Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள்
news
யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ சங்கிலியன், பண்டாரவன்னியன், எல்லாளன் ஆகிய தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்படவுள்ளன. இரண்டாம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சிவகாமி சித்திர கோட்டம் சிற்பாலயத்திலேயே இச் சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
 
சிற்பங்களை உருவாக்கியுள்ள சிற்பக்கலைஞர் செல்லையா சிவப்பிரகாசத்திடம் இது குறித்து கேட்டபோது; ""மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ சங்கிலியன், பண்டார வன்னியன், எல்லாளன்  ஆகிய தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் வைப்பதால் வரலாறு பேணப்படுகின்றது. அத்தகைய ஒரு செயலுக்காக எனது சிற்பங்கள் பயன்படுத்தப்படுவது மிக்க மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
 
குறித்த மூன்று சிற்பங்களையும் வடிவமைக்கத் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகின்றன. யாழ்.மாநகர முதல்வர் ப.யோகேஸ்வரியின்  வேண்டுகோளுக்கு இணங்க  இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சிலைகள் வைப் பதற்குரிய வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 
யாழ்.புல்லுக்குளம், கோட்டையின் சுவர்ப் பகுதி ஆகியவற்றிலும் வரலாற்றைப் பறைசாற்றும் சிற்பங்களை வைப்பதற்கான எனது ஆர்வத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வெளிப்படுத்தியுள்ளேன். எனக்குள்ள மகிழ்ச்சி நான் 1000 கலைஞர்களை உருவாக்கியுள்ளேன்''  என்பதுதான். உற்பத்திப் பொருள்களின் விலை மற்றும் கூலி என்பன அதிகரித்துள்ள நிலையில் நிர்ணயித்த தொகையை விட நிதி அதிகரிக்கும் என்றார்.  
 
31 மார்ச் 2014, திங்கள் 11:05 மு.ப
  • கருத்துக்கள உறவுகள்
சிற்பங்களை உருவாக்கியுள்ள சிற்பக்கலைஞர் செல்லையா சிவப்பிரகாசத்திடம் இது குறித்து கேட்டபோது; ""மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ சங்கிலியன், பண்டார வன்னியன், எல்லாளன்  ஆகிய தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் வைப்பதால் வரலாறு பேணப்படுகின்றது. அத்தகைய ஒரு செயலுக்காக எனது சிற்பங்கள் பயன்படுத்தப்படுவது மிக்க மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
 

 

 

எனது கருத்தின்படி, பண்டாரவன்னியனை யாழ்ப்பாணம் கொண்டு வருவதனால், வரலாறு பேணப்படவில்லை!

 

வரலாறு திரிக்கப்படுகின்றது! பண்டாரவன்னியனின் சிலை இருக்கவேண்டிய இடம், வவுனியா மற்றும் கற்சிலைமடு!

 

எல்லாளனை யாழ்ப்பாணம் கொண்டு வருவதும் இதைப்போன்றதே!

 

இலங்கை முழுவதையும் ஆண்ட அவனது, சிலை இருக்கவேண்டிய இடம், அவனது இராசதானியாக மிளிர்ந்த, அனுராதபுரமே!

 

புத்தர் யாழ்ப்பாணம் வருவதனால், வரலாறு விரிக்கப்படுகின்றது! :o

 

அநேகமாகச் சங்கிலியன், இந்த முறை சத்தகப் காம்புடன் நிற்பான் என்பதே, எனது எதிர்பார்ப்பு! :icon_mrgreen:

எப்படியோ தமிழ் மன்னர்களின் சிற்பங்கள் வைக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. யார் செய்தாலும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் புங்கை. அவர்கள் ஏம் முட்டாள் தனங்களைப் பயன்படுத்தியே தம் காரியத்தை நாசூக்காகச் சாதிக்கின்றனர். கற்சிலை மடுவில் நினைவுச் சின்னத்தை உடைத்தவர்கள் அங்க்கேல்லோ கட்டியிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் புங்கை. அவர்கள் ஏம் முட்டாள் தனங்களைப் பயன்படுத்தியே தம் காரியத்தை நாசூக்காகச் சாதிக்கின்றனர். கற்சிலை மடுவில் நினைவுச் சின்னத்தை உடைத்தவர்கள் அங்க்கேல்லோ கட்டியிருக்க வேண்டும்.

குளக்கோட்ட மன்னன் கட்டிய, திருகோணமலையில் குடிகொண்டிருக்கும், சிவனின் சிலை!

1.jpg

 

 

 

எனக்கென்னவோ, எங்கட ஊர்க் கண்ணகியம்மன் கோவிலில, 'அசுர வாகனம்' எண்டு ஒண்டு இருந்தது! அதில் ஏறி சுவாமி வீதிவலம் வருவார்! அந்த நினைவு தான், சிவனைப்பார்க்கும் போது எனக்கு வருகின்றது!

k53.jpg

 

 

ரிஷிகேசத்தில் இருக்கும் சிவன் எப்படியிருக்கிறான் என்று பாருங்கள்!

Shiva-290x300.jpg

இவர்கள் வானரங்களின்(இனவெறியர்கள் படையினரிடமிருந்து பாதுகாக்க முடியுமா சிலைகளை? தமிழ்மன்னர்களின் சிலைகளை விட்டுவைப்பார்களா? தமிழ்மன்னர்களின் தெருக்கூத்துக்கள், நாடங்களே நடத்த விடமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது மன்னர்களின் பூதவுடல்கள்  புதைக்கப்பட்ட இடங்களை உழுது அவற்றை அழித்தபடி....

சிங்களம் எங்களுக்கு பழைய படம் காட்ட முனைகிறார்கள்

நீங்கள் எவருடைய  படங்களை

எங்கும் வைக்கலாம்

ஆனால் எங்கள் மனங்களில் சிலருடைய  படங்கள் உண்டு

அது அந்த ஊருக்குள் வைக்கப்படும்

அதுவரை எம்மனதுக்குள்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்லையா சிவப்பிரகாசம் ஒரு தலை சிறந்த கலைஞர்..அவரது கலைத்திறமையை குறைத்து மதிபிடுபவர்களுக்கு அவரைப்பற்றி தெரியாது என்றுதான் எண்ண வேண்டும்..நல்லூர் உள்வீதியில் உள்ள படங்கள் (எல்லாம் ) அவரின் கைவண்ணமே..அவர் பல சிலைகள் செய்துள்ளார்...இப்பவும் செய்கிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது..90 களில் மத்திய கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றவர்..90 இல் 60 வயது என்றால் அவருக்கு இப்ப 80 வயதுக்கு கிட்ட இருக்க வேண்டும்   அவர் நீடுழி வாழ்கவென வாழ்த்துகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

செல்லையா சிவப்பிரகாசம் ஒரு தலை சிறந்த கலைஞர்..அவரது கலைத்திறமையை குறைத்து மதிபிடுபவர்களுக்கு அவரைப்பற்றி தெரியாது என்றுதான் எண்ண வேண்டும்..நல்லூர் உள்வீதியில் உள்ள படங்கள் (எல்லாம் ) அவரின் கைவண்ணமே..அவர் பல சிலைகள் செய்துள்ளார்...இப்பவும் செய்கிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது..90 களில் மத்திய கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றவர்..90 இல் 60 வயது என்றால் அவருக்கு இப்ப 80 வயதுக்கு கிட்ட இருக்க வேண்டும்   அவர் நீடுழி வாழ்கவென வாழ்த்துகிறேன்

 

ஓம்! சங்கீத வாத்தியார் போலின் கண்டிப்புக்குப் பயந்து (சங்கீதம் படிக்காமல்) நானும் சித்திரம் தான் சிவப்பிரகாசம் வாத்தியாரிட்டப் படிச்சனான்! சந்திரவட்டக் கல்லைப் பற்றி மண்டையில சின்னத் தடியால போட்டுப் போட்டுப் படிப்பிச்சது தான் நினைவில நிக்குது! :D

ஓம்! சங்கீத வாத்தியார் போலின் கண்டிப்புக்குப் பயந்து (சங்கீதம் படிக்காமல்) நானும் சித்திரம் தான் சிவப்பிரகாசம் வாத்தியாரிட்டப் படிச்சனான்! சந்திரவட்டக் கல்லைப் பற்றி மண்டையில சின்னத் தடியால போட்டுப் போட்டுப் படிப்பிச்சது தான் நினைவில நிக்குது! :D

ஓஓ, அவரா இவர்? அவரிடம் சித்திரம் படித்தது நினைவு இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்! சங்கீத வாத்தியார் போலின் கண்டிப்புக்குப் பயந்து (சங்கீதம் படிக்காமல்) நானும் சித்திரம் தான் சிவப்பிரகாசம் வாத்தியாரிட்டப் படிச்சனான்! சந்திரவட்டக் கல்லைப் பற்றி மண்டையில சின்னத் தடியால போட்டுப் போட்டுப் படிப்பிச்சது தான் நினைவில நிக்குது! :D

 

நீங்கள் சங்கீதத்தை கைவிட்டதால் பாலசுப்ரமணியத்துக்கு வாழ்வாகிவிட்டது.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்லையா சிவப்பிரகாசம் ஒரு தலை சிறந்த கலைஞர்..அவரது கலைத்திறமையை குறைத்து மதிபிடுபவர்களுக்கு அவரைப்பற்றி தெரியாது என்றுதான் எண்ண வேண்டும்..நல்லூர் உள்வீதியில் உள்ள படங்கள் (எல்லாம் ) அவரின் கைவண்ணமே..அவர் பல சிலைகள் செய்துள்ளார்...இப்பவும் செய்கிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது..90 களில் மத்திய கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றவர்..90 இல் 60 வயது என்றால் அவருக்கு இப்ப 80 வயதுக்கு கிட்ட இருக்க வேண்டும்   அவர் நீடுழி வாழ்கவென வாழ்த்துகிறேன்

எந்தப்பெரிய வித்துவானாக இருந்தா என்ன

தேவையானவற்றித் தேவையான காலத்திலை தேவையான இடத்திலை செய்யவேணும்

பண்டாரவன்னியனுக்கு யாழ்ப்பாணத்திலையும் சங்கிலியனுக்கு வன்னியிலும் சிலை வைக்க உதவும் இவர்கள் காக்கைவன்னியனினின் கூட்டமா :rolleyes:

 

தமிழர்களின் வரலாற்றைத் திசைதிருப்ப யாரும் துணை செல்லாக்கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ, அவரா இவர்? அவரிடம் சித்திரம் படித்தது நினைவு இருக்கு.

 

இப்ப நீங்களும் யாரெண்டு எனக்குப் பிடிபட்டுட்டுது! :D

நீங்கள் சங்கீதத்தை கைவிட்டதால் பாலசுப்ரமணியத்துக்கு வாழ்வாகிவிட்டது.. :D

 

கருத்துச் சரி! ஆனால் காலம் பிழை, பாலசுப்ரமணியமளவு வயதான ஆள் இல்லை நான்! :D

இப்ப நீங்களும் யாரெண்டு எனக்குப் பிடிபட்டுட்டுது! :D

உங்கள் கணிப்பு பிழை என்றுதான் நான் நினைக்கிறேன்

குளக்கோட்ட மன்னன் கட்டிய, திருகோணமலையில் குடிகொண்டிருக்கும், சிவனின் சிலை!

1.jpg

எனக்கென்னவோ, எங்கட ஊர்க் கண்ணகியம்மன் கோவிலில, 'அசுர வாகனம்' எண்டு ஒண்டு இருந்தது! அதில் ஏறி சுவாமி வீதிவலம் வருவார்! அந்த நினைவு தான், சிவனைப்பார்க்கும் போது எனக்கு வருகின்றது!

k53.jpg

ரிஷிகேசத்தில் இருக்கும் சிவன் எப்படியிருக்கிறான் என்று பாருங்கள்!

Shiva-290x300.jpg

பூங்கையின் ஆரியமோகம் தாங்கமுடியவில்லை... :)

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சரி! ஆனால் காலம் பிழை, பாலசுப்ரமணியமளவு வயதான ஆள் இல்லை நான்! :D

வயதான டி.எம்.எஸ் ஐயாவின் மார்க்கட் இளமையான எஸ்பிபியால் போகவில்லையா? அதுமாதிரி.. :D நீங்கள் பாடகர் கார்த்திக்கின் ஏஜ் குறூப் என்பது தெரியுமே.. :icon_idea::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தப்பெரிய வித்துவானாக இருந்தா என்ன

தேவையானவற்றித் தேவையான காலத்திலை தேவையான இடத்திலை செய்யவேணும்

பண்டாரவன்னியனுக்கு யாழ்ப்பாணத்திலையும் சங்கிலியனுக்கு வன்னியிலும் சிலை வைக்க உதவும் இவர்கள் காக்கைவன்னியனினின் கூட்டமா :rolleyes:

தமிழர்களின் வரலாற்றைத் திசைதிருப்ப யாரும் துணை செல்லாக்கூடாது

குறை நினைக்காதேங்கோ யாழ்ப்பாணத்தில சிலை வைச்சா என்ன மாதிரி வரலாறு திரிஞ்சு போடும் என்று ஒருக்கா சொல்லுங்கோவன் ..

மற்றது இப்ப வைக்க கூடாது என்றால் எப்ப வைக்கலாம் என்றும் சொல்லுங்கோவன்..

எனக்கும் கலிமுகத்திடலயும் , வன்னியிலும் , ஜெனிவாவிலும் , பிரான்சில் சு பாக்கு பக்கத்திலும், டொரோண்டோவிலும் ஒவ்வொன்று வைக்க விருப்பம். யாரும் தொடங்குகிற பிளான் இல்லை போல இருக்கு ... நீங்கள் தொடங்கினால் சரியான நேரத்தில் நானும் வருவேன் ...

எந்தப்பெரிய வித்துவானாக இருந்தா என்ன

தேவையானவற்றித் தேவையான காலத்திலை தேவையான இடத்திலை செய்யவேணும்

பண்டாரவன்னியனுக்கு யாழ்ப்பாணத்திலையும் சங்கிலியனுக்கு வன்னியிலும் சிலை வைக்க உதவும் இவர்கள் காக்கைவன்னியனினின் கூட்டமா :rolleyes:

தமிழர்களின் வரலாற்றைத் திசைதிருப்ப யாரும் துணை செல்லாக்கூடாது

குறை நினைக்காதேங்கோ யாழ்ப்பாணத்தில சிலை வைச்சா என்ன மாதிரி வரலாறு திரிஞ்சு போடும் என்று ஒருக்கா சொல்லுங்கோவன் ..

மற்றது இப்ப வைக்க கூடாது என்றால் எப்ப வைக்கலாம் என்றும் சொல்லுங்கோவன்..

எனக்கும் கலிமுகத்திடலயும் , வன்னியிலும் , ஜெனிவாவிலும் , பிரான்சில் சு பாக்கு பக்கத்திலும், டொரோண்டோவிலும் ஒவ்வொன்று வைக்க விருப்பம். யாரும் தொடங்குகிற பிளான் இல்லை போல இருக்கு ... நீங்கள் தொடங்கினால் சரியான நேரத்தில் நானும் வருவேன் ...

வயதான டி.எம்.எஸ் ஐயாவின் மார்க்கட் இளமையான எஸ்பிபியால் போகவில்லையா? அதுமாதிரி.. :D நீங்கள் பாடகர் கார்த்திக்கின் ஏஜ் குறூப் என்பது தெரியுமே.. :icon_idea::D

எஜ் மட்டுமல்ல அவரது குரலும் கார்திக்போலவே :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம்! சங்கீத வாத்தியார் போலின் கண்டிப்புக்குப் பயந்து (சங்கீதம் படிக்காமல்) நானும் சித்திரம் தான் சிவப்பிரகாசம் வாத்தியாரிட்டப் படிச்சனான்! சந்திரவட்டக் கல்லைப் பற்றி மண்டையில சின்னத் தடியால போட்டுப் போட்டுப் படிப்பிச்சது தான் நினைவில நிக்குது! :D

போலை கண்டு நாங்கள் பயந்து எங்கட சங்கீத புலமையை மனத்துக்குள் புதைத்து விட்டோம் :( ...ஆனால் போலில் மாணவன் ஒருவன் அவுசில் கலக்குகிறாராம் ...(அகிலன் )

http://m.youtube.com/watch?v=V4RNpkL0Tu0

என்ன நோர்த் அமெரிகான்ஸ்க்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் :(

Edited by Volcano

  • கருத்துக்கள உறவுகள்

செல்லையா சிவப்பிரகாசம் ஒரு தலை சிறந்த கலைஞர்..அவரது கலைத்திறமையை குறைத்து மதிபிடுபவர்களுக்கு அவரைப்பற்றி தெரியாது என்றுதான் எண்ண வேண்டும்..நல்லூர் உள்வீதியில் உள்ள படங்கள் (எல்லாம் ) அவரின் கைவண்ணமே..அவர் பல சிலைகள் செய்துள்ளார்...இப்பவும் செய்கிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது..90 களில் மத்திய கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றவர்..90 இல் 60 வயது என்றால் அவருக்கு இப்ப 80 வயதுக்கு கிட்ட இருக்க வேண்டும்   அவர் நீடுழி வாழ்கவென வாழ்த்துகிறேன்

 

செல்லையா சிவப்பிரகாசம் யாழ் மத்திய கல்லூரியில்... ஓவிய ஆசிரியராக இருந்தவர்.

எனது சிறு வயதில்... அவரிடம் பயின்றுள்ளேன்.

நல்லூரில் உள்ள ஆறுமுகநாவலர் சிலை வைக்கும் போது... அக்காலத்தில் அச்சிலை அலங்கார ஊர்தியில், யாழ் வீதியெங்கும் பவனி கொண்டு செல்லப்பட்டது. அந்த அலங்கார ஊர்தியை வடிவமைக்கும் வேலையில்.... அவருடன் இணைந்து மாண‌வராகிய நாமும், சிறிய உதவிகளை செய்தது மறக்க முடியாதது.

சிவப்பிரகாசம் மாஸ்ரர், நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.