Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு மாப்பிளைகளால் மனம் உடைந்த உள் நாட்டு மாப்பிளைகள்

Featured Replies

வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்ய காதலி முடிவெடுத்ததால் பட்டதாரி மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கிறான்.

 

இன்னும் யாரும் இந்தப் பிரச்சனையை பெரியளவில் பேசத் தொடங்கவில்லை. வெளிநாட்டு மாப்பிள்ளைகள் ஈழத்தில் வாழும் இளைஞர்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறி வருகிறார்கள்.

 

விரைவில் யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அடி விழும் என்று எதிர்பார்க்கிறேன்.

நான் தாயகத்திற்கு சென்ற பொழுது உறவுக்கார இளைஞன் ஒருவன் கேட்டான்…

 

‘நாங்கள் காதலிக்கின்ற பெண்களை வெளிநாட்டில் இருந்து வந்து தூக்கிக் கொண்டு போகின்றார்கள்! இது நியாயமா?’

 

நான் சிரித்துக் கொண்டே பதில் சொன்னேன்..

 

‘தம்பி…. திரைப்படங்களில்தான் நீங்கள் ஹீரோ, வெளிநாட்டு மாப்பிள்ளை கடைசியில் வந்து தியாகம் செய்து விட்டு போவான், அல்லது அடிவாங்கி ஓடுவான், ஆனால் உண்மையான வாழ்க்கையில் நாங்கள்தான் ஹீரோ, கடைசிக் கட்டத்தில் வந்து நீங்கள் காதலிக்கும் பெண்களை தூக்கிக் கொண்டு போய் விடுவோம்’

 

என் எகத்தாளத்தை அவன் ரசிக்கவில்லை. தலையைக் குனிந்து கொண்டு சோகமாக நின்றான்.

 

அங்கே இருக்கின்ற பெரும்பாலான பெண்களுக்கு சிறுவயதிலேயே வெளிநாட்டுக் கனவு வளர்க்கப்படுகிறது. தன்னுடைய எதிர்காலத்தை வெளிநாட்டில் கற்பனை செய்தபடிதான் அவர்கள் வளர்கின்றார்கள்.

 

இடையில் காதல் என்பது ஏற்பட்டாலும், அதற்காக அவர்கள் தங்கள் கனவினை விடத் தயாராக இல்லை. இதில் அந்தப் பெண்களை தவறு சொல்லவும் நான் விரும்பவில்லை.

 

ஈழத்தில் வாழும் இளைஞர்கள் பெண்களிடம் ‘உனக்கு வெளிநாடு செல்லும் ஆசை இருக்கிறதா?’ என்று கேட்டு உறுதிப்படுத்தி விட்டு காதலிக்க தொடங்குவது நல்லது.

 

இதையும் மீறி ஏமாந்து போனாலும் கூட அதற்காக உயிரை விடுவதும், அந்தப் பெண்ணைப் பற்றி இணையத்தில் போட்டு அவமானப்படுத்துவது எல்லாமே கடைந்தெடுத்த முட்டாள்தனம்.

 

வாழ்ந்து பாருங்கள்! வாழ்க்கையில் ஆயிரம் காதல்கள் வந்து போவதை உணர்வீர்கள்!

 
  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் வாழும் இளைஞர்கள் கொஞ்சம் "சுறுசுறுப்பாக" இருந்தால் இந்தப் பிரச்சினை வராது.. :icon_idea::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கை பார்த்தால் புலம்பெயர்ந்த மாப்பிளையளுக்கு பொச்சுமட்டை அடி நிச்சயம் எண்டு நினைக்கிறன்.  :icon_idea:

சந்தர்ப்பம் பார்த்து எழுதப்பட்ட சுத்த வெடிக்கதை.

  • கருத்துக்கள உறவுகள்

அய்... ஜாலி, எங்களுக்கு, மவுசு கூடியிருக்கு.
தலைக்கு, "டை" அடிக்கத்தான்.... இருக்கு.

சந்தர்ப்பம் பார்த்து எழுதப்பட்ட சுத்த வெடிக்கதை.

வெளி நாட்டு மாப்பிள்ளை என்ன புதிதாக வந்தவரா ? அவர் தான் 1980 லில் இருந்து பிரபலமே!! இது பண்டும் என்று சம்தர்ப்பம் பார்த்து எழுதப்பட்ட கட்டுரை.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பம் பார்த்து எழுதப்பட்ட சுத்த வெடிக்கதை.

 

 

இல்லை

 

எமது சமுதாயத்தில் வளர்ந்து வரும் ஒரு ஆபத்து பற்றி  நாம் பேசாமல் இருக்கமுடியாது....

வெளிநாடுகள் பற்றியும்

பகட்டுவாழ்வு பற்றியும் கனவு காணும்

ஆண் பெண் இரு பாலாரும் இதற்கு பலியாகிறார்கள்....

இதில் வெளிநாட்டுப்பெண்கள் உள்ளுர் ஆண்களை ஏற்க பின்னடிப்பதால்

அது கொஞ்சம் பெரிதாக வரவில்லை

 

ஆனால் வெளிநாட்டு மாப்பிளைகள்

பணத்தை பகட்டைக்காட்டியும்

வேறு சில காரணங்களுக்காகவும் தாயகப்பெண்களை  மணக்கிறார்கள்

 

இது தாயகத்துக்கும் புலத்துக்குமான ஏற்றத்தாழ்வால் வருவது.....

இது 80 களிலிருந்து வந்தாலும் தற்பொழுது

அதுவும் போரின் பின் மிகவும் அதிகரித்துள்ளது

இதை தவிர்க்கமுடியுமா எனத்தெரியவில்லை....

கள உறுப்பினர் (ஜேர்மன்) சபேசன் தன் முக நூலில் போட்ட நிலைச் செய்தியை இங்கு செய்தியாக ஜேவிபி தளம் (அவர் பெயரையும்) குறிப்பிட்டு வெளியிட்டு இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

 

வாழ்ந்து பாருங்கள்! வாழ்க்கையில் ஆயிரம் காதல்கள் வந்து போவதை உணர்வீர்கள்!

அதெண்டால் உண்மைதான்.. இப்ப இரண்டு ஓடிண்டிருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பம் பார்த்து எழுதப்பட்ட சுத்த வெடிக்கதை.

அப்படி இருக்காது...எந்த ஒரு விடையத்தையும் நாங்களாக முன்வந்து சொன்னால் அந்த நேரத்தில் சொல்பவரது விடையத்தை யாரும் கவனிப்பது குறைவு..ஏதாவது ஒரு சம்பவம் நடந்ததன் பின் எழுதும் போது தான் சற்னேனும் உண்மையை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்....

  • தொடங்கியவர்

இதில் உண்மை இருக்கு, நான் கேள்விப்பட்டு இருக்கிறேன், அதனால் தான் இத் தலைப்பை இணைத்தேன். 

 

வெளி நாட்டில் பெரும்பாலானவர்கள் படும்பாடு அங்குள்ள மக்களுக்குத் தெரியாது. இங்கு இருந்து போய் மரத்தாலை காசு வாறது மாதிரி நடிச்சால் ...... அவையும் தாங்களும் வந்து புடுங்குவம் என்று ..........

 

சும்மா ஊரில் இருந்திட்டு வந்த அம்மாமார், அம்மம்மாமார், தாத்தாக்கள், பாட்டாக்களுகு எல்லாம் பென்ஷன்  ......., பென்ஷன் எடுக்கும் வரை welfare.. இந்தக் காசுகளும் அதோடை tax க்கு ஒழிப்பவர்கள் .........

 

எல்லாக் காசுகளும் அங்கு போய் வெளி நாடுகள் பற்றிய ஒரு மாயை..

 

பெடி, பெட்டைகளும் அங்கு பொழுது போக்குக்குக் காதலன்கள், காதலிகள் ........ கல்யாணம் எண்டவுடன் .......

 

animated-bye-scrap.gif

 

peter-walton-airplane-flying-in-sky.jpg

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உண்மை இருக்கு, நான் கேள்விப்பட்டு இருக்கிறேன், அதனால் தான் இத் தலைப்பை இணைத்தேன்.

வெளி நாட்டில் பெரும்பாலானவர்கள் படும்பாடு அங்குள்ள மக்களுக்குத் தெரியாது. இங்கு இருந்து போய் மரத்தாலை காசு வாறது மாதிரி நடிச்சால் ...... அவையும் தாங்களும் வந்து புடுங்குவம் என்று ..........

சும்மா ஊரில் இருந்திட்டு வந்த அம்மாமார், அம்மம்மாமார், தாத்தாக்கள், பாட்டாக்களுகு எல்லாம் பென்ஷன் ......., பென்ஷன் எடுக்கும் வரை welfare.. இந்தக் காசுகளும் அதோடை tax க்கு ஒழிப்பவர்கள் .........

எல்லாக் காசுகளும் அங்கு போய் வெளி நாடுகள் பற்றிய ஒரு மாயை..

பெடி, பெட்டைகளும் அங்கு பொழுது போக்குக்குக் காதலன்கள், காதலிகள் ........ கல்யாணம் எண்டவுடன் .......

animated-bye-scrap.gif

peter-walton-airplane-flying-in-sky.jpg

அருமையாக உண்மையான செய்தியை எழுதியுள்ளீர்கள் மீனா!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் உண்மை இருக்கு, நான் கேள்விப்பட்டு இருக்கிறேன், அதனால் தான் இத் தலைப்பை இணைத்தேன். 

 

வெளி நாட்டில் பெரும்பாலானவர்கள் படும்பாடு அங்குள்ள மக்களுக்குத் தெரியாது. இங்கு இருந்து போய் மரத்தாலை காசு வாறது மாதிரி நடிச்சால் ...... அவையும் தாங்களும் வந்து புடுங்குவம் என்று ..........

 

சும்மா ஊரில் இருந்திட்டு வந்த அம்மாமார், அம்மம்மாமார், தாத்தாக்கள், பாட்டாக்களுகு எல்லாம் பென்ஷன்  ......., பென்ஷன் எடுக்கும் வரை welfare.. இந்தக் காசுகளும் அதோடை tax க்கு ஒழிப்பவர்கள் .........

 

எல்லாக் காசுகளும் அங்கு போய் வெளி நாடுகள் பற்றிய ஒரு மாயை..

 

பெடி, பெட்டைகளும் அங்கு பொழுது போக்குக்குக் காதலன்கள், காதலிகள் ........ கல்யாணம் எண்டவுடன் .......

 

animated-bye-scrap.gif

 

peter-walton-airplane-flying-in-sky.jpg

 

என்ரை பாசையிலை  சொல்லப்போனால் அவ்வளவும் பொருள்... :D

  • தொடங்கியவர்

நன்றி சகோதரர்கள் வாலி, குசா  :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.. உந்த ஜேவிபிநியூசை கறுப்புப்பட்டியலில் சேர்த்தால் என்ன..?!

 

சபேசன் தன்ர முகநூலில் தன்பாட்டுக்கு எழுதினதை.. செய்திக்கு வக்கில்லாத உந்த இணையத் தளம் செய்தியாக்கி போட்டிருக்குது. பேஸ்புக்கில உள்ளதை இங்க பதிய ஏலாது. ஆனால் அதே ஜேவிபிநியூக்கால வந்தால்.. செய்தி.

 

முடியல்ல..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
இக்கரைக்கு 
அக்கரை 
எப்போதும் பச்சையாகவே தெரியும்.
 
அங்கிருக்கும் உணவு முறைமை ஒன்றே 
அங்கு வாழ போதுமானது!
 
அப்படி என்னால் கூட எழுத முடிகிறது 
செல்ல முடியவில்லை. 
 
ஊரை விட்டு வெளியேற விரும்புகிறார்கள் .....?
என்பது ஊரில் பல நெருக்குதல்கள் 
அடக்குமுறைகள் 
சுதந்திரமின்மை 
போன்றதன் உந்துதலாக கூட இருக்கலாம்.
 
காதலிப்பது என்பது ஒருவருடன் 
ஒருவர் நெருங்கி பழகுதல் ஆகும்.
அப்போது ஒரு பெண் இவன் எனது வாழ்விற்கு தகுதி அற்றவன் 
என்று முடிவு செய்தால் .....?
ஓடுகாலி 
வெளிநாட்டு ஆசை 
அது இது என்று 
எளிதாக  ஆண் வர்க்கம் பட்டம் சூட்ட பார்க்கிறது. 
 
நீ எனக்கு சொந்தமானவள் 
என்று ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் சொல்லும்போது 
அல்லது அப்படி எண்ணும்போது .....
அதை ஒரு ரிஸ்போன்சபிளிட்டி யாக பார்ப்பதில்லை 
அதில் வரும் சுகத்தை மட்டும் பார்கிறார்கள்.
ரெஸ்போன்சபிளிடியை  முன்னிலை படுத்தினால் .....
அவளுடனான உறவு நிச்சயம் வலுப்படும். 
 
எமது சமூகம் ஒரு மாயைக்குள் வாழ்வை அமைத்து வாழ்கிறது 
அது நிஜங்கள் குறுக்கிடும்போது தோல்வியை காண்கிறது.
இவளவு போலி சாமியாலும் எப்படி வாழ முடிகிறது ??
எமது சமூகம் போலியானது அதுதான் முதல் காரணம்.
ஒன்றும் செய்யாது இருப்பவனை நல்லவன் என்றும் 
எதையாவது முயற்சித்து தோல்வி கண்டவனை 
லாயக்கு இல்லாத வெறும்பயல் என்றும் பெருமிதம் காணும் 
ஒரு முட்டாள் சமூகம்.
ஒருமுறை எமது ஊரின் உயர்சாதி பற்றி 
உங்கள் உண்மையான அறிவை வைத்து யோசித்து பாருங்கள் 
(உண்மையான அறிவு இருப்பவனுக்கு சுடும்)
சுடாது இருப்பவர்களை பெரும்பானையாக கொண்டது எமது சமூகம். 
 
அழுத காதலி அண்ணா என்று சொன்னால் 
டேக் இட் ஈசி !

 

இக்கரைக்கு 
அக்கரை 
எப்போதும் பச்சையாகவே தெரியும்.
 
அங்கிருக்கும் உணவு முறைமை ஒன்றே 
அங்கு வாழ போதுமானது!
 
அப்படி என்னால் கூட எழுத முடிகிறது 
செல்ல முடியவில்லை. 
 
ஊரை விட்டு வெளியேற விரும்புகிறார்கள் .....?
என்பது ஊரில் பல நெருக்குதல்கள் 
அடக்குமுறைகள் 
சுதந்திரமின்மை 
போன்றதன் உந்துதலாக கூட இருக்கலாம்.
 
காதலிப்பது என்பது ஒருவருடன் 
ஒருவர் நெருங்கி பழகுதல் ஆகும்.
அப்போது ஒரு பெண் இவன் எனது வாழ்விற்கு தகுதி அற்றவன் 
என்று முடிவு செய்தால் .....?
ஓடுகாலி 
வெளிநாட்டு ஆசை 
அது இது என்று 
எளிதாக  ஆண் வர்க்கம் பட்டம் சூட்ட பார்க்கிறது. 
 
நீ எனக்கு சொந்தமானவள் 
என்று ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் சொல்லும்போது 
அல்லது அப்படி எண்ணும்போது .....
அதை ஒரு ரிஸ்போன்சபிளிட்டி யாக பார்ப்பதில்லை 
அதில் வரும் சுகத்தை மட்டும் பார்கிறார்கள்.
ரெஸ்போன்சபிளிடியை  முன்னிலை படுத்தினால் .....
அவளுடனான உறவு நிச்சயம் வலுப்படும். 
 
எமது சமூகம் ஒரு மாயைக்குள் வாழ்வை அமைத்து வாழ்கிறது 
அது நிஜங்கள் குறுக்கிடும்போது தோல்வியை காண்கிறது.
இவளவு போலி சாமியாலும் எப்படி வாழ முடிகிறது ??
எமது சமூகம் போலியானது அதுதான் முதல் காரணம்.
ஒன்றும் செய்யாது இருப்பவனை நல்லவன் என்றும் 
எதையாவது முயற்சித்து தோல்வி கண்டவனை 
லாயக்கு இல்லாத வெறும்பயல் என்றும் பெருமிதம் காணும் 
ஒரு முட்டாள் சமூகம்.
ஒருமுறை எமது ஊரின் உயர்சாதி பற்றி 
உங்கள் உண்மையான அறிவை வைத்து யோசித்து பாருங்கள் 
(உண்மையான அறிவு இருப்பவனுக்கு சுடும்)
சுடாது இருப்பவர்களை பெரும்பானையாக கொண்டது எமது சமூகம். 
 
அழுத காதலி அண்ணா என்று சொன்னால் 
டேக் இட் ஈசி !

 

 

உண்மைதான், காதலுக்கு எதுவும் தேவையில்லை, எப்படியும் யாருடனும் காதல் வரலாம் அனால் கல்யாணத்துக்கும் குடும்பம் நடத்தவும் பணம் வேண்டும் வசதிவேண்டும். 

 

வெறும்பயல் காதலிக்கலாம் ஆனால் கல்யாணம் பண்ண வேலையும் வசதியும் பொருளும் வேண்டும். 28 வயது வந்தாலும் ஆணுக்கு அது பெரிய பிரச்சனை இல்லை ஆனால் 25 வயது வந்தால் பெண்வீட்டு பெற்றோர்கள் அவ்வளவு சுலபபமாக் இருக்கமாட்டார்கள். 

 

தற்போது மேற்படிப்பும் தொழில் வாய்ப்புக்களும் பெண்களுக்கும் கிடைப்பதனால் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் முன்னரைப்போல் இல்லாவிட்டாலும் அனேகமான குடும்பங்கள் பழமையில் இருந்து இலேசினில் விடுபட மாட்டார்கள்.

 

 

உங்கள் இரண்டாம் பகுதியில் நீங்கள் சொனதுபோல மாயைக்குள் அவர்கள் மாத்திரமா வாழ்கிறார்கள்? இங்கே இந்த களத்திலும் அப்படியே தான் பலரும். எமக்கு பழக்கபட்ட சிந்தனையில் இருந்து விடுபடுவதும் ஒருவகை விடுதலைதான்.

 

இருந்தாலும் முற்போக்கு என்று சொல்லப்படும் மேற்கத்தேய சிந்தனைக்கு அவர்கள் என்னும் வரவில்லை என நினைப்பது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. 

 

உண்மையில் எது முற்போக்கு என்பதில் இன்னும் யாருக்கும் தெளிவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்... ஜாலி, எங்களுக்கு, மவுசு கூடியிருக்கு.

தலைக்கு, "டை" அடிக்கத்தான்.... இருக்கு.

 

டை அடிப்பதற்கு தலையில் கொஞ்சமாவது முடி வேண்டுமே?  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

டை அடிப்பதற்கு தலையில் கொஞ்சமாவது முடி வேண்டுமே?  :icon_idea:

 

மண்ணெண்ணெய், வேப்பெண்ணை, விளக்கெண்ணை.....

பாகிஸ்தான் தோத்தால்...எனக்கென்ன....

 

வெத்தல, வெத்தல... பாக்கு வெத்தலயாம்...

கொல்லைக்குப் போக, தண்ணி பத்தலையாம்......

 

அந்தமாரி.. இந்தமாரி... மொள்ள மாரி சொன்னானாம்...

இந்தமாரி, அந்தமாரி.. கேப்மாரி... சொன்னானாம்.

 

கெழவிக்கு.... குசும்பு கூடிப் போச்சு..... :D  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.