Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுக்கு திடீர் சுகவீனம்! சிகிற்சைக்காக வெளிநாட்டுக்கு அவசரப் பயணம்!

Featured Replies

 

rajapaksa_ill.pngசிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ திடீர் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைக்காக அவசரமாக வெளிநாடு ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இது குறித்த தகவல்களை வழங்க அரசாங்கத் தரப்பினர் மறுத்து வருகின்றனர்.  

நேற்றையதினம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து உலங்கு வானூர்தி ஒன்றில் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து விசேட விமானம் ஒன்றின் மூலம் வெளிநாடு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  

அவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாத நோய் ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் அவர் அமெரிக்காவுக்கே அழத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. 

இந்த விடயத்தை அரசாங்கம் மிகவும் இரகசியமாக பேணுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.pathivu.com/news/33392/57//d,article_full.aspx

ராஜபக்சே அடித்து பிடித்து சகோதரரை சந்திக்க அமெரிக்கா பயணம்.

அங்கு நிறைய குடும்ப சொத்துக்கள் இருப்பதால் பரப்புரை அமைப்புகளை வாடகைக்கு அமர்த்தி வெளிநாட்டு கொள்கைகளை மாற்ற முனைகிறார்கள்.

ஐ. நா. வால் பொருளாதார தடை வந்தால் குடும்ப சொத்து போய்விடும் என்ற பயமும் உள்ளது.

According to The Sunday Times, the Monitoring MP for Foreign Affairs, Sajin Vaas Gunawardane has signed another deal with another American public relations firm, for 6 months at a monthly fee of US$ 5,000 (Rs. 650,000) .

And, again according to The Sunday Times, "President Rajapaksa has gone abroad, to the US. The purpose of the visit is said to be private, to meet with his brother ."

Contrary to their rhetoric, the Rajapaksas cannot do without the USA. Two of the three Ruling Siblings are American Lankans. If Washington imposes travel and asset bans on top Lankan leaders and officials at the conclusion of UNHRC investigation, it will be an enormous blow to the Ruling Family.

Thus the hurry to hire multiple PR firms.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=144861#entry1036264

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கடந்த மாதங்களில்..... ஆபிரிக்காவுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டதால்....

"இபோலா" வைரஸ் தாக்கியிருக்கலாம் என்று, உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ எண்ட மாத்தையா ஆள் அவுட்டா? மாரடப்பென்றியள், பக்கவாத்கெமென்றியள், இபோலா எண்டுறியள், மகே தெய்யனே!

இவர் கடந்த மாதங்களில்..... ஆபிரிக்காவுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டதால்....

"இபோலா" வைரஸ் தாக்கியிருக்கலாம் என்று, உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன்.

 

தப்பு தமிழ் சிறியர் "மாமா" மேர்வின் சில்வாவின் மருமகனாக இருந்ததால் மஹிந்தருக்கு HIV தொற்றியிருக்கலாம் என்று நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  :D

நாம் விரும்புவது என்பது வேறு. நடப்புகளை செய்தீயாக வெளியிடுவது என்பது வேறு.

 

தானாக விமானம் ஏறிப் பயணப்பட்ட மனிதனை ஏதோ தூக்கி ஏற்றிச் சென்றது போலவும் இலங்கையின் ஜனாதிபதிப் பதவியில் சடுதியான வெற்றிடம் ஒன்று எற்படப்  பொவது போலவும் சில ஊடகங்கள செய்தி வெளியிட்டு தங்களைத் தாங்களே முட்டாளாக்கிக் கொள்கின்றன...

  • கருத்துக்கள உறவுகள்
மகிந்தவுக்கு திடீர் சுகவீனம்! சிகிற்சைக்காக வெளிநாட்டுக்கு அவசரப் பயணம்!

 

அரசியல் தந்திரம்

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன் நம்ம பொஸ் வலு கெட்டிக்காரன் - ஆள் எதோ பிளானிலதான் செய்யுது - புலம்பெயர்சுக்கு முகத்தில கரி நிச்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் தொகையான உறவுகள் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பாதிப்புகளுக்கு பொறுப்பானவர் இவ்வாறாக நோய்வாய்ப்படும் போது அது ஒருவகையில் பாதிக்க பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதாக தெரிகிறது. ஆனால் இந்த ஜனாதிபதி மட்டுமன்றி இவருக்கு முன்னர் இருந்த பலரும் ஆயுதம் தாங்கிய அமைப்புகளுக்கு தலைமை தாங்கிய பலரும் இவ்வாறான பாதிப்புகளுக்கு காரணமானவர்களாக இருப்பதை இவ்விடத்தில் நாம் மறக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஜூட், கையாலாகாத நிலையில் இப்படி நினைத்து சிலர் மனச்சாந்தி அடைவர். ஆனால் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத பலருக்கும் இதை விட கொடிய நோய்கள் வந்துள்ளதும் உண்மையே.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஜூட், கையாலாகாத நிலையில் இப்படி நினைத்து சிலர் மனச்சாந்தி அடைவர். ஆனால் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத பலருக்கும் இதை விட கொடிய நோய்கள் வந்துள்ளதும் உண்மையே.

 

 

ஆனால்  கடவுள் நம்பிக்கையுள்ளோம்  இதை நம்பவர்....

நம்மால் முடியாத போது நிச்சயம்  தெய்வம்  தண்டிக்கும் என்று.....

  • கருத்துக்கள உறவுகள்

எங்களால் கொல்ல முடியாத எதிரியை கொடிய நோயாவது கொண்டு போகட்டும் என்று நினைத்து சந்தோசப்படலாம்...ஆனால் ஒரு மகிந்தாவை கொண்டால் மட்டும் பிரச்சனை தீர்ந்திடுமா என்ன இன்னொருத்தன் வாறவன் இவனை விட கொடியவனாக இருக்க கூடும்

எங்களால் கொல்ல முடியாத எதிரியை கொடிய நோயாவது கொண்டு போகட்டும் என்று நினைத்து சந்தோசப்படலாம்...ஆனால் ஒரு மகிந்தாவை கொண்டால் மட்டும் பிரச்சனை தீர்ந்திடுமா என்ன இன்னொருத்தன் வாறவன் இவனை விட கொடியவனாக இருக்க கூடும்

ரதி நீங்கள் கூறியது முற்றிலும் சரியே.

ஆனால்  கடவுள் நம்பிக்கையுள்ளோம்  இதை நம்பவர்....

நம்மால் முடியாத போது நிச்சயம்  தெய்வம்  தண்டிக்கும் என்று.....

 

விசுகு அண்ணா!

 

ஒரு பேச்சுக்கு மகிந்த கொடிய நோய் வாய்ப்பட்டு இன்னும் சில தினங்களில் இறந்து வீடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம்.  கடவுள் நியாயம் செய்து விட்டார் என்று அர்த்தமாகுமா?

 

மகிந்தவினதும் அவர் பரிவாரங்களதும் அரக்கத்தனத்தினால் தம் வர்வையே தொலைதத்து நிற்கும் உறவுகளுக்கு குடும்பத் தலைவர்களை பறிகொடுத்து தவிக்கும் குடும்பங்களுக்கு அது எந்த வகையீல் நியாயம் சேர்ப்பிக்கும்.

 

கடவுள் (?) நியாயம் செய்ய விரும்பினால் தமீழ் மண்ணில் தாங்கொணாத் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்திக் கொடுத்து அவரும் பாவ விமோசனம் தேடிக் கொள்ளலாம்.

 

அல்லாது மகிந்தரைக் கொன்று நியாயம் கற்பித்தால் அடுத்ததாகக் கதிரையேறும் கொத்தபாயவோ அல்லது பசிலோ இதே அட்டுழியங்களைத் தானே தொடர்ந்து செய்வர்....

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் இந்த விஜயம்.. ஏலவே திட்டமிடப்பட்ட ஒன்று. இது பற்றிய செய்திகள் காமன்வெல்த் போட்டிகள் நடந்த போதே வெளியாகிவிட்டன. மகிந்த கிளாஸ்கோ போகாவிட்டாலும்.. நியுயோர்க் போவார் என்று.

 

மகிந்த 2009 மே க்குப் பின் பல தடவைகள்.. அமெரிக்கா சென்று வந்துள்ளார்.

 

பதிவின் கண்டுபிடிப்பே.. மகிந்தவுக்கு நோய் என்பது. அவருக்கு நோய் வந்தால் என்ன விட்டால் என்ன.. அவரின் அமெரிக்க விஜயத்துக்கு எதிராக அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது முக்கியமான ஒன்றாகும்..!! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களால் கொல்ல முடியாத எதிரியை கொடிய நோயாவது கொண்டு போகட்டும் என்று நினைத்து சந்தோசப்படலாம்...ஆனால் ஒரு மகிந்தாவை கொண்டால் மட்டும் பிரச்சனை தீர்ந்திடுமா என்ன இன்னொருத்தன் வாறவன் இவனை விட கொடியவனாக இருக்க கூடும்

 

தங்கச்சி! இது முற்றிலும் உண்மை.  :)
 
இனிமேல் காலத்திலை   ஈழத்தமிழனுக்கு விசர்நாய் கடிச்சாலும் அவன் பயங்கரவாதிதான். :(
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா!

 

1- ஒரு பேச்சுக்கு மகிந்த கொடிய நோய் வாய்ப்பட்டு இன்னும் சில தினங்களில் இறந்து வீடுகிறார் என்றே வைத்துக் கொள்வோம்.  கடவுள் நியாயம் செய்து விட்டார் என்று அர்த்தமாகுமா?

 

2- மகிந்தவினதும் அவர் பரிவாரங்களதும் அரக்கத்தனத்தினால் தம் வர்வையே தொலைதத்து நிற்கும் உறவுகளுக்கு குடும்பத் தலைவர்களை பறிகொடுத்து தவிக்கும் குடும்பங்களுக்கு அது எந்த வகையீல் நியாயம் சேர்ப்பிக்கும்.

 

3- கடவுள் (?) நியாயம் செய்ய விரும்பினால் தமீழ் மண்ணில் தாங்கொணாத் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்திக் கொடுத்து அவரும் பாவ விமோசனம் தேடிக் கொள்ளலாம்.

 

4-அல்லாது மகிந்தரைக் கொன்று நியாயம் கற்பித்தால் அடுத்ததாகக் கதிரையேறும் கொத்தபாயவோ அல்லது பசிலோ இதே அட்டுழியங்களைத் தானே தொடர்ந்து செய்வர்....

 

1- எனது கண் முன்னால் ஒரு கொடுமை  நடந்ததை நான் பார்த்தேன். 

என்னால் தண்டிக்கமுடியாத போது

கடவுளே  என அழத்தான் முடியும்...

 

2-

3-

4-

 

 நான் சாதாரண ஒரு  தமிழ்ப்பொதுமகன்

அந்தளவுக்கு அறிவில்லை

ஆராய்ச்சியமில்லை

தொலைந்து  போ என்று திட்டுவதற்கு முன் இவ்வளவையும்  தீர்மானிக்கவேண்டுமெனில்

ஒருத்தரும் அழமுடியாது...

 

 

இவர் போனால் நல்லது நடக்கும் என  எப்பொழுதும் கருதவில்லை

எழுதவில்லை

ஏன் நல்லதும் நடக்கலாம்

அதையும் குறிப்பிடவில்லை..

 

புலிகள் மகிந்தவைக்கொண்டுவந்தது போல

கோத்தபாய  வருவதால் (இராணுவம்) தமிழருக்கு நன்மைகள்(நீண்டுதூரப்பார்வையில்) அதிகம் வரக்கூடும்

அதையும் எழுதவில்லை..

 

நான் ஒரு பெருமூச்சுவிட்டேன் ராசா

அவ்வளவு தான்..

நன்றி கருத்துக்கம் மீள் வருகைக்கும்

எங்களால் கொல்ல முடியாத எதிரியை கொடிய நோயாவது கொண்டு போகட்டும் என்று நினைத்து சந்தோசப்படலாம்...ஆனால் ஒரு மகிந்தாவை கொண்டால் மட்டும் பிரச்சனை தீர்ந்திடுமா என்ன இன்னொருத்தன் வாறவன் இவனை விட கொடியவனாக இருக்க கூடும்

 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்களை அழிப்பது போராட்டத்தின் தடைக்கற்களை அகற்றுவது என்று நம்பியிருந்தவர்கள் அல்லவா நாம்!

ரஞ்சன் விஜேரத்தினா, காமினி திசநாயக்கா, பிரேமதாஸ, ராஜீவ் காந்தி என்று பலரையும் முடித்து, சந்திரிக்காவையும் முடிக்க முயற்சித்து, இறுதியில் மகிந்தவையும், கோத்தபாயவையும் சகல வல்லமையும் பொருந்தியவர்களாக மாற்றி எமக்கே படுகுழிகளைத் தோண்டி அதற்குள் புதைந்து, தேடினாலும் கிடைக்காத எலும்புகூட இல்லாதவர்களாக மாறிவிட்டோம்.

ஆனால் இன்னமும் தடைக்கற்களை அகற்றி சொர்க்கபூமிக்குப் பாதையைச் செப்பனிடலாம் என்ற கனவில் உள்ளோம். முன்னர் கரும்புலிகளை நம்பினோம். அவர்கள் இல்லாததால் இப்போது கடவுளை நம்புகின்றோம். அவ்வளவுதான் வித்தியாசம்.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தியடி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்களை அழிப்பது போராட்டத்தின் தடைக்கற்களை அகற்றுவது என்று நம்பியிருந்தவர்கள் அல்லவா நாம்!

ரஞ்சன் விஜேரத்தினா, காமினி திசநாயக்கா, பிரேமதாஸ, ராஜீவ் காந்தி என்று பலரையும் முடித்து, சந்திரிக்காவையும் முடிக்க முயற்சித்து, இறுதியில் மகிந்தவையும், கோத்தபாயவையும் சகல வல்லமையும் பொருந்தியவர்களாக மாற்றி எமக்கே படுகுழிகளைத் தோண்டி அதற்குள் புதைந்து, தேடினாலும் கிடைக்காத எலும்புகூட இல்லாதவர்களாக மாறிவிட்டோம்.

ஆனால் இன்னமும் தடைக்கற்களை அகற்றி சொர்க்கபூமிக்குப் பாதையைச் செப்பனிடலாம் என்ற கனவில் உள்ளோம். முன்னர் கரும்புலிகளை நம்பினோம். அவர்கள் இல்லாததால் இப்போது கடவுளை நம்புகின்றோம். அவ்வளவுதான் வித்தியாசம்.

 

இத்தாள் தாங்கள் கூற வருவது.. லலித் அத்துலத் முதலி முதல் கோத்தா வரை.. செய்தது நியாயம் என்றோ. அவர்களை அழிச்சாலும் அழிக்காவிட்டாலும்.. பேரினவாதமும்.. பிராந்திய வல்லாதிக்கமும் தொடர்ந்தே இருக்கும். எமது இனம் அழிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கும்.

 

கொல்லப்பட்டவர்கள் யாரும்.. தண்டனைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. கொல்லப்படவர்கள் அவரவர் செய்த மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாத நிலையில்.. தண்டனைக்கு ஆளானார்கள்.

 

அந்த வகையில்.. கோத்தாவும் ஓர் நாள் தண்டனை பெற்றுத்தான் தீர வேண்டும். அதனை ஒருவேளை விழித்துக் கொள்ளும் உலக.. நீதி செய்ய முனையலாம்...!

 

உங்களால் முடிஞ்சது இப்படி.. பசப்பல். செயல்.. என்று.. ஒன்றும் கிடையாது. அதிலும் தடைகளை இனங்காட்டி.. எல்லாத்தையும் கூட்டாக வைச்சிருந்து.. ஒன்றாக சேரவிட்டு அழிவதிலும் ஒவ்வொன்றா..நீக்கி.. சொல்ல வேண்டிய செய்திகளைச் சொல்லி.. அழிவது ஒன்றும்.. பெரிய கொள்கைத் தோல்வி அல்ல..! எப்படியோ அழிச்சிருப்பீர்கள்.. இது எதிர்த்து நின்று.. வெளிநாடுகளுக்கு ஓட விட்டு அழிஞ்சதால்.. உங்களால் இப்படி பேச.. எழுத முடிகிறது அல்லவா. அதற்கு தடைநீக்கிகளுக்கு நன்றி சொல்லிக்குங்க. :icon_idea:

 

லலித்தை விட்டிருந்தா.. நீங்க எல்லாம் ஓடமுதலே போட்டுத் தள்ளி இருப்பான். இப்படி எழுத கிருபன் இருந்திருக்கார். :lol:

ஹாட்லியோடு சேர்த்து தரைமட்டமாக்கி இருப்பார். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாழ் தாங்கள் கூற வருவது.. லலித் அத்துலத் முதலி முதல் கோத்தா வரை.. செய்தது நியாயம் என்றோ. அவர்களை அழிச்சாலும் அழிக்காவிட்டாலும்.. பேரினவாதமும்.. பிராந்திய வல்லாதிக்கமும் தொடர்ந்தே இருக்கும். எமது இனம் அழிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கும்.

 

கொல்லப்பட்டவர்கள் யாரும்.. தண்டனைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. கொல்லப்படவர்கள் அவரவர் செய்த மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நீதிமன்றங்களால் தண்டிக்கப்படாத நிலையில்.. தண்டனைக்கு ஆளானார்கள்.

 

அந்த வகையில்.. கோத்தாவும் ஓர் நாள் தண்டனை பெற்றுத்தான் தீர வேண்டும். அதனை ஒருவேளை விழித்துக் கொள்ளும் உலக.. நீதி செய்ய முனையலாம்...!

 

உங்களால் முடிஞ்சது இப்படி.. பசப்பல். செயல்.. என்று.. ஒன்றும் கிடையாது. அதிலும் தடைகளை இனங்காட்டி.. எல்லாத்தையும் கூட்டாக வைச்சிருந்து.. ஒன்றாக சேரவிட்டு அழிவதிலும் ஒவ்வொன்றா..நீக்கி.. சொல்ல வேண்டிய செய்திகளைச் சொல்லி.. அழிவது ஒன்றும்.. பெரிய கொள்கைத் தோல்வி அல்ல..! எப்படியோ அழிச்சிருப்பீர்கள்.. இது எதிர்த்து நின்று.. வெளிநாடுகளுக்கு ஓட விட்டு அழிஞ்சதால்.. உங்களால் இப்படி பேச.. எழுத முடிகிறது அல்லவா. அதற்கு தடைநீக்கிகளுக்கு நன்றி சொல்லிக்குங்க. :icon_idea:

 

லலித்தை விட்டிருந்தா.. நீங்க எல்லாம் ஓடமுதலே போட்டுத் தள்ளி இருப்பான். இப்படி எழுத கிருபன் இருந்திருக்கார். :lol:

ஹாட்லியோடு சேர்த்து தரைமட்டமாக்கி இருப்பார். :)

 

 

அவர் சொல்லவாறது வேற..

 

ஒரு கள்ளனை ஒழித்தால் இன்னொருவன் வராமலா இருக்கிறான்?

ஒரு வன்புணர்வாளனை ஒழித்தால்

அதைவிட பலம் கொண்டவன் வருவான்?

 

எனவே சும்மா வேடிக்கை பாருங்கள்... :(

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்லவாறது வேற..

 

ஒரு கள்ளனை ஒழித்தால் இன்னொருவன் வராமலா இருக்கிறான்?

ஒரு வன்புணர்வாளனை ஒழித்தால்

அதைவிட பலம் கொண்டவன் வருவான்?

 

எனவே சும்மா வேடிக்கை பாருங்கள்... :(

 

கிருபனிடம் கேட்டால்.. எல்லாம் பெரியார் வாயால் வீழ்த்தி விடுவார் என்று தான் சொல்லுவார். அவருக்கு சிந்தனை.. தன் வாசக எல்லைக்குள் தான்.

 

கள்வனை பிடிக்க பொலீஸ் இருப்பது கூட... அவரைப் பொறுத்தவரை அநாவசியம். ஒரு கள்வனை வளர விட்டால்.. மற்றவர்கள் தானே திருந்திவிடுவார்கள்.. பிற கள்வர்களே வரமாட்டார்கள் என்பது அவரின் இலட்சியவாதக் கொள்கை. அதுக்கு உலகம் இடம்கொடுக்கனுமே. ஒருவேளை செவ்வாயில் இதனை அமுலாக்க உள்ளார் போலும். விட்டுத்தள்ளுங்க. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாழ் தாங்கள் கூற வருவது.. லலித் அத்துலத் முதலி முதல் கோத்தா வரை.. செய்தது நியாயம் என்றோ. அவர்களை அழிச்சாலும் அழிக்காவிட்டாலும்.. பேரினவாதமும்.. பிராந்திய வல்லாதிக்கமும் தொடர்ந்தே இருக்கும். எமது இனம் அழிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கும்.

லலித்தை விட்டிருந்தா.. நீங்க எல்லாம் ஓடமுதலே போட்டுத் தள்ளி இருப்பான். இப்படி எழுத கிருபன் இருந்திருக்கார். :lol:

ஹாட்லியோடு சேர்த்து தரைமட்டமாக்கி இருப்பார். :)

நான் ஒருபோதும் சிங்களவர்கள் செய்தது நியாயம் என்று சொல்லவில்லை. சொல்லவும் போவதில்லை. எமது இனம் தொடர்ந்தும் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பது பிறர் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

எமது பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைத் தேடாமல் அரசியல் தலைவர்களை அழித்தால் தீர்வு கிடைத்துவிடும், நியாயம் கிடைத்துவிடும் என்று இப்போதும் நம்புவர்கள் எதையும் எமது அழிவில் இருந்து கற்றுக்கொள்ளவில்லை. இனியும் கற்கப்போவதில்லை. இவர்களால் முடிந்ததெல்லாம் யாகம் செய்வதும் சாபம் போடுவதும்தான்.

 

 

அவர் சொல்லவாறது வேற..

 

ஒரு கள்ளனை ஒழித்தால் இன்னொருவன் வராமலா இருக்கிறான்?

ஒரு வன்புணர்வாளனை ஒழித்தால்

அதைவிட பலம் கொண்டவன் வருவான்?

 

எனவே சும்மா வேடிக்கை பாருங்கள்... :(

என்னதான் எண்ணையைப் பூசிக்கொண்டு மணலில் உருண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் விசுகு ஐயா :lol:

 

 

கிருபனிடம் கேட்டால்.. எல்லாம் பெரியார் வாயால் வீழ்த்தி விடுவார் என்று தான் சொல்லுவார். அவருக்கு சிந்தனை.. தன் வாசக எல்லைக்குள் தான்.

 

கள்வனை பிடிக்க பொலீஸ் இருப்பது கூட... அவரைப் பொறுத்தவரை அநாவசியம். ஒரு கள்வனை வளர விட்டால்.. மற்றவர்கள் தானே திருந்திவிடுவார்கள்.. பிற கள்வர்களே வரமாட்டார்கள் என்பது அவரின் இலட்சியவாதக் கொள்கை. அதுக்கு உலகம் இடம்கொடுக்கனுமே. ஒருவேளை செவ்வாயில் இதனை அமுலாக்க உள்ளார் போலும். விட்டுத்தள்ளுங்க. :lol:

இப்படியே கிச்சுக்கிச்சு மூட்டி உங்களை எல்லாம் சந்தோசமாக இருக்க உதவிபுரிகின்றேன் என்பதையிட்டுப் பெருமிதம் கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் - நீங்களும் ஆதித்யா சேனல் subscription ஐ கான்சல் செய்துவிடுங்கள். ஐயாவும் டாக்குத்தரும் போதும். கவுண்டர் செந்த்ஹில் தோத்தார் போ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.