Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சை பெற்ற வீமனின் தாயர் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு சிகிச்சை பெற்ற வீமனின் தாயர் உயிரிழப்பு!
பிப் 26, 2013
     
தளபதிகளில் ஒருவராக இருந்த வீமனின் தாயாரான ஏகாம்பரநாதன் இராஜேஸ்வரி (வயது 62) நேற்று யாழில் உயிரிழந்துள்ளார்.
 
கடந்த சில மாதங்களான கடுமையான விரத்தியில் இருந்த அவர் தற்கொலை முயற்சியில்ஈடுபட்டுள்ளார் இந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி வியாழக்கிழமை நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு தொடர்ச்சியாக சுமார் இரண்டு வாரங்கள் அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிளந்துள்ளார்.
  • கருத்துக்கள உறவுகள்

விரக்தியின் விளிம்புக்கே போய்விட்ட இந்தத் தாயின் மறைவுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

எத்தனை மரணங்களைத் தான் தாங்குவது? :wub:

 

அனுதாபங்களை  இந்த வீரத்தாயிற்கு.

 

 

இந்த இறப்பும் சிங்கள படுகொலையின் ஒரு அங்கமே. நாம் இழந்தவை ஏராளம். எனவே இவ்வாறான இறப்புக்களை தவிர்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் இந்த தாய்க்கு....

  • கருத்துக்கள உறவுகள்

கையறுநிலையில் இருக்கும் ஈழத்தமிழினத்தால் போராளைகளை மட்டுமல்ல.. அவர்களின் உறவுகளையும்கூட காக்க முடியாத நிலை..

 

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

விரக்தியின் விளிம்புக்கே போய்விட்ட இந்தத் தாயின் மறைவுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!


 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள்...

ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

விரக்தியின் விளிம்புக்கே போய்விட்ட இந்தத் தாயின் மறைவுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். சிறிலங்கா அரசு தான் அந்த அம்மாவின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னைக்கு இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்த தனது மகனைக் காணவில்லையென்று மன அழுத்தத்தில் தற்கொலைக்கு முயற்சிசெய்து ஆபத்தான கட்டத்தில் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்த, வீமனின் தாயாரான ஏகாம்பரநாதன் இராஜேஸ்வரியின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.

 

அவ் அன்னையின் இறுதிக் கிரியைகள் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன் கலந்துகொண்டு அவ் அன்னைக்கு இறுதி வணக்கம் செலுத்தினார்.

 

அத்துடன் இந் நிகழ்வில் பெருமளவான மக்கள் கண்ணீருடன் இந் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தளபதிகளில் ஒருவரான வீமனும் படையினரிடம் சரணடைந்துள்ளார். அதன் பின்னர் அவர் தொடர்பான எந்தவொரு தகவலும் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்படவில்லை.

 

இந்த நிலையில் தனது மகன் உயிருடன் உள்ளாரா? இறந்துவிட்டாரா? என்று தெரியாத நிலையில், தனது மகனைத் தாயார் தேடியலைந்துள்ளார். இதனால் மனதளவில் பாதிப்புக்குள்ளான நிலையில் சாவகச்சேரியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார்.

 

தனது மகன் தொடர்பில் எதுவும் தெரியாததுடன், மகனை மீட்பதற்காகச் சில நபர்களிடம் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்ததாக அவர் தன்னிடம் கூறியதாக வைத்திய நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார்.

 

இந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி இரவு நித்திரைக்குச் செல்லும்போது தனது மகனைக் காணவில்லையென்று அவர் அழுதுள்ளார். இதன் பின்னர் அவர் தற்கொலை முயற்சியுடன் நஞ்சருந்தியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

 

மிகவும் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பயனின்றி கடந்த 25ம் திகதி மதியம் உயிரிழந்தார்.

P2280181.jpg

http://tamil24news.com/news/?p=46658

தனது மகன் தொடர்பில் எதுவும் தெரியாததுடன், மகனை மீட்பதற்காகச் சில நபர்களிடம் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்ததாக அவர் தன்னிடம் கூறியதாக வைத்திய நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார்.

 

எனக்கு தெரிந்த சிலரும் (நேரடியாக தெரியாது. நண்பர்கள் மூலம் தெரியும்) இவ்வாறு ஏமாந்திருக்கிறார்கள்.

சில நபர்கள் காணாத மகனை தேடிக்கொண்டிருக்கும் பெற்றோரிடம் மகன் இங்கே இருக்கிறான், இவ்வளவு பணம் கொடுத்தால் தான் விடுதலை செய்ய முடியும் என்று கூறி பணத்தை வாங்கி விட்டு ஓடி ஒளிந்து விட்டார்கள்.

இன்னும் சிலரிடம் மகன் வெளிநாட்டுக்கு தப்பி வந்து விட்டான். படுகாயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். அதற்குரிய செலவுக்கான பணம் தாருங்கள். இப்பொழுது கதைக்க முடியாத நிலையில் இருக்கிறான். குணமடைந்ததும் கதைக்க சொல்கிறோம் என்று கூறி பணம் வாங்கியுள்ளார்கள். அதே போல் மகனை பார்க்க இந்த நாட்டுக்கு வாருங்கள் என்று கூறி வெளிநாட்டுக்கு வரவழைத்து அங்கு வைத்து, கொண்டு வந்த பணத்தையும் பறித்து விட்டு இடையிலேயே விட்டு சென்றுள்ளார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.

எனவே பிள்ளைகளை, சகோதரர்களை காணவில்லை என்றால் கண்டவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். இருக்கும் வலி, யோசனைகளை மேலும் அதிகரிக்க அது வழி வகுத்து விடும். :rolleyes:

 

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.