Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் நன்றி உள்ள நாய் தான்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dog-and-woman.jpg

"நான் உன்னைக் காதலிக்கிறேன்"

உன் வார்த்தைகள்..

என்னை

உன் செல்லப் பிராணியாக்க..

நீ அழைத்த போதெல்லாம்

அலுக்காமல் ஓடி வந்தேன்..

உன் காலடித் தடம் பார்த்தே

பாதைகள் நடந்து வந்தேன்..!

அப்பப்ப

ஏதேதோ கோலம் கொண்டு..

நீ வார்த்தைகளால்

எட்டி உதைகையில்

உள்ளூர நொந்தாலும்

வெளியூரா உன் காலடி சுற்றினேன்..

உன் பாதங்களே

சரணெனக் கிடந்தேன்..!

நான் வாங்கி வர

நீ உண்ண..

வாய் பார்த்து

எச்சில் வடித்தேன்..

அதில்

அன்பின் உச்சம்

நான் கண்டேன்..!

இறுதியில்..

உன் கார் கதவடியில்

தாவி ஏற

நான் முயல்கையில்

நீயோ..

அட நாயே

Get out என்றாய்..!

உன் காதல்

காலநிலை போல

என்றே அறியாமல்....

அது போட்ட

அன்புப் பிச்சையில்

உயிர் வாழ்ந்த

நாட்களின் நினைவுகள்

இன்றும் என் மூளையில்..

உன் பெயர் கேட்க

என் மனசோ

உனக்காய்

வாலாட்டுகிறது..!

உன் அன்பு

போலி என்று தெரிந்த பின்னும்..

உன் நிஜம் காண

என் மனம் மறுக்கிறது..!

பழகிய நாட்களின்

நினைவதை காவும்

நன்றி காட்டும்

நாய் மனசு

எனக்கென்பதால்..!

இன்று.. நீ

எந்த எஜமானன் வீட்டில்

பஞ்சணையில் வாழ்ந்தாலும்

நானே...

என்றும்

உன்

நன்றி உள்ள நாய்.!!

நீ என்னை மறந்தாலும்

உன் இந்த நாய்

உன்னை என்றும் மறக்காது..!

(யாவும் கற்பனை அல்ல = நிஜம் + கற்பனை)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில்..

உன் கார் கதவடியில்

தாவி ஏற

நான் முற்படுகையில்

நீயோ..

அட நாயே

Get out என்றாய்..!

பாவம் நாய்க்குட்டி! மனிதர்களின் நல்ல குணங்களை அது அறியவில்லைப் போலும்!

அது சரி, நெடுக்கர்! கவிதை நன்றாக உள்ளது!

ஆனால், கறுப்பு மயிருள்ள படங்கள், கிடைக்கவில்லையா?

நான் நாயைச் சொல்லவில்லை!

வர, வர நாங்களும், தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள், தங்கள் படங்களின் கதாநாயகிகளுக்கு, வெள்ளைத் தோல் தேடுவது போல, எங்கள் படங்களுக்கும்! :o

சும்மா ஒரு ஆதங்கம் தான்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் நாய்க்குட்டி! மனிதர்களின் நல்ல குணங்களை அது அறியவில்லைப் போலும்!

அது சரி, நெடுக்கர்! கவிதை நன்றாக உள்ளது!

ஆனால், கறுப்பு மயிருள்ள படங்கள், கிடைக்கவில்லையா?

நான் நாயைச் சொல்லவில்லை!

வர, வர நாங்களும், தமிழ்ப் படத்தயாரிப்பாளர்கள், தங்கள் படங்களின் கதாநாயகிகளுக்கு, வெள்ளைத் தோல் தேடுவது போல, எங்கள் படங்களுக்கும்! :o

சும்மா ஒரு ஆதங்கம் தான்! :D

உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால்.. வெள்ளை நாயை நாயா பாவிக்குது. தமிழ் பெண்கள்.. கணவனை.. காதலனை எல்லோ.. நாயா பாவிக்கினம்..! அப்ப எப்படி.. நீங்கள் எதிர்பார்க்கும் படம் கிடைக்கும். வேணும் என்றால் மணவறையில்.. பந்தல் தோரணம்.. தாலி.. கட்டி.. நாயாக தயாராகும்... படம் போடவா..??! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்சுக்கு நேர்ந்த அவலம் கவலைக்குரியதுதான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்சுக்கு நேர்ந்த அவலம் கவலைக்குரியதுதான்.. :D

:D :D :D

நான் வாங்கி வர

நீ உண்ண..

வாய் பார்த்து

எச்சில் வடித்தேன்..

அதில்

அன்பின் உச்சம்

நான் கண்டேன்..!

(யாவும் கற்பனை அல்ல = நிஜம் + கற்பனை)

எங்கேயோ இடுக்குதே நெடுக்ஸ்.

நொந்து நூடில்ஸ் ஆகிட்டியல் போல் தெரியுது! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் வழி

கலைத்து கலைத்து கடித்து காதல் வரவைப்பது???

அதில யாரோ இவரைக்கடித்திட்டினம்போல...? :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ் கவிதைக்கு.

யாருக்கும் இந்த அவலம் ஏற்படக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

dog-and-woman.jpg

இந்த நாயை கவனமாக உற்றுப்பாருங்கள்.

பக்கத்திலிருக்கும்பெண்ணப்ற்றிய கரிசனை ஏதாவது அதனிடம் தெரிகிறதா?

கண் எங்கோ அலைகிறது

வாய் எதையோ நினைத்து ஊறுகிறது

கால் எப்பவும் வேறு இடம் நோக்கி பாய தயாராக இருக்கிறது

இருக்கும் இருப்பைப்பாருங்கள்

எவர் கூப்பிட்டாலும் மெல்ல நழுவிவிடுவது போல்..

இது தான் நாங்கள்

அது தான் ஆண்கள்....... :lol::D :D

(எஸ் கேப்.................)

  • கருத்துக்கள உறவுகள்

dog-and-woman.jpg

இன்று.. நீ

எந்த எஜமானன் வீட்டில்

பஞ்சணையில் வாழ்ந்தாலும்

நானே...

என்றும்

உன்

நன்றி உள்ள நாய்.!!

நீ என்னை மறந்தாலும்

உன் இந்த நாய்

உன்னை என்றும் மறக்காது..!

(யாவும் கற்பனை அல்ல = நிஜம் + கற்பனை)

பாவம் இந்த நாயிற்கு மோப்பசக்தி காணாது :D 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு இவ்வளவு வயதாகியும் இன்னும் பெட்டையள் ஏமாத்திப் போட்டாளவையல் என்று சின்னப் பிள்ளையல் மாதிரிப் புலம்பிக் கொண்டு :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் கிறுக்கல் படித்து.. கருத்துச் சொன்ன.. பகிடி விட்ட.. கலாச்ச.. எல்லா உறவுகளுக்கும் நன்றி..! :):lol:

நெடுக்கருக்கு இவ்வளவு வயதாகியும் இன்னும் பெட்டையள் ஏமாத்திப் போட்டாளவையல் என்று சின்னப் பிள்ளையல் மாதிரிப் புலம்பிக் கொண்டு :lol: :lol: :lol:

அப்படி என்ன வயதாகிட்டக்கா. பொல்லுப் பிடிக்கிற வயசா...! அந்த வயசில கூட காதல் பண்ணும் போது.. கவலைப்படும் போது.. அழுகின்ற போது.. சின்னப் பிள்ளையாட்டம் தானே இருக்கினம்..!

அதுசரி.. அதென்ன நான் எழுதிறதெல்லாம் என்னையே மையப்படுத்தி எழுதிறதா நினைக்க வைக்குதா..??! நான் என்னை மையப்படுத்துவதிலும்.. நான் வாழும் சமூகத்தில் நடப்பதை மையப்படுத்துவதே மிக மிக அதிகம். அதில் இதுவும் ஒன்று அக்கா..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என் கிறுக்கல் படித்து.. கருத்துச் சொன்ன.. பகிடி விட்ட.. கலாச்ச.. எல்லா உறவுகளுக்கும் நன்றி..! :):lol:

-------

நெடுக்ஸ், அவர்கள் பகிடி விட்டதாகவோ... கலாய்ச்சதாகவோ எனக்குப் புலப்படவில்லை.

உங்களில்... அனுதாபப் பட்டுள்ளார்கள், என நினைக்கின்றேன். :D:lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

dog-and-woman.jpg

(யாவும் கற்பனை அல்ல = நிஜம் + கற்பனை)

அடுத்த பிறவி எண்டு ஒண்டிருந்தால்......வெள்ளைக்கார வீட்டிலை நாயாப்பிறக்கோணுமெண்டு எங்கடைசனம் அடிக்கடி சொல்லுவினம்.......படத்தை பாக்கேக்கை தெரியுது.......குடுத்துவைச்ச கறுவல் :lol: கவிதையும் அழகு. :)

...

உன் அன்பு

போலி என்று தெரிந்த பின்னும்..

உன் நிஜம் காண

என் மனம் மறுக்கிறது..!

பழகிய நாட்களின்

நினைவதை காவும்

நன்றி காட்டும்

நாய் மனசு

எனக்கென்பதால்..!

...

(யாவும் கற்பனை அல்ல = நிஜம் + கற்பனை)

[size=3]மனதில் பதிந்த வரிகள்... ஆழமான அன்பு காட்டுபவர்களுக்[/size][size=3]கு[/size] [size=3]உண்மையான சுயரூபம் தெரிந்த பின்பும், அந்த மாயையை விட்டு வெளிவருவது பலருக்கு சிரமம்... [/size]

[size=3]அவர்கள் மேல் உண்மையான அன்பு காட்டியமைக்காக கிடைக்கும் [/size][size=3]தண்டனை...[/size] :icon_idea:

[size=3]கவிதை நன்றாக உள்ளது, பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்! [/size] :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், அவர்கள் பகிடி விட்டதாகவோ... கலாய்ச்சதாகவோ எனக்குப் புலப்படவில்லை.

உங்களில்... அனுதாபப் பட்டுள்ளார்கள், என நினைக்கின்றேன். :D:lol::icon_mrgreen:

நான் அந்த அனுதாபங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் தமிழ் சிறி (அண்ணா). :)

அடுத்த பிறவி எண்டு ஒண்டிருந்தால்......வெள்ளைக்கார வீட்டிலை நாயாப்பிறக்கோணுமெண்டு எங்கடைசனம் அடிக்கடி சொல்லுவினம்.......படத்தை பாக்கேக்கை தெரியுது.......குடுத்துவைச்ச கறுவல் :lol: கவிதையும் அழகு. :)

வெள்ளைக்காரன் வீட்டில டோக் பூட் போடுவா. தமிழன் வீட்டில.. மிஞ்சின வெறும் பழஞ்சோறு தான் போடுவா. எந்த இடம் நாய்க்கு செளகரியம் சொல்லுங்கோ..??!

நன்றி.. கு.சா ண்ணா. :lol:

[size=3]மனதில் பதிந்த வரிகள்... ஆழமான அன்பு காட்டுபவர்களுக்[/size][size=3]கு[/size] [size=3]உண்மையான சுயரூபம் தெரிந்த பின்பும், அந்த மாயையை விட்டு வெளிவருவது பலருக்கு சிரமம்... [/size]

[size=3]அவர்கள் மேல் உண்மையான அன்பு காட்டியமைக்காக கிடைக்கும் [/size][size=3]தண்டனை...[/size] :icon_idea:

[size=3]கவிதை நன்றாக உள்ளது, பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்! [/size] :)

எப்போதும் போல மனதை ஆசுவாசப்படுத்தும்.. தங்கள் கருத்து. நன்றி குட்டியர்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாச்சி கேக்கிறன் என்று கோவிக்காதீங்கோ ஐந்து அறிவு நாய் குட்டி உடுப்பு போடாமல் இருக்கு அது விசயம் வேறை...ஆறு அறிவு ஒன்று பக்கத்தில் இருக்கே அதுக்கு என்ன நடந்தது..குந்தி இருக்கிற இடம் வேறை பச்சைப் பசேல் என்று இருக்கு...சண்பாத் எடுக்க கூடிய இடம் போலத் தெரிய இல்லை..கொடுமை..கொடுமை.:(

  • கருத்துக்கள உறவுகள்

dog-and-woman.jpg

கவிதை அழகு அண்ணாச்சி ஆனால் நாய் லெவலுக்கு எல்லாம் இறங்கி லவ் பண்ணக் கூடாதப்பா. திரிசா இல்லாட்டிக்கு திவ்வியா எண்டு போய்க்கிட்டிருக்க வேண்டியது தான். :icon_idea:

Spoiler

கனடாவில சன்பாத் எடுத்துக் கொண்டிருந்த புலநாயை ஆரோ குறுக்கால போவார் பின்னால வந்து படமெடுத்துப் போட்டாங்கள். முன்னால போய் படமெடுக்கத் தெரியாத கமராக் காரனை இங்க கொஞ்சப் பேர் தேடித் திரிவதாக தகவல் :icon_mrgreen: .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாச்சி கேக்கிறன் என்று கோவிக்காதீங்கோ ஐந்து அறிவு நாய் குட்டி உடுப்பு போடாமல் இருக்கு அது விசயம் வேறை...ஆறு அறிவு ஒன்று பக்கத்தில் இருக்கே அதுக்கு என்ன நடந்தது..குந்தி இருக்கிற இடம் வேறை பச்சைப் பசேல் என்று இருக்கு...சண்பாத் எடுக்க கூடிய இடம் போலத் தெரிய இல்லை..கொடுமை..கொடுமை. :(

நாங்க எல்லாம் என்ன உடுப்புப் போட்டிக்கிட்டா பிறந்தம் தங்கச்சி. கவர்ச்சி காட்டாத உடல் அழகு தானே காட்ட முடியும்..! எல்லாத்தையும் கவர்ச்சிக் கண்ணோட்டத்திலையே பார்க்கக் கூடாது. அழகுக் கண்ணோட்டத்தோடும் பார்க்கனும். இதை நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. ஏனென்றால் என்னை விட இயற்கை அழகை அதிகம் ரசிப்பவர் நீங்க. உங்களுக்கு தெரியாதா என்ன..! :):icon_idea:

கவிதை அழகு அண்ணாச்சி ஆனால் நாய் லெவலுக்கு எல்லாம் இறங்கி லவ் பண்ணக் கூடாதப்பா. திரிசா இல்லாட்டிக்கு திவ்வியா எண்டு போய்க்கிட்டிருக்க வேண்டியது தான். :icon_idea:

Spoiler

கனடாவில சன்பாத் எடுத்துக் கொண்டிருந்த புலநாயை ஆரோ குறுக்கால போவார் பின்னால வந்து படமெடுத்துப் போட்டாங்கள். முன்னால போய் படமெடுக்கத் தெரியாத கமராக் காரனை இங்க கொஞ்சப் பேர் தேடித் திரிவதாக தகவல் :icon_mrgreen: .

நன்றி தும்பளை..!

திரிசா இல்லாட்டி திவ்யா என்று சாதாரணமா மனசு முடிவெடுக்காதே. திரிசாவோட நேசம் என்றால் திரிசாவை தானே சுற்றித் திரியும். திரிசா.. அப்புறம்.. திரிபோசாவா கைமாறினால் தான்.. திவ்யா.. அப்புறம் திவ்யா திகட்டிட்டா.. ஒரு காவியா.. அப்புறம் காவியா காவியம் ஆகிட்டா.. ஒரு நமீதா.. நமீதா நடையக் கட்டிட்டா.. ஒரு ஹன்சிகா... இப்படியே போய்க்கிட்டு இருந்தா மனிசன் நிலை என்னாகிறது..???! ஒரு முடிவு வேணா..??! :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]நெடுக்ஸ் உங்கள் ஆதங்கம் புரிகிறது [/size][size=1]

[size=4]இந்த அவலம் யாருக்குமே வர கூடாது [/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரிகளைப் படித்து கருத்துச் சொன்ன பகிக்கு நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

என் கிறுக்கல் படித்து.. கருத்துச் சொன்ன.. பகிடி விட்ட.. கலாச்ச.. எல்லா உறவுகளுக்கும் நன்றி..! :):lol:

அப்படி என்ன வயதாகிட்டக்கா. பொல்லுப் பிடிக்கிற வயசா...! அந்த வயசில கூட காதல் பண்ணும் போது.. கவலைப்படும் போது.. அழுகின்ற போது.. சின்னப் பிள்ளையாட்டம் தானே இருக்கினம்..!

அதுசரி.. அதென்ன நான் எழுதிறதெல்லாம் என்னையே மையப்படுத்தி எழுதிறதா நினைக்க வைக்குதா..??! நான் என்னை மையப்படுத்துவதிலும்.. நான் வாழும் சமூகத்தில் நடப்பதை மையப்படுத்துவதே மிக மிக அதிகம். அதில் இதுவும் ஒன்று அக்கா..! :lol:

நான் சொல்ல வந்தது இத்தனை வயசுக்கு அப்புறமும் பெட்டையள் ஏமாத்திப் போட்டாள்கள் என யாழில் வந்து புலம்புகிறீர்களே ஒருக்கால் பட்டவுடன் அந்த அனுபவத்தை வைத்து அடுத்த தடவை பொருத்தமான பெட்டையைப் பார்த்து காதலித்தால் இப்படி ஒவ்வொரு தடவை எழுதும் போது அவள் ஏமாத்திப் போட்டால் என புலம்ப மாட்டீங்கள் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல வந்தது இத்தனை வயசுக்கு அப்புறமும் பெட்டையள் ஏமாத்திப் போட்டாள்கள் என யாழில் வந்து புலம்புகிறீர்களே ஒருக்கால் பட்டவுடன் அந்த அனுபவத்தை வைத்து அடுத்த தடவை பொருத்தமான பெட்டையைப் பார்த்து காதலித்தால் இப்படி ஒவ்வொரு தடவை எழுதும் போது அவள் ஏமாத்திப் போட்டால் என புலம்ப மாட்டீங்கள் :lol:

ஆமால்ல.. இப்ப எதுக்கு நான் மட்டும் தனிய புலம்பிறன்..! அவாளுங்க வந்தாங்க.. வந்த மாதிரியே போனாங்க.. நாளுக்கு நாள் விதம் விதமான ஆக்களோட.. தங்க லைவ என்ஜோய் பண்ணுறாங்க..! ஊரே அதுக்கு கவலைப்படாதப்போ... நான் மட்டும்... எதுக்கு இப்படி.. புலம்பிக்கிட்டு திரியுறன்..?! :lol::D

(மன்மதன் படக் காட்சியில் வருவது போல வாசிங்க...!) :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.