Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடவுள் இல்லை நீ கல்லிலான கயவன்..

Featured Replies

கல்லினில் இரு துளைவைத்து

கண்ணென்று சொல்லி உலகையும்

காப்பான் இவன், தன் கண் கொண்டு என

கற்பனை வளர்த்த எமை மூடராய் ஆக்கி

கயவனாய் போனாயே - கடவுள் இல்லை நீ

கல் என்றே சொல்வேன் உனை..

கைலையில் உள்ளாயா - இல்லை போதியின்

கிளையில் கீழுள்ளாயா? காமுகன்

கையில் கணையாய் ஆனாயா. என்குல மங்கையர்

கச்சை களைகையில் எங்கே ஒழித்தாயோ?

களத்தினில் எம்மக்காள் கருணையின்றி

கொலையுறுகையில் கழிவறையில் இருந்தாயோ??

கல்விப்பசி கொண்டு துள்ளித்திரிந்த

கயல்விழிகளெல்லாம் அசுரர்கள்

கலவிப்பசி தீர்க்க கையிழுத்து

கழுத்தறுத்த வேளை - நீ

கண்டு ரசித்தாயோ கொண்டு நடத்தினாயோ

கல்லில் புதைந்த கடவுளே.

கடல் கடந்தவன் மெய்யுரைக்க-மனம்

கல்லானவன் பொய்யுரைக்க

காலடியில் காலன் இன்று எம்

கை கட்டி வைக்க - உண்மைகள்

கவிழ்ந்திடச்செய்தால் உன்

கருவறை வந்து உன் சிலை

கவிழ்ப்பேன் கடவுளே..

கயவனும் நீயே

கள்வனும் நீயே

காமுகனும் நீயே

கொடுங்கோலனும் நீயே -இப்படி

கோர்த்து நான் உன்னையே

கடிந்து கொள்ள முடியும் ஏனினில்

கருத்து சுதந்திரம் உன்னோடு மட்டுமே உண்டு கடவுளே..

குறிப்பு : காணொளியை கண்ட கணம் முதலாய் இதயதுடிப்பும் கை துடிப்பும் அதிகரித்துவிட்டது. கைதுடிப்பை மட்டுமே கட்டுபடுத்தி வைக்கிறேன். இருந்தும் இன்று காலை அலுவலகத்தில் ஒரு சிங்கள மேலதிகாரியிடம் அந்த காணொளிய போட்டு காட்டினேன். மனம் பதறி ஒரு துளி கண்ணீர் விட்டார் அவரும். பின்னர் இடைவேளையில் என்னை கண்டு சொன்னார்''அதெல்லாம் பொய்யாம். கிராபிக்ஸ் பண்ணியிருக்காங்கள்''. என்னைவிட கேவலங்கெட்ட பொறுமைசாலி இருக்கமுடியாது.

- Aswin win (JUNE 17, 2011) -

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கிடக்கிற கல்லை கடவுளா சித்தரிக்கிறதும் மனுசன்.. அது சாட்சியே சொல்லாது என்று நல்லா தெரிந்தும் தப்புப் பண்ணுறதும் மனிசன்.. கடைசி வரை தன் தவறை திருத்தாமலே.. கல்லைத் திட்டிக்கிட்டு.. தனக்குத் தானே.. புரட்சியாளன் என்பவனும் மனிசனே..! கல்லு சடம். மனிதனே..அதை கடவுளும் ஆக்கி.. கயவனும் ஆக்குகிறான்.... கவிதையும் ஆக்குகிறான்...! என்னே வேடிக்கை மனித உலகம்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

சும்மா கிடக்கிற கல்லை கடவுளா சித்தரிக்கிறதும் மனுசன்.. அது சாட்சியே சொல்லாது என்று நல்லா தெரிந்தும் தப்புப் பண்ணுறதும் மனிசன்.. கடைசி தன் தவறை திருத்தாமலே.. கல்லைத் திட்டிக்கிட்டு.. தனக்குத் தானே.. புரட்சியாளன் என்பவனும் மனிசனே..! கல்லு சடம். மனிதனே..அதை கடவுளும் ஆக்கி.. கயவனும் ஆக்குகிறான்.... கவிதையும் ஆக்குகிறான்...! என்னே வேடிக்கை மனித உலகம்..! :lol::D

:)

நான் கோயிலுக்கே போறதில்லை. போக விரும்புவதுமில்லை. :(

  • கருத்துக்கள உறவுகள்

:)

நான் கோயிலுக்கே போறதில்லை. போக விரும்புவதுமில்லை. :(

நான் கோவிலுக்கு போவேன்.. கடவுளைக் காண அல்ல.. அந்த அமைதியான சூழலில்.. மனதை அமைதிப்படுத்த. அதையே வீட்டில் செய்ய முடியும் என்றால் கோவிலுக்குப் போகமாட்டேன்..! அதுக்காக புலம்பெயர் நாடுகளில் மூலைக்கு மூலை.. குட்டிக் குட்டி கோவிலைக் கட்டி வைச்சிட்டு செய்யுறாங்களே வியாபாரம்.. கண்காட்சி.. அதுக்கெல்லாம் போறதே இல்ல. அங்க போனா.. தலையிடி தான் வரும்..! மன அமைதி வராது..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கோவிலுக்கு போவேன்.. கடவுளைக் காண அல்ல.. அந்த அமைதியான சூழலில்.. மனதை அமைதிப்படுத்த. அதையே வீட்டில் செய்ய முடியும் என்றால் கோவிலுக்குப் போகமாட்டேன்..! அதுக்காக புலம்பெயர் நாடுகளில் மூலைக்கு மூலை.. குட்டிக் குட்டி கோவிலைக் கட்டி வைச்சிட்டு செய்யுறாங்களே வியாபாரம்.. கண்காட்சி.. அதுக்கெல்லாம் போறதே இல்ல. அங்க போனா.. தலையிடி தான் வரும்..! மன அமைதி வராது..! :lol::icon_idea:

நல்ல திருவிழாவுக்கு போய் பாருங்கோ மனதுக்கு அமைதி வருதோ இல்லையோ, கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும். :D:lol:

  • தொடங்கியவர்

நான் கோவிலுக்கு போவேன்.. கடவுளைக் காண அல்ல.. அந்த அமைதியான சூழலில்.. மனதை அமைதிப்படுத்த. அதையே வீட்டில் செய்ய முடியும் என்றால் கோவிலுக்குப் போகமாட்டேன்..! அதுக்காக புலம்பெயர் நாடுகளில் மூலைக்கு மூலை.. குட்டிக் குட்டி கோவிலைக் கட்டி வைச்சிட்டு செய்யுறாங்களே வியாபாரம்.. கண்காட்சி..அதுக்கெல்லாம் போறதே இல்ல. அங்க போனா.. தலையிடி தான் வரும்..! மன அமைதி வராது..! :lol::icon_idea:

புலம்பெயர் நாட்டில் மட்டுமல்ல. எமது நாட்டிலும் தான் வியாபாரம் நடக்குது. (உதாரணம்: அர்ச்சனை செய்ய வேண்டுமென்றால் காசு கொடுத்து ticket எடுத்து செய்ய வேண்டும்).

அது பத்தாதென்று பணக்கார / பக்தி கூடின சனம் வேற ஐயர் விபூதி, சந்தனம் தரும் போது தாள் காசுகளை தட்டில் குவிக்கினம். இதை பார்க்கிற ஏழை சனம் தாங்கள் காசு வைக்காட்டி/குறைய காசு வைத்தால்....... ஐயர்,மற்றவர்கள் என்ன நினைப்பினமோ என்று இருக்கிற காசெல்லாத்தையும் தட்டில் போடினம். அதெல்லாம் இப்ப கடவுளுக்கு போறதில்ல. ஐயர் மாருக்கு தான் போகுது.

ஐயரும் திருந்தார், சனமும் திருந்தாதுகள். :wub:

ஆனால் புலம்பெயர் நாட்டில் நடக்கிற அளவுக்கு இங்க இல்ல என்பது ஆறுதல் :).

புலம்பெயர் நாடுகளில் பேரணிகளில் கலந்து கொள்கிறார்களோ இல்லையோ கோயிலுக்கு செல்வார்கள். இங்கு இளவட்டங்கள் பலவும் தமது எதிர்பாலாரினை பார்க்க செல்வதுண்டு :D . மற்றபடி கடவுளை தரிசிக்க அல்ல. அவர்களுக்கு அதில சந்தோசம் வேற....... :lol::D

  • தொடங்கியவர்

நல்ல திருவிழாவுக்கு போய் பாருங்கோ மனதுக்கு அமைதி வருதோ இல்லையோ, கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும். :D:lol:

புலம்பெயர் நாடுகளில் பேரணிகளில் கலந்து கொள்கிறார்களோ இல்லையோ கோயிலுக்கு செல்வார்கள். இங்கு இளவட்டங்கள் பலவும் தமது எதிர்பாலாரினை பார்க்க செல்வதுண்டு :D . மற்றபடி கடவுளை தரிசிக்க அல்ல. அவர்களுக்கு அதில சந்தோசம் வேற....... :lol::D

ஜீவா அண்ணா உட்பட..... :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் நாடுகளில் பேரணிகளில் கலந்து கொள்கிறார்களோ இல்லையோ கோயிலுக்கு செல்வார்கள். இங்கு இளவட்டங்கள் பலவும் தமது எதிர்பாலாரினை பார்க்க செல்வதுண்டு :D . மற்றபடி கடவுளை தரிசிக்க அல்ல. அவர்களுக்கு அதில சந்தோசம் வேற....... :lol::D

அதைத்தானே சிஸ்டர் நாங்க ஒத்துக்கொள்ளுறம்.. வருசத்திலை ஒருநாள் தான் ஊரிலை இருக்கிற எல்லா பிகரையும் ஒரே இடத்திலை பார்க்கலாம் அதையும் கெடுத்திடுவியள் போல.. :rolleyes:

இது நல்லா இல்லை சொல்லிட்டேன்.. :lol::icon_mrgreen::icon_idea:

ஜீவா அண்ணா உட்பட..... :icon_idea:

நல்ல திருவிழாவுக்கு போய் பாருங்கோ மனதுக்கு அமைதி வருதோ இல்லையோ, கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும். :D:lol:

பக்திப்பரவசத்துடன் வரும் பிகர்களின் பாந்தமான வதனம் கண்டு, மனதில் ஒருவித புத்துணர்ச்சி எழுவது உண்மை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

"கடவுள் ஏன் கல்லானார் - மனம்

கல்லாய் போன மனிதர்களாலே"

இங்கு மனம் கல்லாய் போகாத மனிதர்களின் உயிரும் தானே போனது. அவர்களை ஏன் காப்பாற்றவில்லை கடவுள்?

:)

நான் கோயிலுக்கே போறதில்லை. போக விரும்புவதுமில்லை. :(

நான் கோயிலுக்கு போக விரும்பிறதில்லை! ஆனாலும் கோயிலுக்கு போறனான்!

"இயலாமை" என்கின்ற ஒன்று... என் இயல்பை மாற்றி... கோயில் மதில் ஏறிக் குதித்தேனும் கோயிலுக்குள் போகப் பண்ணுது!!! என்ன செய்வது...!!!!!!!!! :(

( உங்கள் உள்ளம் சுத்தமாக இருந்தால்.... கோயிலுக்கு போக வேண்டிய அவசியமேயில்லை! ஏனெனில், பரிசுத்தமான உள்ளமும் கோயிலுக்கு சமனானது )

  • தொடங்கியவர்

நான் கோயிலுக்கு போக விரும்பிறதில்லை! ஆனாலும் கோயிலுக்கு போறனான்!

"இயலாமை" என்கின்ற ஒன்று... என் இயல்பை மாற்றி...கோயில் மதில் ஏறிக் குதித்தேனும் கோயிலுக்குள் போகப் பண்ணுது!!! என்ன செய்வது...!!!!!!!!! :(

( உங்கள் உள்ளம் சுத்தமாக இருந்தால்.... கோயிலுக்கு போக வேண்டிய அவசியமேயில்லை! ஏனெனில், பரிசுத்தமான உள்ளமும் கோயிலுக்கு சமனானது )

என்னதான் கடவுளை குறை கூறினாலும் ஆபத்து வரும் போது எம்மையறியாமலே "கடவுளே காப்பாத்து" என்று தான் கூற தோன்றும்.

நான் கோயிலுக்கு போறேல்லையே தவிர மனதில் இடைக்கிட நினைப்பன்..... அதற்காக என் உள்ளம் பரிசுத்தமானது என்று சொல்லவில்லை...........

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அருமையான கருப்பொருள் கொண்டு வடித்த கவிதை!

இணைப்புக்கு நன்றிகள், காதல்

ஒரே ஒரு குறளில், மதம் பற்றிய எனது கருத்து!

மழித்தலும், நீட்டலும் வேண்டா, உலகம்,

பழித்தது ஒழித்து விடின்!

Edited by புங்கையூரன்

கல்விப்பசி கொண்டு துள்ளித்திரிந்த

கயல்விழிகளெல்லாம் அசுரர்கள்

கலவிப்பசி தீர்க்க கையிழுத்து

கழுத்தறுத்த வேளை - நீ

கண்டு ரசித்தாயோ கொண்டு நடத்தினாயோ

கல்லில் புதைந்த கடவுளே.

உள்ளுடையும் உணர்வினை கவிதையில் வடித்த

கவிதையே கவி தைக்கும் வார்த்தைகளால்

மனச்சாட்சியை சுட்டதற்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் இந்த உலக கல்லில் இருந்து வந்தோம் என்று காட்டவே லிங்கத்தை கல்லில் செய்தோம். 

ஆனால் சில நூறு வருடத்திற்கு முன் வந்த பிராமணிகள் அர்த்தத்தை சொல்லி கொடுக்காமல் மணி அடித்து கல்லை வைத்து காசு பார்கிறார்கள்.

நானும் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதிறன். 

  • தொடங்கியவர்

ஒரே ஒரு குறளில், மதம் பற்றிய எனது கருத்து!

மழித்தலும், நீட்டலும் வேண்டா, உலகம்,

பழித்தது ஒழித்து விடின்!

நல்ல குறள்.

எப்படி தான் இப்படி திடீர் திடீரென்று பொருந்தக்கூடிய குறள்களை இணைக்கிறீர்களோ தெரியவில்லை. :)

Edited by காதல்

  • தொடங்கியவர்

கல்விப்பசி கொண்டு துள்ளித்திரிந்த

கயல்விழிகளெல்லாம் அசுரர்கள்

கலவிப்பசி தீர்க்க கையிழுத்து

கழுத்தறுத்த வேளை - நீ

கண்டு ரசித்தாயோ கொண்டு நடத்தினாயோ

கல்லில் புதைந்த கடவுளே.

உள்ளுடையும் உணர்வினை கவிதையில் வடித்த

கவிதையே கவி தைக்கும் வார்த்தைகளால்

மனச்சாட்சியை சுட்டதற்கும் நன்றிகள்

நன்றி.

இக்கவிதையை எழுதிய யாழ்ப்பாணத்தமிழன் aswhin win அண்ணாவுக்கு என் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாம் இந்த உலக கல்லில் இருந்து வந்தோம் என்று காட்டவே லிங்கத்தை கல்லில் செய்தோம்.

ஆனால் சில நூறு வருடத்திற்கு முன் வந்த பிராமணிகள் அர்த்தத்தை சொல்லி கொடுக்காமல் மணி அடித்து கல்லை வைத்து காசு பார்கிறார்கள்.

நானும் கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதிறன்.

எழுதுங்கோ எழுதுங்கோ.... :lol::D

எழுதி அவரை எப்பிடியாவது பூவுலகுக்கு வரச்சொல்லுங்கோ.... :icon_idea:

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை காதல், ஆனா எங்களின் பிழைகளை கடவுள் என்ற பெயரால் கழுவப் பார்க்கின்றோம்

  • தொடங்கியவர்

நல்ல கவிதை காதல், ஆனா எங்களின் பிழைகளை கடவுள் என்ற பெயரால் கழுவப் பார்க்கின்றோம்

நன்றி உங்கள் கருத்துக்கு...

கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

நம்புவோருக்கு இது கடவுளின் பிழையாக தெரியும். நம்பாதவர்களுக்கு இது மக்கள் விடும் பிழையாக தெரியும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வித்தியாசமான நல்ல கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

கல் என்பவனுக்கு கல்

அதைக்கடவுள் என்பவனுக்கு கடவுள்

எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம்.

குடிசை வாசியும் கல்லை காலால் தட்டிவிட்டு செல்கின்றான்.

படித்தவனும் சந்தினுக்கு போகமுதல் கல்லக்கும்பிட்டே செல்கின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் ஏன் கல் ஆனான்?

மனம் கல்லாய் போன மனிதர்களாலே

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

கருத்துகளை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி....

கடவுள் ஏன் கல் ஆனான்?

மனம் கல்லாய் போன மனிதர்களாலே

வல்வை சகாறா அக்கா இந்தப்பாடலையே இணைத்து விட்டார். உங்களுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தான் கல்லை கடவுளாக்கியது.தன்னம்பிக்கை இல்லாதவனும் கோழையும் தான் கல்லை கடவுளாக்கியது.பின்னர் நாம் போய் கடவுளே (கல்லே) எங்களை காப்பாற்று என்றால் எப்படி காப்பாற்றும்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.