Jump to content

சென்னை கனவு


arjun

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

கால வழுதியைபற்றி ஒருவர்-மருதங்கேணி சொல்லிருந்தார். அதை தவிர்க்க பாருங்கள். அதேநேரத்தில் மருதங்கேணி சொல்லிய ஏக பிரதிநித்துவம் 87 இல் இருக்கவில்லை. 30 வருடம் நடந்த போரில் ஒருவருக்கு 5-10 வீதத்தை தன்னும் கோவையாக தெரித்தால் அதுவே பெரிய புண்ணியம். பிழைகள் இல்லாமல் எழுதுவது என்பது மிக கடினம். பிழைகளை பற்றி கலவைப்படாமல் தெரிந்தவை பற்றி எழுதவும்.

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply

பதில்கள் இட்ட அனைவருக்கும் நன்றிகள் .

 

சென்னையின் அழகை எழுத தொடங்கி பலதும் பத்தும் எழுத வேண்டிவந்துவிட்டது .

 

நான் சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டும் எழுதுவதால் பிழை வர இடமில்லை என்றே நம்புகின்றேன் .

 

புலிகள் வரலாறுதான் முப்பது வருடங்கள் மாற்று இயக்கங்களின் வரலாறு மூன்று வருடங்கள் தான் .

Link to comment
Share on other sites

 

இப்படி எல்லாம் கூட இருந்தோம் அதையெல்லாம் எழுதிக்கொண்டு இருக்கமுடியாது .


கடைசி சீன் .

 


கடைசி சீன் .

 

Link to comment
Share on other sites

"பக்கண்ணாவை பார்த்துக்கொண்டுதான் பார்ட்டி வைக்காமல் இருந்தன்" 
 
தான் ஜெர்மனி செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டதாகவும்  அடுத்தவாரமே கொழும்பு போக இருப்பதாகவும் அதுற்கு முதல் நண்பர்களுக்கு சின்ன பார்ட்டி ஒழுங்கு செய்துவிட்டு எனது வருகையை பார்த்துக்கொண்டு இருந்ததாக பாலு சொன்னான் .
 
நான் அன்று காலைதான் கொழும்பு சென்று திரும்பியிருந்தேன் .பாலு என்னைவிட ஏழு எட்டு வயது குறைந்தவன்.எனது நண்பர்கள் எல்லோரும் வெளிநாடு சென்ற பின் ஒரு வாண்டு கூட்டத்தை வைத்து ஒரு கிரிக்கெட் டீம் உருவாக்கியிருந்தேன்.மிக நல்ல டீம் .அயலட்டை அணிகளுக்கு இன்னிங்ஸ் ஆல் கொடுத்துக்கொண்டுதிரிந்தோம் . இப்ப பலர் லண்டனிலும் ஆஸியிலும் கனடாவிலும் இருக்கின்றார்கள். பாலு எமது மைதானத்திற்கு எதிரே இருக்கும் குடிசைவீட்டில் இருப்பவன் . தகப்பன் ,அண்ணார்மார் எல்லோரும் சுருட்டு தொழில் தான் .இவன் கடைசி பெடியன் பாடசாலை சென்றுகொண்டிருந்தான் .கிரிக்கெட் விளையாட வந்து அந்த வாண்டு கூட்டங்களில் ஒருவன் ஆகிவிட்டான் .
 
மிக நல்லகிரிக்கெட்  ஆட்டக்காரன் என்று சொல்லமுடியாது மிக சிறந்த பந்து  தடுப்பாளன். லெக் சைடில் முக்கால்வாசி இடம் கவர் பண்ணிவிடுவான் .கிரிக்கெட்டில் நல்ல பட்ஸ்மனுக்கு நல்ல பந்தும் ஆடத்தேரியாத ஆட்டக்காரர்களுக்கு இலகுவான பந்தும் வீசவேண்டும் .அண்ணைமார் இலகு பந்துதானே என்று ஆசையில் பாட்டை வீசி அப்படியே பாலுவின் கையிற்குள் காட்சை கொடுத்துவிட்டு "அட சீ" என்று கொண்டுபோவினம்.
 
இரவு பார்ட்டி பாலுவின் மிக நெருங்கிய நண்பன் கரனின் வீட்டில் .கரன் ஏற்கனவே ஜெர்மனி சென்றுவிட்டிருந்தாலும் கரன் வீட்டுகாரர்களுடன் இவனும் ஒரு மகன் மாதிரி பழகிவந்தான் .கரனின் தந்தையும் சுருட்டு தொழில் தான் ஆனால் பெரும் முதலாளி .கரன் சென் ஜோன்ஸ் பழைய மாணவன் .எனக்கு மாத்திரம் தான் ஒரு சின்ன போத்தல் விஸ்கி வாங்கி வைத்திருந்தான் .அடுத்தவாரம் பாலு ஜேர்மனி சென்றுவிட்டான் . 
 
சென்னையில் பகல் எறித்த வெயில் இரவு எட்டுஆகியும் சூட்டை தணியவிடாமல் கட்டி வைத்திருந்தது .கே கே நகர் ஒரு வீட்டின் ஹாலில் உமாவும் நானும் அரசியல் பேசிக்கொண்டுஇருக்கின்றோம் .வீட்டு வாசலில் உமாவின் மெய்ப்பாதுகாவலர். திடீரென்று கரண்ட் போய்விட்டது .மெழுகுவர்த்தி கொளுத்தி அதன் வெளிச்சத்தில் தொடர்கின்றோம் .
 
எனக்கு மனதில் என்ன பட்டதேன்று தெரியவில்லை ஒருவித உத்வேகத்துடன் 
"கனடாவிற்கு என்ன நடந்தது" என்று கேட்டேன் .
சற்று அமைதியானவர் ."உமக்கு ஒன்று விளங்கவேண்டும்" என்று தொடங்குகின்றார் .
 
ஜெர்மனி போன பாலு நண்பன் கரனுடன் ஜெர்மனியில் இருந்து பின்னர்  கனடா சென்றுவிட்டார் . 83 கலவரம்  .கரன் ஜெர்மனியில் இருந்து அமைப்பில் சேர இந்தியா செல்கின்றார் .இந்தியாவினால் பயிற்சிக்கு டெல்கிக்கு அனுப்பபட்ட முதல் பாட்சில் இவரும் டெல்கி போய்விட்டார் .கனடாவில் இருந்த பாலு தானும் இந்தியாவிற்கு பயிற்சிக்கு போகவேண்டும் என்று கனடாவில் இருந்த அமைப்பை நாடுகின்றார் .அந்த நேரம் கனடா அமைப்பில் இருந்த  ஒருவர் இவரது நெருங்கிய நண்பர் .இவரும் எமது கிரிக்கெட் டீமில் இருந்தவர்தான் .(எனது டியுசன் மாணவன் .மிக ஆரம்ப காலத்து புலி .ஜெர்மன் ஆரம்ப பொறுப்பாளர் )
 
பாலு தமிழ் நாடு சென்று முகாமில் பயிற்சி பெற்று மிக விரைவில் அனைத்துமுகாம் பொறுப்பாளர் ராஜனால் ஒரு முகாமிற்கு பொறுப்பாளராகவும் நியமிக்கபட்டுவிட்டார்  .டெல்கி பயிற்சி முடித்துவந்த கரன் சில மாதங்களில் நாட்டிற்கு திரும்பி துணுக்காய் பொறுப்பாளர் ஆகிவிட்டார் .
 
முகாம்களில் உட்கட்சி பிரச்சனை  சற்று தொடங்கவும் அமைப்பின் நடவடிக்கைகள் எதிர்பார்த்தது போலல்லாது ஏமாற்றம் அழிக்க அமைப்பை விட்டு வெளியேற பாலு முடிவெடுத்து கனடாவில் இருக்கும் அமைப்பாள நண்பருக்கு கடிதம் போடுகின்றார் .முகாம் பொறுப்பாளராக இருந்தபடியால் முகாமிற்கு பொருட்கள் வாங்க வெளியில் செல்லும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளியில் இருந்த ஒரு தேநீர் கடை விலாசத்தின் ஊடாக கனேடிய பொறுப்பாளருடன் கடிதத்தொடர்பை தொடர்கின்றார் .கனேடிய பொறுப்பாளர் பணமும் டிக்கெட்டும் அனுப்புவதாக உறுதிஅழித்து பதில் போடுகின்றார் .
 
காலம் செய்த  கோலம் தான் பாலுவின் விதியாகிவிட்டது .கனடாவில் இருக்கும்  அமைப்பின் மற்றொரு பொறுப்பாளர் பாலுவின் கடிதத்தை வாசித்து மாத்திரம் அல்ல அதை  இந்தியாவிற்கு அமைப்பிடம் அனுப்பிவிட்டார் .பாலு கைது செய்யப்பட்டு தேநீர் கடையில் இருந்த அனைத்து கடிதங்களும் பறிமுதலாகி மரணதண்டனை விதிக்கப்பட்டு கொலை செய்துவிட்டார்கள் . (எழுதும் போது எனக்கு கண்ணீர் வருகின்றது ).
 
"உமக்கு ஒன்று விளங்கவேண்டும் ." உமா தொடர்கின்றார் ."அந்த நேரம் தமிழ்நாட்டில் நாம் பயிற்சி எடுப்பது இந்தியாவால் மறுக்கபட்டு வந்தது .இலங்கை அரசு அதன் ஆதாரத்திற்கு அலைந்து திரிந்த காலம் .பாலு கனடா போய் முகாம்கள் பற்றிய விபரங்கள்,இருப்பிடங்கள் ,போராளிகளின் எண்ணிக்கை ,இலங்கையில் இருந்து வந்து போகும் பாதை இவற்றை வெளியிட்டால் விளைவு என்ன என்று உமக்கு விளங்கும் என்று நினைகின்றேன் .அதைவிட அவரில் இருந்த நம்பிக்கையில் தான் பொறுப்பாளர் ஆக்கி வெளியில் சென்றுவரும் வசதியும் கொடுத்தோம் .மரணதண்டனை கொடுத்தோம் ஒழிய கொலை செய்யவில்லை அவர் முகாமில் இருந்து தப்பி ஓடும் போது சுடவேண்டிவந்துவிட்டது ."
 
எனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை .இருண்ட கே கே நகர் வீதியில் நடைப்பிணமாய் வீடு போய்சேர்ந்தேன் .
குறிப்பு -
பாலுவை செய்தாத சித்திரவதை எல்லாம் செய்து அடித்தே  கொன்றார்களாம்  என்று தோழார்கள் சொன்னார்கள் .
கரன் சில ஆண்டுகளின் பின் அமைப்பை விட்டு வெளியேறி பிரான்ஸ் சென்று விட்டார் .பல வருடங்கள் அங்கிருந்தவர்  இரு வருடங்களின் முன் தனது கடைக்குள் தூக்கு போட்டு இறந்துவிட்டார் .இவர் தந்தையார்  நான் MLA HOSTEL இல் தங்கியிருந்த நாட்களில் பிரான்சில் இருந்து தனது மகனை கூட்டிக்கொண்டு போக வந்தார் .அந்த நேரம் மகன் துணுக்காயில் இருந்தார் .
 
பாலுவை கனடா கூப்பிடுவதாக சொன்ன பொறுப்பார் கனடாவில் இப்போ பெரிய வர்த்தகர் .
கடிதத்தை இந்தியாவிற்கு அனுப்பியவரும் இங்குதான் உலா வருகின்றார் .
எல்லோரையும் கண்டு ஒரு சிரிப்புடன் போய்விடுவேன். நான் உமாவுடன் அந்த நேரம் இது பற்றி கதைத்தது எதுவும் இவர்களுக்கு தெரியாது .
 
எனது வாண்டு கிரிக்கெட் டீம் முழுக்க முழுக்க  பணக்கார பிள்ளைகள் தான் விளையாடினார்கள் .அதில் ஒரே ஒரு சுருட்டு தொழிலாளியின் பிள்ளை பாலு .நாட்டுக்காக கனடாவில் இருந்து போராட போய் அவர்கள் கையாலேயே சித்திரவதை பட்டு இறந்ததை என்னவென்று சொல்வது என்று எனக்கு தெரியவில்லை .
பாலுவை கனடா என்று தான் அங்கு எல்லோரும் அழைத்தார்கள் .
Link to comment
Share on other sites

அரசியல் கதைப்பதில்லை என முடிவு எடுத்தாலும் உங்களால் அரசியல் இல்லாமல் எழுத முடியாது. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அர்ஜுன் அண்ணா
உட்பூசல்களும் தண்டனைகளும் தலைமைகளின் அதி உச்ச அதிகாரங்களும் தான்

ஒரு காலத்தில் ஈழ விடுதலைக்குத் தடையாக இருந்தன.

Link to comment
Share on other sites

தொடருங்கள் அர்ஜுன் அண்ணா

உட்பூசல்களும் தண்டனைகளும் தலைமைகளின் அதி உச்ச அதிகாரங்களும் தான்

ஒரு காலத்தில் ஈழ விடுதலைக்குத் தடையாக இருந்தன.

 

எக்காலத்திலும்...

Link to comment
Share on other sites

மிக நல்லதொரு தொடர்.. நானும் தவறாமல் வாசித்து வருகிறேன். :D

Link to comment
Share on other sites

மனித மனங்கள்
அழகிய சென்னை மட்டும் அல்ல அது தமிழ்நாடு, இந்தியா என்று விரிந்தாலும் அதன் அழகை அனுபவிக்கவும் ரசிக்கவும் அதற்கான மனம் வேண்டும் .சுற்றுலா என்றோ அல்லது படிப்பு ,தொழில் என்று வந்திருந்தால் நிலைமை வேறு .எனது மனநிலை சொல்லத்தேவையில்லை .பை நிறைய பணம் ,கட்டுப்படுத்தவோ கண்காணிக்கவோ எவரும் இல்லை.இருந்தாலும்   உள்மனம் அவைஎல்லாவற்றையும் புறம்தள்ளி எமது பிரச்னையை மட்டும் மண்டைக்குள் போட்டு குடைந்துகொண்டிருந்ததால் வேறு விடயங்களை தேடிப்போக மனம் நாட்டம் கொள்ளவில்லை.கடந்து போகும் போது பார்த்தவற்றை ரசித்தேன் .
 
டெல்கியில் இருக்கும் போது அருகில் இருக்கும் தாஜ்மஹால் போக நினைக்கவில்லை  ஆனால் மாலையில் மலையாள பொலிசாருடன் உதைபந்து விளையாடுவது ,காஸ்மீரில் இருந்து வரும் தமிழ் பொலிசாருடன் திரிவது, சல்வாருடன் பூப்பந்து விளையாடும் வட நாட்டு அழகிகளை ரசிப்பது என்று போனது .
 
தமிழ் நாட்டில் அகதிகளுக்கான முகாம்களுக்கு செல்வது மிக மாறுபட்ட அனுபவம் .ஒரு முகாமின் இட நெருக்கடியை குறைக்க அருகில் சில குடிசைகள் போட எண்ணி அந்த ஊர்  பண்ணையாரிடம் சென்றோம் .தமிழ் நாட்டு கிராமங்களில் பண்ணையார் சொல்லாமல் எதுவும் அசையாது .எங்கும் பச்சை பசேலென வயல்வெளிகளும் தென்னை தோப்புகளும் அழகாகவும்  குளிர்மையாகவும் இருக்கும் .அந்த கிராமத்திற்கு சற்றும் பொருந்தாமல் மாட மாளிகையாக பண்ணையார் வீடு இருக்கும் .எத்தனைதமிழ் சினிமாக்களில் பார்த்திருப்போம் .
 
கேற்றை திறந்து உள்ளே போய் கதவை தட்டினால் பண்ணையார் வெளியில் போயிருக்கின்றார் சற்று இருங்கள் என்றார்கள் .வீட்டு ஜன்னல் திரை சற்று இழுத்து மூடியது .நான் என்னுடன் வந்தவருக்கு சொன்னேன்  "இப்ப  புதியவார்ப்புகள் படம் ஓட போகுது".  நான்  சொல்லி வாய் மூடவில்லை அரை தாவணி பாவாடையுடன் இடுப்பில் குடத்துடன் பதினாறு வயது மயிலு .பண்ணையாரின் மகள் என்று சொல்லாமலே தெரிந்தார்  அவ்வளவு பூரிப்பு .தண்ணீர் குடிப்பமோ என்று நண்பரிடம் கேட்டேன் .பண்ணையார் வந்த பிறகு குடிக்கின்றன் இப்ப வேண்டாம் நான் ஊரில தான் உயிரை விடுவன் என்று விட்டார் .
 
வேறொரு  ஒரு முகாமில் குடிசைகள்  எல்லாம் கட்டி  கூரை போடுவதற்கு கிடுகு வாங்க போய்விட்டோம் .கிடுகளுடன் வந்தால் ஊர் நாட்டாண்மை எடுபிடிகளுடன் வந்து குடிசைகளை பிடுங்கி எறிந்துவிட்டதாக சொன்னார்கள் .இரத்தம் கொதிக்க தொடங்கிவிட்டது ஆனால் எதுவும் செய்யமுடியாத நிலை நாட்டாண்மையை தேடிப்போனால் எடுபிடிகள் சூழ கள்ளு அருந்திக்கொண்டு இருக்கின்றார் .கோபத்தை அடக்கிக்கொண்டு தற்காலிகமாக புறம்போக்கு நிலத்தில் தானே குடிசைகள் கட்டினோம் என்றேன் .தன்னிடம் வந்து அனுமதி கேட்கவில்லை என்ற கோவம் அவருக்கு .பிறகு சமாதானமாகி எங்களையும் கள்ளு அருந்த வற்புறுத்தினார் கடைசி பதநீர் ஆவது சாப்பிடவேண்டும் என்று அதை அருந்திவிட்டு வந்தோம் .அதன் பின் மேலும் குடிசைகள் போட இலவசமாக மரங்களும் கிடுகுகளும் தந்தார் .
 
இன்னுமொரு முகாம் இருந்த இடம்  காய்ந்து பொட்டல் வெளி நிலமும் ஒரே மணலாக இருந்தது .அந்த மண்ணில் முந்திரிகை மரங்கள் காடாக இருந்தது .இங்கு தண்ணீர் தான் பிரச்சனை .குழாய் கிணறு அடித்துக்கொடுத்தோம் .
 
நானாவது இப்படி வெளியில் திரிந்து கொண்டுஇருந்தேன் .பயிற்சிக்கு என நாட்டில் இருந்து வந்து முகாமை விட்டு வருடக்கணக்கில் வெளியே கூட போக முடியாமல் தான் பலர் நிலை .பாடசாலை முடிய முகாம்களுக்கு திரும்பியவர்களை  இடைக்கிடை போய் சந்தித்துவந்தேன் .சென்னையில் இருந்தாலும் முகாம்களில் இருந்தாலும் பலரது மனநிலையும் ஒன்றாகவே இருந்தது " எப்ப நாட்டிற்கு திரும்புவம் " என்பதுதான் அது .
 
 தொடர்ந்து அமைப்பில் இருந்து போராடுவது  அல்லது விட்டு விலகுவது முடிவு எதுவாயினும்  சுயமாக முடிவெடுக்க நாட்டிற்கு திரும்பவேண்டும் என்பதே அவர்கள் நிலை .ஆயுதங்கள் வருமாயின் விட்டுவிலகுவது என்ற எண்ணம் எவருக்கும் வராது, அது உமாவிற்கும் தெரியும் . அதைவிட பெரும்பாலானவர்கள் தலைமையில் மிக பெரிய நம்பிக்கையை வைத்திருந்தார்கள் . பெற்றோர்கள்  எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார் என்ற பிள்ளைகளின் நிலைதான் .
 
சென்னையில் இருக்கும் சிலர் அந்த வெயிலுக்கும் மோட்டார் சயிக்கிலும் லெதர் ஜாக்கெட்டும் விரும்பிய சாப்பாடும் என்று அந்த நேரம் கிடைப்பதை அனுபவிப்பம் என்ற நிலை .
 
இவ்வளவு பொறுப்பையும் தனக்குள் வைத்திருக்கும் தலைமைக்குள் இருப்பவர்களுக்கு பல விடயங்கள் தெரிந்தாலும் சில விடயங்கள்  தெரியாது .குறிப்பாக  நிதி ,இந்தியாவுடனான அரசியல் ,ஆயுத நிலைமை போன்றவை .இவை எல்லாம் தனி ஒருவர் கையிலேயே இருந்தது .மற்றவர்கள் இந்தா வருது அந்தா வருது என்று ஆளுக்கு ஒரு கதை சொல்லிக்கொண்டு திரிந்தார்கள்  .
 
இவை எல்லாவற்றையும் விட  அமைப்பு உள்முரண்பாடுகள்கள் நீங்கி அராஜகமற்ற ,உட்கடசி ஜனநாயகம் உள்ள அமைப்பாக மாறாமல்  விடிவில்லை என்று ஒரு பிரிவினர் நம்பினார்கள் .அதற்கு  புதிய நிர்வாகம் முக்கிய பொறுப்புகளை  எடுக்கவேண்டும் என்பது அவர்கள் நிலைமை .எனது நிலைப்பாடும் அதுவாகத்தான் இருந்தது .
 
நாட்டில் வெற்றிகரமாக மகாநாட்டை முடித்தவர்கள் தமிழ் நாட்டில் மகாநாட்டை நடாத்த தமிழ்நாடு வந்துவிட்டார்கள் . தனது கையை மீறி எதுவும் நடந்துவிடக்கூ டாது என்ற நிலையில் சுன்னாகத்தில் நடந்த மகாநாட்டிற்கு தமிழ் நாட்டில் இருந்தும் பலரை பங்கு பற்ற உமா அனுமதித்திருந்தார் .அதிலும் முக்கியமாக இருவரை தேர்ந்துஎடுத்திருந்தார் .முகாம்களில் அதி உச்ச அராஜகங்கள் அட்டகாசங்கள் புரிந்தவர்கள்  என்று தோழர்களால் வெறுக்கப்பட்ட ஏழு எட்டு பேரில் இந்த இருவரும் அடக்கம்.இவர்களுக்கு நாட்டிற்கு போய் மகாநாட்டில் பங்கு பற்ற விருப்பமே இல்லை . இவர்களில் இருக்கும் கோபத்தில் நாட்டில் இருக்கும் அமைப்பினர் ஏதாவது செய்ய முயற்சிக்கலாம் அல்லது பல பழிகளை  போட்டு வாக்குவாதத்தில் மகாநாடு குழம்பலாம்  (இப்படி எழுதுவதற்கு சிறிது விளக்கம் பின்னர்)  ஆனால் அப்படி ஒன்றும் நாட்டில் நடக்கவில்லை .
 
மகாநாட்டில் நடந்தை பற்றி வாசுதான் பாடசாலைக்கு வந்து  ஏதோ புதிய திருப்பம் நடக்கபோகின்றது போல விளக்கம் தந்தார் .தமிழ்நாட்டில் இருந்து நாட்டிற்கு சென்றவர்களுடன் தலைமை சந்தித்து ஒரு கூட்டம் அடுத்த நாள் மாலை நடந்தது .
 
இரவு ஏழு மணியிருக்கும் ஒருவர் எமது வீட்டிற்குள் ஓடிவந்து மூன்றாம்மாடி மொட்டைமாடி அறையில் பதுங்கிவிட்டார் .நான் முதலில் சந்தித்த அனைத்துமுகாம் பொறுப்பாளர் .விருப்பமில்லாமல் மகாநாட்டிற்கு போனவரில்  ஒருவர் .போய் பார்க்கவே விரும்பவில்லை .சங்கிலியின் மோட்டார் சயிக்கில் வந்து நிற்கிறது "யாரும் வந்தார்களா ?"  இல்லை .மோட்டார் சயிக்கில் திரும்பி பறக்கின்றது .
 
ஆட்டோ ஒன்று வந்து நிற்கின்றது அதில் எங்களுடன் இருக்கும் ஒருவர் இறங்குகின்றார்.அவர் தனது பாக்கை எடுக்க இந்தியும் அவருடன் சேர்ந்து ஓட்டோவில் ஏறி ஓடிவிட்டார்கள் .அடுத்த நாள் காலை மாணிக்கம் ஒரு கடிதத்துடன் வருகின்றார் .
 
"எனது அனுமதியில்லாமல் எவரையும் வீட்டிற்குள் அனுமதிக்ககூடாது " உமா .
அந்த எழு எட்டு பேர்கள் பற்றியும் குழு வாதம் பற்றியும் நாளை .
இரண்டு நாட்களில் கோதாரி விழுந்த எமது பிரச்சனையை முடித்து விட்டு சென்னைக்கு திரும்புவம் .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்  நிறைய அனுபவங்களை இந்தியாவில் பெற்றிருக்கின்றீர்கள் :D

Link to comment
Share on other sites

உள்முரண்பாடுகளும் ஆயுத கனவும் .
 
பலர் பயிற்சிக்கு வந்து இரண்டுவருடங்கள் ஆகிவிட்டது,வந்த ஆயுதங்களையும் இந்தியா பறித்துவிட்டது .அடுத்து ஆயுதம் இந்தா வருது இந்தா வருது என்றார்கள் ஒழிய என்ன நடக்கின்றது என்று எவருக்கும் தெரியாது ,அப்படி ஆயுதங்கள் வந்தாலும் திரும்பவும் இந்தியா அதை பறிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் .
 
உமாவை இந்தியா கை விட்டுவிட்டது என்ற எண்ணம் எனக்கும் ஓரளவு இருந்தது .வங்கம் தந்த பாடம் ,முற்போக்குசக்திகளுடன் இணைவோம் என்பதும் மார்க்சிசம் கதைப்பதும் வகுப்புகள் நடாத்தியதும் ,முகாம்களில் அராஜகம் ,கொலைகள் நடாத்தியது என்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவை எல்லாவற்றையும் விட றோ,மத்திய அரசு  இரண்டிற்கும் இவர் நம்பகமாக நடக்கவில்லை  என்பதுதான் முக்கியகாரணம் .
 
இந்திராகாந்தியை சந்தித்ததில் தொடங்கி வெளிநாட்டு தொடர்புகள் , வெளிநாட்டில் ஆயுதம் வாங்க முற்பட்டது ,ஆயுதம் தருகின்றோம் தாக்குதல்கள் நடாத்துங்கள் என்றதற்கு ஆயிரம் கேள்விகள் கேட்டது குறிப்பாக எமது பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று தெளிவுபடுத்தாமல் எப்படி தாக்குதல் நடாத்துவது ?,வானொலி ,சிங்கள முற்போக்கு சக்திகளுடன் தொடர்பு இப்படி பல காரணங்கள் .
 
உமா -பிரபா சூட்டு சம்பவத்திற்கு கைது செய்யபட்ட உமா இலங்கைக்கு திருப்பி அனுப்பும் சூழ்நிலை உருவாகிய நேரமே இந்தியாவில் தலைமறைவாக இனியும் இருக்க விரும்பவில்லை இலங்கைக்கு அனுப்புவதானால் அனுப்புங்கள் என்று சொல்லியதும் ,பின்னர் தமிழ் நாட்டு அரசால் விடுதலையாகி அவர்களே அங்கு இருந்து இயங்க தொலைபேசி வசதியுடன் MLA HOSTEL ஐ கொடுத்ததும் ஒரு வித அங்கீகாரம் தான் 
 
 டெலோ ,ஈபி ,ஈரோஸ் றோ வின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது .புலிகள் கூட றோ வுடன் பகைக்கவில்லை .அனுராதபுர தாக்குதல் றோ சொல்லியே செய்தார்கள் .ஆயதங்கள் புலிகளுக்கும் கொடுத்தார்கள் .
 
இயக்கங்களுக்கு இடையிலான ஒற்றுமை பேச்சுவார்த்தையில் புலிகளை விட அனைத்து இயக்கங்களும் கூட்டணியும் பங்குபற்றி சேர்ந்து இயங்க முடிவும் எடுத்துவிட்டார்கள் .  பின்னர்  றோ வின் நிகழ்சி நிரலில் தான் புளோட்டுக்கு தெரியாமல் புலி ,டெலோ ,ஈபி ,ஈரோஸ் இணைவு நடந்தது .நாபாவிற்கு இதில் பெரும்பங்கு இருந்தது .இந்த ஆரம்ப பேச்சுவார்த்தைகளின் போது உமாவும் சற்று அதிகார தோரணையில் நடந்தது பாலகுமாருக்கு பிடிக்கவில்லை .அந்த நேரம்  தமிழ் டைம்ஸ் இன் முன் அட்டையில் வந்த கார்ட்டுன்  ஒன்று இன்றும் கண்ணில் நிற்கின்றது . ஒரு சிலந்திவலை கீறி அதில் உமாவை சிலந்தியாகவும் ,சிறி ,நாபா ,பாலகுமார் இவர்களை ஈக்கள் போலவும் கீறியிருந்தார்கள் ஆனால் அந்த கூட்டு நடக்காமல் அடுத்த கூட்டு நடந்தது, கார்ட்டூனில்  உமாவின் இடத்தில் வந்த  பிரபா அந்த கார்ட்டூனை உண்மையாக்கியது காலத்தின் கொடுமை .
 
 
பாலஸ்தீனத்தால் வந்தது முதல் நாட்டில் தாக்குதல் ஏதாவது செய்யவேண்டும் என்று உமாவை நெருக்கிவந்த ராஜன் அதற்கு அனுமதியும் பெற்று ஒரு முகாமில் அதற்கான பயிற்சியும் கொடுத்துவந்தார் .அப்படியே அடுத்த படிக்கு போய் அவரது  தலைமையில் புது அமைப்பாக அந்த முகாம் உருவெடுக்கும் நிலைமை உருவானது .இந்த காலகட்டங்களில் உமா -ராஜன் சந்தித்து வந்தாலும் ராஜன் தனது சொந்த மெய்பாதுகாவலர்களுடன் வந்து போகதொடங்கினார் .முகாம்கள் எங்கும்  உமாவை இந்தியா கை விட்டுவிட்டது ராஜன் தலைமையில் உதவி கிடைக்கும் என்ற பேச்சு அமைப்பிற்குள் பரவ தொடங்கியிருந்தது .அதில் உண்மையும் இருந்தது .என்னிடமும் இருவர் வந்து அடிக்கடி இதே கருத்தை வலியுறுத்திவந்தார்கள் .(லண்டன் வானொலி ராமராஜ் ,ராஜா ). 
 
 
இந்தியாவில் இருந்து  மகாநாட்டிற்கு சென்றவர்கள் முகாம்களில் நடந்த அராஜங்களுக்கு விசாரணை வைத்தால் தங்களுக்கு பிரச்சனையில்லை ஏனெனில் தாம் எந்த ஒருமுடிவையும் தன்னிச்சையாக எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். இது விடயமாக உமாவுடன் நடந்த வாக்குவாதத்தின் முடிவில் தான் பயந்துபோய் ஓடமுடிவேடுத்து எனது இருப்பிடம் வந்து பின்னர் ஆட்டோ ஏறி ஓடினார்கள் .
 
ஓடியவர்கள் பாதுகாப்பு தேடிப்போகும் புகலிடம் தான் விந்தையிலும் விந்தை .இலங்கைக்கோ அல்லது தமிழ்நாட்டு போலிசிடமோ அல்லது மாற்று இயக்கத்தவர்களிடமோ போகாமல் எமது அமைப்பில் இருந்து இந்தா பிரிகின்றேன் என்று நிற்கும் ராஜனிடம் தான் சென்றார்கள் .
 
சுன்னாகத்தில் வெற்றிகரமாக மகாநாட்டை முடித்து நாட்டில் புது பொறுப்பாளர்களையும் தெரிவுசெய்துவிட்டு தமிழ் நாட்டில் மகாநாடு நடாத்த வந்து ராஜனுடனும் கதைத்து  ஒரு வாரவிடுமுறையில் உரத்தநாட்டில் ஒரு பாடசாலையையும் ஒழுங்குபண்ணிவிட்டார்கள் .
 
அனைத்து முகாம்களிலும் இருந்து மகாநாட்டில் பங்கு பற்றுபவர்கள் என்று ஒரு குறிக்கப்பட்ட எண்ணிக்கையில் பிரதேசவாரியாக ஆட்களை  தெரிவுசெய்திருந்தார்கள் .மிகவும் நேர்த்தியாக ஒருங்கைக்கப்பட்டு மகாநாட்டிற்கான அனைத்து வேலைத்திட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தது .முகாம்களில் பாதிக்கபட்டவர்களிடம் இருந்து அறிக்கைகள் எழுத்திலும் பெற்றிருந்தார்கள் .
 
நான் துரையுடனும் லிங்கத்துடனும் தொடர்பில் இருந்தேன் .இருவரும் சுன்னாகம் மகாநாட்டில் பங்குபற்றி விட்டுவந்திருந்தார்கள் .இரவில் அனேகம் ஒன்றாகத்தான் தூங்குவோம்.மகாநாடு நடந்தால் அமைப்பிற்குள் நடந்த அனைத்து தவறுகளும் தலைமையில் தான் போய் சேரும், இதை உமா அனுமதிப்பார் என்று தாங்கள் நம்மவில்லை எனவே மகாநாடு நடத்துவதை எப்படியும் தடுத்துவிடுவார் என்றும் அதற்கான முனைப்பில் தான் அவர் இப்போது ஈடுபடுகின்றார் என்றும் சொன்னார்கள் .தங்களை சந்திப்பதை பெரிதும் தவிர்த்து வருவதும் நாட்டில் இருந்து கூட தனது விசுவாசிகள் சிலரை வரவழைத்து அவர்கள் ஆயுதங்களுடன் உலா வருவதும் அதையே காட்டுகின்றது என்றார்கள் .
 
நாட்டிலிலேயே அமைப்பின் பொறுப்புகளில் இருந்து மகாநாட்டிற்கு வந்தவர்கள் எதிர்பார்த்தவிதத்தில் தலைமையிடம் இருந்து எதுவித வரவேற்று கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை தாங்கள் அவமானப்படுத்த படுவதாக உணர்ந்தார்கள் .  இந்த நாட்களில் இவர்கள் பலரை சந்தித்தேன் .மிகவும் குழம்பியநிலையிலேயே காணப்பட்டார்கள். இவர்கள் உமாவை சுற்றியுள்ள கூட்டத்தை நன்கு அறிந்தவர்கள்  எனவே  தமது பாதுகாப்பு பற்றி அச்சத்தினால் ராஜனுடன் தொடர்பில் இருந்தார்கள் .
 
இந்த நாட்களில் டெல்கியில் இருந்த வந்த எனது சகாவுடன் நானும் ராஜனை சந்திக்கசென்றேன். பாடசாலை பாதுகாப்பு அற்ற இடம் என்றும் நிலைமைகளை பார்க்க உமாவை நம்புவதற்கு  தயாராகஇல்லை என்றார் 
 
உரத்தநாடு கலவர பூமியாக காணப்பட்ட நாட்கள் அவை . காரிலும் ஜீப்பிலும் மோட்டார் சயிக்கிளிலும் ஆயதங்களுடன் உமாவும் அவர் விசுவாசிகளும் ஒரு புறம் ,ராஜனும் அவர் ஆதரவாளர்களும் மறுபுறம் இடையில் நாட்டில் இருந்து வந்த பொறுப்பாளர்கள்  ,மாகாநாடு நடாத்த ஓடித்திரிபவர்கள் ,எதுவும் அறியாமல் முகாம்களில் இருக்கும் போராளிகள் . எல்லோர் மனதிலும் ஒருவித அச்சம் குடிகொண்ட சூழ்நிலை .
 
நாளை மகாநாடு ? 
 
நாளை என்ன நடக்கபோகின்றது ? எத்தனை தலை விழபோகுது ?  என்ற எண்ணமே அனைவரினது மனதிலும் இருந்தாலும் அனைவரும் முகாம்களுக்கு  நித்திரைக்கு ? திரும்பிவிட்டார்கள் .
 
தொடரும் .  
 
நாளை எனது திருவிழா .
Link to comment
Share on other sites

தலை தப்பியது தம்பி ராஜ்  புண்ணியம் .
 நாளை மகாநாடு . 
நேரம் பின்னிரவை தாண்டிவிட உரத்தநாடு உறங்கிவிட்டது .எம்மவர் எவரும் முகாம்களில் உறங்கியிருக்கமாட்டார்கள் .நாளை சுமூகமாக நடைபெறும் என்று நினைத்த மாகாநாடு கேள்விக்குறியாகிவிட்டிருந்தது .
நாங்கள் ஐந்து பேர்கள் சிலை செதுக்கும் சிற்பிகளின் கருங்கற்களில் அமர்திருந்து நாளை என்ன நடக்கும் என்று ஒரு ஒத்திகையில் இருக்கின்றோம். நாட்டில் இருந்துவந்த பல பொறுப்பாளர்கள் , ராஜன் பிரிவு எவருமே வராமல் உமா தனது ஆட்களை மட்டும் வைத்து வெற்றிகரமாக மகாநாட்டை நடாத்திவிடுவார் .பயத்தில் எவரும் எதிர்த்து வாய் திறக்கப்போவதில்லை  இப்படியே அமைப்பு இழுபடப்போகுது என்று அடித்துச்சொன்னார் துரை . 
 
நாட்டில் இருந்த பல பொறுப்பாளர்கள் ராஜனின் பாதுகாப்பிலேயே இருந்தார்கள் .நான் துரையிடம் கேட்டேன் ராஜனை பற்றி உமது கணிப்பு என்ன என்று ,  நீர் படுத்திருக்கும் சாமான் தான் என்றார் . நேரம் அதிகாலை மூன்றை எட்டிவிட்டது நாங்களும் நித்திரைக்கு சென்றுவிட்டோம் .
 
பாயில் படுத்துவிட்டேன் நித்திரைவரவில்லை .சற்று தள்ளி படுத்திருந்த  சீசரின் இனிமையான குரலில்  "ரோஜா ஒன்று முத்தம் தரும் நேரம் " காதிற்குள் தேன் பாச்சியது . அந்த நேரம் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த கழகத்தின் அனேக பாடல்கள் இயற்றி பாடியது இவர்தான் . 
 
சிறிது தூங்கிவிட்டேன், திரும்ப திரும்ப இரண்டு மூன்று நாட்களாக  முகாமில் இருக்கும் போராளிகள் அறுபது பேர்கள் வரை மகாநாட்டிற்கு சமர்ப்பித்த அறிக்கைககள் வாசித்தது வந்து வந்து போகுது . போராட வந்து இவ்வளவு அவலங்களை சந்திதிருக்கின்றார்களே என்று நினைக்க கோபம் கோபமாக வருகின்றது . 
 
அதில் ஒரு அறிக்கை, பெரியய்யாவிற்கு தெரியாமல் தான் முகாம் பொறுப்பாளர்கள் எங்களை இவ்வளவு கொடுமை  செய்வதாக முகாம்களில் போராளிகள் நினைக்கின்றார்கள் ஆனால் நான் ஒரு முறை செயலதிபரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்த போது  "பெரியய்யா என்னால் இனி தாங்கமுடியாது என்னை விட்டுவிடுங்கள் ,எடுத்ததற்கும் அடித்தே கொல்கின்றார்கள்" என்றேன் . "விசாரணை என்றால் அப்படித்தான் " என்று விட்டு அவர் போய்விட்டார் என எழுதியிருந்தார் .  மகாநாட்டிற்கு என்று ஒரு அலுவலகத்தை திறந்து துரையின் பொறுப்பில் அதை கொடுத்திருந்தார்கள் . அங்குதான் இத்தனை அறிக்கைகளும் மாகநாடு சம்பந்தமான ஆவணங்களும் இருந்தன . 
 
இன்னமும் முழுதாக விடியவில்லை ஏதோ ஆராவாரம் கேட்டு கண் விழித்தால் எம்மவர் பலர் எமது அலுவலகம் நோக்கி  ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் .அருகில் படுத்திருந்தவர்கள் எவரையும் காணோம் . நானும் உடுத்திருந்த நாலு முழவேட்டியுடனும் கறுப்பு சேர்ட்டுடனும் அலுவலகம் நோக்கி ஓடுகின்றேன் .வழியெங்கும் ஒரே தோழர்கள் கூட்டம் கூட்டமாக  அனைத்து முகாம்களிலும் இருந்து ஓடிவந்து கொண்டிருக்கின்றார்கள் .அலுவலகத்தை சுற்ற வர  எங்கும் பெரும் உமாவின் படை.  மொட்டைமாடிக்கு ஏறுகின்றேன் ஏற்கனவே முன்நூறு  மேற்பட்ட தோழர்களுக்கு அங்கு வந்துவிட்டிருந்தார்கள் . மிகப்பெரிய மொட்டைமாடி அது அதிலும் சுற்ற வர பாதுகாப்பு . உமா நடுவில் கதிரையில் இருக்கின்றார் . வாசு சில காகிதங்களை எடுத்துவந்து வாசிக்க தொடங்குகின்றார் .
 
அனைத்து தோழார்களுக்கும் என்று தொடங்கி மூன்று பக்க கடிதத்தை வாசித்து முடிக்கின்றார் .அது இயக்கத்தை ஏன் விட்டு விலகுகின்றோம்  என்ற விளக்கத்துடன்  துரை எழுதிய கடிதம்.  துரை மாத்திரம் அல்ல இரவு என்னுடன் இருந்த நான்கு பேர்களும் (துரை ,லிங்கம் ,ராசா ,சீசர் ) போய்விட்டிருந்தார்கள் .கடிதம் எழுதிய பாணி புதிய பாதை எழுதுபவர் என்றபடியால் சொல்ல தேவையில்லை .
 
சாரம்சம் - மாற்றம் வேண்டி நிற்கும் எமது அமைப்பு மாற்றதிற்கு தயாராக இல்லாத நிலையில் தொடர்ந்தும் அதற்கு அராஜத்திற்கு துணை போக விரும்பாமல்  விலகுகின்றோம் .நாங்கள் ஆயுதத்திற்கு பயந்தவர்கள் அல்ல ஆனால் வன்முறையில் நம்பிக்கை வைக்காத படியால் வன்முறையை கையில் எடுக்கவிரும்பாமல் விலகுகின்றோம் .
 
வாசித்து முடிய தனது பேச்சை தொடரும் வாசு ,எமது அமைப்பை தமது பொறுப்பில் கொண்டுவர  இந்த ஐந்து பேரும் செயற்பட்டுவந்தது எமக்கு முன்னரே தெரியும் .இன்று மகாநாடு நடந்தால் அது சாத்தியம் ஆகமுடியாது என்று உணர்ந்து மகாநாட்டிற்கு முதல் ஓடிவிட்டார்கள் என்றார் .
 
அடுத்து உமா ,    தான் இப்படி எத்தனை தடைகளை  இதுவரை தாண்டி வந்திருப்பதாக ஒவ்வொன்றாக சொல்லி , தமது ஆசாபாசங்களை முற்றிலும் துறந்து விடுதலை என்ற உணர்வில் போராட வருபவன் தான் போராளி , வெறும் உணர்சியில் தற்காலிகமாக தமது ஆசாபாசங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டு போராட வந்தவர்கள் மீண்டும் அதை நாடி ஓடுவதில் வியப்பில்லை என்றும் ,எவர் எமது அமைப்பை விட்டு விட்டு போனாலும் தனி ஒருவனாக தன்னால் மீண்டும் ஒரு இயக்கத்தை கட்டிஎழுப்பமுடியும் என்று அடுக்கிக்கொண்டு போய்முடித்தார் .
 
எங்கும் ஒரே நிசப்தம் .ஓடிப்போனவர்கள் எப்பேர்பட்டவர்கள் என்று அனைத்து போராளிகளுக்கும் தெரியும் , குறிப்பாக அனைத்து முகாம் பொறுப்பாளராக இருந்த ராஜா . இனி என்னாகுமோ ஏதாகுமோ என்ற பயம் கேள்விக்குறி அனைவர் முகத்திலும் தெரிந்தது .
 
நான் மெல்ல எழும்புகின்றேன் ,
வணக்கம் ,  இயக்கத்தின்  பொறுப்புகளை கைப்பற்ற ஐந்து பெயர்கள் முயன்றார்கள் என்று நீங்கள் முன் வைத்த பெயர்களில் எனது பெயரும் இருந்ததால் எனது நிலையை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன் .நேற்று இரவு வரை என்னுடன் இருந்தவர்கள் இயக்கத்தை  விட்டு விலகிப்போனது இப்போதுதான் எனக்கும் தெரியும் . ஆனால் அதில் அவர்கள் எழுதிவைத்து விட்டு போன கடிதம் சொன்ன செய்தி மிக தெளிவாக இருக்கு ,   அமைப்பில் மாற்றம் வேண்டும் என்று தான் அனைத்து தோழர்களும் விரும்புகின்றார்கள் அதையே தான் நாங்களும் கேட்டோமே ஒழிய  பொறுப்பையோ அல்லது தலைமையையோ அல்ல . நாட்டில் மகாநாடு நடந்ததே அமைப்பில் மாற்றம் வரமால் இனி அடுத்த அடி வைக்கமுடியாது என்றுதான் .
 
இனத்தின் விடுதலைக்காக போராட என்று பெற்றோரை விட்டு வந்தவர்களை  பொறுப்பாளர்கள எப்படி நடாத்தினார்கள் என்று அனைவருக்கும் தெரியும் .இரண்டு வருடங்களாக காலை எழும்பி ஏதோ கல்லு உடைக்க கிறேசருக்கு வேலைக்கு செல்பவர்கள் போல  இந்த வெய்யிலும்  புழுதி எல்லாம் புரட்டி எடுத்ததை விட வேறு என்ன செய்தீர்கள்.  அத்துடன் விட்டால் பரவாயில்லை பயிற்சிக்கு முடியாதவனை, கேள்வி கேட்பவனை  அடி ,உதை என்று சித்திரவதை. பல அப்பாவிகளை ஒற்றர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பிடித்து கொலைகள் வேறு .இப்படிப்பட்ட பிணம் தின்னும் கூட்டத்தை பொறுப்புகளில்  வைத்துதான் அமைப்பு இயங்குது .  இதை மாற்ற வேண்டும் என்று கேட்டதில் என்ன தப்பு?  தோழர்கள் தோழர்கள் என்று ஆழுக்கு ஆள் சொல்லுகின்றார்களே ஒழிய யாருக்கும் தோழமையின் அர்த்தம் தெரியுமா?  அவர்கள் ஏன் ஓடிப்போனார்கள் என்று எனக்கு தெரியாது ஆனால் மாற்றம் இல்லாமல் அமைப்பு அசையமுடியாது என்றுதான் இப்போதும் நான் நம்புகின்றேன் .
 
ஒரே மூச்சில் பேசிவிட்டு இருந்துவிட்டேன் .கூட்டத்தில் ஒருவர் கல்லெறிந்தால் பின்னர் நடப்பது தெரியும் தானே .ஆளுக்கு ஆள் எழும்பி தமது ஆதங்களை கொட்டி தீர்க்க தொடங்கிவிட்டார்கள் .அப்ப ஒருவர் (இப்போ மச்சான்)  "நாட்டிற்கு வாங்கோ உங்கட வீரத்தை சேலஞ் பண்ணாலாம்"  என்றார் .
 
"விட்டால் பேசிக்கொண்டே போகின்றார்கள் பெரியய்யா,  சொல்லுங்கோ இப்பவே இவர்கள் எல்லோரையும் பிடித்து உள்ளுக்க போடுகின்றேன் முன்னர் இருந்தது போல் முகாம்களை கொண்டுவரவேண்டும் " என்று ஒரு குரல் பாதுகாவலரிடம் இருந்து வந்தது .(இவர்தான் பின்னர் உமாவை போட்டவர் .)
 
நான் மீண்டும் எழும்பி "இவர்களால் தான் எமது அமைப்பிற்கு இன்று இந்த நிலை . இப்படி இவர்களை பேச அனுமதிக்க முடியாது " என்றேன் .
 
"நீர் உமது கருத்தை வைக்க எந்த அளவு உரிமை இருக்கோ  அதே அளவு உரிமை அவர் கருத்தை வைக்க அவருக்கு இருக்கு " என்றார் உமா .
 
இப்போதுதான் தான் நான் சுயத்திற்கு திரும்பினேன் .கதைக்க கூடாத இடத்தில் கொஞ்சம் உணர்சி வசப்பட்டு உளறிகொட்டிவிட்டேன் போலிருந்தது .என்னிடம் உமா எவ்வளவு நெருக்கமானாலும் ஒரு பெரிய விடுதலை அமைப்பின் தலைவர் என்பதும் உறைத்தது.
 
கூட்டம் முடிய கீழே இறங்கிவருகின்றேன் அலுவலக வாசலில் உமா என்னை கண்டும் காணாதது போல் கண்களை சற்று சுருக்கியபடி லேஞ்சியை எடுத்து முகத்தை துடைக்கின்றார் .முதன் முதலில் உமாவுடனான சந்திப்பு நினைவு வந்தது .
 
"மடையா  உனக்கு அறிவு இருக்கா ? எங்கு என்ன கதைப்பது என்று தெரியாதா ? இப்ப எங்கு போகின்றாய் ?  இன்று இரவு இங்கு நீ படுத்து எழும்பலாம் என்று நினைக்கின்றாயா ? வெளிக்கிடு வாறன் ." என்று பேசிவிட்டு எங்கேயோ விரைவாக போய்க்கொண்டிருக்கின்றான் ஜெர்மனால் வந்து நின்று என்னுடன் அகதி வேலை செய்துகொண்டிருக்கும் அருள்ராஜ்  .
 
சற்று பயத்துடன் அவன் செல்லும் பாதையை பார்த்துக்கொண்டு தனியே நிற்கின்றேன் .
 
இனி அடுத்து நாளை .....
Link to comment
Share on other sites

சென்னை கனவு இன்னும் முழுமையாக வாசித்து முடியவில்லை. அதிகம் களம் வரமுடியாமையால் இத்தகைய அனுபவத் தொடர்களை வாசித்து முடிக்க முடியவில்லை. தொடருங்கள் அர்யுன். ஒவ்வொரு போராளியின் அனுபவங்களும் வித்தியாசமானவை.

Link to comment
Share on other sites

நுணா ,

 

செல்வன் ,அகிலன் ,சிவனேஸ்வரன் கொலைக்கு காரணம் யார் ? இந்த கேள்விக்கு தானே பதில் கேட்கின்றீர்கள்

 

நான் சம்பந்தபட்ட விடயங்களை தான் எழுதி வருவதால் அதை எழுதவேண்டிய தேவை வரவில்லை .

 

உட்கொலை என்று நூறுவீதம் தெரியும் ஆனால் தோழர்கள் சொன்ன விடயங்கள்- முதல் இரண்டு கொலைகளுக்கும் சிவாரமும் (தராக்கி ) வெங்கட்டும்  பொறுப்பு .மற்றது உமா பொறுப்பு என்றார்கள் .

 

கடைசி நாள் நான் படுத்திருக்கும் போது ஒரு தோழர்  இந்த இடத்தில் தான் சிவனேஸ்வரன் கத்த கத்த இழுத்துக்கொண்டு வந்தார்கள் என்று சொன்னார் .அவர் ஒரு கராட்டி வீரர் அதனால் பலர் சேர்ந்து போய்த்தான் பிடித்தார்களாம் .  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கச் சுவாரசியமாக இருக்கிறது. இன்றுதான் பார்த்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள் அர்ஜுன்.

Link to comment
Share on other sites

"இன்றிரவு இங்கு படுத்து எழும்பலாம் என்ற எண்ணம் இருக்கோ"  ராஜ் சொல்லிவிட்டு போனது  மனதில் திரும்ப திரும்ப வந்துபோனது .என்னுடன் இவ்வளவு காலமும் திரிந்தவர்களே சொல்லாமல் ஓடிவிட்டார்கள் .கனடாவின் கதையாக எனது கதையும் முடிய கூடாது .சண்டையில் இறந்தால் பரவாயில்லை துரோகி முத்திரை குத்தி தொலைத்துவிடுவார்கள் .உமா சொல்லாவிட்டாலும் விசுவாசிகள் விட்டுவைக்கமாட்டார்கள்  விட்டு வெளியேறுவதைத்தவிர வழியில்லை .
 
துரையின் அலுவலகத்தில் எனது BAG  , அதற்குள் தான் எனது பணம் ,அகதிகள் வேலைக்கான பணம் ,பாஸ்போர்ட் எல்லாம் இருக்கு (டெல்கியில் நான் விட்டுவிட்டு வந்த பாஸ்போட்டை மகாநாட்டிற்கு வந்த டெல்கி நண்பர் கொண்டுவந்தது அதிசயம் தான்  அவர் அத்துடன்  தான் டெல்கியில் நடந்துகொண்ட விதம் பற்றி மன்னிப்பும் கேட்டிருந்தார் )
 
ராஜ் இன்னும் இருவருடன் வந்து "நீங்கள் மூன்றுபேரும் போய் தஞ்சை பெரியகோயிலில்  நில்லுங்கள்,  இரவு நான் அங்கு வாறன் , நான் உங்களுடன் இப்போ வந்தால் என்னால் இங்கு  திரும்பிவரமுடியாது " என்றார் . 
 
ஒரு கடைக்கு மேல் இரண்டாம் மாடியில் இருக்கும் துரையின் அலுவலகத்திற்கு சென்றால் வெளியில் பெரிய பூட்டு கதவு பூட்டியிருக்கு. கொரிடோரில் யன்னல்கள் இல்லாததால் இருட்டாக வேறு இருந்தது .அவர்கள் இருவரையும் அங்கேயே நிற்க சொல்லிவிட்டு ஒரு சயிக்கில் கடைக்கு சென்று சயிக்கில் பூட்டுதிறப்பை தொலைத்துவிட்டேன் பூட்டை உடைக்கவேண்டும் என்று ஒரு சுத்தியலும் இரவல் வாங்கி  தீப்பெட்டியுடனும் மேலே வந்து கை நடுங்க நடுங்க ஒரே அடி பூட்டு திறந்துவிட்டது .BAG ஐ  எடுத்துக்கொண்டு தஞ்சாவூருக்கு பஸ் ஏறிவிட்டோம் .
 
தஞ்சை பெரியகோவில் கிணற்றில் வந்த களை  தீர தண்ணீர் அள்ளி குடித்துவிட்டு கதைத்துக்கொண்டு இருக்கின்றோம் .சில மணிகளுக்கு பின் அங்கு வந்த  ராஜ் வந்து எம்மை கூட்டிக்கொண்டு திருச்சி போகின்றார். ஜெர்மனில் இருந்து வந்து இலங்கை இந்திய கடத்தல் வியாபாரம் செய்யும் ஒருவரின் இருப்பிடம் அது .அங்கு இரவை கழித்துவிட்டு அதிகாலை பஸ் எடுத்து சென்னை திரும்பிவிட்டோம் .
 
சென்னையில் நான் இருந்த வீட்டிற்குத்தான் வருகின்றேன் .மகாநாடு நடைபெறாததாலும் பலர் ஓடிப்போனதாலும் உரத்தநாட்டை விட்டு தலைமையும் அவர்கள் விசுவாசிகளும் இப்போதைக்கு சென்னை வரமாட்டார்கள் என்று நம்பினேன்  அங்கு நின்ற பிரசாத்  மகாநாடு அடுத்த வாரம் நடைபெறஇருப்பதாகவும் எல்லோரையும் அதற்கு வருமாறும் காலை ஒரு தோழர் கடிதம் தந்துவிட்டுபோனதாக சொன்னார் .
 
இனியும் அங்கு தங்குவது புத்திசாலித்தனமாக இருக்காது என்று ஐந்து சதத்திற்கும் கணக்கு எழுதி அத்துடன் மிகுதி பணத்தையும் பிரசாத்திடம் கொடுத்துவிட்டு அங்கிருந்த அனைத்து தோழர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு சென்னையிலேயே மிக குடிசனம் நெருக்கமான  மண்ணடிக்கு சென்று அங்கு ஒரு லோட்சில் தங்குகின்றேன் .என்னுடன் வந்த ஒருவர் தனது நண்பர்களின் இடத்திற்கு சென்று விட்டார் ,மற்றவர் குடும்பம் சென்னையில்  இருந்ததால் அவர்களிடம் சென்றுவிட்டார் .
 
சென்னையில் இது ஒரு புது அனுபவம் .பர்மா பஜார், துறைமுகம்  இரண்டும் அருகில் இருப்பதால் எங்கும் ஒரே சனக்கூட்டம் .கொழும்பு புறகோட்டையில் இருப்பது போலிருந்தது .முஸ்லிம் கடைகளில் பல நாட்களுக்கு பின் நல்ல மாமிச சாப்பாடு சாப்பிட்டது அங்குதான் .மயிர் வெட்டி தாடி வழித்து புது உருவம் எடுத்து சற்று பயம் நீங்கி திரும்ப லண்டன் செல்ல ஆயதமாகின்றேன் .நான் முன்னர்  இருந்த வீட்டிலும் ,என்னுடன் வந்தவர்  தாயார் வீட்டிலும்  தொலைபேசி இருந்ததால்  அனேகம் எல்லோருடனும்  தொடர்பில் இருந்தேன் .
தனது தாயாரும் அக்காவும்  இலங்கை திரும்புவதாகவும் இன்று ஸ்டேசனில் வழி அனுப்ப போவதாக நண்பன் சொல்ல இரவு நானும் ஸ்டேசனுக்கு சென்று அவர்களை வழி அனுப்பிவைகின்றேன் .அவர் தாய் தன் மகனின் கையை பிடித்து என்னிடம் தந்து பிள்ளையை எப்படியும் ஊருக்கு அனுப்பிவைப்பது உமது வேலை என்று எனக்கு ஒரு சந்தனபொட்டையும் வைத்து அந்த பொறுப்பையும் வேறு தந்துவிட்டு போய்விட்டார்கள்  .அவரையும் கூட்டிக்கொண்டு லோட்சிற்கு வருகின்றேன் .
 
தொலைபேசியில் ராஜ் என்னைவிட்டு ஓடிய தோழர்கள் திருவான்மியூரில் தங்கியிருப்பதாகவும் என்னை வந்து அங்கு கூட்டிக்கொண்டு போவதாகவும் சொல்லி  கூட்டிப்போனார் . அங்கு சென்றால் பல இயக்கங்களிலும் இருந்து ஓடிவந்தவர்கள் பலர் அங்கு தங்கியிருந்தார்கள் .குமணனை அங்குதான் சந்தித்தேன் .
 
அந்த நால்வரையும் நான் கேட்ட முதல் கேள்வி " ஏன் எனக்கு சொல்லாமல் என்னை விட்டு விட்டு  போனீர்கள் "  
 
"நீ எங்களுடன் எவ்வளவுதான் திரிந்தாலும் நீ உமாவின் ஆள்" என்ற எண்ணம்  தங்களுக்குள் இருந்ததாக சொன்னார்கள் . எவரையும் எவரும் நம்பாத அந்த  சூழ்நிலையில் அவர்களை சொல்லி பிழையில்லை .அவர்கள் எல்லோருமே வெளிநாடு போகும் சிந்தனையில் தான் இருந்தார்கள் அதற்கு ஒரே காரணம் "இப்போதைக்கு நாட்டில்  அரசியலும்  செய்யும்  சூழ்நிலை  இல்லை, அதைவிட எந்த இயக்கத்தால்  என்று இல்லை எவராலும் கொல்லப்படலாம்"
 
சில நாட்களில் ராஜனின் அமைப்பில் இருந்து ஒருவரை  சந்தித்தேன் . ஆரம்பத்தில் நாட்டில் நடந்த  மகாநாட்டிற்கு உமா அனுப்பிய  இருவரில் ஒருவர் .அவர் ராஜனுடனான சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தினார் .சந்திப்பு நடந்த இடம் வூட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் .இதுவே அங்கு நான் முதன் முறையாக  சென்றது .அழகான  பார்க் ,அதில் கார்களில் இருந்தபடியே சாப்பாட்டை ஒர்டர் பண்ணி  சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள் .காரின் இரு ஜன்னல்களுக்கும் இடையில் சாப்பாடு ரேயை பொருத்தகூடியதாக வடிவமைத்துஇருந்தார்கள் .  அனேகம் எல்லோரும் பணக்காரர்கள் தான் .ராஜனும் இன்னமும் இருவரும் காரிலேயே வந்திருந்தார்கள் . நாங்களும் நாலு பேர்கள் சென்றிருந்தோம் . இந்தியா ஆயுதம் தந்து தாங்கள் நாட்டிற்கு போகும் நிலை மிகவிரைவில் வரும் என்று எங்களையும் இணையும் படி கேட்டுக்கொண்டார் . நாங்கள் யாரையும் நம்பும்  நிலையில் அப்போது இருக்கவில்லை .
 
எனது அப்பாவும் இலங்கையில் இருந்து வர, லண்டனில் இருந்து பணமும் வர மீண்டும்   லண்டன் பறந்துவிட்டேன்.  என்னிடம் இருந்த மிச்ச காசை கொடுத்து எப்படியும் ஊருக்கு போய் சேர்ந்துவிடு என்று என்னுடன் நின்ற தோழரிடம் சொல்லியிருந்தேன் .நான் லண்டன் வந்து இரு மாதங்களின் பின்னர் தான் அவர் ஊர் போய் சேர்ந்தார் .தான் கரைக்கு போய் படகு ஏற தான் படாதபாடு பட்டதாக சொன்னார் .எந்த இயக்கமோ கடத்தல்காரரோ  தனது அமைப்பின் பெயரை கேட்டுவிட்டு படகில் ஏற்ற மறுத்துவிட்டார்களாம் .பின்னர் NLFT விசுவானந்ததேவரே கொண்டுபோய்விட்டாராம் .
 
லண்டன் வந்து பின்னர் கனடா வந்தும் அழகிய சென்னை கனவு போகவில்லை .பத்து வருடங்களின் பின்தான் ஓரளவு  நனவானது .
 
அடுத்தமுறை அந்த கனவை சற்று பார்ப்போம் .
 
குறிப்பு -ஏதோ பல நாட்கள் மனதில் இருந்ததை கொட்டிவிட்டேன் .இன்றும் அமைப்பில் இருந்த பலரை சந்தித்துகொண்டே இருக்கின்றேன் .பலருக்கு பழையதை பற்றி வாய் திறக்கவே விருப்பம் இல்லை சிலர் எந்த நேரமும் அதே கதைதான் அதுவும் குறிப்பாக தண்ணி போட்டால் .
எனக்கு முதல் ஓடி வந்தவர்களில் இருந்து அண்மையில் வந்தவர்கள் என்று  பல தரப்பும் இருக்கின்றார்கள் .பல குற்ற செயல் சம்பந்தபட்டவர்களிடம் இருந்து உண்மையில் என்ன நடந்தது என்று அறிவம் என்றால் அவற்றை தவிர்த்தே வருகின்றார்கள் .அந்த நிலையில் நான் இருந்தாலும் அப்படித்தான் இருப்பேன் என நினைக்கிறேன் .
என்னுடன் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை தொடர்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட நால்வரில்,
 சீசர் இந்தியா - குடும்பஸ்தர் ,இன்னமும் கலைஞன் தான் .
துரை பிரான்ஸ் -இவர்தான் எமது அமைப்பின் முற்போக்கின் மூல சக்தி .  இன்றும் நாலாம் உலகில் தான் வேலை செய்கின்றார் .
லிங்கம் லண்டன் -பெரிய முதலாளி ஆகிவிட்டார் .அண்மையில் மகளின் கல்யாணத்தை மிக ஆடம்பரமாக செய்து கனடாவிலும் சிறிய பார்ட்டி வைத்தார் நானும் போயிருந்தேன் .
ராசா -கனடா .சந்தோசமான குடும்பஸ்தர் .ஆள் மாறவே இல்லை அனைத்து முகாம் பொறுப்பாளராக இருந்த போது இருந்த அந்த எளிமை இன்னமும் மாறவில்லை . 
ராஜ்-  கனடா ,இப்பவும் எனது மாநாடு விளையாட்டை சொல்லி சிரிப்பார் .நான் அடிக்கடி சந்திக்கும் ஒருவர் .
பாபு -முகாமில் பிரச்சனை கொடுத்தவர்களில் ஒருவர் .இவர்தான் உமாவால் மகாநாட்டிற்கு நாட்டுக்கு அனுப்பபட்டு பின்னர் ராஜனுடன் சேர்ந்து என்னையும் சந்திக்க வைத்தவர் . அண்மையில் கார் திருத்தும் கராஜ் ஒன்றில் சந்தித்தேன் .கராஜ்காரரும் எமது அமைப்புத்தான் .இவனை அப்ப போடாமல் விட்டது எவ்வளவு பிழை இப்பவும் வந்து அலுப்பு தாறன் என்ற சொல்ல சிரித்துக்கொண்டு நிற்கின்றார் .இந்தியன் ஆமியுடன் சேர்ந்து ஆடாத ஆட்டம் எல்லாம் பிறகும் ஆடினவராம் .உலகத்தையே பச்சடி போட்டவர்  .
இதன் பின் நான் பதிந்த டயரி கதை முன்னர் பதிந்ததுதான் .
Link to comment
Share on other sites

புதியதோர் உலகம் புத்தகத்தை யாழ்ப்பாணம் கொண்டுபோய் சேர்கவும் அதனை வெளியிடவும் கோவிந்தன் அன்று புலிகளின் உதவியை நாடியிருந்தார் அவரிடமிருந்து ஒரு தொகை புத்தகங்களை வாங்கிய பின்னர் அதை யாழில் வெளியிடாமல் அதிலிருந்த முக்கிய விடயங்களை எடுத்து புளொட் அமைப்புக்கு எதிராக மேலும் சில விடயங்களை சேர்த்து  மானிப்பாயில் வேலை செய்த சந்ததியாரின் ஒன்று விட்ட சகோதரி ஒருவரின் கடிதமும் இணைத்து (அந்த கடிதத்தை அவரிடம் எழுதி வாங்கியது நான்தான்)சிறிய நூலாக வெளியிட்டிருந்தோம் அது நினைவில் உள்ளது

Link to comment
Share on other sites

கனடாவின் கதை என்ற பகுதியில் "முதல் ஜெர்மனி புலி பொறுப்பாளர் என்னிடம் டியுசன் எடுத்தவர் " என்று எழுதியிருந்தேன் .இது பற்றி ஜெர்மனி வாழ் புலிஎன்று உயிர் விடும் உறவுகள் கேள்வி கேட்காதது வியப்பாக இருந்தது .

 

ஒருத்தருக்கும் தெரியாது போல . :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
    • 😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
    • எல்லோருக்கும் நன்றி  "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"  
    • உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு. அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.   அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    • எங்களுக்கு தகவல்கள் துண்டு துண்டாகவே கிடைக்கின்றன. முழுமையான தகவல்களுடன் செய்தி வருவதும் குறைவு, செய்தியை பிரசுரம் செய்பவர்களும் அக்கறை எடுப்பது இல்லை. செய்தியை கிரகிப்பவர்களும் மட்டுப்படுத்தப்பட்ட  அறிவுடன் தமக்கு தெரிந்ததை விளங்கிக்கொள்கின்றார்கள்.  கல்வித்திணைக்களத்தின்/பரீட்சை திணைக்களத்தின் பங்கு இங்கு உள்ளது. நான் நினைக்கின்றேன் விசாரணைகளின் பின் பரீட்சை முடிவுகள் வெளிவிடப்படும். அல்லது இம்மாணவர்களுக்கு மீண்டும் பிரத்தியேக பரீட்சை வைக்கவேண்டும்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.