Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன காலமானார்!

Featured Replies

Jayalath-Jwrdena.jpg

 

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயலத் ஜயவர்தன இன்று காலமானார்.

 

மேலும், http://tamilworldtoday.com/?p=12963

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்காக இறுதி வரை குரல் கொடுத்தவர்களில் ஒருவர் ..... ஆழ்ந்த அனுதாபங்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்காக இறுதி வரை குரல் கொடுத்தவர்களில் ஒருவர் ..... ஆழ்ந்த அனுதாபங்கள்....

 

தமிழர் எப்பவும், இரக்க சுபாவம் உள்ளவர்கள், என்பதை சுண்டல் சொல்லியுள்ளார்.

இவரின், கட்சி ஆளும் கட்சியிலிருந்தால்....

இவரும்... ஒரு, கோத்தா தான்....

சும்மா... போங்க, சுண்டல்.

சிங்களவன் செத்தால்... சந்தோசப் படுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு வைத்தியர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவர். புலிகளிருந்த காலத்தில் மடுவிற்குச் சென்று மக்களுக்கு உதவியவர். இவர் இனவாதம் கக்கி நான் அறிந்ததில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலோ,மனிதாபிமானமோ என்று என்னால், இனம்பிரிக்க முடியவில்லை!

 

என்னவாக இருந்தாலும், தமிழருக்காக ஒலித்த குரலொன்று ஓய்ந்து போனது!

 

அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலோ,மனிதாபிமானமோ என்று என்னால், இனம்பிரிக்க முடியவில்லை!

என்னவாக இருந்தாலும், தமிழருக்காக ஒலித்த குரலொன்று ஓய்ந்து போனது!

அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!

 

ஆழ்ந்த அஞ்சலிகள்.

 

(சிங்களவர் என்றதற்காக எதிர்க்காமல்......

உலகில் 20 நாடுகள் மகிந்த சித்தாந்ததிற்கு உதவின,,, அவற்றில் பலவற்றில்தான் நாம் குடியிருக்கிறோம்.

நமது நோக்கம் உண்மையை வெளிக்கொண்டுவந்து, பிழையான உதவிகளை செய்தவர்கள் அவற்றை கண்டுபிடித்து திருத்தி, எமக்கு உதவி செய்யுமாறு கேட்க வேண்டும்.)

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்காக குரல் கொடுத்ததால் சிங்களப்புலி என்று சொல்லப்பட்ட நண்பர் ஜயலத் மறைந்துவிட்டார் - மனோ கணேசன்

jeyalath_CI.jpg

 

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன காலமானார். சிங்கப்பூர் மருத்துவ மனையில் இன்று காலை ஜயலத் ஜயவர்தன காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறக்கும் போது அன்னாருக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது.
 
கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான ஜயலத் ஜயவர்தன கட்சியின் மிக முக்கியமான பல  பதவிகளையும், அமைச்சுப் பொறுப்புக்களையும் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.சிங்கப்பூர் மருத்துவ மனையில் சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்ட போது ஜயலத் ஜயவர்தன காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் வெளியிடப்படவுள்ளது.
 
தமிழர்களுக்காக குரல் கொடுத்ததால் சிங்களப்புலி என்று சொல்லப்பட்ட நண்பர் ஜயலத்   மறைந்துவிட்டார்
-  மனோ  கணேசன் 
 
தமிழ் பேசும் மக்களுக்கு, பெரும்பான்மை சகோதர இனத்தின் மத்தியில் புதிய நண்பர்கள் உருவாகாத நிலையில், புதிது புதிதாக இனவாத பகைமை பேசுபவர்கள்தான் நாள்தோறும் தோன்றி வருகின்றார்கள். இந்நிலையில் நம் மத்தியில் செயற்பட்டு, வாழ்ந்து, இருந்த தமிழ் பேசும் மக்களின் நண்பர்  மருத்துவ கலாநிதி ஜயலத் ஜயவர்த்தனவின் மறைவு, இன்றைய இனவாத சூழ்நிலையில் மிகப்பெரும் இழப்பாக என்னால் உணர முடிகின்றது. அவரது மறைவு என் மனதை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
சிங்கப்பூரில் சிகிச்சை  பெற்றிருந்த வேளையில் மரணமடைந்த ஜயலத் ஜயவர்த்தன எம்பியின் மறைவு தொடர்பாக மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
 
2007ம் வருடத்தில் என்னை சிஐடியினர் விசாரணை என்ற பெயரில் ஒன்பது மணித்தியாலம் தடுத்துவைத்து கைது செய்ய முயற்சித்த வேளையில் என்னோடு இறுதிவரை விசாரணையின் போது கூட இருந்து போலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு என்னை மீட்டு வந்தவர், ஜயலத் ஜயவர்தன ஆகும். ஆகவே நான் தனிப்பட்டமுறையில், ஜயலத் ஜயவர்தனவுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்.
 
கொழும்பில் தமிழர்கள் நாளாந்தம் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு, கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்ட, கோர யுத்தம் நடைபெற்ற காலமாக அப்போதைய காலகட்டம் இருந்தது. இன்றைய காலகட்டத்தைவிட அன்று நாளாந்த நிலைமைகள் கடும் மோசமாக இருந்தன. எனது கட்சி உறுப்பினர்கள்கூட என்னுடன் தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதற்கு தயங்கிய அந்த காலகட்டத்தில், ஜயலத் ஜயவர்தன என்னுடன் இணைந்து நின்று சிங்கள புலி என்ற பட்டத்தை சுமந்தார். அவரது இந்த தமிழ் பேசும் மக்கள் சார்பு கொள்கை தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினர் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்த வேளையிலும் ஜயலத் ஜயவர்தன தன் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளவில்லை.   
 
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆழ்ந்த இரங்கலை ஜயலத் ஜயவர்தனவின் குடும்ப அங்கத்தவர்களுக்கு தெரிவித்துகொள்கின்றேன்.  அவரது இறுதி கிரியைகளில் நமது கட்சி தொண்டர்கள் தீவிரமாக பங்குபற்ற வேண்டும் எனவும் கேட்டு கொள்கின்றேன்.  
 

 

சிங்களப்பேரினவாதத்திற்கு முற்றிலும் பலியாகாமல் செயற்பட்ட நல்ல மனிதர்.
அவரின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு நெருக்கடியான நேரங்களில் சிங்களவர்கள் தமிழர்களின் அழிவை விடுப்புப் பார்த்து அல்லது பட்டாசு வெடித்துக் கொண்டாடிக் கொண்டிருந்த போது இவர் மனிதத்தை முன்னிறுத்தி செயற்பட்ட தரணங்களைப் பார்த்திருக்கிறேன்.

 

அன்னாரின் மறைவையிட்டு.. ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் எப்பவும், இரக்க சுபாவம் உள்ளவர்கள், என்பதை சுண்டல் சொல்லியுள்ளார்.

இவரின், கட்சி ஆளும் கட்சியிலிருந்தால்....

இவரும்... ஒரு, கோத்தா தான்....

சும்மா... போங்க, சுண்டல்.

சிங்களவன் செத்தால்... சந்தோசப் படுங்கள்.

 

நீங்கள் விடுதலைப்புலிகளின் அரசியல்பிரிவை சேர்ந்த நடேசனின் மனைவி முள்ளிவாய்க்களில் கொல்லப்பட்டபோது சந்தோசப்பட்டவர்களில் ஒருவரா? அவர் ஒரு சிங்களவர்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் விடுதலைப்புலிகளின் அரசியல்பிரிவை சேர்ந்த நடேசனின் மனைவி முள்ளிவாய்க்களில் கொல்லப்பட்டபோது சந்தோசப்பட்டவர்களில் ஒருவரா? அவர் ஒரு சிங்களவர்.

 

 

60 க்கு மேற்பட்ட  வருடங்களாக

ஒவ்வொரு சிங்களவனாக

ஒவ்வொரு சிங்களக்கட்சியாக

வாக்களித்து நம்பி

எதிர்பார்த்து

ஏமாந்து ஏமாந்து

ஏமாற்றப்பட்டு...........

 

எல்லா சிங்களவனும்

இடது

வலது

சோசலிசம்

முதலாளித்துவம்

பௌத்தம்

கத்தோலிக்கம்.....

எதுவாக இருந்தாலும் சிங்களவனாக மட்டுமே சிந்தித்து கழுத்தறுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவனுக்கு....

சந்தேகம் வருவது தவறுகிடையாது ஐயா. :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகப்பிரதேசங்களை சுனாமி தாக்கியதை அடுத்து இலங்கையிலேயே முதன்முதலாக சுனாமி எச்சரிக்கை நிலையம் கிளிநொச்சியில் 2005ம் ஆண்டு நவம்பர் 26இல் திறக்கப்பட்டது. அபாய எச்சரிக்கை கருவிகள் உட்பட ஏனைய கருவிகள் சிலவற்றை இவர் தனது சொந்த பணத்தில் இருந்து வாங்கிவந்து கிளிநொச்சியில் வைத்து அன்பளிப்பு செய்திருந்தமையும் இவர் தமிழர் மீது கொண்ட அன்புக்கு உதாரணமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகப்பிரதேசங்களை சுனாமி தாக்கியதை அடுத்து இலங்கையிலேயே முதன்முதலாக சுனாமி எச்சரிக்கை நிலையம் கிளிநொச்சியில் 2005ம் ஆண்டு நவம்பர் 26இல் திறக்கப்பட்டது. அபாய எச்சரிக்கை கருவிகள் உட்பட ஏனைய கருவிகள் சிலவற்றை இவர் தனது சொந்த பணத்தில் இருந்து வாங்கிவந்து கிளிநொச்சியில் வைத்து அன்பளிப்பு செய்திருந்தமையும் இவர் தமிழர் மீது கொண்ட அன்புக்கு உதாரணமாகும்.

 

நல்ல மனசு தான்

அது சரி

கிளிநொச்சியில் எதற்கு சுனாமி எச்சரிக்கை???? :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனசு தான்

அது சரி

கிளிநொச்சியில் எதற்கு சுனாமி எச்சரிக்கை???? :(

நான் நினைக்கிறான் வன்னி பகுதிக்கு என்று முல்லை வடமராட்சி கரையோரங்களுக்கு.... கிளிநொச்சியில் தமிழ் ஈழ காலநிலை கண்காணிப்பகம் இருந்தது....

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறான் வன்னி பகுதிக்கு என்று முல்லை வடமராட்சி கரையோரங்களுக்கு.... கிளிநொச்சியில் தமிழ் ஈழ காலநிலை கண்காணிப்பகம் இருந்தது....

நன்றி சுண்டல்

தகவல்களுக்கு

சுனாமி எச்சரிக்கை கருவி நில நடுக்கத்தை வைத்து கண்டறியும் கருவியாக இருக்கும். மேலும் ஒரு சுனாமிதான், யாவா பக்கம், இந்தியா பக்கம், ஆபிரிக்கா பக்கம் எல்லாவற்றையும் தாக்கியது. இது கட்டாயமாக தாக்கப்படவிருக்கும் கடல் கரையில் இருக்க வேண்டிய தேவை இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி எச்சரிக்கை கருவி நில நடுக்கத்தை வைத்து கண்டறியும் கருவியாக இருக்கும். மேலும் ஒரு சுனாமிதான், யாவா பக்கம், இந்தியா பக்கம், ஆபிரிக்கா பக்கம் எல்லாவற்றையும் தாக்கியது. இது கட்டாயமாக தாக்கப்படவிருக்கும் கடல் கரையில் இருக்க வேண்டிய தேவை இருக்காது.

 

மல்லையுரான் சொல்வது போல சுனாமி கண்டறியும் கருவி நில நடுக்கத்தை வைத்து சுனாமியை கண்டறிகிறது. இராணுவ கனரக வாகனங்கள் தொலைவில் வரும்போது அதையும் இந்த கருவிகள் கண்டறியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தென் பகுதி அரசியல் வாதிகளில் நான் மதிக்கும் இருவரில் ஒருவர் வைத்தியர் ஜயலத் ஜெயவர்த்தனா மற்றது மனோ கணேசன். வைத்தியர் ஜயலத்திட்கு ஆழ்ந்த அஞ்சலிகள். அவரது வைத்தியர் பெயர் மூலம் சண்டை நடந்த காலங்களில் கூட வன்னிக்கு சென்று மருத்துவ சேவைகள் செய்த ஒரு மனிதன். மிகவும் எளிமையானவர், எதுவித பாதுகாப்பு பந்தாவும் இன்றி போய் வருபவர். அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.