Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்னணிகளின் போர்; ஒருவர் அடித்துக் கொலை

Featured Replies

பொன்னணிகளின் போர்; ஒருவர் அடித்துக் கொலை

பொன்னணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களால் சென்.பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவன் மைதானத்ததில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=670072743215659485#sthash.NubTFNVs.dpuf

  • Replies 51
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

So sad

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னையன்களின் போர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஒரு பொய்யான செய்தியாஇருக்க உலகத்தில் இருக்கிற எல்லா கடவுளையும் வேண்டுகிறேன்....என்னால் நம்ப முடியாமல் இருக்கிறது:(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த காலத்தில் இது ரொம்ப அவசியம்  :(

 

 

பொன்னணிகளின் போர்; 

 

உதயனுக்கு வேறு தலைப்பு கிடைக்கவில்லையா ?

  • தொடங்கியவர்

கவலையான செய்தி :(

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையாயின் , இவர்கள் மாணவர்களா ரவுடிகளா..! <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியப்பட  என்ன இருக்கு

 

நாங்கள் இனி  இதற்குத்தான் லாயக்கு............. :(  :(  :(

  • தொடங்கியவர்

இறந்தவர் 40 வயதான ஜெயரட்ணம் டினோஷன் அமலன்  1 பிள்ளைக்கு தந்தை என்று முகபுத்தக செய்தியில் இருக்கு. இவர் st பற்றிக் பழைய மாணவன்

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டுப் போட்டியில்... கூட கொலையா?
தமிழன்  காட்டுமிராண்டிகள் மாதிரி நடக்கத் தொடங்கி விட்டார்களா...
எல்லாத் தமிழனையும்.... தலை குனிய வைத்து விட்டார்களே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பக்கத்தில் போட்டியை நடத்தவிடாமல் குழப்புகிறார்கள் மற்ற இடத்தில் கொலை செய்கிறார்கள்

பொன்னையன்களின் போர்

 

மிகசரியான கருத்து.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்

'பொன் அணிகளின் போர்": சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவன் மோதலில் பலி


பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையில் இன்று நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியில்  ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி, இன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

50 பந்து பரிமாற்றங்களைக் கொண்ட இப் போட்டியில் 40 பந்து பரிமாற்றம் முடிவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலிலையே குறித்த இளைஞன் மைதானத்திலுள் வைத்து  அடித்துப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகொலையானவர் பிரதான வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24 ) என்னும் ஒரு பிள்ளையின் தந்தையார் ஆவார்.

மோதல் சம்பவம் நடைபெற்ற மைதானத்தில் பொலிசார் கடமையில் இருந்த போதிலும் மோதலை தடுக்காமல் அவர்கள் வேடிக்கை பார்த்ததாகவும் மைதானத்தில் இருந்து 200 மீற்றர் தூரத்திலையே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் அமைந்திருந்த போதிலும் மேலதிக பொலிசாரை அழைத்து மோதலை தடுக்காமல் இருந்ததாவும் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களால் குற்றம் சாட்டப்படுகின்றது.

அதேசமயம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் பொலிசாரின் அசண்டையீனத்தால் தான் இந்த கொலை நிகழ்ந்ததாகவும் குறித்த பொலிசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அதற்கு ஊடகங்களே துணைபுரிய வேண்டும் என கோரி யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை காரியாலயம் முன்பாக சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அதேவேளை யாழில் நடைபெற்று வரும் மற்றுமொரு துடுப்பாட்ட போட்டியான 'வடக்கின் பெருஞ் சமர்'' என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரி,யாழ்.புனித பரியோவான் கல்லூரி அணிகளுக்கிடையிலான 108 ஆவது துடுப்பாட்ட  போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையானதால் ஏற்பட்ட குழப்ப நிலையினால் போட்டி, முடிவு எதுவுமின்றிக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/?q=node/362160

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்.

முப்பது வருட யுத்தம் விட்டு சென்றத்தில் இதுவும் ஒன்று .

உயிர் இழப்பை விட  உளவியல்ரீதியான  தாக்கம் தான் யுத்தத்தின் கொடிய வடு  .

யாழில கூட பலர் உலகெங்கும் நடக்கும் அழிவுகளை பார்த்து சந்தோசப்படுகின்றார்கள் அதுவும் ஒரு வித உளவியல் தாக்கம் தான் Post-traumatic Stress (PTSD).

பெரும் போர்,சமர் என்பதற்கு இப்போதுதான் சற்றேனும் அர்த்தம் கிடைத்திருக்கின்றது.

ஜெயரட்ணம் டினோசன் அமலனுக்கு வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில் இவ்வாறு எதுவும் நிகழவில்லை. இது போராட்ட காலத்துக்கு முந்தைய சண்டியர் வரலாற்றின் மீளுகை. கொழும்பு சிங்கள காடை காலாசாரத்தின் பரப்புகை.றொயல் தோமியன் போட்டிகளில் இது சாதாரணம்.இங்கு சிலருக்கு புலி போபியா.

தமிழீழ காவல்துறை மீண்டும் வரணும் .....................இறந்த மாணவனுக்கு அஞ்சலிகள் .......... :(

முப்பது வருட யுத்தம் விட்டு சென்றத்தில் இதுவும் ஒன்று .

உயிர் இழப்பை விட  உளவியல்ரீதியான  தாக்கம் தான் யுத்தத்தின் கொடிய வடு  .

யாழில கூட பலர் உலகெங்கும் நடக்கும் அழிவுகளை பார்த்து சந்தோசப்படுகின்றார்கள் அதுவும் ஒரு வித உளவியல் தாக்கம் தான் Post-traumatic Stress (PTSD).

 

தமிழர்களிலை யாருமே போரை விரும்பி ஏற்றுக்கொள்ள இல்லை...  போர் நிறுத்தங்களையும் சமாதான உடன்படிக்கைகளையும்  இந்திய அமைதிபடையையும் கொண்டாடி மகிழ்ந்தார்கள் எண்டதுக்கு நிறையவே  ஆதாரங்கள் இருக்கு...     83 ம் ஆண்டுக்கு பிறகு ஊரிலை இல்லாத உங்களுக்கு இது  தெரிந்திருக்க வகை இல்லை... 

 

நடந்த போருக்கும்  இதுக்கும் முடிச்சு போடுவது உங்களை நீங்கள் ஏமாற்ற மட்டும்மே போதுமானது...  அறிவுள்ள எல்லாருக்கும் புரியும் விடயம் எண்டு ஒண்று இருக்கு... 

 

மனிதனிலை கோபமும் அழுக்கையும்  ஏமாற்றப்படும் போதும் வஞ்சிக்கபடும் போதும் தான் அடக்க முடியாமல் வெளியில் வருக்கிறது...   அதில் வரும் கோபம் காட்டப்படும் இடங்களை தெரிவு செய்வதில் வரும் பிரச்சினைகளே இது... 

Edited by தயா

நாங்களும் பதினைந்து வருடங்கள் பிக் மாட்ச் பார்த்து விட்டுத்தான் நாட்டை விட்டு வெளிக்கிட்டனாங்கள்  ,ஆகக்கூடியது ஒரு சின்ன அடிபிடி .கொலை என்பது நினைக்கமுடியாத ஒரு விடயம் அந்த நாட்களில் ,

யுத்தம் என்பது உலக பொதுவிடயம்,அதன் பின் விளைவுகள் இன்னமும் ஆராய்ந்து கொண்டே இருக்கின்றார்கள்  .

யுத்தத்தை எந்த மனித இனமும் விரும்பி ஏற்கவில்லை ,

அது சரி நான் யுத்தம் என்று எழுதியவுடன் உடனே ஏன்  புலிகளை நினைக்கின்றார்கள் .

இதுதான் தமிழர்களின் இயற்கையான குணம்.

சிங்களக் காவல் துறையினர் தடுக்கவில்லை என்று ஒப்பாரிவைப்பதும், சிங்களக் காடையர்கள் குணம் என்பதும்,புலிகள் காலத்தில் நடக்கவில்லை என்பதும்,போரினால் ஏற்பட்ட உளவியல் தாக்கம் என்பதும் தமிழர்களின் இயற்கையான காட்டுமிராண்டித் தன்மையையும் அதிலிருந்து மீள முடியாது என்ற உண்மையையும் மறைக்க முற்படும் செயல் மட்டுமே.

இந்த இயற்கையான காட்டுமிராண்டிக்குணத்தில் முப்பது வருடம் போராட்டம் நடந்தது.

போராட்ட காலத்துக்கு முன்பாகவும் சாதியாக மதமாக பிரதேசமாக அடக்கி ஒடுக்கி அளையாள் அடித்துக் கொன்றார்கள். போராட்ட காலத்திலும் இயக்கங்களாக குழுக்களாக மதமாக பிரதேசமாக இனத்துக்குள் இரைதேடினார்கள். போராட்டம் முடிந்தபின்னும் அனைத்தும் தொடர்கின்றது.

கொலைசெய்யும் வடிவங்கள் மாறாலாம் ஆனால் காட்டுமிராண்டிக்குணம் மாறாது என்பதுக்கேற்ப முன்பு கத்தியாய் குத்தினார்கள் கம்பால் அடித்தார்கள் பின்னர் நவீன ஆயுதங்கள் வந்ததும் அதனால் சுட்டார்கள் அது பறிக்கப்பட்டதும் மீள கத்தியால் குத்துவார்கள் கம்பால் அடிப்பார்கள் தூக்கில் தொங்கவிடுவார்கள். இது தமிழர்களின் இயற்கையான வழித்தடம். இதில் மாற்றம் என்பது வராது.

இவ்வாறான காட்டுமிராண்டிக்குணங்களையே போர் என்கின்றார்கள் சமர் என்கின்றார்கள் தேசீயம் என்கின்றார்கள்.

நாங்களும் பதினைந்து வருடங்கள் பிக் மாட்ச் பார்த்து விட்டுத்தான் நாட்டை விட்டு வெளிக்கிட்டனாங்கள்  ,ஆகக்கூடியது ஒரு சின்ன அடிபிடி .கொலை என்பது நினைக்கமுடியாத ஒரு விடயம் அந்த நாட்களில் ,

யுத்தம் என்பது உலக பொதுவிடயம்,அதன் பின் விளைவுகள் இன்னமும் ஆராய்ந்து கொண்டே இருக்கின்றார்கள்  .

யுத்தத்தை எந்த மனித இனமும் விரும்பி ஏற்கவில்லை ,

அது சரி நான் யுத்தம் என்று எழுதியவுடன் உடனே ஏன்  புலிகளை நினைக்கின்றார்கள் .

 

30 வருடத்துக்கும் முன்னம் அதுவும் போர் ஆரம்பிக்க முன்னம் ஊரிலை கொலைகளே நடக்க இல்லை எண்டுறீயளோ....??  இல்லை ஊரும் ஊரும் அடிபட்டு சாக இல்லை எண்டுறீங்களோ...???  

 

உங்கட காய்ச்சல் இருக்கு பாருங்கோ ...  !!  மெய் சிலிர்க்குது.. 

 

உங்கட ஊர்க்காறரும்  ஆனைக்கோட்டையர்களும் போட்ட சண்டையே ஊர் பிரசித்தம் அண்ணோய்... 

Edited by தயா

முப்பது வருட யுத்தம் விட்டு சென்றத்தில் இதுவும் ஒன்று .

உயிர் இழப்பை விட  உளவியல்ரீதியான  தாக்கம் தான் யுத்தத்தின் கொடிய வடு  .

யாழில கூட பலர் உலகெங்கும் நடக்கும் அழிவுகளை பார்த்து சந்தோசப்படுகின்றார்கள் அதுவும் ஒரு வித உளவியல் தாக்கம் தான் Post-traumatic Stress (PTSD).     

 

 

நீங்கள் பல்கலைக்கழங்களில் செய்து முடித்த உங்கள் உளவியல் Ph.D ஆராய்ச்சிகளையும் கொஞ்சம் யாழிலை போட்டு விடுங்கோ. நாங்களும் படித்துத்

தெரிந்து கொள்கிறோம்.  

ஐந்து வருடங்களாக வராத PTSD, இப்ப மட்டும் வந்ததாக்கும்.  முள்ளிவாய்க்காலிலை அந்த அழிவைக் கண்முன்னால் பார்த்த மக்களுக்கும் போராளிகளுக்கும் வராத அந்தப் PTSD, யாழ்ப்பாணத்திலை வாழ்ந்து வந்த ஒருவருக்கு ஒரு விளையாட்டுப் போட்டியிலை மட்டும் வந்ததாக்கும்

 

 

 

உங்களின் இந்தப் பதிலிலிருந்தே  உங்களின் காழ்ப்புணர்ச்சி மிகத் தெளிவாகத் தெரிகிறதுஇதற்குள்ளும் புலிகளைக் கொண்டு வந்து செருகும் உங்களைப் போன்ற குரூர குணமுள்ளவர்களால்தான் எமக்கு இந்த நிலைஎமது இந்த நிலைக்கு நீங்கள்தான் முன்னோடிகளாக இருந்திருக்கிறீர்கள் என்பது யாழைப் பார்க்கும் பலருக்குத் தெரியும்.    உங்களைப் போன்றவர்கள் புலிகளுக்குள்  ஊடுருவித்தான் அது விருட்சமாக வளர்ந்து அவர்களை அழித்தது.   ஆனால், நீங்கள் கொஞ்சத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டு பீலா விட்டுக் கொண்டு திரிகிறீர்கள்பீலா விடுவது வேறு. செயற்பாட்டில் செய்து காட்டுவது வேறு.  தமிழர்களுக்கு உதவி செய்வதற்கு உங்களுக்கான வாய்ப்பு வந்து ஐந்து வருடங்களாகி விட்டது. செய்திருக்க வேண்டியதுதானேஇதுவரை என்னென்ன முயற்சிகள் எடுத்தீர்கள்?    நீங்கள் செய்ய உத்தேசித்துள்ளவற்றையாவது கொஞ்சம் கூற முடியுமா?

 

புலிகள் பிழை செய்யவில்லை என்று நான் கூறவில்லை.   அதேநேரத்தில் அவர்கள் செய்த நன்மைகள் அந்தப் பிழைகளைச் சிறியதாக்கி விட்டது.  புலிகளின் நாமம் இல்லாமல் உங்களால்கூட வாழமுடியாது என்பதைத்தான் உங்களின் இந்தப் பதில் சொல்லி நிற்கிறது.  நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் புலிகளின் புகழையோ சாதனைகளையோ இந்த உலகம் மறக்காது.   ஒருவனோடு ஒருவன் நேரடியாக மோதினால்தான் அது நியாயமான போராட்டம்.  ஆனால், புலிகளை எப்படித் தோற்கடித்தார்கள் என்பது இப்போது உலகே அறிந்த உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடத்துக்கும் முன்னம் அதுவும் போர் ஆரம்பிக்க முன்னம் ஊரிலை கொலைகளே நடக்க இல்லை எண்டுறீயளோ....??  இல்லை ஊரும் ஊரும் அடிபட்டு சாக இல்லை எண்டுறீங்களோ...???  

 

உங்கட காய்ச்சல் இருக்கு பாருங்கோ ...  !!  மெய் சிலிர்க்குது.. 

 

உங்கட ஊர்க்காறரும்  ஆனைக்கோட்டையர்களும் போட்ட சண்டையே ஊர் பிரசித்தம் அண்ணோய்... 

 

பாவம் விடுங்கோ

அவரது கண்களுக்கு  தெரிவது புலி  வால் மட்டுமே...

 

70 களில் எத்தனை குரூப்புக்கள் யாழில் இருந்தன  என்பதைச்சொன்னால்

புலிகளால் தான் வன்முறை  உருவாகியது என்ற எடுதுகோள் குறிதவறிவிடும்.... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.