Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிக் சொல்கெயம் சொன்ன கருத்துக்கள் மீதான தமிழ்ப் பார்வை

Featured Replies

[size=4]பிரபாகரன் மானத்தை இழந்து உயிரைக்காக்கும் ஒருவரல்ல..[/size]

[size=4]நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்கெய்ம் பீ.பீ.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் முடிவுகள் மீது கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.[/size]

[size=4]போரில் தோல்வி என்று அறிந்த பின்னரும் அதைச் சந்திப்பதே சரியான வழி என்று முடிவு செய்த காரணத்தால் எண்ணற்ற உயிரிழப்புகளுக்கு அவர் காரணமாகிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.[/size]

[size=4]அத்துடன் மட்டும் நிற்கவில்லை பிரபாகரனுக்கும், பொட்டு அம்மானுக்கும் பொது மன்னிப்பு இல்லை, மற்றைய அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும், அனைவருடைய புகைப்படங்களும் எடுக்கப்பட்டு சிறீலங்கா அரசிடம் ஒப்படைக்கப்படுவர்.[/size]

[size=4]இந்தத் தீர்வை ஏற்காது விட்டது தவறு என்றும், ஏற்றிருந்தால் உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.[/size]

[size=4]அவருடைய கருத்துக்களை தலை வணங்கி ஏற்க முடியாது அதை சீர்தூக்க வேண்டியது நமது கடமை..[/size]

[size=4]இப்படியொரு முடிவுக்கு பிரபாகரன் இணங்கியிருந்தால் என்னவாகியிருக்கும்..?[/size]

[size=4]இந்தப் போராட்டத்தை அவமதிக்க எடுக்கப்பட்ட முயற்சி வெற்றிகரமாக முடிந்திருக்கும்.[/size]

[size=4]முப்பதாயிரம் ஆண்டுகளாக தமிழினம் முன்னெடுத்த தன்மான வரலாறும் தவிடு பொடியாகியிருக்கும்.[/size]

[size=4]எரிக் சொல்கெய்மிற்கு நீடித்த தமிழ் மானமும், மாபெரும் வரலாறும், அதனோடு பின்னி நிற்கும் மெல்லிய உணர்வுகளும் தெரிந்திருந்தால் இத்தகைய வாக்குமூலத்தை வழங்கியிருக்கமாட்டார்.[/size]

[size=4]எதிரி வீசிய ஈட்டி தன்னுடைய மார்பை துளைக்கும்போது கண்களை மூடினால் தனது வீரத்திற்கு பழுதென்று கண்களை திறந்தபடியே இறந்து கிடந்த சங்கத்தமிழ் வீரனின் மாண்பை பிரபாகரன் குலைக்கமாட்டார்.[/size]

[size=4]எதிரி கொடுத்த ஒரு வாய் நீரை குடித்தால் தனது மானத்திற்கு இழுக்கென்று காறி உமிழ்ந்துவிட்டு மடிந்த சேரன் செங்குட்டுவன் கதையை தீலீபன் கதையால் செம்மைப்படுத்தியவர் பிரபாகரன்.[/size]

[size=4]சேரன் செங்குட்டுவன் போல ஒரு வாய் நீரை ஏந்தினால் அது தமிழர் தன்மானத்திற்கே அவமானமென்று ஒரு சொட்டு நீரும் அருந்தாமல் மடிந்த திலீபனை வடிவமைத்த மாபெரும் மானத்தமிழர் அவர்.[/size]

[size=4]மரணத்தை விளையாட்டுப் பந்துபோல மறித்து மடிந்த மான மாவீரர்களை உருவாக்கிய தமிழ் வீரத்தின் வடிவமே பிரபாகரன்.[/size]

[size=4]இவ்வளவு பெரும் தியாகங்களை செய்த ஒரு போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரபாகரன் போட்டோ எடுத்துவிட்டு சிங்களவரிடம் சரணடைய முன்வருவாரா.. ?[/size]

[size=4]வன்னியில் கொன்றதைவிட பெரும் எண்ணிக்கை தமிழரை சிங்கள இனவாத அரசு அதற்கு முன்னரே கொன்றுவிட்டது, தலைக்கு மேலே வெள்ளம் போன பின் சாணும் முழமும் போட்டு என்ன பயன்..?[/size]

[size=4]சிறைச்சாலையில் இருந்த குட்டிமணியின் கண்களை தோண்டி காலால் மிதித்த சிங்கள இனவாதத்தை நம்பி சரணடையலாமா..?[/size]

[size=4]அப்படி சரணடைந்தவர்களுடைய ஒழுங்கான பெயர் பட்டியலே இன்றுவரை இல்லையே..[/size]

[size=4]தானே பிரபாகரனின் தந்தை என்று தானாக முன்வந்து சரணடைந்த பிரபாகரனின் தந்தை சடலமாக வல்வை வந்தது சொல்கெய்மிற்கு தெரியாதா..?[/size]

[size=4]இப்படி ஆயிரம் கேள்விகள் உள்ளன..[/size]

[size=4]இருந்தாலும் எரிக் சொல்கெய்ம் பிரபாகரனுக்கு பெரும் மரியாதையையே தேடிக் கொடுத்திருக்கிறார்…[/size]

[size=5]அவருடைய பேட்டி பிரபாகரன் விலைபோகாத விடுதலை வீரன் என்பதை உலகின் முன் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.[/size]

[size=4]முதல் முதலாக விலைபோகாத ஒரு மனிதனை சந்தித்த வெறுப்பு எரிக் சோல்கெய்மின் பேச்சில் தெறிப்பது தெரிகிறது.[/size]

[size=4]இந்தப் போரில் முக்கிய பாத்திரம் வகித்த அனைவரையும் உலகம் மறந்துவிடும் ஆனால் அடுத்து வரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வரலாற்றில் மறக்கமுடியாத சங்கத்தமிழ் வீரனாக வலம்வரப் போவது ஒரே ஒருவன் மட்டுமே அவன் வேறு யாருமல்ல பிரபாகரனே.[/size]

[size=4]ஏனென்றால் வன்னியில் நடந்த போரில் வஞ்சகத்தால் தோற்றாலும் உலகத்தை வென்ற புகழை ஈட்டிவிட்டான் அந்த வீரன் என்பதை எரிக் சொல்கெய்ம் பேட்டி சொல்லாமல் சொல்கிறது..[/size]

[size=4]நோர்வேயின் பார்வையில் பிரபாகரன் செய்தது தவறாக இருக்கலாம் ஆனால் முப்பதாயிரம் வருட தமிழ் வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் மானத்தை உயிருக்காக விற்காத வீரனாக புகழ் பெறுகிறார் பிரபாகரன்.[/size]

[size=4]தமிழ் மானத்தின் முன் மற்ற அனைத்துமே தூசு என்பதுதான் தமிழ் வரலாறு.[/size]

[size=4]ஆனால் ஒவ்வொரு இழப்பிற்காகவும் தமிழ் உள்ளங்கள் வருந்துகின்றன…[/size]

[size=4]அதேவேளை பிரபாகரன் இழப்புக்களை ஏற்படுத்தப் போராடவில்லை இழப்புக்களை தடுக்கத்தான் இறுதிவரை போராடினார் என்ற உண்மையை எரிக் சொல்கெய்ம் சொல்லும் நாள் கண்டிப்பாக வரும்.[/size]

[size=4]நீதி எல்லா நாளும் தோற்பதில்லை ஒரு நாள் வெல்லும்..![/size]

[size=4]அதுவரை மிஸ்டர் எரிக் சொல்கெயம் உங்கள் சமாதான முயற்சிக்கு எங்கள் நன்றிகள்..[/size]

[size=4]atch1.jpg[/size]

[size=4]கி.செ.துரை 11.10.2012[/size]

[size=4]http://www.alaikal.com/news/?p=114883[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிடம் அணு குண்டும் ஏவுகணைகளும் போர்க்கப்பல்களும் இருந்தால்.. நாங்களும் எரிக் சொல்கைமுக்கு எங்கட சர்வதேச அறிவைக் காட்டி இருக்கலாம். வட கொரியாக்காரன் காட்டிறது போல..! என்ன எங்களட்ட அதுகள் இருக்கல்ல. அது எதிர்காலத்தில இருக்காது என்றும் சொல்ல முடியாது.. வரலாறு மீளும்.. மிஸ்டர் எரிக் சொல்கைம்..!

ஹிட்டலரிடம் அடிவாங்கி ஐரோப்பா தோற்ற போது.. நாங்கள் அறிக்கை விட்டிருந்தால் அது எப்படி எரிக் சொல்கைமுக்கு இருந்திருக்குமோ.. அதுதான் இப்ப எங்களுக்கு..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிடம் அணு குண்டும் ஏவுகணைகளும் போர்க்கப்பல்களும் இருந்தால்.. நாங்களும் எரிக் சொல்கைமுக்கு எங்கட சர்வதேச அறிவைக் காட்டி இருக்கலாம். வட கொரியாக்காரன் காட்டிறது போல..! என்ன எங்களட்ட அதுகள் இருக்கல்ல. அது எதிர்காலத்தில இருக்காது என்றும் சொல்ல முடியாது.. வரலாறு மீளும்.. மிஸ்டர் எரிக் சொல்கைம்..!

ஹிட்டலரிடம் அடிவாங்கி ஐரோப்பா தோற்ற போது.. நாங்கள் அறிக்கை விட்டிருந்தால் அது எப்படி எரிக் சொல்கைமுக்கு இருந்திருக்குமோ.. அதுதான் இப்ப எங்களுக்கு..! :icon_idea:

சூப்பர் ...... சூப்பர், இதைவிட இதற்க்கு கருத்து எழுதமுடியாது.

நன்றி சகோ

இந்த பேச்சு எல்லாம் சர்வதேச விசாரணையையும், போர்க்குற்றங்களையும் மறைக்க தகுந்த நேரத்தில் வெளியிடப்படுகின்றன.

தனி ஒருவரில் மற்றும் ஒரு தலைமையில் முழுக் குற்றங்களையும் சுமத்தி, அதனை பல வடிவங்களில் வெளியிடுவதன் மூலம் எல்லாத் தவறுகளுக்கும் ஒருவரே பொறுப்பு என்று நிறுவி அதன் மூலம் பிரச்சனையின் உண்மையான காரணங்களையும், காரணகர்த்தாக்களையும் விடுவிப்பதற்குத் தான் இவ்வளவும்.

பிரபாகரன் அவர்கள் தவறு செய்தாரா இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சனை. அவரை விட பல்லாயிரம் மடங்கு தவறுகளும் படுகொலைகளும் செய்தவர்களுக்கான எதிர்வினைதான் பிரபாகரனும், அவருக்கு முன்னமே தோற்றுவிக்கப்பட்ட ஈழ விடுதலைப் போரட்டமும். விடுதலை அமைப்புகள் செய்யும் ஒவ்வொரு தவறுகளுக்கும் பின்னால், ஆயிரக்கணக்கான தவறுகளும் அழிப்புகளும் அதிகார மையங்களிடம் இருக்கின்றன.

நோர்வே மேற்குலகின் முகமூடி. நோர்வேயால் முன்னெடுக்கப்பட்ட பல சமாதான முயற்சிகள் எல்லாம் விடுதலை அமைப்புகளுக்கும் போராடும் நலிவுற்ற அமைப்புகளுக்கும் எதிராகத்தான் போயின.

இவர்கள் இன்று அல்ல, நாளையும் இதனைத் தான் சொல்லப் போகின்றனர். நாளை மறுதினமும் இதனைத் தான் சொல்லப் போகின்றனர். இதுவும் ஒரு வகை சதிதான். இவர்களின் பேச்சுகளில் எம் கவனத்தை அதிகம் திருப்பி, செய்யவேண்டிய காத்திரமான விடயங்களில் கவனம் செலுத்த விடாது தடுப்பதற்குத்தான் இப்படியான பேச்சுக்களை, பேட்டிகளை அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

  • தொடங்கியவர்

[size=4]நாங்கள் 'எல்லாம் முடிந்துவிட்டது' இல்லை 'இணக்க அரசியல் தான் வாழ்வு' என்றில்லாமல் தொடர்ந்தும் பயணிப்பதற்கு தொடரும் சிங்கள அடக்குமுறைகளும் இவ்வாறானவர்களின் கருத்துக்களும்/பேட்டிகளும் உதவுகின்றன.[/size]

[size=4]போர்குற்ற விசாரணை என வரும்பொழுது எரிக் உட்பட யார் பொய் சொன்னாலும் உண்மைகள் வெளியே வந்தே தீரும்.[/size]

எரிக் சொல்கேயும் சொல்கின்றார் என்பததோ அல்லது மேற்குலகின் சதி என்பதோ அல்ல முக்கியம் ,

அதனால் நாம் என்னவெல்லாம் இழந்தோம் என்பதுதான் முக்கியம் .

காலம் காலமாக எம்மவர் பலர் சொல்லி வந்த விடயங்கள் தான் இவை .புலம் பெயர்ந்த நாடுகளில் கூட வெறும் ரவுடிகளை பொறுப்பில் போட்டிருக்கும் போதே சர்வதேச விடயங்களில் புலிகளுக்கு இருந்த அக்கறை பற்றி விளங்கியிருக்க வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீன பேச்சு வார்த்தையிலும் இதே நோர்வே தான் மூக்கை நுழைத்து நாறடித்தவர்கள். சொல்கைம் உண்மையான நடுநிலையாளர் என்றால் மகிந்தவின் போர்க்குற்றங்களை பற்றி ஒரு வரி தானும் சொல்லாமல் பிரபாகரனில் பழியை போட்டது போல் தான் நோர்வேயின் செயற்பாடு சிறிலங்காவில் இருந்தது என்பதை யாவரும் அறிவர்.இவரின் தருணத்துக்கு ஏற்ற இந்த அறிக்கை எதையோ மறைத்து யாருக்கோ மிண்டு கொடுப்பது போலுள்ளது.

சிறிலங்காவையும் வி.புலிகளையும் பேச்சுவார்த்தை மேடைக்கு என்று அழைத்து விட்டு பின்னர் விடுதலை புலிகளை ஓரம் காட்டியதை எப்படியான மத்தியஸ்தர்கள் நீங்கள் என்பதையும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்.

சத்தம் சவாடி இல்லாமல் மூன்று பேர் நன்றாக பட்டிருக்கிறார்கள்.

1. லியாம் பொக்ஸ் - வெளிப்படையாக தமது அரசால் ஊழல்களில் ஈடுபட்டவர் என்று கருதப்படுபவர்.

2.ரொபேட் பிளேக் - வெளிநாடுகளுக்கு விளக்கம் கொடுக்கப்படாமல், வெளிநாட்டு உறவுகருமங்களில் ஈடுபட்டவர் பதவி இறக்கப்பட்டார். அவரின் அரசு அவரை ஊழல்களில் அல்லது கொள்கைத் தோல்விகளில் பதவி இறக்கி இருந்தால் அது இலங்கையில் நடந்த வற்றுக்காவே இருக்க முடியும்.

3. கதா நாயகன் சொலெயும் - உள்நாட்டில், வெளிநாட்டில் விளக்கம் கொடுக்கப்படாமல் உள்நாட்டில் பதவி இறக்கப்பட்டார். இவர் இலங்கையில் செய்து வந்தவையும் நிறுத்தப்பட்டுவிட்டன. அவரை ஊழல்களில் அல்லது கொள்கைத் தோல்விகளில் பதவி இறக்கி இருந்தால் அது இலங்கையில் நடந்த வற்றுக்காவே இருக்க முடியும்.

எங்களிடம் அணு குண்டும் ஏவுகணைகளும் போர்க்கப்பல்களும் இருந்தால்.. நாங்களும் எரிக் சொல்கைமுக்கு எங்கட சர்வதேச அறிவைக் காட்டி இருக்கலாம். வட கொரியாக்காரன் காட்டிறது போல..! என்ன எங்களட்ட அதுகள் இருக்கல்ல. அது எதிர்காலத்தில இருக்காது என்றும் சொல்ல முடியாது.. [size=6]வரலாறு மீளும்.. மிஸ்டர் எரிக் சொல்கைம்..![/size]

ஹிட்டலரிடம் அடிவாங்கி ஐரோப்பா தோற்ற போது.. நாங்கள் அறிக்கை விட்டிருந்தால் அது எப்படி எரிக் சொல்கைமுக்கு இருந்திருக்குமோ.. அதுதான் இப்ப எங்களுக்கு..! :icon_idea:

இனைப்பிற்கு நன்றி அகூதா

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

[size="5"]மிஸ்டர் எரிக் சொல்கைம்..![/size]

தங்களை நல்லவர் என்று எம்மில் பலரும் நம்புகின்றனர்.

நீங்களாகவே அதை உடைக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளீர்கள். உண்மை . நீண்ட நாட்களுக்கு அதை எவரும் மூடி மறைத்து வைக்கமுடியாது. தர்மமே வெல்லும். நாம் தர்ம யுத்தமே செய்தோம். எப்படியும் வெல்லணும் என்பது எமது கொள்கை கிடையாது. அன்பொழுக அழைத்து அரவணைத்து முடிந்தவரை முதுகில் குத்தி இறுதிவரை உண்மை பேசாது கடைசியில் அணுவைப்பாவித்தீர்கள்.. அதனால் நீங்கள் வென்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்பிற்கு நன்றி அகூதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் முடிந்தபின் குத்திகுளறுவதில் பிரயோசனமில்லை....இன்று எல்லோரும் இது எனக்கு முன்னமே தெரியும்....என முந்திக்கொள்கிறார்களே தவிர......அடுத்த அம்புக்குறியை காட்ட திராணியற்றவர்களாகிவிட்டார்கள்.

எங்களிடம் அணு குண்டும் ஏவுகணைகளும் போர்க்கப்பல்களும் இருந்தால்.. நாங்களும் எரிக் சொல்கைமுக்கு எங்கட சர்வதேச அறிவைக் காட்டி இருக்கலாம். வட கொரியாக்காரன் காட்டிறது போல..! என்ன எங்களட்ட அதுகள் இருக்கல்ல. அது எதிர்காலத்தில இருக்காது என்றும் சொல்ல முடியாது.. வரலாறு மீளும்.. மிஸ்டர் எரிக் சொல்கைம்..!

ஹிட்டலரிடம் அடிவாங்கி ஐரோப்பா தோற்ற போது.. நாங்கள் அறிக்கை விட்டிருந்தால் அது எப்படி எரிக் சொல்கைமுக்கு இருந்திருக்குமோ.. அதுதான் இப்ப எங்களுக்கு..! :icon_idea:

உண்மைதான் நெடுக்ஸ் பலமிழன்தால் எல்லோரும் சொறிந்து பார்ப்பார்கள்.

தலைவருக்கு கேவலம் கெட்ட அரசியல் செய்ய தெரியாது. எதுவும் நேருக்கு நேரை அது அவரின் பாலிசி.

இல்லை எண்டால் இந்திய இராணுவத் தளபதிக்கு முகத்தில் அடித்தால் போல் நேரில் கேட்பாரா எங்களுக்கு குடும்பம் உயிரை விட கொள்கைதான் முக்கியம் எண்டு. பாவம் தமிழ் இனத்திற்கு கிடைத்த ஒப்பற்ற எந்த கறையும் இல்லாத நேர்மையான எந்தக் கொம்பனுக்கும் விலை போகாதா ஒரு தலைவன் எங்கள் தலைவன்

பல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் என்பது எரிக்சொல்ஹீம் விடயத்தில் சரியாதான் உள்ளது.

இந்த நரியன் தான் உண்மையில் நரி என்பதை தன் வாயால் உளறினது உண்மையில் நல்ல விடயம்தான் .

இருந்தாலும் மகிந்த அன்கோ அவர்களின் எலும்பு பொறுக்கி என்பதையும் தானே சொல்லிவிட்டார் .

இதனை விட இனி இவரைப்பற்றி சொல்ல ஒன்றும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்காலைச் சர்வதேசத்தின் ஆதரவோடு சுறறி வளைத்து குண்டு மாரி பொழிந்து கொண்டிருந்த போது தலைவர் நினைத்திருந்தால் கொழும்பிலோ அல்லது ஒரு சிங்களக் கிராமத்திலோ ஒரு குண்டை தலைவர் வெடிக்க வைத்திருந்து சிங்களப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தால் மகிந்த போரிக் தீவிரத்தை குறைத்திருப்பார்.ஆனால் தலைவர் கோழைத்தனமான போரைச் செய்ய வில்லை.தலைவரைப் போர்க்குற்றவாளியாக்கும் சொல்கைம் மகிந்தரைப்பற்றி வாயே திறக்கவில்லை.போர்க்குற்ற விசாரணை என்று வரும்போது கூண்டில் ஏற்றப்பட்டு விசாரிக்கப்பட வேண்டியவர்களில் சொல்கைமும் ஒருவர்.

வரலாறு மீளும் கடாரம் வரை கட்டியாண்ட தமிழனின் வீரம் மீண்டும் நவீன படைபலத்தோடு வராது என்பது நிச்சயமல்ல.

சொல்கைம் உண்மையாகவே ஒரு நடுநிலையாளனோ, சமாதானப் விரும்பியோ மனிதநேயம் மிக்கவரோ இல்லை. உண்மையாகவே அவர் ஒரு சதிகாரன். தமிழரின் போராட்டத்தை கருவறுக்க வெளிக்கிட்ட ஒரு வெள்ளை நரி. தமிழினப் படுகொலைக்கு காரணமாக இருந்துவிட்டு, போர்க்குற்றங்களை மறைப்பதற்கும், சர்வதேச விசாரனை நடைபெறாமல் தடுப்பதற்கும், தமிழ் மக்கிளிடையே உள்ள புல்லுரிவிகளை ஊக்குவித்து தமிழ் தேசிய உணர்வை மழுங்கடுப்பதற்குமான செயற்பாடுதான் சொல்கைமின் அறிக்கைகள். இவர் ஒரு உண்மையான தமாதானப் பிரியராக இருந்திருந்தால் தமிழினப் படுகொலையைத் தடுத்திருக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அதைக் கண்டித்திருக்கலாம் தமிழினப் படுகொலை சரித்திரத்தில் சொல்கைம் பங்காளர் என்பதை அவரால் உணராமல் இருக்க முடியாது. உண்மை அவரையும் கொல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.