Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவனா? அவன்..?? - புல்லரிக்கும் தொடர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணையா இப்படி எழுதிறார் ...... :o  
இவ்வளவு நாளும் சத்தம்போடாமல் வாசித்துக்கொண்டு வந்தேன் இனி முடியல்ல  
அண்ணை சும்மா பிஸ்டலை எடுத்து சுடப்போறார் என்று பார்த்தால் RPG யை எடுத்தேல்லோ முழக்கிறார்  
முழக்குங்கோ  அண்ணை முழக்குங்கோ ......இவ்வளவு நாளும் என்ன அண்ணை செய்து கொண்டிருந்தநீங்கள் 

  • Replies 97
  • Views 10.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருக்கும் திறமையுள்ள ஒரு இயக்குனர் இந்தக்கதையை
முதலில் குறும்படமாக்கிப் பின்னர் அதையே திரைப்படமாக மாற்றலாம்.
யாராவது முன்வருவார்களா?
வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.
தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கௌரவமாய் மனிசிட்ட உதை வாங்கியிருக்கலாம், மாமியாரிட்ட உதை வாங்குவது கொஞ்சம் கேவலம் மாதிரி இல்லையா ....ம்...ம்... முழுக்க முழுகினாப் பிறகு முகமட்டுக்கு முக்காடு எதற்கு...!! :lol::)

 

காரணம் இருக்கு... :icon_idea:

 

நன்றியண்ணா...

 

காரணத்தையும் நீங்கள் எழுதியுள்ளீர்கள்

 

நான் அறிய இருவர் இந்த விளிம்புநிலையின் எல்லைக்கே போய் பின் மீன்டுவந்து  மணமுடித்து இன்று மிகவும் சிறப்பாக உறவுகளுடன் இணந்து வாழ்கின்றார்கள், இதுக்குமேல் எழுதமுடியாது....!

 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறாக மாமியாரிடம் உதைவாங்கிய முகமட் பிரான்சில் அகதியாக தஞ்சம் கோரினான்.. :unsure:'என்னைப்போல் ஒருவன்' எனும் அடிப்படையில் விசுகு அண்ணாவிடம் கதை சொன்னான்.. :icon_idea::D

 

 

தப்பு

மீண்டும் வரவும்.... :lol:  :D

 

நன்றி  தம்பி

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணையா இப்படி எழுதிறார் ...... :o  

இவ்வளவு நாளும் சத்தம்போடாமல் வாசித்துக்கொண்டு வந்தேன் இனி முடியல்ல  

அண்ணை சும்மா பிஸ்டலை எடுத்து சுடப்போறார் என்று பார்த்தால் RPG யை எடுத்தேல்லோ முழக்கிறார்  

முழக்குங்கோ  அண்ணை முழக்குங்கோ ......இவ்வளவு நாளும் என்ன அண்ணை செய்து கொண்டிருந்தநீங்கள் 

 

 

நன்றி சகோதரா

ஒரு முயற்ச்சி தானே..

இனி  தொடரலாம்... :icon_idea:

 

நன்றி  ஐயா

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும்  வாழ்த்துக்கும் ...

  • கருத்துக்கள உறவுகள்
சின்னத்திரை சீரியல் ரசிகர்களைப்போன்று யாழ்கள வாசகர்களுக்கும் வி.பி ஏற்றி ரசிக்கிறாரோ விசுகு அவர்கள்.smiley3654.gif
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இருக்கும் திறமையுள்ள ஒரு இயக்குனர் இந்தக்கதையை

முதலில் குறும்படமாக்கிப் பின்னர் அதையே திரைப்படமாக மாற்றலாம்.

யாராவது முன்வருவார்களா?

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

தொடருங்கள்

 

 

நன்றி  தம்பி

 

நீங்கள் எழுதியபின் தான் யோசித்துப்பாரத்தேன்

ஒரு குறும்படத்தக்கான சிறிய கரு தான்..

பார்க்கலாம்.. :icon_idea:

 

நன்றி  தம்பி

நேரத்துக்கும்   ஊக்கத்துக்கும்  வாழ்த்துக்கும் ...

 

சின்னத்திரை சீரியல் ரசிகர்களைப்போன்று யாழ்கள வாசகர்களுக்கும் வி.பி ஏற்றி ரசிக்கிறாரோ விசுகு அவர்கள்.smiley3654.gif

 

 

முடிவு வேண்டும்  அவ்வளவு தானே...

இதோ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கவனித்த முகமெட்
மனைவியிடம் பேச முயன்றான்
சீ  என்றவள் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டாள்...
 
எல்லாமே போச்சு
என் வாழ்க்கை முடிந்தது
எல்லோருமே எனக்கெதிராக நிற்கின்றனர் என்பதை உணர்ந்தவன்
வாசலில் காவல்த்துறையினர் வருவதைக்கண்டு 
அப்படியே மயங்கிவிழுந்தான்.....
 
தொடரும்.......
 
முகமெட்  கண்விழித்தபோது
சிறைக்கம்பிக்குப்பின்னால் இருப்பதை உணர்ந்தான்.....
யாருமே தன்னுடன் இல்லாதது பெரும் விரக்தியாக இருந்தது.
தான் எல்லாவழிகளாலும் மாட்டுப்பட்டுவிட்டதையும்
எல்லோருமே தன்னைக்கைவிட்டு விட்டதையும்
தனக்கு எதிரான சாட்சிகளும்
தனது எதிராளியின் அதிகாரபலமும் 
இதிலிருந்து தன்னால் விடுபடமுடியாத அளவு வலுவாக உள்ளதையும் உணர்ந்தான்..
 
வாழ்வில் முதன் முதலாக
தான் எதற்குமே உபயோகமில்லாத
எதையுமே செய்யும் திறமையற்ற
உலகத்தால் கைவிடப்பட்ட 
ஒரு தூசுக்கு கூட பெறுமதியற்றவன் என  எண்ணியபோது
அவனது உடல் அவனுக்கே பாரமாகவும் அருவருப்பாகவும் இருந்தது....
 
இந்தநிலையில் தான் முகமெட்டின் தம்பி வந்தான்
அண்ணனுக்கு ஆறுதல் சொன்னான்
தான் இவனை நம்புவதாகவும்
அவனை வெளியில் கொண்டுவருவதே இனி தனது பணியாக இருக்கும் என்று ஆணித்தரமாக ஆறுதல் சொன்னான்.
முகமெட்டுக்கு நம்பிக்கை வராதபோதும்
தம்பியாவது வந்தானே
எனக்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான்..
 
முகமெட்டின் தம்பி
நேரடியாக அண்ணிக்காரியைச்சந்தித்தான்
நடந்தவற்றை சொன்னான்
அவளையும் பிள்ளையையும் சிறைக்கு அழைத்துவந்தான்
அடுத்து மாமியார் வந்தார்
நடந்தவைகளுக்கு மன்னிப்புக்கேட்டார்
அடுத்து அவர்களின் உறவுகள் வந்தனர்
ஆறுதல் கூறினர்
வழக்கை நடாத்தினர்..
 
உயர் அதிகாரி எவ்வளவு தடுக்கமுயன்றபோதும்
முகமெட்டின் குடும்ப வேண்டுகோளுக்கிணங்க
அவரது மனைவி முகமெட்டைக்காக்க முன் வந்தாள்
முகமெட் நிரபராதி என சாட்சி சொன்னாள்....
 
6 மாதத்தின் பின் முகமெட் விடுதலையானான்...
முற்றும்.
 
கதையில்வரும் சம்பவங்கள் உண்மையே.
(எனது துனிசிய  நண்பர் ஒருவரின் நண்பர் தான் முகமெட்)
 
கதையை மெருகூற்ற
தலைப்புக்கு ஏற்றது போல் கொண்டு செல்ல
சில தூண்டில்கள்   போடப்பட்டன..
அதில்
அல்லா
மதி
விதி
சுருட்டு
கை 5 விரல் தட்டுதல்
அலங்கோலமாக கிடத்தல்
................. 
 
நன்றி  உறவுகளே.
பொறுமையாக வாசித்து
என்னுடன் கூட நடந்தமைக்கும் ஊக்கவிப்புக்கும்........ :icon_idea:
 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா.. முகமட் ஒருவழியாக விடுதலையாகிவிட்டான்.. :D அதுசரி பொலிஸ்காரனின் மனைவிக்கு கடைசியில் யார் வாழ்க்கை குடுத்தது?? :icon_idea:

என்ன சார் இது?!  :o 
இறுதி அங்கத்தை ரொக்கெற் வேகத்தில கொண்டுபோய்.......
என்ன அவசரமோ?!  :D

 

நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

சின்னத்திரை பார்த்ததுபோல் ஒரு உணர்வு. வாழ்த்துக்கள் விசுகு அவர்களே !!  :rolleyes:

 

விசுகு அவர்கள் கதைமுடிக்கும் நேரம் சரியாகப் பாஞ் அங்கு பாஞ்சுவந்தார். யாராவது இதனை படமாக எடுத்தால்.... மங்களம் சொல்ல அங்கு பாஞ்சு பறந்து வருவார். :)  :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் எழுத்துநடை வித்தியாசமாய் , ( கொஞ்சம் அந்தக்கால சுஜாதா ஸ்டைல்.) இருந்தது...! அதைப் பாராட்டியே ஆகனும்..!! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா.. முகமட் ஒருவழியாக விடுதலையாகிவிட்டான்.. :Dஅதுசரி பொலிஸ்காரனின் மனைவிக்கு கடைசியில் யார் வாழ்க்கை குடுத்தது?? :icon_idea:

 

  என்னப்பா Taxi  இல் ஏற்றியவனே

ஆயுள்தண்டனையிலிருந்து தப்பி  வந்திருக்கிறான்..

எவன் வருவான் கட்டிக்க...

அவா இப்பவும் அதிகாரியின் மனைவியாகத்தான் சட்டபூர்வமாக இருக்காவாம்...

ஆனால் நான் முகமெட் என்றால்...... :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

 

(இந்தக்கருத்துக்கு  ஒருத்தர் ஓடிவந்து பச்சை  குத்தியிருக்கிறார். அவருக்கு அவ்வளவு அவசரம்  எப்பவும்...

ஒரு நாளைக்கு அறுபடப்போகுது.. :icon_mrgreen:  :lol:  :lol: .)

Edited by விசுகு

அடுத்தடுத்த பகுதிகளை இப்பதான் வாசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது. முடிவு பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். எனக்கென்னவோ கதையை உடனடியாக முடிக்குமாறு யாரோ உங்களுக்கு அழுத்தம் கொடுத்த மாதிரி இருக்கு.  :D

  • கருத்துக்கள உறவுகள்

முடிவைச் சப்பென்று உடனே முடித்தமைக்குக் கண்டனங்கள் அண்ணா. இன்னும் இரண்டு பகுதியாவது எழுதியிருக்கலாம். :( 


அடுத்தடுத்த பகுதிகளை இப்பதான் வாசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது. முடிவு பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். எனக்கென்னவோ கதையை உடனடியாக முடிக்குமாறு யாரோ உங்களுக்கு அழுத்தம் கொடுத்த மாதிரி இருக்கு.  :D

 

சத்தியமாக நான் இல்லை :lol:
 

  • கருத்துக்கள உறவுகள்

சப்பெண்டு முடிச்சு போட்டியள் :(

நான் இன்னும் கனக்க எதிர் பார்த்து வாசிச்சு கொண்டிருதனான். :wub::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா.. முகமட் ஒருவழியாக விடுதலையாகிவிட்டான்.. :D அதுசரி பொலிஸ்காரனின் மனைவிக்கு கடைசியில் யார் வாழ்க்கை குடுத்தது?? :icon_idea: வழக்கை குடுத்ததுமுகமட், வாழ்க்கை குடுத்தது - நீதிபதி

 

 

 

நல்லதொரு எழுத்துநடை, அடிக்கடி வந்து பார்ப்பேன், எப்படா அடுத்த தொடரென்று. நன்றி நல்லதொரு விறுவிறுப்பான தொடருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை, பால், புரியாணி இல்லாமலே கதையை ருசித்து மகிழும் புனிதமான யாழ்கள உறவுகளைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. அத்துடன் கதை விரைவில் முடிந்துவிட்டதே என்ற ஆதங்கம் ஆனைவரிலும் தெரிகிறது. தொடரை இன்னும் ஒரு ஆறுவாரங்களோ, மாதங்களோ இழுத்திருக்கலாம். smiley3655.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அதிகம் வதைக்கக்கூடாது உறவுகளை என அவசரமாக முடிக்க

ஏன் முடித்தீர்கள் இன்னும் கொஞ்சம் வதைத்திருக்கலாம் என்று உறவுகள் சொல்வது........ :icon_idea:

 

இதைத்தான் உண்மையான  பாசம் என்பது..

அளவு கடந்த அன்பும் பாசமும் இருப்பவர்களால் மட்டுமே இவ்வாறு ஒரே மாதிரி மற்றவர் நன்மை கருதிய அன்பைச்செலுத்தமுடியும்

நன்றி  உறவுகளே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சார் இது?!  :o 

இறுதி அங்கத்தை ரொக்கெற் வேகத்தில கொண்டுபோய்.......

என்ன அவசரமோ?!  :D

 

நன்றி!!

 

இது கற்பனைக்கதை இல்லை  என்பதால்

கருவிலிருந்து விலகிச்செல்லவில்லை அண்ணா...

அது தான் காரணம்..

கதை உங்களையும் தொட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி.

 

 

நன்றியண்ணா

ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்னத்திரை பார்த்ததுபோல் ஒரு உணர்வு. வாழ்த்துக்கள் விசுகு அவர்களே !!  :rolleyes:

 

விசுகு அவர்கள் கதைமுடிக்கும் நேரம் சரியாகப் பாஞ் அங்கு பாஞ்சுவந்தார். யாராவது இதனை படமாக எடுத்தால்.... மங்களம் சொல்ல அங்கு பாஞ்சு பறந்து வருவார். :)  :D

 

 

நன்றி  சகோதரா..

 

சில முடிச்சுக்களை நானே  வேண்டுடென்று தான் போட்டேன்

அவனை 

வாசகர்கள் கண்டு பிடிக்காதிருக்கவும்

வேளை வந்ததும் கண்டு பிடிக்கும் மாதிரியும் போட்டேன்...

(அதற்காகத்தான் சுருட்டுடன் இரண்டு தரம் நிறுத்தினேன் :D )

ஆனாலும் கதையின் ஊட்டத்தோடு மட்டுமே....

 

நன்றி சகோதரா

ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்..

(ஆனால்  சின்னத்திரை பார்க்கும பழக்கமில்லை)

அடுத்தடுத்த பகுதிகளை இப்பதான் வாசித்தேன். விறுவிறுப்பாக இருந்தது. முடிவு பிடிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் இழுத்திருக்கலாம். எனக்கென்னவோ கதையை உடனடியாக முடிக்குமாறு யாரோ உங்களுக்கு அழுத்தம் கொடுத்த மாதிரி இருக்கு.  :D

 

 

நன்றி தம்பி இணையவன்

கதையில் இவனா ? அவன் என்பது தெரிந்தபின்

இழுக்கவிரும்பாததே முடிவைக்கொண்டு வந்ததற்கு காரணம்....

எனது நோக்கம் அதுவரை தான் உற்சாகமாக இருந்திருக்கிறது என்பதை

உங்கள் எல்லோரது கருத்துக்களையும் வாசிக்கும் போது உணர்கின்றேன்...

 

அதே நேரம்

வாசகர்கள் கடுப்பாகி  முடியுங்கோ என்று சொல்லமுதல் முடிப்பதிலும் ஒரு வரவேற்பிருக்கிறது அல்லவா..

அளவுக்கு மிஞ்சினால்....

அமுதமும்  நஞ்சன்றோ...?

 

நன்றி தம்பி

ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்..

 

 

 

முடிவைச் சப்பென்று உடனே முடித்தமைக்குக் கண்டனங்கள் அண்ணா. இன்னும் இரண்டு பகுதியாவது எழுதியிருக்கலாம். :(

 

சத்தியமாக நான் இல்லை :lol:

 

 

ம்ம்ம்

இழுத்திருக்கலாம் தான் சுமே

புத்தகமாகக்கொண்டு வரும் போது யோசிக்கலாம்... :D

 

 

நன்றி சுமே..

ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்..

 

 

 

சப்பெண்டு முடிச்சு போட்டியள் 

நான் இன்னும் கனக்க எதிர் பார்த்து வாசிச்சு கொண்டிருதனான்.  

 

 

நல்ல வாசகர்களை பெற்றுத்தந்திருக்கிறது

இத்துடன் ஒதுங்குவதே நல்லது.. :icon_idea:

 

 

நன்றி சகோதரா

ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்..

 

 

 

நல்லதொரு எழுத்துநடை, அடிக்கடி வந்து பார்ப்பேன், எப்படா அடுத்த தொடரென்று. நன்றி நல்லதொரு விறுவிறுப்பான தொடருக்கு.

 

 

நன்றி உடையார் ஐயா

பெரும் விருது உங்களது  பாராட்டும்  வாழ்த்தும்   வருகையும் ஐயா..

 

நன்றி சகோதரா

ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளை சில நாட்களாக கட்டிப்போட வைத்த விறுவிறுப்பான ஆக்கம். அடுத்து என்ன நடக்க இருக்கிறதோ என்று ஓடி வந்து தேட வைத்து கதையுடன் எம்மையும் சம்பவங்களுடன் நடத்திச்சென்றீர்கள். இத்தனை திறமை கொட்டிக் கிடக்கும் விசுகு அவர்களின் எழுத்துக்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளை சில நாட்களாக கட்டிப்போட வைத்த விறுவிறுப்பான ஆக்கம். அடுத்து என்ன நடக்க இருக்கிறதோ என்று ஓடி வந்து தேட வைத்து கதையுடன் எம்மையும் சம்பவங்களுடன் நடத்திச்சென்றீர்கள். இத்தனை திறமை கொட்டிக் கிடக்கும் விசுகு அவர்களின் எழுத்துக்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். பாராட்டுக்கள்

 

 

ஆகா

பெரும் விருது

ஒரு படைப்பாளி

மற்றும் பாசமிகு அக்காவின் வாழ்த்துக்கள்...

உண்மையில் பெருமையாக இருக்கு

தொடர்ந்து எழுதவேண்டும் என்ற ஆர்வம் வருகிறது

உங்கள் எல்லோரது ஊக்குவிப்பும் இனி தொடர்ந்து கதை எழுத என்னைத்தூண்டியுள்ளது

தொடர்ந்து எழுதுவேன் என இத்தால் தெரிவித்துக்கொள்கின்றேன்...

 

 

நன்றி அக்கா

வரவுக்கும் ஊக்கத்துக்கும் நேரத்துக்கும்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.