Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனைவிகள் பலவிதம்

Featured Replies

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான்.

அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.

ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டா:ள்.

ஒருநாள்...

அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.

தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.

அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போதுதான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள்.

ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

எந்த மனைவியை இனி நீங்கள் நன்கு நேசிக்கப்போகிறீர்கள்..?
 

 

http://www.gaanam.net/forums/showthread.php/29522-Arattai-Arangam-17/page7

‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’

  • கருத்துக்கள உறவுகள்

வீடு வரை உறவு,

வீதி வரை மனைவி,

காடு வரை பிள்ளை,

கடைசி வரை யாரோ?

 

-கவிஞர் கண்ணதாசன் 

 

இதுக்காகத் தான் ஒரு மனுசியோட காலம் தள்ள வேண்டுமென்று சொல்லிறது ! :icon_idea:

 

நான் என்னவோ சொல்லவர இந்த மனிசன் வேற என்னவோ விதமா விளங்கிக் கொள்ளுது... :o .

 

சுவாமி தப்பிலியானந்தா 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
கடைசியியாக  என்ன சொல்ல வருகிறீர்கள்??
 
நாலு மனைவியை வைத்து ஆன்மாவை கவனியுங்கள் என்பதுபோல் இருக்கிறது..???
  • கருத்துக்கள உறவுகள்

எப்பவாவது ஏதும் எழுதினாலும் நறுக்கென்று எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் தப்பிலி.

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து தெரியவருவது .. நான்கு கல்யாணம் கட்ட வேண்டும்.. அப்பத்தான் முதல் மனைவி கணவனுக்காக உயிரை விடவும் துணிவாள்.. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களால் ரொம்ப பாதிப்புக்கு உள்ளாகிவிட்டார். :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

 மனைவி அமைவதெல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியம்.  :D 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு இணைப்பு தப்பிலி.........

  • கருத்துக்கள உறவுகள்

1..2..3..4... என்று கட்டிக்கிட்டு... வாழ்ந்தால்.. உப்படித்தான் ஆகும்..! இதுக்குத் தான் சொல்லுறது.. தனிய வந்தமா.. தாகம் தணிச்சமா..(பூமியில் வாழனும் என்ற தாகம்.. வித்தியாசமான ஆக்கள் இங்க அதிகம்.. வித்தியாசமா எல்லாம் யோசிப்பாய்ங்க.. அதுதான் பிராக்கட்டுக்குள்ள விளக்கம் :lol: )  தனியப் போனமா என்றிருக்கனும்..! இங்க ஒன்றும் நிரந்தரமில்லை. இதில அங்க பக்கத்தில ஒன்று வேணுமாம்..!!!! இந்த முட்டாளை நம்பி 4 படு முட்டாள்கள் வாழ்ந்ததே பெரிய விசயம்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 மனைவி அமைவதெல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியம்.  :D 

அப்ப கணவன் அமைவது ஜென்மத்திலே ஏற்பட்ட புண்ணா??? 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனுக்கு ஒருத்தி ஒன்று வாழ்வதால் தமிழர்கள் எல்லோரும் நல்ல ஆன்மாவுடன் இருக்கவேண்டுமே!

இந்த இணைப்பில் உள்ள என்றுமே இளமையுடனும் தொணதொணக்காமலும் இருக்கும் வாழ்க்கைத் துணையை எவ்வாறு வடிவமைத்து உருவாக்குகின்றார்கள் என்று ஒரு காணொளி ஒன்றை அண்மையில் பார்த்திருந்தேன் :wub: . யாழின் சட்டங்கள் இணைக்க விடாது. <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு உதாரணத்துக்குக்கூட மனைவி எண்டு கதைக்கக்கூடாது போலை கிடக்கப்பா :o  தப்பிலி சொல்லவந்த விசயமே வேறை :icon_idea: .......அது ஒருபக்கம் கிடக்க......குண்டுச்சட்டிக்கை சனம் குதிரை ஓடுது :lol:

ஒரு உதாரணத்துக்குக்கூட மனைவி எண்டு கதைக்கக்கூடாது போலை கிடக்கப்பா :o  தப்பிலி சொல்லவந்த விசயமே வேறை :icon_idea: .......அது ஒருபக்கம் கிடக்க......குண்டுச்சட்டிக்கை சனம் குதிரை ஓடுது :lol:

 

இதைத்தான் நானும் நினைத்தேன். நன்றி கு.சாமி அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதையே  முற்றிலும் தவறானது

சுய  நோக்கங்களுக்கு வாழ்க்கையில் இடமில்லை

அப்படி தான் என  நினைப்பவர்கள் குடும்ப  வாழ்வுக்குள்  வரக்கூடாது

எதை விதைத்தாயோ அதுவே கிடைக்கப்பெறுவாய்

 

 

எனது அண்ணரின்   மகன்  திருமணம் செய்து விட்டுக்கு வந்தான்

நான் சொன்னேன்

திருமண  வாழ்வில் இரு களிமண்கள்  இருவரும்.

பெறுபேறு அழகிய  பாத்திரமாக வரவேண்டுமென்றால்

இருவரும் புரிந்து நடக்கணும்

இல்லாதுவிடில்......

வெறும் சகதி  தான் மிஞ்சும் என்று.

இது தான் வாழ்வு.

 

 மனைவி அமைவதெல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியம்.  :D 

 

 இரண்டு விடயங்கள்

1-  இதை  நாங்க  சொல்லணும்

2- நீங்க இருபகுதியையும் குறிப்பிடணும்

 

இதுவும்  சுயநலம் தான்   பாட்டி............ :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உதாரணத்துக்குக்கூட மனைவி எண்டு கதைக்கக்கூடாது போலை கிடக்கப்பா :o  தப்பிலி சொல்லவந்த விசயமே வேறை :icon_idea: .......அது ஒருபக்கம் கிடக்க......குண்டுச்சட்டிக்கை சனம் குதிரை ஓடுது :lol:

 

எல்லோரும் அதுக்குள்தான் நிற்கிறோம் நீங்கள்தான் இன்னமும் எட்டி நிட்கிறீங்கள் !
 
அதுதான் அவர் சுருக்கமா சொல்லுறார் ஆன்மாவை கவனிக்க வேண்டும் என்று..........
அப்படி என்றால் ........
திரும்பவும் ஒரு மூன்று நாலு மனைவி என்று கதை தொடங்கின இடத்துக்கு தானே அண்ணே போக வேண்டும். 
அதிலும் ஒன்று அடுத்தவனே தட்டி பறிக்கும்  அழகோடு வேற இருக்கிறது.
ஆன்மாவை திருப்தி படுத்த வேண்டாமா?? 

அப்ப கணவன் அமைவது ஜென்மத்திலே ஏற்பட்ட புண்ணா??? 

 

புண்ணுக்கு வந்த மண்! :wub:

 

Quote:"எந்த மனைவியை இனி நீங்கள் நன்கு நேசிக்கப்போகிறீர்கள்..?"

 

இந்த கேள்வியே தப்பு. நான்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டவை.

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து தெரியவருவது .. நான்கு கல்யாணம் கட்ட வேண்டும்.. அப்பத்தான் முதல் மனைவி கணவனுக்காக உயிரை விடவும் துணிவாள்.. :(:D

 

இன்னும்.... மூன்று கலியாணம் கட்ட வேண்டி இருக்குது.

சாதகத்தை... தூசி தட்டி எடுத்து, புறோக்கரிடம் கொடுக்க வேணும். :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்.... மூன்று கலியாணம் கட்ட வேண்டி இருக்குது.

சாதகத்தை... தூசி தட்டி எடுத்து, புறோக்கரிடம் கொடுக்க வேணும். :D  :lol:

பழைய ஏடு கொஞ்சம் முறியப் பார்க்கும்! கவனம்! :D

 

nadi_reader1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஏடு கொஞ்சம் முறியப் பார்க்கும்! கவனம்! :D

 

nadi_reader1.jpg

 

நீங்க... வேறை...

கலியாணம் கட்டின கையோடை... சாதகம் இனித் தேவைப்படாது என்று.... எறிந்து போட்டன் போலை கிடக்குது.

அது முதல்ல... கிடைக்க வேணுமே... :D

  • தொடங்கியவர்

இணையத்த்தில் வாசித்த பொழுது இதனை இங்கு பகிர வேண்டும் எனத் தோன்றியது. கருத்துக்களைப் பகிர்ந்தும் விருப்புக்களைத் தெரிவித்த உறவுகளிற்கும் மிக்க  நன்றி.

குமாரசாமி அண்ணன் சொன்ன மாதிரி பகிடிக்கும் 'மனைவி' என்ற சொல்லைப் பாவிக்கக் கூடாது. ரெம்ப பாதிப்பு ஏற்படுத்தும் சொல் போலக் கிடக்கு. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.