Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்க்களத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காளை விரட்டென்றால!; காளை எங்களை விரட்டுமா? அல்லது

நாங்கள் காளையை விரட்டனுமா? அதன்முன்

ஒருஅழகான பசுவைக் காட்டினால் அது சாந்தமாகாதா? அல்லது

ஆதி! உங்க காட்டில ஒரு புலியைப் பிடித்து அதற்கு பசுத்தோல் போர்த்து கொண்டுவந்து காளையிடம் விடுறதுதானே!!! :D:(

  • Replies 103
  • Views 33k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆதி என்ன நீங்கள் மாத்திரம் நிண்டு புலம்பிக்கொண்டு நிக்கிறீங்கள். நீங்கள் போட்ட அந்த பெரிய மாட்டு படத்த எங்கையோ பாத்தமாதிரி இருக்கிது. இது ஏதாவது ரீவி கேமில இல்லாட்டி புத்தக கவரில வந்ததா?

மாப்பு, ஆதி தனிய நிண்டு புலம்புகிறமாதிரியாத் தெரியுது?????? அது ஒண்டுமில்லை மாப்பு ஆதியிடம் எல்லாரும் கதைக்க பயந்து ஒளிச்சு நிற்கிறாங்கள். வந்து கதைக்கிறவர்கள், போகிறவர்கள் எல்லாரையும் ஆதி கோதாவில் இறக்கி காளை அடக்க நிற்பாட்டினா எப்படித் தப்பிப்பது? அதுதான் ஆதியை வேலியில போற ஓணான நினைச்சுப்போட்டாங்கள்.

என்ன மாப்பு கிண்டலா? இது யாழ்க்களக் காளையப்பா. போனவருடம் எடுத்தபடம் சும்மா திமிரா நிற்குதெல்லோ....

  • தொடங்கியவர்

காளை விரட்டென்றால!; காளை எங்களை விரட்டுமா? அல்லது

நாங்கள் காளையை விரட்டனுமா? அதன்முன்

ஒருஅழகான பசுவைக் காட்டினால் அது சாந்தமாகாதா? அல்லது

ஆதி! உங்க காட்டில ஒரு புலியைப் பிடித்து அதற்கு பசுத்தோல் போர்த்து கொண்டுவந்து காளையிடம் விடுறதுதானே!!! :wub::lol:

சுவி அய்யா, நீங்களும் சரியான கிண்டல் பேர்வழிபோல....

உயர்திணையை அஃறிணை விரட்டுறது :lol: .....சீச்சீ அஃறிணையை உயர்திணை விரட்டுறது. :lol:

ஆ...இப்படியெல்லாம் ஆண்வர்க்கத்தை அவமானப்படுத்தக் கூடாது சுவி அய்யா. :wub:

ஆதி காட்டில இருக்கிற புலியெல்லாம் சிங்கத்தை அடக்கக் களமுனைகளில கம்பீரமா உலா வருகிற சேதி உங்களுக்குத் தெரியாத சுவி அய்யா? :unsure:

  • தொடங்கியவர்

சரி காளைவிரட்டுற மைதானத்தில நடக்கிற கதையைத் தொடருவம்.......

தூயவன் சொன்ன கோணல் எண்ட வார்த்தையைக் கேட்ட உடன யம்முப்பே(ய்)ப் வானவில்லின் காதுக்குள்ள இரகசியமா உம்மைத்தான் வானவில் தூயவன் சாடைமாடையாத் தாக்கிறார் என்று உசுப்பிவிட கொஞ்சக்காலத்திற்கு முன்பு காங்காருப்பமிலியாக இருந்த டைகர்பமிலியின் உறுப்பினர் வானவில் தூயவனை எந்த வகையில் தாக்கினா தான் செயிக்கலாம் என்று எண்ண ஓட்டத்தை தட்டி விட்டு ஓரமாப் போய் நின்று சதித்திட்டத்தைப் போட, அந்த நேரம் முனியம்மாவின் ஊட்டத்தில் சவடால் விட்டுக்கொண்டு உலாவந்த சாத்து தூயவனைச் சமாளிக்க முகத்தாரைக் கூப்பிட்டார். முகத்தாரும் சாத்துவுக்கு உதவ எண்ணி காலெடுத்து வைக்க, சின்னா தன்ரை கையில இருந்த கள்ளுப்பிளாவை நிலத்தில போட்டு முகத்தான் இதைத்தாண்டிப்போய் தூயவனை அண்டினியோ பிறகு நடக்கிறதே வேற என்று வெருட்ட, முகத்தாருக்கு பிளாவைத் தாண்டிப்போகத் தைரியம் இல்லாததால மெல்ல மெல்ல பின்னங்காலால தேய்ச்சுத் தேய்ச்சுப் பின்னுக்குப்போய் அந்த மைதானத்தின் இன்னொரு கோடிக்குப் போய்விட்டார்............தொடரும் :unsure:

என்ன மாப்பு கிண்டலா? இது யாழ்க்களக் காளையப்பா. போனவருடம் எடுத்தபடம் சும்மா திமிரா நிற்குதெல்லோ....

இல்ல ஏன் கேட்டனான் எண்டால் எங்கையோ பசு மாட்ட காள மாடு எண்டு சொல்லி யாரோ ஏமாத்தி இருந்தவேள் அதான். யாரோ மறி ஆட்ட கிடாமாதிரி உருமாற்றம் செய்து வேள்விக்கு வெட்டுறதுக்கு கொண்டுவந்தவங்கள் நான் அப்ப சின்னனா இருக்கேக்க ஊரில.

  • கருத்துக்கள உறவுகள்

அய்யய்யோ திரும்பவுமா?? :lol: போனவருசம் வருசம் ஒருத்தராலையுமே அடக்க ஏலாமல் போய் கடைசியா நான்தான் அடக்கினது.சரி அதுக்கு முதல் போன வருசத்து கதையை சொல்லுறன் . போனவருசமும் ஆதி இதே மாதிரி காளை மாட்டை கட்டவித்து விட்டுருந்துதா நான் சின்னப்பு குமாரசாமி எண்டு எங்களுக்குள்ளை போட்டி யார் அடக்கிறதெண்டு. முதல்லை வேட்டியை மடிச்சு கட்டிக்கொண்டு குமாரசாமிகோதாவிலை இறங்கினவர் அவ்வளவுதான் ஆள் கோமாவிலை ஆறு மாதம் கிடந்தவர்; குமாரசாமி கோமாக்கு போறது அடிக்கடி நடக்கிறதுதானே இதிலையென்ன புதுமையெண்டு கேக்காதையுங்கோ. :lol::lol:

அவர் கோமாக்கு போனது மப்படிச்சில்லை. மாடு இடிச்சு.இவர் வேட்டியை வேறை மடிச்சு கட்டியிருந்ததாலை அவர் உள்ளை கட்டியிருந்தது சிவப்புக்கலர் கோவணத்தை காளை மாடு கண்டிட்டுது. பிறகென்ன சும்மா விடுமோ ஓடிப்போய் ஒரே இடி பாவம் குமாரசாமி . :(:lol:

இதைப்பாத்துகொண்டு நிண்ட எனக்கு நடுக்கம் பிடிச்சிட்டுது. எண்ணெயெல்லாம் பூசி முனியம்மாட்டை வீரவசனம் பேசி முனியம்மா வேறை எனக்கு வீரத்திலகம் எல்லாம் வைச்சு விட்டு வென்றுவா எண்டு வாழ்த்தி அனுப்பிவிட.இந்தக்க காளை மாடு இப்பிடி மோசமா இருக்குமெண்டு நான் நினைக்கேல்லை. அடுத்ததா சின்னப்புவை பாத்து டேய் நீ போடா எண்டு சொல்ல சின்னப்புவோ தங்கடை பரம்பரையிலேயோ காளை மாடு அக்கிற பழக்கம் இல்லையாம் பசுமாடுதானம் அடக்கிறவை.முடிஞ்சால் பசுமாடு அடக்கிற போட்டிவையுங்கோ அதுவரைக்கும் நான் போய் சின்னாச்சியை அடக்கிப்போட்டு வாறன் எண்டு போனவன்தான் அடுத்த பொங்கல் வந்திட்டுது ஆளையே காணெல்லை. :unsure::wub:

கடைசியா நான் தான் அந்தக் காளையை அடக்கினது. எப்பிடியெண்டு யோசிக்கிறீங்களோ மெல்லமாய் காளை மாட்டுக்கு பக்கத்திலை போய் காளை மாட்டின்ரை காதுக்குள்ளை ஒரு விசயத்தை சொன்னன். அது அப்பிடியோ பேசாமல் அடங்கி படுத்திட்டுது. ஆனால் போனவருசம் நான் அதக்கு சொன்ன விசயத்தை நிறைவேத்தேல்லை அதாலை இந்தவருசம் நான் அதுக்குப்பக்கத்திலை போக ஏலாது. அது சரி நான் காளை மாட்டின்ரை காதுக்குள்ளை என்ன சொல்லியிருப்பன் எண்டு யாராவது சொல்லுங்கோ பாப்பம். :wub:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நான் காளை மாட்டின்ரை காதுக்குள்ளை என்ன சொல்லியிருப்பன் எண்டு யாராவது சொல்லுங்கோ பாப்பம்.

வேற என்ன பிசின் மாதிரி ஒரு பசுவை செற் பண்ணித்தரலாம் என்றுதானே :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வேற என்ன பிசின் மாதிரி ஒரு பசுவை செற் பண்ணித்தரலாம் என்றுதானே :unsure:

அது "பிசினா" அசினா?

நீங்களெல்லாம் காளைமாட்டை அப்படி அடக்கிறன் இப்படி மடக்கிறன் எண்டுறியள், நான் எத்தினை காளையை ஒரு ஊசிக் குத்துல அடக்கியிருக்கிறன் தெரியுமோ? யாராவது சொல்லுங்கோ பாப்பம் என்ர தொழில் என்னண்டு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் கோமாக்கு போனது மப்படிச்சில்லை. மாடு இடிச்சு.இவர் வேட்டியை வேறை மடிச்சு கட்டியிருந்ததாலை அவர் உள்ளை கட்டியிருந்தது சிவப்புக்கலர் கோவணத்தை காளை மாடு கண்டிட்டுது. பிறகென்ன சும்மா விடுமோ ஓடிப்போய் ஒரே இடி பாவம் குமாரசாமி :D .

கோடிகள் குவிந்தாலும் கோவணத்தை மறவேன் :lol:

அது "பிசினா" அசினா?

நீங்களெல்லாம் காளைமாட்டை அப்படி அடக்கிறன் இப்படி மடக்கிறன் எண்டுறியள், நான் எத்தினை காளையை ஒரு ஊசிக் குத்துல அடக்கியிருக்கிறன் தெரியுமோ? யாராவது சொல்லுங்கோ பாப்பம் என்ர தொழில் என்னண்டு?

வேறையென்ன வேலை மாட்டு டாக்குத்தர்தான் :D

ஐயா ஆதிவாசி,

நம்ம யாழ் கள வீரர்களின் தகுதிக்கு அடக்குவதற்கு பசுமாடுதான் லாயக்கு என்று நினக்கின்றேன். காளை மாடு எல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவர். இதோ எனது வீட்டுப் பசு மாட்டை களத்தில் இறக்கி விடுகின்றேன். யாராவது மீசையுள்ள ஆம்பளை வந்து அடக்குங்கள் பார்க்கலாம்!

Big_cow.gif

BullSmartMoney-1.jpg

:rolleyes::rolleyes::rolleyes:

கலைஞன் இந்த வேலைகளும் பார்க்கிறாரா?? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பாத்துகொண்டு நிண்ட எனக்கு நடுக்கம் பிடிச்சிட்டுது. எண்ணெயெல்லாம் பூசி முனியம்மாட்டை வீரவசனம் பேசி முனியம்மா வேறை எனக்கு வீரத்திலகம் எல்லாம் வைச்சு விட்டு வென்றுவா எண்டு வாழ்த்தி அனுப்பிவிட.இந்தக்க காளை மாடு இப்பிடி மோசமா இருக்குமெண்டு நான் நினைக்கேல்லை. அடுத்ததா சின்னப்புவை பாத்து டேய் நீ போடா எண்டு சொல்ல சின்னப்புவோ தங்கடை பரம்பரையிலேயோ காளை மாடு அக்கிற பழக்கம் இல்லையாம் பசுமாடுதானம் அடக்கிறவை.முடிஞ்சால் பசுமாடு அடக்கிற போட்டிவையுங்கோ அதுவரைக்கும் நான் போய் சின்னாச்சியை அடக்கிப்போட்டு வாறன் எண்டு போனவன்தான் அடுத்த பொங்கல் வந்திட்டுது ஆளையே காணெல்லை. :(:huh:

கடைசியா நான் தான் அந்தக் காளையை அடக்கினது. எப்பிடியெண்டு யோசிக்கிறீங்களோ மெல்லமாய் காளை மாட்டுக்கு பக்கத்திலை போய் காளை மாட்டின்ரை காதுக்குள்ளை ஒரு விசயத்தை சொன்னன். அது அப்பிடியோ பேசாமல் அடங்கி படுத்திட்டுது. ஆனால் போனவருசம் நான் அதக்கு சொன்ன விசயத்தை நிறைவேத்தேல்லை அதாலை இந்தவருசம் நான் அதுக்குப்பக்கத்திலை போக ஏலாது. அது சரி நான் காளை மாட்டின்ரை காதுக்குள்ளை என்ன சொல்லியிருப்பன் எண்டு யாராவது சொல்லுங்கோ பாப்பம். :o

முனியம்மாக்கா ஒட்டகப்புலத்துக்கு புக்கைகட்ட போக வேணுமெண்டு ஓடித்திரிஞ்சவா போனவருசம். அதேன் சாத்திரி ?

நீங்கள் ஏதோ மாடுமுட்டி எழும்பேலாமல் இருக்கிறியளாமெண்டு புலம்பிக்கொண்டு லாச்சப்பலில அம்மிக்கல்லு வாங்கினவா அரைச்சகறி பத்தியம் வைக்கவெண்டு . ஆனால் நீங்கள் ஏதோ காளையை அடக்கினதெண்டு கதைசொல்றியள். :D

பாவம் சின்னப்பு நீங்கள் காளையடக்கின வீரத்தைப்பாத்திட்டு ஏன் வீண் வம்பெண்டு போட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE(மாப்பிளை @ Feb 1 2007, 09:16 PM)

ஐயா ஆதிவாசி,

நம்ம யாழ் கள வீரர்களின் தகுதிக்கு அடக்குவதற்கு பசுமாடுதான் லாயக்கு என்று நினக்கின்றேன். காளை மாடு எல்லாம் நமக்கு கொஞ்சம் ஓவர். இதோ எனது வீட்டுப் பசு மாட்டை களத்தில் இறக்கி விடுகின்றேன். யாராவது மீசையுள்ள ஆம்பளை வந்து அடக்குங்கள் பார்க்கலாம்!

அடடா! சற்றுமுன்தான் மீசையை வழித்துவிட்டேன்! அதனால் இந்த வீரமான காளை சீ பசுமாடு தப்பிவிட்டது. ஹா..... ஹா...... :lol::D

:):lol::lol::)

:unsure::o:blink::huh:

என்ன பனங்காய் யூரியூப்பில பாக்கிறதுக்குஎவ்வளவோ இருக்கிது. கருமம் இதையோ பாத்து சிரிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள். :lol::):wub:

  • தொடங்கியவர்

வாழ்க.. வளர்க... பனங்காயண்ணோய்!

யாழ்க்களத்தில் ஆதிவாசி கதைப்பதை அநாகரீகமாக எடுத்துக் கொண்ட மதிப்பிற்குரிய நிர்வாகம் எப்படி இந்தப்பனங்காயைப் புழியாமல் விட்டா...கள். களநிர்வாகம் இப்படி ஓரவஞ்சனையாக நடப்பது ஆதிக்கு பலத்த மனச்சங்கடங்களைக் கொடுக்கிறது. களநிர்வாகத்திற்கு எதிராக ஆதி ஆக்சன் ஹீரோவாக மாறவேண்டுமா?

ஆமா பனங்காய், ஆதிமேல உங்களுக்கு அப்படி என்ன ஒரு இது?

பொறுமப்பு.... காளைக்கு தீனி வைக்கிறப்போ உங்களையும் கணக்கில சேர்க்கிறன். உங்களைப் புழிஞ்சு வச்சா சும்மா காளை சுழலுமெல்லே.... :wub::lol::unsure::o:blink::huh:

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பு ஆதி! பனங்காயின் மங்கி செய்த ஜிம்னாஸ்டிக்கை உமது காளை மட்டும் செய்யட்டும் பார்க்கலாம். செய்தால் எடுத்த மீசையை மீன்டும் வளர்த்து விடுகிறேன். ஹா ஹா ஹா ஹா. :unsure::o

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆ ஆதி உங்க படத்தை இப்படியெல்லாம் போடுறாங்களே

ஆமா பனங்காய், ஆதிமேல உங்களுக்கு அப்படி என்ன ஒரு இது?

பொறுமப்பு.... காளைக்கு தீனி வைக்கிறப்போ உங்களையும் கணக்கில சேர்க்கிறன். உங்களைப் புழிஞ்சு வச்சா சும்மா காளை சுழலுமெல்லே.... :wub::wub::mellow::rolleyes::lol::o

ஆதி,

நான் அறிமுகம் ஆகும்போதே நமக்குள்ளே ஒரு 'இது'... இப்ப என்ன புதுசா?

:huh:

என்னங்கைய்யா என்னுமா காளைய அடக்கல இங்க...?

முதலில இந்த ஆதிட வால நறுக்கனும்

  • தொடங்கியவர்

இப்பாரம்பரிய விளையாட்டு தொடர்ந்து வரும் காலங்களிலும் கலக்கவேண்டும் என்பதற்காக ஊரில் சாப்பிட்ட பம்பாய் மிட்டாய் போன்று இழுபடும்....

கதையைப்பறிகொடுத்த சோகத்தில் ஆதிவாசி

பறி கொடுத்தது கதையா இலை வாலா?

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

avatar5136ie0.gif

என்ன ஒருத்தரையும் இந்தப்பக்கம் கன நாளாக கானோம் :rolleyes:

  • 5 weeks later...
  • தொடங்கியவர்

bullsmartmoney1qg1.jpg

அடடா ஆதியின் கவனம் கொஞ்சநாள் இல்லையென்று தெரிஞ்ச உடன கதையையே மாத்திப்போட்டாங்களோ? :D:D:)

avatar5136ie0.gif

என்ன ஒருத்தரையும் இந்தப்பக்கம் கன நாளாக கானோம் :lol:

வா ராசா....

கொஞ்சம் தைரியம் வந்திட்டுது போல....

  • கருத்துக்கள உறவுகள்

வா ராசா....

கொஞ்சம் தைரியம் வந்திட்டுது போல....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.