Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துக் கவிஞர் சண்முகம் சிவலிங்கம் காலமானார்

Featured Replies

Sha-Siva.jpgஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று [20-04-2012 வெள்ளிக்கிழமை] அதிகாலை காலமானார்.

இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் 1939ம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம்பெற்றவராவர். அறிவியல் துறை ஆசிரியராக பணியில் இணைந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார்.

1960ம் ஆண்டுமுதல் கவிதை எழுதிவரும் இவரது கவிதைகள் 'நீர்வளையங்கள்' [தமிழியல் 1988], 'சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்' [காலச்சுவடு 2010] என்ற சிறந்த இரண்டு கவிதை நூல்களாக இதுவரை வெளிவந்துள்ளன.

மார்க்சிய அழகியல் ரீதியில் அமைந்த விமர்சனக் கட்டுரைகளும், அழகிய சிறுகதைகள் பலவும், கையெழுத்துப் பிரதியிலுள்ள இரண்டு நாவல்களும் கவிதைகளும் நூல்வடிவம் பெறவேண்டிய நிலையில் உள்ளன.

இவரது ஒரு மகன் ஈழப்போராட்டத்தில் களப்பலியானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு ஈழத் தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.

http://www.puthinappalakai.com/view.php?20120420106036

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஸ்டீபன் ஐயாவின் குடும்பத்திற்கு எனது துயரத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மாஸ்டர் சிவலிங்கம் என்பவர் இவரா?...பாடசாலைகளுக்கெல்லாம் வந்து கதை எல்லாம் சொல்லுவாரே...ஆழ்ந்த அனுதாபங்கள்...ஆத்மா சாந்தி அடையட்டும்

  • தொடங்கியவர்

ஆழ்ந்த அனுதாபங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

மாஸ்டர் சிவலிங்கம் என்பவர் இவரா?...பாடசாலைகளுக்கெல்லாம் வந்து கதை எல்லாம் சொல்லுவாரே...ஆழ்ந்த அனுதாபங்கள்...ஆத்மா சாந்தி அடையட்டும்

பத்திரிகைகளில் கதைகள் எழுதியிருக்கலாம். சரியாக ஞாபகம் இல்லை.

ஸ்டீபன் சேர் (சண்முகம் சிவலிங்கம்) கவிஞர். விலங்கியல் பாடம் கற்பிப்பவர்.

சர்வதேச ஜோக்கர்கள்

வட கிழக்கில் மையம் கொள்கிறார்,

சர்வதேச ஜோக்கர்கள்

கையைக் குத்தி காலை உயர்த்தி

கரணம் அடிக்கிறார் ஜோக்கர்கள்

தலையில் கவிழ்ந்த

குஞ்ச வால் தொப்பி சரிய

முகம் நிறைய பவுடர் பூச்சு

அமெரிக்கப் பூச்சு

கனேடியப் பூச்சு

நெதர்லாந்துப் பூச்சு

மூக்கு நுனியில்

பிரித்தானியக் கரியைப் பூசி

துருவக்கரடியின் மோப்பம் காட்டி

வட கிழக்கில் மையம் கொள்கிறார்

சரவதேச ஜோக்கர்கள்,

நாடி பிடித்து நடிக்கும் ஜோக்கர்கள்

ஓம்,ஓம் போடும் ஊமை ஜோக்கர்கள்

குஞ்ச வால் தொப்பியினுள்

குதிரை இருப்பதாய்

நம்ப வைக்கும் நமட்டு ஜோக்கர்கள்

சுக்குத் தண்ணீரில்

சுயநிர்ணய உரிமையைக்

கரைத்துக் குடித்துக்

காலைக் கிளப்பி ஈழத்தின் எல்லைக்

கல்லை நனைக்கும் நாலு கால் ஜோக்கர்கள்

மாகாண சபையை மயிருக்குள் வைத்து

சமஷ;டியை சந்துக்குள் நுழைத்து

காணோம் காணோம் எனக்

கையை விரிக்கும்

ஜோக்கர்கள், ஜோக்கர்கள்

வட கிழக்கில் மையம் கொள்ளும்

சர்வதேச ஜோக்கர்கள்

பராக், பராக்.

- சண்முகம் சிவலிங்கம் (2001) -

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

36561_417444894932179_100000000176167_1571138_227563437_n.jpg

மிகவும் கவலையான செய்தி...அன்னாருக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

  • தொடங்கியவர்

ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரான சண்முகம் சிவலிங்கத்தை இழந்து விட்டோம். 1960 களில் எழுதத் தொடங்கியதில் இருந்து தன்னுடைய இறுதிக் கவிதை வரையில் ஈர்ப்புக் குன்றாமல், புதுமை குன்றாமல் எழுதி வந்தவர் சசி.

1939ம் ஆண்டில் பிறந்த சண்முகம் சிவலிங்கம் 1960 களில் எழுதத் தொடங்கியவர். 2012 வரையில் எழுதியவர்.

இதுவரையில் ‘நீர்வளையங்கள்’ [தமிழியல் 1988], ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்’ [காலச்சுவடு 2010] என்ற இரண்டு கவிதை நூல்களாக இதுவரை வெளிவந்துள்ளன.

ஆனால், சண்முகம் சிவலிங்கம் எழுதிய சிறுகதைகள் எவையும் இன்னும் தொகுக்கப்படவில்லை. அவர் ஒரு நாவலை எழுதி வைத்திருந்ததாகவும் கேள்வி.

இதைவிட, விமர்சனங்களையும் எழுதி வந்தார்.

இலங்கையின் கிழக்கே கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் கவிஞர் சண்முகம் சிவலிங்கம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உயர்கல்வி பயின்று அறிவியல் துறையில் பட்டம்பெற்றவர். அறிவியல் துறை ஆசிரியராக பணியில் இணைந்து பின்னர் பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார்.

இரவு படுக்கைக்குச் சென்றவர் இன்று [20-04-2012 வெள்ளிக்கிழமை]

காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்க் கவிதைக்குப் புதிய பரிமாணங்களைத் தந்து தனித்த அடையாளமாகத் துலங்கிய சண்முகம் சிவலிங்கத்தின் இழப்புப் பெரிதே.

via Sivarasa Karunagaran (முகநூல்ஊடாக)

  • கருத்துக்கள உறவுகள்

wreath.jpg

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

அன்னாரின், பிரிவால் துயருறும்... உற்றார், உறவினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் ஐயா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..

போருக்குப் போனாய், போ

போனாய் நீ

போருக்குப் போனாய்,

போ.

ஓநாய்களுக்குப் பயந்து

உன்னை

வாயில் கவ்வி வழி தேடிய

பூனை நான்

போனாய் நீ

போருக்குப் போனாய்,

போ.

வானில்,

பனையின் வைர ஓலைகளில்

கூடுகள் நெய்தால்

குண்டர் உன்னைக் கொல்வார் என

பூமிக்கடியில் பொந்து கிண்டி

உன்னை

என் சிறகு

தோலுக்குள் போர்த்திய

தூக்கணாங் குருவி நான்

என் துணையையும் மீறி

போனாய் நீ

போருக்குப் போனாய்,

போ.

(1986)

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் இழப்பால் தவிக்கும் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் சண்முகம் சிவலிங்கம் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

அன்னாரின், பிரிவால் துயருறும்... உற்றார், உறவினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.