Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கார்த்திகை ஒளிர்கிறது….!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

u1_20100613_210.jpg


கார்த்திகை ஒளிர்கிறது
மலரும் மலர்கிறது
கண்ணீர் அரும்பிட
கண்களில் படர்ந்தவர்
நினைவுகள் மனதில் பெருகிட…

மரணம் மண்டியிட
மண்ணில் வீழ்ந்தோம்
அன்னை மடிமீது
அந்நிய ஆதிக்கம்…
உயிர் மூச்சு நெருப்பாக்கி
உற்ற கடமை செய்தோம்..!

உறவுகள் எமக்கு
உலகெங்கும்..
உணர்வுகள் எமக்குள்ளும்
உயிர் வாழ…
உங்கள் உரிமைக்காய்
உயிர் கொடுத்தோம்…!

உறங்கும் நாள் குறித்தோம்
எங்கள் வாழ்வுக்காய் அல்ல…
உங்கள் பிஞ்சுகள்
உரிமை கொண்டாட
தமிழன் நான்
"தனித்துவமானவன்"
எண்ணங்கள் காத்திடுங்கள்…!

இன்னும்…
உற்ற அன்னை
உள்ளுக்குள் அழுகிறாள்...
உருவில்லை என்றாலும்
எங்கள் மூச்சுகள் உணருது..!
உங்கள் மூச்சொடு
இறுதி இலட்சியம் வென்றிடுங்கள்
வீணடிக்காது விரைந்து
வீர வரலாறு
இறுதி அத்தியாயம் எழுதிடுங்கள்…!

மாவீரனை வணங்குதல்
“இலட்சியம் காத்தல்”
அர்த்தப்படுத்தி
உயிர் விதைகள்
ஊன்றிய இடத்தில்
சத்தியம் செய்யுங்கள்..!
உரிமைகள் வென்று
விடுதலை வாங்கி
உதாரணமாகி நில்லுங்கள்..!

எமக்காய்..
கார்த்திகை ஒளிர்கிறது
மலரும் மலர்கிறது…
கண்களில் படர்ந்தவர்
நினைவுகள் சுமக்கின்றார்
வீழ்ந்தும் வாழ்கிறோம்
நினைவுகளாய்
விதை நிலங்களில்..!
என்றும் வீரராய் வாழ்வோம்
சுதந்திர தேசத்தில்…!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை ஒளிர்கிறது

மலரும் மலர்கிறது…

கண்களில் படர்ந்தவர்

நினைவுகள் சுமக்கின்றார்

வீழ்ந்தும் வாழ்கிறோம்

நினைவுகளாய்

உயிர்ப் பூக்களை, விறகாக்கி,

ஊழித் தீயாகட்டும்!

உலகத்து மனச்சாட்சியில்,

ஊசியாய்த் தைக்கும் வரை,

ஓங்கி எரியட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

loN61v387580-02.jpg

எமக்காய்..

கார்த்திகை ஒளிர்கிறது

மலரும் மலர்கிறது…

கண்களில் படர்ந்தவர்

நினைவுகள் சுமக்கின்றார்

வீழ்ந்தும் வாழ்கிறோம்

நினைவுகளாய்

விதை நிலங்களில்..!

என்றும் வீரராய் வாழ்வோம்

சுதந்திர தேசத்தில்…!

நன்றி ஐயா

நன்றி நெடுக்ஸ் இணைப்பிற்கு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நெடுக்ஸ்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் சரியான நேரத்தில் தரமான கவிதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நெடுக்ஸ் அண்ணா கவிதைக்கு

நன்றி கவிதைக்கு.வெறும் வார்த்தைகளில் வருபவை மனதுக்குள் இருந்தும் வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நெடுக்ஸ்..

நன்றிகள் கவிதைக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்குப் பாராட்டுகள்!

எமக்காய்..

கார்த்திகை ஒளிர்கிறது

மலரும் மலர்கிறது…

கண்களில் படர்ந்தவர்

நினைவுகள் சுமக்கின்றார்

வீழ்ந்தும் வாழ்கிறோம்

நினைவுகளாய்

விதை நிலங்களில்..!

என்றும் வீரராய் வாழ்வோம்

சுதந்திர தேசத்தில்…!

சுதந்திர தேசத்தில்

நெய்யாய்ப் போனவரே

ஒருநாள் உங்கள்

கருவறைகள் உருவாகும்

அப்போது நெய் விளக்கேற்றி

நெக்குருகி அழுவதற்காய்

நினைவிடத்தே நாம் வருவோம்!

எம்தேசத்து வீரர்களே

பொய்யாகிப் போகாது

உங்கள் பொன்னான

விடுதலை வாழ்வு அது

என்னாளும் எம்மோடு

எம்முள்ளே வாழ்கின்றீர்!

Edited by nochchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கு பகிர்வுக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உடையார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]நன்றிகள் நெடுக்ஸ் அண்ணா கவிதைக்கு[/size]

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற நல்லதொரு கவிதை நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை ஒளிர்கிறது
மலரும் மலர்கிறது
கண்ணீர் அரும்பிட
கண்களில் படர்ந்தவர்
நினைவுகள் மனதில் பெருகிட…

 

கருவறையில் கனவுகளோடு

பிறந்தோம் - பின்

கல்லறையில் கனவுகளோடு

புதைந்தோம்..

வாழ்க்கை என்பதை

தேச விடுதலைக்காய்

வாழ்ந்து முடித்தோம்.

 

எமக்காக..

பசி இருக்க வேண்டாம்

கண்ணீர் சிந்த வேண்டாம் - ஏன்

மனதில்

கவலையே வளர்க்க வேண்டாம்..!

கார்த்திகை எங்கும்

எங்களுக்காய் எதுவும்..

வலிந்து தவிர்க்க வேண்டாம்..!

கண் முன்னே தொடரும்

உங்கள் தாய் மண்ணவள்

அவலம் போக்க

சித்தம் வையுங்கள்

அது போதும்..!!!

 

தேச விடுதலைக்காய்

போனவர் நாங்கள்...

போர் பிரியர்களாய்

உடல் சிதைந்து சாவதற்கல்ல..!

மக்கள் உரிமைக்காய்

உழைத்தவர் நாங்கள்

காட்டிக்கொடுத்து

மண்ணை சிதைப்பதற்காய் அல்ல...!!

 

தேசிய தலைவனின்

பிள்ளைகள் நாங்கள்..

இறுதி வரை

அவர் வழியில் நின்றோம்..!!

தலைவன் காட்டிய பாதை

தெளிந்ததாய்.. சீரியதாய்

தெரிந்தும் தெரியாமல்

பாதை மாற வேண்டாம் - அது

எம் கல்லறைகள் மீது

இயந்திரங்கள் ஏவிய

இதயமற்றவற்கு  ஈடாக்கும்.!

 

எதிரிகள், துரோகிகள்

மனித வேட்டையாட அல்ல

எம் அர்ப்பணிப்புக்கள்..!

மண்ணின் ஆக்கிரமிப்பை

நீக்கவே நாங்கள் போனோம்..

தடை நீக்கிகளாய்

நாங்கள் வெடித்தோம்..

அது.. தேசம் சிறைப்படுவதை தடுக்க..!

 

எனியும்...

கொள்கை மாற வேண்டாம்

தேச விடுதலை ஒன்றே

எமது இலக்கு

உங்கள் இலக்கு..!!

இத்தனை இழப்புகள்

இத்தனை துயர்கள்..

மன்னிப்பு என்ற

ஒற்றை வார்த்தைக்குள்

முடிக்க வேண்டாம்.!!

எம் ஆத்ம உலாவல்

தேச விடுதலையின் வேளையில்

மட்டுமே அமைதி பெறும்..

புரிந்து கொண்டு

செயற்படுங்கள்...!!!

 

கார்த்திகை ஒளிர்கிறது
மலரும் மலர்கிறது
கண்ணீர் அரும்பிட
கண்களில் படர்ந்தவர்
நினைவுகள் மனதில் பெருகிட..

எம் கனவுகள் மீள்சொல்லி

மீண்டும் ஓய்கிறோம்

கல்லறைகள் அற்ற

தேச மண்ணின்

சேதனத் துணிக்கைகளாய்..!!!

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸஃ!!! காரத்திகை ஒளிரட்டும்!!! அடிமை இருள் விலகட்டும்!!!!

நன்றி கவிதைக்கு அண்ணே .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

maveerar2006-kuruvikal.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.