Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
* நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2 - 3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.
 
*வேலை முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில்மனைவிஇருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.
 
*பெண்களை எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாமல் அலட்டிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூடபலமணிநேரம் பேசு வார்கள். அதே போன்று நீங்களும்பேசுங்கள். அதற்காக, ஒன்றும்இல்லாத விஷயத்தை பேசுங்கள்என்று அர்த்தம் இல்லை. உங்கள்குடும்பத்துக்குதேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்தவிவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.
 
* உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாகநடந்துகொள்வானோ, அதே போன்றுநடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.
 
* உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்’ என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள்இப்படிகேட்டமாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.
 
* மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள்மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலேபொழியும். மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம்அன்பாகஇருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காதலனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்! அதனால் காதலியுங்கள், மனைவியை
 
(FB)

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டாத ஒருவர் சொல்லவதை எப்படி நம்புவினம் ஆண்கள் சுபேஸ்??

 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இப்பதான் தியரி படிக்கிறாராம்  :D

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோற்றுக் கடன் கழிக்கச்,

சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில்,

வீழ்ந்தாயடா, கர்ணா?

 

வஞ்சகன் புறோக்கனடா! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி சுபேஸ்! என்ன இப்ப கொஞ்சநாளாய் ஒரு மார்க்கமாய்திரியிறியள்?????? :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

வெயிற் எ செக‌ண்ட்! சொந்த‌ ஆக்க‌ம் போல‌த் தெரியுது, மூல‌ம் குறிப்பிட‌ இல்ல‌. மூச்சுப் பேச்சு இல்லாம‌ மொட்டையா எழுதிப் போட்டு ஆள் போயிற்றுது.

 

நான் நினைக்கிற‌ன் சுபேசிட‌ யாழ் க‌ட‌வுச் சொல்லை யாரோ திருடி விளையாட்டுக் காட்டீன‌ம் போல‌ இருக்கு! :lol:

 

வெயிற் எ செக‌ண்ட்! சொந்த‌ ஆக்க‌ம் போல‌த் தெரியுது, மூல‌ம் குறிப்பிட‌ இல்ல‌. மூச்சுப் பேச்சு இல்லாம‌ மொட்டையா எழுதிப் போட்டு ஆள் போயிற்றுது.

 

நான் நினைக்கிற‌ன் சுபேசிட‌ யாழ் க‌ட‌வுச் சொல்லை யாரோ திருடி விளையாட்டுக் காட்டீன‌ம் போல‌ இருக்கு! :lol:

 

நிழலி முன்பு சொன்ன மாதிரி இவர்ர ஆள் யாழ் கள வாசகியாக இருக்கலாம். அதான் தம்பி தனது எண்ணக் கிடக்கைகளை இப்பிடி வெளிப்படுத்துகிறார். :D

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுபேஸ்! என்ன இப்ப கொஞ்சநாளாய் ஒரு மார்க்கமாய்திரியிறியள்?????? :lol:

 

நானும்கவனிச்சனான் அண்ணை

சாக்குக்குள்ள  போயிற்றாரோ.......... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியை எப்பிடி அன்பா வைச்சிருக்கணும் என்று கட்டிக்க போற எங்களுக்கும் கட்டி கிட்ட அவங்களுக்கும் தெரியும்....தானே... கல்யாணமே வேணாம் அதெல்லாம் சுத்த வேஸ்ட் கல்யாணம் கட்டிகிட்டாலே பொண்டாட்டி கிட்ட அடிவாங்கனும் பொண்டாட்டிக்கு தினமும் சமைச்சு போடணும்... உடுப்பு தோய்க்கணும்....மா இடிச்சு கொடுக்கணும்... மிளகா தூள் அரைச்சு கொடுக்கணும் எண்டு சொல்லிட்டு திரிற சுபேஷ் அண்ணா அட்வைஸ் மழை பொழிய கூடா....:D

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க அடிசுப்பம் அப்புறம் அனைச்சுப்பம்.... நீங்க ஓரமா இருந்து சிங்கள் tea சிங்கள் ஆ போடுவது எப்பிடி என்று எதாச்சும் எழுதிகோங்க.... :D

நிழலி முன்பு சொன்ன மாதிரி இவர்ர ஆள் யாழ் கள வாசகியாக இருக்கலாம். அதான் தம்பி தனது எண்ணக் கிடக்கைகளை இப்பிடி வெளிப்படுத்துகிறார். :D

சுபேஷ் ஆள் யாழ் கள வாசகி என்று எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா?:D

  • கருத்துக்கள உறவுகள்

 

* நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2 - 3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.
 

 

கணவனும் மனைவியும்  ஒரே இடத்திலே வேலை செய்து

முடிய ஒரே  நேரத்தில் வீடு வந்தாலுமா ? தாங்குமா ?

ஏதாவது நல்ல யோசனையாகச் சொல்லுங்கள் சுபேஸ் :lol:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அரிச்சுவடி நல்லா இருக்கு.

அப்படியே கணவரை அன்பாய், பண்பாய் வைத்திருக்க வழிமுறைகளையும் சில'பெடிச்சிகள்' இங்கே பதிந்தால், எங்கள் துணை அறிந்துகொல்(ள்)வார்கள்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் கட்டாத ஒருவர் சொல்லவதை எப்படி நம்புவினம் ஆண்கள் சுபேஸ்??

ஏனுங்க நெருப்பு சுடும் என்னு சொல்றதுக்கு நெருப்பில கையை வைச்சு சூடுவாங்கினவனா வரணும்..? :D

அவர் இப்பதான் தியரி படிக்கிறாராம்  :D

ஓம் அண்ணை..நாங்கள் தியறி படிப்பம்..ஆனால் உங்களமாதிரி செய்முறை செய்து பாக்கப்போய் வாழ் நாள் ஜெயிலுக்க போகமாட்டம்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோற்றுக் கடன் கழிக்கச்,

சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில்,

வீழ்ந்தாயடா, கர்ணா?

 

வஞ்சகன் புறோக்கனடா! :D

 

ஒரு நல்ல ஆண் மகணுக்கு அழகு..... கல்யாணம் கட்டியோர் ஒறுத்தாலும் அவர் நாண சிங்கிளாய் சிறப்புடன் வாழ்ந்துகாட்டல்..
 
இவண்- சிங்கிளாய் வாழ்ந்தாலும் சிங்கமாய் வாழ்வோர் சங்கம் கம்பைன்டு 
வித் பெண்களைக்கண்டால் கண்களைமூடுவோர் பேன்ஸ் க்ளப்....

:lol:

தம்பி சுபேஸ்! என்ன இப்ப கொஞ்சநாளாய் ஒரு மார்க்கமாய்திரியிறியள்?????? :lol:

மனமுண்டேல் தனியே வாழ மார்க்கமுண்டண்ணா.. :D

வெயிற் எ செக‌ண்ட்! சொந்த‌ ஆக்க‌ம் போல‌த் தெரியுது, மூல‌ம் குறிப்பிட‌ இல்ல‌. மூச்சுப் பேச்சு இல்லாம‌ மொட்டையா எழுதிப் போட்டு ஆள் போயிற்றுது.

 

நான் நினைக்கிற‌ன் சுபேசிட‌ யாழ் க‌ட‌வுச் சொல்லை யாரோ திருடி விளையாட்டுக் காட்டீன‌ம் போல‌ இருக்கு! :lol:

எல்லாம் துன்பப்படும் இந்த குடும்பகாரர்கள் இதைப்படித்தாவது பிழைத்துக்கொள்ளட்டும் என்ற நல்லெண்ணத்தில் பகிரப்பட்டது அண்ணா.. :D

நிழலி முன்பு சொன்ன மாதிரி இவர்ர ஆள் யாழ் கள வாசகியாக இருக்கலாம். அதான் தம்பி தனது எண்ணக் கிடக்கைகளை இப்பிடி வெளிப்படுத்துகிறார். :D

 

நானும்கவனிச்சனான் அண்ணை

சாக்குக்குள்ள  போயிற்றாரோ.......... 

 

உங்கள் போன்ற குடும்பகாரர்களுக்காக இந்தப்பழிச்சொல்லையும் ஏற்றுக்கொள்கிறேன்..யேசு எமக்காக சிலுவை சுமக்கவில்லையா..?  :D

 

 

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ராசா

 

போன இடத்தில சரிவரலையோ :lol:

 

அல்லது சாக்குக்குள்ள  போகமுதலே தள்ளி  விட்டிட்டினமே.

வந்ததிலிருந்து இந்த போடு பொடுகிறீர்கள் இன்று........... :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவியை எப்பிடி அன்பா வைச்சிருக்கணும் என்று கட்டிக்க போற எங்களுக்கும் கட்டி கிட்ட அவங்களுக்கும் தெரியும்....தானே... கல்யாணமே வேணாம் அதெல்லாம் சுத்த வேஸ்ட் கல்யாணம் கட்டிகிட்டாலே பொண்டாட்டி கிட்ட அடிவாங்கனும் பொண்டாட்டிக்கு தினமும் சமைச்சு போடணும்... உடுப்பு தோய்க்கணும்....மா இடிச்சு கொடுக்கணும்... மிளகா தூள் அரைச்சு கொடுக்கணும் எண்டு சொல்லிட்டு திரிற சுபேஷ் அண்ணா அட்வைஸ் மழை பொழிய கூடா.... :D

தன் முயற்சியில் சற்றும் தளராத சுண்டல் மீண்டும் சாட் பாக்ஸை ஓப்பன் செய்தார்..... :D

நாங்க அடிசுப்பம் அப்புறம் அனைச்சுப்பம்.... நீங்க ஓரமா இருந்து சிங்கள் tea சிங்கள் ஆ போடுவது எப்பிடி என்று எதாச்சும் எழுதிகோங்க.... :D

 

 

பிகரு ஒண்ணும் மாட்டாமல் இருக்க கடவுள் உங்களுக்கு மட்டும்தான் இப்படி வாய்ப்பு குடுத்துக்கிட்டே இருக்கார்....புரிஞ்சிகிட்டு பொழச்சிக்குங்கோ சுண்டல்.... :D

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணவனும் மனைவியும்  ஒரே இடத்திலே வேலை செய்து

முடிய ஒரே  நேரத்தில் வீடு வந்தாலுமா ? தாங்குமா ?

ஏதாவது நல்ல யோசனையாகச் சொல்லுங்கள் சுபேஸ் :lol:  :icon_mrgreen:

வசதியைப்பொறுத்து..ஒரு வேலைக்காறியைப்பற்றி மனைவியுடன் கலந்ந்தாலோசித்துப்பாருங்க அண்ணா..

:icon_mrgreen:

அரிச்சுவடி நல்லா இருக்கு.

அப்படியே கணவரை அன்பாய், பண்பாய் வைத்திருக்க வழிமுறைகளையும் சில'பெடிச்சிகள்' இங்கே பதிந்தால், எங்கள் துணை அறிந்துகொல்(ள்)வார்கள்.

அண்ணனோட பீலிங்கை பொம்பிளைங்க யாராவது கண்டுக்கிட்டீங்களா... :D

ராசா

 

போன இடத்தில சரிவரலையோ :lol:

 

அல்லது சாக்குக்குள்ள  போகமுதலே தள்ளி  விட்டிட்டினமே.

வந்ததிலிருந்து இந்த போடு பொடுகிறீர்கள் இன்று........... :lol:  :D  :D

ஒரு பற்றற்ற துறவி போல வாழ்ந்து வருகிறேன்..எனது பெயரை களங்கப்படுத்துவது நல்லதில்ல.. :D 

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவி திருட்டு தனமா கல்யாணம் கட்டிட்டு பற்றட்ட துறவியா....

அது சரி அண்ணே சமுக சாளரம் பகுதிகள்ல இணைக்க வேண்டிய ஆக்கங்களை எல்லாம் ஏன் அண்ணே இனிய பகுதியில் கொண்டு வந்து போடுகின்றீர்கள் ?

மற்றது நீங்கள் போட்ட ஆகத்தின் மூலத்தை குறிப்பிட மறந்து விட்டீர்கள் என்று நினைகின்றேன்...

http://www.dinasari.com/மனைவியை-எப்போதும்-அன்பாய.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடபாவி திருட்டு தனமா கல்யாணம் கட்டிட்டு பற்றட்ட துறவியா....

 

கிகி..தூற்றுவார் தூற்றட்டும்..நாம் தொடர்வோம் உண்மைகளை வெளிச்சம்போட்டு காட்டுவதை..

 

 

 

அது சரி அண்ணே சமுக சாளரம் பகுதிகள்ல இணைக்க வேண்டிய ஆக்கங்களை எல்லாம் ஏன் அண்ணே இனிய பகுதியில் கொண்டு வந்து போடுகின்றீர்கள் ?

மற்றது நீங்கள் போட்ட ஆகத்தின் மூலத்தை குறிப்பிட மறந்து விட்டீர்கள் என்று நினைகின்றேன்...

http://www.dinasari.com/மனைவியை-எப்போதும்-அன்பாய.html

 

 

முகப்புத்தகத்தில் படித்தைல் பகிர்ந்தது..மறந்துவிட்டென் FB னு குறிப்பிட..நன்றி மூலத்தை இணைத்ததிற்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பற்றற்ற துறவி போல வாழ்ந்து வருகிறேன்..எனது பெயரை களங்கப்படுத்துவது நல்லதில்ல.. :D 

 

sup_zpsa6441a30.jpg

 

தம்பி இப்ப சிவில் எஞ்சினியராம்  :(

பேசாமல் மனைவிக்கு அடிமாஇயாக இருந்தால் காலம்  பூராவும்  அவாவும் சந்தோசமாக இருப்ப நாங்களும் நின்மதியாக இருக்கலாம்.

பேசாமல் மனைவிக்கு அடிமாஇயாக இருந்தால் காலம்  பூராவும்  அவாவும் சந்தோசமாக இருப்ப நாங்களும் நின்மதியாக இருக்கலாம்.

 

 இது சுத்த முட்டாள்தனம். இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றும் வேலை. சுதந்திரம் இருவருக்கும் உண்டு. அவரவர் சுதந்திரத்தில் மற்றவர் தலையிடாமல் இருப்பதே நன்று.

 

மன சுத்தியுடன் அன்பாக இருந்தாலே போதும், சந்தோஷம்  தானக மலரும் குடும்பத்தில்

 

 பெண்களை எப்பவுமே சந்தோஷமாக வைத்திருப்பது என்பது கல்லில நார் உரிப்பதற்கு சமன்

 இது சுத்த முட்டாள்தனம். இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றும் வேலை. சுதந்திரம் இருவருக்கும் உண்டு. அவரவர் சுதந்திரத்தில் மற்றவர் தலையிடாமல் இருப்பதே நன்று.

 

மன சுத்தியுடன் அன்பாக இருந்தாலே போதும், சந்தோஷம்  தானக மலரும் குடும்பத்தில்

 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 இது சுத்த முட்டாள்தனம். இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றும் வேலை. சுதந்திரம் இருவருக்கும் உண்டு. அவரவர் சுதந்திரத்தில் மற்றவர் தலையிடாமல் இருப்பதே நன்று.

 

மன சுத்தியுடன் அன்பாக இருந்தாலே போதும், சந்தோஷம்  தானக மலரும் குடும்பத்தில்

 

 பெண்களை எப்பவுமே சந்தோஷமாக வைத்திருப்பது என்பது கல்லில நார் உரிப்பதற்கு சமன்

 

பயங்கரமாய் அடிபட்டகாய்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

 பெண்களை எப்பவுமே சந்தோஷமாக வைத்திருப்பது என்பது கல்லில நார் உரிப்பதற்கு சமன்

 

பேசாம ஆண்களே நீங்கள்.. சந்தோசமா இருக்கிறதைப் பார்த்து தான் சந்தோசப்படுற பெண்ணை முடிஞ்சா கண்டுபிடிங்க.. அது தான் நல்லம். அதைவிட்டிட்டு.. நீங்கள் சந்தோசப்படுத்தப் போக..அதில.. சந்தேகம் வேற வந்து தொலைக்கிற பொண்ணுங்க புத்தியை அவ்வளவு இலகுவாகக் கையாள முடியாது.. அதில மிணக்கடுவது நேர வேஸ்டு..! வாழ்க்கையும் வேற அதிலையே வேஸ்டாகிடும். அந்த வகையில் வந்தி அண்ணனின் வாழ்க்கைக் குறிப்பை மிகக் கவனமாகக் கவனத்தில் கொள்ளுங்கள்..! :):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.