Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தலிங்கம் கொலை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்

Featured Replies

அமிர்தலிங்கம் கொலை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்
அமிர்தலிங்கம் கொலை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் கொலை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தப் படுகொலை தொடர்பில் விசாரணை நடாத்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்த இதுவே சரியான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படுகொலையுடன் பலருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைகள் குறித்து அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் கேள்வி எழுப்பியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தக் காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட லக்ஸ்மன் கதிர்காமர், ஏ.தங்கதுரை மற்றும் கிங்ஸ்லி ராஜநாயகம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்தில் யுத்த வலயத்திற்கு வெளியேற இடம்பெற்ற படுகொலை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சாட்சியமளிக்க சாட்சியாளர்கள் விரும்பவில்லை எனவும் அவர் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://onlineuthayan.com/news/1519

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலை வழக்கு உச்ச நீதிமன்றில் நடத்தட்டு ...
கொலையாளிகளான  விசு அவருடன் கூட போனவர்ருக்கு மரண தண்டனையும் 
திட்டமிட்டிருக்கலாம் என்பதால் 
மாத்தையா விற்கு தூக்கு தண்டனையும் கிடைக்க வேண்டும்! 

ஆவ்சங்கரி, பிராந்திய வல்லரசுடன் வேண்டாம் விளையாட்டு! ... புலி போட்டதாகவே இருந்திட்டுப் போகட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் மட்டும் பிராந்திய வல்லரசுக்கு பாடம் படிப்பிச்சு பாடம் கற்றுக்கலாம் மற்றவன் விளையாடத் தன்னும் கூடாது. அது கிடக்க அமிரை போட பிராந்திய வல்லரசுக்கு என்ன விசரே!:unsure:

அமிரை போட்டது உள் வீட்டு பிரச்சனை .மங்கையர்க்கரசி அம்மாவின் வேலை .

இப்படி அறிவுடன் இருந்தால் தான் நல்லது போல கிடக்கு 

அமிரை போட்டது உள் வீட்டு பிரச்சனை .மங்கையர்க்கரசி அம்மாவின் வேலை .

அட! நானும் ஏதோ மிருகங்கள் கடித்து குதறிற்றுதென்டு இவ்வளவு நாளும் நம்பீட்டன்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா விசாரிக்கலாமே... அத்தோடு தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றி சிறீலங்காவின் இறைமையுள்ள சிங்கள அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வைச்சது தொடர்பில் அமிர்தலிங்கம் சார்பில் சங்கரியை உள்ள வைச்சு விசாரிக்கனும். அதன் தொடர்ச்சியாகத்தான் மிச்ச எல்லா படுகொலைகளும் வன்முறைகளும்.. போர்க்குற்றங்களும்.. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும்..நடந்தன. 

மேலும் யாழ்ப்பாணம் மீது இந்தியப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்ட பொதுமக்கள் சார்பில் அமிர்தலிங்கமும்.. அவரது குடும்பமும்.. கூட்டாளிகளும் உண்மையை மறைத்தது.. பொதுமக்களை நூற்றுக்கணக்கில் கொல்ல உதவியது.. இந்திய படைகளின் மனித உரிமை மீறல்கள்.. போர்க்குற்றங்களை நியாயப்படுத்தியமை தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்துவதோடு.. இந்தியப் படைகளின் பொதுமக்கள் மீதான.. போர்க்குற்றங்களை நியாயப்படுத்தியது.. வெளி உலகிற்கு தெரியாமல் மறைத்தது என்பவை திட்டமிட்ட போர்க்குற்றங்களாக இனங்காணப்பட்டு.. அமிர்தலிங்கம் கூட்டாளிகள் கூண்டோடு தண்டிக்கப்படுவதன் வாயிலாக இந்தியப் படைகளும் இந்திய அதிகாரிகளும் ராஜீவ் காந்தியும் மனித குலத்திற்கு எதிராக நிகழ்த்திய கொடுமைகளுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடும்.. நீதியும் கிடைக்கச் செய்யப்படுவது அவசியமாகும். 

எப்படி வசதி...?! 

Edited by nedukkalapoovan

லீ கார்ஃவி ஒஸ்வாலோடு கென்னடியின் படுகொலை முடிந்தது போலத்தான் ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டணிக்கு புதுப்புது ஐடியாக்கள் உதயசூரியனைமாதிரி உதிச்சுக்கொண்டேயிருக்கும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணிக்கு புதுப்புது ஐடியாக்கள் உதயசூரியனைமாதிரி உதிச்சுக்கொண்டேயிருக்கும். :grin:

கரட்டி ஓணான் வேலியில இருந்து தலையை ஆட்டுற மாதிரிக் கொஞ்சப்பேர் அந்த ஐடியாக்களுக்கும் தலையை ஆட்டிக்கொண்டே இருப்பினம்!tw_cookie:

pillaiyaan

"வேள்விக்கடா" பிள்ளையான் உள்ளுக்குள்! பலருக்கு .. இன்குளூடிங் கள்ள ஜனநாயகவாதிகள் ...  வயித்துக்கலக்கம்!!!

... அதன் விளைவு ... அந்தக்கொலையை விசாரி, இந்தக்கொலையை விசாரி!!!

... ஆமா, இந்த சங்கரியார் இதுவரை காலமும் சிங்களத்துடன் ஒட்டியிருந்து, சேவகம் செய்து, மிகப்பெரிய பாதுகாப்பின் மத்தியில் இராஜபோகங்கள் அனுபவித்தவர் இல்லையா???? ... கூடியிருந்த இவ்வளவு காலமும் அப்பாப்பிள்ளையின் கொலை தொடர்பாக, ஏன் விசாரணையை கோரவில்லை? நடாத்துவிக்க முயலவில்லை????

ஏன் இப்போது மட்டும் திடீர் அமிர் பாசம்???????????? ....

..... இதை விளங்கிக்கொள்ள ராக்கட் சயன்ஸ் ஒன்றும் தேவையில்லை!!

..... இந்தப் பிள்ளையான் கருணாவுடன் இணைந்து புலிகளில் இருந்து பிரிந்து பின் கருணாவிடம் இருந்து பிரிந்த காலங்களில் ... ஐரோப்பவில் உள்ள ஓர் குறித்த நாட்டில்   ( ... விபரங்கள் தவிர்க்க முயல்கிறேன் ... அனுமதித்தால் முழு ஆதாரங்களையும் பதிவிடுகிறேன்...) ... வாழும் சங்கரியாரின் உறவினர் தான்.. கடைசி **ள் மணம் முடித்ததினால் வந்த உறவு ...  இந்த வேள்விக்கடாவை இயக்கியதாக, பல இணையங்கள் அன்று ... யுத்தநிறுத்த காலங்களில் ... ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டியிருந்தன! (.... தேடினேன் இன்றும் பழைய யாழ்கள பதிவுகளிலும் விபரங்கள் இருக்கின்றன ... ) . ...  அதற்கு மேலும் குறிப்பிட்ட நாட்டுக்கு இன்றைய வேள்விக்கடா வந்த புகைப்படங்களையும் குறித்த குடும்பம் பகிரங்கமாகவும் அக்காலத்தில் வெளியிட்டிருந்தது! அதற்கு மேல் இன்னொரு அதே குடும்ப வயோதிபர் ஒருவர், அன்றைய ஒட்டுக்குழு வானொலியில் பகிரங்கமாக .... தாம் உதவுவதாக அடிக்கடி கூறி வந்தார்! 

இன்று சர்வதேசத்துக்காக அடிமாடு தேடித்திரியும் சிங்களத்துக்கு, இவர்கள் போன்றோர் கண்ணுக்குள்! ... பிள்ளையான் இன்னும் கக்க இருப்பதில் ... அங்கு நடந்த கொலைகளில் இவர்களின் பங்கும் வெளிவரலாம்???

... என்ற அச்சங்கள் ... அமிர் பாசங்களாக .....

Edited by no fire zone

pillaiyaan

"வேள்விக்கடா" பிள்ளையான் உள்ளுக்குள்! பலருக்கு .. இன்குளூடிங் கள்ள ஜனநாயகவாதிகள் ...  வயித்துக்கலக்கம்!!!

... அதன் விளைவு ... அந்தக்கொலையை விசாரி, இந்தக்கொலையை விசாரி!!!

... ஆமா, இந்த சங்கரியார் இதுவரை காலமும் சிங்களத்துடன் ஒட்டியிருந்து, சேவகம் செய்து, மிகப்பெரிய பாதுகாப்பின் மத்தியில் இராஜபோகங்கள் அனுபவித்தவர் இல்லையா???? ... கூடியிருந்த இவ்வளவு காலமும் அப்பாப்பிள்ளையின் கொலை தொடர்பாக, ஏன் விசாரணையை கோரவில்லை? நடாத்துவிக்க முயலவில்லை????

ஏன் இப்போது மட்டும் திடீர் அமிர் பாசம்???????????? ....

..... இதை விளங்கிக்கொள்ள ராக்கட் சயன்ஸ் ஒன்றும் தேவையில்லை!!

..... இந்தப் பிள்ளையான் கருணாவுடன் இணைந்து புலிகளில் இருந்து பிரிந்து பின் கருணாவிடம் இருந்து பிரிந்த காலங்களில் ... ஐரோப்பவில் உள்ள ஓர் குறித்த நாட்டில்   ( ... விபரங்கள் தவிர்க்க முயல்கிறேன் ... அனுமதித்தால் முழு ஆதாரங்களையும் பதிவிடுகிறேன்...) ... வாழும் சங்கரியாரின் உறவினர் தான்... *** மணம் முடித்ததினால் வந்த உறவு ...  இந்த வேள்விக்கடாவை இயக்கியதாக, பல இணையங்கள் அன்று ... யுத்தநிறுத்த காலங்களில் ... ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டியிருந்தன! (.... தேடினேன் இன்றும் பழைய யாழ்கள பதிவுகளிலும் விபரங்கள் இருக்கின்றன ... ) . ...  அதற்கு மேலும் குறிப்பிட்ட நாட்டுக்கு இன்றைய வேள்விக்கடா வந்த புகைப்படங்களையும் குறித்த குடும்பம் பகிரங்கமாகவும் அக்காலத்தில் வெளியிட்டிருந்தது! அதற்கு மேல் இன்னொரு அதே குடும்ப வயோதிபர் ஒருவர், அன்றைய ஒட்டுக்குழு வானொலியில் பகிரங்கமாக .... தாம் உதவுவதாக அடிக்கடி கூறி வந்தார்! 

இன்று சர்வதேசத்துக்காக அடிமாடு தேடித்திரியும் சிங்களத்துக்கு, இவர்கள் போன்றோர் கண்ணுக்குள்! ... பிள்ளையான் இன்னும் கக்க இருப்பதில் ... அங்கு நடந்த கொலைகளில் இவர்களின் பங்கும் வெளிவரலாம்???

... என்ற அச்சங்கள் ... அமிர் பாசங்களாக .....

சிங்களவனுக்கு வால்பிடிச்சவைக்கு நல்லாக்கலக்குது என்பது நன்றாக புரிகின்றது. பத்தாக்குறைக்கு இப்ப வெளிநாட்டிலும் தேடத்தொடங்கிட்டாங்களாம்

... இராமாயணத்திலோ, பாரத்திலோ வரும் ஒரு கதாநாயகனுக்கு மனைவிகளை/துணைவிகளை/காதலிகளை/வைப்புகளை கணக்கிடமுடியாதாம்! ... அந்த காதாநாயகனின் இரத்த உறவுதான் இந்த சங்கரியாரும்! ... உதுகளையும் சங்கரியார் விசாரிக்க கோருவாரா???

Edited by no fire zone

  • கருத்துக்கள உறவுகள்

pillaiyaan

"வேள்விக்கடா" பிள்ளையான் உள்ளுக்குள்! பலருக்கு .. இன்குளூடிங் கள்ள ஜனநாயகவாதிகள் ...  வயித்துக்கலக்கம்!!!

... அதன் விளைவு ... அந்தக்கொலையை விசாரி, இந்தக்கொலையை விசாரி!!!

... ஆமா, இந்த சங்கரியார் இதுவரை காலமும் சிங்களத்துடன் ஒட்டியிருந்து, சேவகம் செய்து, மிகப்பெரிய பாதுகாப்பின் மத்தியில் இராஜபோகங்கள் அனுபவித்தவர் இல்லையா???? ... கூடியிருந்த இவ்வளவு காலமும் அப்பாப்பிள்ளையின் கொலை தொடர்பாக, ஏன் விசாரணையை கோரவில்லை? நடாத்துவிக்க முயலவில்லை????

ஏன் இப்போது மட்டும் திடீர் அமிர் பாசம்???????????? ....

..... இதை விளங்கிக்கொள்ள ராக்கட் சயன்ஸ் ஒன்றும் தேவையில்லை!!

..... இந்தப் பிள்ளையான் கருணாவுடன் இணைந்து புலிகளில் இருந்து பிரிந்து பின் கருணாவிடம் இருந்து பிரிந்த காலங்களில் ... ஐரோப்பவில் உள்ள ஓர் குறித்த நாட்டில்   ( ... விபரங்கள் தவிர்க்க முயல்கிறேன் ... அனுமதித்தால் முழு ஆதாரங்களையும் பதிவிடுகிறேன்...) ... வாழும் சங்கரியாரின் உறவினர் தான்.. கடைசி **ள் மணம் முடித்ததினால் வந்த உறவு ...  இந்த வேள்விக்கடாவை இயக்கியதாக, பல இணையங்கள் அன்று ... யுத்தநிறுத்த காலங்களில் ... ஆதாரங்களுடன் குற்றஞ்சாட்டியிருந்தன! (.... தேடினேன் இன்றும் பழைய யாழ்கள பதிவுகளிலும் விபரங்கள் இருக்கின்றன ... ) . ...  அதற்கு மேலும் குறிப்பிட்ட நாட்டுக்கு இன்றைய வேள்விக்கடா வந்த புகைப்படங்களையும் குறித்த குடும்பம் பகிரங்கமாகவும் அக்காலத்தில் வெளியிட்டிருந்தது! அதற்கு மேல் இன்னொரு அதே குடும்ப வயோதிபர் ஒருவர், அன்றைய ஒட்டுக்குழு வானொலியில் பகிரங்கமாக .... தாம் உதவுவதாக அடிக்கடி கூறி வந்தார்! 

இன்று சர்வதேசத்துக்காக அடிமாடு தேடித்திரியும் சிங்களத்துக்கு, இவர்கள் போன்றோர் கண்ணுக்குள்! ... பிள்ளையான் இன்னும் கக்க இருப்பதில் ... அங்கு நடந்த கொலைகளில் இவர்களின் பங்கும் வெளிவரலாம்???

... என்ற அச்சங்கள் ... அமிர் பாசங்களாக .....

 எள் ஏன் காயுது? எண்ணைக்காக, எலிப்புழுக்கை ஏன் காயுது? கூட இருந்த குற்றத்திற்காக. 

  • கருத்துக்கள உறவுகள்


புலிகளை விசாரிக்க வேண்டும் எனில் ஒரே ஒரு காரணம்தான், அது எதிரியை துரத்தி துரத்தி அடித்தது மட்டுமல்லாமல், அவன் கோட்டைக்குள்ளேயே புகுந்து விளையாடியது.
மற்றவர்களை விசாரிக்க பல காரணங்கள் உண்டு. பொறுத்திருந்து பார்ப்போம்.

காதும் காதும் வைச்சது மாதிரி ...

... 2008இற்கு பின்னம் ... கோயில் திருவிழாக்கள், கலியாணங்களுக்கு மேல் ....  புத்த வெளியீடுகள்(யாரினதாக இருக்கும்?), அரசியல் கலந்துரையாடல்கள்(இதுவும்?), அலுவலகங்கள் திறப்பு(..???) மட்டுமல்லாது ... தண்ணியடிக்க(முள்ளிவாய்க்கால் அழிவு முடிந்த கையோடு சில நாட்களுக்குள்ளேயே அங்கு சென்று வார்த்த கோஷ்டியும் ஐரோப்பாவில் ... ஆதாரம்: படங்கள் கூட இருக்கின்றன), கக்கா மூத்த இருக்க என்று கூட சில கோஷ்டிகள் சென்று வந்தன! இன்று ... அதுவும் ஜெனீவாவிர்கு பின்னம் ... பிரேக் போட்டு நிற்கினம்! ஏன் தெரியுமோ? ... அங்கு சிங்களம் அடிமாடு தேடித்திரிகின்றதாம்!!! ... கவனம், இனி குரூஸ் காலிடேக்களை சிரிலங்கா பக்கம் விட்டுடாதையுங்கோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.