Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த வரவில்லை: வீணாகின நீலச்சேலைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மகிந்த வரவில்லை: வீணாகின நீலச்சேலைகள்     
670829b27aebf0b5488e27a30ff2453b.jpg

வடக்குக்கு பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

 
அதையடுத்து சில பாடசாலைகளின் ஆசிரியைகள் கட்டாயம் நீலநிற சேலைகள் அணிந்தே வர வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் சேலைகளையும் ஆசிரியைகளின் பணத்தில் கொள்வனவு செய்தனர்.
 
எனினும் யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் பாடசாலை ஒன்றிலும் ஜனாதிபதி மகிந்தோதய ஆய்வு கூடத்தை திறந்து வைப்பார் என்று கூறப்பட்டது.அதையடுத்து அங்குள்ள ஆசிரியைகளும் கட்டாயம் நீலச் சேலைதான் அணிய வேண்டும் என்று பணிக்கப்பட்டது.
 
ஆசிரியைகளின் சொந்தப் பணத்தில் சேலையை வாங்க வேண்டும் என்றும் அதுவும் 2,500ரூபா பெறுமதியான 
நீலச்சேலைகளைத் தான் வாங்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கப்பட்டது.சேலைகளும் கேள்வி கோரல் இல்லாமல் 
பாடசாலை நிர்வாகத்தால் கொள்வனவு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் ஜனாதிபதியின் வடக்குப் பயணத்துக்கான இறுதி நிகழ்ச்சி நிரலில் குறித்த பாடசாலைக்குச் செல்லும் நிகழ்வு இணைக்கப்படவில்லை.ஜனாதிபதி அந்தப் பாடசாலைக்குச் செல்ல மாட்டார் என்று அவரின் ஊடக அலுவலர் இந்திக குருப்பராய்ச்சி நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.
 
இதேவேளை 2,500 பணமும் போனது என்று தலையில் ஒரு கையும்,மறு கையில் நீலச் சேலையுமாக உள்ளனராம் அந்தப் பாடசாலை ஆசிரியைகள்.
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பாடசாலை அதிபர்கள் சிலர் நல்லாவே மகிந்த ஐயாவுக்கு வால்பிடிக்கினம் போல. :icon_idea:

 

சரி வாங்கினது தான் வாங்கிட்டீங்க.. மகிந்த ஐயா தேர்தல் பிரச்சாரத்துக்கு வரேக்க.. கட்டி.. சிங்களப் படைகளுக்கு அணி வகுத்துக் காட்டுங்கோ..! அப்புறமா வந்து தூக்கிக்கிட்டு போக வசதியா இருக்கும்..!! :lol:

யாழ் பாடசாலை அதிபர்கள் சிலர் நல்லாவே மகிந்த ஐயாவுக்கு வால்பிடிக்கினம் போல. :icon_idea:

 

சரி வாங்கினது தான் வாங்கிட்டீங்க.. மகிந்த ஐயா தேர்தல் பிரச்சாரத்துக்கு வரேக்க.. கட்டி.. சிங்களப் படைகளுக்கு அணி வகுத்துக் காட்டுங்கோ..! அப்புறமா வந்து தூக்கிக்கிட்டு போக வசதியா இருக்கும்..!! :lol:

எப்ப பாரு தமிழ் பெண்கள் என்றால் சிங்களவன் தேவைக்குத்தான் என்று உங்கள் புத்தியில் மட்டும் எப்படி தெரியுது அந்த பாடசாலையில் உங்கள் சகோதரம் உறவு இருந்தால் இப்படி எழுத வருமா  :o

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த வரவில்லை என்றவுடன்,
ஒட்டுக்குழுக்கழுக்கு, சப்பென்று போயிருக்கும்.
எப்படியோ...... 500 வருசமாய், துப்பரவு செய்யாத.... புல்லுக்குளம், துப்பரவானது மகிழ்ச்சி.

தமிழ்சிறி அண்ணா, மகிந்த குறிப்பிட்ட பாடசாலைக்கு தான் வரவில்லை. யாழுக்கு வரும் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் இல்லை.

யாழ் புகையிரத நிலைய திறப்பு விழா, யாழ் இந்து கல்லூரி, நெடுந்தீவு பயணம் போன்றவற்றை மேற்கொள்ளவுள்ளார்/ன்.

எதுவானாலும் மகிந்த வரவினால் குளங்கள் வீதிகள் சுத்தாமானால் மகிழ்ச்சியே. இது தவிர இதுவரை கடற்படையின் பாவனையில் இருந்த மக்கள் பயண படகான வடதாரகை நெடுதீவுக்கு இயங்குவதும் நன்மையே.

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப பாரு தமிழ் பெண்கள் என்றால் சிங்களவன் தேவைக்குத்தான் என்று உங்கள் புத்தியில் மட்டும் எப்படி தெரியுது அந்த பாடசாலையில் உங்கள் சகோதரம் உறவு இருந்தால் இப்படி எழுத வருமா  :o

 

தமிழ் பெண்களை சிங்களம் 1950 களில் இருந்து இலக்கு வைச்சுக்கிட்டு தான் இருக்குது. அதை எதனால் மறைக்கலாம் என்று நினைக்கிறீங்க. சீமானை இதற்குள் இழுத்துவிட்டா.

 

உங்களின் பெண் சகோதர பாசம் எந்தளவுன்னும் எங்களுக்குத் தெரியும்..!! :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆசியர்களுக்கு வேலை போனால் அவர்கள் குடும்பத்தை இவர்கள் வைத்துப் பார்ப்பினமோ? அந்த ஆசிரியர்களுக்கு உயிர் போனால் இவர்களால் திருப்பி கொடுக்க முடியுமோ:o

அந்த ஆசியர்களுக்கு வேலை போனால் அவர்கள் குடும்பத்தை இவர்கள் வைத்துப் பார்ப்பினமோ? அந்த ஆசிரியர்களுக்கு உயிர் போனால் இவர்களால் திருப்பி கொடுக்க முடியுமோ :o

 

ஏன் அவர்களுக்கு வேலை போகும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் ரதி.  அந்த ஜனநாயக நாட்டில் இவர்களின் வேலை ஏன் போக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவர்களுக்கு வேலை போகும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் ரதி.அந்த ஜனநாயக நாட்டில் இவர்களின் வேலை ஏன் போக வேண்டும்.

இலங்கை ஜனநாயக நாடா?????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனநாயக நாடா?????????????????????

 

 

அப்படித்தான் புலத்தில் சொல்கிறார்கள்

அரவணைக்கிறார்கள்

உதவுகிறார்கள்.. :(

 

அது மட்டும் இல்லையென்றால்................

  • கருத்துக்கள உறவுகள்

அப்படித்தான் புலத்தில் சொல்கிறார்கள்

அரவணைக்கிறார்கள்

உதவுகிறார்கள்.. :(

அது மட்டும் இல்லையென்றால்................

அண்ணா ஜனநாயகத்திற்கும்,இயல்பு வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருக்குது என்று நான் நினைக்கிறேன்.முந்தி இருந்ததை விட தற்போது மக்களுக்கு எல்லா அத்தியாவசிய தேவைகளையும் சிங்கள அரசு செய்து கொடுக்குது அல்லது கொடுக்க முயற்சி செய்யுது.அங்கிருக்கும் மக்களுக்கும் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடியதாக இருக்குது.ஆனால் எதாவது அவங்களுக்கு எதிராக வாயைத் திறந்தால் அவ்வளவு தான் மண்டையில் போட்டு விட்டுவார்கள்.இயல்பு நிலை இருந்தாலும் ஜன்நாயகம் நாட்டில் இல்லை.சுருக்க்மாக சொல்லப் போனால் பேச்சுரிமை,கருத்துரிமை இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா ஜனநாயகத்திற்கும்,இயல்பு வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருக்குது என்று நான் நினைக்கிறேன்.முந்தி இருந்ததை விட தற்போது மக்களுக்கு எல்லா அத்தியாவசிய தேவைகளையும் சிங்கள அரசு செய்து கொடுக்குது அல்லது கொடுக்க முயற்சி செய்யுது.அங்கிருக்கும் மக்களுக்கும் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடியதாக இருக்குது.ஆனால் எதாவது அவங்களுக்கு எதிராக வாயைத் திறந்தால் அவ்வளவு தான் மண்டையில் போட்டு விட்டுவார்கள்.இயல்பு நிலை இருந்தாலும் ஜன்நாயகம் நாட்டில் இல்லை.சுருக்க்மாக சொல்லப் போனால் பேச்சுரிமை,கருத்துரிமை இல்லை

கிட்டத்தட்ட இதை மாதிரி..

poultry_layer_chicken_cages_for_chicken_

இடைக்கிடை இவரும் வந்து போவார்..

article-2195554-14B80AAB000005DC-482_634

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு இயல்பு வாழ்க்கை என்னன்னாவே அர்த்தம் புரியல்ல.

 

தினமும் குடிகார மனைவியிடம் பேச்சு வாங்கி பழகினவனுக்கு அது இயல்பு வாழ்க்கை.

 

தினமும் பூரிக்கட்டையால மனைவியிடம் அவஸ்தைப்படுபவனுக்கு அது இயல்பு வாழ்க்கை.

 

தினமும் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளால் அவஸ்தைப்படும் தமிழனுக்கும் அதனையே இயல்பு வாழ்க்கை என்று ஆக்கிட்டினம்.

 

இதையே தங்களுக்கு வெளிநாட்டில் அந்தந்த நாடுகள் இராணுவத்தை ஏவி.. செய்தால்.. ஐயோ.. இயல்பு வாழ்க்கை போச்சுது. ஜனநாயகம் எங்க என்று கத்துவினம்.

 

எல்லாம் தாங்கள் சுகம் அனுபவிக்கனும். மற்றவன்.. அங்கின.. கொஞ்சத்தை அனுபவிக்கட்டும். அதை நாங்கள் இயல்பு வாழ்க்கைன்னு சொல்லிக்கிட்டு அங்கின ஊர் உலாப் போய் வருவம் என்பது தான் இங்கு சிலரின் இயல்பு வாழ்க்கைக் கொள்கை.

 

இன்றைய இயல்பு வாழ்க்கையை விட.. 1990 - 95 யுத்த கால இயல்பு வாழ்க்கை.. கூடிய மனித சுதந்திரமுள்ள இயல்பு வாழ்க்கையா ஊரில இருந்தது. அதுவும் இல்லாமல் போச்சுது இன்று. அதைக் கூட சரிவர சில சனத்தால் உணர முடியல்ல. இதில ஜனநாயகத்தை உள்ளபடி உணர்ந்திடுங்களா..???! :icon_idea::)

"மாற்றானுக்கு இடம் கொடேல்"
"மூர்க்கரோடு இணங்கேல்"

இதெல்லாம் படிக்க மட்டும்தான்
வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது.......

 

அண்ணா ஜனநாயகத்திற்கும்,இயல்பு வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருக்குது என்று நான் நினைக்கிறேன்.முந்தி இருந்ததை விட தற்போது மக்களுக்கு எல்லா அத்தியாவசிய தேவைகளையும் சிங்கள அரசு செய்து கொடுக்குது அல்லது கொடுக்க முயற்சி செய்யுது.அங்கிருக்கும் மக்களுக்கும் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடியதாக இருக்குது.ஆனால் எதாவது அவங்களுக்கு எதிராக வாயைத் திறந்தால் அவ்வளவு தான் மண்டையில் போட்டு விட்டுவார்கள்.இயல்பு நிலை இருந்தாலும் ஜன்நாயகம் நாட்டில் இல்லை.சுருக்க்மாக சொல்லப் போனால் பேச்சுரிமை,கருத்துரிமை இல்லை

சிறிலங்காவில் இல்லை சரி ,அது எம்மிடம் இருக்கா ? அல்லது இருந்தததா ?

வாயை திறந்தால் வாயிற்க வைக்க எம்மை விட யார் இருந்தார் ?

  • கருத்துக்கள உறவுகள்

10 வீத சனத்திற்காக இவ்வளவு முறியிறியள்

10 வீத சனத்திற்காக இவ்வளவு முறியிறியள்

பணம் இல்லாதர்களுக்குதான் பிச்சை போடுவது,  பத்து வீதம் என்று பட்டினியுடன் விட முடியாது .

 

அதே போல அறிவில்லாதவர்களுக்குதான் அறிவு பிச்சை கொடுக்க வேண்டும் , இருப்பதை  இல்லாதவர்களுக்கு   கொடுக்கின்றன் . :icon_mrgreen:

Edited by arjun

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10395185_10152228055087353_3293775163449:icon_mrgreen:

பணம் இல்லாதர்களுக்குதான் பிச்சை போடுவது,  பத்து வீதம் என்று பட்டினியுடன் விட முடியாது .

 

அதே போல அறிவில்லாதவர்களுக்குதான் அறிவு பிச்சை கொடுக்க வேண்டும் , இருப்பதை  இல்லாதவர்களுக்கு   கொடுக்கின்றன் . :icon_mrgreen:

 

அது அறிவுள்ளவர்களின் வேலையாச்சே. உங்கள் வேலையல்லவே.

அது அறிவுள்ளவர்களின் வேலையாச்சே. உங்கள் வேலையல்லவே.

எப்பவும் இல்லாதவர்கள்   அதை ஒப்புக்கொள்ளபோவதில்லை ,

 

இருந்திருந்தால் அல்லது இருப்பவன் சொன்னதை கேட்டிருந்தால்  முள்ளிவாய்கால் வரை வந்திராது .

எப்பவும் இல்லாதவர்கள்   அதை ஒப்புக்கொள்ளபோவதில்லை ,

 

இருந்திருந்தால் அல்லது இருப்பவன் சொன்னதை கேட்டிருந்தால்  முள்ளிவாய்கால் வரை வந்திராது .

 

நான் உங்களை பற்றி மட்டும் தானே சொன்னேன். முள்ளிவாய்காலை ஏன் இழுகிறீர்கள். எதுக்கெடுத்தாலும் எதுவோ எதையோ தூக்குவது போல

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்களை பற்றி மட்டும் தானே சொன்னேன். முள்ளிவாய்காலை ஏன் இழுகிறீர்கள். எதுக்கெடுத்தாலும் எதுவோ எதையோ தூக்குவது போல

 

இந்தப்பெரிய  தமிழரின் அழிவிலும்

தனது பகை  முடித்த திருப்தி உலகில் இவரைத்தவிர எவருக்கும் வராது...... :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உங்களை பற்றி மட்டும் தானே சொன்னேன். முள்ளிவாய்காலை ஏன் இழுகிறீர்கள். எதுக்கெடுத்தாலும் எதுவோ எதையோ தூக்குவது போல

 

அவர் அப்பிடித்தான்!!! அடுப்படிக்கை நிண்டாலும் அந்த நினைப்போடைதான் நிப்பார்  :icon_mrgreen:

1798144_822738291101935_9077738117297374

  • கருத்துக்கள உறவுகள்
ஆப்கானிஸ்தான் .............
லிபியா ..............
ஈராக் ............
போன்ற நாடுகளில் இருந்து வரும் புகைப்படங்களும் இந்த கதையைத்தான் சொல்கின்றன.
எம்மை நாமே ஆளும்  ஒரு நிலை வரும்போதே ............. ஒரு மனிதன் இயல்பாக சிரிக்க என்றாலும் முடியும். இல்லாவிடில் அழுவதை கூட அடக்க வேண்டிய ஒரு அடக்குமுறை எமை அழுத்தி கொண்ட இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.