Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக்கொடிகளுடன் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ள தமிழர்கள் (படங்கள்)

Featured Replies

போர்குற்றவாளி தமிழினப்படுகொலையாளி மகிந்த ராஜபக்ஷ லண்டன் வருவதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து புலிக்கொடிகளுடன் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ள தமிழர்கள். மேலதிக செய்திகள் விரைவில்.4-1024x576.png3-1024x576.png2-1024x576.png1-1024x576.png

http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8/

  • Replies 224
  • Views 17.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பிரமாதம். ராசபக்சா ஒழிச்சு ஓடலாம். சில நாட்டு தலைவர்கள் இதை கட்டாயம் பார்க்க போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல விடயம்.. ஆனால் சிங்கள கைகூலிகள் கேப்பில் புகுந்துவிடுவார்கள் .. உசாரா இருக்கணும்.. :rolleyes: :rolleyes:

இது தொடர்பான காணோளிகளைப் பார்க்கின்ற போது மகிந்தவினால் மோற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளைச் சித்தரிக்கின்ற படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. போரின் போது கொல்லப்பட்ட சிறுவர்களின் படஙகள் அங்கவ\ினமடைந்து இரத்தம் தோய்ந்த நிலையில் இருக்கும் மக்களின் படங்கள் என்பவற்றிற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் வருபவர் ஒரு இனப்படுகொலையாளி என்பது பார்ப்பவர்களுக்குப் புரிந்திருக்கும்.

இந்தக் காணொளியைப் பார்க்கின்ற போது மூன்றாண்டுகளுக்கு முன்னர் குயின்ஸ்பார்க் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று தான் நினைவிற்கு வருகிறது. இனஅழிப்பிற்கெதிராக நடைபெற்றுக் கொண்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றிற்கு என்னுடன் வேலைசெய்யும் கனேடிய நண்பர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு போயிருந்தேன்.

மேள தாளங்களுடனும் எராளமான புலிக் கொடிகளுடனும் ஆங்காங்கே இன அழிப்பைச் சித்தரிக்கும் பதாதைகளுடனும் நடந்த அந்த நிகழ்வைப் பார்த்ததும் அவர் என்னிடம் சொன்னது இது தான் "இந்த நிகழ்;வைப் பார்க்கின்ற போது இன அழிப்பிற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உணர்வு ஏற்படவில்லை. மாறாக ஏதோ ஒரு கார்னிவலில் கலந்து கொண்ட உணர்வே ஏற்படுகிறது"

Edited by Manivasahan

கார்னிவல் நடாத்தினால் வேறெந்த உணர்வு வரும்.

புலம் பெயர்ந்தவர்கள் கூத்தடிக்க தான் அனைத்து நிகழ்வுகளும் நடந்தேறின .இன்னமும் தொடர்கின்றது இது .

முதல் நிமிடம் நாட்டில் நடக்கும் சோகம் பாடிவிட்டு, அடுத்த நிமிடம் நட்சத்திர திருவிழா தென்னிந்திய சினிமா நடிகைகள் வருகின்றார்கள் என்று வானொலியில் இவர்கள் போடும் வேசங்கள் தாங்காது .

"சுரணை" என்ற சொல் தமிழ் அகராதியில் இருந்து நீக்கப்படவேண்டும்.

மேள தாளங்களுடனும் எராளமான புலிக் கொடிகளுடனும் ஆங்காங்கே இன அழிப்பைச் சித்தரிக்கும் பதாதைகளுடனும் நடந்த அந்த நிகழ்வைப் பார்த்ததும் அவர்கள் என்னிடம் சொன்னது இது தான் "இந்த நிகழ்;வைப் பார்க்கின்ற போது இன அழிப்பிற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உணர்வு ஏற்படவில்லை. மாறாக ஏதோ ஒரு கார்னிவலில் கலந்து கொண்ட உணர்வே ஏற்படுகிறது"

- தேவை கருதி நீக்கப்பட்டுள்ளது -

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தமிழீழத்துக்காகப் போட்ட வேடங்களையும், நரித்தனங்களையும் விடவா இது அதிகம்?? எங்கேவது எமக்குள் உள்ள சீர்திருந்தங்கள் பற்றி எழுதும்போது எல்லாம், நரி, வேலை பார்க்கலாம் என்ற நினைப்போது தானே உலாவுவது இக்கும்பல்களின் நோக்கம்.

நீங்கள் தமிழீழத்துக்காகப் போட்ட வேடங்களையும், நரித்தனங்களையும் விடவா இது அதிகம்?? எங்கேவது எமக்குள் உள்ள சீர்திருந்தங்கள் பற்றி எழுதும்போது எல்லாம், நரி, வேலை பார்க்கலாம் என்ற நினைப்போது தானே உலாவுவது இக்கும்பல்களின் நோக்கம்.

நன்றி தூயவன்!நீங்கள் குறிப்பிடுவது போல சில தவறுகள் திருத்தப்பட்டு தாயகத்தமிழ் மக்களின் அவலங்கள் நீங்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதப்படும் கருத்துக்களை தமது தேவைக்கேற்ப பயன்படுத்தத் துடிக்கும் சிலரது செயல்கள் அதிருப்தியையே தருகின்றது.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் புலிக் கொடி தொடர்பில் நானெழுதிய கட்டுரை ஒன்றை தேவை கருதி மீள்பதிப்புச் செய்கிறேன்...

கொடியும் கோசமும் தமிழர் உரிமைகளைப் பெற்றுத் தருமா?

தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் முடக்கப்பட்டு ஓராண்டு கடந்துள்ளது.

இந்த ஓராண்டு காலத்தில் தமிழர் தாயகம் பல்வேறு வகைகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டு மிக வேகமாக சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இறுதி யுத்த காலத்தில் சுமார் நாற்பதினாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்பட்டமான போர்க் குற்றங்கள் சிங்களத்தினால் அரங்கேற்றப்பட்டன. போர் முடிந்த பின்னரும் சிங்கள தேசத்தின் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

சிங்கத்தின் குகைக்குள் சிக்குண்ட மானைப் போல சின்னா பின்னப்படுத்தப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் அவலங்களை சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் படம் போட்டுக் காட்டியிருந்தன. ஆனாலும் சிங்கள அரசின் இந்தக் கொடுமைகளைப் பகிரங்கப்படுத்தும் விதமான செயற்பாடுகளைப் புலம் பெயர் தேசத்தில் இயங்கும் தமிழர் அமைப்புகள் முனைப்புடன் முன்னெடுத்தன என்று சொல்ல முடியாது.

தமது இருப்புக்களைக் காத்துக் கொள்வதிலும் பதவிக் கதிரைகளுக்குப் பங்கம் வராமல் காய் நகர்த்தல்களை மேற்கொள்வதிலுமே இந்த அமைப்புக்கள் குறியாக இருந்தன என்பதே கசப்பான உண்மை. தாயகப் போர் யாரும் எதிர்பாராத வகையில் முடக்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல மீண்ட தமிழர் சமூகம் தாயக விடுதலைப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான மார்க்கமொன்று குறித்துச் சிந்தித்தது.

அதன் விளைவாக உருவெடுத்ததே நாடு கடந்த அரசாங்கம் என்னும் உத்தியாகும். உலகில் இதுவரை முன்னுதாரணம் காட்ட முடியாத புதிய வகையான உத்தி குறித்த செய்திகள் வெளிவந்ததிலிருந்தே இது குறித்த விமர்சனங்களை பலரும் முன்வைத்து வந்தனர்.

குற்றங்காணல் என்னும் கண்ணாடியை அணிந்து கொண்டு இதனை அவதானித்து வந்த விமர்சகர்களின் செயற்பாடுகள் ஒரு புறமிருந்தாலும் தாயக விடிவிற்கான உகந்த மார்க்கம் இதுவே என உறுதியாகக் கண்ட தமிழ் ஆர்வலர்கள் புத்திஜீவிகள் ஆகியோரின் துணையுடன் முனைப்புப் பெற்ற இந்த நாடு கடந்த அரசாங்கம் மே 2ம் திகதி நடைபெற்ற தேர்தலுடன் உருவாக்கம் பெற்றது. இந்த நிலையில் நாடு கடந்த அரசாங்கம் என்பது சிங்கள தேசத்தின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

தமிழர்களின் அடுத்த உரிமைப் போர் வடிவத்தை முளையிலேயே கிள்ளி விட வேண்டும் என்ற முனைப்புடன் சிங்கள தேசம் காய்களை நகர்த்தி வருகிறது.

விடுதலைப் புலிகளையும் அதனுடன் தொடர்புபட்ட புனர்வாழ்வுக் கழகம், உலகத் தமிழர் அமைப்பு போன்றவற்றை எவ்வாறு தடை செய்யும் உபாயங்கள் கைக்கொள்ளப்பட்டனவோ அதே உபாயங்களைப் பயன்படுத்தி இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தையும் செயலிழக்கச் செய்து சட்டவிரோதமான அமைப்பாக அறிவிக்க வைக்கும்படி புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் அதிகமுள்ள நாடுகளின் தூதரகங்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சிங்கள தேசத்தின் இந்தக் காய் நகர்த்தலை முறியடிக்க தமிழர் தரப்பு எவ்வாறு செயற்படப் போகிறது என்பதே இன்றுள்ள கேள்வி.

சிங்கள தேசத்தினால் முன்னெடுக்கப்படும் ஆபத்தைத் தெரிந்து கொண்டும் விட்டில் பூச்சிகளைப் போல அந்த ஆபத்தில் விழப் போகின்றோமா? அல்லது சிங்களத்திற்கிணையான அல்லது ஒரு படி மேலான இராஜதந்திரத்தைக் கையாண்டு இந்த ஆபத்திலிருந்து மீளப் போகின்றோமா என்பதே இன்றுள்ள கேள்வி?

ஆனாலும் அண்மைய நாட்களாக புலத்தில் இடம் பெறும் செயற்பாடுகள் ஆரோக்கியமான சமிக்ஞைகளைத் தரவில்லை என்பது கண்கூடு. நாடு கடந்த அரசுடன் தமிழீழக் கொடியையும் இணைத்து உருவாக்கப்பட்டு வரும் சர்ச்சை பலத்த சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.

தமிழீழம் நோக்கிய எமது அடுத்த கட்ட நகர்விற்கு ஆதாரமாகவும் அச்சாணியாகவும் அமையப் போவது சர்வதேச மட்டத்தில் நாம் ஏற்படுத்திக் கொள்ளப் போகும் நட்புறவும் நம்பகத் தன்மையுமே என்பது அரசியல் அரிச்சுவடியை அறிந்த அனைவருக்குமே புரிந்திருக்கும். இந்த நிலையில் தொடர்ந்து சர்வதேசத்தின் சந்தேகப் பார்வையை தக்க வைக்கும் விதமான செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக அமையப் போவதில்லை.

அப்படியானால் தமிழீழ தேசியக் கொடியை நாங்கள் மறந்து விடுவது சரியானதா என்ற உணர்வுபூர்வமான கேள்வியொன்று இந்த இடத்தில் எழுவதும் இயல்பானதே. தமிழீழ இராணுவமான விடுதலைப் புலிகள் இயக்கமோ, ஈகைக்கும் தியாகத்திற்கும் இலக்கணம் வகுத்த மாவீரர்களின் மகத்தான செயற்பாடுகளோ எதுவித சர்வதேச உதவியுமின்றி தமிழீழ தாயகத்தில் நிலவிய நிர்வாகக் கட்டமைப்புகளோ எந்தவொரு தமிழனதும் நினைவுகளிலிருந்தும் அழிக்கப்படக் கூடியதல்ல. உலகில் கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும் வரை இந்த நினைவுகளும் வீரம் செறிந்த வரலாறும் நினைவில் இருக்கத் தான் போகிறது.

ஆனாலும் கோசம் போட்டு கொடி பிடித்துத் தான் எம் தமிழ் மறவர்களை நினைவில் வைக்கும் அளவிற்கு தமிழர்கள் ஞாபக மறதி கொண்டவர்களோ நன்றி மறந்தவர்களோ அல்ல. போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனாலும் போராட்ட இலட்சியம் மாறாது என்ற தேசியத் தலைவரின் வார்த்தைக்கேற்ப நாம் எமது குறீயீட்டு அடையாளங்களுக்குத் தற்காலிக மௌனத்தைக் கொடுத்து விட்டு சாணக்கிய அரசியல் மூலம் சர்வதேசத் தலைவர்களை எம்மை நோக்கித் திரும்ப வைப்போம். எமது கருத்துக்களைச் செவிமடுப்பதற்கும் எம்மோடு ஒரே மேசையில் அமர்ந்து பேசுவதற்குமான சூழலை ஏற்படுத்துவோம்.

அவ்வாறு பேச்சுக்கள் நடைபெறும் போது அவர்கள் முன் வைப்பதற்கான எமது பக்க நியாயங்கள் தாராளமாகவே உள்ளன. இந்த நியாயங்கள் சர்வதேசம் தமது கண்ணோட்டத்தையும் கடந்த காலக் கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தும். எங்கள் அரசியல் தலைமையையும் எமக்காக செயற்பட்ட நிறுவனங்களையும் தடை செய்தவர்களே தம் மீளப் பெறும் நிலையை ஏற்படுத்தும்.

தமிழர்கள் மட்டும் ஒன்று கூடி தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பிக்கும் நிலை மாறி சர்வதேச நாட்டுத் தலைவர்களும் எம் தமிழீழ தேசியக் கொடிக்கு தலை வணங்கி மரியாதை செய்யும் நிலை உருவாகும். அதற்காக உணர்வுகளுக்குக் கடிவாளம் போடுவோம்... சாணக்கிய அரசியலை முன்னெடுப்போம்... ஒட்டு மொத்த தமிழினத்தின் கனவை விரைவில் நனவாக்குவோம்...

மாண்ட வீரர் கனவு பலிக்க

மண்ணில் எம்மக்கள் நிமிர்ந்தே வாழ

மாநிலத் தலைவர் எம்மோடு இணைய

மதியுடன் எங்கள் பணியினைத் தொடர்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

<p>

இது தொடர்பான காணோளிகளைப் பார்க்கின்ற போது மகிந்தவினால் மோற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளைச் சித்தரிக்கின்ற படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை. போரின் போது கொல்லப்பட்ட சிறுவர்களின் படஙகள் அங்கவ\ினமடைந்து இரத்தம் தோய்ந்த நிலையில் இருக்கும் மக்களின் படங்கள் என்பவற்றிற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் வருபவர் ஒரு இனப்படுகொலையாளி என்பது பார்ப்பவர்களுக்குப் புரிந்திருக்கும்.

இந்தக் காணொளியைப் பார்க்கின்ற போது மூன்றாண்டுகளுக்கு முன்னர் குயின்ஸ்பார்க் பகுதியில் நடந்த சம்பவம் ஒன்று தான் நினைவிற்கு வருகிறது. இனஅழிப்பிற்கெதிராக நடைபெற்றுக் கொண்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றிற்கு என்னுடன் வேலைசெய்யும் கனேடிய நண்பர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு போயிருந்தேன்.

மேள தாளங்களுடனும் எராளமான புலிக் கொடிகளுடனும் ஆங்காங்கே இன அழிப்பைச் சித்தரிக்கும் பதாதைகளுடனும் நடந்த அந்த நிகழ்வைப் பார்த்ததும் அவர் என்னிடம் சொன்னது இது தான் "இந்த நிகழ்;வைப் பார்க்கின்ற போது இன அழிப்பிற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உணர்வு ஏற்படவில்லை. மாறாக ஏதோ ஒரு கார்னிவலில் கலந்து கொண்ட உணர்வே ஏற்படுகிறது"

The demonstration is against Mahinda´s regime, war crimes. again and again people come with LTTE flags and make the public opinion as if these demonstrations were organized by LTTE. This make the SL diplomates their job easier.

a comment from a singala doctor about the demonstration:

It is no accident or coincidence that the demonstration is swamped by LTTE flags. It is not just a few, but most of the demonstrators (as shown in this video) who are waving Tiger flags.If the demonstrators were not LTTE they should either have objected to the flag-waving or carried their own banners. They did not.

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தூயவன்!நீங்கள் குறிப்பிடுவது போல சில தவறுகள் திருத்தப்பட்டு தாயகத்தமிழ் மக்களின் அவலங்கள் நீங்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதப்படும் கருத்துக்களை தமது தேவைக்கேற்ப பயன்படுத்தத் துடிக்கும் சிலரது செயல்கள் அதிருப்தியையே தருகின்றது.

அர்ஜன் என்பவரது கருத்தினை மேற்கோளாக நான் காட்டியிருக்க வேண்டும். உங்களின் கருத்தில் உள்ள நியாயங்கள், எதிரிகள் பாவிக்காது இருப்பதைப் பார்த்துக் கொண்டால் நல்லது.

கார்னிவல் நடாத்தினால் வேறெந்த உணர்வு வரும்.

புலம் பெயர்ந்தவர்கள் கூத்தடிக்க தான் அனைத்து நிகழ்வுகளும் நடந்தேறின .இன்னமும் தொடர்கின்றது இது .

முதல் நிமிடம் நாட்டில் நடக்கும் சோகம் பாடிவிட்டு, அடுத்த நிமிடம் நட்சத்திர திருவிழா தென்னிந்திய சினிமா நடிகைகள் வருகின்றார்கள் என்று வானொலியில் இவர்கள் போடும் வேசங்கள் தாங்காது .

"சுரணை" என்ற சொல் தமிழ் அகராதியில் இருந்து நீக்கப்படவேண்டும்.

அப்ப எங்களை என்ன தான் செய்ய்ச் சொல்லுறியள், தமிழ் ஈழம் என்பது தமிழனின் உரிமை அதை வென்று எடுக்கலாம் என தான் எல்லாறும் முயசிக்கீனம், எங்கள் வழியில் ஏதாவது தவர்ற் இருந்தால் அதை சுட்டிக்காட்டலாமே, ஆனாலதை விட்டுப்போட்டு எதுக்கு எடுத்தாலும் நக்கலும், நையாண்டியாகவும் இருந்தால் அது நீங்கள் மற்றவர்களின் தவறை சுட்டிக்காட்டுவதை விட அதில் இன்பம் காண்பவராகவும், தமிழ் ஈழம் அமையக்கூடாது என்பதில் விருப்பம் கொண்டவராகவும் தான் எனக்குத் தெரிகிரீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாண்டுகளுக்கு முன்னர் புலிக் கொடி தொடர்பில் நானெழுதிய கட்டுரை ஒன்றை தேவை கருதி மீள்பதிப்புச் செய்கிறேன்...

கொடியும் கோசமும் தமிழர் உரிமைகளைப் பெற்றுத் தருமா?

தமிழ் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் முடக்கப்பட்டு ஓராண்டு கடந்துள்ளது.

இந்த ஓராண்டு காலத்தில் தமிழர் தாயகம் பல்வேறு வகைகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டு மிக வேகமாக சிங்கள மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இறுதி யுத்த காலத்தில் சுமார் நாற்பதினாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அப்பட்டமான போர்க் குற்றங்கள் சிங்களத்தினால் அரங்கேற்றப்பட்டன. போர் முடிந்த பின்னரும் சிங்கள தேசத்தின் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

சிங்கத்தின் குகைக்குள் சிக்குண்ட மானைப் போல சின்னா பின்னப்படுத்தப்பட்ட ஈழத் தமிழ் மக்களின் அவலங்களை சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் படம் போட்டுக் காட்டியிருந்தன. ஆனாலும் சிங்கள அரசின் இந்தக் கொடுமைகளைப் பகிரங்கப்படுத்தும் விதமான செயற்பாடுகளைப் புலம் பெயர் தேசத்தில் இயங்கும் தமிழர் அமைப்புகள் முனைப்புடன் முன்னெடுத்தன என்று சொல்ல முடியாது.

தமது இருப்புக்களைக் காத்துக் கொள்வதிலும் பதவிக் கதிரைகளுக்குப் பங்கம் வராமல் காய் நகர்த்தல்களை மேற்கொள்வதிலுமே இந்த அமைப்புக்கள் குறியாக இருந்தன என்பதே கசப்பான உண்மை. தாயகப் போர் யாரும் எதிர்பாராத வகையில் முடக்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல மீண்ட தமிழர் சமூகம் தாயக விடுதலைப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான மார்க்கமொன்று குறித்துச் சிந்தித்தது.

அதன் விளைவாக உருவெடுத்ததே நாடு கடந்த அரசாங்கம் என்னும் உத்தியாகும். உலகில் இதுவரை முன்னுதாரணம் காட்ட முடியாத புதிய வகையான உத்தி குறித்த செய்திகள் வெளிவந்ததிலிருந்தே இது குறித்த விமர்சனங்களை பலரும் முன்வைத்து வந்தனர்.

குற்றங்காணல் என்னும் கண்ணாடியை அணிந்து கொண்டு இதனை அவதானித்து வந்த விமர்சகர்களின் செயற்பாடுகள் ஒரு புறமிருந்தாலும் தாயக விடிவிற்கான உகந்த மார்க்கம் இதுவே என உறுதியாகக் கண்ட தமிழ் ஆர்வலர்கள் புத்திஜீவிகள் ஆகியோரின் துணையுடன் முனைப்புப் பெற்ற இந்த நாடு கடந்த அரசாங்கம் மே 2ம் திகதி நடைபெற்ற தேர்தலுடன் உருவாக்கம் பெற்றது. இந்த நிலையில் நாடு கடந்த அரசாங்கம் என்பது சிங்கள தேசத்தின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

தமிழர்களின் அடுத்த உரிமைப் போர் வடிவத்தை முளையிலேயே கிள்ளி விட வேண்டும் என்ற முனைப்புடன் சிங்கள தேசம் காய்களை நகர்த்தி வருகிறது.

விடுதலைப் புலிகளையும் அதனுடன் தொடர்புபட்ட புனர்வாழ்வுக் கழகம், உலகத் தமிழர் அமைப்பு போன்றவற்றை எவ்வாறு தடை செய்யும் உபாயங்கள் கைக்கொள்ளப்பட்டனவோ அதே உபாயங்களைப் பயன்படுத்தி இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தையும் செயலிழக்கச் செய்து சட்டவிரோதமான அமைப்பாக அறிவிக்க வைக்கும்படி புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் அதிகமுள்ள நாடுகளின் தூதரகங்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சிங்கள தேசத்தின் இந்தக் காய் நகர்த்தலை முறியடிக்க தமிழர் தரப்பு எவ்வாறு செயற்படப் போகிறது என்பதே இன்றுள்ள கேள்வி.

சிங்கள தேசத்தினால் முன்னெடுக்கப்படும் ஆபத்தைத் தெரிந்து கொண்டும் விட்டில் பூச்சிகளைப் போல அந்த ஆபத்தில் விழப் போகின்றோமா? அல்லது சிங்களத்திற்கிணையான அல்லது ஒரு படி மேலான இராஜதந்திரத்தைக் கையாண்டு இந்த ஆபத்திலிருந்து மீளப் போகின்றோமா என்பதே இன்றுள்ள கேள்வி?

ஆனாலும் அண்மைய நாட்களாக புலத்தில் இடம் பெறும் செயற்பாடுகள் ஆரோக்கியமான சமிக்ஞைகளைத் தரவில்லை என்பது கண்கூடு. நாடு கடந்த அரசுடன் தமிழீழக் கொடியையும் இணைத்து உருவாக்கப்பட்டு வரும் சர்ச்சை பலத்த சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.

தமிழீழம் நோக்கிய எமது அடுத்த கட்ட நகர்விற்கு ஆதாரமாகவும் அச்சாணியாகவும் அமையப் போவது சர்வதேச மட்டத்தில் நாம் ஏற்படுத்திக் கொள்ளப் போகும் நட்புறவும் நம்பகத் தன்மையுமே என்பது அரசியல் அரிச்சுவடியை அறிந்த அனைவருக்குமே புரிந்திருக்கும். இந்த நிலையில் தொடர்ந்து சர்வதேசத்தின் சந்தேகப் பார்வையை தக்க வைக்கும் விதமான செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக அமையப் போவதில்லை.

அப்படியானால் தமிழீழ தேசியக் கொடியை நாங்கள் மறந்து விடுவது சரியானதா என்ற உணர்வுபூர்வமான கேள்வியொன்று இந்த இடத்தில் எழுவதும் இயல்பானதே. தமிழீழ இராணுவமான விடுதலைப் புலிகள் இயக்கமோ, ஈகைக்கும் தியாகத்திற்கும் இலக்கணம் வகுத்த மாவீரர்களின் மகத்தான செயற்பாடுகளோ எதுவித சர்வதேச உதவியுமின்றி தமிழீழ தாயகத்தில் நிலவிய நிர்வாகக் கட்டமைப்புகளோ எந்தவொரு தமிழனதும் நினைவுகளிலிருந்தும் அழிக்கப்படக் கூடியதல்ல. உலகில் கடைசித் தமிழன் உயிருடன் இருக்கும் வரை இந்த நினைவுகளும் வீரம் செறிந்த வரலாறும் நினைவில் இருக்கத் தான் போகிறது.

ஆனாலும் கோசம் போட்டு கொடி பிடித்துத் தான் எம் தமிழ் மறவர்களை நினைவில் வைக்கும் அளவிற்கு தமிழர்கள் ஞாபக மறதி கொண்டவர்களோ நன்றி மறந்தவர்களோ அல்ல. போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனாலும் போராட்ட இலட்சியம் மாறாது என்ற தேசியத் தலைவரின் வார்த்தைக்கேற்ப நாம் எமது குறீயீட்டு அடையாளங்களுக்குத் தற்காலிக மௌனத்தைக் கொடுத்து விட்டு சாணக்கிய அரசியல் மூலம் சர்வதேசத் தலைவர்களை எம்மை நோக்கித் திரும்ப வைப்போம். எமது கருத்துக்களைச் செவிமடுப்பதற்கும் எம்மோடு ஒரே மேசையில் அமர்ந்து பேசுவதற்குமான சூழலை ஏற்படுத்துவோம்.

அவ்வாறு பேச்சுக்கள் நடைபெறும் போது அவர்கள் முன் வைப்பதற்கான எமது பக்க நியாயங்கள் தாராளமாகவே உள்ளன. இந்த நியாயங்கள் சர்வதேசம் தமது கண்ணோட்டத்தையும் கடந்த காலக் கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தும். எங்கள் அரசியல் தலைமையையும் எமக்காக செயற்பட்ட நிறுவனங்களையும் தடை செய்தவர்களே தம் மீளப் பெறும் நிலையை ஏற்படுத்தும்.

தமிழர்கள் மட்டும் ஒன்று கூடி தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பிக்கும் நிலை மாறி சர்வதேச நாட்டுத் தலைவர்களும் எம் தமிழீழ தேசியக் கொடிக்கு தலை வணங்கி மரியாதை செய்யும் நிலை உருவாகும். அதற்காக உணர்வுகளுக்குக் கடிவாளம் போடுவோம்... சாணக்கிய அரசியலை முன்னெடுப்போம்... ஒட்டு மொத்த தமிழினத்தின் கனவை விரைவில் நனவாக்குவோம்...

மாண்ட வீரர் கனவு பலிக்க

மண்ணில் எம்மக்கள் நிமிர்ந்தே வாழ

மாநிலத் தலைவர் எம்மோடு இணைய

மதியுடன் எங்கள் பணியினைத் தொடர்வோம்

தங்களது இந்த பதிலில் உள்ள தார்மீக நிலையை நான் புரிந்து கொள்கின்றேன்.

நானும் நாடு கடந்த அரசை ஆதரிப்பவன் அவர்களிடமிருந்து வித்தியாசமாக அணுகுமுறையை வரவேற்பவன் என்ற அடிப்படையில் உங்களது கருத்தை ஆதரிக்கின்றேன்.

ஆனால் தற்போதைய நிலையையும் இங்குள்ள அமைப்புக்கள் அடைந்துள்ள மெலிவையும் கருத்தில் எடுத்தால்..............

இவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு அல்லது கோரப்பட்டு புலிக்கொடிகள் கொண்டுவரப்படாமை புரியும்.

எனவே மக்களாலேயே அவை கொண்டு வரப்படுகின்றன. இதை தடுக்க எவருக்கும் உரிமையில்லை என்பது எனது கருத்து.

Edited by விசுகு

வணக்கம் விசுகு!

இங்கு யார் புலிக்கொடியைக் கொண்டு வருகிறார்கள் என்பதல்ல பிரச்சினை. இது போராட்டத்தை எந்தளவு தூரம் திசை திருப்புகிறது என்பதே பிரச்சினை.

முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களின் போதும் கொடி பிடிப்பதா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பாட்டாளர்களிடம் இருந்தது. அது இன்று வரை நீடிக்கிறது.

மகிந்த ஒரு போர்க்குற்றவாளி அவரை இங்கிலாந்திற்குள் அனுமதிக்காதே என்ற ஒரு போராட்டத்தில் அதுவும் ஹீத்றோ விமான நிலையம் போன்ற பகிரங்கமான இடத்திலே மகிந்தவால் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்பதே எனது கருத்து.

அத்தகைய கொடூரங்களை முன்னிலைப்படுத்தும் பதாதைகள் பலரது கவனத்தையும் ஈர்த்து இந்தப் போராட்டத்தின் நியாயத் தன்மையை பலருக்கும் தெளிவுபடுத்தியிருக்கும்

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு.. எமது தேசத்தை அங்கீகரி என்றொரு தலைப்பில் ஒரு பெரும் ஆர்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்படுகின்ற போது புலிக் கொடிகளை அனைவரும் தாங்கியிருப்பது புலிகளே தமிழர்களின் பிரதிநிதிகள், தமிழீழ தேசமே அனைவரதும் வேணவா என்பதைப் பலருக்கும் புலப்படுத்தும்.

ஆனால் மனிதப் படுகொலையாளி மகிந்த நாட்டிற்குள் வராதே என்ற போராட்டத்தில் புலிக்கொடிகள் முதன்மைப்படுத்தப்படுவதன் மூலம் போராட்டத்தின் நோக்கம் திசை திருப்பப்படுவதுடன் இது புலிகளினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் மட்டுமே என்ற சிங்கள அரசின் பிரச்சாரத்திற்கே வலுச் சேர்க்கின்றது.

வணக்கம் விசுகு!

இங்கு யார் புலிக்கொடியைக் கொண்டு வருகிறார்கள் என்பதல்ல பிரச்சினை. இது போராட்டத்தை எந்தளவு தூரம் திசை திருப்புகிறது என்பதே பிரச்சினை.

முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களின் போதும் கொடி பிடிப்பதா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பாட்டாளர்களிடம் இருந்தது. அது இன்று வரை நீடிக்கிறது.

மகிந்த ஒரு போர்க்குற்றவாளி அவரை இங்கிலாந்திற்குள் அனுமதிக்காதே என்ற ஒரு போராட்டத்தில் அதுவும் ஹீத்றோ விமான நிலையம் போன்ற பகிரங்கமான இடத்திலே மகிந்தவால் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்பதே எனது கருத்து.

அத்தகைய கொடூரங்களை முன்னிலைப்படுத்தும் பதாதைகள் பலரது கவனத்தையும் ஈர்த்து இந்தப் போராட்டத்தின் நியாயத் தன்மையை பலருக்கும் தெளிவுபடுத்தியிருக்கும்

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கு.. எமது தேசத்தை அங்கீகரி என்றொரு தலைப்பில் ஒரு பெரும் ஆர்ப்பாட்டம் ஒழுங்குசெய்யப்படுகின்ற போது புலிக் கொடிகளை அனைவரும் தாங்கியிருப்பது புலிகளே தமிழர்களின் பிரதிநிதிகள், தமிழீழ தேசமே அனைவரதும் வேணவா என்பதைப் பலருக்கும் புலப்படுத்தும்.

ஆனால் மனிதப் படுகொலையாளி மகிந்த நாட்டிற்குள் வராதே என்ற போராட்டத்தில் புலிக்கொடிகள் முதன்மைப்படுத்தப்படுவதன் மூலம் போராட்டத்தின் நோக்கம் திசை திருப்பப்படுவதுடன் இது புலிகளினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் மட்டுமே என்ற சிங்கள அரசின் பிரச்சாரத்திற்கே வலுச் சேர்க்கின்றது.

வணக்கம் உறவு மணிவாசகர் அவர்களுக்கு.

உங்கள் உங்க சிந்தனை,கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.ஆனாலும் வி அண்ணா கூறியதுபோல் ஒரு நிகழ்விற்கு மக்காளாகவே எம் தேசியக்கொடியை [ புலிக்கொடியை ]

கொண்டு வரும் போது யாராலும் தவிர்க்கமுடியாத ஒரு சூழல் அங்கே காணப்படுகிறது .இந்த விடயத்தில் எனக்கும் ஒரு சில அனுபவங்கள் உள்ளது.அப்படி நாம் தடுக்க முற்படும் வேலையில் சில புதிய பிரச்சனைகள் வாருவதும் தவிர்க்கமுடியாததொன்றாகவே இருக்கிறது.

Edited by தமிழ்சூரியன்

புரிந்து கொள்கிறேன் தமிழ் சு+ரியன்

உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இணைந்து கொள்ளும் மக்களுக்கு சரியான் விடயத்தை எடுத்துச் சொல்வதன் மூலம் போராட்டங்களை முழுமையான வெற்றியடையச் செய்யலாம்.

பிரித்தானிய ஆங்கில ஊடகங்களின் செய்திகள் சிலவற்றில் லண்டனில் வாழும் சிங்களவர்கள் சிலர் வழங்கியிருக்கும் கருத்துக்களைப் பார்க்கின்ற போது நாம் பொல்லுக் கொடுத்து அடிவாங்குகின்றோமோ என எண்ணத் தோன்றுகிறது.

மகிந்த ஒரு போர்க்குற்றவாளி அவரை இங்கிலாந்திற்குள் அனுமதிக்காதே என்ற ஒரு போராட்டத்தில் அதுவும் ஹீத்றோ விமான நிலையம் போன்ற பகிரங்கமான இடத்திலே மகிந்தவால் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்பதே எனது கருத்து.

அத்தகைய கொடூரங்களை முன்னிலைப்படுத்தும் பதாதைகள் பலரது கவனத்தையும் ஈர்த்து இந்தப் போராட்டத்தின் நியாயத் தன்மையை பலருக்கும் தெளிவுபடுத்தியிருக்கும்

இக்கருத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன்....

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடிகளுடன் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ள தமிழர்கள்

தயவு செய்து

வீர வசனங்கள் வேண்டாம்

செய்வோம்

அதன் வெற்றியை

மாவீரரின் காலடியில் வைப்போம்

... முதலில் ... விமான நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஓர் அமைப்பு ஒழுங்கமைத்து செய்யவில்லை ... கொலைகாரன் வருகிறான் என்றவுடன் மக்கள் அங்கு கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு சென்று கலந்து கொண்டார்கள் ... அதை புரியுங்கள் முதலில்!

... அடுத்ததாக விமானநிலையத்திற்கு போனவர்கள் ... அவர்களது நேரம், பணம் விரயம் செய்து ... இலகுவாக கார்னிவேல், விடுப்புப்பார்க்க என்ற வசனங்கள் .. தாமும் செய்யாது தள்ளியும் படுக்காத கும்பல்களில் இருந்துதான் வரும்/வந்தது!!! ... இப்படியான வற்றை இவர்கள் கூறுவார்களே ஒழிய வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது!

மற்றும் ... எமக்கு சுரணை/சூடு இல்லைதான் ... இருக்குமென்றால் ... போராட்டம் என்று போய் விட்டு வங்கிக்கொள்ளைகள், வீட்டுக்களவுகள், எல்லாம் செய்து விட்டு அப்பணங்களை சுருட்டிக் கொண்டு வந்து புலத்திலும் காட்டிக் கொடுப்புகளில் ஈடுபட்டவர்களை விட்டு வைத்திருக்கிறோமே????

புலிக்கொடி பற்றி அறிவுரை சொல்லுறவை பிடிக்க வேண்டிய தட்டிகளை வடிவமைச்சு இணையங்களிலை ஏற்றி போட்டு அறிவுரைகளை வளங்கினால் நல்லா இருக்கும்... (ஏற்கனவே யாழ்களம் செய்த வேலை தான்... )

மகிந்த எப்ப வருகிறான் நேரம் கூட இரகசியமாக வைக்க பட்டு இருந்தது... மகிந்த இலங்கையில் இருந்து புறப்பட்ட நேரத்தை தெரிந்து அனேகமாக சிறீலங்கல் எயார்லைன்சில் வரக்கூடும் எனும் ஊகத்தின் அடிப்படையிலை தான் T4 க்கு போனார்கள் இதிலை தட்டிகளை எடுக்க தயாரிக்க நேரம் எங்கை...???

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

... முதலில் ... விமான நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஓர் அமைப்பு ஒழுங்கமைத்து செய்யவில்லை ... கொலைகாரன் வருகிறான் என்றவுடன் மக்கள் அங்கு கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு சென்று கலந்து கொண்டார்கள் ... அதை புரியுங்கள் முதலில்!

... அடுத்ததாக விமானநிலையத்திற்கு போனவர்கள் ... அவர்களது நேரம், பணம் விரயம் செய்து ... இலகுவாக கார்னிவேல், விடுப்புப்பார்க்க என்ற வசனங்கள் .. தாமும் செய்யாது தள்ளியும் படுக்காத கும்பல்களில் இருந்துதான் வரும்/வந்தது!!! ... இப்படியான வற்றை இவர்கள் கூறுவார்களே ஒழிய வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது!

மற்றும் ... எமக்கு சுரணை/சூடு இல்லைதான் ... இருக்குமென்றால் ... போராட்டம் என்று போய் விட்டு வங்கிக்கொள்ளைகள், வீட்டுக்களவுகள், எல்லாம் செய்து விட்டு அப்பணங்களை சுருட்டிக் கொண்டு வந்து புலத்திலும் காட்டிக் கொடுப்புகளில் ஈடுபட்டவர்களை விட்டு வைத்திருக்கிறோமே????

உங்களின் கருத்தே எனதும்,

முற்றுமுழுதாக நான் ஏற்று கொள்கின்றேன்.

*

ஆரம்பத்தில் இருந்தே சிலருக்கு புலிக்கொடி பிடிப்பது பிடிப்பதில்லை ..... அது அவர்களுக்கு புலிகள் மேல் உள்ள வெறுப்பே அன்றி தமிழ் மக்கள் மேல் உள்ள அக்கறை கிடையாது புலி கொடிதான் எங்களின் அடையாளம், அடையாளம் இல்லாது போராட்டம் நடத்தினால் அந்த போராட்டத்தை எதிரி தனக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள சாத்தியமுள்ளது உதாரணத்துக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகிந்தரை வரவேற்க வந்தவராக கூட காட்ட கூடும்.

விமான நிலையதுக்குள் போராட்டம் நடாத்த பொலிசார் அனுமதிக்க மாட்டர்கள்.ஆகவே இது தன்னெளியிச்சியாக மட்டுமே நடைபெறக்கூடிய போரட்டமாகவே இருக்கும்.இதில் எதாவது அமைப்பு நடாத்தினால் அந்த அமைப்பின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

பதாதைகளைக் கொண்டு போவோர் கைது செய்யப்படலாம். கொடிகள் என்பவற்றை மறைத்துக் கொண்டு செல்லலாம்.பதாகைகள் அப்படி அல்ல. இவை பற்றி விளங்காது கருத்து எழுதுபவர்கள் ,இவ்வகையான போராட்டங்களுக்குச் சென்றால் உண்மை தெரிய வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு கொலிடே போறது கஸ்டம் என்று போராட்டத்துக்கு வராமல் பதுங்கி இருக்கிற ஆயிரக்கணக்கான ஆக்களோடு ஒப்பிடுகையில்.. இன்றும் நேற்றும் போராட்டத்தில் தன்னிச்சையாக கலந்து கொண்ட மக்களுக்கு நன்றி. அதுவும் எஸ் எம் எஸ் மூலம் பெறப்பட்ட செய்திகளுக்கு மதிப்பளித்து மக்களில் ஒரு சிறு தொகையினர்.. கலந்து கொண்டிருந்தனர்.

எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் அஞ்சாது மக்கள் புலிக்கொடி ஏந்தி இருந்தார்கள். மகிந்தவிற்கு எதிரான கோசங்களை எழுப்பினார்கள். இதனை கார்னிவேல் என்று ஒருவர் வர்ணிப்பாராக இருந்தால்.. அவர் கார்னிவேலுக்கு போகாத ஒருவர் என்பதைத் தவிர வேற வழியில் இதற்கு பதில் அளிக்க முடியாது.

மக்கள் குறுகிய நேர அறிவிற்புக்கு ஏற்ப தம்மை தயார் செய்து வரும் போது.. கொடியை தாங்குதல் மட்டுமே அதிகம் சாத்தியம்..! இதனை ஏன் பலர் புரிந்து கொள்ளாமல்.. கொடி விமர்சனம் செய்வதிலையே குறியா இருக்கிறார்கள்..!

கடாபிக்கு எதிரான போராட்டங்களில் லண்டனில்.. பதாதைகளை விட கொடி தானே முக்கியப்படுத்தப்பட்டிருந்தது..!

புலிக்கொடி பறப்பது நம்மவருக்குள்ளேயே.. திசை திருப்பலாக கருதப்படும் நிலைக்கு.. சிந்தனைகள் தூண்டப்படுவது துரதிஸ்டம்..! புலிக்கொடி.. அந்த மக்களை அடையாளப்படுத்த இருக்கும்.. மிக சாதாரண.. சாதனம் என்பதை ஏன் புரிந்து கொள்கிறார்கள் இல்லை..???! :icon_idea:

... முதலில் ... விமான நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஓர் அமைப்பு ஒழுங்கமைத்து செய்யவில்லை ... கொலைகாரன் வருகிறான் என்றவுடன் மக்கள் அங்கு கையில் கிடைத்ததை எடுத்து கொண்டு சென்று கலந்து கொண்டார்கள் ... அதை புரியுங்கள் முதலில்!

மகிந்த ராஜபக்சா லண்டனுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்ற விடயம் இவ்வளவு நாட்களாக உங்களுக்கு தெரியாதது எனக்கு ஆச்சர்யமே.... இல்லை முன்பே தெரிந்திருந்தால் அவர் வருகையின் போது இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பதையும் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

இங்கு மக்களை பழித்து எக்கருத்தும் எழுதியிருப்பதாக எனக்கு தோன்றவில்லை. மாறாக இன்னொருமுறை இதேபோன்றதொரு ஆர்ப்பாட்டம் நடக்குமென்றால் அங்கு எவ்விடயங்களை தவிர்க்க வேண்டும் எவ்விடயங்களை செய்ய வேண்டுமென்ற ஒரு ஆலோசனையாகவே இதை நாம் கருத வேண்டும். :rolleyes:

... அடுத்ததாக விமானநிலையத்திற்கு போனவர்கள் ... அவர்களது நேரம், பணம் விரயம் செய்து ... இலகுவாக கார்னிவேல், விடுப்புப்பார்க்க என்ற வசனங்கள் .. தாமும் செய்யாது தள்ளியும் படுக்காத கும்பல்களில் இருந்துதான் வரும்/வந்தது!!! ... இப்படியான வற்றை இவர்கள் கூறுவார்களே ஒழிய வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது!

எமது ஆர்ப்பாட்டம் பற்றி நாம் சரியான பார்வையை கொண்டிருப்போம். எனவே எமக்கு தவறுகள் தெரியாது. ஆனால் வேற்று நாட்டவரின் பார்வையில் எமது போராட்டம் எப்படியுள்ளது என்பதை நாம் கற்பனை செய்யமுடியாது. (ஒரு சிலரை தவிர).

எனவே கார்னிவேல் போன்று இருக்கிறதென்று ஒரு வேற்று நாட்டவர் கூறினால் நாம் போராட்டம் நடத்தும் விதம் பிழை என்று உணர்ந்து சில விடயங்களை அடுத்த முறை தவிர்க்க வேண்டும்.

மற்றும் ... எமக்கு சுரணை/சூடு இல்லைதான் ... இருக்குமென்றால் ... போராட்டம் என்று போய் விட்டு வங்கிக்கொள்ளைகள், வீட்டுக்களவுகள், எல்லாம் செய்து விட்டு அப்பணங்களை சுருட்டிக் கொண்டு வந்து புலத்திலும் காட்டிக் கொடுப்புகளில் ஈடுபட்டவர்களை விட்டு வைத்திருக்கிறோமே????

சூடு சுரணை இருந்தாலும் இது எம்மால் இலகுவில் முடியாத ஒரு காரியம்.

இப்படியானவர்களை இனங்காண்பது கடினம். இனங்கண்டாலும் புலம்பெயர் தேசத்தில் அவர்களுக்கெதிரான நடவடிக்கை எடுப்பது கடினம். ஏனென்றால் எதற்கும் ஆதாரம் தேவை. மீறி கொலை செய்தால் கொலை செய்பவர் ஜெயிலுக்குள் சென்று இருக்க வேண்டியது தான். எத்தனை பேரை கொலை செய்து எத்தனை பேர் ஜெயிலுக்கு போவது. :unsure: அப்படி போன பின் கூட காட்டிக்கொடுப்பவர்கள் உருவாகிக்கொண்டுதான் இருப்பார்கள். :wub:

எனவே சூடு சுரணை இல்லாமல் என்பதை விட எமது இயலாமையினால் அவர்களை விட்டுவைத்துள்ளோம் என்று கூறலாம். :(

இவை அனைத்தும் என் பார்வைக்கு தெரிபவை.. :) உங்கள் பார்வை வித்தியாசப்படும். :)

- தேவை கருதி சில கருத்துகள் நீக்கப்பட்டுள்ளது -

Edited by காதல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.