Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெர்மனி இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழ் சிறுமி பலி நால்வர் படுகாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

சுவிசில் இருந்து ஜெர்மனியில் நடைபெறும் நிகழ்வொன்றிற்கு கலந்துகொள்ள சென்ற ஈழத்தமிழ் குடும்பத்தின் ஊர்திவிபத்திற்குள்ளானதில் சிறுமிஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெற்றோர் உறவினர்கள் படுகாயமடைந்துள்ளார்கள்.

சுவிஸ் நாட்டில் சூரிச் மாநிலத்தில் வசிசித்துவரும் சுந்தரலிங்கம் மங்கயக்கரசி தம்பதிகளின் புதல்வி பதுஜா சனி மதியம் அளவில் ஜெர்மனியில் இடம் பெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போது ஏதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பதுஜா சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் வானில் பயணம் செய்த பதுஜாவின் தந்தை மற்றும் உறவினர்கள் நால்வர் படுகாயமடைந்ததுடன் ஜெர்மனி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
  • கருத்துக்கள உறவுகள்

சிறுமிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ! காயத்துக்ககுள்லானவர்கள் இறையருளால்  பூரண நலம் பெற வேண்டும்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறுமிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ! காயத்துக்ககுள்லானவர்கள் இறையருளால்  பூரண நலம் பெற வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வயதில்.... பரிதாப மரணம்.
காயமுற்ற‌வர்கள்.. விரைவில் நலம் பெற வேண்டும்.

சிறுமிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ! காயத்துக்ககுள்லானவர்கள் இறையருளால்  பூரண நலம் பெற வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! ஈடு செய்யமுடியாத இழப்பு..!

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வயதில்.... பரிதாப மரணம்.

ஆழ்ந்த இரங்கல்கள்..! ஈடு செய்யமுடியாத இழப்பு..! 

காயமுற்ற‌வர்கள்.. விரைவில் நலம் பெற வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வயதில் பதுஜாவின் இழப்பு பரிதாபமானது. ஆழ்ந்த அனுதாபங்கள்.!

காயமுற்றோர் விரைந்து தேறப் பிரார்த்திக்கிறேன்.!

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையின் இழப்புப் பரிதாபமானது
ஆழ்ந்த இரங்கல்கள்
 

காயமடைந்த அனைவரும் குணம்பெற வேண்டுகின்றேன்  
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
காயமடைந்தவர்கள் விரைவில் உடல்நலம் பெற வேண்டும்.
 
பாலகிக்கு என் அஞ்சலிகள்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைக்கு எனது அஞ்சலிகள்!

 

காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

car-seat-safety.jpg

 

இந்த, விபத்து எப்படி நடந்தது என்று தெரியவில்லை.
பின் இருக்கையில் இருக்கும் ப‌ல‌ர்.... அதி விரைவு நெடுஞ்சாலையில் ப‌ய‌ணிக்கும் போது....
இருக்கைப் ப‌ட்டி அணியாம‌ல்.... ப‌ய‌ணிப்ப‌தை அநேக‌மாக‌ அவ‌தானித்துள்ளேன்.
அதிலும்... சிறுவ‌ர், சிறுமிய‌ருக்கு... இடுப்புப் ப‌ட்டி மிக‌மிக‌ முக்கிய‌ம்.
 

குழந்தைக்கு எனது அஞ்சலி.  காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.  

  • கருத்துக்கள உறவுகள்

முன்னம் யாழ்ப்பாணத்துக்க சுத்தி திரிஞ்சினம்.. இப்ப எல்லைக்கு எல்லை திரியினம். அதுவும் சும்மா இல்ல.. சாமத்திய வீட்டுக்கு நாலு பயணம்.. பேர்த்டே பார்ட்டிக்கு 3 பயணம்.. கலியாண வீட்டுக்கு 10 பயணம்.. சாறி வாங்க இரண்டு பயணம்.. நகை வாங்க 5 பயணம்.. மலிவா மீன்.. இறைச்சி வாங்க 8 பயணம்..  இப்படி.. என்று மாதத்திற்கு 30.. 40  எல்லை தாண்டு பயணம் மேற்கொண்டால்.. விபத்துக்கான வாய்ப்பு அதிகம் இருக்கத்தானே செய்யும். பயணங்களை குறைத்தால்.. இந்தக் குழந்தைகளின் வாழ்வு நீடிக்கும்.. பல வகையில்..! :rolleyes::(

Edited by nedukkalapoovan

பதின்னாங்குவயதுச் சிறுமி.  பூப்புனித நீராட்டு விழா நடைபெற்று சுமார் ஆறுமாதங்களகியிருக்கும்  என அறிய முடிந்தது. சிறுமியின் இழப்பால் வேதனையுறும் அனைவருக்கும் எனது அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.. காயத்துக்ககுள்லானவர்கள் இறையருளால்  பூரண நலம் பெற வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..! ஈடு செய்யமுடியாத இழப்பு..!

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைக்கு எனது அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வயதா? பதின்நான்கு வயதா? எது உண்மை......? உண்மை தெரிந்தாலும் போன உயிர் திரும்பவரப்போவதில்லை. ஆனாலும் ஏமாற்றங்கள் தவிர்க்கப்படுவது நல்லது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னம் யாழ்ப்பாணத்துக்க சுத்தி திரிஞ்சினம்.. இப்ப எல்லைக்கு எல்லை திரியினம். அதுவும் சும்மா இல்ல.. சாமத்திய வீட்டுக்கு நாலு பயணம்.. பேர்த்டே பார்ட்டிக்கு 3 பயணம்.. கலியாண வீட்டுக்கு 10 பயணம்.. சாறி வாங்க இரண்டு பயணம்.. நகை வாங்க 5 பயணம்.. மலிவா மீன்.. இறைச்சி வாங்க 8 பயணம்..  இப்படி.. என்று மாதத்திற்கு 30.. 40  எல்லை தாண்டு பயணம் மேற்கொண்டால்.. விபத்துக்கான வாய்ப்பு அதிகம் இருக்கத்தானே செய்யும். பயணங்களை குறைத்தால்.. இந்தக் குழந்தைகளின் வாழ்வு நீடிக்கும்.. பல வகையில்..! :rolleyes::(

 

வணக்கம் நெடுக்கு சாமி!

நாய்க்கு எங்கை கல்லெறிவிழுந்தாலும் முன்னங்காலை மட்டும் தூக்கிக்கொண்டு ஓடுமெண்டு ஊரிலை கதைப்பினம்....

அதுமாதிரித்தான் உங்கடை பின்னோட்டமும் இருக்கு......

 

ஒரு மனிதனுக்கு மரணம் என்பது எந்தரூபத்திலும் எங்கேயும் வரலாம் இதுதான் இயற்கையின் நியதி....இதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து  கொள்ளவெண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ! காயத்துக்ககுள்லானவர்கள் இறையருளால்  பூரண நலம் பெற வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்கு சாமி!

ஒரு மனிதனுக்கு மரணம் என்பது எந்தரூபத்திலும் எங்கேயும் வரலாம் இதுதான் இயற்கையின் நியதி....இதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து  கொள்ளவெண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன்.

 

இது எல்லா இடத்திலும் சரியல்ல. நாங்கள் ஆபத்துக்களை நோக்கிப் போவதைக் குறைத்தால் விபத்து மரணங்களைக் குறைக்கலாம். தொற்றுக்கான வாய்ப்புக்களைக் குறைத்தால்.. தொற்றுநோய் மரணங்களை குறைக்கலாம். அந்த வகையில் அநாவசிய பயணங்களைக் குறைத்து இயன்ற வரை.. உள்ளூரிலேயே தேவைகளை நிறைவு செய்வது.. விபத்துக்களுக்கான வாய்ப்பைக் குறைக்கும்.. மரணங்களைக் குறைக்கும்.

 

இறந்த பின் அனுதாபம் சொல்லி என்ன ஆகப் போகிறது. அதை விட.. இறப்பு ஒன்று நேரா வண்ணம் முயற்சிப்பதும்... அறிவூட்டுவதும் தான் சிறந்தது. இதனை தான் மருத்துவ உலகமும் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளது. :icon_idea:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சில தினங்களுக்கு முன் கண்டேன்.. ஒரு ஐந்து வயது மதிக்கத்தக்க குழந்தை வாகனத்தின் பின் இருக்கையில் இருந்து எழும்பி நின்று கண்ணாடி வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு போனது. :o

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு சொல்வதன் தார்ப்பரியம் இதுதான்.. வாகன காப்புறுதி எடுக்கும்போது,

"வருடத்துக்கு எத்தனை கி.மீ. தூரம் ஓடுவீர்கள்?"

"உங்கள் வதிவிடம்"

"வேலைத்தூரம் எவ்வளவு?"

போன்ற தரவுகளைக் கேட்பார்கள். அதிக தூரம் ஓடுபவர் அதிக காப்புறுதி கட்டுவார். அதிக நேரம் தெருவில் இருந்தால் விபத்திற்கான வாய்ப்புகளும் அதிகரித்துவிடுகின்றன..

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களின்  பயணங்கள்  மிகவும்  ஆபத்தானவை

 

இரவிரவாக வேலை செய்துவிட்டு

1000 கிலோமீற்றரை ஒரேயடியாக  எங்கும் நிறுத்தாமல் ஓடிமுடிப்பார்கள்

அத்துடன்

அன்றே நிகழ்வில் கலந்துவிட்டு

அடுத்த நாள் வேலைக்கு திரும்ப வருவதற்காக

மீண்டும் 1000 கிலோமீற்றர்........ :(

 

இசை  சொன்னது   போல்

காப்புறுதிக்காரனது கேள்விகளுக்கு இதைச்சொல்வோமாக இருந்தால்.............?? :(

  • கருத்துக்கள உறவுகள்

இசை சொன்னது போல்

காப்புறுதிக்காரனது கேள்விகளுக்கு இதைச்சொல்வோமாக இருந்தால்.............?? :(

சொல்லாமல் விட்டு பிறகு ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டால் பிறகு அதற்கு இன்னும் பத்து பொய்கள் சொல்ல வேண்டி வரும்.. மாட்டிக் கொண்டால் கொடுப்பனவுகள் தகுந்தபடி கிடைப்பது கடினமாகிவிடும்.. எந்தக் குடும்பத்துக்கு சொத்து சேர்க்க அயராமல் உழைக்கிறோமோ, அவர்களின் நல்வாழ்வையும் கேள்விக்குறி ஆக்குவதில் முடியலாம்.

மாதம் பத்து யூரோக்கள் / டொலர்கள் அதிகம் வந்தாலும் உள்ளதைச் சொல்லுவது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.