம் நிகழ்கிறது.

குறை சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் எதனையும் செய்திருக்க வாய்ப்பில்லைத்தான் அது உங்களுக்குத்தான் அதிக பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் ஏனென்றால் ஏதோ ஒரு இடத்தில் " இந்திய இராணுவம் ஈழத்தில் அட்டூழியங்கள் செய்ததாக சொன்னார்கள் " என்று நீங்கள் கூறிய அளவீடே நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்பதை நன்கு புலப்படுத்துகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்குத்தேவை ஜனநாயகம்..

முதலில் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிட்டு பின்னர் ஆறுதலாக‌ சுதந்திரம் பற்றிப்பேசலாம்....

சும்மா ஆ.. ஊ.. என்டா.... வந்திட்டினம், வாக்கெடுப்பாம் புடலங்காயாம் எண்டுகொண்டு.... :huh: :huh: :huh:

பேச்சுவார்த்தை பொரியல் குழம்பை மறந்துவிட்டீர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழம் என்பது மட்டுந்தான் தமிழருக்கான நிரந்தரமான தீர்வு!!!

எம் மாவீரக் குழந்தைகளின் தாயகக்கனவு... இலட்சியம்!

அது என்றாவது ஒரு நாளேனும் கிடைத்தே தீரும்...!!!

அதில் எவ்வித சந்தேகமும் எனக்கில்லை! ஏனெனில், மாவீரர்களின் மாசற்ற தியாகங்களின்மேல் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை அது!

ஆனால், நாளையே தமிழீழத்தினை தமிழருக்கு கொடுக்கத் தயார் என ஒட்டு மொத்த சர்வதேசம் அறிவித்தால்.... அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் அந்த "மாசற்ற புண்ணியவான்கள்" யாரென்பதுதான் என் சந்தேகமும்... தற்போதைய பயமும் கூட!

இவ்வளவு நாளும் வாக்கெடுப்பு முடிந்துவிட்டது என்று நினைத்திருந்தேன்.

என்னத்தை மனசிலை வைச்சு இதை சொன்னிங்களோ தெரியாது உங்களை எல்லாரும் திட்டுறாங்கள்.

அனாலும் இந்தச் செய்திக்கு நீங்கள் எழுதியது கொஞ்சம் ஆழமாக படுத்து.

அடிப்படை இல்லாமல் வரும் செய்திகளுக்கு கருத்தேலும் உரிமை எவருக்கும் உண்டு.

பாவமும் பழியும் அந்தச் செய்திக்கே...

முள்ளிவாய்க்காலின் பின்னர் - அம்மணமாக இருந்தோம்.

ஜெனீவாவில் சிங்களம் பாராட்டப்பட்டது.

ஐ.நா. ஆணைக்குழுவை அமைத்தது. சற்று நம்பினோம்.

அறிக்கை வெளியே வராது என்றார்கள், வந்தது. நம்பிக்கை மேலும் துளிர் விட்டது.

கடந்த ஜெனீவா மனித உரிமை தொடரில் சிங்களம் மீதான தீர்மானம் ஒரு புதிய புள்ளியை தொடக்கி வைத்துள்ளது. ஐ.நா.வும் இலங்கையில் தமது யுத்த காலசெயல்பாடுகள் பற்றி அறிக்கை விடலாம் என செய்திகள் வெளியாயியுள்ளன.

22ஆவது மனித உரிமை தொடரின் பின்னர் ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஐ.நா. வாக்கெடுப்பு இலங்கையில் சாத்தியமாக்குவது எமது கைகளில் தான் உள்ளது.

முயற்சியே திருவினையாக்கும்.

தமிழீழம் தமிழகத்துடன் இணைய சாத்தியம் உள்ளாதே தவிரட தனித்தமிழீழ விடுதலை நடைமுறைக்கு கடுகளவும் சத்தியமில்லாத பகற்காணவு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது..

தமிழீழ தமிழர்களுக்கு சுதந்திரமும்,உரிமை வாழ்வும் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதே தவிர தமிழீழம் தமிழகத்துடன் இணையும் என்னும் எதிர்பார்ப்பு நடைமுறைக்கு கடுகளவும் சாத்தியமில்லாத பகற்கனவு என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் கிடையவே கிடையாது.

தமிழீழம் என்பது கனவாக இருந்த எமக்கு... அது மலரும் சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது மகிழ்ச்சிதரும் செய்திகளாக இருக்கலாம். ஆனால் நான் இத்திரியில் இதற்கு முன்னர் எழுதிய கருத்தின் பொருளை பலர் ஒழுங்காகப் புரிந்துகொள்ளவில்லை என எண்ணுகின்றேன்!

அதாவது, விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு முழுமையாக இயங்கியிருந்த காலத்தில் தமிழீழம் கிடைத்திருந்தால்... தமிழீழம் என்பதும் முழுமையடைந்த ஒரு உன்னத தேசமாக இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது அந்த தேசவிடுதலை வீரர்களின் இருப்பே கேள்விக்குறியாகி இருக்கின்றது.

சர்வதேசம் தானே முன்வந்து தமிழீழத்தைனை தனிநாடாக பிரகடனப்படுத்துகின்றது என்று வைத்துக் கொள்வோம்...!

யாரிடம் அது கையளிக்கப்படும்? தற்போதைய நிலையில்... யார் அதற்குத் தகுதியானவர்கள்?

தமிழீழ தனி நாட்டின் ஜனாதிபதி யார்? பிரதமர் யார்? மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?இப்படியான அவசியக் கேள்விகள் எதுக்குமே... எங்களிடம் ஒழுங்கான பதில் இல்லை!

நீயா நானா? உனக்கா எனக்கா? என.... எப்பவுமே ஏட்டிக்குப் போட்டியாய், அல்லாடி மல்லுக்கட்டுவதை விடுத்து..... எங்கள் இனத்துக்கென நிலத்திலும் புலத்திலுமன ஒரு உறுதியான கட்டமைப்பினை அரசியல்,இராஜதந்திர நோக்கத்திற்காக உருவாக்க வேண்டும்! அதன் பின்னர் தமிழீழத்துக்கான நகர்வு இலகுவானதாக இருக்கும்.

ஆயுதக் கலாச்சாரத்துக்கு பழக்கப்பட்டுப்போன எம் தேசத்தில் அதன் விடுதலையின் பின் அதன் வாசமே இருக்கக் கூடாது. பட்டவை போதும்! அமைதி என்ற ஒன்று மட்டுமே சுதந்திர தேசத்தின் அடையாளமாக இருக்க முடியும்!

எம் தாயக பூமியிலும் சந்தோசம் விளையும் நாளை தமிழினம் எதிர்பார்க்கின்றது.

பி.கு /மு.கு:

கூட்டமைப்பு என்கின்ற பெயரில் அரசியல் செய்வதாய் காட்டிக்கொள்ளும் அமைப்பிடமோ, அல்லது நாங்களும் தமிழர்தான் என சொல்லிக்கொள்ளும் நாசகார சக்திகளிடமோ தாயக மண் செல்லுமானால்... ஈடற்ற தியாகங்களில் விடிந்த எம் மண், மீண்டும் மீண்டும் சிதைந்துபோவதனை யாரும் தடுக்க முடியாது!!! ஆதலால், அதற்கான ஒரு உறுதியான கட்டமைப்பினை இப்பொழுதே உருவாக்க வேண்டும்.

புலிகளின் முன் -புலிகளின் பின் என இன்னும் தடம் மாறாமல் தாயக விடுதலைக்காய் சுவாசித்துக்கொண்டிருப்பவர்கள் யார்கண்ணிலும் படாமல் சுவாசித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை வெளிக்கொண்டு வர தமிழினம் முயற்சிக்க வேண்டும். அதுதான் நம் மலரும் தேசத்தின் விடியலை பரிபூரணமாக்கும்! எம் தேசத்தினை ஆள தகுதியானவர்களை உருவாக்குங்கள். அதிலுள்ள உங்களின் ஒற்றுமை மட்டுமே தேசத்தின் விடியலை விரைவாக்கும்!

ஏன் விடுதலைப்புலிகள் தமிழிழத்தை தனிநாடாக பிரகனப்படுத்தவில்லை?

தமிழீழம் தமிழகத்துடன் இணைய சாத்தியம் உள்ளாதே தவிரட தனித்தமிழீழ விடுதலை நடைமுறைக்கு கடுகளவும் சத்தியமில்லாத பகற்காணவு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது..

தமிழ்நாட்டு தமிழரோட்டு சேர்ந்து வாழ்வதை விட சிங்களவன் மேலானவன் என்று சொல்லும் நிலைக்கு தமிழகம் கொண்டு வந்துவிடும்.

சர்வதேசம் தானே முன்வந்து தமிழீழத்தைனை தனிநாடாக பிரகடனப்படுத்துகின்றது என்று வைத்துக் கொள்வோம்...!

யாரிடம் அது கையளிக்கப்படும்? தற்போதைய நிலையில்... யார் அதற்குத் தகுதியானவர்கள்?

தமிழீழ தனி நாட்டின் ஜனாதிபதி யார்? பிரதமர் யார்? மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?இப்படியான அவசியக் கேள்விகள் எதுக்குமே... எங்களிடம் ஒழுங்கான பதில் இல்லை!

அப்படி ஒன்று நடந்தால் அது ஐ.நா. (ஈராக், இலிபியா) இல்லை மேற்குலகம் (கோசவா) ஆதரவுடன் தான் நடக்கும். அப்பொழுது தொடர்ந்தும் ஆட்சி செய்வதற்கான கட்டமைப்புக்களை உருவாக்க ஆதரவு தருவார்கள். அதற்கு தமிழர் தரப்புடம் உள்ள நாடு கடந்த அரசு போன்ற கட்டமைப்புக்களும் கைகொடுக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டு தமிழரோட்டு சேர்ந்து வாழ்வதை விட சிங்களவன் மேலானவன் என்று சொல்லும் நிலைக்கு தமிழகம் கொண்டு வந்துவிடும்.

ஐ வி சசி நல்ல புத்தி உங்களுடையது. தமிழீழம் கிடைக்காமல் போவதற்கு காரணமே உங்களை போன்றோர்தான். முதலில் மலையகத்தமிழருக்கு குந்தகம் வந்தபோது உங்களைபோன்றோர் அவன் வடக்கத்தியான் தானே என்று சிங்களவர்களுடன் சேர்ந்துகொண்டீர்கள்.பிறகு உங்களைப்போன்றோருக்கு அடிவாங்கும்போது அய்யோ தமிழீழம் என்று சொன்னீர்கள். உங்களுக்கு தமிழ்ழீழம் வேண்டும் என்றால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் உங்களின் தமிழ்ழீழத்தில் பிறர் பங்கு கேட்டு வந்துவிடக்கூடாது அப்படி வந்தால் சிங்களவனோடு சேர்ந்து வாழ்வது தமிழ்நாட்டு தமிழனோடு இருப்பதை விட பெரியது. அப்படி என்னய்யா தமிழக தமிழர்கள் உங்களுக்கு கெடுதல் செய்தார்கள். சரி உங்களிடம் ஒன்று கேட்கிறேன். ஐ.நா சபை இப்படி ஒரு முடிவு எடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். தமிழினம் தனித்தேசிய இனம் தமிழர்கள் வாழும் இலங்கை இந்திய பகுதிகளை இணைத்து தனி தமிழர் தேசமாக அறிவிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது தமிழீழம் வேண்டும் என்பவர்களின் முடிவு என்னவாக இருக்கும் ? உங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். நான் உறுதியாக ஒன்றை சொல்ல முடியும். கிழக்கு தமிழர்களும் மலையகத்தமிழர்களும் அந்த புதிய தேசத்துடன் இணைவார்களே தவிர பெரும்பான்மையான யாழ்தமிழர்கள் சிங்களவருடன் சேர்ந்து இருக்கவே விரும்புவார்கள்.அப்படியே தமிழீழம் வாங்கினாலும் பிரபாரக்ரன் இருந்திருந்தால் வேண்டும்னால் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு நன்றி உடையவராக இருந்திருப்பார் ஆனால் இப்போது கிடைத்தால் தமிழீழம் தமிழக தமிழர்களை வரவேற்பதைவிட சிங்களர்களைதான் வரவேற்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் வாக்கெடுப்பு முடிந்துவிட்டது என்று நினைத்திருந்தேன்.

உண்மைதான்.தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு 1977 ஆம் ஆண்டு நடத்தப்பட்டு விட்டது.99 சத வீதத்துக்கும் மேலான தமிழ்மக்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்து விட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.