Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுத்தேர்தலில் பெண் வேட்பாளரையும் நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுத்தேர்தலில் பெண் வேட்பாளரையும் நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு!

[Tuesday 2015-06-16 20:00]
TNA-300-news.jpg

பொதுத் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவரை நியமிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு கட்சி தலைவர்களும் உத்தேசித்துள்ளனர். பொதுத் தேர்தல் மற்றும் கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

அதன்போது எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவரை நியமிப்பது குறித்தும், தொகுதி பங்கீடுகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

  

 

குறித்த வேட்பாளர் நியமனம் குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி வவுனியா மாவட்டத்தில் இடம்பெறும் எனவும், அதன் பின்னர் வேட்பாளர் குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் கட்சியின் தலைவர்கள் தெரிவித்தனர்.

 

அதேவேளை, நான்கு கட்சிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டு, இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தனர். புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை சட்டரீதியான முறையில், முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் ஏனையவர்கள் இணைந்து லண்டனில் நடாத்திய பேச்சுவார்த்தை குறித்து இரகசியங்கள் எதுவும் கட்சிக்குள் இருக்கக் கூடாது அவற்றினை கட்சியின் ஏனையோருக்கும் தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

 

இந்த விடயத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தெரியப்படுத்தி, லண்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், என்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கட்சியின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

ஒரு கலந்துரையாடலில் யாரை கலந்து கொள்ளுமாறு கட்சியின் தலைவர் தெரிவிக்கின்றாரோ, அவர் அந்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதில் எந்த வித பிரச்சினையும் இல்லை. ஆனால், அந்த கலந்துரையாடலில் கதைக்கப்பட்ட விடயத்தினை கட்சியில் உள்ள ஏனையவர்களுக்கு மறைப்பது ஆரோக்கியமான முடிவல்ல என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

 

அதனடிப்படையில், அங்கு என்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்ற விடயத்தினை எந்த கட்சியில் இருக்கும் ஏனையோருக்கு நம்பிக்கை இல்லாமல் தெரியப்படுத்தாமல் மறைப்பது கட்சியில் உள்ள ஏனைய கட்சிக்குள் சுமூகமான நிலைப்பாடாக இருக்க முடியாது.எனவே, கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தும் வகையில், எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்க கூடாதென்றால், அனைத்து கட்சிக்குள்ளும் உண்மையான விடயங்களை பகிர்ந்து கொள்வது நல்லதென்றும், அங்கு கதைக்கப்பட்ட விடயங்களை மறைக்காது தெரியப்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

இந்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், மற்றும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஹென்றி மகேந்திரன், புளொட் சித்தார்த்தன், சதானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=134212&category=TamilNews&language=tamil

//இந்த விடயத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தெரியப்படுத்தி, லண்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், என்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கட்சியின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.//

 

சுமந்திரனின் கற்றுக் குட்டி விளையட்டைக் கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வர வேண்டும் என்று எழுதிய போது  இங்கிருக்கும் விசுவாசிகள் குழறினார்கள்.     

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் பலே ஆள், சுமந்திரனை வச்சு மாவை, சுரேஸ் எல்லோருக்கும் தண்ணி காட்டுறார்.

இந்த அடிப்படை சிற்றறிவு கூட இல்லாமல் புலத்தில் சில பத்தி எழுத்தாளர்கள் (?).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தான் ஒருகாலத்திலை ரவிராஜ்யின் ஆலோசனைச்சிங்கம் எண்டு சொல்லிக்கொண்டு சுமந்தி திரியுது....... ஆனால் சிங்கள அரசியல் ஒண்டும் தெரியாத சுத்தசூனியம்.  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் பலே ஆள், சுமந்திரனை வச்சு மாவை, சுரேஸ் எல்லோருக்கும் தண்ணி காட்டுறார்.

இந்த அடிப்படை சிற்றறிவு கூட இல்லாமல் புலத்தில் சில பத்தி எழுத்தாளர்கள் (?).

 

சம்பந்தர் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களுக்குத் தண்ணி காட்டுவதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் இப்படிப்பட்ட ஒரு தலைவர் அவரை  நம்பியிருக்கும் மக்களுக்கும் அவரை நம்பியிருக்கும் உங்களுக்கும் என்னவெல்லாம்  காட்டுவார் என்பதை  இன்னும் விளங்காமல் அவருக்கு வால் பிடிப்பதைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கின்றது :icon_idea::D

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தர் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களுக்குத் தண்ணி காட்டுவதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் இப்படிப்பட்ட ஒரு தலைவர் அவரை  நம்பியிருக்கும் மக்களுக்கும் அவரை நம்பியிருக்கும் உங்களுக்கும் என்னவெல்லாம்  காட்டுவார் என்பதை  இன்னும் விளங்காமல் அவருக்கு வால் பிடிப்பதைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கின்றது :icon_idea::D

 

 

கணணி முன் அமர்ந்திருந்து என்னையறியாமலே கைதட்டி சிரித்து விட்டேன்.  :)

சம்பந்தர் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களுக்குத் தண்ணி காட்டுவதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் இப்படிப்பட்ட ஒரு தலைவர் அவரை நம்பியிருக்கும் மக்களுக்கும் அவரை நம்பியிருக்கும் உங்களுக்கும் என்னவெல்லாம் காட்டுவார் என்பதை இன்னும் விளங்காமல் அவருக்கு வால் பிடிப்பதைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கின்றது :icon_idea::D

மலையாளி,ரோ ,சிங்கள உளவாளியால் சம்பந்தரை நம்பிவது போல் நடித்து தமிழ் மக்களின் விடுதலைஒ போரை திசை திருப்ப தான் முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தர் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களுக்குத் தண்ணி காட்டுவதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் இப்படிப்பட்ட ஒரு தலைவர் அவரை நம்பியிருக்கும் மக்களுக்கும் அவரை நம்பியிருக்கும் உங்களுக்கும் என்னவெல்லாம் காட்டுவார் என்பதை இன்னும் விளங்காமல் அவருக்கு வால் பிடிப்பதைப் பார்த்தால் சிரிப்பாக இருக்கின்றது :icon_idea::D

பாவம் ..வாயில்லா பூச்சி..

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் அடங்கி போகும் காலத்தில் அடங்கிப் போய் எட்டாய் மடிந்து நிண்டு தேத வின் ஆயுத பலத்துக்கும் வன்முறை அரசியலுக்கும் சலாம் போட்டாலும், கிளிநொச்சி விழுந்தவுடன் பிரபாவின் காதை பிடித்து பேச்சு மேசைக்கு கொண்டுவருவேன் என்று ஒரு செவ்வியை டெயிலி மிரருக்கு கொடுத்தார்.

அப்போதே நான் கண்டு கொண்டேன் ஆள் சுழியன் என்பதை.

சம்பந்தரிடம் நான் என்ன நகை அடகு வைக்கப் போகிறேனா அல்லது பெண் கொடுக்கப் போகிறேனா?

வரலாறு பூராயும் எல்லாளன், பண்டார வன்னியன், பிரபா என ராஜதந்திர விவேகம் அற்ற தலைவர்களை நாமும் துட்டு மெமுனு, அநகாரிக, டி எஸ், ஜே ஆர், ரணில், மகிந்த என நரிகளை அவர்களும் தலைவராய் பெற்றதாலேதான் எப்போதும் அவர்களே வெல்கிறார்கள்.

இப்போ நம் இனம் இருக்கும் நிலையில் நம் தலைமைக்கும் ரணிலை ஒத்த ஒரு நரிதான் தேவை.

புலிகளை அவர்களின் முட்டாள்தனமான மாபிய ஸ்டைல் அரசியலை எழும்ப விடாமல் அடிக்கும் அதே வேளை, சிங்கள நகர்வுகளையும் வெட்டி ஆட வேண்டும்.

அதே நேரம் மக்களையும், தேவைப்பட்டால் தண்ணியும் காட்டி, தனி நாடு கோரிக்கை பக்கம் நகர விடாமல் பாதுகாக்கவும் வேண்டும்.

இந்த இரட்டை குதிரை சவாரிக்கு சம்பந்தந்தான் சரியான ஆள்.

தவிர சம்பந்தனை நீங்கள் தேத வை நம்பியது போல் நான் நம்புகிறேன் என நீங்கள் நினைத்தால் - உங்களை பார்த்து நீங்களே சிரிக்க வேண்டியதுதான்.

சம்பந்தனை/கருணாவை/கேபியை/ராமை/மகிந்தவை/சீமானை/வைகோவை/கனிமொழியை இன்னும் பலரை நம்பி மோசம் போக நான் என்ன தேசியத் தலைவரா? இல்லையே வெறும் கோசான் சே தானே :)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள நகர்வுகளையும் வெட்டி ஆட வேண்டும்.

நடக்கிற காரியமா கதைக்க வேணும். போர் குற்ற விசாரணையையே நீத்து போக செய்யும் பலே கில்லாடிகள் எங்கே சம்பந்தன் எங்கே.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் அடங்கி போகும் காலத்தில் அடங்கிப் போய் எட்டாய் மடிந்து நிண்டு தேத வின் ஆயுத பலத்துக்கும் வன்முறை அரசியலுக்கும் சலாம் போட்டாலும், கிளிநொச்சி விழுந்தவுடன் பிரபாவின் காதை பிடித்து பேச்சு மேசைக்கு கொண்டுவருவேன் என்று ஒரு செவ்வியை டெயிலி மிரருக்கு கொடுத்தார்.

அப்போதே நான் கண்டு கொண்டேன் ஆள் சுழியன் என்பதை.

சம்பந்தரிடம் நான் என்ன நகை அடகு வைக்கப் போகிறேனா அல்லது பெண் கொடுக்கப் போகிறேனா?

வரலாறு பூராயும் எல்லாளன், பண்டார வன்னியன், பிரபா என ராஜதந்திர விவேகம் அற்ற தலைவர்களை நாமும் துட்டு மெமுனு, அநகாரிக, டி எஸ், ஜே ஆர், ரணில், மகிந்த என நரிகளை அவர்களும் தலைவராய் பெற்றதாலேதான் எப்போதும் அவர்களே வெல்கிறார்கள்.

இப்போ நம் இனம் இருக்கும் நிலையில் நம் தலைமைக்கும் ரணிலை ஒத்த ஒரு நரிதான் தேவை.

புலிகளை அவர்களின் முட்டாள்தனமான மாபிய ஸ்டைல் அரசியலை எழும்ப விடாமல் அடிக்கும் அதே வேளை, சிங்கள நகர்வுகளையும் வெட்டி ஆட வேண்டும்.

அதே நேரம் மக்களையும், தேவைப்பட்டால் தண்ணியும் காட்டி, தனி நாடு கோரிக்கை பக்கம் நகர விடாமல் பாதுகாக்கவும் வேண்டும்.

இந்த இரட்டை குதிரை சவாரிக்கு சம்பந்தந்தான் சரியான ஆள்.

தவிர சம்பந்தனை நீங்கள் தேத வை நம்பியது போல் நான் நம்புகிறேன் என நீங்கள் நினைத்தால் - உங்களை பார்த்து நீங்களே சிரிக்க வேண்டியதுதான்.

சம்பந்தனை/கருணாவை/கேபியை/ராமை/மகிந்தவை/சீமானை/வைகோவை/கனிமொழியை இன்னும் பலரை நம்பி மோசம் போக நான் என்ன தேசியத் தலைவரா? இல்லையே வெறும் கோசான் சே தானே :)

நீங்கள் இங்கிருந்து கொண்டு யாரையும் நம்ப மாட்டீர்கள் ஆனால் பாவம் அங்குள்ள மக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பயம் வேண்டாம், அவர்கள் எம்மை விட விசயகாரர்கள். கஜேந்திரன்ஸ், சங்கரி இரு துருவங்களையும் ஒரே தேர்தலில் தூக்கி அடித்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் தேர்தலில் தூக்கியடிப்பதில் ஒன்றும் இல்லை. எங்களுக்கென்ற அரசியல் தீர்வை பெற ஆக்க் குறைந்தது அதை நோக்கி நகர முயற்சிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.

ஆனால் சிங்களத்தின் ஏமாத்தும் பாணி யார் வந்தாலும் தொடரும்.

சம்-சும்-விக் இப்போ ஏமாற்ற்றுப் படுவதை விட 100 மடங்கு அதிகம் ஏமாற்றுப் படுவார்கள் கஜன்ஸ்.

ஆக நாம் சம்-சும்-விக் ஐ பலப்படுத்தோணுமே தவிர வேட்டியையும் உருவப் படாது.

அதைதான் ஜி ரி எப் செய்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இதை சம் சும் இன் தோல்வி என ஒப்புக் கொள்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை.

இது தமிழர் தரப்பபின் தோல்வி.

சம் சும் இற்கு பதில் கஜன்ஸ் இருந்திருந்தால் தமிழர் தரப்பு இன்னும் மோசமாய் தோதிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளியிலை நிண்ட சங்கரியை (தவிகூட்டணியின் தலமைப்பதவி விடயத்தில் முரண்பாடு இருந்தாலும்கூட)உள்ள கொண்டு வந்தவர் சம்பந்ர்தான்.(உள்ளே இருந்த ஆட்களை விளியேற்றி விட்டு)அதற்குத்தான் சனம் மாகாண சகோதர தேர்தலில் அடி குடுத்தது.இது சங்கரிக்கு வந்த தோல்வி அல்ல. சம்பந்தருக்கு விழுந்த குட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை, சங்கரியை உள்ளே வரவைத்து கூட்டமைப்பில் கேட்டாலும் அவர் நிலப்பாட்டுக்கு மக்கள் ஆதரவில்லை என உலகிற்கே நிறுவிக் காட்டியது சம் மின் சாணக்கியம்.

பிரபாவை ஓரம் கட்ட முடியாத சங்கரியை தேர்தலில் நிக்க வைத்து ஒண்டுமில்லாமல் ஆக்கினது சம்பந்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளியிலை நிண்ட சங்கரியை (தவிகூட்டணியின் தலமைப்பதவி விடயத்தில் முரண்பாடு இருந்தாலும்கூட)உள்ள கொண்டு வந்தவர் சம்பந்ர்தான்.(உள்ளே இருந்த ஆட்களை விளியேற்றி விட்டு)அதற்குத்தான் சனம் மாகாண சகோதர தேர்தலில் அடி குடுத்தது.இது சங்கரிக்கு வந்த தோல்வி அல்ல. சம்பந்தருக்கு விழுந்த குட்டு.

 

 

அப்படியே பியசேனா வந்த ராஐதந்திரத்தையும்  மதிநுட்பத்தையும் சாணக்கியத்தையும்  மறந்துவிட்டீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பொதுத்தேர்தலில் பெண் வேட்பாளரையும் நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு!

 

013.jpg?w=300&h=225

 

இராஜேஸ் அக்கா சும்மாதானே இருக்கிறா.....கேட்டுப்பாருங்கோவன்  :lol:

பொதுத்தேர்தலில் பெண் வேட்பாளரையும் நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு!

 

013.jpg?w=300&h=225

 

இராஜேஸ் அக்கா சும்மாதானே இருக்கிறா.....கேட்டுப்பாருங்கோவன்  :lol:

சொன்னாலும் பொருந்தச்சொல்ல வேணும் . :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பொதுத்தேர்தலில் பெண் வேட்பாளரையும் நிறுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு!

 

013.jpg?w=300&h=225

 

இராஜேஸ் அக்கா சும்மாதானே இருக்கிறா.....கேட்டுப்பாருங்கோவன்  :lol:

 

 

இந்த அக்கா தானே... தீபம் தொலைக்காட்சியில் நடந்த பேட்டி ஒன்றில்,

பக்கத்தில் இருந்து கருத்து சொன்னவருக்கு, மேசையில் இருந்த கிளாஸ் தண்ணியால், மூஞ்சையில்  ஊத்தி விட்டவ. :rolleyes:  :o

Edited by தமிழ் சிறி

வெளியிலை நிண்ட சங்கரியை (தவிகூட்டணியின் தலமைப்பதவி விடயத்தில் முரண்பாடு இருந்தாலும்கூட)உள்ள கொண்டு வந்தவர் சம்பந்ர்தான்.(உள்ளே இருந்த ஆட்களை விளியேற்றி விட்டு)அதற்குத்தான் சனம் மாகாண சகோதர தேர்தலில் அடி குடுத்தது.இது சங்கரிக்கு வந்த தோல்வி அல்ல. சம்பந்தருக்கு விழுந்த குட்டு.

கிளிநொச்சி பிரசாரக் கூட்டத்திற்கு சம்பந்தன் ஐயா போகவில்லை ,சுமந்திரன் ஸ்ரீதரனுடன் இணைந்து ஆனந்தசங்கரிக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர் ,இதற்கு ஸ்ரீதரனுக்கு தேவைப்பட்டதை செய்தோம் .

புலிகள் இருந்த போது தானே ஆனந்தசங்கரி தவிகூட்டணியின் தலமைப்பதவிக்கு வந்தவர் அப்ப இதை புலிகளிடம் கேட்டிருக்கலாமே ? 

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

kishor_02.jpg

இவரும் அவரிண்ட ஒரு கண்டுபிடிப்புத்தான் :D

வரலாறு ஒருவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது பலரால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றது! :o

Edited by இணையவன்
மேற்கோள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

அப்படியே பியசேனா வந்த ராஐதந்திரத்தையும்  மதிநுட்பத்தையும் சாணக்கியத்தையும்  மறந்துவிட்டீர்கள்

இதை விபரமாக எழுதலாமே ?

பியசேனா புலிகள் இருந்த காலத்திலேயே பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகள் எடுத்தவர் ,பியசேன 2010இல் போட்டியிட்டபோது சந்திரநேரு சந்திரகாந்தனும் போட்டியிட்டவர்.

2004இல் புலிகளால் கொண்டுவரப்படவர்கள் ,2009மே க்குப்பின் எப்படி நடந்துகொண்டார்கள் வவுனியா கிஷோர் ,முல்லைத்தீவு கனகரெட்னம் ,மட்டக்களப்பு தங்கேஸ்வரி -இவை எல்லாவற்றையும் வசதியாக மறந்துவிடுகின்றீர்கள்

அகவே சும்மா ஒப்புக்கு கருத்தெழுதக்கூடாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.