Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அளவெட்டி அபிவிருத்தி மன்ற புதிய நிர்வாகம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அளவெட்டி அபிவிருத்தி மன்றம் காலத்திற்கேற்ப மறுசீரமைப்பு செய்யப்பட்டிருப்பதுடன் அதற்கான புதியதொரு நிர்வாகக்குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது என அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் திரு.இ.இராஜகோபாலன் அவர்கள் எமது இணையத்திற்கு கருத்துத்தெரிவித்தார். அபிவிருத்தி மன்றத்தின் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்காக ஐந்துபேர் கொண்ட ஆட்சிக்குழு ஒன்று நிறுவப்பட்டிருப்பதுடன் மன்றத்தின் சர்வதேச இணைப்பாளராக திரு.மா.சந்திரகாந்தன் அவர்கள் தொடர்ந்தும் சேவையாற்றுவார் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (03.11.2013இல்) நடைபெற்ற மன்றத்தின் பொதுக்கூட்டத்தில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.

அபிவிருத்தி மன்றத்தின் புதிய தலைவராக வடமாகாண சபையின் பொதுநிர்வாகச் செயலக ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர் திரு.இ.இராஜகோபாலன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடப்பதிவாளர் திரு.இ.சர்வேஸ்வரா,

பொருளாளராக சண்டிலிப்பாய் பிரதேச செயலக சமூகசேவைகள் உத்தியோகத்தர் திரு.வே.சிவராஜா

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன்.

உபதலைவராக கல்வித்திணைக்கள அலுவலர் திரு.எஸ்.கணேந்திரன் அவர்களும்,

இணைச்செயலாளராக ஆசிரியர் கை.சரவணன் அவர்களும்

தெரிவு செய்யப்பட்டனர்.

இத்துடன் ஆறு நிர்வாக சபை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதுடன் கீழ்வரும் ஐந்து உபகுழுக்களும் நிறுவப்பட்டன.

01.கல்வி, சுகாதாரம் -அதிபர் – சதானந்தா வித்தியாசாலை

02. விளையாட்டு, கலை இலக்கியம், முன்பள்ளிக்கல்வி, – திரு.ப.பிரதீபன் -ஆசிரியர்)

03.விவசாயம் -திரு.மு.சின்னப்பு

04.கைத்தொழில், சமூக அபிவிருத்தி, -திருமதி ஞானசௌந்தரி செல்வராசா –ஓய்வுநிலை ஆசிரியை

05. கட்டடநிர்மாணம், தொழில் நுட்பம் -திரு.அ.மயூரன் - தொழில்நுட்ப உத்தியோகத்தர்)

மன்றத்தின் செயற்பாடுகளை நெறிப்படுத்தும் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக

திரு.ம.பத்மநாதன் (ஓய்வு நிலைப்பிரதி அதிபர், அருணோதயக்கல்லூரி)

திரு.சு.முருகையா (ஓய்வு நிலைக் கணக்காய்வாளர்)

திருசெ.இராஜகுலேந்திரன் (ஓய்வு நிலைப்பிரதி அதிபர், மகாஜனாக்கல்லூரி)

திரு.வை.சுப்பிரமணியம் (தலைவர்-மகாஜனசபை)

திருக.நாகலிங்கம் (ஓய்வு நிலை மருந்தாளர் ) ஆகியோர் செயலாற்றுவார்கள் எனவும் தலைவர் குறிப்பிட்டார்.

Thanks alavetty.ch

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் இப்பதிவை மேற்கொண்டதிலிலும், அலைமகள் இதனை விரும்புவதிலிருந்தும், உங்கள் சொந்த இடம் அளவெட்டி என எண்ணுகிறேன்.

திரு.வை.சுப்பிரமணியம் (தலைவர்-மகாஜனசபை) இவர் ஒரு விவசாயப் போதனாசிரியர். சரிதானா.? 

 

 

சுண்டல் இப்பதிவை மேற்கொண்டதிலிலும், அலைமகள் இதனை விரும்புவதிலிருந்தும், உங்கள் சொந்த இடம் அளவெட்டி என எண்ணுகிறேன்.

 

ஓமோம்  :D

 

 

திரு.வை.சுப்பிரமணியம் (தலைவர்-மகாஜனசபை) இவர் ஒரு விவசாயப் போதனாசிரியர். சரிதானா.? 

 

 

என்று தான் நினைக்கிறேன்

 

அது சரி நீங்கள் எந்த இடம்?

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை விட அளவெட்டி பிரதேச ஏரியா பொருப்பாளரா இருந்தவா சோ அக்கா சொன்னா கரெக்ட் ஆ தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் திருநெல்வேலி, என் அத்தான் அளவெட்டி..நான் விவசாயத்துறையைப் பின்பற்றியே கல்விகற்றேன். குண்டகசாலையில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் விவசாயத்துறை சம்பந்தப்பட்டவர்கள் நண்பர்களாக அறிமுகமானார்கள். அந்தவகையில் சுப்பிரமணியமும் எனக்கு அறிமுகமானவர். :) 

நான் திருநெல்வேலி, என் அத்தான் அளவெட்டி..நான் விவசாயத்துறையைப் பின்பற்றியே கல்விகற்றேன். குண்டகசாலையில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் விவசாயத்துறை சம்பந்தப்பட்டவர்கள் நண்பர்களாக அறிமுகமானார்கள். அந்தவகையில் சுப்பிரமணியமும் எனக்கு அறிமுகமானவர். :) 

 

 

ஓ............. அப்படியா? நல்லது! :D

 

திருநெல்வேலியில் எந்த றோட்?

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே வாழ்வதற்குச் சிறந்த நகரங்களின் பட்டியலில் அளவெட்டிக்கு எத்தனையாம் இடம்?? :D எப்படியும் முதல் பத்துக்குள் இருக்கும்.. :blink::wub:

உலகிலேயே வாழ்வதற்குச் சிறந்த நகரங்களின் பட்டியலில் அளவெட்டிக்கு எத்தனையாம் இடம்?? :D எப்படியும் முதல் பத்துக்குள் இருக்கும்.. :blink::wub:

 

 

எப்பவுமே முதலாம் இடம் தான்  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் அளவெட்டி இருப்பதால் தான் யாழ் மாவட்டத்துக்கே பெருமை

கலை

இலக்கியம்

தமிழ்

சமயம் என்று பலவற்றின் இருப்பிடம்

:D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்மாவட்டத்தில் அதிக ஆசிரியர்கள் இருந்த ஊர்களில் அளவெட்டியும் ஒன்று என்று சிலர் சொல்வதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஊரையே தெரியாதவன் யாரும் சொல்லியிருப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ............. அப்படியா? நல்லது! :D

 

திருநெல்வேலியில் எந்த றோட்?

 

இப்பதான் நாலு எழுத்துக்கூட்டி நானும் எழுத்தாளன் என்று யாழில் எழுத வெளிக்கிட்டனான். ஏதோ நீயும் எழுத்தாளன் தாண்டா! என்று எனக்கொரு விருதும் தர உறவுகள் விரும்புகினம். அதற்குள் எத்தனை நொள்ள கண்ணு, கள்ளக் கண்ணு, ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, கண்டக்கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு என்றெல்லாம் இருக்கினமோ தெரியாது..... இந்த நிலையில் நான் பலாலி றோடு, சந்தையிலிருந்து முதல்வீடு, பரமேஸ்வராக் கல்லூரியில் படித்தனான், அத்தான் அளவெட்டி கண்பரியாரிக்குச் சொந்தம் என்றெல்லாம் வெளிக்காட்டி, என்னைப்பற்றிய விபரம்தர நான் விரும்பவில்லை. :blink:  ஒருவேளை கண்ணேறு (திருஷ்டி) பட்டாலும் கண்ணேறு கழிக்க எனக்கு அம்மாவும் இப்போது இல்லை. மன்னிக்கவும். :huh:  :huh:  

இப்பதான் நாலு எழுத்துக்கூட்டி நானும் எழுத்தாளன் என்று யாழில் எழுத வெளிக்கிட்டனான். ஏதோ நீயும் எழுத்தாளன் தாண்டா! என்று எனக்கொரு விருதும் தர உறவுகள் விரும்புகினம். அதற்குள் எத்தனை நொள்ள கண்ணு, கள்ளக் கண்ணு, ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, கண்டக்கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு என்றெல்லாம் இருக்கினமோ தெரியாது..... இந்த நிலையில் நான் பலாலி றோடு, சந்தையிலிருந்து முதல்வீடு, பரமேஸ்வராக் கல்லூரியில் படித்தனான், அத்தான் அளவெட்டி கண்பரியாரிக்குச் சொந்தம் என்றெல்லாம் வெளிக்காட்டி, என்னைப்பற்றிய விபரம்தர நான் விரும்பவில்லை. :blink:  ஒருவேளை கண்ணேறு (திருஷ்டி) பட்டாலும் கண்ணேறு கழிக்க எனக்கு அம்மாவும் இப்போது இல்லை. மன்னிக்கவும். :huh:  :huh:  

 

 

:lol:  :lol: ஓக்கே ஓக்கே விளங்குது ரென்ஷன் வேண்டாம், கண்பரியாரியவையைத் தெரியும் எனக்கு.

 

பரமேஸ்வராக் கல்லூரியில் திரு சிவபாதசுந்தரம் அதிபராய் இருகேக்கையோ படித்தீர்கள். அவர் எனக்குச் சொந்தம்!

நானும் பரமேஸ்வராக் கல்லூரியில் படித்தனான் நான் படிக்கேக்கை பரமேஸ்வரா கல்லூரி என்ற பெயர் இல்லாமல் போய்விட்டது

:D  :D

  • கருத்துக்கள உறவுகள்

 

பரமேஸ்வராக் கல்லூரியில் திரு சிவபாதசுந்தரம் அதிபராய் இருகேக்கையோ படித்தீர்கள். அவர் எனக்குச் சொந்தம்!

 

 

கல்லூரி அதிபர் திரு. சிவபாதசுந்தரம் உங்களுக்குச் சொந்தம் என்றதால் எனது அந்தரங்க ஆதங்கத்தை காலம் கடந்தாலும் உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். அதிபரின் மூத்தமகள் சுபச்செல்வியும் நானும் ஒரே வகுப்பு. ஐந்தாம் வகுப்பில் நான்தான் மொனிற்றர். ஒரு நாள் வாத்தியார் வராதவேளை மாணவர்கள் என் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். குறும்பு செய்ய முனைந்தவர்களை குறுந்தடி கட்டுப்படுத்தியது (புற்றூளர்) அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. சுபச்செல்லி குழப்படி செய்தால் அடிப்பியா? என்ற கேள்வி எழுந்தது. நீதி, நேர்மைகளில் அசையாத நம்பிக்கை வைத்திருந்த வயது, யார் குழப்படி செய்தாலும் அடிவிழும் என்ற வீர வசனத்தை என் நா உதிர்த்தது. அதிபரின் மகள் என்ற திமிர் மேசையில் தாளமிட்டுக் கும்மாளம் போட்டது. கையை நீட்டு என்ற என் அதட்டலுக்கு அலட்சியமாகவே நீட்டப்பட்ட கையில் சுளீரென்று இரண்டு போட்டுவிட்டேன். சம்பவம் வாத்தியாருக்குப் போனது. மறுநாள் தூக்கிவிட்டார். என் பதவி பறிபோனது. அதிபரின் காதுகளுக்கு இது எட்டவில்லை என்று நினைக்கிறேன். எட்டியிருந்தால் வாத்தியாரைத் தூக்கியிருப்பார். அத்தனை நேர்மையும் கண்டிப்பும் நிறைந்தவர் அதிபர் திரு. சிவபாதசுந்தரம்.

 

இப்போது இதனைத் தெரிவிப்பதால் என்ன பலன் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். யேசு சிலுவையில் அறையப்பட்டது கொலை எனக் குற்றம் சாட்டி நீதிமன்றில் நீதிகேட்டு வழக்குத்தொடர முயற்சிகள் நடக்கும் அற்புதமான இன்றைய மக்களாட்சியில், காலம் கடந்தாலும் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உங்கள் சொந்தங்களிடம் வாதிட்டு எனக்கு நியாம் பெற்றுத் தருவீர்கள் என்ற நப்பாசைதான். :D  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

சுபச்செல்வி பஞ்சன் மகனிடம் தன் பவரை காட்டிவிட்டா.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பறிக்கப் பட்ட "கங்காணி" (மொனிற்றர்) பதவியை மீண்டும் பான்ஞ்சுக்கே வழங்குமாறு நான் வழி மொழிகிறேன்! அவ்வாறு வழங்காதவிடத்து மானஸ்தனான பான்ஞ் தீக்குளிக்கக் கூடும் எனவும் நான் எச்சரிக்கிறேன்! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

பறிக்கப் பட்ட "கங்காணி" (மொனிற்றர்) பதவியை மீண்டும் பான்ஞ்சுக்கே வழங்குமாறு நான் வழி மொழிகிறேன்! அவ்வாறு வழங்காதவிடத்து மானஸ்தனான பான்ஞ் தீக்குளிக்கக் கூடும் எனவும் நான் எச்சரிக்கிறேன்! ^_^

தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் பாஞ்சின் திறமைகளிலும்  நீதி மற்றும் நேர்மையில் அவர்காட்டிய முனைப்பிலும் கவனம் செலுத்தப்பட்டு

அன்று இழந்த கண்காணிப் பதவியை இன்று மீண்டும் பெற்றுக்கொள்கின்றார் :D  :lol: .

 

  • கருத்துக்கள உறவுகள்

பறிக்கப் பட்ட "கங்காணி" (மொனிற்றர்) பதவியை மீண்டும் பான்ஞ்சுக்கே வழங்குமாறு நான் வழி மொழிகிறேன்! அவ்வாறு வழங்காதவிடத்து மானஸ்தனான பான்ஞ் தீக்குளிக்கக் கூடும் எனவும் நான் எச்சரிக்கிறேன்! ^_^

 

பாஞ்சுக்காக நீங்க தீக்குளிப்பீங்களெண்டு பாத்தா பாவம் அந்தப் பிள்ளையை தீயில எரிக்கி ஊக்குவித்த உங்களை வன்மையாக கண்டிக்கிறேனாம். :lol:

சுண்டலின் ஊர்காரர்களுக்கு வாழ்த்துக்கள். அளவெட்டியில் ஒரு புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவானோ மிருதங்க வித்துவானோ இருந்தார். பெயர் மறந்து விட்டது. 

ஓரிரவில் நிறைய தோட்டங்களின் ஊடாக சைக்கிள் பயணம் செய்திருக்கிறேன்.

 

அபிவிருத்தி மன்றத்தில் சுண்டலுக்கு ஏதும் பதவி கொடுத்தார்களா? :D

  • கருத்துக்கள உறவுகள்

அளவெட்டி என்றதும்  எனது நினைவலைகள் ....
80 திற்கு முன்னர் அருணோதயாக் கல்லூரியின் பாதை,
 

மிகவும் ஒடுங்கலாகவும் புளுதிமண் நிறைந்ததாகவும் இருந்தது.
வெயிற்காலத்தில் எப்படிக் குழந்தைகள் அந்த வழியில் நடந்தார்கள் என்பதும்..

 

பிரதான வீதியின் ஒரு வளைவில் ஒரு பெரிய மரத்தின் கீழ்க் கூடும் சந்தையும்...

 

அளவெட்டியப்பா என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் பெரிய

முந்திரித் தோட்டத்திற்கு உரிமையான நல்ல உயர்ந்த மனிதரும்  தான். :D

 

அளவெட்டி அபிவிருத்திச்சபை கல்லூரியின் பாதையை

ஒழுங்குபடுத்தியிருப்பர்கள் என நினைக்கின்றேன் :D .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் பாஞ்சின் திறமைகளிலும்  நீதி மற்றும் நேர்மையில் அவர்காட்டிய முனைப்பிலும் கவனம் செலுத்தப்பட்டு

அன்று இழந்த கண்காணிப் பதவியை இன்று மீண்டும் பெற்றுக்கொள்கின்றார் :D  :lol: .

 

 

வாழ்த்துக்கள் பாஞ்ச்! இனி CV யில பயமில்லாம "கண்காணி (பரமேஸ்வராக கல்லூரி)" எண்டு போடுங்கோ! :D

(வாங்கின பெற்றோலை நான் காருக்கு ஊத்தவே?)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அளவெட்டியென்றவுடன் முதலில் ஞாபகத்திற்கு வருபவர் நாதஸ்வர வித்துவான் பத்மநாதன் அவர்கள்.
அப்புறம் வடக்கும்தெற்கும் நாடகம்,புலவர் சவுண்ட்சேவீஸ்.....அதிலும் வடக்கும்தெற்கும் நாடகம் இந்தியசினிமாக்களையே மிஞ்சுமளவிற்கு காட்சியமைப்பும்,நடனங்களும்,வேகமும்,கதையமைப்பும்,நடிப்புக்களும் நாடகவரலாற்றில் பெருமைக்குரியவையாக இருந்தன.
  • கருத்துக்கள உறவுகள்

 

அளவெட்டியென்றவுடன் முதலில் ஞாபகத்திற்கு வருபவர் நாதஸ்வர வித்துவான் பத்மநாதன் அவர்கள்.
அப்புறம் வடக்கும்தெற்கும் நாடகம்,புலவர் சவுண்ட்சேவீஸ்.....அதிலும் வடக்கும்தெற்கும் நாடகம் இந்தியசினிமாக்களையே மிஞ்சுமளவிற்கு காட்சியமைப்பும்,நடனங்களும்,வேகமும்,கதையமைப்பும்,நடிப்புக்களும் நாடகவரலாற்றில் பெருமைக்குரியவையாக இருந்தன.

 

 

மதிப்புக்குரிய குமாரசாமி அவர்களே தவில் வித்துவான் மாமேதை உயர்திரு தட்சனாமூர்த்தி அவர்களை மறந்தது என்ன?? :o

 

http://www.alaveddy.ch/?p=12160

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தியார்!. மிக்க மிக்க நன்றி!!. காலம்கடந்தும் எனக்குக்கிடைத்த நீதியானது ஈழத்தமிழருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டியுள்ளது. :wub:

 

புத்தன் நீங்கள் இன்பச்செல்விபற்றிக் கதை எழுதுங்கள். <_<

 

மொசெபொத்தேமியா சுமேரியர் நீங்கள் இன்பச்செல்வன் பற்றிக் கதை எழுதுங்கள். ^_^

 

அடுத்த கங்காணிமார் நீங்கள்தான். :icon_idea:  :D 

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவுமே முதலாம் இடம் தான்  :D

 

அதை நீங்களே சொல்லாகக் கூடாது நண்பி. நாங்கள் சொல்லவேணும். :D

கல்லூரி அதிபர் திரு. சிவபாதசுந்தரம் உங்களுக்குச் சொந்தம் என்றதால் எனது அந்தரங்க ஆதங்கத்தை காலம் கடந்தாலும் உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். அதிபரின் மூத்தமகள் சுபச்செல்வியும் நானும் ஒரே வகுப்பு. ஐந்தாம் வகுப்பில் நான்தான் மொனிற்றர். ஒரு நாள் வாத்தியார் வராதவேளை மாணவர்கள் என் கட்டுப்பாட்டில் இருந்தார்கள். குறும்பு செய்ய முனைந்தவர்களை குறுந்தடி கட்டுப்படுத்தியது (புற்றூளர்) அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. சுபச்செல்லி குழப்படி செய்தால் அடிப்பியா? என்ற கேள்வி எழுந்தது. நீதி, நேர்மைகளில் அசையாத நம்பிக்கை வைத்திருந்த வயது, யார் குழப்படி செய்தாலும் அடிவிழும் என்ற வீர வசனத்தை என் நா உதிர்த்தது. அதிபரின் மகள் என்ற திமிர் மேசையில் தாளமிட்டுக் கும்மாளம் போட்டது. கையை நீட்டு என்ற என் அதட்டலுக்கு அலட்சியமாகவே நீட்டப்பட்ட கையில் சுளீரென்று இரண்டு போட்டுவிட்டேன். சம்பவம் வாத்தியாருக்குப் போனது. மறுநாள் தூக்கிவிட்டார். என் பதவி பறிபோனது. அதிபரின் காதுகளுக்கு இது எட்டவில்லை என்று நினைக்கிறேன். எட்டியிருந்தால் வாத்தியாரைத் தூக்கியிருப்பார். அத்தனை நேர்மையும் கண்டிப்பும் நிறைந்தவர் அதிபர் திரு. சிவபாதசுந்தரம்.

 

இப்போது இதனைத் தெரிவிப்பதால் என்ன பலன் என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். யேசு சிலுவையில் அறையப்பட்டது கொலை எனக் குற்றம் சாட்டி நீதிமன்றில் நீதிகேட்டு வழக்குத்தொடர முயற்சிகள் நடக்கும் அற்புதமான இன்றைய மக்களாட்சியில், காலம் கடந்தாலும் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உங்கள் சொந்தங்களிடம் வாதிட்டு எனக்கு நியாம் பெற்றுத் தருவீர்கள் என்ற நப்பாசைதான். :D  :lol: 

 

உது சரியான பேராசை அன்றி வேறொன்றும் இல்லை. :lol:

 

தவில் வித்துவான் தத்தனா மூர்த்தி அவர்கள் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமணம் செய்ததுதான் அளவெட்டியில்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.