Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை நானும்....

Featured Replies

அடங்கிக்கிடக்கிறது.
என்றும் இப்படி கிடந்ததில்லை 
இறகுகோதும் ஓசையாவது கேட்கும்.
எதுவுமில்லை.

நேரம் அறியக்கூட பர்ப்பதுண்டு
காலம் தப்பியதில்லை 
ஒருபோதும்.

காலம்...??

எங்கே போயிருக்கும்,
இரைபோதாமல்
இன்னும் தூரம் போயிருக்குமோ 
இணைகூடி இடம் மாறி இருக்குமோ
இரையாகி இருக்குமோ 

இறகு உருத்தியும்,
எச்சமிட்டும், 
சுள்ளித்தடிகளை விழுத்தியும்,
தூண் விட்டத்தில் குறுகுறுத்து தலை புதைத்தும்,

எங்கே 
போய் தொலைந்திருக்கும்.
"சனியன்" என்று வாய்விட்டு 
திட்டவேண்டும் போல ஒரு உணர்வு.

காலம் 
காத்திருப்பை சேமிப்பதில்லை.

சிக்கிக்கிடந்த ஓரிரு இறகுகளும் 
தவறி அலைகின்றன.
எச்சங்கள் காய்ந்து துகளாகி 
இல்லாமல் போகின்றன. 
சந்தங்களால், 
குதூகலித்துக்கிடந்த கூட்டிலிருந்து 
வெறுமை பரவத்தொடங்குகிறது.

பரவுகின்ற வெறுமை 
தின்னத்தொடங்குகிறது 
ஒவ்வொன்றாக....
நான், 
இழந்து கொண்டிருக்கிறேன் 
கொஞ்சம் கொஞ்சமாக அந்த 
கூடுதிரும்பாத பறவையின் நினைவுகளை.

நாளை, 
நானும் கூடு திரும்பாவிட்டால் ...

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞனின் திறமை எல்லையறற வெளியில்  உலவுவதுதானோ?? நன்றாக உள்ளது கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை, 

நானும் கூடு திரும்பாவிட்டால் ...

 

இன்றும்  நான் நினைப்பது

5  வருடத்துக்குள் வீட்டுக்கு திரும்பி  வந்திடுவேன் என

அம்மாவிடம் சொல்லிவிட்டு அழுதழுது ரெயில் (யாழ்தேவி)   ஏறியது தான்.

 

முடிவு...............

என் பிள்ளையும் போகாது என்றநிலை......... :(  :(  :(

 

பழையதை கிளறிவிட்டீர்கள் நெற்கொழு......

 

கவிதைக்கு நன்றி....

  • கருத்துக்கள உறவுகள்

கூடு திரும்புதலின் ஏக்க உணர்வுகளை அற்புதமாகத் தந்திருக்கின்றீர்கள் நெற்கொழு. பாராட்டுக்கள் என்பது வெறும் சின்ன வார்த்தையாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளியை போட்டு முடித்துவிடாதீர்கள் தொடருங்கள். கூடு திரும்ப தவிக்கும் என் மனசுக்கு உங்கள் கவிதை ஒரு புத்துணர்வை தந்தது.

இதுதான் படைப்பாளியின் வெற்றி எழுத்தின் வெற்றி உணர்வுகளை சுண்டி விட்டு போகும் ஆழமான வரிகள் பாராட்டுக்கள் .

 

திரும்பா விட்டாலும் கூட்டை  குலையாமல் பாதுகாக்க வழி இருக்க என யோசிப்போம் ..!!

கூட்டைவிட்டு வந்து ஏழு வருஷம் ஆகிவிட்டது... :(

எங்களின் ஊர் என்பதற்கான அடையாளங்களும் கொஞ்சங்கொஞ்சமாய் மறைந்துவிடுமோ...??? என்ற ஏக்கம் எப்பொழுதும் அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது. கவிதையைப் படிக்கும்போது அந்த ஏக்கவுணர்வு இன்னும் அதிகமாகியது. மிக்க நன்றி நெற்கொழு.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் நாட்டை விட்டு வரும்போது, மீண்டும் திரும்பப்போவேன் என்கின்ற எண்ணம் எனக்குள் ஊறிப்போய்த்தான் இருந்தது.

 

காலம் நரைக்க நரைக்க நினைவுகள் மாத்திரம் நுரைத்துப்பொங்கியதே தவிர, எண்ணம் ஈடேறவில்லை.

 

 

ஏக்கம், தவிப்பு, எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் ஊற்றி வார்த்திருக்கின்றீர்கள் எங்களுக்காக ஒரு கவிதை!..

 

 

நன்று! நன்று!.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வார்த்தைகள் இலை.. தாய் மண்ணிண் பிரிவின் துயர் கவிதையை வாசித்துக்கொண்டுபோகும்போது மெல்ல மெல்ல மனதில் கவிழ்ந்து பெருஞ்சுமையாக பெருமூச்சுடன் படித்துமுடித்தேன்...அருமை..

  • கருத்துக்கள உறவுகள்

பரவுகின்ற வெறுமை 

தின்னத்தொடங்குகிறது 

ஒவ்வொன்றாக....

நான், 

இழந்து கொண்டிருக்கிறேன் 

கொஞ்சம் கொஞ்சமாக அந்த 

கூடுதிரும்பாத பறவையின் நினைவுகளை.

நாளை, 

நானும் கூடு திரும்பாவிட்டால் ...

 

கூடு திரும்புவோம் மீண்டுமெனத்தான் ஒவ்வொருவரும் புலம்பெயர்ந்து வந்தோம். இன்று கூடுமில்லை குடியிருந்த வீடுமில்லை நாடற்ற கோடி மனிதர்களின் வரிசையில் நாங்களும்  அனாதைகளாய்....! உலகில் நாடற்ற அத்தனை பேரின் உணர்வாகவும் உங்கள் எண்ணம். நன்றிகள் நெற்கொழுதாசன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழு உங்களின் கூட்டாளி தேடிக் கொண்டிருக்கிறாராம்.... யார் பாவம் இல்லாவிட்டாலும் அவர் பாவமில்லையா போய் வாங்கோ..... :D

 

இப்படித்தான் 21 வருடங்களுக்கு முன்னால விமானம் ஏறும்போது அம்மாவின் அழுத விழிகளும் அண்ணரின் அந்தரிப்பும் எப்படியும் சில வருடங்களில் என்னை மீட்பித்து அவர்களுடன் இணைத்துவிடும் என்ற நம்பிக்கையுடனேயே பயணிக்க வைத்தன... காலம் சில வருடங்கள் பல வருடங்களாக இன்னும் ஏக்கம் நிறைத்திருந்தாலும்அவை மனதில் அடியில் புதையுண்டு பதிலின்றி கிடக்கின்றன. இன்னும் வேரின் கொடிகள் அங்குதான் பரவிக்கிடக்கின்றன அந்த நம்பிக்கையிலேயே இன்னும் இந்தக்கூடு எண்ணங்களைச் சுமந்தபடி ஊசலாடுகிறது. 

 

உள்ளங்களுடன் பேசும் கவிஞன் எப்போதுமே வெற்றி பெறுவான் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

காலம் 

காத்திருப்பை சேமிப்பதில்லை.

சிக்கிக்கிடந்த ஓரிரு இறகுகளும் 

தவறி அலைகின்றன.

எச்சங்கள் காய்ந்து துகளாகி 

இல்லாமல் போகின்றன. 

சந்தங்களால், 

குதூகலித்துக்கிடந்த கூட்டிலிருந்து 

வெறுமை பரவத்தொடங்குகிறது.

பரவுகின்ற வெறுமை 

தின்னத்தொடங்குகிறது

 

கவிதைக்குப் பாராட்டுகள் நேற்கொழுதாசன்,

இந்தக் கவிதையைப் வாசித்தபோது ஏற்பட்டவலி சொல்லிவிட முடியாதது. மண்மீது பற்றுள்ள ஒவ்வொரு தமிழனின் மனமும் இப்படியான ஏக்கத்தோடும் வலியோடுமே பயணிக்கிறது.

 அகதி அந்தஸ்த்துக்கோரப் புறப்பட்ட என்னிடம் ஐயா கேட்ட கேள்வி, எப்போதையா வருவாய். நானவருக்குச் சொன்னென் 2வருடங்களில். ஆனால் மீண்டும் எட்டு வருடங்கள் கழித்துச் சென்றபோது அவரில்லை. அவரால் கட்டப்பட வீடும் பல குண்டுத் தாக்குதல்களோடு காட்சியளித்தது. அங்கே நின்ற ஒவ்வொரு மரங்களிலும் அவரையே கண்டேன். இனிஎப்போ போவது. இனியெப்போது சமாதான காலம் வரும்.... வருமா?

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

கற்களில் பொழிந்து வைக்க வேண்டிய வரிகள், நேற்கொழுதாசன்!

 

காலம் எல்லாவற்றையும் கரைத்து விடத்தானே போகின்றது!

 

ஆனால், எப்போது என்பது தான் எல்லோரதும் பிரச்சனையே!

 

இந்தியாவும் கரைந்து போகும்!

 

அந்த ஈரத்தில், சிங்களம் கூடச் சிதைந்து தான் போகப்போகின்றது!

 

கவிதைக்கு நன்றிகள்! 

காலம் 
காத்திருப்பை சேமிப்பதில்லை.

சிக்கிக்கிடந்த ஓரிரு இறகுகளும் 
தவறி அலைகின்றன.
எச்சங்கள் காய்ந்து துகளாகி 
இல்லாமல் போகின்றன. 
சந்தங்களால், 
குதூகலித்துக்கிடந்த கூட்டிலிருந்து 
வெறுமை பரவத்தொடங்குகிறது.  /////

 

 

உண்மைதான் காலம் காத்திருப்பைச் சேமிப்பதில்லை . ஆனாலும் நாங்கள் என்னதான் பிரமாதமாக காலம் என்ற உணவைச் சமைத்திருந்தாலும் அதில் ஒரு சிறியதுளி உப்பு கல்லு இல்லாவிட்டால் அந்த உணவே சுவையாக இருக்காது . ஆக காலத்தை அனுபவித்து சுவைத்தால் அது சுவையாக இருக்கும்  என்று நினைகின்றேன் . கவிதைக்குப் பாராட்டுக்கள்  :)  :)  .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.