Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அப்பா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா

 

எப்படி எப்படி

எல்லாமோ

தன் பாசம்

உணர்த்துவாள் அம்மா

ஒரேயொரு

கைஅழுத்தத்தில்

எல்லாமே

உணர்த்துவார்

அப்பா…

முன்னால்

சொன்னதில்லை

பிறர் சொல்லித்தான்

கேட்டிருக்கிறேன்

என்னைப்

பற்றி பெருமையாக

அப்பா

பேசிக்கொண்டிருந்ததை…

அம்மா

எத்தனையோ முறை

திட்டினாலும்

உறைத்ததில்லை

உடனே

உறைத்திருக்கிறது

என்றேனும்

அப்பா

முகம் வாடும் போது

உன் அப்பா

எவ்வளவு உற்சாகமாக

இருக்கிறார் தெரியுமா

என என் நண்பர்கள்

என்னிடமே சொல்லும்

போதுதான் எனக்குத்

தெரிந்தது

எத்தனை பேருக்குக்

கிடைக்காத தந்தை

எனக்கு மட்டும் என…

கேட்ட உடனே

கொடுப்பதற்கு

முடியாததால் தான்

அப்பாவை அனுப்பி

இருக்கிறாரோ

கடவுள்..?

சிறுவயதில்

என் கைப்பிடித்து

நடைபயில

சொல்லிக்கொடுத்த

அப்பா

என் கரம் பிடித்து

நடந்த போது

என்ன நினைத்திருப்பார்..?

லேசாக என் கால்

தடுமாறினாலும்

பதறுவார் அப்பா

இன்று அவர்

தடுமாறிய போது

அருகில் நான் இல்லை…

அம்மா செல்லமா

அப்பா செல்லமா

என கேட்டபோதெல்லாம்

பெருமையாகச் சொல்லி

இருக்கிறேன்

அம்மா செல்லமான

அப்பா செல்லம் என.

எத்தனையோ பேர்

நான் இருக்கிறேன்

எனச் சொன்னாலும்

அப்பாவை போல்

யார் இருக்க முடியும்..?

நானும் காட்டியதில்லை

அவரும் காட்டியதில்லை

எங்கள் பாசத்தை…

இருந்தும் காட்டிக்

கொடுத்த கண்ணீரைத்

துடைக்க இன்று

அப்பாவும் அருகில் இல்லை..

அம்மாவிடம்

பாசத்தையும்

அப்பாவிடம்

நேசத்தையும்

இன்றே உணர்த்துங்கள்

சில நாளைகள்

அவர்கள் அருகில் இல்லாமலும் போகலாம்...

– கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

From : http://azeezahmed.wordpress.com/2010/08/01/app-2/

 
 
  • கருத்துக்கள உறவுகள்
அருமையான வரிகள் .......... அப்பாவின் பாதத்தை நான் உணரும்போது அப்பா என்னுடன் இல்லை இப்போது அவரின் ஞாபகங்களே எஞ்சி உள்ளது, மீண்டும் அப்பாவிற்கு மகனாக பிறக்கவேண்டும்.
 
என்னிடம் பச்சை முடிந்து விட்டது நாளை வந்து குத்துவேன்.
 
இணைப்புக்கு நன்றி நுணா.  

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை…
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் அருகில் இல்லை..

 

 

உண்மைதான்  எனக்கும் அப்பா இல்லை . இணைப்பிற்கு மிக்க நன்றிகள் நுணா .

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா அன்னை எமைச் சுமந்ததோ ஈரைந்து மாதம்தான் நீ எமைச் சுமந்ததோ வாழ்ந்தநாள் முழுதுமாய் அன்னயாய் உனைக் கண்டேன் தந்தையாய் உனைக் கண்டேன் தாவி இணைத்திடும் மழலையாய் உனைக் கண்டேன் தோழனாய் உனைக் கண்டேன் துணைவனாய் உனைக் கண்டேன் பாசமழை பொழியும் மேகமாய் உனைக் கண்டேன் அப்பா பற்றிய கவிதையை படித்ததும் எம் தந்தையின் நினைவால் கண்கள் குளமாவதைத் தடுக்க முடியவில்லை நல்லதாரு கவிதையை படைத்த கலாம் அவர்கட்கும் பகிர்ந்து கொண்ட நுணாவிலானுக்கும் நன்றிகள்

எனக்கு அப்பாவும் உள்ளார்.
நானும் இன்று அப்பா.

எனது மகனில் நான் எனது அப்பாவிற்கு கொடுத்த துன்பங்களை இன்று பார்கின்றேன்.

 

நன்றிகள் கவிதைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவைப்பற்றிய கவிதைகள் காண்பது குறைவு.

அப்பாவாகிய பின்புதான் அப்பாவின் அருமையை அநுபவ ரிதியாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

 

 

லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறுவார் அப்பா
இன்று அவர்
தடுமாறிய போது
அருகில் நான் இல்லை

அழகான வரிகள்

நல்லதொரு கவிதையை இணைத்த நுணாவிலன் அண்ணாவிற்கு நன்றிகள்.

என் அப்பா பற்றி எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்பு, பொறுமை, அமைதி, தாழ்மை, உதவும் உள்ளம், இரக்கம் இப்படி பல நல்ல குணக்களுக்கு உரித்தான என் அப்பாவை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது இந்த கவிதை. என் அப்பாவிற்கே மீண்டும் மகளாக பிறக்கும் வரம்வேண்டும் எனக்கு........!

  • கருத்துக்கள உறவுகள்

 நான் தோளுக்கு மேல் வளர்ந்தபோது தோழனாக நின்ற போது .........

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை…
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் அருகில் இல்லை..

 

 

அதற்க்கான சந்தர்ப்பம் கிட்டாத பாவி, கிடைத்திருந்தால் எனது பிறவி பலனை அடைந்திருப்பேன். 

 

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?

 

இந்த கவிதை ஊடாக எனது மனப்பாரத்தை குறைத்ததற்கு மீண்டும் நன்றிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவை போற்றுபவர் எல்லோரும்... மன்னிக்க வேண்டும். எனது, அப்பா.... நரகத்தின், முள்ளு. கோம்பையன் மணல் சுடலையில்.... அவன், பிணம் எரியும்... போது, தான்.. தெரிந்தது, அவனது.. குணம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாக, அப்பாவின் அன்பைக் கவிதையில் வடித்திருக்கிறார்,கவிஞர்!

 

ஆரவாரமில்லாத, ஒரு விதமான அன்பு, அப்பாவினுடையது!

 

நன்றிகள், நுணா!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கவிதைக்கு.

அப்பா....... அவரின் அருமையை உணர்ந்தது அவரில் இழப்பிற்குப் பிறகுதான். ஈடுசெய்ய முடியாத இழப்பாய் இன்னும் எனக்கு. :(

அப்பாவிற்கென இணைத்த கவிதைக்கு மிக்க  நன்றி

அருமையான வரிகள்!!  இணைப்புக்கு மிக்க நன்றி நுணாவிலான்!

  • கருத்துக்கள உறவுகள்

வயசு வந்து நானான தள்ளிப்படுக்கும்வரை

அப்பாவின் நெஞ்சில் படுத்து நித்திரை செய்தவன் என்பதால் அந்த சுணை  அறிந்தவன்

நெஞ்சு கனக்கிறது

கண்கள் பனிக்கின்றன

நன்றி  பதிவுக்கு நுணா



இன்று அவர் இல்லாவிட்டாலும்

அம்மாவவிடம்

நான் என்றும்  மாறுவதில்லை

ஒருவருக்கு முன்னால் ஒன்றும் பின்னால் ஒன்றும  சொல்வதில்லை

எப்பொழுதும் அப்பா பிள்ளைதான் என்பேன்

அம்மாவை சீண்டுவதற்காக

கண்களை மூடி தன் கணவனை அவர் நினைப்பார்

என் கண்கள் பனிக்கும் இதைப்பார்த்து..........

வழி காட்டி, வாழ்க்கை சொல்லிக் கொடுத்தவர். அவரின் ஒவ்வொரு வசனத்தையும் அனுபவத்தில் பொன் எழுத்துக்களாக உணர்கிறேன். ஓர் அதிகாலையில் தூங்கி இருந்தவரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு வந்தேன். அதன் பின்பு அவரை காணக் கொடுத்து வைக்கவில்லை.

நன்றி நுணா பதிவிற்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.