Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலைக்காதல் - அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பரே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண தரவகுப்பு

நான் ஒரு பிரிவு (வகுப்பு)

அவனும் அவளும் இன்னொரு பிரிவு(வகுப்பு)....

 

மூவரும் முதல்வரிசை மாணவர்கள்

படிப்பு பற்றியே அதிகம் பேசினாலும்

வயதுக்குணங்களும் இடைக்கிடை வந்து போகும்....

 

பாடசாலைக்காலங்களில் அதிகம் நான் பகிர்ந்து கொண்டது அவனிடம் தான்...

அவனும் அப்படித்தான்...

இவன்  எனக்கு உறவு என்றாலும் நட்பும் இவன் தான்

அவளும் அப்படித்தான்

உரிமையோடு பழகுவாள்....

இருவரும் என்னிடம் கொட்டியதில் இருவருக்கும் ஒரு காதல் இளையோடி இருப்பதை அறிந்தாலும்

இருவரும் தேவையென்பதாலும்

இதை வெளியிடப்போய் விரிசல் வந்துவிடுவோ என்ற பயத்திலும் தவிர்த்து வந்தேன்...

 

 

அவளிடமும் இவன் மீது நாட்டமிருப்பது  தெரிந்தாலும்

பெண் என்பதால் சிலசங்கடங்களும் கணிப்பு சரியா என்ற தயக்கமும்

தப்பாக நினைத்துவிடுவாளோ  

இந்தப்பிரிவு எம்மை நிரந்தரமாக பிரித்துவிடுமோ என்ற பயமும்

சில மாதங்களைத்தின்றுவிட ...

 

பரீட்சை தொடங்க

அதில் கவனம் செலுத்தினாலும்

பரீட்சை முடிந்ததும் நிரந்தரமாகப்பிரியப்போகின்றோம் என்ற நினைவு வரும் போதெல்லாம்

என்னை உதவும்படி  நச்சரிக்கத்தொடங்கிருந்தான்..

நானும் சாடைமாடையாக அவளிடம் இவனைப்பற்றிப்பேசும் போதெல்லாம்

அவளது வெட்கமும் நிலத்தில் கோடு போடுதலும் புன்சிரிப்பும் 

ஒரு நிலைப்பாட்டுக்கு என்னை வரவழைத்தாலும்

அவர்கள் இருவரும் நேரடியாகப்பேசுவது தான் சரியாக இருக்கும் என்பதால்

அவனை அதற்கு தயார்ப்படுத்தலானேன்......

 

இறுதிநாள் பரீட்சை முடிந்து

நாம் பிரியும் அந்த நாளும் வந்தது...

இருவரும் பேசுவதாக இல்லை.....

பிரியும் நேரமும் வந்தது.....

 

தொடரும்....... :icon_idea:

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்த இடத்தில், தொடரும்.... என்று போட்டு விட்டீர்கள் விசுகர். :rolleyes:

பிறகு என்ன நடந்தது? 

ஆரம்பம் அமர்க்களம்!!  :o

 

https://www.youtube.com/watch?v=Y4WGotsRPSs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்த இடத்தில், தொடரும்.... என்று போட்டு விட்டீர்கள் விசுகர். :rolleyes:

 

நன்றி  சிறி

இதில் தான் தொடரும் போடமுடியும்

ஏனெனில்  இன்னொரு பகுதி தான் வரும்...

 

நன்றி  நேரத்துக்கும் கருத்துக்கும்............

பிறகு என்ன நடந்தது? 

ஆரம்பம் அமர்க்களம்!!  :o

 

மோதிரக்கையால் வாழ்த்து

நன்றியண்ணா......

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் அட்டகாசம்... அப்படியே தொடருங்கள்...!! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுத்த இடத்தில் தொடரும் என்று போட்டு விட்டீர்கள் .

கதை நன்றாக ஆரம்பித்திருக்கிறது . விரைவில் தொடருங்கள் .

காதல் கதை என்றால் எனக்கு மிகவும் விருப்பம் .

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மலரும் நினைவுகள் மலர்ந்து மணம் பரப்புது....அட்டகாசமான ஆரம்பம் அசத்துங்கள் விசுகு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் அட்டகாசம்... அப்படியே தொடருங்கள்...!! :D

 

 

நன்றியண்ணா.....

 

கன காலமாக தொண்டைக்குள் நின்றது...

இன்று வெளியில போட்டாச்சு... :icon_idea:

பொறுத்த இடத்தில் தொடரும் என்று போட்டு விட்டீர்கள் .

கதை நன்றாக ஆரம்பித்திருக்கிறது . விரைவில் தொடருங்கள் .

காதல் கதை என்றால் எனக்கு மிகவும் விருப்பம் .

 

நன்றி  சகோதரி...

இன்னொரு பகுதி தான்

கனக்க இழுக்காது...

யாழில் மலரும் நினைவுகள் மலர்ந்து மணம் பரப்புது....அட்டகாசமான ஆரம்பம் அசத்துங்கள் விசுகு.

 

ஆகா

இன்னொரு மோதிரக்குட்டு....

 

நான் பதிபவை அனுபவங்கள் மட்டுமே..

அதனால் அவை உயிருள்ளவையாகவும்

உணர்வுள்ளனவையாகவும் இருக்கலாம்..

 

நன்றி  அக்கா..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறுதிநாள் பரீட்சை முடிந்து

நாம் பிரியும் அந்த நாளும் வந்தது...

இருவரும் பேசுவதாக இல்லை.....

பிரியும் நேரமும் வந்தது.....

 

பரீட்சை முடிந்து மண்டபத்தைவிட்டு வெளியில் வந்தாச்சு..

பரீட்சை பற்றியும்

பதில்கள் பற்றியும்

எமது பரீட்சைத்தரநிலை பற்றியும்

விடுமுறையைக்கழிப்பது

அடுத்த படிப்பு என 

ஒவ்வொருவராக பேசியபடியும் விடைகொடுத்தபடியும்

நான் இருந்தாலும்

இன்றைக்கு இவர்களது சிக்கலுக்கு ஒரு விடை தெரிந்தாகணும் என்பதால்

அவர்களையே நோட்டம்விட்டபடி இருந்தேன்..

அவர்களும் அதே நோக்கத்தில் இருப்பது தெரிந்தது

மெல்ல மெல்ல கூட்டம் கலைந்து

இறுதியில் நாங்கள் மூவரும் மட்டும் மிஞ்சியிருந்தோம்....

 

சொல்லடா

சொல்லடா என நான் அவனுக்கு சைகை காட்டியபடி

அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன்....

ஆனால் அவனும் சொல்வதாக இல்லை..

இனி  பாடசாலைக்குள் நிற்கமுடியாது என்பதால் மூவரும் அசையத்தொடங்கினோம்...

 

ஒரு 100 மீற்றர் அசைந்து வந்ததும்

நானும் அவனும் ஒரு பக்கமாகவும்

அவள் இன்னொரு பக்கமாகவும் பிரியும் சந்தி  வந்தது...

அதில் சில நிமிடங்கள் கடந்ததே தவிர

ஒரு முன்னேற்றமும் இல்லை..

 

எமது வீட்டுக்கு அவள் செல்லும் வழியாலும்  போகலாம்

சரி அதால போவோம் வா என அவனை அழைத்தபடி சென்று கொண்டிருக்கின்றோம்...

கதை பல திசைகளையும்  தொட்டுவந்தாலும்

காதலை மட்டும் தொடுவதாக இல்லை.

ஒரு நூறு மீற்றரைக்கடக்க ஒரு மணி நேரம் இழுத்தாலும்

இன்றைய சங்கதி அசையவே இல்லை...

 

மீண்டும் சந்தி

இனி ஒன்றாக செல்லமுடியாது

பிரிந்தாகணும்

இரண்டாகப்பிரியும் இரு ஒழுங்கைக்கு முன் வயல்வெளியில் ஒரு கிணறு

(இத்துடன் இது 3வது கிணறு...)

 

கிணற்றுக்கட்டில் ஏறி இருந்தபடி கதை போகுது

கதைத்ததையே திரும்பத்திரும்ப....

 

கிணற்றுக்குள் எட்டிப்பார்ப்பது

ஆளையால் அதில் பார்ப்பது

சிறு கற்களை எடுத்து  கிணற்றுக்குள் எறிவது

அதை ரசிப்பது 

நேரம் போகுதே தவிர

முக்கிய புள்ளியைத்தொடவே இல்லை...

 

சூரியனும்  பொறுமையிழந்து விடைபெறத்தொடங்கிவிட்டார்

அவர் போனால் நாளை வருவார்

நாங்க...

 

என் நச்சரிப்புத்தாங்க ஏலாதவன் என்னைத்தனியே கூப்பிட்டு

நீங்க தொடக்கி விடுங்க மீதியை நான் பார்க்கின்றேன என்றான்...

அடப்பாவி 

மீண்டும் ஆரம்பத்திலிருந்தா

என்னால் முடிந்தால் எப்பொழுதே செய்திருப்பேனே...

கை காலெல்லாம்  நடுங்குதடா

ஆளைவிடு என்றதும் கெஞ்சத்தொடங்கினான்..

சரி சரி என்னால் முடிந்தவரை ரை பண்ணுறன் என்றுவிட்டு

அவளிடம் சென்ற நான் நிலத்தில் நானும் கோடு போடலானேன்.......

நேரத்தை கணக்கெடுத்து

அவன் ஏதோ ஒன்று உன்னிடம் சொல்லணுமாம் என்றேன்

என்னவாம் என்றாள்

அதை அவனே சொல்வான் என்றுவிட்டு நான் பின்வாங்கி

அவனை முன்னுக்கு நகர்த்தினேன்.....

 

இருவரம் சிறிது நகர்ந்து ஒழுங்கைகள் பிரியும் இடத்திற்கு சென்றனர்

நான் கிணற்றுக்கட்டிலேயே நின்று கொண்டேன்

அங்கே போயும் வேற கதை நடக்குது

வேலியில கதியால ஒடிக்கிறதும்

அதை முறிக்கிறதும் அதால வேலியை அடிக்கிறதும்

வாய்க்குள் வைத்து கடிக்கிறதும் என்று போகுதே தவிர.............

 

சூரியனுக்கே கோபம் வந்துவிட்டது போலும்

அவரும் ஆத்திரத்தில் திடீரென காணாமல்ப்போக இருட்ட ஆரம்பித்திருந்தது

நான் போகும் நேரம் வந்துவிட்தை உணர்த்த

அவர்களை அவசரப்படுத்த

எனது வீடடுக்கு போகும் ஒழுங்கை நோக்கி நடக்கத்தொடங்கினேன்.....

 

அவனும் அவளும் விலகத்தொடங்கினார்கள்

எந்தவித தகவல்களும் பரிமாறப்படவில்லை

என்னால் அதற்கு மேல் எதுவும் செய்யமுடியவில்லை...

எங்கள் மூவரின் தலைகளும் மறையும்வரை  திரும்பிப்பார்ப்பதும்

கை அசைப்பதுமாக பிரியமுடியாமல் விடைபெற்றோம்...

கடைசிப்பிரிவு

அதன் பின்னர் நாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் சேரவே இல்லை....

அவர்கள் இருவரும் சந்திக்கவே இல்லை...

அன்றைய பிரிவு இவ்வாறு தான் நடக்கப்போகிறது என்பதை நாம் உணர்ந்திருக்கவுமில்லை..

காலம் அதன்  ஓட்டத்தில் எல்லாவற்றையும் மாற்றிவிடும்

வாழ்க்கை அதன் வழியே ஓடிக்கொண்டிருக்கும்

அது தடைப்படுவதே இல்லை... 

முற்றும்..

 

(இதன் தொடர்ச்சியாக இன்னொரு பகுதி வரும். விரைவில். அது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும்.)

நன்றி

Edited by விசுகு

ஆ..கா..... வர வர நன்றாக எழுதுகின்றீர்கள் விசுகு அண்ணா. ஒரே மூச்சில் வாசிக்கும் அளவிற்கு விறுவிறுப்பாகவும் உணர்வுள்ளதாகவும் எழுதியுள்ளீர்கள்.

விரைவில் நீங்களும் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளராக ஆகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை :)  தொடருங்கள் வி.அண்ணா!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிரமத்துக் காதலின் தயக்கத்தை பாரதிராஜாவும் பாதிதான் சொல்லியிருக்கின்றார் என்பதை இந்தப் பகுதியைப் படித்தபின் தெரிந்து கொண்டேன்...!

 

ப்பா... என்ன ஒரு ஆளுமை...!! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ..கா..... வர வர நன்றாக எழுதுகின்றீர்கள் விசுகு அண்ணா. ஒரே மூச்சில் வாசிக்கும் அளவிற்கு விறுவிறுப்பாகவும் உணர்வுள்ளதாகவும் எழுதியுள்ளீர்கள்.

விரைவில் நீங்களும் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளராக ஆகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை :)  தொடருங்கள் வி.அண்ணா!

 

நன்றி  சகோதரி..

 

அந்தளவுக்கு எந்த ஆசையுமில்லை

நோக்கமும் இல்லை

 

ஆனால் ரஐனி வசனம் தான்

எம்மிடம் எதுவுமில்லை

முடிவுகளை எடுக்க நாம் யார்?

அது தான் நடக்குமென்றால் வந்து தானே தீரும்...

காலமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது

ஆனாலும் அப்படி அமைந்தாலும்

என்வழி

தனிவழியாகவே இருக்கும்..... :icon_idea:

 

நன்றி சகோதரி

வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும்..

ஒரு கிரமத்துக் காதலின் தயக்கத்தை பாரதிராஜாவும் பாதிதான் சொல்லியிருக்கின்றார் என்பதை இந்தப் பகுதியைப் படித்தபின் தெரிந்து கொண்டேன்...!

 

ப்பா... என்ன ஒரு ஆளுமை...!! :)

 

 

நான் மிகவும் மதிக்கும் அண்ணாவிடமிருந்து மிகப்பெரிய விருது.

இதற்கு ஏதாவது உந்து துணை இருக்கிறது என்றால்

எதையும் கொட்ட களம் தந்த யாழுக்கும்

அதை சரியாக பயிருக்கு விட்ட யாழ் உறவுகளுக்கும் தான் அந்த வாழ்த்துக்களும் விருதுகளும் சேரும்.

 

நன்றி அண்ணா

வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும்..

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அதிர்ச்சி எண்டாலும் பரவாயில்லை உடனே எழுதிவிடுங்கள் விசுகு அண்ணா. :rolleyes:

நன்றாக எழுதுகிறீங்கள் அண்ணா. தொடர்ச்சியை எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா நம்ம விசுகரிடம் எழுத்துவல்லமை அதிகமாகவே இருக்கின்றது. தொடருங்கள்.

மின்சார கனவா விசுகர் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் போற போக்கைப் பார்த்தால் கோடாம்பாக்கத்தில் தான் நிற்பார் போல கிடக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன அதிர்ச்சி எண்டாலும் பரவாயில்லை உடனே எழுதிவிடுங்கள் விசுகு அண்ணா. :rolleyes:

 

 

எது  தற்பொழுது இதை இங்கு எழுதத்தூண்டியது..?

அது தான் அடுத்து வரும்..

 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி  சுமே...

நன்றாக எழுதுகிறீங்கள் அண்ணா. தொடர்ச்சியை எழுதுங்கள்.

 

 

நன்றி  தம்பி....

 

ஒவ்வொருவரிடமிருந்து ஒவ்வொன்று எம்மிடம் தொத்திக்கொள்கிறது

அந்தவகையில் இயற்கையாகவே உள்ள நகைச்சுவை உணர்வை மெருகூட்ட

உங்களது பாணியும் என்னை வலுச்சேர்க்கிறது..

உங்களை அறியாமலேயே நீங்கள் விதைப்பவை இவை

நீங்களும் தொடருங்கள்...

 

நன்றி தம்பி

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா நம்ம விசுகரிடம் எழுத்துவல்லமை அதிகமாகவே இருக்கின்றது. தொடருங்கள்.

 

நன்றி அண்ணா

எல்லாம் உங்கள் போன்றவர்களின் ஆசீர்வாதமும் தூக்கிவிடலும் தானண்ணா..

 

நன்றியண்ணா

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்து பச்சையும் குத்தியுள்ளேன் ...தொடருங்கள் அந்தநாள் ஞாபகங்களை....உங்கள் தொடர்களை வாசிக்கும் பொழுது எனக்கு இளமை ஊஞ்சலாடுகிறது :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சார கனவா விசுகர் :lol:

 

நன்றி அண்ணா

 

அதே...

கன காலமாக நெஞ்சுக்குள் கிடந்த விடயம் ஒன்று

இதில் சம்பந்தப்பட்ட மூவரைவிட

எவருக்கும் தெரியாதது இது..

 

தற்பொழுது சொல்லலாம் என தள்ளிய விடயம்

பக்குவம் என நினைக்கின்றேன்

இது இனித்தெரிய வந்தாலும்

எவரும் தப்பாக எடுக்கமாட்டார்கள்

அவரவர் துணை மற்றும் பிள்ளைகள் உட்பட...

ஏனெனில்அப்பொழுது எமக்கு வயசு 15-16

அந்த வயதை எமது மூவரின் பிள்ளைகளும் கடந்துவிட்டார்கள்.

ஆனாலும் ஆட்களைக்கண்டுபிடிக்காதபடி

அங்கங்கே சில திசை மாற்றங்களைச்செய்திருக்கின்றேன்.

 

நன்றி அண்ணா

வருகைக்கும் கருத்துக்கும் நேரத்துக்கும்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் போற போக்கைப் பார்த்தால் கோடாம்பாக்கத்தில் தான் நிற்பார் போல கிடக்கு.

 

 

 

 

நன்றியண்ணா

நீங்கள் கோடம்பாக்கம் என எழுதியதும்

சுவியண்ணா பாராதிராசா பற்றி எழுதியதும்

கொஞ்சம் நினைத்துப்பார்த்தேன்

 

நான்

அவன்

அவள்

அந்த இடம்

கிணறு

வயல்

சூரியன்

ஒழுங்கைகள்

பனை மரங்கள்

வேலி மற்றும் கதியால்கள்....

அப்படியே கண் முன் நீற்கின்றன

அவற்றை அவ்வாறே என்னால் இன்றும் அமைக்கமுடியும்....

அது ஒரு கனாக்காலமண்ணா.... :wub:

 

நன்றியண்ணா

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசித்து பச்சையும் குத்தியுள்ளேன் ...தொடருங்கள் அந்தநாள் ஞாபகங்களை....உங்கள் தொடர்களை வாசிக்கும் பொழுது எனக்கு இளமை ஊஞ்சலாடுகிறது :D

 

 

நன்றி புத்தர்

 

இதை எழுதமுதல் எனக்கொரு எண்ணம் இருந்தது

இக்கதை போல் இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும்

நாம் ஒவ்வொருவரும் தாண்டி வந்த பருவம்

பாதை

 

ஒருவரையாவது இது  எழுதத்தூண்டினால் அதுவே  இதன் வெற்றி..

தயாரா புத்தரே... :D

 

நன்றி சகோதரா

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தர்

 

இதை எழுதமுதல் எனக்கொரு எண்ணம் இருந்தது

இக்கதை போல் இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும்

நாம் ஒவ்வொருவரும் தாண்டி வந்த பருவம்

பாதை

 

ஒருவரையாவது இது  எழுதத்தூண்டினால் அதுவே  இதன் வெற்றி..

தயாரா புத்தரே... :D

 

நன்றி சகோதரா

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்

 

என்ட அந்த நாள் ஞாபகமும் எழுத இருகின்றேன் ஆனால் தற்பொழுதல்ல .....நேரம் தான் முக்கிய பிரச்சனை ...நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் எழுதுவேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரியும் இடத்திலாவது இருவரும் மனம் திறப்பார்கள் என்று நினைத்தேன் . ஏமாற்றி விட்டீர்கள் .

அது சரி , என்ன ஒரு அதிர்ச்சிக்கு தயாராகும்படி முன் எச்சரித்து விட்டீர்கள் . எப்பொழுது நீங்கள் மூவரும் மீண்டும்

சந்தித்தீர்கள் ? திரைப்படங்களில் வரும் Climax மாதிரி காத்திருக்க வேண்டியது தான் .

ஒவ்வொருவரும் அந்த நாள் ஞாபக கதைகளை அவிழ்க்க போயினம் . :wub:  இனி யாழில் கொண்டாட்டம் தான் போங்க :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.