Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய பிரதமருக்கு பரிசுப்பொருள் வழங்கக்கூட எங்களை அனுமதிக்கவில்லை; கவலை வெளியிட்டார் முதல்வர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

0405950f8a8077e53468cc3eba666c84.jpg

யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த இந்திய பிரதமர்  நரேந்திர மோடிக்கு உண்மையான எமது மனநிலையை எடுத்துக்காட்ட முடியவில்லை என வடக்கு முதல்வர்  க.வி விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். 

கடந்த 14ஆம்  திகதி  இந்திய பிரதமர் மோடி  யாழ்ப்பாணத்திற்கு விஜயம்  மேற்கொண்டிந்தார். எனினும்  பாதுகாப்பு காரணங்களைக் காட்டி  வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்  உட்பட  பலர்  பாதுகாப்பு பிரிவினரால்  அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். 

இதனால்  எங்களுடைய உண்மையான மனநிலையை கூட  வெளிப்படுத்த முடியவில்லை என முதல்வர் கவலை வெளியிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்திய பிரதமரின் வருகை குறித்து இந்திய தூதரகமே எமக்கு அறிவித்திருந்தது. எனினும்  பிரதமரின்  நிகழ்ச்சி நிரல் குறித்து டெல்லியே தீர்மானிக்கின்றது என்றும்  அங்கிருந்தே ஏற்பாடுகள்  நடைபெறுகின்றது என்றும்  எமக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதனால் பிரதமரின் நிகழ்ச்சி நிரல் குறித்து எமக்கு அறிவிக்கப்படவில்லை. இறுதிநேரத்திலேயே நிகழ்ச்சி நிரல்  வௌியிடப்பட்டது. அதற்கமைய யாழ். பொது நூலகத்தில்  இடம்பெற்ற நிகழ்வில் நாங்கள்  கலந்து கொண்டிருந்தோம்.

எனினும் அங்கு பிரதமரை வரவேற்கும்  உரை கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. அந்தநேரத்தில்  யாழ். இந்திய துணைத்தூதரக தூதுவரை அனுகி  இங்குவந்துள்ள பிரதமருக்கு வரவேற்பு உரை கூட எங்களால் கூற முடியாதா என கேட்டோம். 

டெல்லியிடம் கேட்டே பதில் கூற வேண்டும் என அவர் எங்களிடம்  தெரிவித்திருந்தார். இறுதிநேரத்திலேயே வரவேற்பு உரை வழங்க அனுமதிக்கப்பட்டோம் . அத்துடன்  பிரதமருக்கு வழங்கவென எங்களால் பரிசுப்பொருள் ஒன்றும்  கொண்டு சென்றோம் . 

ஆனால்  அதனைக் கூட உள்ளே கொண்டு செல்ல எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் பலரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்களும்  கட்டுப்படுத்தப்பட்டோம். 

அவர்களே கூட்டி வந்து அவர்களே அழைத்துச் செல்வது போல இருந்ததே தவிர இங்கு வந்த பிரதமரை நாங்கள்  அழைத்துச் சென்றோம்  என்று இருக்கவில்லை. அனைத்தையும்  டெல்லியே ஏற்பாடு செய்திருந்தது. 

பிரதமர் வருகிறார் வரவேற்பதற்கான நடவடிக்கைகளை எடுங்கள்  என்று  எம்மிடம் அறிவிக்கப்பட்டிருந்தால்  நாங்கள்  சரியாக செயற்பட்டிருப்போம். எங்களுடைய உண்மையான மனோநிலையினை கூட அவருக்கு எங்களால் எடுத்துக்காட்ட முடியவில்லை என்றும்  அவர் மேலும்  கவலை வெளியிட்டுள்ளார்.

http://onlineuthayan.com/News_More.php?id=624663924117691862

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான மனநிலையை வெளிப்படுத்தினாலும் என்ன நன்மை?? அந்தப்பக்கம் போய் அதிகாரிகள் சொல்வதைத்தான் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பிரதமர் சிறீலங்கா சிங்கள ஆட்சியாளர்க்களுக்கு.. கட்டுப்பட்டவர். பிரித்தானிய பிரதமர் தனது மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டவர். இதுதான் இரண்டு தலைவர்களினதும் விஜயத்தில் தெளிவாகத் தெரிந்த உண்மை.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் டெல்லி மயம்......இதைதான் எல்லொரும் விரும்புகிறார்கள்........ ஐயா....நீங்கள் தயாகத்திலிருந்து இவ்வளவு துணிவாக குரல் கொடுப்பதற்கு நன்றிகள்.......எங்கன்ட ஆட்கள் இனி உங்களையும் .......ல் என சொல்லப்போயினம் ......டெல்லியுடன் அனுசரிச்சு போனால்தான் உங்களுக்கு மாகாணசபை அதிகாரங்கள் கிடைக்கும்.....இல்லையென்றால் மாவட்ட அதிகாரசபபையும் கிடைக்காது...இப்படிக்கு புலபெயர் அரசியல் ஆலோசகர் :D

மோடி விஜயத்தின் போது எங்களுடைய உண்மையான மனோநிலையினை கூட அவருக்கு எங்களால் எடுத்துக்காட்ட முடியவில்லை. அவர்களே கூட்டி வந்து அவர்களே அழைத்துச் செல்வது போல இருந்ததே தவிர இங்கு வந்த பிரதமரை நாங்கள்  அழைத்துச் சென்றோம்  என்று இருக்கவில்லை. அனைத்தையும்  டெல்லியே ஏற்பாடு செய்திருந்தது என கவலை வெளியிட்டுள்ளார் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த இந்திய பிரதமர்  நரேந்திர மோடிக்கு உhயி வரவேற்பினை வழங்கவில்லையென்ற கருத்தை எதிர்கட்சி தலைவர் தவராசா முன்வைத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி  வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்  உட்பட  பலர்  பாதுகாப்பு பிரிவினரால்  அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

இதனால்  எங்களுடைய உண்மையான மனநிலையை கூட  வெளிப்படுத்த முடியவில்லை.

இந்திய பிரதமரின் வருகை குறித்து இந்திய தூதரகமே எமக்கு அறிவித்திருந்தது. எனினும்  பிரதமரின்  நிகழ்ச்சி நிரல் குறித்து டெல்லியே தீர்மானிக்கின்றது என்றும்  அங்கிருந்தே ஏற்பாடுகள்  நடைபெறுகின்றது என்றும்  எமக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பிரதமரின் நிகழ்ச்சி நிரல் குறித்து எமக்கு அறிவிக்கப்படவில்லை. இறுதிநேரத்திலேயே நிகழ்ச்சி நிரல்  வெளியிடப்பட்டது. அதற்கமைய யாழ். பொது நூலகத்தில்  இடம்பெற்ற நிகழ்வில் நாங்கள்  கலந்து கொண்டிருந்தோம்.

எனினும் அங்கு பிரதமரை வரவேற்கும்  உரை கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. அந்தநேரத்தில்  யாழ். இந்திய துணைத்தூதரக தூதுவரை அனுகி  இங்குவந்துள்ள பிரதமருக்கு வரவேற்பு உரை கூட எங்களால் கூற முடியாதா என கேட்டோம்.

டெல்லியிடம் கேட்டே பதில் கூற வேண்டும் என அவர் எங்களிடம்  தெரிவித்திருந்தார். இறுதிநேரத்திலேயே வரவேற்பு உரை வழங்க அனுமதிக்கப்பட்டோம் . அத்துடன்  பிரதமருக்கு வழங்கவென எங்களால் பரிசுப்பொருள் ஒன்றும்  கொண்டு சென்றோம். ஆனால்  அதனைக் கூட உள்ளே கொண்டு செல்ல எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் பலரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்களும்  கட்டுப்படுத்தப்பட்டோமெனவும் அவர் தெரிவித்தார்.

http://www.pathivu.com/news/38540/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியிடம் கேட்டே பதில் கூற வேண்டும் என அவர் எங்களிடம்  தெரிவித்திருந்தார். 

"வரவேற்புரையாவது செய்யிறனே.."

"ம்ஹும்.. அதெல்லாம் முடியாது டில்லிதான் முடிவெடுக்கும்.."

"நான் இந்த மாகாணத்தின் முதலமைச்சர்."

"உண்மைதான். ஆனாலும் எமது மேலாண்மைக்கு கட்டுப்பட்டவர் நீங்கள்."

நீதி: அடிமை ஒருநாளும் கேள்வி கேட்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளருக்கு சி.வி அவர்களை தெரிவு செய்ததே டெல்லிதானே..? :(

 

'ஆமாம் சாமி'ன்னு போறதைவிட்டு ரொம்ப பேசுறாரே! :lol:

 

இந்த 'ஊடலும்' ஒருவேளை டெல்லி ஏற்பாடோ..? :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரதமருக்கு பரிசுப்பொருள் வழங்கக்கூட எங்களை அனுமதிக்கவில்லை; கவலை வெளியிட்டார் முதல்வர்

 

 

இப்பவும்  ஒன்றும் கெட்டுப்போகல..

 

அரசனை நம்பி புருசனைக்கைவிடுவதைப்பற்றி  யோசிக்கவும்....

  • கருத்துக்கள உறவுகள்

அரசனை நம்பி புருசனைக்கைவிடுவதைப்பற்றி  யோசிக்கவும்....

 

 

wlorpl.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

 

wlorpl.jpg

 

 

 

ம்ம்ம்ம்ம்ம்ம்

(நீங்களே குத்தினா நான் யாரைக்கூப்பிடுவேன் ராமா - ராசா....)

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்ம்ம்ம்

(நீங்களே குத்தினா நான் யாரைக்கூப்பிடுவேன் ராமா - ராசா....)

 

Sorry..நான் குத்தவில்லை! :o:lol:

 

புருசன் என நீங்கள் சொல்ல வருவது ஈழமக்களையா? இல்லை, இலங்கை அரசாங்கத்தையா? என்ற குழப்பம். :(

 

  • கருத்துக்கள உறவுகள்

2009 மேக்குப் பின் டெல்லிதான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. இதனை அடையத் தானே டெல்லி அத்தனை பெரிய இன அழிப்பை சிங்களவர்களோடு சேர்ந்து செய்து முடித்தது.  டெல்லியின் இலக்கு எப்பவும் இதுதான். தனக்குக் கீழ் தான் தமிழர்களும்.. சிறீலங்காவின் ஆட்சியாளர்களும் இருக்கன்னு. இது விளங்காம.. டெல்லி எல்லாம் பெற்றுத் தரும் என்று தமிழ் மக்களை ஏன் சம்பந்தனும் சுமந்திரனும்.. ஏமாற்றினம்.   :icon_idea:  :lol:

அப்ப  தமிழ்நாடு ,சீமான் போன்றவர்கள்  இல்லையை ...

 

அதீதமா நம்பிட்டம்  போல   :)

  • கருத்துக்கள உறவுகள்

யாகாவாயினும் நாகாக்க

இது இந்திய மத்திய அரசின் red tape நடைமுறை. துணத்தூதரகமே பவர் இல்லாமல் டெல்கியை எதிர்பார்த்து இருந்திருக்கிறது. அப்படி இருந்தும் கோரிக்கை வைத்தவுடன் வரவேற்புரை நடத்த விட்டிருக்கிறார்கள். அனுராதபுரம் போனபோது வடமத்திய முதல்வருக்கு இதுவும் இல்லை என்பதை கவனிக்கவும்.

பரிசுப் பொருள் - ஏற்கனவே ராஜீவுக்கு நாம் கொடுத்த பரிசு பொருள் நியாபகம் வந்து தொலைத்திருக்கலாம். அதனால் பாதுகாப்பு அதிகாரிகள் கடைசி நேரத்தில் தடுத்திருக்கலாம். பரிசு கொண்டுபோக முன் அனுமதி கேட்டீர்களா?

இந்தியா தங்களது ஹெலியையே பயன்படுத்தினர். இதை இலங்கை தூக்கிப் பிடிக்கவில்லையே?

இந்த சில்லறை விடயங்களை தூக்கிப் பிடிக்கத்தான் வேணுமா?

பிரித்தானிய அரசு நடைமுறைக்கும் இந்திய முறைக்கும் பலத்த வேறுபாடுண்டு. இந்தியாவை அதன் நடைமுறையை சீர்திருத்துவதா எம் வேலை? இல்லையே.

இது புலத்தில் இருந்து அட்வைஸ் இல்லை. தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தமிழ்நாடு ,சீமான் போன்றவர்கள் இல்லையை ...

அதீதமா நம்பிட்டம் போல :)

தம்பி நீங்க வளர ரெம்ப இடமிருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

10857081_10155308234860174_6499352998231

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பரிசுப்பொருட்கள் வாங்கக்கூட முடியாத உங்களால் தமிழர்களின் உரிமைகளை எப்படி பெற்று கொடுக்கமுடியப்போகின்றது ......  :rolleyes:  :blink:

  • கருத்துக்கள உறவுகள்

யாகாவாயினும் நாகாக்க

இது இந்திய மத்திய அரசின் red tape நடைமுறை. துணத்தூதரகமே பவர் இல்லாமல் டெல்கியை எதிர்பார்த்து இருந்திருக்கிறது. அப்படி இருந்தும் கோரிக்கை வைத்தவுடன் வரவேற்புரை நடத்த விட்டிருக்கிறார்கள். அனுராதபுரம் போனபோது வடமத்திய முதல்வருக்கு இதுவும் இல்லை என்பதை கவனிக்கவும்.

பரிசுப் பொருள் - ஏற்கனவே ராஜீவுக்கு நாம் கொடுத்த பரிசு பொருள் நியாபகம் வந்து தொலைத்திருக்கலாம். அதனால் பாதுகாப்பு அதிகாரிகள் கடைசி நேரத்தில் தடுத்திருக்கலாம். பரிசு கொண்டுபோக முன் அனுமதி கேட்டீர்களா?

இந்தியா தங்களது ஹெலியையே பயன்படுத்தினர். இதை இலங்கை தூக்கிப் பிடிக்கவில்லையே?

இந்த சில்லறை விடயங்களை தூக்கிப் பிடிக்கத்தான் வேணுமா?

பிரித்தானிய அரசு நடைமுறைக்கும் இந்திய முறைக்கும் பலத்த வேறுபாடுண்டு. இந்தியாவை அதன் நடைமுறையை சீர்திருத்துவதா எம் வேலை? இல்லையே.

இது புலத்தில் இருந்து அட்வைஸ் இல்லை. தாழ்மையான கருத்து.

நீங்களா இப்படி எழுதுவது ........???
 
அண்ணை எந்த நாட்டின் தலைவர்  போனாலும் முடிந்த அளவில் தமது வாகனங்கள் விமானங்களைத்தான் பாவிப்பார்கள்.
இவர்கள் விசிட் அடிக்கும் நேரம் சொந்த நாட்டில் ஏதும் ஏடா கூடம் நடந்தால் ....
பிரச்சனையை இங்கிருந்தே கட்டுபடுத்த கூடிய வசதி அதில் இருக்கும்.
ஒட்டுகேட்பது போன்ற விடயங்களை அது தவிர்க்கும்.
 
யார் எங்கு போனாலும் அங்கு அதிகாரத்தில் இருப்பவர்களை சந்திப்பதே 
அங்கு செல்வதன் நோக்கத்தை தெளிவு படுத்தும்.
 
நியு யோர்க்கில் ஒரு நாட்டின் மரண நிகழ்வில் கலந்து கொள்ள வெளிநாட்டு பிரமுகர்கள் வந்தாலே ...
நியு யோர்க் மேஜர்தான் அவர்களை வரவேற்பார்.
 
கிந்தியா வேண்டும் என்றே தமிழர்களை அவமான படுத்தும்.
சம்மந்தரை இந்தியாதான் சுதந்திர தினத்திற்கு அனுப்பியது.
நாம் இங்கிருந்து ராஜ ராஜ தந்திரம் என்று பினாத்த வேண்டியதுதான்! 

யாகாவாயினும் நாகாக்க

இது இந்திய மத்திய அரசின் red tape நடைமுறை. துணத்தூதரகமே பவர் இல்லாமல் டெல்கியை எதிர்பார்த்து இருந்திருக்கிறது. அப்படி இருந்தும் கோரிக்கை வைத்தவுடன் வரவேற்புரை நடத்த விட்டிருக்கிறார்கள். அனுராதபுரம் போனபோது வடமத்திய முதல்வருக்கு இதுவும் இல்லை என்பதை கவனிக்கவும்.

பரிசுப் பொருள் - ஏற்கனவே ராஜீவுக்கு நாம் கொடுத்த பரிசு பொருள் நியாபகம் வந்து தொலைத்திருக்கலாம். அதனால் பாதுகாப்பு அதிகாரிகள் கடைசி நேரத்தில் தடுத்திருக்கலாம். பரிசு கொண்டுபோக முன் அனுமதி கேட்டீர்களா.

பரிசுப். பொருள் என்றதும் ராஜீவ் ஞாபகம் வந்த கோசானுக்கு இந்திய இராணுவம் கொடுத்த கொலை, பாலியல் வன்முறைகள் ஞாபகத்திற்கு வரவில்லை. அதை கூறினால் எஜமான் மனம் கோணிவிடும் என்ற பயபக்தி அவருக்கு.
  • கருத்துக்கள உறவுகள்

மருது,

கமெரன் வந்தபோது SLAF ஹெலியிலேயா பறந்தார்.

இந்தியா மினக்கெட்டு தமிழரை அவமானப்படுத்துகிறது என்பதை ஏற்க முடியவில்லை.

இந்தியாவுக்கு இலங்கையில் 4 கஸ்டமர்கள். தமிழ், சிங்களம், முசுலீம், மலையகம். நாலுபேரையும் ஒரே மாரி கவனிக்கவே விரும்பினம்.

கமரனுக்கு அப்படியில்லை - அவரின் இலக்கு london marginal seatsஇல் இருக்கும் தமிழர் வாக்குகள்.

மோடிக்கு ஒரு அரசியல், கமருனுக்கு இன்னொன்று.

ரிங்கோ,

முன்பு மகிந்தவின் விசுவாசி, பின்னர் டக்கி, இடையில ரணில், இப்ப இந்தியா!

முதல்ல நான் யாரின் அடிமை என்பதில் ஒரு தெளிவான முடிவுக்கு வாங்கோ. எனக்கே கன்பியூஸ் ஆகுது.

கோசான் யார பலசாலியோ அவர் கூறுவதே தர்மம் நியாயம் என்று வாதாடுபவர் நீங்கள். ஆகவே யார் உங்க எஜமான் என்பது சந்தர்பத்திற்கு சந்தர்ப்பம் மாறுபடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரை கண்டதில் நீங்கள் லோஜிக்கலாக பதில் இட்டு இன்றுதான் பார்கிறேன். வெல்டன்.

இப்படியே எல்லா விற்ற்ஹிலும் யோசிக்க பழகவும். கொஞ்சம் முயன்றால் முடியும்.

கமெரன் வந்தபோது SLAF ஹெலியிலேயா பறந்தார்.

........

முன்பு மகிந்தவின் விசுவாசி, பின்னர் டக்கி, இடையில ரணில், இப்ப இந்தியா!

முதல்ல நான் யாரின் அடிமை என்பதில் ஒரு தெளிவான முடிவுக்கு வாங்கோ. எனக்கே கன்பியூஸ் ஆகுது.

 

நான் எப்பவும் ஜூடியின் விசுவாசி.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறுதிருத்தம். பலசாலி கூறுவது நியாயம் இல்லை. அநியாயமாய் இருப்பினும், எம்மால் முடியாத போது, சந்தர்பம் வரும் வரை காத்திருக்கணும். அதுவரை அனுசரித்துப் போகணும்.

ஊரில் சில நேரம் மழை வீசும் போது நாணல் வளைந்தாலும், நிலையாய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறுதிருத்தம். பலசாலி கூறுவது நியாயம் இல்லை. அநியாயமாய் இருப்பினும், எம்மால் முடியாத போது, சந்தர்பம் வரும் வரை காத்திருக்கணும். அதுவரை அனுசரித்துப் போகணும்.

ஊரில் சில நேரம் மழை வீசும் போது நாணல் வளைந்தாலும், நிலையாய் இருக்கும்.

 

 

ஒப்பீடு  தப்பு....

நாணல் ஒரு போதும் தன் நிலத்தின் மீதான தனது பிடியை விட்டுக்கொடுப்பதில்லை.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.